ஞாயிறு, 19 ஜனவரி, 2014

பகல் இரவை முந்துகிறதா?


இரவு பகலை முந்தாது என்பதாக வரக்கூடிய 36:40 வசனத்தை சான்றாக காட்டி, பகல் தான் நாளின் துவக்கம் என்று சிலர் வாதிடுகின்றனர்.

அதாவது, இரவு பகலை முந்தாது என்று அல்லாஹ் சொல்லி விட்டான் அல்லவா, ஆகவே பகல் தான் இரவை முந்தும் என்பது இவர்களது வாதம்.

சரி.. அப்படியானால் இதே அளவுகோலை தானே அனைத்திற்கும் இவர்கள் பொருத்த வேண்டும்?

அதே வசனத்தின் துவக்கத்தில்

சூரியனால் சந்திரனை பிடிக்க முடியாது என்றும் அல்லாஹ் சொல்கிறான்.

அதே அளவுகோலை இதற்கும் பொருத்துவார்களா?

இதோ பாருங்கள், சூரியனால் சந்திரனை பிடிக்க முடியாது என்று அல்லாஹ் சொல்லி விட்டான், ஆகவே சந்திரனால் சூரியனை பிடிக்க முடியும் என்று இதிலிருந்து விளங்குகிறது என்று இவர்கள் சொல்வார்களா?

அவ்வாறு சொன்னால் அது மடமையான விளக்கமாகி விடும். சூரியனின் வெப்பத்திற்கும் அதன் இழு சக்திக்கும் முன் சந்திரனால் அதை எட்டிப்பிடிக்கும் பேச்சுக்கே இடமில்லை.

சூரியனால் சந்திரனை பிடிக்க முடியாது என்றால் சந்திரனாலும் சூரியனை பிடிக்க முடியாது. இது தான் விஞ்ஞான உண்மை. இரண்டுக்குமிடையே இருக்கும் ஈர்ப்பு சக்தியானது ஒன்றுக்கொன்று இழுத்து வைத்துக்கொள்கிறது.

ஆக, எதையும் எதனாலும் பிடிக்க முடியாது என்கிற விஞ்ஞான தத்துவத்தை தான் அல்லாஹ் இங்கே சொல்கிறான்.

அதன் தொடர்ச்சியாய் தான் இரவு பகலை முந்தாது என்கிற வசனமும்.

இரவு பகலை முந்தாது, அது போல் பகலும் இரவை முந்தாது.

அனைத்தும் அதனதன் கணக்கில் துல்லியமாய் இயங்குகின்றன..!

துல்லியமாய் இயங்கிக்கொண்டிருக்கும் அந்த மகத்துவமான படைப்பை விளக்கும் வசனம் தான் இதே தவிர, எது முதல், எது அடுத்து என்பதை சொல்லும் வசனமல்ல !

இரவு பகலை முந்தாது என்பதால் பகல் தான் இரவை முந்தும் என்று இங்கே புரிய வேண்டுமென்றால்
சூரியனால் சந்திரனை அடைய முடியாது என்பதை வைத்து சந்திரனால் சூரியனை அடைந்து விட முடியும் என்று புரிய வேண்டி வரும் !

அவ்வாறு புரிவார்களா ?

பலகீனமான ஹதீஸ்களின் வகைகள்



முர்ஸல் : ஒரு செய்தியில் எல்லா அறிவிப்பாளர்களும் குறிப்பிடப்பட்டு, சஹாபி மட்டும் விடுபட்டிருந்தால் அது முர்ஸல் வகை எனப்படும்.

முன்கதிவு : சஹாபி அல்லாமல் இடையில் வேறு ஏதேனுமொரு அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அத்தகைய ஹதீஸ் முன்கதிவு.

முஃலல் : இடையில் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டிருந்தால் அத்தகைய ஹதீஸ் முஃளல்.

முஅல்லக் : எந்த அறிவிப்பாளர் பெயரையும் குறிப்பிடாமல் வெறுமனே நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று எந்த செய்தியாவது பதியப்படுமானால் அவை முஅல்லக்.

மஜ்ஹூல் : வரலாற்று தெளிவுகள் ஏதுமில்லாத (யாரென்றே அறியப்படாத) அறிவிப்பாளர்கள் வழியாக வரும் ஹதீஸ்கள் மஜ்ஹூல் வகை எனப்படும்.

ஷாத் : ஒரே ஆசிரியரிடமிருந்து அறிவிக்கும் பெரும்பான்மையான மாணவர்கள் ஒரு செய்தியை ஒரு விதமாகவும், குறைந்த எண்ணிக்கையிலான‌ மாணவர்கள் அதே செய்தியை அதற்கு மாற்றமாகவும் அறிவித்தால், குறைந்த எண்ணிக்கையிலுள்ள‌ மாணவர்கள் அறிவித்த செய்தி ஷாத் எனப்படும்.

(இதில் மாணவர்கள் அனைவருமே தரத்தில் சமமானவர்களே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்)

முன்கர் : ஷாத் வகை ஹதீஸில் குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்கள், அதிக எண்ணிக்கையிலுள்ளவர்களுக்கு நிகரான தரத்தில் இருந்தாலும், அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் என்பதால் அந்த செய்தி பலகீனம் ஆனது.
அதுவே, அந்த குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்கள் பெரும்பான்மையினரை விட நம்பகத்தன்மையிலும் குறைந்தவர்களாகி விட்டால் அத்தகைய ஹதீஸ் முன்கர் ஆகும்.

முள்தரப் : இதுவும் ஷாத் வகையை போன்றது தான். ஷாத் வகையில், பெரும்பான்மையான அறிவிப்பாளர்களும் குறைந்த எண்ணிக்கையிலுள்ள அறிவிப்பாளர்களும் ஒரே ஆசிரியரிடமிருந்து தான் அறிவிப்பார்கள்.
ஆனால், ஒரு வேளை குறைந்த எண்ணிக்கையிலுள்ள அறிவிப்பாளர்கள் வேறு வேறு ஆசிரியர் வழியாக அறிவித்திருந்தால் அத்தகைய ஹதீஸ்கள் முள்தரப் எனப்படும்.

முதல்லஸ் : சில ஹதீஸ்களின் சனதை கவனிக்கையில், ஒரு அறிவிப்பாளரிடமிருந்து கேட்டு அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பாளர், முதலாம் அறிவிப்பாளரை நேரடியாக சந்தித்து அதை கேட்டாரா அல்லது வேறு நபர்கள் மூலமாக கேட்டாரா என்கிற சந்தேகம் ஏற்படும். சம்மந்தப்பட்ட அந்த இரண்டாம் அறிவிப்பாளர் அத்தகைய குணமுடையவரா (நேரடியாக கேட்காமலேயே கேட்டதாக சொல்வது) என்பதை ஆய்வு செய்து, அத்தகைய குணமுடையவர் தான் என்று உறுதி செய்யப்பட்டால், அந்த ஹதீஸ்கள் முதல்லஸ் எனப்படும்.

(அத்தகைய குணம் அவருக்கு இல்லை என்று அறியப்பட்டால் அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகி விடும் !)

முஅன்அன் : "அன்" (வழியாக) என்கிற துணை சொல்லுடன் அறிவிப்பவர்கள் தமது ஆசிரியர்களை பயன்படுத்துவது இந்த வகையை சேரும். அதாவது அன் அப்துர்ரஹ்மான், அன் அப்துல்லாஹ் என, அப்துல்லாஹ் வழியாக, அப்துர்ரஹ்மான் வழியாக.. என்றெல்லாம் அறிவிக்கப்படும் செய்திகள் இந்த வகையை சேரும்.

இதுவும் முதல்லஸ் வகையை போன்றது தான். "அவர் வழியாக" என்று சொல்லப்படும் போது, அதை சொன்னவர், அவரிடம் நேரடியாய் கேட்டு சொல்கிறாரா அல்லது இடையில் யாரேனும் விடுபட்டிருக்கின்றார்களா என்பதை பொறுத்து அந்த ஹதீஸ் நிராகரிக்கப்படத்தக்கவையா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.

முத்ரஜ் : நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியாக ஒன்றை அறிவிக்கும் அறிவிப்பாளர், இடையில் தமது சுய கருத்தையும் சேர்த்தே சொல்லி விடுவார்.
அத்தகைய ஹதீஸ் முத்ரஜ் எனப்படும்
அவ்வாறு சொல்லப்படுமேயானால், எது நபி சொன்னது, எது நபி சொன்னதில்லை என்று ஆய்வு செய்து பிரித்து, நபி சொன்னதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை விட்டு விடலாம்.

மக்லூப் : இரு நபர்களை பற்றி அறிவிக்கையில் இருவரது செயலையும் அப்படியே மாற்றி அறிவிப்பு செய்து விட்டால் அத்தகைய செய்தி மக்லூப் எனப்படும்.
உதாரண‌த்திற்கு நபிக்கு பிறகு அபுபக்கர், அவருக்கு பிறகு உமர் ஆட்சியில் அமர்ந்தார்கள் என்று சொல்ல வேண்டிய இடத்தில் நபிக்கு பிறகு உமர், அதன் பிறகு அபுபக்கர் என்று மாற்றி சொல்வது..

சனி, 18 ஜனவரி, 2014

நடுநிலை வேஷம்


நடுநிலையாக செயல்படுவதாய் தங்களை காட்டிக்கொள்ளும் சிலரை நாம் எதிர்க்கவும் விமர்சனம் செய்யவும் முற்படுகிற போது, நம்மை தீவிரவாத எண்ணம் கொண்டவர்களாகவும், நடுநிலையான எண்ணங்களுக்கு நாம் எதிரிகள் போலவும் நம்மை சித்தரிக்கின்றனர் சிலர்.

ஏகத்துவவாதிகளாக இருக்கக்கூடிய நாம் நடுநிலையான கொள்கைக்கு எதிரிகள் கிடையாது.
இஸ்லாமிய சட்ட திட்டங்களும் கொள்கை கோட்பாடுகளும் தீவிர எண்ணங்களைக் கொண்டவர்களை கூட கட்டுப்படுத்தி, அவனது சிந்தனைக்கு வரையறை இடுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்கலாம் என்கிற நம்பிக்கை தீவிரவாத எண்ணத்தின் வெளிப்பாடு.
கடவுளே இல்லை என்பது அதன் மற்றொரு எல்லை.
இரண்டுக்கும் நடுவில் நிற்க சொல்லி நடுநிலை பேண சொல்லும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

ஒட்டு மொத்த மனித குலத்திலேயே சஹாபாக்கள் தான் சிறந்தவர்கள் என்று போற்றி புகழ்வதோடு நிறுத்திக் கொள்வோம். அவர்களை பின்பற்றுவது கூடாது என்று அப்போதும் துல்லியமாய் புரிந்து வைத்துள்ளோம்.
காரணம், அல்லாஹ் அருளியதையே பின்பற்ற வேண்டும். அது தான் நடுநிலை கொள்கை.
அதை தாண்டி, சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்களையெல்லாம் பின்பற்றப்பட வேண்டியவர்கள் என்கிற ஸ்தானத்தில் வைப்பது தீவிரவாதம் !

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒன்றை கட்டளையிட்டால் நம்பிக்கை கொண்ட மனிதனுக்கு அதில் சுய விருப்பம் கொள்ளும் அதிகாரம் இல்லை என்பது இறை வசனம். இதை பேணி நடப்பது தான் நடுநிலை கொள்கை.

அல்லாமல், அல்லாஹ்வின் கட்டளை இது தான் என்று அறிந்தும் அதை மீறி, மகான்கள், பெரியார்களின் பின் செல்வது இறை செய்தியை அவமதிக்கும் காரியம். அதுவே தீவிரவாதம்.

தீமையை கண்டால் கையாலோ வாயாலோ தடுப்பதே நடுநிலை.
அல்லாமல், ஊரோடு ஒன்றி வாழ்கிறோம் என்கிற பெயரில் அவற்றை கண்டு கொள்ளாமலும், அவர்களால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலை கொள்ளாது இருத்தலுமே தீவிரவாதம்.

இன்று நடுநிலை பேசும் பலரும் இத்தகைய தீவிரவாத சிந்தனையையே கொண்டுள்ளனர்.

ஒரு தவ்ஹீத்வாதி தர்காவை எதிர்ப்பது போல் தப்லீக்வாதியும் எதிர்க்கிறான் என்பதால், தர்காவை எதிர்ப்பதில் இருவரும் ஒத்த கருத்தில் இருக்கின்றனர் என்பதை காட்டி, தர்க்காவை எதிர்ப்பதில் மட்டும் நாங்கள் இருவரும் ஒன்று சேருவோம் என்று சொல்வது தான் இவர்களது சமீபத்திய கொள்கை.

ஆனால், இதற்கு பெருமானார் (ஸல்) அவர்களிடம் இவர்களுக்கு முன்மாதிரி இல்லை.
நெருப்பு வணக்கத்தை யூதர்களும் எதிர்த்தார்கள் என்பதால் யூதர்களுடன் கை கோர்த்துக் கொண்டு நபிகளார் நெருப்பு வணக்கத்தை எதிர்க்கவில்லை. சிலை வணங்கிகளானாலும், யூத நசாராக்களானாலும், நெருப்பு வணங்கிகளானாலும் அனைவருமே அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களே !

அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்ட பிறகு, அவன் சிலையை வணங்கினாலும் ஒன்று தான், நெருப்பை வணங்கினாலும் ஒன்று தான் என்கிற பார்வையே நடுநிலை பார்வை !

இந்த அடிப்படையை புரிந்து கொண்டால், நடுநிலையாளர்களான ஏகத்துவாதிகளுக்கும், மார்க்க அடிப்படைகளை புரிவதில் வரம்பு மீறிக் கொண்டு, நடு நிலைவாதியாய் தங்களை காட்டிக் கொள்ளும் தீவிரவாதிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடு புலப்படும் !

Numeral 19 has no significance in Quran !




This "19" theory was actually put forth long back by one Rashad kalifa who proclaimed himself as Allah's prophet, succeeding Muhammad nabi. In order to prove himself , he tried this 19 concept. But he failed miserably. This concept was proved wrong many a times by many scholars ..
The mathematical interpretation on number 19 with the holy Quran is very much illogical and far from truth. 19 has neither any significance nor any relation with quran.

This theory actually tries explain that there are several words (or sentences or any other factors) in the Holy Quran that, when mathematically counted, will be a multiple of numeral 19.
In support of this theory, Rashad kalifa had put forth few instances like the total number of chapters in Quran, number of "bismillah", number of the words Allah, Rahman, Raheem etc.

He might have had a wrong notion that noone would sit and count how he had counted them. But to everyone's surprise, none of his examples suited!

The total count of the word Allah, he said, was wrong. The total count of the word Rahman, Raheem all wrong !!

Only count that supported his argument was the count of chapters - 114, which, as he had said, is a multiple of 19 (19 x 6 equals 114).
But this too, could only be considered a mere coincidence and nothing more than that.

Reason is that, this 114 not only is a multiple of 19 alone ! 114 is a multiple of 2, 3 ,6 & 38 too. If because 114 is multiple of number 19 and hence 19 is significant in Quran, we could even say, all the above numerals have the same significance. Isnt it?

He said about "ism", which comes 19. Let us see whether it really comes. Before that, Why its ISM ?

What does this mean? Ism doesnt have any logical meaning in it. It is the Bismi from which he removed B (or the arabic letter ba). To divide a single word into just for the sake of attaining his motive, is simply ridiculous !

And that too, the count is not 19. But the total number of words ism in Quran is 14. There are few places where it comes in connection with "al", like Al Ismu, bil ismihi etc..

Such, are totally 10 in number. So, even then, the total number of the word ism will be 24 and no where it is 19 !

About the number of the word Allah, in Quran, it is not 2698. But it is 2811.

There are 113 Bismillaahs in each of the surahs, that contains the word "Allah", This was not added in his count. But, if he is genuine and logical in his mode of calculation, he should have ignored all 114 Bismillahs (one on verse 27:30 too), and then he should have showed the total count to be matching ! But to the surprise, if he had removed 114 bismillahs, the count of Allah would be 2697 and not 2698.

2697 will not be a multiple of 19. Hence, in order bring it to a multiple, he now needs 1 more word "Allah", So he picked one bismillah (out of 114 bismillahs !!).

Logically saying he should either ignore 114 bismillahs and bring a total count of 2697 of the word Allah OR

he should have added 114 bismillahs too, and should bring a total of 2811 !

Neither would be a multiple of 19 !!

About the word "Raheem", 114 is wrong.

As earlier, he had left the word raheem in 113 Bismillahs. ( But had considered bismillah of verse 27:30, as he did for the word Allah).

And, to another surprise, the verse 9:128 has a raheem, which he had not counted at all !

So, the actual count of the word Raheem would be 228.

Atleast, if ignoring the bismillahs (113), the count will only be 115.

Neither would be a multiple of 19

Similar is thee case with Rahman too. It should be 57 plus 113

And he has said, the total number of surahs, is 114 which is a multiple of 19. Yes, this is the only correct statement given b him.

But, this 114, is a multiple not only for19. It is a multiple for 2 , it is a multiple of 3, 6, and 38 also. So, nowhere there is a specific importance for 19 here.

But, as he correlates everything to numeral 19, I can correlate to any other number i wish.

For example, surah count is 114, which is a multiple of 2

The word Allah according to him falls 2698 times. This is a multiple off 2

The word raheem, according to him comes 114 times. This is a multiple of 2

The word raheem according to the correct calculation comes 228 times. This is a multiple of 2

The word ism (that solely come,s without connecting words) comes 14 times. This is a multiple of 2

The word ism along with connecting words (like al ismu, bil ismihi etc) is 10. This is a multiple of 2

The word rahman totally comes (his count 57 plus the rahman in 113 bismillahs) as 170 which is a multiple of 2

So, we could better say numeral 2 has more significance than numeral 19 !!

ஒற்றுமை விரும்பிகளுக்கு நமது அறைகூவல்


தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் சமுதாய ஒற்றுமைக்கு எதிராய் நிற்கிறது என்று விமர்சனம் செய்பவர்கள்,
தங்களது பரிசுத்த தன்மையையும்
சமூக ஒற்றுமையின் பால் தாங்கள் கொண்டிருக்கும் அயராத காதலையும் நிரூபிக்கும் முகமாய் 
வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையாய் சந்திக்க உள்ளோம் என்கிற‌ இனிப்பான செய்தியை தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திற்கு தரத் தயாரா ?

வரும் தேர்தலை பொறுத்தவரை தவ்ஹீத் ஜமாஅத் என்கிற ஒற்றுமையை விரும்பாத அமைப்பை ஓரங்கட்டி விட்டு, நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஓரணியில் திரளும் பேரதிசயத்தை இம்முறை தேர்தலின் போது நாம் காணலாமா?

த‌முமுக,மமக, எஸ்டிபிஐ,முஸ்லிம் லீக், தேசிய லீக், அந்தக் கழகம், இந்தக் கழகம் என லட்டர் பேடுகள் அனைத்தையும் கலைத்து விட்டு முஸ்லிம் கூட்டமைப்பு என ஒரு தனி அரசியல் கட்சியை துவக்குங்களேன்.
மேல் கூறப்பட்ட அனைத்து அமைப்பினரும் இதில் தங்களை இணைத்துக் கொள்ளுங்களேன்.
ஒரே கட்சியாக, ஒரே அரசியல் கொள்கையை வகுத்துக் கொண்டு ஒரேயொரு மாநில அல்லது தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தியுங்களேன்..

இதன் மூலம், சமூக ஒற்றுமை தான் உங்கள் ஒரே இலட்சியம் என்கிற உங்களது இத்தனை நாள் பிரச்சாரம் மெய்ப்பிக்கப்படுமே?

தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டும் தான் ஒற்றுமையை எதிர்ப்பவர்கள் என்கிற உங்களது பல வருட குற்றசாட்டு உண்மையாக்கப்படுமே?

செய்வீர்களா?

நிச்சயம் செய்ய மாட்டீர்கள்.

அவ்வாறு செய்தால் சமூகத்தில் உங்கள் தனித்துவம் பாதிக்கப்படும் என்கிற பயம்.
நமக்கென தனி செல்வாக்கு கிடைக்காது என்கிற ஆணவம்.
கூட்டணி வைத்துக் கொண்டால் தொகுதி வேட்பாளர் நானா நீயா என்கிற அகம்பாவம்.
தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், மந்திரி சபை எனக்கா உனக்கா என்கிற தலைக்கனம்.

சமூக ஒற்றுமை, சமூக ஒற்றுமை என வாய் கிழிய பேசும் இது போன்ற நய வஞ்சகர்கள் கேவலம், ஒரு தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க வக்கற்றவர்கள்.

பதவி மோகமும், தற்பெருமையும், ஆணவமுமே இவர்களது சுய அடையாளங்கள். தங்களது சுயத்தை மூடி மறைக்க‌ ஒற்றுமை என்கிற முகமூடி இவர்களுக்கு தேவைப்படுகிறது.

கொள்கைகள் ஒன்றுபடாதவரை, இது போன்ற போலிகள், வெறும் போலிகளாகவே தான் காட்சியளிக்கும்,
அவை போலி என்பதை சமந்தப்பட்டவர்களே நிரூபித்தும் விடுவர் !

கெட்டதும், நல்லதும் சமமாகாது'' என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே.
அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள் அல் குர் ஆன் 5:100

சுய நலனே பிரதானம்


அரசியலில் நுழைந்து விட்டவர்கள் தங்கள் சுய நலனையே பிரதானமாய் கருதுவர் என்பதை கூட நம்மில் சிலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது வியப்பை தருகிறது.

மற்ற மற்ற அரசியல் கட்சிகள் விஷயத்தில் இதை ஒப்புக் கொள்பவர்கள் கூட, முஸ்லிம் இயக்கங்கள் விஷயத்தில் இதற்கு மாற்றமாக விவாதம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

இந்திய அரசியல் அமைப்பை பொறுத்தவரை, அதில் போட்டியிடுவது என்பது படித்து முடித்த ஒரு பட்டதாரி தரமான வேலை நிறுவனங்களில் வேலைக்கான விண்ணப்பம் இடுவதை போன்றதாகும். அவன் செய்யும் வேலை மூலம் சமுதாயம் பயன்பெறும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதன் இலக்கு என்பது தனி நபர் நலன் சார்ந்தது தான்.

அது போன்றது தான், ஒரு தனி நபரோ ஒரு அமைப்போ அரசியலில் ஈடுபடுவது என்பதும். தன்னளவில் உயர்வும் புகழும், செல்வாக்கும் மேம்படும் என்பது தான் இதன் இறுதி இலக்கு அதாவது ஆங்கிலத்தில் End Product.
இதன் மூலம் சமூகத்திற்கு நன்மை செய்யலாம் என்பது துணை பயன்களே (By Product).

இது தான் இந்திய அரசியல் சூழல். இதற்கு ஒரு ஹிந்து அமைப்பும் விதிவிலக்கல்ல, முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லிக் கொள்வோரும் விதிவிலக்கல்ல..!

இதன் காரணமாகத் தான் அரசியல் கட்சிகள் பெருகிக் கொண்டே போகின்றன. ஒரே இலக்கை மையமாகக் கொண்ட இரு கட்சிகள் கூட இரு கட்சிகளாகவே இறுதி வரை செயல்படுகின்றன, இலக்கை ஒருமுகப்படுத்தும் பொருட்டு கட்சிகளை ஒன்றாக்குவதில் இவர்கள் சமரசம் காண்பதில்லை.

முஸ்லிம் நலன் என்பதை இலக்காக கொண்டவர்களானாலும் இதே நிலையை தான் நாம் காண்கிறோம்.

இஸ்லாமிய சமூகத்தின் நலன் தான் குறிக்கோள் எனில், இதை End Product என்கிற இலக்காக‌ கொண்டிருக்கும் ஆயிரம் கட்சிகள் என்றாலும் அவை தேர்தலில் ஓரணியில் ஒரே கட்சியில், ஒரே தலைமையின் கீழ், ஒரே கூட்டணியில் தான் போட்டியிட வேண்டும்.
ஆனால், இத்தகைய நிலையை நாம் காண்பதில்லை. இந்த பொது நலனை அவர்கள் கொண்டிருக்கும் சுய நலமானது, மிகைத்து விட்டதே இதற்கு காரணம்.

அதனால் தான் தாங்கள் பங்கு கொள்ளும் கூட்டணி தர்மத்திற்காக (?) எதிர்த்து போட்டியிடுவது முஸ்லிம் என்றாலும் கூட அவரை தோற்கடிக்க முயல்கின்றனர். இங்கே தங்கள் இறுதி இலக்கான‌ முஸ்லிம் சமுதாய நலன் என்பது அர்த்தமற்றதாகிறது.

இந்த நிலை மாறாதவரை, சமூக நலன் என்பது ஒன்றுமில்லை.
ஒற்றுமை என்பது நமக்கிடையே பேசிக் கொள்ளும் நகைச்சுவை !!!

Why TNTJ supported ADMK ?


(This was a criticism raised against TNTJ during the 2011 Assembly election)

Criticism : The main reason for TNTJ supporting DMK is TMMK is in alliance with ADMK, what else could be ?

Explanation : 

Assalaamu alaikkum.

No. Following the history for the past 2 months, we can understand that what you have told is not the real reason.

Initially (During January,2011), TNTJ has announced that TNTJ's support will be provided to any party who provides Muslim reservation of 5% or if ADMK mentions in their election manifesto.
Note that, when TNTJ proclaimed this, TMMK had not formed an alliance with ADMK.

Also note that, as per this proclamation, TNTJ is bound to support any alliance (either DMK or ADMK!!) who provides reservation. If ADMK had mentioned in their manifesto, TNTJ would have supported, that is what been committed.
What has been committed in front of media cannot be denied.
Till last week, ADMK officials met PJ at his office requesting his support.

PJ himself has written a statement of letter, framing the sentence how it should be mentioned in ADMK's manifesto regarding muslim reservation, and had sent to ADMK.

Finally, to everyone's surprise, ADMK did not publish that in their manifesto & later they have called up PJ & told that "Amma" will definitely provide the reservation but the reason we are not committing it in our manifesto is that, we may lose many other caste votes!

PJ did not accept this.
If you are hesitating to even commit in your manifesto, it means you will hesitate to bring to power too. This is what TNTJ's stand is.

But, when we checked DMK's manifesto, Karunanidhi has mentioned the same in his manifesto.
Comparing the both, DMK is far better at this stage.
Note that, Karunanidhi had not thought of losing other caste votes unlike how Jaya has thought.
This is the reason.
Understand that, till the eleventh hour, both the parties were at equal distances from TNTJ..

TMMK's alliance with ADMK is not at all a bother to TNTJ.
Even by supporting ADMK, TNTJ can oppose TMMK alone, in their particular constituencies.

So, the reason is not what you told, but what I have mentioned above.

தமுமுகவின் சுயநலம்


இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் கருணாநிதிக்கு இல்லை என அப்பட்டமாக கூறியும்,
கிடைத்த கொஞ்ச நஞ்ச ஒதுக்கீடு கூட முறையாக வழங்கப்படாமல் போன போது, அது இப்போது கிடைக்காது, ரோஸ்டர் முறையில் தலைமுறை கடந்த பிறகே கிடைக்கும் என வெட்கமின்றி திமு கழகத்தை ஆதரித்தும் 

தங்கள் கையாலகாத்தனத்தை வெளிக்காட்டிய‌ மமகவினருக்கு சமுதாயம் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலை இருக்காது என்பதில் எவருக்கும் எந்த ஆச்சர்யமும் இல்லை.

முதாயம் பற்றிய சிந்தனை துளியும் கொண்டிராத இவர்கள்,
தங்களை ஏறெடுத்தும் பார்க்காத ஜெயலலிதா பக்கம் இனியும் செல்வதில் எந்த பயனுமில்லை என்பதால் தாமாக முன் வந்து கலைஞர் பக்கம் ஒட்டிக் கொண்டுள்ளனர்.

வழக்கம் போல் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பேன் என தேர்தல் அறிக்கையில் மறவாமல் குறிப்பிடுவார் கலைஞர்,
போதாக்குறைக்கு முஸ்லிம்களுக்கு தமது நெஞ்சிலும் இடம் தருவார்.
மிலாது நபிக்கு விடுமுறை அளித்த அளப்பெரிய தர்மத்தை (?) எல்லாம் பட்டியலிடுவார்..
காயிதே மில்லத்திற்கு மணி மண்டபம் கட்டி இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்த (??) கொடை வள்ளல் கலைஞர் என கழகமே பாராட்டும்..

முஸ்லிம் சமுதாயத்தின் மானத்தை காப்பாற்றி விட்டதாய் பெருமிதம் கொள்வர் தமுமுகவினர் !

என்ன தான் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தாலும், இது போன்ற ஜால்ரா பேர்வழிகளை தலைவர்களாக ஏற்கிற அளவிற்கு முஸ்லிம்கள் எவரும் முட்டாள்கள் இல்லை என்பதை கலைஞர் அறிந்து கொள்ளட்டும்.

அதை அறிந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை !

முழுமையாக்கப்பட்ட மார்க்கம்


மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம் கூறுவர்.

வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி(ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையில் இது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வார்த்தையாகும். 

இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை, மறைத்துவிட்டார்கள் என்று கூற வேண்டிவரும்.

நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை கூறவேண்டிவரும். இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

இது நல்ல விஷயம் என்றால் அதை நபி அவர்கள் சொல்லியிருப்பார்கள், சஹாபாக்கள் அதை செய்து நபியிடம் அங்கீகாரம் பெற்றிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, அவர்களுக்கு கிடைக்காத நல்லறம், நல்லறமல்ல என்பது தான் நாம் புரிய வேண்டிய அளவுகோல் !

மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் நபி(ஸல்)அவர்களோடு இம்மார்க்கத்ததை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்துவிட்டான். (அல்குர்ஆன் 5:3)

மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படுபவை அனைத்தும் பித்அத் செயலாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் கற்றுதராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்குரிய தண்டனையும் கிடைக்கும்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும். (நூல்: புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (நூல்: முஸ்லிம்)

மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள். (ஹதீஸின் சுருக்கம்: புகாரி)

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

தக்லீத்வாதிகளின் வெற்று ஓலம்


குர் ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்று சொல்லும் நம்மிடம் தக்லீத் இருக்காது. ஏனெனில், குர் ஆன், ஹதீஸை விடுத்து வேறு வேறு நபர்கள் பக்கம் சாய்வது தக்லீத் என்று நாம் தான் பிரச்சாரமே செய்கிறோம்.

இந்த சூழ்நிலையில், தக்லீதுக்கு எதிராய் குரல் கொடுக்கும் நம்மை தக்லீத்வாதிகள் என விமர்சனம் செய்கிறார்கள் சிலர். 

சரி, இவ்வாறு விமர்சனம் செய்ப‌வர்கள் எவராவது குர் ஆன், ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்கிற கொள்கையை சொல்பவர்களா? என்று பார்த்தால் அப்படி இல்லை.

எவரெல்லாம் நம்மை தக்லீத்வாதிகள் என சொல்கிறார்களோ, அவர்கள் அனைவருமே சஹாபாக்களை தக்லீத் செய்பவர்களாகவும் இமாம்கள் என்ன சொன்னாலும் கேட்போம் என சொல்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.

தக்லீதை தங்கள் அடிப்படை கொள்கையாய் கொண்டிருப்பவர்கள் தக்லீத் பற்றி பேசுவது கேலிக்குரியது, நகைப்புக்குரியது !!

ஒரு இயக்கத்திற்கு எதிராய் நாம் எந்த கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்றால் நாம் அந்த இயக்கத்தை தக்லீத் செய்வதாய் ஆகாது.
சரி காண்பவை மார்க்க அடிப்படையில் அல்லது தர்க்க ரீதியில் தவறு என்று நிரூபித்தால் தான் தக்லீத் நிரூபணமாகுமே அல்லாமல், அதன் கொள்கைகளில் எதையுமே மறுக்காதது, அதற்கு சான்றாக எந்த சபையிலும் ஆகாது !

உதாரணத்திற்கு, ஆம் ஆத்மி என்கிற அரசியல் கட்சியின் செயல்பாடுகளை நான் சரி காண்கிறேன் என்றால் ஆம் ஆத்மியை நான் தக்லீத் செய்கிறேன் என்று ஆகாது. அக்கட்சியிலுள்ள தவறுகள் எனக்கு சுட்டிக்காட்டப்பட்டு, அதற்கு முறையான விளக்கங்கள் எதையும் வைத்திராமல் தொடர்ந்து அதற்கு ஆதரவு கொடுத்தேன் எனில், அது தான் தக்லீத் என பொருளாகும்.

குற்றங்களையும் தவறுகளையும் கூட நியாயப்படுத்தி, தொடர்ந்து ஒருவரை சரி காண்பது தான் கண் மூடி பின்பற்றுதலுக்கான விளக்கம் என்பதை கூட அறியாமல் வரட்டு வாதம் புரிவோர், தங்கள் சிந்தனையையும் அறிவுத்திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத் என்கிற இயக்கம் கண் மூடித்தனமாய் கொடுத்த ஃபத்வாக்கள் என்ன?
அவற்றை பின்பற்றிய தொண்டர்கள் குர் ஆன், ஹதீஸுக்கு எதிராய் போனது எப்படி?
குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றையும் வைத்திராமல் தொடர்ந்து எந்தெந்த விஷயங்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்?

என்பதையெல்லாம் சான்றுகளுடன் நிரூபிக்கும் தகுதியும் திறனும் அற்றவர்களே இது போன்ற வெற்று ஓலமிடுபவர்கள் !

அணி திரள்வீர், அலைகடலென .....!


இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுவரை நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்கள் :

இன்றைய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அன்றைக்கு அங்கம் வகித்திருந்த இயக்கம் சார்பில் ஜூலை 4, 1999 இல் சென்னை சீரணி அரங்கில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாடு

மார்ச் 21, 2004 இல் தஞ்சாவூரில் நடைபெற்ற பேரணி மற்றும் மாநாடு

ஜனவரி 29, 2006 இல் கும்பகோணத்தில் நடைபெற்ற பேரணி மற்றும் மாநாடு

ஜூலை 4, 2007 இல் மத்திய சிறைசாலைகள் உள்ள நகரங்களில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டம்

ஜூலை 4, 2010 இல் சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் உரிமை பேரணி மற்றும் மாநாடு

பிப்ரவரி 14, 2012 இல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற வாழ்வுரிமை போராட்டம்


இத்தகைய போராட்டங்களின் பயனாய்,

இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் முன்னிலையில் மேடையேறி இது குறித்து வாக்குறுதி தர முன் வந்தார் ஜெயலலிதா.

ஆந்திராவில் இட ஒதுக்கீடு கொடுத்ததை கூட எதிர்த்த ஜெயலலிதா, தமிழகத்தில் இட ஒதுக்கீடு தருவதற்கென அரசாணை பிறப்பித்தார்.

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது என்கிற கொள்கையை கொண்டிருந்த கருணாநிதி, 3.5% இட ஒதுக்கீடு அளித்து சட்டமியற்றினார்.

40 ஆண்டு காலமாக முஸ்லிம்களை வஞ்சித்து வந்த காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் தேசிய அளவிலான நிலையை அலசுவதற்கென மூன்று கமிஷன்கள் அமைத்தது.

சிறுபான்மை நல அமைப்புகள் உருவாயின, தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அலசப்பட்டு விரைவில் நல்ல செய்தி தருவோம் என சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் உறுதியளித்தனர்.

முஸ்லிம்களை வஞ்சிக்க நினைக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போது முஸ்லிம் இட ஒதுக்கீட்டை குறித்து பேசத் துவங்கின.


நமது போராட்டங்கள் இந்த சமுதாயத்தை முன்னேற்றப்பாதையில் தான் செலுத்தி வருகிறது என்பதை கண்கூடாய் கண்டு வரும் மக்கள், தவ்ஹீத் ஜமாஅத்தின் அடுத்த கட்ட போராட்டத்திற்கும் இதே ஆதரவை அளிக்க முன் வர வேண்டும்.

வரும் ஜனவரி 28, 2014 இல், தமிழக அளவில் 7% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தேசிய அளவில் 10% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் சென்னை, கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய நாங்கு நகரங்களில் இலட்சக்கணக்கான மக்களை திரட்டி மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமொன்றை நடத்துவது என தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

ஒட்டு மொத்த அரசியல் தலைவர்களின் பார்வையும், ஊடகங்களின் கவனமும் இன்று தமிழக முஸ்லிம்களை நோக்கி..

ஜனவரி 28 இல் நாம் காட்டும் வீரியமானது, நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும், இன்ஷா அல்லாஹ் !

அணி திரள்வீர், அலைகடலென .....!

முகனூல் பதிவுகள் : புத்தாண்டில் துவங்கிய மூடநம்பிக்கை


ஜோதிட சிகாமணிகளின் ராசி பலன் நிகழ்ச்சி மூலம் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை துவக்கும் ஊடகங்கள்..
மனிதனின் சிந்தனை புத்தாண்டு விடிவதிலிருந்து மழுங்க துவங்குகிறது !

கல்வித் துறையும் விஞ்ஞானத் துறையும் அபரிமிதமான வளர்ச்சி கண்டு விட்ட இந்த காலத்திலும், தனி நபரின் முன்னேற்றம் என்பது அவன் என்ன வகை மோதிரம் அணிகிறான் என்பதை வைத்துத் தான் தீர்மானிக்கப்படுகிறது என்றால், அதை கேட்டு பின்பற்றுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் இவர்களெல்லாம் மக்களா மாக்களா?

மனிதனின் சிந்தனையை ஏமாற்றும் இது போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்வதற்கு அரசியல் சாசனத்தில் வழி உள்ளது ! 

அதை செய்தால் எல்லா ஆண்டும் இனிய ஆண்டு தான் !!

சபலங்கள் பல வகை


தனி நபரை மையப்படுத்தி அழைப்பு விடுக்கப்படும் விவாதமெனில் சத்தியம் அறியப்பட வேண்டும் என்பதை தாண்டி, தனி நபர் விமர்சனம், தனி நபர் எதிர்ப்பே அங்கே மேலோங்கியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தவ்ஹீத் ஜமாஅத் கொண்டிருக்கும் கொள்கை தவறு என்பதை நிரூபிக்க திராணியும் முதுகெலும்பும் உடையவர்களாக இருப்பவர்கள், நாங்கள் எந்த கொம்பனுடனும் விவாதித்து உங்கள் முகத்திரையை கிழிக்க தயார் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். பிஜே வர வேண்டும், மேடையில் பேசாமல் சும்மாவேனும் அமர்ந்திருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதன் மூலம், இவர்களுக்கு பிஜே என்கிற மனிதரோடு விவாதம் செய்ததாக உலகில் விளம்பரம் தேடிக் கொள்ள ஆசை, அது தான் காரணம் என்பதை புரியலாம்.

2006 மே மாதம் வரை பெருவாரியான கப்ர்முட்டிகளுக்கு கூட யாரென்று தெரியாத ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவர், அடுத்த மாதம் களியக்காவிளையில் பிஜேவுடன் நடந்த விவாதத்தின் பயனாய் அனைத்து கப்ர் முட்டிகள் மத்தியில் அறியப்பட்டார்.

அதாவது திருமண வீட்டில் மாப்பிள்ளையாக இருந்து தான் விளம்பரம் தேட வேண்டும் என்பதல்ல, அங்கே குப்பையள்ளும் தெரு நாயாக இருந்தால் கூட போதும், ""திருமண வீட்டு தெரு நாய்"" என்கிற பெயரும் பெருமையும் கிடைக்குமே, அது போதும் என்பது போல், விவாதத்தில் கலந்து கொள்வது தான் இவர்களைப் போன்றோருக்கு முக்கியமே தவிர, வெற்றி பெற இயலாது என்பது பற்றி எந்த‌ பொருட்டுமில்லை !!

பிஜே என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பில் இருக்கிறார் என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் யார் என்ன விவாதத்தில் கலந்து கொண்டாலும், யார் என்ன ஃபத்வாக்கள் கொடுத்தாலும் அதற்கு பிஜேவும் பொறுப்பாளி தான். இது எந்த பாமரருக்கும் தெரியும்.

அதை இது போன்ற புகழ் விரும்பிகள் தெரிந்து வைத்திருப்பதால் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற மற்ற மார்க்க அறிஞர்கள் எழுதிய நூலை விமர்சனம் செய்கின்ற போது கூட, பிஜேவின் பெயரோடு அதை இணைக்கிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற மற்ற நிர்வாகிகளோ ஆலிம்களோ கொடுக்கும் ஃபத்வாக்களுக்கும் பிஜேவுக்கும் எந்த தொடர்பையும் நாங்கள் ஏற்படுத்த மாட்டோம், பிஜே சொன்னவைகளுக்கு மட்டும் தான் பிஜே பொறுப்பாவார் என்று இவர்கள் அறிவித்தால் மட்டுமே இப்போது பிஜெவை அழைத்து வரும்படி இவர்கள் கேட்பதில் சிறிதேனும் அர்த்தமிருக்கும். (அதுவும் மடமையான நிலைபாடு என்பது தனி விஷயம்)

அல்லாமல், பிஜே வந்து சும்மாவேனும் மேடையில் அமர்ந்திருக்க‌ வேண்டும் அப்போது தான் விவாதிப்போம் என்று கூறுவது என்பது பிஜே என்கிற மாபெரும் அறிஞரோடு விவாதித்து விட்டோம் என்று விளம்பரப்படுத்த வேண்டும் என்கிற சபலப் புத்தியின் வெளிப்பாடே !

சபலங்கள் பல வகை !!

பகவத் கீதை என்றால் என்ன?


அவசியம் ஏற்பட்டால் இஸ்லாமிய அரசாங்கத்தின் மீது போர் செய்வது கடமை என்பதாக வரக்கூடிய குர்ஆன் வசனங்களை, அது தீவிரவாதத்தை தூண்டுவதாக விமர்சனம் செய்பவர்கள், பகவத் கீதையின் தோன்றல் குறித்த, பலருக்கும் தெரியாத செய்தி ஒன்றை தெரிந்து கொள்ளட்டும்.

மஹாபாரத கதையின் ஒரு பாகம் தான் பகவத கீதை.

அதென்ன மஹாபாரத கதை?

பாண்டவ சகோதரர்களுக்கும் அவர்களது ஒன்று விட்ட சகோதரர்களான‌ கொளரவர்களுக்கும் இடையே நடைபெற்ற குருக்க்ஷேத்திர போர் தான் மஹாபாரத கதை.

இந்த போருக்கான காரணம் கூட, சகோதரர்களுக்கிடையேயான குடும்ப பிரச்சனை தான்.

பாண்டவ சகோதரர்களுக்கு வில் வித்தைகளும் போர் தந்திரங்களையும் கற்றுக் கொடுத்த குருனாதர்கள் பீஷ்மர், துரோணர் போன்றவராவர்.

தர்மத்திற்காக போர் செய்து, தங்கள் ஒன்று விட்ட சகோதரர்களான கொளரவர்களை அழிப்பதற்கு முடிவு செய்து போர்களத்தில் அணி திரண்ட பாண்டவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
.
அது என்ன அதிர்ச்சி? தங்கள் குருனாதர்களான பீஷ்மர், துரோணர் போன்றவர்களை எதிரி அணியில் அவர்கள் கண்டனர் !!

அதர்மத்திற்கு எதிராக போருக்கு தயாரான பாண்டவர்கள், தங்களது குருநாதர்களுக்கு எதிராய் போர் செய்வதா? என்று அச்சமுற்றனர்.
தங்கள் குரு நாதர்கள் அதர்மத்திற்கு ஆதரவாய் தான் நிற்கிறார்கள் என்று தெரிந்த பிறகும் கூட, குரு நாதர்களை கொலை செய்ய மனம் ஒத்துக்கொள்ளாத காரண‌த்தால் நீட்டிய வில்லை கீழே இடுகிறான் அர்ஜுனன்.

அந்த சந்தர்ப்பத்தில், அர்ஜுனனின் மைத்துன‌னான கண்ணன், அர்ஜுனனுக்கு அறிவுரை கூறுகிறான்.
அதில், போர் என்று வந்து விட்டால் நபர்களை பார்க்கக்கூடாது என்றும், தர்மமா அதர்மமா என்று தான் பார்க்க வேண்டும் எனவும், குரு நாதர்களாக இருந்தாலும் போர் செய்து அவர்களை அழிப்பது தான் சரி எனவும் அறிவுரை கூற, போருக்கு தயாராகிறான் அர்ஜுனன்.

போர் செய்ய வேண்டும்,
எதிரிகளை கொன்று குவிக்க வேண்டும்,
குருவாக இருந்தாலும் தயவு தாட்சணியம் பார்க்கக் கூடாது, அவர்களையும் வெட்டி வீழ்த்த வேண்டும்

என்று கண்ணன் கூறிய உபதேசங்களை உள்ளடக்கியது தான் பகவத் கீதை !!

நேரடி அர்த்தமும் உவமையும்


அல்லாஹ்வுக்கு ஒரே நேரத்தில் அர்ஷிலும் இருந்து கொண்டு கீழ் வானத்திற்கும் வர இயலும், அது அல்லாஹ்வுக்கு சாத்தியம் தான் என்று நம்பலாம் என்று சொல்பவர்கள், அவர்களின் கட்டடங்களின் அடிப்புறத்தில் அல்லாஹ் வந்தான் என்று வரக்கூடிய வசனத்திற்கு மட்டும் (16:26) அல்லாஹ்வின் ஆற்றல் வந்தது என்று ஏன் பொருள் செய்ய வேண்டும்?? 

அர்ஷில் இருந்து கொண்டே கட்டிடங்களின் அடியில் அல்லாஹ்வால் வர இயலாதா?? அது மட்டும் அல்லாஹ்வுக்கு சாத்தியமில்லாமல் போனது எப்படி?

நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். என்று வரக்கூடிய வசனத்திற்கு மட்டும் (57:4), அல்லாஹ்வின் கண்காணிப்பும் பாதுகாப்பும் நம்மை சுற்றியிருக்கும் என்று ஏன் பொருள் செய்ய வேண்டும்???

அர்ஷில் இருந்து கொண்டே நம்முடன், நாம் செல்லக்கூடிய கடை வீதி, அலுவலகம், பேருந்து நிலையம் என எங்கு வேண்டுமானாலும் அல்லாஹ்வால் வர இயலுமே.. இப்படி இவர்கள் ஏன் புரிவதில்லை?

அர்ஷில் இருந்து கொண்டே நாம் செல்லும் கடை வீதிகளுக்கும், நம் ஒவ்வொருவருடனும் அல்லாஹ்வால் வர இயலாதா என்ன?

ஆக, தெளிவான சந்தர்ப்பவாதமே இவர்கள் வாதங்களில் வெளிப்படுகிறது. உண்மையை அறியும் ஆர்வமும் இவர்களுக்கு இல்லை, அதற்கான தகுதியையும் இவர்கள் வளர்க்கவில்லை என்பதற்கு இவை சான்று.

எதையுமே அல்லாஹ்வுக்கு இயலும் தானே, அல்லாஹ்வுக்கு இது சாத்தியம் அல்லவா? என்கிற ரீதியில் சிந்திப்பது தான் இவர்கள் செய்கிற மிகப்பெரிய தவறு. இந்த கோணத்தில் சிந்திப்பதன் விளைவாக தான் கப்ர்முட்டிகள் கூட தங்கள் கொள்கையை நியாயப்படுத்தி வரும் அவலநிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.

காரணம், கப்ரில் அடங்கியிருப்பவர் சாதாரண மனிதர் என்றாலும், அல்லாஹ் நினைத்தால் அவருக்கு ஆற்றல்களையும் உபரியான சக்திகளையும் வழங்க முடியாதா? என்று பாமரத்தனமாய் எண்ணுகிறார்கள்.

அல்லாஹ்வுக்கு எதுவும் சாத்தியம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மனிதனோடு தொடர்புப் படுத்தி அல்லாஹ் சிலவற்றை பேசுகிற போது, அவனது இலக்கணத்தை, அவனது தகுதியை தாழ்த்திக் கொள்ளாத ரீதியில் தான் பேசுவான்.

சிலவற்றை நேரடி வார்த்தைகள் கொண்டு அல்லாஹ் சொல்வான், சிலவற்றை உவமையாக சொல்வான். உவமையாக சொல்பவற்றை நேரடியாய் புரிந்து விடவதால் ஏற்படும் விபரீதங்கள் பாரதூரமானவை !

முகனூல் பதிவுகள் : மஹரும் வலிமாவும்


மஹர் கொடுங்கள் என்று சொன்னால் வரதட்சணை வாங்காதீர்கள் என்று பொருள்.

வரதட்சணை வாங்ககூடாது என்று நேரடியாய் ஏதும் தடை இருக்கிறதா? என்று கேட்பது முட்டாள்தனம்.

அப்படி எவராவது கேட்டால் கூட, மஹர் கொடுக்க சொல்லி ஹதீஸ் இருப்பதே வரதட்சணை வாங்காதீர்கள் என்பதற்கு ஆதாரம் தான் என்று சொல்வோம்.

இதை புரியாத மக்கள் ஒரு பக்கம் இருக்க, இதிலெல்லாம் தெளிவு பெற்றவர்கள் இன்று பெண் வீட்டு விருந்து வைத்து விட்டு, பெண் வீட்டு விருந்து வைப்பது குற்றமா? என்று எதிர் கேள்வியும் கேட்கிறார்கள்.

எப்படி மஹர் கொடுங்கள் என்பது வரதட்சணைக்கு எதிரான கட்டளையோ அது போல், வலிமா கொடுங்கள் என்கிற கட்டளையே பெண் வீட்டு விருந்துக்கு எதிரான கட்டளை தான் !

ஒரே மாதிரியான இரு சட்டங்களில் ஒன்றுக்கு ஒரு விதமாகவும் இன்னொன்றுக்கு வேறு விதமாகவும் புரிவது சந்தர்ப்பவாதம் அல்லாமல் வேறு என்ன?

நபி வழியா குருதி உறவா?


இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு சத்தியத்தை தயவு தாட்சணியம் பாராமல் போட்டு உடைத்ததன் பயனாய் தான் இன்றைய தமிழ் முஸ்லிம் தலைமுறை ஏகத்துவத்தில் ஜொலிக்கிறது.

அன்று மார்க்க விரோத காரியங்களையும் நூதனங்களையும் அதற்கு வக்காலத்து வாங்கி வந்த முஹல்லாக்கள், ஜமாஅத்தார்களை கடுமையாக விமர்சித்ததன் விளைவு, இன்று அது போன்ற காரியங்களை செய்வதற்கே வெட்கப்படும் சமூகமாக நம் சமூகம் மாறி வருகிறது.

நமது நிலையில் மாற்றம் ஏற்படவில்லை, நமது வீரியத்தில் தொய்வு ஏற்படவில்லை.
கடந்த 25 வருடங்களாக இந்த ஏகத்துவ பிரச்சாரகர்களின் இத்தகைய அணுகுமுறையை பாராட்டி, அதன் விளைவாய் இன்று ஏகத்துவக் காற்றை சுவாசிக்கும் சிலர், அத்தகைய கடினமான போக்கு கூடாது எனவும், அதனால் இந்த ஜமாஅத்தை வெறுக்கிறேன் என்றும் இன்றைக்கு விமர்சனம் செய்ய கிளம்பியுள்ளனர்.
மார்க்க அறிஞர்களின் எத்தகைய வழிமுறை மூலம் இந்த சத்தியக் கொள்கை நமக்கு கிட்டியதோ அந்த வழிமுறையையே இன்று விமர்சனம் செய்வது என்பது வெளிப்படையான சந்தர்ப்பவாதமேயன்றி வேறில்லை.

சத்தியக் கருத்தை போட்டு உடையுங்கள் என்று தான் திருமறையில் அல்லாஹ் சொல்கிறான். உறவை பேணுவது எந்த அளவு முக்கியமோ அதை விடவும் உறவினர் விஷயத்தில் நன்மையை நாடுவது முக்கியம்.

நபி (ஸல்) அவர்களது வழிகாட்டுதல்களை தாண்டிய ஒரு உறவு பேணலோ ஒற்றுமையோ சமூகத்திற்கு அவசியமில்லை என்பதை துணிந்து சொல்லும் பேரியக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திகழ்வதால் தான் அதற்கு எதிர்ப்புகளும் வலுக்கின்றன !