செவ்வாய், 30 நவம்பர், 2010

யுக முடிவு நாளின் அடையாளங்கள்.


மகளின் தயவில் தாய் :

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50

*பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்*

'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத்திரிந்தவர்கள் மிகஉயரமானகட்டடங்களைக் கட்டிவாழ்வார்கள்என்பதையும் யுக முடிவுநாளின் அடையாளமாகநபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள். நூல்: புகாரி 50

*குடிசைகள் கோபுரமாகும்*

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 7121

*விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்*

யுக முடிவு நாள்நெருங்கும் போதுவிபச்சாரமும், மதுவும்பெருகும் என்று நபிகள்நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

*தகுதியற்றவர்களிடம் பொறுப்பு*

'நாணயம் பாழாக்கப்படும்போது அந்த நாளை எதிர்நோக்கு'' என்று நபிகள்நாயகம் அவர்கள் கூறியபோது 'எவ்வாறுபாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள்தகுதியற்றவர்களிடம்ஒரு காரியம்ஒப்படைக்கப்படும் போதுஅந்த நாளை எதிர்நோக்கு'' என்றுவிடையளித்தார்கள். நூல் : புகாரி 59, 6496
'

*பாலை வனம் சோலை வனமாகும்*

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது நூல் : முஸ்லிம் 1681

*காலம் சுருங்குதல்*

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.

(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம். நூல் : திர்மிதீ 2254)

*கொலைகள் பெருகுதல்*

கொலைகள்அதிகரிப்பதும் யுக முடிவுநாளின் அடையாளம்என்று நபிகள் நாயகம்ஸல்) கூறியுள்ளனர்.நூல் : புகாரி 85, 1036, 6037, 7061
(
*நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்*

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல்: புகாரி 1036, 7121

*பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது*

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016, 12079, 12925, 13509.

*நெருக்கமான கடை வீதிகள்*

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: அஹ்மத் 10306.

*பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்*

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

*ஆடை அணிந்தும் நிர்வாணம்*

ஆடை அணிந்தும்நிர்வாணமாகத்தோற்றமளிக்கும்பெண்கள் இனி மேல்தோன்றுவார்கள்என்பதும்நபிமொழியாகும். நூல் : முஸ்லிம் 3971, 5098

*உயிரற்ற பொருட்கள் பேசுவது*

விலங்கினங்கள்மனிதனிடம் பேசும்வரையிலும் தோல்சாட்டையும் செருப்புவாரும் மனிதனிடம்பேசும் வரையிலும் யுகமுடிவு நாள் ஏற்படாதுஎன்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 11365

*பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்*

தங்கள் நாவுகளை (மூலதனமாகக்) கொண்டுசாப்பிடக் கூடியவர்கள்தோன்றும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாதுஎன்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 1511

*தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்*

தெரிந்தவருக்கு மட்டும்ஸலாம் கூறுவது யுகமுடிவு நாளின்அடையாளம் என்றுநபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493

*பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்*

பள்ளிவாசல்கள்பாதைகளாகஆக்கப்படுவதும் யுகமுடிவு நாளின்அடையாளம் என்றுநபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493

*சாவதற்கு ஆசைப்படுதல்*

இறந்தவர்களை அடக்கம்செய்த இடத்தைக்காணும் மனிதன் நானும்இவனைப் போல்செத்திருக்கக் கூடாதாஎன்று கூறாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாதுஎன்பதும் நபிமொழி.நூல்: புகாரி 7115, 7121

*இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்*

ஏறத்தாழ முப்பதுபொய்யர்கள் தம்மைஇறைத்தூதர் என்றுவாதிடும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாதுஎன்பதும் நபிமொழி. நூல்: புகாரி 3609, 7121

*முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்*

'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள். நூல்: புகாரி 3456, 7319

*யூதர்களுடன் மாபெரும் யுத்தம்*

யூதர்களுடன் நீங்கள்போர் செய்யும் வரை யுகமுடிவு நாள் வராது. அந்தயுத்தத்தின் போதுமுஸ்லிமே இதோஎனக்குப் பின்னால்யூதன் ஒருவன்ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள்கூறும்.நூல்: புகாரி 2926
'
*கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்*

கஃபா ஆலயம்இறைவனால்பாதுகாக்கப்பட்டஆலயமாக இருந்தாலும்கால்கள் சிறுத்தஅபீஸீனியர்கள் அதைச்சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.நூல் : புகாரி 5179 '

*யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்*

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதிதங்கப் புதையலைவெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள்அதிலிருந்து எதையும்எடுக்க வேண்டாம்என்பதும் நபிமொழி. நூல்புகாரி 7119 :

*கஹ்தான் இன மன்னரின் ஆட்சி*

(யமன் நாட்டு) கஹ்தான்கோத்திரத்தைச் சேர்ந்தஒருவர் தமதுகைத்தடியால் மக்களைஓட்டிச் செல்லும் வரையுக முடிவு நாள்ஏற்படாது என்பதுநபிமொழி. நூல் : புகாரி 3517, 7117

*அல்ஜஹ்ஜாஹ் மன்னர்*

ஜஹ்ஜாஹ் என்றபெயருடைய ஒருமன்னர் ஆட்சிக்குவராமல் உலகம்அழியாது என்பதுநபிமொழி. நூல் : முஸ்லிம் 5183

*எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்*

கடைசிக் காலத்தில் ஒருகலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர்எண்ணிப் பார்க்காமல்செல்வத்தை வாரிவழங்குவார் என்பதுநபிமொழி. நூல் : முஸ்லிம் 5191

*செல்வம் பெருகும்*

செல்வம் பெருகும் வரையுக முடிவு நாள்ஏற்படாது என்பதுநபிமொழி. நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தைஎடுத்துக் கொண்டுசென்றுஇன்னொருவருக்குக்கொடுப்பார். 'நேற்றுகொடுத்திருந்தால் நான்வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத்தேவையில்லை'' என்றுஅந்த மனிதன்கூறிவிடுவான் என்பதும்நபிமொழி. நூல் : புகாரி
1424
*மாபெரும் யுத்தம்*

இரண்டு மகத்தானசக்திகளுக்கிடையேயுத்தம் நடக்கும் வரையுக முடிவு நாள்ஏற்படாது. அவர்களுக்கிடையேமகத்தான யுத்தம்நடக்கும். இருவரும் ஒரேவாதத்தையே எடுத்துவைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936

*பைத்துல் முகத்தஸ் வெற்றி*

யுக முடிவு நாளுக்குமுன் ஆறு காரியங்களைஎண்ணிக் கொள்!

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ்வெற்றி

3. கொத்து கொத்தாகமரணம்

4.நூறு தங்கக் காசுகள்ஒருவருக்குக்கொடுக்கப்பட்டாலும்அதில் திருப்தியடையாதஅளவுக்கு செல்வச்செழிப்பு

5. அரபுகளின் வீடுகள்முழுவதையும் ஆட்டிப்படைக்கும் குழப்பங்கள்

6.மஞ்சள்நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும்உங்களுக்கும் நடக்கும்யுத்தம். அவர்கள் எண்பதுஅணிகளாக உங்களைநோக்கி வருவார்கள். ஒவ்வொருஅணிகளிலும் 12 ஆயிரம்பேர் இருப்பார்கள். நூல் : புகாரி 3176

*மதீனா தூய்மையடைதல்*

துருத்தி எவ்வாறுஇரும்பின் துருவைநீக்குமோ அது போல்மதீனா நகரம் தன்னிடம்உள்ள தீயவர்களைஅப்புறப்படுத்தும் வரையுக முடிவு நாள் வராதுஎன்பது நபிமொழி.நூல் : முஸ்லிம் 2451

*அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை*

யுக முடிவு நாள் வரும்வரை முஸ்லிம்களில்ஒரு கூட்டம்இம்மார்க்கத்திற்காகபோராடிக் கொண்டேஇருக்கும் என்பதுநபிமொழி.நூல் : முஸ்லிம் 3546

*மாபெரும் பத்து அடையாளங்கள்*

இவை தவிர மிகமுக்கியமானஅடையாளங்களாகநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்துவிஷயங்களைக்குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 - (அதிசயப்) பிராணி

4 - சூரியன்மேற்கிலிருந்து உதிப்பது

5 - ஈஸா (அலை) இறங்கிவருவது

6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில்ஒரு பூகம்பம்

10 - இறுதியாகஏமனிலிருந்து புறப்படும்தீப்பிழம்பு மக்களைவிரட்டிச் சென்று ஒன்றுசேர்த்தல்

ஆகிய பத்துஅடையாளங்களைநீங்கள் காணும் வரைஅந்த நாள் வராது என்றுநபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.

*புகை மூட்டம்*

வானம் தெளிவானபுகையை வெளிப்படுத்தக்கூடிய நாளைஎதிர்பார்ப்பீராக! அப்புகைமனிதர்களைச் சூழ்ந்துகொள்ளும், இதுகடுமையானவேதனையாக
அமைந்திருக்கும். (அல்குர்ஆன் 44:10,11)

உங்கள் இறைவன்உங்களுக்கு மூன்றுவிஷயங்களைப் பற்றிஎச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகைமூட்டம். முஃமினைஇப்புகை ஜலதோஷம்பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும்போது அவன்ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப்புகை வெளிப்படும். இரண்டாவதுஅதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால்என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி) நூல்: தப்ரானி
(
*யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை*

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள். (அல்குர்ஆன் 21:96)

*ஈஸா(அலை) அவர்களின் வருகை*

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின்அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப்பின்பற்றுங்கள். இதுதான்நேரான வழியாகும். (அல்குர்ஆன் 43:61)

*மூன்று பூகம்பங்கள்*

(மதீனாவின்) கிழக்கேஒரு பூகம்பம். மேற்கேஒரு பூகம்பம், அரபுதீபகற்பத்தில் ஒருபூகம்பம் ஆகிய மூன்றுபூகம்பங்களை நீங்கள்காண்பது வரை
யுகமுடிவு நாள்ஏற்படாது என்றுநபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்.

*பெரு நெருப்பு*

எமனிலிருந்து நெருப்புதோன்றி மக்களைஅவர்களதுமஹ்ஷரின்பால்விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள்ஏற்படாது என்றுநபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்.

நன்றி : இஸ்லாம் தமிழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக