திங்கள், 28 பிப்ரவரி, 2011

தக்லீதும் அதிமேதாவித்தனமும்

அஸ்ஸலாமு அலைக்கும்..

தக்லீத் குறித்த ஏர்வாடியை சேர்ந்த சிராஜ் போன்ற சில அதிமேதாவிக்கும்பலின் வறட்டு விமர்சனங்களுக்கு இங்கு சில விளக்கங்கள் அளிக்கபடுகின்றன..

தக்லீத் என்பது எதை குறிக்கும்?

  • ஒரு தனி நபர் மார்க்க விஷயமாக எதை கூறினாலும் , அதை கண்ணை மூடி பின்பற்றுவது தக்லீத் என்று அழைக்கப்படும்.
  • ஒரு தனி நபர் எதை சொன்னாலும், அதிலுள்ள குறைகளை கூட நியாயப்படுத்தி சரி காண்வது தக்லீத் எனப்படும்.
  • குர் ஆன் ஹதீசுக்கு எதிராக ஒருவர் சொல்வதை கூட ஆராயாமல் பின்பற்றுவது தக்லீத் எனப்படும்.

நான் அறிந்தவரை தக்லீத் என்பதற்கான அளவுகோல் இது தான்.

இந்த அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றை வைத்து தான் எந்த ஒரு நபரையும் அலச வேண்டும். அதுவே அறிவார்ந்த செயல்.

ஆனால், சில அதிமேதாவிக்கும்பல் தக்லீதுக்கு வைக்கும் அளவுகோலை பார்த்தால் இவர்கள் உண்மையில் சுய சிந்தனையுடன் தான் இருக்கிறார்களா அல்லது மருத்துவச் சிகிச்சைக்குரியவர்களா என்று நமக்கே சந்தேகம் ஏற்படும்,.

இந்த அதிமேதாவிக்கும்பல் சொல்லும் அளவுகோல் என்னவென்றால், ஒருவர் ஒரு குறிப்பிட்ட நபரை தக்லீத் செய்கிறார் என்பதற்குரிய காரணம், அந்த நபர் சொல்லும் அனைத்தையும் இவர் மறுக்காமல் விமர்சிக்காமல் இருக்கிறார் என்பதே!

கூறுகெட்டவன் கூட இதை விட தெளிவாக பேசுவான். இந்த அதிமேதாவிக்கு எந்த கூறும் இல்லை என்பதால் இவ்வாறு உளறுவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.
தன் கொள்கையை எப்பாடு பட்டாவது நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக, சஹாபியை சஹாபி இல்லை என்று கூறியும், ஹதீஸை ஹதீஸ் இல்லை என்று கூறியும் மறுத்தவருக்கு இது போன்று சிந்திக்க எந்த சிரமமும் இருக்காது.


  • நான் ஒருவரை தக்லீத் செய்கிறேன் என்றால் ஒன்று, அவர் எதை சொன்னாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன் என்று நான் வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும்.
  • அல்லது, அவர் தவறாக ஒன்றை சொன்னால், அது குர் ஆன் , ஹதீஸ் அடிப்படையில் தவறு என்று தெரிந்தும் நான் அதை நியாயப்படுத்த வேண்டும்.

இந்த இரண்டில் எதை சொன்னாலும் செய்தாலும், அது தான் தக்லீதுக்கான காரணம்.!
இந்த இரண்டை தவிர, ஒருவர் சொல்லும் அனைத்தையும் நான் மறுக்காமல் இருப்பதால், அல்லது விமர்சிப்பதாக இருப்பதால் நான் அவரை தக்லீத் செய்கிறேன் என்று சொல்ல முடியாது.

இது தான் அளவுகோல் என்றால், அனைவர் குறித்தும், அனைவரிடமும் இதே கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நபரையும் அலசி ஆராய்ந்து அவரை விமர்சித்து கொண்டே தான் நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.
ஏன்? ஒருவரை பற்றி விமர்சிக்காமல் இருந்து விட்டால் சில அதிமேதாவிக்கூடம் அந்தநபரை நாம் தக்லீத் செய்வதாக சொல்லி விடுமே. !
உலகில் உள்ள அறிஞர்கள் யார் யார் என்று பட்டியல் தயாரித்து, அவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்நாளில் என்னன்ன கருத்துகளை சொல்லியுள்ளார்களோ, அதையெல்லாம் அலசி ஆராய்ந்து, விமர்சனம் செய்து கொண்டே இருக்க வேண்டும். நமது வாழ்நாள் முழுவதையும் இதற்கே ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் செலவிட வேண்டும்
இதில் சிறிது பிசகி, எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு அறிஞர் குறித்து நாம் கருத்து தெரிவிக்க மறந்து விட்டோம் என்றால், இந்த அதிமேதாவிக்கும்பல், நாம் அந்த குறிப்பிட்ட அறிஞரை தக்லீத் செய்வதாக அறிவித்து விடுவார்கள்.

இதை படிக்கும் போது சிரிப்பு ஏற்படுகிறதா? இது தான் இந்த அதிமேதாவி சிராஜின் தக்லீதுக்கான definition !!!

இந்த அதிமேதாவி தக்லீதுக்கு கொடுக்கும் விளக்கம் இது தான் என்றால், நான் மேலே சொல்லியுள்ளவற்றுக்கு தகுந்த பதிலை தர வேண்டும்.

இன்னும் சொல்வதாக இருந்தால், இந்த குழுமத்திலுள்ள ஒவ்வொரு நபரின் பெயரையும் சொல்லி, இவரை நீங்கள் தக்லீத் செய்கிறீர்கள், அவரை நீங்கள் தக்லீத் செய்கிறீர்கள் என்று நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்.

அதற்கு அவர் காரணம் கேட்டால், "இந்த நபர் சொல்லியுள்ள எதையாவது நீங்கள் இன்றுவரை மறுதிருக்கிறீர்களா? என்று நான் திருப்பி கேட்ப்பேன்.
இந்த அறிவுப்பூர்வமான கேள்விக்கு அவரால் எந்த பதிலையும் சொல்ல முடியாதல்லவா? ஆகவே அவர் அந்த குறிப்பிட்ட நபரை தக்லீத் செய்கிறார் என்பது இதன் மூலம் உறுதி ஆகிவிடும்.
சரிதானே????

என்னே இவரது அறிவு ! என்னே இவரது கொள்கை !! என்னே இவரது சிந்தனை!!!
சிந்திக்கும் திறனில் கோளாறென்றால் இவர் போன்றவர்கள் மருத்துவரை சந்திக்கும் படி நாம் அன்புடன் பரிந்துரை செய்கிறோம், இறைவனிடம் இவருக்காக துவாவும் செய்கிறோம்..


ஆக, தக்லீத் என்றால் தவறுகளையும் நியாயப்படுத்த வேண்டும்.
தக்லீத் என்றால் சுய சிந்தனையில்லாமல் பின்பற்ற வேண்டும். இதை தாண்டிய ஒரு தக்லீத் உலகில் இல்லை.

ஒருவரது கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றால் மேலே உள்ள இரு காரணிகள் இல்லாத நிலையில் நான் தக்லீத்வாதி ஆக மாட்டேன்.

இந்த காரணங்கள் இல்லாமல் எவரது கருத்தையும் எவரும் ஏற்றுக்கொள்ளலாம்.

இன்னும் சொல்லப்போனால், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்வதை ஊக்குவிதிருக்கிறார்கள்.

மார்க்கத்தை அறிந்தவர்கள் இருப்பதை போல அறியாதவர்களும் இருப்பார்கள். அறியாதவர்கள் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்பது மார்க்க கட்டளை. இதை செய்வது தக்லீத் ஆகாது என்றால், தக்லீதின் பொருள் என்ன என்பது இதிலேயே விளங்குகிறது.

அறிஞர் பிஜேவை தக்லீத் செய்வது சம்மந்தமாக நான் முன்பே எழுதிய ஒரு மறுப்பாக்கம், இந்த அதிமேதாவிக்கு பதிலளிக்கும்.
பிஜே மத்ஹபா?


வஸ்ஸலாம்.

பொய்யை மூலதனமாக கொண்ட ஏர்வாடி JAQH

அஸ்ஸலாமு அலைக்கும்..

சகோ. ஏர்வாடி சிராஜ் அவர்களின் கவனத்திற்கு..
(அனைவரும் படிக்க வேண்டிய செய்திகள் தான்)


தக்லீத் குறித்த உங்கள் பேச்சுக்கள், நாம் கண்டித்த பிறகும் தொடர்வதால், அது குறித்து அல்லாஹ்விடம் முறையிட்டு விட்டேன்..
அல்லாஹ்வின் கோபமும் தண்டனையும் இவர் மீது (இந்த விஷயத்திற்காக மட்டும்) இறங்க வேண்டும் என்ற துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

தக்லீத் குறித்து இவரோடு இனியும் நாம் பேச எதுவும் இல்லை என்றாலும், இவர் போன்று பலரும் இவ்வாறு அயோக்கியத்தனம் காட்டி வருவதால் சில விஷயங்களை விளக்க வேண்டியுள்ளது . சிராஜ் போன்றோருக்கு சிந்தினையில் உறைக்க வேண்டும் என்ற வகையில் சில வாதங்களை முன் வைத்தால் இவர் போன்றவர்கள் இது போன்று இனிமேலும் அயோக்கியதனம் செய்ய மாட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ், அடுத்த மின்னஞ்சலில் விளக்குகிறேன்..

இப்போது இவர் கேட்கும் கேள்விக்கு வருவோம்.. ரபியுல் அவ்வல் மாதம் எப்போது துவங்கியது என்று கேட்கிறார்.

ஏற்கனவே பிறை குறித்து நம்மோடு பல வாரங்களாக வாதம் செய்து, இறுதியில் நான் பல கேள்விகளை முன்வைத்து விளக்கம் கேட்ட உடன், அவைகளுக்கு பதில் இல்லாமல் தடுமாறிய இவர், அப்போது சொன்ன பதில் , நாங்கள் பிஜே உடன் விவாதிக்க போகிறோம், இனி நாஷிதிடம் பேச மாட்டோம், என்பது.

நான் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் சொல்லாமல், பிஜே உடன் விவாதிக்க செல்கிறேன் என்று நீங்கள் அறிவிப்பது உங்கள் பார்வையில் நியாயம் என்றால், இப்போது நீங்கள் கேட்கும் கேள்விக்கு பிஜே உடனான விவாதத்தை அறிவியுங்கள், அதன் பிறகு பதில் சொல்கிறேன், என்று நான் சொல்வது நியாயம் ஆகாதா?

உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயம் என்று நடந்து கொள்வதை தவிர ஒரு நயவஞ்சகத்தனம் வேறு என்ன?


விவாத அழைப்பிற்கும் 1432 ரபியுல் அவ்வல் உங்கள் ஜமாஅத்திற்கு எந்த தேதியில், எந்த கிழமையில் ஆரம்பித்தது என்பதற்கும் என்ன சம்மந்தம்.
விவாதம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதில் நாஷிதிற்கு என்ன பிரச்சினை. அது பி.ஜேவிற்கும் எனக்கும் உள்ள விஷயங்கள் அதற்கு நான் அவருக்கு பதிலளிப்பேன். - ஏர்வாடி சிராஜ்.


அதாவது, அவர் கேட்கும் கேள்வக்கு நான் நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்கிறார். ஏற்கனவே மின்னஞ்சல் மூலமான விவாதத்தின் போது, நான் அடுக்கிய பல கேள்விகளை கண்டு கொள்ளாமல் விட்ட இவர், இறுதியாக சொன்ன பதில் "நான் பிஜே உடன் விவாதம் செய்ய தயாராகி விட்டேன்", என்பது.

இந்த பதில், எனது கேள்விக்கு பதில் சொல்வதை விட்டும் அவரை ஒளிந்து கொள்ள ஏதுவாக , ஒரு கேடையமாக அமைத்தது.
இருந்தாலும், பிஜே உடன் விவாதிக்க இவர் ஒப்புக்கொண்டு விட்டார் என்ற வகையில் அவர் பதில் சொல்லாததை நான் பொருட்படுத்தவில்லை.

இந்த நிலையில், இவர் நேர்மையாளர் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பிஜே உடன் விவாதிக்க முன் வர வேண்டும், அதற்குரிய தேதியை அறிவிக்க வேண்டும்.

இதை செய்யாமல் மேலும் மேலும் என்னிடம் கேள்வி கேட்கலாமா?
சரி, கேள்வி கேட்டார், அதற்கு நான் சொன்ன பதில் என்ன? விவாதத்திற்கு வர போகிறேன் என்று அன்றைக்கு சொன்னீர்களே, அது என்ன ஆயிற்று? அதற்குரிய கால அளவை சொல்லுங்கள், உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன், என்று நான் கூறினேன்.
இந்த பதில் நியாயமான பதிலாக இங்குள்ள சகோதரர்களுக்கு தெரியவில்லையா ?

இவரது நேர்மையை இப்போதாவது நிரூபித்திருக்க விடுமா இல்லையா? இப்போதும் என்ன சொல்கிறார்?
இந்த கேள்விக்கும் விவாதத்திற்கும் என்ன சம்மந்தம், அது எனக்கும் பிஜேக்கும் இடையில் உள்ள விஷயம் , என்கிறார்.

அப்படியா?
அப்படியானால், மின்னஞ்சல் விவாதத்தின் போதும், நான் அடுக்கிய கேள்விகள் ஒன்றுக்கு கூட பதில் தராமல் பிஜே உடன் விவாதிக்க போகிறேன் என்று அறிவித்தீர்களே, நான் கேட்ட கேள்விக்கும் பிஜெவிற்கும் என்ன சம்மந்தம்?
உங்கள் கேள்வியை நான் திருப்பி கேட்க கூடாதா?



  • குறைப் என்ற நபி தோழரை, அவர் சஹாபியே இல்லை, அவர் தாபி தான் என்று அப்பட்டமாக புளுகினீர்களே, அதற்குரிய குர் ஆன், ஹதீஸ் ஆதாரம் என்ன?
இந்த கேள்விக்கும் பிஜே உடன் விவாதிக்க போவதற்கும் என்ன சம்மந்தம்?

  • வாகனக்கூட்டம் ஹதீஸை அறிவிக்கும் சஹாபி, அவர் சஹாபியே இல்லை என்று அப்பட்டமாக புளுகினீர்களே ,அதற்குரிய குர் ஆன், ஹதீஸ் ஆதாரம் என்ன?
இந்த கேள்விக்கும் பிஜே உடன் விவாதிகக் போவதற்கும் என்ன சம்மந்தம்?

  • என்னிடம் நீங்கள் சத்யம் செய்ய சொன்னதை போல், உங்களிடம் நான் சத்தியம் செய்ய சொன்னேனே, அதை நீங்கள் செய்யாமல் ஒளிந்து கொண்டு பிஜே உடன் விவாதிக்க போகிறேன் என்று அறிவித்தீர்களே, நான் கேட்ட சத்தியத்திற்கும் பிஜெவிற்கும் என்ன சம்மந்தம்?

  • பிறை குறித்த இன்னும் பல ஹதீஸ்களை வைத்து, உங்கள் கொள்கைக்கு முரணாக இருக்கிறதே, என்று கேட்டேனே, அதற்கு பதில் சொல்லாமல் ஓடி விட்டு, பிஜே உடன் விவாதிக்க போகிறேன் என்று அறிவித்தீர்களே, நான் கேட்ட கேள்விகளுக்கும் பிஜெவிற்கும் என்ன சம்மந்தம்?


இதே போன்று இன்னும் எண்ணற்ற கேள்விகள் எனது குறிப்பில், எனது தொகுப்பில் உள்ளன.
அவற்றை அடுக்கடுக்காக நான் இங்கு முன்வைத்து, இவைகளுக்கு பதில் சொல்லாமல் பிஜே வுடன் விவாதிக்க செல்கிறேன் என்று நீங்கள் அறிவித்தது எந்த வகையில் சம்மந்தப்பட்டது? என்று நம்மால் கேள்வி கேட்க முடியாதா?

உங்களை நேர்மையாளர் ,உண்மையாளர் என்று நம்புகின்ற ஒரு சிலராவது இன்றும் மிச்சமிருப்பார்கள்.. அவர்கள் மத்தியிலாவது உங்கள் சுய தன்மைகளை வெளிக்காட்டாமல் மறைக்க முயற்சியுங்கள்..

வஸ்ஸலாம்.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஷஃபாஅத் - மறுமையில் பரிந்துரை



அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ”அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். ”வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்­க் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ”அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:3)


மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன.


1. அறவே பரிந்துரை கிடையாது
2. நல்லடியார்கள், நபிமார்கள் தாம் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்
3. நிபந்தனையுடன் கூடிய பரிந்துரை உண்டு


இம்மூன்று கருத்துக்களில் முதலிரண்டு கருத்துக்களும் குர்ஆனைப் பற்றிப் போதிய அறிவு இல்லாதவர்களின் கருத்தாகும்.
அறவே பரிந்துரை இல்லை என்ற கருத்தில் உள்ள வசனங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பரிந்துரையை அடியோடு மறுப்பவர்கள், பரிந்துரை பற்றிய அனைத்து வசனங்களையும் பார்ப்பதில்லை. பரிந்துரை பற்றிக் கூறும் சில வசனங்களை ஆழமான பார்வையில்லாமல் பார்ப்பதால் இரண்டாம் கருத்துக்கு சிலர் வந்துள்ளனர். இரண்டும் தவறாகும்.

ஒருவன், இன்னொருவனுக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக்கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:48)

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றி­ருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (நம்மை) மறுப்போரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன 2:254)


”தமது இறைவனிடம், தாம் ஒன்று சேர்க்கப்படுவதை அஞ்சுவோருக்கு அவனன்றி பொறுப்பாளனோ, பரிந்துரைப்பவனோ இல்லை” என்று இதன் மூலம் எச்சரிப்பீராக! இதனால் அவர்கள் (இறைவனை) அஞ்சுவர். (அல்குர்ஆன் 6:51)


இதே கருத்தில் அமைந்துள்ள (திருக்குர்ஆன் 2:123, 6:70, 6:94, 26:100, 32:4, 36:23, 39:43,44, 74:48,) ஆகிய இவ்வசனங்களை மட்டும் காண்பவர்கள் மறுமையில் பரிந்துரை என்பதே இல்லை எனவும், பரிந்துரை பயன் தராது எனவும் கூறுகின்றனர்.

அவன் அனுமதியின்றி யார் பரிந்துரைக்க முடியும்
(அல்குர்ஆன் 2:255)

அவன் அனுமதி பெறாமல் எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை
(அல்குர்ஆன் 10:3)
ஆகிய வசனங்களில் இறைவனிடம் அனுமதி பெறாமல் பரிந்துரை செய்ய முடியாது என்பதை அறியலாம். இறைவன் இதற்கு அனுமதியளிக்க மாட்டான் என்றால் இவ்வாறு கூற மாட்டான்.

அவன் பொருந்திக் கொண்டவர்களுக்கே தவிர அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள் (அல்குர்ஆன் 21:28)

ரஹ்மானிடம் உடன்படிக்கை எடுத்தவர் தவிர மற்றவர்கள் பரிந்துரைக்கு உரிமையாளர் அல்லர் (அல்குர்ஆன் 19:87)

அவன் யாருக்கு அனுமதியளிக்கின்றானோ அவருக்கே தவிர மற்றவர் களுக்குப் பரிந்துரை பயன் தராது (அல்குர்ஆன் 20:109)

அவன் யாருக்கு அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது (அல்குர்ஆன் 34:23)

அவனன்றி அவர்கள் பிரார்த்திப்போர் பரிந்துரைக்கு உரிமையாளர்களாக மாட்டார்கள். அறிந்து, உண்மைக்கு சாட்சி கூறியோரைத் தவிர. (அல்குர்ஆன் 43:86)

அல்லாஹ் தான் நாடியவருக்கு அனுமதியளித்த பின்பே தவிர அவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது (அல்குர்ஆன் 53:26)


சிலருக்குப் பரிந்துரை செய்ய அனுமதியளிக்கப்படும் என்பதையும், அந்தப் பரிந்துரை பயன் தரும் என்பதையும் இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.


குர்ஆனைப் பற்றிய போதிய அறிவு இல்லாத ஒரு சிறு கூட்டத்தினர் மறுமையில் பரிந்துரை இல்லை எனக் கூறுகின்றனர். அது தவறு என்பதற்கு இவ்வசனங்கள் போதிய சான்றாகும்.


எவரது பரிந்துரையும் இன்றி நல்ல மதிப்பெண் பெற்று எடுத்த எடுப்பிலேயே சொர்க்கம் செல்லத்தான் ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். அதைத் தான் இறைவனிடம் கேட்க வேண்டும்.


‘இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையைத் தா!’ என்று கேட்பது தவறாகும்.
என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும் கூறினார்கள்.


மறுமையில் அல்லாஹ் யாருக்கு அனுமதியளிப்பான் என்பது யாருக்கும் தெரியாது. எனவே ”மகானே! எனக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள்” என்று இங்கே வாழும் போது கேட்கக் கூடாது. அது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.
மக்காவில் வாழ்ந்தவர்கள் இவ்வாறு பரிந்துரை வேண்டிய காரணத்தினால் தான் இணை வைப்போர் ஆனார்கள்.


யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிப்பான் என்பதால் பரிந்துரையை யாரிடமும் வேண்டக் கூடாது.


அல்லாஹ்வே நம்மை மன்னிக்க முடிவெடுக்கும் போது ஒருவரை அழைத்து ”இவருக்குப் பரிந்துரை செய்” என்பான். பெயரளவில் தான் இது பரிந்துரையே தவிர தீர்மானம் அவனிடத்தில் மட்டுமே உள்ளது.




செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

மலக்குமார்களை நம்புதல்


மலக்குமார்கள் இறைவனின் கண்ணியமிக்க அடியார்கள் ஆவார்கள். அவர்கள் இறைவனை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபடக் கூடியவர்கள்.


வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அவனிடத்தில் இருப்போர் அவனது வணக்கத்தை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள். அவர்கள் சோர்வடையவும் மாட்டார்கள். இரவிலும், பக­லும் துதிப்பார்கள். ச­ப்படைய மாட்டார்கள். (அல் குர்ஆன் 21 :19,20)


தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதை செய்வார்கள். (அல் குர்ஆன் 66 :6)


மலக்குமார்களுக்கு இறை தன்மையோ மனிதத் தன்மையோ கிடையாது. அவர்கள் இறைவனின் பிள்ளைகளும் கிடையாது.


மலக்குமார்களின் தோற்றம்


நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ர­)
நூல் : முஸ்லிம் (5314)


வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண் டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகு களைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 35:1)


நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரயீல்(அலை) அவர்களை 600 இறக்கை உடையவர்களாகக் கண்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ர­)
நூல் : புகாரீ (4857)


மலக்குமார்கள் சில நேரங்களில் இறைவனின் கட்டளைப்படி மனித உருவிலும் வருவார்கள்.


எண்ணிக்கை


மலக்குமார்களின் எண்ணிக்கைளை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வரையறுத்துக் கூற முடியாது.
நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் போது ஏழாவது வானத்திற்கு வந்தார்கள். அங்கு நடந்ததைப் பற்றிக் கூறும்போது,
எனக்கு பைதுல் மஃமூர் காட்டப்பட்டது. நான் அதைப் பற்றி ஜிப்ரயீ­டம் கேட்டேன். அவர் இது பைதுல் மஃமூர் ஆகும். இதில் நாள்தோறும் எழுபதினாயிரம் மலக்குமார்கள் தொழுகின்றனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் அவர்களில் யாரும் அதில் நுழைவதில்லை என்று கூறினார்கள்.
நூல் : புகாரீ (3207)


பெயர் கூறப்பட்ட மலக்குமார்கள்

1. ஜிப்ரீல் (அலை) : (அல்குர்ஆன் 2:98)
2. மிக்காயீல் (அலை) : (அல்குர்ஆன் 2:98)
3. இஸ்ராஃபீல் (அலை) : (முஸ்­ம் 1289)
4. மா­க்(அலை) இவர் நரகத்தின் காவலாளி ஆவார். (43:77)


வஹீயை கொண்டு வருதல்


”என்னைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்!” என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான். (அல்குர்ஆன் 16:2)


நன்மை, தீமைகளைப் பதிவு செய்தல்

உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள். (அல் குர்ஆன் 82 :10,11,12)
வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத் தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன் 50:17,18)


உயிரைக் கைப்பற்றுதல்

”உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 32:11)


பாதுகாவல்
”மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். (அல்குர்ஆன் 13:11)


அர்ஷைச் சுமப்பவர்கள்

வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.
(அல்குர்ஆன் 69:17)


நரகக் காவலாளிகள்

அதன் மேல் பத்தொன்பது (வானவர்கள்) உள்ளனர். நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கையை (நம்மை) மறுப்போ ருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்க வில்லை. (அல்குர்ஆன் 74:30,31)


கருவறையில் விதியை எழுதுதல்


தாயின் வயிற்றிலுள்ள கரு, நான்கு மாதங்களை அடைந்ததும் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி அவனுடைய வாழ்வாதாரங்கள், ஆயுள், செயல்கள் ஆகியவை எவ்வளவு என்றும் அதன் முடிவு எவ்வாறு அமையும் என்பதையும் எழுதுமாறு கட்டளையிடுவான்.
நூல் : புகாரீ (7454)


கப்ரில் விசாரணை செய்தல்

கப்ரில் மய்யித் வைக்கப்பட்டதும் இரு மலக்குகள் அதனிடம் வந்து அல்லாஹ்வைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும், நபி யார்? என்பதாகவும் கேள்விகளைக் கேட்பார்கள். நூல் : திர்மிதீ (991)

திங்கள், 14 பிப்ரவரி, 2011

TNTJ : ஆண் / பெண் தவ்ஹீத் கல்லூரிகள்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஆண் / பெண் இருபாலருக்கும் தனி தனி இஸ்லாமியக்கல்லூரிகள்.



ஆண்கள் தவ்ஹீத் கல்லூரி


tc2

இக்கல்லூரியில் 2 வருடம் மார்க்க கல்வி பின் வரும் பாட அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் மூலம் கற்றுத் தரப்படுகின்றது.

  1. இஸ்லாமிய கொள்கை விளக்கம்
  2. திருக்குர்ஆன் விளக்கவுரை
  3. ஹதீஸ் கலை
  4. நபிவழிச் சட்டங்கள்-மத்ஹபு சட்டங்கள் ஒப்புநோக்கு
  5. நபிகளார் வரலாறு
  6. அரபி மொழி இலக்கண சட்டங்கள்
  7. அரபி மொழி பேச எழுத பயிற்சி
  8. திருக்குர்ஆனை ஓதும் முறை
  9. வாரிசுரிமைச் சட்டங்கள்
  10. சொற்பயிற்சி, கட்டுரை பயிற்சி, விவாத பயிற்சி
  11. கணிணி பயிற்சி

மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் உணவு மற்றும் தங்குமிடம் முற்றிலும் இலவசமாக 2 வருடம் கால பாடத்திட்டத்தில் இக்கல்லூரி நடத்தப்படுகின்றது.

கல்லூரியில் சேருவதற்காக குறைந்த பட்சம் தேவையான தகுதிகள்:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் சரளமாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும், திருக்குர்ஆனை சரளமாக ஓத தெரிந்திருக்க வேண்டும்.

கல்வி ஆண்டின் துவக்கம்: ஜுலை 1

முகவரி:
24/11E, ஆசாத் நகர், சூரமங்கலம், சேலம்-636005
செல்:9790892220, 9381509588

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்









பெண்கள் தவ்ஹீத் கல்லூரி

தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி

31

ஒரு வருட ஆ­லிமா பட்டப்படிப்பு வகுப்பில்

நபி வழிச் சட்டங்கள்

அரபி இலக்கணம்

நபி (ஸல்) அவர்கள் வரலாறு

திருக்குர்ஆன் ஓதும் சட்டங்கள்

இஸ்லாமியக் கொள்கை விளக்கம்,

அரபி மொழியியல்,

வாரிசுரிமைச் சட்டங்கள்,

சொற்பயிற்சி, கட்டுரை பயிற்சி, சிறு தொழில் பயிற்சி, கணணி பயிற்சி

மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் தகுதியான ஆசிரியைகளைக் கொண்டு பாடம் நடைபெறுகிறது.


கல்வியாண்டு துவக்கம் : ஜூன் 1

தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி

24/11E, ஆசாத் நகர்
சூரமங்களம்,
சேலம் – 636005
தொலை பேசி : 9976649599

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஒற்றுமைக்கு என்ன வழி?

ஒற்றுமை கோ(வே)ஷம் போடுபவர்கள், உண்மையில் ஒற்றுமையை விரும்புவார்களேயானால், ஒற்றுமை ஏன் குலைந்தது என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.

அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

இதை செய்யாமல், ஒற்றுமை, ஒற்றுமை என்று சொல்லி விட்டால் ஒற்றுமை ஏற்பட்டு விடாது.

ஒரே மேடையில் தோன்றுவதோ, ஒரே குடையில் கீழ் அணிவகுப்பதோ, ஒற்றுமைக்கு சான்று என்று நீங்கள் கருதினால் அது தவறு.

ஒற்றுமை என்பது கொள்கையில் இருக்க வேண்டும்.. அல்லாஹ் சொன்ன ஒற்றுமையாக இருக்க வேண்டும்..
மார்க்கத்தில் ஒன்றுபடுவது தான் உண்மையான ஒற்றுமையே தவிர, நீங்கள் சொல்வது போல், தேவையென்றால் சேர்ந்து கொள்ளலாம், அனைத்தையும் மன்னிக்கலாம், என்ற வாதங்கள் எல்லாம் வெறும் வாதங்களாகவே நிற்கும் .

அல்லாஹ் சொன்ன கொள்கையில் ஒன்றுபடுமாறு அனைத்து இயக்கங்களையும் அழையுங்கள்..

அதுவே உண்மையான அழைப்பு.. அதுவே உண்மையான ஒற்றுமை.. அந்த நாள் வரும் போது, ஒரே ஒரு இயக்கம் மட்டும் தான் மிஞ்சி நிற்கும்..நபிகளார் காட்டி தந்த அந்த ஒரு இயக்கம்!!

ஆக, கொள்கையை ஒன்றுபடுத்துங்கள், மக்கள் ஒன்றுபடுவார்கள். !!


-----------------------------------------------------------------------------------------------


நீங்கள் மீண்டும் மீண்டும், இயக்கத்தை ஒன்றினைப்பதையே குறிக்கோளாக கொள்கிறீர்கள்.
கொள்கையை ஒன்றிணையுங்கள் என்று நாம் சொல்கிறோம்.. கொள்கை ஒன்றாகாமல், இயக்கங்கள் ஒன்றாகாது!!

  • மார்க்க விஷயத்தில் எது சரியான கொள்கையோ, அதை அனைவரும் கடைபிடிக்கும் வகையில் ஒன்றிணைய அழையுங்கள்..

  • அரசியல், சமூக , பொருளாதார சித்தாந்தங்களில் ஒரு முஸ்லிம் கொள்ள வேண்டிய பார்வை என்ன? என்பதை குறித்த கருதொற்றுமைக்கு முதலில் அனைவரையும் அழையுங்கள்..

  • ஜனநாயக நாட்டில், இஸ்லாமிய ஆட்சி இல்லாத ஒரு நாட்டில், நம் உரிமைகளை பெறுவதற்கான வழி என்ன? என்பது குறித்த பார்வையில் அனைவரையும் முதலில் ஒன்றிணைய அழையுங்கள்..


இது போன்ற கருத்தொற்றுமை முதலில் ஏற்ப்பட வேண்டும். அதன் பிறகே, அதை அடைவதில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒற்றுமையை பார்க்க முடியும்..
இதில் எந்த ஒன்றில் கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும், மீண்டும் ஒற்றுமை ஏற்படாது என்பதையும் கவனத்தில் கொள்க..


ஒரு வேளை, ஜெர்மன் முறையான வாக்கெடுப்பு முறை இந்தியாவில் கொண்டுவரப்ப்படுமானால், அப்போது, தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் போட்டியிடலாம்!
இன்றைய சூழலில் பிரிட்டின் முறையான அடிப்படையில் செயல்படும் தேர்தல் முறை, ஆட்சி முறை என்பது, பிற்ப்படுதப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகிய வர்கத்தினருக்கு போதுமான பிரதிநித்துவம் கிடைக்க வழி இல்லாத ஒரு முறை!

ஆனால், இந்த வழிமுறையை ஆதரித்து, தேர்தலில் போட்டியிடக்கூடிய முஸ்லிம் அமைப்புகள் உள்ளன..
இந்த கருத்து வேற்றுமையை மாற்றாத வரை ஒற்றுமையை பேசி என்ன பயன்?

ஆக, வெறுமனே இயக்கங்களை ஒன்றிணைப்பதோ, ஒரு தேர்தலில் ஒற்றுமையாக பேசி, ஒரே மேடையில் காட்சி தருவதோ ஒற்றுமைக்கான உண்மையான நிறம் அல்ல!!!
அடிப்படைகள் மாற வேண்டும்.. !!!!!!
அதை ஒரு புரட்சியாக செய்ய வேண்டும்.. !!!!

வெறுமனே கோஷங்கள் பயன் தராது என்பது எனது மிக ஆழமான கருத்து!!..



-----------------------------------------------------------------------------------------------



அஸ்ஸலாமு அலைக்கும்..

நடைமுறை சிந்தனையோடு நீங்கள் கருத்து சொல்வதாக இருந்தால் ஒத்த கருத்துடைய அனைத்து இயக்கங்களையும் ஒன்றிணைத்து விட்டு, அதன் பிறகு மாற்று கருத்துடைய இயக்கங்களை குறித்து பேச வேண்டும்.

உங்களது / அனைவரது கருத்துக்களும், இரு வேறு கருத்துடையவர்களை ஒன்றிணைப்பதிலும், அது ஒன்றிணைய சிரமம் என்று விளக்கமளித்தால், அதை விமர்சிப்பதிலும் தான் இருக்கிறதே தவிர, "practical " கருத்துக்களாகவும் விருப்பமாகவும் இவை இல்லை!

நாம் சொல்வது மிக எளிய வழி!

தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று நாம் சொல்கிறோம்.. தேர்தலில் போட்டியிடலாம் , தேர்தலில் போட்டியட வேண்டும் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.

எங்கள் இருவரையும் இணைப்பதற்கு முயற்சி செய்வதற்கு முன்னால், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொல்பவர்களை முதலில் ஒன்றிணைக்க முடிகிறதா என்று பாருங்கள், என்கிறேன்.

அதை உங்களால் செய்ய முடியும் என்றால் பாதி வேலையோ, முக்கால் வாசி வேலையோ முடிந்து விடுமே!
ஆகவே அதை செய்யுங்கள்.

அதை செய்ய இயலவில்லை என்றால், இப்போது பிரச்சனை தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சொல்பவர்களாலா?, அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொல்பவர்களிடையே உள்ள "ஈகோ"வினாலா? என்பது வெட்ட வெளிச்சமாகி விடும்.

இவ்வாறு ஒத்தக்கருத்துடைய இயக்கங்களிடையே ஈகோ இருந்தால் ஒற்றுமை குலைவிற்கு யார் காரணம்? நாமா? அவர்களா?

இதை அலசிப்பார்ப்போமா? முயற்சி செய்வோமா? நாம் ஒத்துழைக்கிறோம், என்ன வகையிலான ஒத்துழைப்பிற்கும் நாம் தயார் இன்ஷா அல்லாஹ்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


அடுத்து, தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சொல்பவர்கள் கூட்டம் சேர்ப்பதற்கு மட்டும் மற்ற கொள்கைவாதிகளை அழைக்கிறார்களே என்று கேட்க்கிறீர்கள்.
அதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் என்ன சம்மந்தம்???
தேர்தலில் போட்டியடலாமா கூடாதா என்ற பிரச்சனையில் இந்த வாதம் தேவையில்லை.
மற்ற இயக்கங்களின் மேடையில் இவர்கள் வரலாமா? அல்லது இவர்கள் மற்ற இயக்க மேடைக்கு போகலாமா? என்பது குறித்து பேசலாம் என்றால் தனி தலைப்பாக பேசலாம்.. அதற்குரிய நியாயமான பல பல காரணங்கள் உள்ளன..
ஆனால், இந்த தலைப்பில் இந்த கருத்து தேவையில்லை!

இன்னும் சொல்லப்போனால், இயக்கத்தின் போராட்டங்களுக்கு வருவது பிற இயக்க தலைவர்களல்ல! பொது மக்கள்!
ஹரூன் வந்தார் என்றால், அவரை இன்னொரு இயக்க தலைவர் என்ற முறையில் அழைக்கவில்லை.. அவர் "மேலிடத்தில்" நம் கோரிக்கையை எடுத்து சொல்லும் இடத்தில் உள்ளார் என்பதனால் அழைக்கப்பட்டார்.

மட்டுமல்ல, பிற இயக்க மேடையில் ஏறுவது என்பது ஒற்றுமை கோஷத்தில் இரண்டாம் படி!! நாம் முதல் படியான கொள்கையை ஒன்றிணைப்பதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.. கொள்கையை ஒன்றிணைக்காமல் ஒரே மேடையில் காட்சி தர முடியாது!! இதை தான் எனது முந்தைய மெயிலில் கூறினேன்.


சரி, ஒற்றுமைக்கு இது தான் அளவுகோல் என்றால், நீங்கள் கேட்கும் கேள்வியை நாமும் திருப்பி கேட்கலாம்.. தமுமுக தலைவர் ஏன் தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஏறுவதில்லை?
சமுதாய ஒற்றுமை குறித்து மிகவும் ஆர்வப்படக்கூடியவர் தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஏற வேண்டியது தானே? அவ்வாறு அழைப்பு விடுத்தால் அவர் என்ன பதில் சொல்வார்?
அவர் என்ன பதில் சொல்வாரோ, அந்த பதில் சரியான பதில்!! அந்த பதில் தான் ஒற்றுமை இன்னும் ஏற்படவில்லை என்பதற்கான அடையாளம்!!

ஆக, தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற சொல்லக்கூடிய இயக்கங்களை ஒற்றுமைக்கு அழைப்பதை விட்டு, தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்பவர்களை முதலில் ஒன்றிணைந்து செயல்பட அழையுங்கள்..
எண்ணிக்கையில் அத்தகைய கொள்கை கொண்ட இயக்கங்களே அதிகம் உள்ளன.. ஆகவே நீங்கள் விரும்பும் ஒற்றுமை எளிதில் பெற அதுவே சுலப வழி!!
முயற்சி செய்யுங்கள்..!

புதன், 9 பிப்ரவரி, 2011

அவ்லியாக்களின் சிறப்பு(?) !!



(மௌலவி பிஜே அல் ஜன்னத் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த போது எழுதிய கட்டுரை)

- அவ்லியாக்கள், மகான்கள் என்று பிறரை நம்புவோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..



அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி என்பவர் சுன்னத் வல் ஜமாஅத்தின் பெரிய இமாம். அவ்லியாக்களை மதிப்பதில் இவர் முதல் இடத்தில் இருப்பதாக சுன்னத் வல்ஜமாஅத்தினர் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. ஃபத்வாக்கள் வழங்கும் போது இவரது கூற்றையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆன்மீகத்துக்கு அளப்பரிய சேவை செய்தவர் எனவும் இவரை சுன்னத் ஜமாஅத்தினர் புகழ்ந்து கூறுவதுண்டு. இரகசிய ஞானம், ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற சித்தாந்தங்களுக்குப் புத்துயிரூட்டியவர் இவர். ஷைகு, முரீது வியாபாரத்திற்கு அதிக அளவு விளம்பரம் செய்தவர்.

அவ்லியாக்கள், ஷைகுமார்கள் ஆகியோரின் வரலாறுகளைக் கூறுவதற்காகவே பல வால்யூம்களில் இவர் தபகாத் என்ற பெரும் நூல் எழுதியுள்ளார். மத்ஹபுவாதிகளாலும், (அஞ்)ஞானப் பாட்டையில் நடப்பவர்களாலும் ஒருசேர மதிக்கப்படுபவர் இவர்.

இவர் எழுதிய தபகாத் நூல், அவ்லியா பக்தர்களுக்கும் முரீதீன்களுக்கும் வேதம். இவரது இந்த அரிய பொக்கிஷம் பெரிய பெரிய அரபிக் கல்லூரிகளின் நூலகங்களை இன்றளவும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.

அரபு தெரிந்தவர்கள் மட்டுமே படித்து ரசித்து வந்த இந்தப் பொக்கிஷத்தை அரபு தெரியாதவர்களும் ரசிக்க வேண்டாமா? என்ற நல்லெண்ணத்தில் சில பகுதிகளை மட்டும் தமிழில் தருகிறோம். படித்து விட்டு அவ்லியாக்களை மதியுங்கள். நமது சொந்தக் கருத்தாக எதையும் இங்கே நாம் கூறவில்லை. அந்த நூலில் இடம் பெற்றுள்ள அரபி வாசகங்களில் நேரடித் தமிழாக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. குறிப்பு என்று போடப்பட்ட விஷயங்கள் மட்டும் நமது விமர்சனம்.

அஷ்ஷைகு இப்ராஹீம்

ومنهم الشيخ إبراهيم العريان رضي الله تعالى عنه ورحمه…وكان رضي الله تعالى عنه يطلع المنبر ويخطب عرياناً، فيقول: السلطان ودمياط باب اللوق بين القصرين وجامع طيلون الحمد لله رب العالمين، فيحصل للناس بسط عظيم…وكان يخرج الريح بحضرة الأكابر، ثم يقول: هذه ضرطة فلان، ويحلف على ذلك، فيخجل ذلك الكبير منه، مات سنة نيف وثلاثين وتسعمائة

பொருள்: அந்த இறை நேசச் செல்வர்களில் ஒருவர் தான் நிர்வாணி அஷ்ஷைகு இப்ராஹீம் (ரலி) அவர்கள். அவர்கள் மிம்பரில் ஏறி நின்று நிர்வாணமாக குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்துவார்கள். அந்த உரையில் சுல்தான்,திம்யாத்,இரண்டு மாளிகைகளுக்கு இடையே உள்ள லூக் வாசல், தைலூன் பள்ளிவாசல் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று (அர்த்தமில்லாமல்) உளறுவார். இதைக் கேட்டு மக்கள் மகத்தான் ஞானம் பெறுவார்கள். பெரியவர்கள் முன்னிலையில் வேண்டுமென்றே காற்றை வெளிப்படுத்தும் இந்தப் பெரியார், (வேறு நபரைக் காட்டி) இது இந்த நபர் வெளிப்படுத்திய காற்று என்று சத்தியம் செய்து கூறுவார். சம்பந்தப்பட்ட அந்த மனிதரோ வெட்கமடைவார். இவர் 930 ஆம் ஆண்டில் மரனித்தார்.

(நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157)


நிர்வாணமாக ஒருவன் குத்பா ஓதி இருக்கிறான்; அதை மக்கள் பார்த்து ரசித்துள்ளார்கள்; மேலும் வாயல் வந்த படி மிம்பரில் இருந்து உளறியுள்ளான். இத்தகைய கிறுக்கனை அந்த மக்களும் அவ்லியா என்று கொண்டாடி இருக்கின்றனர். ஷஃரானி என்பாரும் அவ்லியா பட்டியலில் சேர்த்துள்ளதைப் பார்க்கும் போது அவ்லியாக்கள் என்போரின் இலட்சனம் பளிச்செனத் தெரிகிறது.

(குறிப்பு: அவ்லியாக்களின் புகழ் பாடும் ஷேக் அப்துல்லாஹ் போன்றவர்கள் இந்த ம()கானின் வழியில் ஜும்ஆ மேடைகளில், இந்த அவ்லியாவைப் பின்பற்றி நிர்வாணமாக தனது பக்தர்களுக்குத் தரிசனம் தந்தாலும் தரலாம்.)

عن الغمري: ودخل عليه سيدي محمد بن شعيب، فرآه جالساً في الهواء، وله سبع عيون يقول. عن الشيخ أبو لعي: تدخل عليه تجده جندياً، ثم تدخل عليه، فتجده سبعاً، ثم تدخل عليه فتجده فيلاً، وكان يقبض من الأرض، ويناول الناس الذهب والفضة (ص 80، 81 جـ2 الطبقات).

இந்தப் பெரியாரிடம் எனது தலைவர் முஹம்மது இப்னு ஷுஐப் சென்ற போது அவர் அந்தரத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு ஏழு கண்கள் இருந்தன. இந்தப் பெரியாரைப் பற்றி அபூ அலீ என்பார் குறிப்பிடும் போது, அவரிடம் நீ சென்றால் வெட்டுக்கிளியாக அவரைக் காண்பாய். மறுபடியும் சென்றால் வனவிலங்காக அவரைக் காண்பாய். மீண்டும் அவரிடம் சென்றால் யானையாக அவரைக் காண்பாய். இந்தப் பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு வழங்கும் போது தங்கமாக, வெள்ளியாக அவை மாறும்.

இவை சிறுவர் மலரில் இடம் பெறும் ஜோவின் சாகசம் அல்ல. பல அவதாரங்கள் பற்றிக் கூறும் புராணக் கதைகளும் அல்ல. அவ்லியாக்களை மகிமைப்படுத்தும் தபகாத் நூலில் பாகம்: 2, பக்கம் 80, 81ல் காணப்படும் விஷயங்கள் தான் இவை.

பொட்டல் புதூரில் யானை அவ்லியா இருப்பதைப் போன்று இனி வெட்டுக்கிளி அவ்லியா, காண்டாமிருக அவ்லியா என்று தர்ஹாக்கள் தோன்றினாலும் ஆச்சரியமில்லை.

كرامات علي أبو خودة: (وكان إذا رأى امرأة أو أمرد راوده عن نفسه وحسس على مقعدته سواء كان ابن أمير أو ابن وزير ولو كان بحضرة والده أو غيره ولا يلتفت إلى الناس)

அந்த இறை நேசச் செல்வர்களில் அபூகவ்தா எனும் அலீ அவர்களும் ஒருவராவார். இந்தப் பெரியார் ஒரு பெண்ணையோ, பருவமடையாச் சிறுவனையோ கண்டால் உடலுறவுக்கு அழைப்பார். அவர்களின் பின்பாகத்தில் தட்டிக் கொடுப்பார். மன்னனின் பிள்ளைகளானாலும், மந்திரியின் பிள்ளைகளானாலும் சரியே! பெற்றவர்கள், மற்றவர்கள் முன்னிலையிலானாலும் சரியே! மக்களை அவர் கவனிக்க மாட்டார்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 149)

சில்மிஷ வேலையைச் சாதாரண ஆள் செய்தால் அவனுக்குப் பெயர் காமுகன். பெரிய மனிதர் செய்தால் அவனுக்குப் பெயர் அவ்லியா? இறை நேசச் செல்வன்? இந்த அவ்லியா பக்தர்கள், ஷைகுமார்களிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று இது போன்று செய்வதற்கு அனுமதிப்பார்களா?

إن شيخي أخذ على العهد في القبة تجاه وجه سيدي أحمد البدوي، وسلمني إليه بيده، فخرجت اليد الشريفة من القبروقبضت على يدي قال سيدي الشناوي: يكون خاطرك عليه، واجعله تحت نظرك، فسمعت سيدي أحمد يقول من القبر: نعم!. ولما دخلت بزوجتي، وهي بكر، مكثت خمسة أشهر لم أقرب منها، فجاء، وأخذني، وهي معي، وفرش فرشاً فوق ركن قبته، وطبخ لي حلوى، ودعا الأحياء والأموات إليه، وقال: أزل بكارتها هنا، فكان الأمر تلك الليلة

(الطبقات الكبرى ج1 ص161،162)

எனது ஷைகு அவர்கள், ஸய்யித் அஹ்மத் அல்பதவீ அவர்களின் அடக்கத் தலத்தில் ஒரு உடன்படிக்கை எடுத்தார். என்னை அஹ்மத் பதவியிடம் ஒப்படைத்தார். அப்போது கப்ரிலிருந்து சிறப்பான கை வெளிப்பட்டது. என் கையைப் பற்றிக் கொண்டது. அப்போது என் ஷைகு ஷனாவீ அவர்கள், கப்ரை நோக்கி, உங்கள் கவனம் இவர் மீது இருக்கட்டும்! உங்கள் கண்காணிப்பில் இவரை வைத்துக் கொள்க! என்று (எனக்காக) வேண்டினார். அப்போது சமாதியிலிருந்து, சரி என்று அவர் கூறியதை நான் கேட்டேன். நான் என் மனைவியிடம் சென்ற போது அவள் கன்னியாக இருந்தாள். ஐந்து மாதங்கள் அவளை நெருங்காமல் இருந்தேன். அப்போது ஸய்யித் அஹ்மத் பதவீ அவர்கள் (கப்ரிலிருந்து எழுந்து) வந்து என் மனைவியுடன் என்னைக் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று தமது அடக்கத் தலத்தின் மேல் விரிப்பை விரித்தார். எனக்காக இனிப்புப் பதார்த்தங்கள் தயார் செய்தார். அதை உண்பதற்காக உயிருடன் உள்ளவர்களையும், இறந்தவர்களையும் அழைத்தார். இங்கே இவளது கன்னித் தன்மையை நீக்கு என்று கூறினார். அன்று தான் முதலிரவானது.

(தபகாத், பதவீயின் வரலாறு பாகம் 1 பக்கம் 161,162)

கப்ரிலிருந்து வந்து பர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதெல்லாம் சாத்தியமா? என்பது ஒரு புறமிருக்கட்டும். அனைவர் முன்னிலையிலும் முதலிரவு நடத்தச் சொல்வது தான் அவ்லியாக்களின் வேலையா? இப்படி நடந்தவர் அவ்லியாவாக இருக்க முடியுமா? என்பதே கேள்வி!

இந்த அவ்லியா பக்தர்கள், கன்னி கழியாவிட்டால் இனி கப்ரஸ்தான் பக்கம் போக வேண்டியது தான். அவனவன் ஊட்டி, கொடைக்கானலில் தேனிலவு கொண்டாடுவான் என்றால் இந்தப் பரேலவிகளுக்கு கப்ருஸ்தானில் தான் தேனிலவு!

ஸய்யித் அல்அஜமீ

ومنهم سيدي يوسف العجمي الكوراني رضي الله تعالى عنه: وهو أول من أحيا طريقة الجنيد رضي الله عنه بمصر…ولقد وقع بصره يوماً على كلب، فانقادت إليه جميع الكلاب، إن وقف وقفوا، وإن مشى مشوا، فأعلموا الشيخ بذلك، فأرسل خلف الكلب، وقال: إخسأ، فرجعت عليه الكلاب تعضه حتى هرب منها. ووقع له مرة أخرى أنه خرج من خلوة الأربعين، فيقع بصره على كلب، فانقادت إليه جميع الكلاب، وصار الناس يُهرعون إليه (إلى الكلب) في قضاء حوائجهم، فلما مرض ذلك الكلب، اجتمع حوله الكلاب يبكون ويظهرون الحزن عليه، فلما مات أظهروا البكاء والعويل، وأَلْهَمَ الله تعالى بعض الناس فدفنوه، فكانت الكلاب تزور قبره حتى ماتوا(2)..

(الطبقات الكبرى ج2 ص62)

இந்தப் பெரியாரின் பார்வை ஒரு நாயின் மீது பட்டது. உடனே எல்லா நாய்களும் அந்த நாய்க்கு அடிபணிந்தன. மக்கள் எல்லாம் தங்கள் தேவைகளை நிறைவேற்ற இந்த நாயிடம் விரைந்து வரலாயினர். அந்த நாய் நோயுற்ற போது அதனைச் சுற்றி எல்லா நாய்களும் அழுதன. அது இறந்ததும் மக்கள் அழுதனர். நாய்கள் ஊளையிட்டன. சிலரது உள்ளத்தில் அதை அடக்கம் செய்யுமாறு இறைவன் உதிப்பை ஏற்படுத்தினான். அவ்வாறு அந்த நாயை அடக்கம் செய்தார்கள். நாய்கள் யாவும் அந்த நாயின் கப்ரை ஸியாரத் செய்யலாயின. அந்த நாய்கள் மரணிக்கும் வரை இது நடந்தது. இந்தப் பெரியாரின் பார்வை இந்த நாயின் மேல் பட்டதால் இவ்வளவு மகிமை என்றால் அவரது பார்வை மனிதன் மேல் பட்டால்…?

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 62)

யானைக்கும் கப்ரு கட்டியுள்ள பொட்டல்புதூர் வாசிகளே! உங்கள் செயலுக்கும் இந்த அவ்லியாவின் வாழ்வில் ஆதாரம் இருக்கிறது.

தமிழகத்தில் நாய்களை யாரும் இனி அடிக்கக் கூடாது; நாய்களுக்கும் இனி மேல் தர்ஹாக்கள் கட்ட வேண்டும் என்று சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது என்று ஷேக் அப்துல்லாஹ் நடத்தும் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.

