செவ்வாய், 30 நவம்பர், 2010

யுக முடிவு நாளின் அடையாளங்கள்.


மகளின் தயவில் தாய் :

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50

*பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்*

'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத்திரிந்தவர்கள் மிகஉயரமானகட்டடங்களைக் கட்டிவாழ்வார்கள்என்பதையும் யுக முடிவுநாளின் அடையாளமாகநபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள். நூல்: புகாரி 50

*குடிசைகள் கோபுரமாகும்*

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 7121

*விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்*

யுக முடிவு நாள்நெருங்கும் போதுவிபச்சாரமும், மதுவும்பெருகும் என்று நபிகள்நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

*தகுதியற்றவர்களிடம் பொறுப்பு*

'நாணயம் பாழாக்கப்படும்போது அந்த நாளை எதிர்நோக்கு'' என்று நபிகள்நாயகம் அவர்கள் கூறியபோது 'எவ்வாறுபாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள்தகுதியற்றவர்களிடம்ஒரு காரியம்ஒப்படைக்கப்படும் போதுஅந்த நாளை எதிர்நோக்கு'' என்றுவிடையளித்தார்கள். நூல் : புகாரி 59, 6496
'

*பாலை வனம் சோலை வனமாகும்*

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது நூல் : முஸ்லிம் 1681

*காலம் சுருங்குதல்*

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.

(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம். நூல் : திர்மிதீ 2254)

*கொலைகள் பெருகுதல்*

கொலைகள்அதிகரிப்பதும் யுக முடிவுநாளின் அடையாளம்என்று நபிகள் நாயகம்ஸல்) கூறியுள்ளனர்.நூல் : புகாரி 85, 1036, 6037, 7061
(
*நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்*

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல்: புகாரி 1036, 7121

*பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது*

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016, 12079, 12925, 13509.

*நெருக்கமான கடை வீதிகள்*

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: அஹ்மத் 10306.

*பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்*

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

*ஆடை அணிந்தும் நிர்வாணம்*

ஆடை அணிந்தும்நிர்வாணமாகத்தோற்றமளிக்கும்பெண்கள் இனி மேல்தோன்றுவார்கள்என்பதும்நபிமொழியாகும். நூல் : முஸ்லிம் 3971, 5098

*உயிரற்ற பொருட்கள் பேசுவது*

விலங்கினங்கள்மனிதனிடம் பேசும்வரையிலும் தோல்சாட்டையும் செருப்புவாரும் மனிதனிடம்பேசும் வரையிலும் யுகமுடிவு நாள் ஏற்படாதுஎன்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 11365

*பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்*

தங்கள் நாவுகளை (மூலதனமாகக்) கொண்டுசாப்பிடக் கூடியவர்கள்தோன்றும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாதுஎன்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 1511

*தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்*

தெரிந்தவருக்கு மட்டும்ஸலாம் கூறுவது யுகமுடிவு நாளின்அடையாளம் என்றுநபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493

*பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்*

பள்ளிவாசல்கள்பாதைகளாகஆக்கப்படுவதும் யுகமுடிவு நாளின்அடையாளம் என்றுநபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493

*சாவதற்கு ஆசைப்படுதல்*

இறந்தவர்களை அடக்கம்செய்த இடத்தைக்காணும் மனிதன் நானும்இவனைப் போல்செத்திருக்கக் கூடாதாஎன்று கூறாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாதுஎன்பதும் நபிமொழி.நூல்: புகாரி 7115, 7121

*இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்*

ஏறத்தாழ முப்பதுபொய்யர்கள் தம்மைஇறைத்தூதர் என்றுவாதிடும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாதுஎன்பதும் நபிமொழி. நூல்: புகாரி 3609, 7121

*முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்*

'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள். நூல்: புகாரி 3456, 7319

*யூதர்களுடன் மாபெரும் யுத்தம்*

யூதர்களுடன் நீங்கள்போர் செய்யும் வரை யுகமுடிவு நாள் வராது. அந்தயுத்தத்தின் போதுமுஸ்லிமே இதோஎனக்குப் பின்னால்யூதன் ஒருவன்ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள்கூறும்.நூல்: புகாரி 2926
'
*கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்*

கஃபா ஆலயம்இறைவனால்பாதுகாக்கப்பட்டஆலயமாக இருந்தாலும்கால்கள் சிறுத்தஅபீஸீனியர்கள் அதைச்சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.நூல் : புகாரி 5179 '

*யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்*

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதிதங்கப் புதையலைவெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள்அதிலிருந்து எதையும்எடுக்க வேண்டாம்என்பதும் நபிமொழி. நூல்புகாரி 7119 :

*கஹ்தான் இன மன்னரின் ஆட்சி*

(யமன் நாட்டு) கஹ்தான்கோத்திரத்தைச் சேர்ந்தஒருவர் தமதுகைத்தடியால் மக்களைஓட்டிச் செல்லும் வரையுக முடிவு நாள்ஏற்படாது என்பதுநபிமொழி. நூல் : புகாரி 3517, 7117

*அல்ஜஹ்ஜாஹ் மன்னர்*

ஜஹ்ஜாஹ் என்றபெயருடைய ஒருமன்னர் ஆட்சிக்குவராமல் உலகம்அழியாது என்பதுநபிமொழி. நூல் : முஸ்லிம் 5183

*எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்*

கடைசிக் காலத்தில் ஒருகலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர்எண்ணிப் பார்க்காமல்செல்வத்தை வாரிவழங்குவார் என்பதுநபிமொழி. நூல் : முஸ்லிம் 5191

*செல்வம் பெருகும்*

செல்வம் பெருகும் வரையுக முடிவு நாள்ஏற்படாது என்பதுநபிமொழி. நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தைஎடுத்துக் கொண்டுசென்றுஇன்னொருவருக்குக்கொடுப்பார். 'நேற்றுகொடுத்திருந்தால் நான்வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத்தேவையில்லை'' என்றுஅந்த மனிதன்கூறிவிடுவான் என்பதும்நபிமொழி. நூல் : புகாரி
1424
*மாபெரும் யுத்தம்*

இரண்டு மகத்தானசக்திகளுக்கிடையேயுத்தம் நடக்கும் வரையுக முடிவு நாள்ஏற்படாது. அவர்களுக்கிடையேமகத்தான யுத்தம்நடக்கும். இருவரும் ஒரேவாதத்தையே எடுத்துவைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936

*பைத்துல் முகத்தஸ் வெற்றி*

யுக முடிவு நாளுக்குமுன் ஆறு காரியங்களைஎண்ணிக் கொள்!

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ்வெற்றி

3. கொத்து கொத்தாகமரணம்

4.நூறு தங்கக் காசுகள்ஒருவருக்குக்கொடுக்கப்பட்டாலும்அதில் திருப்தியடையாதஅளவுக்கு செல்வச்செழிப்பு

5. அரபுகளின் வீடுகள்முழுவதையும் ஆட்டிப்படைக்கும் குழப்பங்கள்

6.மஞ்சள்நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும்உங்களுக்கும் நடக்கும்யுத்தம். அவர்கள் எண்பதுஅணிகளாக உங்களைநோக்கி வருவார்கள். ஒவ்வொருஅணிகளிலும் 12 ஆயிரம்பேர் இருப்பார்கள். நூல் : புகாரி 3176

*மதீனா தூய்மையடைதல்*

துருத்தி எவ்வாறுஇரும்பின் துருவைநீக்குமோ அது போல்மதீனா நகரம் தன்னிடம்உள்ள தீயவர்களைஅப்புறப்படுத்தும் வரையுக முடிவு நாள் வராதுஎன்பது நபிமொழி.நூல் : முஸ்லிம் 2451

*அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை*

யுக முடிவு நாள் வரும்வரை முஸ்லிம்களில்ஒரு கூட்டம்இம்மார்க்கத்திற்காகபோராடிக் கொண்டேஇருக்கும் என்பதுநபிமொழி.நூல் : முஸ்லிம் 3546

*மாபெரும் பத்து அடையாளங்கள்*

இவை தவிர மிகமுக்கியமானஅடையாளங்களாகநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்துவிஷயங்களைக்குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 - (அதிசயப்) பிராணி

4 - சூரியன்மேற்கிலிருந்து உதிப்பது

5 - ஈஸா (அலை) இறங்கிவருவது

6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில்ஒரு பூகம்பம்

10 - இறுதியாகஏமனிலிருந்து புறப்படும்தீப்பிழம்பு மக்களைவிரட்டிச் சென்று ஒன்றுசேர்த்தல்

ஆகிய பத்துஅடையாளங்களைநீங்கள் காணும் வரைஅந்த நாள் வராது என்றுநபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.

*புகை மூட்டம்*

வானம் தெளிவானபுகையை வெளிப்படுத்தக்கூடிய நாளைஎதிர்பார்ப்பீராக! அப்புகைமனிதர்களைச் சூழ்ந்துகொள்ளும், இதுகடுமையானவேதனையாக
அமைந்திருக்கும். (அல்குர்ஆன் 44:10,11)

உங்கள் இறைவன்உங்களுக்கு மூன்றுவிஷயங்களைப் பற்றிஎச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகைமூட்டம். முஃமினைஇப்புகை ஜலதோஷம்பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும்போது அவன்ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப்புகை வெளிப்படும். இரண்டாவதுஅதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால்என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி) நூல்: தப்ரானி
(
*யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை*

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள். (அல்குர்ஆன் 21:96)

*ஈஸா(அலை) அவர்களின் வருகை*

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின்அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப்பின்பற்றுங்கள். இதுதான்நேரான வழியாகும். (அல்குர்ஆன் 43:61)

*மூன்று பூகம்பங்கள்*

(மதீனாவின்) கிழக்கேஒரு பூகம்பம். மேற்கேஒரு பூகம்பம், அரபுதீபகற்பத்தில் ஒருபூகம்பம் ஆகிய மூன்றுபூகம்பங்களை நீங்கள்காண்பது வரை
யுகமுடிவு நாள்ஏற்படாது என்றுநபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்.

*பெரு நெருப்பு*

எமனிலிருந்து நெருப்புதோன்றி மக்களைஅவர்களதுமஹ்ஷரின்பால்விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள்ஏற்படாது என்றுநபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்.

நன்றி : இஸ்லாம் தமிழில்

வியாழன், 25 நவம்பர், 2010

தடம் புரண்ட டவுன் காஜி


தமிழகத்தில் கடந்த 07.11.10 அன்று சந்தேகத்திற்குரிய நாளில் பிறை எங்குமே தென்படாததைத் தொடர்ந்து துல்காயிதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, 18.11.10 வியாழன் அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவுப்பு செய்தது.

ஆனால், எந்த ஒரு மார்க்க நெறிமுறையையும் பேணாத தமிழக டவுன் காஜியோ மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை பார்த்ததன் அடிப்படையில் தமிழகத்தில் 17.11.10 அன்று பெருநாள் என்று தறிகெட்ட அறிவிப்பைச் அறிவித்தார். தமிழக டவுன் காஜியின் அறிவிப்பு எந்த ஒரு நெறிமுறையும், மார்க்க வரைமுறையும் அற்ற அறிவிப்பு என்பதை, பிறை குறித்த டவுன் காஜியின் கடந்த கால அறிவிப்புகளோடு ஒப்பிட்டு பார்த்தால் விளங்கிக் கொள்ளலாம்.

கடந்த ரமாலான் மாதம் முதல் பிறை தமிழகத்தில் தெரிவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் தென்பட்டது. இப்போது தமிழகத்திற்கு அருகிலுள்ள கர்நாடகாவையும் தாண்டி மஹாராஷ்டிராவிற்கு தாவிய தமிழக டவுன் காஜி, சென்ற ரமலானில் கேரள மாநிலத்தில் பார்க்கப்பட்ட பிறையை நிராகரித்தார். தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டால் தான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறிவிட்டு இப்போது மஹாராஷ்டிராவை ஆதாரமாகக் கொண்ட மர்மம் நமக்கு விளங்கவில்லை.

உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த டவுன் காஜியின் பேட்டி:

”சமுதாய ஒற்றுமை” என்ற மாத இதழுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்திலிருந்து பிறை பர்க்கப்பட்டதாக தகவல் கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும், ”இந்தியாவில் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திரா காந்தி அவர்கள் தனது ஆட்சியின் போது ஹிலால் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினார்கள். சில மார்க்க காரணங்களினால் அதன்படி செய்ய முடியாமல் போனது” என்று அந்த பேட்டியில் இந்தியா முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதற்கு சில மார்க்க காரணங்கள் தடையாக இருக்கின்றன என்று தெரிவித்துவிட்டு, தற்போது ”அவர் சொன்ன நிலைபாட்டிற்கு அவரே முரண்பட்டு” மஹாராஷ்டிரா பிறையை அறிவித்து மக்களைக் குழப்பியுள்ளார். அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து அவரே குழம்பி விட்டு, மக்களையும் குழப்பி விட்டுள்ளார்.

சென்ற ரமலானில் அருகிலுள்ள கேரள மாநிலத்தில் தெரிந்த பிறையையே ஏற்காத தமிழக டவுன் காஜி தற்போது மஹாராஷ்டிர பிறையை ஏற்றுக் கொண்டு மக்களைக் குழப்பியுள்ளாரே இவரது நிலைப்பாடு தான் என்ன? இவர் விளங்கித் தான் செய்கிறாரா? அல்லது விளங்காமல் நிலை தடுமாறியுள்ளாரா? என்று அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்திலிருந்து மாநிலச் செயலாளர்கள் கானத்தூர் பஷீர் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் கடந்த 15.11.10 திங்கள் அன்று மாலை 5மணிக்கு டவுன் காஜியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்கச் சென்றனர்.

டவுன் காஜியின் அற்புத(?) விளக்கம்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளை அவரது அலுவலகத்தில் சந்தித்த டவுன் காஜியிடம், எந்த அடிப்படையில் 17.11.10 அன்று பெருநாள் என்று அறிவித்தீர்கள்? என்று கேட்டதற்கு, தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை, மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை தென்பட்டதன் அடிப்படையில் தான் அறிவித்தேன் என்றும், ஆந்திரா, கர்நாடகா என்று இந்தியாவில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை அறிவிப்பேன் என்று அவர் கடந்த காலத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு மாற்றமாகவும், அவர் அளித்த பேட்டிக்கு மற்றமாகவும் கூறியுள்ளார். அப்படியனால் கடந்த காலங்களில் டெல்லியில் பார்க்கப்பட்ட பிறையை ஏற்று பெருநாள் அறிவிக்காதது ஏன் என்று நமது நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதற்கு, டெல்லியில் இருந்து வரும் அறிவிப்பை ஏற்க மாட்டேன் என்று ஒரு அற்புத(?) விளக்கத்தைக் கூறியுள்ளார். டெல்லி என்பது இந்தியாவில் தானே உள்ளது, உங்கள் நிலைப்பாட்டின் படி அது என்ன வேறு நாடா? என்று நமது நிர்வாகிகள் கேட்டதற்கு, டெல்லியைப் பொறுத்த மட்டிலும் அவர்கள் அவர்களாக அறிவிப்பது கிடையாது. அவர்கள் கலகத்தாவை வைத்து அறிவிப்பார்கள் என்ற அறிவிப்பூர்வமான (?) விளக்கத்தைக் கூறியுள்ளார். கல்கத்தாவும் இந்தியாவில் தானே உள்ளது என்ற நமது நிர்வாகிகளின் கேள்விக்கு தகுந்த பதில் இல்லை.

டவுன்(DOWN)காஜியான, டவுன்(TOWN)காஜி?

இந்த முறை பெருநாளை நாங்களும் அறிவித்து விட்டோம், நீங்களும் அறிவித்து விட்டீர்கள் எனவே அடுத்த வருடம் 6 மாதங்களுக்கு முன்பாகவே வாருங்கள். நாம் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம் என்று சமாளிப்பு பதில் தான் அவரிடத்திலிருந்து வந்ததே தவிர, ஒரு மார்க்கக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வை அஞ்சி முடிவெடுக்க வேண்டுமே என்ற பொறுப்புணர்வோடு உள்ளவர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை. ஆகமொத்தத்தில் தடம்புரண்ட தனது பெருநாள் அறிவிப்பின் மூலம் டவுன்(TOWN)காஜி – டவுன்(DOWN)காஜி யாக மாறிவிட்டார்.

இதைப்போன்று கடந்த சில வருடக்களுக்கு முன்பாக தமிழகத்தைத் தாண்டி அந்தர்பல்டி அடித்து ஒரு பிறை அறிவிப்பைப் செய்த டவுன் காஜியிடம் அப்போது தலைமைப் பொறுப்பிலிருந்த சகோதரர் பீ.ஜே அவர்களும், பாபாஜான் என்ற சகோதரரும் நேரில் சென்று விளக்கம் கேட்டு, “உங்களது மத்ஹபு சட்டத்தில் கூட நீங்கள் கூறுவது போல, இல்லை” தத்தமது பகுதியில் பிறை பார்த்துத் தான் பிறையை அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே என்று பீஜே கூறிய போது மத்ஹப் கிதபுகளில் அப்படி இல்லை என்று அவர் மறுத்தார். உடனடியாக ஆதாரத்தைக் கையில் எடுத்துச் செல்லாததால் நாளை இதற்கான ஆதாரத்தை எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு பீஜே வந்து விட்டார். மறுநாள் ஹனபி மத்ஹபின் ஏராளமான சட்டநூல்களில் இருந்து ஆதாரத்தை பிரிண்ட் எடுத்துக் கொண்டு போய் காட்டிய போது அதை அவரால் மறுக்க முடியவில்லை. “இனி வரக்கூடிய காலங்களில் தமிழகத்தில் காணப்படும் பிறையை மட்டும் தான் ஏற்றுக் கொள்வேன்” தமிழகத்திற்கு வெளியிலிருந்து வரும் அறிவிப்புகளை ஏற்க மாட்டேன்” என்ற நிலைப்பாட்டை ஒப்புக் கொண்டவர் தான் இந்த டவுன் காஜி என்பதையும் நாம் சுட்டிக் காட்டிக் கொள்கின்றோம்.

அதே நேரத்தில், கர்நாடக மாநிலம் குல்பர்காவில் பிறை பார்க்கப்பட்டதாக இந்த டவுன் காஜி அறிவிப்பு வெளியிட்ட போது, அதே நாளில் தாம்பரத்திலும் பிறை தென்பட்டது. பிறை பார்த்த நமது சகோதரர்கள் பிறை தென்பட்ட செய்தியை இந்த டவுன் காஜியிடம் தெரிவித்த போது நம் சகோதரர்கள் பார்த்த பிறையை ஏற்க மாட்டேன். குல்பர்க்கா பிறையைத் தான் ஏற்றுக் கொள்வேன் என்று தடுமாறி தறிகெட்டவர் தான் இந்த டவுன் காஜி என்பதையும் பதிவு செய்கின்றோம்.


- tntj.net

புதன், 24 நவம்பர், 2010

பொய்யர்களின் விதவிதமான பிறை நிலைபாடுகள்!


இந்த பொய்யன் கூட்டத்தின் தற்போதைய நிலைபாடு என்ன என்று நமக்கே பெருங்குழப்பமாக உள்ளது.
1.உலகப்பிறை என்பது மக்களை சீரழிக்கும் ஃபத்வா
2.லோக்கல் பிறையைத் தான் ஏற்கவேண்டும்
3.லோக்கல் என்றால் தமிழகம் மட்டும் தான், கேரளா அதில் அடங்காது
4.இந்தியா முழுவதும் பிறையை ஏற்கலாம்
5.உலகப் பிறை என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை, அது பொய்யன் அப்துல்ஹமீது என்பவரின் தனிப்பட்ட கருத்து
6.உலகப் பிறையை ஏற்கலாம் என்பது எங்கள் கருத்து
7.இப்போதைக்கு இந்திய பிறை
8.உலகம் முழுவதும் உலகப் பிறை என்று ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்றுக் கொள்வோம்
9.ஆனால் இப்போதைக்கு இந்திய பிறை தான்
10.ஆனால், சென்ற ரமலானிலோ தமிழகப் பிறை
11.அடுத்த ரமலானுக்கு “அல்லாஹ்வுக்கே வெளிச்சம்”
பொய்யர்களின் நிலைப்பாடு தெளிவாகப் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம். புரிகிறதா? அது தான் பொய்யர்கள் என்பது.
மார்க்க அறிவு இல்லாத மூடர்கள் தலைவர்களாகி தவ்றான பத்வாக்கள் கொடுத்து தானும் வழிகெட்டு மற்றவர்களையும் வழி கெடுப்பார்கள் என்ற நபி மொழியை கண் முன்னே பொய்யன் கூட்டம் நாள் தோறும் உண்மைப்படுத்தி வருகிறது.

- http://onlineintj.com/

செவ்வாய், 23 நவம்பர், 2010

மேல் சபை வாக்காளார் பட்டியலில் சேர மீண்டும் அழைப்பு கடைசி தேதி – டிசம்பர் – 7



தமிழக அரசின் மேல் சபைக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை மாநகாரட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாச்சியர் அலுவலகங்களில் சென்று சரிபார்த்துகொள்ளலாம். இதில் விடுபட்டவர்கள், மேலும் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் 7 வரை விண்ணப்பிக்களாம். எனவே இதுவரை விண்ணப்பிக்காத முஸ்லீம் பட்டதாரிகள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.

தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் இரண்டு பிரிவில் உள்ளவர்களே வாக்களிக்க முடியும். ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள்.

இதில் பட்டதாரிகள் தங்களை வாக்காளராக பதிவு செய்ய கடைசி தேதி நவம்பர் 9 ஆகும். ஓட்டுக்காக அரசியல் நடத்தும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் நம் உரிமைகளை பெற இந்த வாக்காளர் பட்டியலில் சேர வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் கணிசமான அளவு முஸ்லீம்கள் இருந்தால்தான் ஆட்சியாளர்கள் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார்கள்.

குறைந்த சதவீத்தில் இருந்தால் முஸ்லீம்கள் மீது ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகரித்துவிடும். நம் சமுதாயாத்தில் பட்டதாரிகளே குறைவு, அதிலும் சமூக அக்கரை உள்ள பட்டதாரிகள் மிக குறைவு, எனவே இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சமுதாய நலன் கருதியாவது பட்டதாரி வாக்காளர் பட்டியலில் சேர வேண்டும்.

உங்களுக்கு தெரிந்த முஸ்லீம் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இந்த தகவலை தெரியப்படுத்தலாம்.

யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம் (Part Time) மற்றும் தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

எங்கு விண்ணப்பிப்பது?
மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்
பிற ப்குதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்

எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்யலாம் http://www.elections.tn.gov.in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.

உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்
கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.
1.பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )
2. மதிப்பெண் சான்றிதழ்,
3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்
3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.

மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம். சான்றிதழை நகல் (Zerox copy) எடுத்து அரசுக் கல்லூரி முதல்வர், நகராட்சி கமிஷனர், யூனியன் பி.டி.ஓ., தாசில்தார்கள் இதில் ஒருவரிடம் கையொப்பம் வாங்கி சமர்பித்தால் போதும்.

மேலும் விபரங்கள் மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.html தெரிந்துகொள்ளலாம்.

S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அணி

தமிழகம் முழுவதும் ஒரே பெருநாள் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்ததற்குஎன்ன ஆதாரம்?

தமிழகம் முழுவதும் ஒரே பெருநாள் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்ததற்குஎன்ன ஆதாரம்? தமிழகம் என்ற எல்லையை எந்த ஹதீஸின் அடிப்படையில்வகு த்தீர்கள்?



ஒரு இடத்தில் பார்க்கப்பட்ட பிறை தகவலை கொண்டு தமிழகம் முழுவதும் பின்பற்றுவதற்கு என்ன ஹதீஸ் ஆதாரம் என்று கேட்கிறீர்கள்.

கேள்வி கேட்கும் போது, நான் முன்பே சொன்னது போல், அதே கேள்வியை உங்களிடமும் நான் திருப்பி கேட்பேன். நீங்கள் அதற்கு பதில் சொல்லும் இடத்தில் இருந்து கொண்டு அந்த கேள்வியை என்னிடம் கேட்கக்கூடாது என்பதால்.

ஒரு இடத்தில் பார்க்கப்பட்ட பிறை தகவலை வைத்து ஒரு மாவட்டம் அல்லது ஒரு சிறு ஊர் முழுவதும் பின்பற்றலாமா? ரியாத்தில் பிறை பார்க்கப்பட்டால் ஜித்தாவில் பின்பற்றலாமா?
உங்கள் பதில் ஆம், என்பது தான்.

இதற்கு என்ன ஹதீஸ் ஆதாரம்? நீங்களும் ஒப்புக்கொள்ள கூடிய, மாவட்டம் முழுமைக்கும் பின்பற்றலாம் என்று நம்பக்கூடிய ஒன்றை எந்த ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் செய்து வருகிறீர்களோ, அதே ஹதீஸ் ஆதாரம் தமிழகம் முழுவதும் பின்பற்றுவதற்கும் பொருந்தும்.

நீங்களே ஒன்றை பின்பற்றி செய்து கொண்டிருக்கும் போது, அது குறித்து என்னிடம் ஹதீஸ் ஆதாரம் கேட்க தேவையில்லை.

அந்த எல்லையை எவ்வாறு வகுத்தீர்கள் ,என்று நீங்கள் அடுத்து கேட்ப்பீர்கள்..

ஜித்தா முழுவதும் பின்பற்றலாம் என்று ஜித்தாவை ஒரு எல்லையாக எவ்வாறு வகுதீர்கள்? அதை எவ்வாறு வகுதீர்களோ, அதே போல் தமிழகம் என்ற எல்லையை நான் வகுக்கிறேன்.

மற்றொருவர் உலகம் முழுவதையும் ஒரு எல்லையாக வகுப்பாரே, அதை மட்டும் ஏன் தவறு என்று சொல்கிறீர்கள்? என்று நீங்கள் திருப்பி கேட்டால்,
அதே கேள்வியை உங்களிடமும் நான் திருப்பி கேட்ப்பேன்.

உங்கள் கொள்கைப்படி, ரியாத்தில் பார்த்தல் ஜித்தாவில் பின்பற்றலாம், ஆனால் தமிழகத்தில் பின்பற்றக்கூடாது.
ஏன்? அந்த எல்லையை ஜித்தாவோடு நிறுத்திக்கொண்டீர்கள்? தமிழகம் வரை இழுக்கலாமே, உலகம் முழுவதும் கொண்டு வரலாமே?

இந்த கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்களோ, அதுவே என்னை நோக்கி உங்களுக்கு எழும் கேள்விக்கும் பதிலாக அமையும்..

சனி, 20 நவம்பர், 2010

சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் - 3


சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள்

  • ஷரீஅத் – (மார்க்கம் .)
  • தரீக்கத் — ( ஆன்மீகப் பயிற்சி பெறல்)
  • ஹக்கீக்கத் — ( யதார்த்தத்தை அறிதல் )
  • மஃரிபத் -( மெஞ்ஞான முக்தியடைதல் )

ஹகீக்கத். (ரகசியம் )

ஹக்கீக்கத் எனப்படுவது சூபிகளின் ஷைத்தானிய அடிப்படை விதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது . தன் வழியில் முஃமினாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மனிதன் மார்க்க விளக்கம் பெற ஷைத்தானிய தோழர்களாகிய சூபிகளை நாடும் போது முதலில் ஷரீஅத் சட்டங்களை முடிந்தளவு கடைப்பிடித்து முஸ்லிமாக இருந்த அவனை தரீக்கத் எனும் பாதாளக் குழியில்த் தள்ளி தம்மைத் தவிர வேறு யார் எது சொன்னாலும் கேட்கக் கூடாது எனும் பைத்திய நிலைக்கு அவனை ஆளாக்கி அவனிடம் பைஅத் – ஞான தீட்சை ? பெற்ற பின்னர் அவனுக்கு சூபிகள் கற்றுக் கொடுக்கும் ஒரு இரகசியம்தான் இந்த ஹகீக்கத் எனும் சமாச்சாரம் . அவர்களின் கருத்துப்படி இது ஒரு ரகசியம் இது தான் உண்மை – யதார்த்த நிலை . ஆனால் இவ்வுண்மை அனைவருக்கும் தெரிவதில்லை. அவர்களிடம் ஞானதீட்சைபெறாதவர்களுக்குத் தெரிவிப்பதுமில்லை . காரணம் இவர்கள் கூறும் பைத்தியகாரத் தனமான உளறல்களையும் , சாத்தானிய வசனங்களையும் , பகுத்தறிவுக்குப் பொருந்தாத கற்பனைக் கட்டுக் கதைகளையும் நம்பி ஏமாறும் நிலையில் எந்தப் பாமரனும் இல்லை . எனவே இவனால் எழுப்பப்படும் கேள்விகளுக்குக் கூட இவர்களால் விடையளிக்க முடியாது .ஒன்றுமறியாத பாமரனும் இவர்கள் கூறுவதைக் கேட்டால் இவர்களின் குடுமியைப் பிடித்து ஆதாரம் கேட்பான். ஆப்பிழுத்த குரங்கு போல அவனிடம் மாட்டித் தவிக்க நேரிடும் . ஆதாரம் இருந்தால் தானே சமர்ப்பிக்க முடியும் . இந்துப் புராணங்களில் , யூத கிருஷ்த்தவ , கிரேக்க தத்துவங்களில் வேண்டுமானால் ஆதாரம் கிடைக்கலாம் . குர்ஆன் ஹதீதில் கிடைக்குமா ? அதனால் தான் தமது சூபித்துவ வலையில் வீழ்ந்து தீட்சை பெற்று — மூளையை அடகு வைத்து மூடனாகி விட்டவர்களிடம் மாத்திரமே இந்த ஹக்கீக்கத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் . அதுவும் அவனாக குருவின் அனுமதியின்றி எவரிடத்திலும் இது பற்றி வாய் திறக்கக் கூடாது எனும் நிபந்தனையுடன்…
அது என்ன ரகசியம் ? என்ன ஹக்கீக்கத் ? என்று பார்ப்போம் .

அதாவது இப்பிரபஞ்சமே அல்லாஹ்தான் அவனின் வெளிப்பாடே இப்பிரபஞ்சம் என்பதைத் தெரிந்து கொள்வதே ரகசியம். நாம் பார்க்கும் ,கேட்கும், தொடும் அனைத்துமே ,,, நான், நீ, அவன், அவள், அது, வானம் ,பூமி சந்திரன் சூரியன் ஆடு மாடு ஏன் நாய் பன்றி அனைத்துமே அல்லாஹ்தான். கடலிலுள்ள நீர்தான் அலையாகவும் , நுரையாகவும் ,உப்பாகவும் பரிணமித்திருப்பது போல் அல்லாஹ்தான் இப்பிரபஞ்சமாகத் தோற்றம் தருகின்றான் அனைத்துப் பொருள்களுக்கும் சேர்த்துத்துத்தான் அல்லாஹ் எனப்படும் என்பதே இப்பைத்தியர்களின் மஃரிபத் எனும் மூடத் தத்துவம் . இதை அறிந்தவர் தான் ஞானி – ஆரிப் என இவர்களிடம் அழைக்கப்படுவார் .

பிரபல சூபி கஸ்ஸாலி சொல்கின்றார்
அல்லாஹ்வை அறிந்து கொண்ட ஒரு ஞானி அனைத்துப் பொருட்களிலும் அல்லாஹ்வைக் காண்பார் . ஏனெனில் அனைத்து வஸ்துக்களுமே அவனிலிருந்தே , அவனை நோக்கியே , அவன் மூலமாகவே, அவனுக்காகவே உருவாகியிருக்கின்றன. தீர்க்கமான முடிவின்படி எல்லாம் அவனே …( இஹ்யாஉலூமுத்தீன். 1—254 )

தொடர்ந்து கஸ்ஸாலி சொல்கின்றார் ..
மெஞ்ஞானிகள் ( ரகசியம் ) ஹகிக்கத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்துஒருமித்துத் கூறுகின்றனர் . எனினும் சிலருக்கு இந்நிலை தெட்டத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும் . (அவர்கள் இந்த ரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள் எல்லாம் ஒன்றே எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து ) غيرية ) வேறொன்று என்ற வார்த்தை – பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும் . அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது . அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும் . இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் ‘நான் தான் அல்லாஹ் ‘ என்றும் , வேறு சிலரோ ‘ நானே அல்லாஹ் நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன் ‘ என்றும் , வேறு சிலர் ‘எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை ‘ என்றும் கூறியிருக்கின்றார்கள் .(மிஸ்காதுல் அன்வார் .ப : 122)

கஸ்ஸாலி சொல்கின்றார் …
ஆரிபீன்கள் சொல்கின்றார்கள் ‘நாங்கள் நரக நெருப்புக்குப் பயப்படவுமில்லை. சொர்க்கத்துக் கன்னியர்க்கு ஆசைப்படவுமில்லை எங்கள் நோக்கமே இறை தரிசனமே. அவன் எம் கண்களுக்குப் புலப்படாமல் கணப் பொழுதேனும் தடைப்படக் கூடாது என்றே நாங்கள் யாசிக்கின்றோம்’. ( அல் இஹ்யா 4–22 )

இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்…
ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார் . ஒவ்வொரு பொருமே அவருக்கு அல்லாஹ்வாகத்தான் தென்படும் . முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு ஞானிக்கு பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள்,விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி – வெளிப்பாடாகவே தெரியும். இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் – அல்லாஹ் என்றே அழைத்தார்கள் . அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை ,பொற் சிலை , வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் – அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள் . ( புஸூஸூல் ஹிகம் – இப்னு அரபி ப: 192 )

இதுதான் வழிகெட்ட இந்த ஸூபிகள் சொல்லும் ரகசியம் .?? இது வழிகேட்டின் உச்சம் , இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை. மாறாக இதை அழித்தொழிக்கவேதான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான் என்பதைப் பாமர மகன் கூட எடுத்துக்கூறாமலேயே அறிந்து கொள்வான் . இது சுத்த பைத்தியகாரர்களின் உளறல் . முற்றிய பைத்தியம் என்பதைச் சாதாரண பைத்தியகாரன் கூடச் சொல்வான் . அல்குர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இக்கொள்கை குப்ர்., கலப்பற்ற ஷிர்க் என்று விபரிக்கப்பட்டிருப்பதை அனைவருமே படித்தால் அறிந்து கொள்ள முடியும்.


மஃரிபத் (மெஞ்ஞானம் )

சூபிகளின் கூற்றுப்படி தேவையற்ற சரீஅத் சட்டங்களால் தன்னைத்தானே விலங்கிட்டுக் கொண்ட ஒரு மனிதன் ஒரு சூபிக் குருவின் சீடனாகி தரீக்கத் எனும் சேற்றினுள் விழுந்து மூளையையும் சுய சிந்தனையையும் பறிகொடுத்து பின்னர் ஹக்கீக்கத் எனும் மாயையில் வீழ்ந்து புலம்ப ஆரம்பித்ததும் அளவுக்கதிகம் இறை நினைவில் ?? ( சூபிகளின் இறைவனான ஷைத்தானின் நினைவில் மூழ்கியதால் ) ‘பனாஃ ‘ எனும் நிலை ஏற்படுமாம் . இதற்கு இறை நினைவால் மூழ்கி தன்னையே அழித்துக் கொள்ளல் ( அதாவது தன்னிலை மறந்து விடும் நிலை ) என்று சூபிகள் வாதிடுகின்றனர் உண்மையில் இது போதை மயக்கத்தில் பேதலித்து விடுவதால் , அல்லது ஊன் உறக்கமின்றி சதா காலமும் ஏதோ ஒன்றை நினைத்துக் குழம்பிக் கொண்டிருப்பதால் ஏற்படும் ஒரு வகை மூளைக் குழப்பம் அல்லது பைத்தியத்தின் ஆரம்ப நிலை என்பதில் சந்தேகமில்லை . அனைவரையும் விட அல்லாஹ்வுக்கு விருப்பமான , அவனுக்கு அதிகம் அஞ்சி நடந்த , இபாதத் , வணக்கம் உட்பட அனைத்து விடயங்களிலும் முன்மாதிரியாக அனுப்பப்பட்ட முஹம்மத் நபியவர்களுக்கே இவ்வாறான ஒரு நிலை ஏற்படவில்லையே .. இப்படியொரு பனாஃ நிலைக்குக் சென்று இவர்களைப் போல் உளறவில்லையே … நபியவர்களை விட இந்த சூபிகள் இறை நேசர்களா ? அவர்களை விடக் கடுமையான வணக்கவாளிகளா ? அவர்களுக்குத் தெரியாத ஹக்கீக்கத்தை ( ரகசியத்தை ) இவர்கள் தெரிந்து கொண்டார்களா ?

நபியவர்களின் ஆத்மீகப் பாசறையில் பயிற்சி பெற்ற லட்சக் கணக்கான ஸஹாபாக்களில் ஒருவருக்கேனும் இப்படியொரு நிலை ஏற்பட்டுப் புலம்பியதாக வரலாறு உண்டா ? அப்படி இந்த சூபிகள் நிரூபிப்பார்களா? அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக அல் குர்ஆனிலேயே விளம்பரப்படுத்தப்பட்ட அந்த இறைநேசர்களுக்குக் கற்பிக்காத ரகசியத்தை இந்த சூபிகளுக்கு கற்றுக் கொடுத்தானா? இந்த வினாக்களுக்கு ஒவ்வொரு தனி மனிதனும் விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளான் .

சரி…. விடயத்துக்கு வருவோம் ..

இப்போது இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அல்லாஹ்வின் பிரதிபலிப்பே .. தூணும் அவனே துரும்பும் அவனே , வானமும் அவனே வையமும் அவனே நீயும் அவனே நானும் அவனே எனும் ரகசியம் அவருக்குப் புலப்பட ஆரம்பித்ததும் அவருக்கு அனைத்து வித மறைவான ஞானங்களும் புலப்பட ஆரம்பிக்கும். இவரே முன் கூட்டியே கடவுளாக இருந்திருந்ததன்; ரகசியத்தை இப்போது இவர் கண்டு கொண்டதால் கடவுளின் ஆற்றல் ,அறிவு வல்லமை மறைவான ஞானம் அனைத்தும் இவருக்கும் வந்து விடும் . இதற்குத்தான் இவர்களிடத்தில் மஃரிபா மெஞ்ஞான முக்தி பெறல் எனப்படும் . இந்த நிலையை அடைந்தவர்களுக்கு ஆரிபீன்கள் மெஞ்ஞானவான்கள் எனும் பெயர் சூட்டப்படும் .

அப்துல் அஸீஸ் தப்பாக் எனும் அண்மைக்கால சூபி ஒருவர் கூறுகின்றார் ..
‘அல்லாஹூத்தஆலா–தான் யாரென்ற மஃரிபா ஞானத்தை ஒருவருக்குக் கொடுக்கும் வரை எவரையும் நேசிப்பதில்லை . அந்த ஞானம் பெற்றதும் அவர் அல்லாஹ்வின் ரகசியங்களையெல்லாம் காண ஆரம்பிப்பார் . அப்போது அவருக்கு ஜத்பு எனும் இறை ஈர்ப்பு நிலை ஏற்படும் . ( இப்ரீஸ் ப: 217 )

இல்லை! உண்மையில் இது தேவையற்ற சிந்தனைக் குழப்பத்தாலும் ,அளவுக்கதிகமான திக்ர் எனும் பெயரில் அரங்கேற்றிய பேயாட்டத்தாலும் ஏற்பட்ட காக்காய்வலிப்பு நோய்தான் இது! .

அதாஉல்லாஹ் இஸ்க்கந்தரி எனும் சூபி மகான்?? கூறுகின்றார்…

‘மஃரிபா –ஞானமென்பது ஒரு கற்கக் கூடிய அறிவல்ல .அது நேரடியாகக் காணும் ஒரு நிகழ்வாகும் , அது சொல்லித் தெரியும் ஒன்றல்ல, அது வர்ணிக்க முடியா ஒரு ரசனைமிகுஓவியம் , திரையிடப்படாத ஒரு காட்சி . இதைக் கண்ணுற்றவர்கள் ஏனையோரைப் போன்றல்ல ,ஏனையோர் கண்ணுற்றோரைப் போன்றுமல்லர். மஃரிபா எனும் ஞானம் பெற்ற ஆரிபீன்களிடத்தில் அல்லாஹ் அல்லாத எப்பொருளும் இருக்கின்றதென்றோ இல்லையென்றோ சொல்லப்பட மாட்டாது . ஏனெனில் அவனே எல்லாம் என்பதே உண்மையாதலால் அவனல்லாத எதுவும் இல்லையென்பது தெளிவாகின்றது , (கஸ்புல் அஸ்ரார் . ப: 139)

எதுவுமறியா அப்பாவிப் பாமர சமூகம் சூபி மகான்கள் ,மெஞ்ஞான குருநாதர்கள் என்று போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஷைத்தானின் தூதர்களான கேடுகெட்ட இந்த சூபிகளின் அந்தரங்கம் இதுதான் . குப்ரையும் ஷிர்க்கையும் பாமரர்கள் மத்தியில் பெயரை மாற்றி மெஞ்ஞானம் எனும் போர்வையில் விதைத்து நரகத்தின் நாயகனான ஷைத்தானின் அணிக்கு ஆட்சேர்ப்பு செய்து ஷைத்தானின் நேசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் போட்டு பசுத்தோல்ப்போர்த்திய புலிகள் போன்று சமுகத்திலே ஊடுருவிய, இப்போதும் ஊடுருவியிருக்கும் இந்தக் கேடு கெட்டவர்களை அனைவரும் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும் . இவர்களைப் பற்றி சமூகத்தின் மத்தியில் உள்ள தவறான கருத்தோட்டத்தைக் களையெடுத்து இவர்களின் சுய ரூபத்தைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் . இது ஒவ்வொரு முஃமினதும் இஸ்லாமிய,தார்மீகக் கடமையாகும் .


- kadayanalluraqsha

வியாழன், 11 நவம்பர், 2010

முஆவியா அவர்கள் பார்த்தது உங்களுக்கு போதாதா?

பிறையை தத்தமது ஊரில் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் என்பதை மிக தெளிவாக விளக்ககூடிய குறைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ் - பேச்சு வழக்கில் ..


குறைப்:
"உம்முள் பால் (ரலி) அவர்கள் சிரியாவிலிருக்கும் முஆவியா அவர்களிடம் என்னை அனுப்பினார். நான் சிரியாவிலிருக்கும் போது ரமளானின் முதல் பிறை எனக்கு தென்ப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையை பார்த்தேன். பின்னர் அம்மாத இறுதியில் மதீனா வந்தேன்.
இப்னு அப்பாஸ் அவர்கள் பயணம் குறித்து விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தப்பேச்சை எடுத்தார்கள்.

இப்னு அப்பாஸ் :
"நீங்கள் எப்போது பிறையை பார்த்தீர்கள் ?.

குறைப்:
நாங்கள் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தோம்.

இப்னு அப்பாஸ் :
நீயே பிறையை பார்த்தாயா?

குறைப் : .
ஆம், மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியாவும் நோன்பு பிடித்தார்கள்.

இப்னு அப்பாஸ்:
நாங்கள் சனிக்கிழமை தான் பிறை பார்த்தோம் , ஆகவே, மறு பிறை பார்க்கும் வரை, அல்லது முப்பதாக பூர்த்தி செய்யும் வரை நோன்பு வைதுக்கொண்டிருப்போம்.

குறைப் :
ஏன்?, முஆவியா அவர்கள் பார்த்ததும், நோன்பு வைத்ததும் உங்களுக்கு போதாதா?


இப்னு அப்பாஸ்:
"போதாது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டுள்ளார்கள்.




சிரியாவில் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தாகி விட்டது என்று அறிவிக்கப்பட்ட போதிலும், சிரியாவுக்கும் மதினாவுக்கும் ஒரே நாள் பிறை தென்படவில்லை, வெவ்வேறு நாட்கள் தான் என்பது தெளிவாக தெரிந்த போதும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவது என்ன?

ரசூல் (ஸல்) அவர்கள் சிரியாவை பார்க்க சொல்லவில்லை!, மதினாவில் பிறை பார்த்தாயா? மறுபிறையை மதினாவில் பார்!!
சிரியாவில் பிறை பார்க்கப்பட்டாலும் பார்க்கப்படாவிட்டாலும் , அதை குறித்து மதீனாவாசி அலட்டிக்கொள்ள தேவையில்லை!! அதை பின்பற்ற தேவையில்லை!!!

இதே அடிப்படை தான் உலகமெங்கும், இறுதி வரையிலும்..!!

அரபா தினம் தெரிந்தும் மறுப்பது மனமுரண்டில்லையா?


அஸ்ஸலாமு அலைக்கும்..
15 அன்று அரபா தினம் என்பது, அதற்கு அடுத்த தினம் ஹஜ்ஜ் பெருநாள் என்பதும் நம் அனைவருக்குமே தெளிவாக தெரிந்திருக்கும் நிலையில், வேண்டுமென்றே 18 அன்று பெருநாள் என அறிவிப்பது மனமுரண்டாக செய்யும் செயலை தவிர வேறு என்ன?



வ அலைக்குமுஸ்ஸலாம்.

வேண்டுமென்றே மனமுரண்டாக நாம் செய்வதால் நமக்கு எந்த நன்மையையும்இல்லை.
நமது செயல்கள் அனைத்திற்குமே நபிகளார் தான் முன்னோடி. அவர்கள்எவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று பார்த்து செய்வதால் மட்டுமே நாம் வெற்றிபெற முடியும். அவர்கள் செய்யாதை ஒன்றை நாம் செய்தால் அது தான்மனமுரண்டு, என்பதை சகோதரர் முதலில் மனதில் பதிய வைத்துக்கொள்ளவும்.
ஹஜ்ஜ் பெருநாளுக்கென்று ஒரு விதமாகவும், நோன்பு பெருநாளுக்கென்று இன்னொரு விதமாகவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பிறையை தீர்மானிக்கவில்லை. மாறாக, இரண்டிற்குமே பிறையை பார்க்குமாறு தான் கற்று தந்திருக்கிறார்கள்.
நோன்பு பெருநாள் சமயத்தில், இதை தெளிவாக புரிந்து கொள்ளும் நாம், ஹஜ்ஜ் பெருநாள் என்று வரும்போது மட்டும் தடம் புரண்டு விடுவதை பலரிடம் நாம் காண்பதுண்டு என்பதால், இரு பெருநாட்களிலும் அளவுகோலில் வேறுபாடு இல்லை என்பதை இங்கே முதலில் சுட்டிக்காட்டுகிறேன்.
அதெப்படி? அரபா தினம் அன்று நோன்பு வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது . அரபாவில் ஹாஜிகள் கூடுவதை நாம் நமது கண்ணால் காண்கிறோம். இரந்தும், நோன்பு வைக்க மறுப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? என்ற சந்தேகம் தவ்ஹீத்வாதிகளிடமே இன்று பரவலாக நிலவுகிறது.

நாம் கவனிக்க தவறிய விஷயம் என்னவெனில், ரசூல் (ஸல்) அவர்கள் பிறையை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பதை வெறும் வாயளவில் மட்டும் சொல்லி தந்து விட்டு செல்லவில்லை. மாறாக, அதை செய்தும் காட்டியிருக்கிறார்கள்.
நாம் கேட்பது என்னவெனில், ரசூல் (ஸல்) அவர்கள், பத்து வருடங்கள் மதினாவில் வாழ்ந்து வந்தார்களே, அந்த பத்து வருடங்களில் அவர்களது அரபா தினங்களை, அவர்களது ஹஜ்ஜ் பெருநாட்களை எவ்வாறு தீர்மானித்தார்கள்?

இன்று நாம் இந்தியாவில் இருந்து கொண்டு அரபா தினத்தை அடைவதும், அன்று ரசூல் (ஸல்) அவர்கள் மதினாவில் இருந்து அரபா தினத்தை அடைந்ததும் ஒன்று தானே!

இன்று, நாம் இதை எப்படி புரிய வேண்டும் என்பதற்கு ரசூல் (ஸல்) அவர்களது மதினா வாழ்க்கையில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் நம்மால் ஆதாரம் பெற முடியாதா?

மதினாவில் இருந்த ரசூல் (ஸல்) அவர்கள் பிறையை பார்த்து தான் நோன்பு பெருநாளையும், ஹஜ்ஜ் பெருநாளையும் வைக்க சொன்னார்கள். அது மதினாவிலிருக்கும் பிறை தானே தவிர மக்காவில் அது எந்த பிறை என்று ரசூல் (ஸல்) அவர்கள் பார்க்கவில்லை, பார்க்க சொல்லவில்லை. பார்க்கதாக ஆதாரமும் இல்லை.


அவர்கள் , மதினாவிலிருக்கும் போது , மக்காவில் பிறை எது என்பதை அறிய முயற்சி செய்யாத போது, இந்தியாவில் இருக்கும் நாம் மட்டும் மக்காவில் பிறை எது என்பதை அறிய முயற்சி செய்ய வேண்டுமா?

ரசூல் (ஸல்) அவர்களே இது குறித்து அலட்டிக்கொள்ளாத போது, நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?

உண்மையில் மதினாவில் ரசூல் (ஸல்) அவர்கள் இருந்த சமயம், மதினாவில் ஒரு பிறையும் மக்காவில் வேறு பிறையுமாக இருந்திருந்தால் அதை அல்லாஹ்வே ஏற்றுக்கொண்டு விட்டான் எனும்போது, ரசூல் (ஸல்) அவர்களுக்கு கிடைக்காத பிறையை நாம் அடைய முயற்சிப்பது ஏன்?


மதினாவிலிருக்கும் ரசூல் மக்காவின் பிறையை அறிய முயற்சிக்கவில்லை என்ற ஒரு கருத்தை மையமாக வைத்தே மேலே உள்ள விளக்கம் தரப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீங்கள் எழுதுவீர்கலேன்றால், இது குறித்து மேலும் பல குர் ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு, விளக்கம் தரப்படும், இன்ஷா அல்லாஹ்..

புதன், 10 நவம்பர், 2010

50 Basic Islamic Q&A

புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பயன்படும் வகையில் தொகுக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அடிப்படை கேள்வி-பதில்கள்.


Q1 Who is your Rubb? (the Lord,the Creator etc).

A. My Rubb is Allah Who has created me and all that exists. He nourishes me and all creatures by His Bounties.

Q.2. What is your religion?

A. My religion is Islam, which is submission and obedience to the Order oF Allah and His Messenger with love, hope and

fear.

Q.3. How did you know Allah?

I know Him by His signs and creation like the day and night; the sun and the moon; the heaven and the earth, and all that

is there in and between them.

Q.4. Where is Allah?

A. Allah is above the heavens raised over the Throne and separated from His creatures.

Q.5. Is Allah with us (in person)?

A. Allah is settled over His Mighty Throne, but He is with us by His Knowledge, hearing ,seeing and other attributes. As

He said: “Fear not verily! I am with you both hearing and seeing (V,20. :46)

Q.6. Who are the friends of Allah?

A. Those people are the friends of Allah who are pious and righteous, fear Him much abstain from all kinds of sins and

perform all kinds of goods, and holdfast to the Qur`an and Sunnah.

Q. 7. How do you worship Allah?

A. I worship Allah in a manner in which all my ibadah is dedicated to Him Alone. I do not ascribe anyone with Him in

worship.

Q. 8. Why did Allah send Messengers?

A. Allah has sent Messengers so that they call the people to worship Him Alone, not ascribing any partner with Him, and

in order that mankind should have no plea against Allah.

Q. 9. What is the meaning of Islam ?

A. Islam means i.e. submission to Allah with Tawhid .

Q. 10. What are the pillars of Istam?

A.1. Testimony of Faith (There is no true God except Allah and Muhammad is the Messenger of Allah )

2. To establish Salat (prayers).

3. To pay Zakat.

4. To observe Saum (fasting) in Ramadan.

5. Hajj (pilgrimage to the Sacred House) if one can afford the journey.

Q. 11. What is Iman?

A. Iman (Faith) means to believe in the heart, to confess by the tongue and to act with the parts of the body.

Q. 12. Can there be any variation in Iman?

A. By some words and deeds it may increase and by some words and deeds it may decrease.

Q. 13. What do you mean by increase and decrease in Iman?

A- Iman (Faith) increases by obedience to Allah and good deeds while it decreases by sins and evil acts.

Q. 14. What are the pillars of Iman (Faith)

A. The pillars of Iman are six i.e. to believe in:

1. Allah.

2. His Angels.

3. His Messengers.

4. His Books.

5. The Last Day.

6. Divine Preordainments good or bad.

Q. 15. What is Belief in Allah?

A. The Belief in Allahi is that you should believe that Allah is the Sole Creator Sustainer Provider and the One in Whose

Hand is the disposal of all affairs. Everything stands in need of Him, but He stands in need of none. He is the Only One

Who is worthy of being worshipped. He has the Best Names and Perfect Attributes.

Q. 16. Who are the angels?

A. The angels are creatures of light. They are Allah’s obedient slaves, they do that which they are commanded and are

incapable of disobedience.

Q. 17. What do you mean by Belief in the Book and the Messengers?

A. It means that Allah sent the Messengers like Moses, Jesus,Abraham. Noah etc. and sent down the books like the Torah,

Injeel, Zaboor (Psalms) etc. to call the people to worship Allah Alone, associating nothing with Him. He sealed (finalized)

the Messengers with Prophet Muhammed and abrogated all previous books with the Qur’an. Therefore the worship

should be done according to the Qur’an and the Sunnah of the Prophet .

Q. I8. What is meant by Belief in the Last Day?

A. The Belief in the Last Day means to believe that Allah has ordained a fixed term for everything, and a term for this

world. He will assuredly raise the dead from their graves and will account for everyone their deeds in this world. On that

Day of Resurrection, rewards and punishments will be assigned. Every one will be justly rewarded or punished.

Q. 19. What is meant by Belief Preordainment (Qadar)?

A. The Belief in Preordainment (Qadar) means to believe that everything — good or bad — happens or takes place

according to what Allah has ordained for it. He has created everything in due proportion.

Q. 20. What is the cleaning of “There is no God but Allah”?

A. It means there is no true deity except Allah Alone, Negating all false gods and affirming that Allah is the only true God.

Q. 21. What is the meaning of ^Muhammad is the Messenger of Allah”?

A. It means total submission to him in whatever he ordered, and avoiding what he forbade and believing in all those

matters he informed us about.

Q. 22. What are the conditions of the testimony of Faith?

A. There are seven conditions of the testimony of Faith:

1- Knowledge whick negates ignorance.

2- Certainty which negates doubt.

3- Sincerity and purity of intent which negates Shirk.

4- Truthfulness which negates hypocrisy.

5- Love and devotion which negates disdain of Allah`s religion.

6- Submission which negates disobedince.

7- Acceptance which negates rejection or denial.

Q. 23. What is the greatest thing that Allah has enjoined?

A. The greatest thing Allah has enjoined is Tauhid (Monotheism).

Q. 24. What is Tauhid (Islamic Monotheism)?

A. Tauhid means declaring Allah to be the only God who deserves to be worshipped in truth and confirming all attributes

with which He has qualified Himself or that are attributed to Him by His Messenger .

Q. 25. What are the aspects of Tauhid?

A. There are three aspects of Tauhid:

1- Tauhid-ar-Rububiyah.

2- Tauhid-al-Uluhiyah.

3-Tauhid-al-Asma was-Sifat.

Q. 26. What isTauhid-ar-Rububiyah?

A. It is declaring Allah to be One and Unique in His work, Iike creation, sustenance, bringing to life and causing death etc.

Q. 27. What is Tauhid-al-Uluhiyah?

A. It is declaring Allah as the Only God to whom all acts worship must be dedicated such salat (prayers), Zakat,

Sawm(fasting), supplications vowing etc.

Q. 28. What isTauhid-al-Asma was-Sifat?

A. It is an affirmation of all the Divien Names and Attributes of Allah in a manner that

suits His Majesty, as mentioned in the Qur’an and the Sunnah.

Q. 29. How would you describe Ibadah?

A. It is a comprehensive word comprising deeds and words that Allah loves and is pleased with whether manifested or

hidden,

Q. 30. What are the conditions of Ibadah?

A. There are two conditions of Ibadah:

1. Sincerity to Allah.

2. Submission to Allah’s Messenger i.e. to act according to his Sunnah.

Q. 31. Write some types of Ibadah.

A. Some types of Ibadah are the prayers, the obligatory charity,

fasting, the pilgrimage, fear of Allah, hope in His Mercy, Seeking His aid. and other acts of worship which Allah has

commanded and enjoined.

Q. 32. What is the greatest thing Allah has forbidden?

A. The greatest thing Allah has forbidden is Shirk (polytheism).

Q. 33. What is polytheism?

A. It means to believe that there is one who shares Allah in His acts i.e. ascribing partners or setting up rivals to Allah in

His rights.

Q. 34. What are the types of polytheism?

A. There are three types of polytheism:

1. The greater polytheism (Shirk Akbar).

2. The lesser polytheism (Shirk Asghar).

3. The inconspicuous polytheism (Shirk Khafi).

Q. 35. What is greater polytheism?

A. The greater polytheism is to devote any form of worship to other than Allah Allah will never forgive one who dies upon

Shirk,nor accept his good deeds, and he would be cast out from the folds of Islam.

Q. 36. What are the types of greater polytheism?

A. There are four types of greater polytheism:

1- The polytheism in invocation i.e. involving supplications to other than Allah.

2. The polytheism in intentions i.e. purpose and intentions not for the sake of Allah but directed towards other deities.

3, The polytheism in obedience i.e. rendering obedience to any authority against the Order of Allah.

4. The potytheism in love i.e showing love to others which is due to Allah Alone.

Q. 37. What is lesser polytheism?

A. The lesser polytheism is Ar-Riya, that means the acts of worship done to gain praise or fame rather than to please Allah,

this type of polytheism, however, does not cast the person committing it out of the fold of Islam.

Q. 38. What is inconspicuous polytheism?

A. The inconspicuous polytheism implies being dissatisfied with the conditions ordained by Allah.

Q. 39. What is the proof of the inconspicuous polytheism?

A.The proof of the above Shirk is the saying of the Prophet “The inconspicuous polytheism is more hidden among this

nation than the track of a black ant over a black stone on a dark night” (Musnad Ahmad)

Q. 40. What are the types of Kufr (disbelief)?

A. There are two types of Kufr :

1. The majorKufr which cast its people out of Islam,

2. The lessor cr minor Kufr which does not cast the one who commits it out of Islam. It is Kufr of ungratefulness.

Q. 41. What are the types of major Kufr?

A. There are five types of major Kufr :

1. The Kufr of denial.

2. The Kufr of arrogance associated with recognition of the truth.

3. The Kufr of doubt.

4-. The Kufr of disregard,

5. The Kufr of hypocrisy.

Q. 42. What are the categories of hypocrisy ?

A. There are two categories of hypocrisy:

1. Hypocrisy in Belief.

2. Hypocrisy in deeds and actions.

Q. 43. What is the hypocrisy in Belief?

A. Hypocrisy in Belief is of six types:

1. Denial of the Messenger .

2. Denial of the thing with which the Messenger is sent.

3. Hating the Messenger

4.Hating the thing with which the Messenger is sent.

5. Rejoicing at the disgrace of Islam.

6. Disliking the prevalence of Islam.

Q. 44. What is the hypocrisy in deeds and actions?

A. The hypocrisy in deeds and actions is of five types:

1- When he speaks, he lies.

2- When he promises., he breaks it.

3. When he is entrusted, he betrays.

4. When he disputes, he acts immorally.

5. When he makes a pact, he makes acts treacherously.

Q. 45. Are good deeds accepted (by Allah) with the polytheism?

A. Never! None of the deeds are accepted when mixed with polytheism.

Allah says: ” If they had joined in worship others with Allah all that they used to do would have been of no benefit to them”

(V.6: 88 )

“Verily! Allah forgives not setting up partners in worship with Him, but He forgives whom He pleases sins other than that”

‘(V.4:116)

Q. 46. What are the nullifiers of Islam?

A. The nullifiers of Islam are ten:

1. Polytheism of worship.

2. He who does not believe that the polytheists are disbelievers, or doubts their infidelity or holds their belief to be valid.

3. He who sets up intermediaries between one’s self and Allah, supplicating them, trusting them and asking them to

intercede on his behalf.

4. He who believes that the guidance of others is more perfect than the Prophet .

5. He who hates anything that the Prophet was sent with.

6. He who denies the religion of the Prophet or ridicules its reward or punishment.

7. Sorcery.

8. Supporting the polytheists against the Muslims.

9. He who believes that some people are exempted from abiding by the Shari`ah as Khidr was exempted by the laws of

Musa.

10. Turning away from the religion of Allah by neither learning nor applying it.

Q. 47. What are the three fundamentals that every Muslim must learn?

A. The three fundamentals are:

I, Knowing Your Rubb (the Lord, the Creator, the Sustainer, and the One in Whose Hand is the disposal of all affairs).

2. Knowing your religion (Islam).

3. Knowing your Prophet Muhammad

Q. 48. What is Taghut?

A. Everything that is worshipped. or followed or obeyed other than Allah is Taghut.

Q. 49. How many Taghut are there and who are their leaders?

A. They are many but their leaders are Five:

Q. 50. Who are the leaders of Taghut ?

A. They are:

1. Satan, may Allah curse him,

2. Anyone who is worshipped with his consent.

3. A person who calls the people to be worshipped instead of Allah.

4. A person who claims the knowledge of Ghaib (unseen, hidden, invisible, absent etc).

5.The ruler who rules by laws other than the law sent down by Allah.