كان رضي الله عنه إذا خرج مِن الخلوةيخرج وعيناه كأنَّهما قطعة جمرٍ تتوقد ، فكلُّ مَن وقع نظره عليه انقلبت عينُه ذهباً خالصاً

பொருள்: இந்தப் பெரியார் கல்வத்திலிருந்து வெளியே வந்தால் அவரது கண்கள் கொளுந்து விட்டு எரியும் தீப்பந்தம் போல் இருக்கும் யார் மீது இவரது பார்வை படுகின்றதோ அவரது கண்கள் சொக்கத் தங்கமாக மாறி விடும்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 61)

கண்கள் தங்கமாக மாறி விட்டால் எப்படிப் பார்க்க முடியும்? என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். சுன்னத் ஜமாஅத் என்றால் இதை நம்பித் தான் ஆக வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு அபீ ஜம்ரா

9 عبد الله بن أبي حمزةقال أناأجتمع بالنبي صلى الله عليه وسلم يقظة ،فلزم بيته فلم يخرج إلاللجمعة حتى مات

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விழிப்பிலேயே நேரில் சந்திக்கிறேன் என்று இவர் சொன்னார். வீட்டிலேயே முடங்கிக் கொண்டார். அவர் மரணிக்கும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் வெளி வருவதில்லை.

(தபகாத், பாகம்: 1, பக்கம்: 15)

குறிப்பு: சாகும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் இவர் வெளியே வர மாட்டாராம். ஐவேளை ஜமாஅத் தொழுகைக்குக் கூட வராதவன் எல்லாம் அவ்லியாவாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவிலும், நனவிலும் கண்டு களிக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக என்று சில சு.ஜ. ஆலிம்கள் தங்கள் சொற்பொழிவுகளில் கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விழிப்பில் ஒரு போதும் இந்த உலகத்தில் சந்திக்க முடியாது என்று தெரிந்தும் இவர்கள் இப்படிப் பிரார்த்திக்கிறார்கள் என்றால் இந்தப் பலான அவ்லியாக்களைப் பின்பற்றித் தான்.

ஷஃபான் அல் மஜ்தூப்

الشيخ شعبان المجذوب رضي الله عنه. وكان يقرأ سورا غير السور التي في القرآن على كراسي المساجد يوم الجمعة وغيرها فلا ينكر عليه أحد ، وكان العامي يظن أنها من القرآن لشبهها بالآيات في الفواصل

இப்பெரியார் ஜும்ஆ நாட்களிலும் மற்ற நாட்களிலும் பள்ளியில் இருந்து கொண்டு குர்ஆனில் இல்லாத புதிய அத்தியாயங்களை ஓதுவார். அதை எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். பாமரன் அதுவும் குர்ஆன் தான் என்று எண்ணிக் கொள்வான். ஏனெனில் அவர் ஓதுவது குர்ஆன் போலவே இருக்கும்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)

وقد سمعته مرة يقرأ على باب دار، على طريقة الفقهاء الذين يقرؤون في البيوت فأصغيت إلى ما يقول فسمعته يقول: وما أنتم في تصديق هود بصادقين ، ولقد أرسل الله لنا قوماً بالمؤتفكات يضربونناويأخذون أموالنا وما لنا من ناصرينثم قال: اللهم اجعل ثواب ما قرأناه من الكلام العزيز في صحائف فلان وفلان إلى آخر ما قال

மார்க்க அறிஞர்கள் வீடுகளுக்குச் சென்று குர்ஆன் ஓதுவது போல் இந்தப் பெரியார் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து ஓதினார். அவர் என்ன ஓதுகிறார் என்று செவிமடுத்தேன். வமாஅன்தும் ஃபீதஸ்தீகி ஹுதின் பிஸாதிகீன். வலகத் அர்ஸலல்லாஹுலனா கவ்மன். பில் முஃதபிகாதி யள்ரிபூனனா வயஃகுதூன அம்வாலனா மின் நாஸிரீன் என்று ஓதினார். (இது குர்ஆனில் இல்லாததாகும்.) இப்படி ஓதி விட்டு, இறைவா, கண்ணியமிக்க வேதத்திலிருந்து ஓதிய நன்மையை… என்று துஆச் செய்தார்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)

எள்ளளவு இறையச்சம் உள்ள எவரும் குர்ஆனுடன் எதையும் கலக்கத் துணிய மாட்டார். ஆனால் இந்த ஆளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று பாருங்கள்! இவருக்குப் பெயர் இறை நேசராம்!

وكانرضيالله عنهعرياناًلايلبسإلاقطعةجلدأوبساطأ وحصيرأولباديغطيقبلهودبرهفقط

இந்தப் பெரியார் முன்பகுதி, பின்பகுதியை மறைக்கும் விதமாகக் கோவணமே கட்டியிருப்பார்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)

குறிப்பு: ஆறேழு மீட்டர்களில் ஆள் மூழ்கிப் போகும் அளவுக்குத் துணியில் ஜிப்பாவும், குஞ்சான் வைத்த துருக்கி தொப்பியும் அணிய வேண்டிய அவசியம் இந்தப் பரேலவிகளுக்கு இல்லை. ஒட்டுக் கோவணத்தைக் கட்டிக் கொண்டு காசை மிச்சப்படுத்தலாம்.

وأخبرني الشيخ أبو الفضل السرسي أنه جاءهم يوم الجمعة، فسألوه الخطبة، فقال: بسم الله؛ فطلع المنبر، فحمد الله وأثنى عليه ومجده، ثم قال: وأشهد أن لا إله لكم إلا إبليس عليه الصلاة والسلام، فقال الناس: كفر. فسل السيف ونزل، فهرب الناس كلهم من الجامع، فجلس عند المنبر إلى أذان العصر وما تجرأ أحد أن يدخل الجامع، ثم جاء بعض أهل البلاد المجاورة، فأخبر أهل كل بلد أنه خطب عندهم وصلى بهم، قال: فعددنا له ذلك اليوم ثلاثين خطبة، هذا ونحن نراه جالساً عندنا في بلدنا

طبقات الشعراني: (2/107

ஷைகு முஹம்மத் அல்கள்ரீ என்பார் ஒரு வெள்ளிகிழமை அன்று வந்தார். அவர் ஜும்மா உரை நிகழ்த்த வேண்டும் என்று மக்கள் கேட்டனர். அவர் அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி விட்டு மிம்பரில் ஏறினார். அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி விட்டு இப்லீஸைத் தவிர உங்களுக்கு வேறு கடவுள் இல்லை என்று நான் உறுதி கூறுகிறேன் என்றார். இது குஃப்ராகும் என்று மக்கள் கூறினார்கள். அந்தப் பெரியார் வாளை உருவிக் கொண்டு கீழே இறங்கினார். பள்ளிவாசலில் இருந்து மக்கள் ஓட்டம் பிடித்தனர். அஸருக்கு பாங்கு சொல்லும் வரை மிம்பரில் அமர்ந்து கொண்டார். யாரும் பள்ளிவாசலில் நுழையத் துணியவில்லை. அருகில் உள்ள பல ஊர் வாசிகள் வந்து இவர் எங்கள் ஊரில் குத்பா உரை நிகழ்த்தி தொழுகை நடத்தினார் என்று கூறினார்கள். இவ்வாறு முப்பது ஊர்களில் குத்பா நிகழ்த்தியதாகத் தெரிந்தது. இவர் இந்த இடத்தில் தானே உட்கார்ந்திருக்கிறார் என்று ஊர் வாசிகள் ஆச்சரியப்பட்டனர்.

இப்லீஸின் கூட்டம் தான் அவ்லியாக்களாக்கப்பட்டுள்ளர் என்பது இதன் முலம் தெரிய வருகிறது.

ومنهم الشيخ محمد الشربيني رحمه الله تعالى، شيخ طائفة الفقراء بالشرقية، كان من أرباب الأحوال والمكاشفات…ولما ضعف ولده أحمد، وأشرف على الموت، وحضر عزرائيل لقبض روحه، قال له الشيخ: ارجع إلى ربك فراجعه فإن الأمر نُسخ؟ فرجع عزرائيل وشفي أحمد

طبقات الشعراني: (2/136

ஷைகு முஹம்மத் அஷ்ஷர்பீனியின் மகன் நோய்வாய்ப்பட்ட மரணத்தை நெருங்கிய போது உயிரை எடுக்க இஸ்ராயீல் வந்தார். அப்போது அந்தப் பெரியார் இஸ்ராயிலிடம் நீ உன் இறைவனிடம் திரும்பிச் செல்! காரியம் மாற்றப்பட்டு விட்டது என்றார்.

தபகாத் பாகம் 2 பக்கம் 136

وكان الشيخ محمد بن عنان وغيره ينكرون عليه لعدم صلاته مع الجماعة، ويقول: نحن ما نعرف طريقة تقرب إلى الله تعالى إلا ما درج عليه الصحابة والتابعون…له ذرية بأرض الغرب، وذرية في بلاد العجم، وذرية في بلاد الهند، وذرية في بلاد التكرور، فكان في ساعة واحدة يطوف على عياله في هذه البلاد ويقضي حوائجهم، وكل أهل بلاد يقولون: إنه مقيم عندهم، ولتبدله في هذه الصور، وتصرفه في هذه الأشكال، كان ربما أنكر عليه بعض الفقهاء ترك الجمعة…وكان إذا أراد أن يعدِّي في البحر يقول له المعدِّي: هات كراء…فقال الشيخ: (ها الله)، وطأطأ الإبريق، فأخذ ماء البحركله فيه!! ووقف المركب على الأرض، فاستغفر المعدِّي وتاب، فصب الإبريق في البحر، ورجع الماء كما كان

طبقات الشعراني: (2/136

முஹம்மத் பின் அனான் என்ற பெரியார் ஜமாஅத் தொழுகைக்கு வர மாட்டார். இறைவனை நெருங்கும் வழி நபித்தோழர்களுக்குத் தெரிந்தது போல் எங்களுக்கும் தெரியும் எனக் கூறுவார். இவருக்கு மேற்குலகில் ஒரு ஊரிலும், அரபியல்லாத ஊரிலும் இந்தியாவில் உள்ள் ஊரிலும் தக்ரூர் பகுதியில் உள்ள ஊரிலும் மனைவி மக்கள் இருந்தனர். ஒரே நேரத்தில் நான்கு மனைவியிடமு செல்வார். இவர் கடலைக் கடந்து செல்ல நாடினால் கடல் நீரை ஒரு கூஜாவில் அடைத்திடுவார். தரைப்பகுதியாக கடல் மாறிய பிறகு குதிரையில் ஏறிப் பயணிப்பார். கடலைக் கட்ந்த பின் கூஜாவில் உள்ள தண்ணீரை ஊற்றுவார். உடனே பழைய படி கடல் நிறைந்து விடும்.

இது விட்டலாச்சாரி கதை அல்ல. சுன்னத் ஜமாஅத்தின் அவ்லியாக்கள் கதை தான்.

قال في ترجمة من سماه بسيده علي وحيش: وكان إذا رأى شيخ بلد، أو غيره ينزله من على الحمار ويقول: امسك رأسها حتى أفعل فيها. فإن أبى شيخ البلد تسمر في الأرض ولا يستطيع أن يمشي خطوة. وإن سمح حصل له خجل عظيم والناس يمرون عليه!! (الطبقات الكبرى ج2ص135)

ஸையித் அலீ வஹீஷ் என்ற பெரியார் முதியவர் யாரேனும் கழுதையில் ஏறி வரக் கண்டால் அவரைக் கழுதையில் இருந்து கீழே இறக்கி விடுவார். கழுதையின் தலையைப் பிடித்துக் கொள்! நான் பின்பக்கமாகச் செய்கிறேன் என்று கூறுவார். முதியவர் இதற்கு மறுத்தால் அந்தப் பெரியவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் பூமி பிடித்துக் கொள்ளும். அவர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டால் மேற்படி பெரியாருக்கு வெட்கம் வந்து விடுமாம்! மக்களெல்லாம் கழுதையில் வேலை செய்யும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே செல்வார்களாம்!

இவர்களை அவ்லியாக்கள் என்று மதரஸாவில் சொல்லிக் கொடுத்த பிறகும் உங்களுக்கு புத்தி வரவில்லையா? அல்லது இதெல்லாம் அவலியாக்களுக்கு சகஜமப்பா என்று கூறப் போகிறீர்களா? என்று ஷேக் அப்துல்லா ஜமாலிகளைக் கேட்கிறோம்.

இவை அவ்லியாக்களின் இலட்சணங்களில் சில பகுதிகளாகும். சுன்னத் வல்ஜமாஅத்தின் மிகப் பெரும் இமாமாக மதிக்கப்படும் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி அவர்களின் நூலில் காணப்படும் இந்த விஷயங்களைக் கவனிக்கும் போது, கடந்த காலங்களில் யாரெல்லாம் அவ்லியாக்களாக மதிக்கப்பட்டார்கள் என்பது விளங்க வரும்.

இந்த சுன்னத் ஜமாஅத்தினர், இந்த உயர்ந்த (?) பண்புடையவர்களை இன்றளவும் அவ்லியாக்கள் என்று நம்புகின்றனர். மவ்லிதுக் கிதாபுகளில் வரும் துஆக்களில் இவர்களின் பெயர்களும் பெருமையுடன் குறிப்பிடப்படுகின்றன. இவர்கள் பொருட்டால் கேட்கப்படும் துஆக்களும் உள்ளன.

நியாய உணர்வும், சிந்திக்கும் திறனும், இஸ்லாத்தின் அடிப்படை பற்றி ஓரளவு அறிவும் இருக்கும் முஸ்லிம்களே! இந்தத் தன்மைகள் அவ்லியாக்களுடையது என்பதை நம்ப முடிகின்றதா? சிந்தியுங்கள். இப்படித் தான் நம்மை ஏமாற்றியுள்ளனர் இந்த முல்லாக்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

(عبد الكريم الدمشقي) سألوه: هل تستطيع أن تشرب كل ما في هذه البركة؟ فقال: إملأوها. فأخذه حال عجيب ووضع فمه في البركة فصار يشرب والماء يخرج من إحليله (ذَكَرِهِ) ولم يزل كذلك يدخل الماء من فمه ويخرجه من إحليله إلى أن فَرَغت البركة. قال النبهاني: وهي من أعظم كرماته(1)

அப்துல் கரீம் திமிஷ்கீ என்ற பெரியாரிடம் இந்தக் குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதையும் உங்களால் குடிக்க முடியுமா என்று மக்கள் கேட்டனர். அவர் தனது வாயை வைத்து குடிக்கலானார். உள்ளே சென்ற தண்ணீர் அவரது ஆணுறுப்பு வழியாக வெளியேற ஆரம்பித்தது. இப்படியே முழுக் குளத்தின் தண்ணீரும் வெளியேறியதாம்

…ومنهم سيدي الشيخ شهاب الدين الطويل النشيلي رضي الله تعالى عنه…وكان ينادي خادمه وهو في الصلاة، فإن لم يجبه مشى إليه وصكه ومشى به وقال: كم أقول لك لا تعد تصلي هذه الصلاة المشئومة، فلا يستطيع أحد يخلصه منه(2)…

ஷைகு ஷிஹாபுத்தீன் அவர்கள் தனது ஊழியர் தொழுது கொண்டிருக்கும் போது அழைப்பார். ஊழியர் உடனே வராவிட்டால் நடந்து வந்து பலமாக அடிப்பார். இந்த நாசமாப் போன தொழுகை வேண்டாம் என்று உனக்கு எத்தனை தடவை சொல்வது? எனக் கூறி அடிப்பார். அவரிடமிருந்து அந்த ஊழியரை யாராலும் காப்பாற்ற முடியாது.

…ومنهم سيدي إبراهيم بن عصيفير رضي الله تعالى عنه آمين…وكان كثير الكشف، وله وقائع مشهورة…وكان بوله كالحليب أبيض، وكان يغلب عليه الحال فيخاصم ذباب وجهه، وكان يتشوش من قول المؤذن (الله أكبر) فيرجمه ويقول: عليك يا كلب نحن كفرنا يا مسلمين حتى تكبروا علينا!

இப்ராஹீம் பின் உசைபிர் என்பார் மிகுந்த ஞானம் உள்ளவராக இருந்தார். அவரது மூத்திரம் பால் போல வெளிப்படும். முஅத்தின் அல்லாஹு அக்பர் என்று கூறினால் அவரைக் கல்லால் அடிப்பார். நாயே உன்னோடு இதை வைத்துக் கொள்! முஸ்லிம்களே நாங்கள் காபிராகி விட்டோம். எங்களிடம் அல்லாஹு அக்பர் கூறுவது ஏன்? என்று கேட்பார்.

இவர்கள் அவ்லியாக்கள் பெயராலும், தரீக்காவின் பெயராலும் எவ்வளவு கீழ்த்தரமான சிந்தனையில் இருந்துள்ளனர் என்பதற்கு இறுதிச் சான்றாக ஒன்றைத் தருகிறோம். அதை அரபி மொழியில் மட்டுமே தர முடியும். அதைத் தமிழில் தருவதற்கு எங்கள் கைகள் கூசுகின்றன. இந்தியத் தண்டனைச் சட்டமும் சும்மா விடாது. அவ்வளவு ஆபாசம்! தெரிந்தவர்களிடம் அர்த்தம் கேட்டுக் கொள்க!

இதைப் பொது மேடையில் வாசித்து அப்படியே தமிழாக்கம் செய்ய முன்வரும் சு.ஜ. உலமாக்களுக்கு ரூபாய் 500 தரப்படும்.

عبد القادر السبكي

وكان يتكلم بالكلام الذي يستحي منه عرفاً وخطب مرة عروسة فرآها فأعجبته فتعرى لها بحضرة أبيها.وقال انظري أنت حتى لاتقولي بعد ذلك بدنه خشن أوفيه برص أوغيرذلك ثم مسك ذكره وقال انظري هل يكفيك هذا وإلا فربما تقولي هذا ذكركبيرلاأحتمله أويكون صغيراً لايكفيك فتقلقي مني وتطلبي زوجاً أكبر آلة مني

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 186)

இதற்கும் பொது மேடையில் அர்த்தம் செய்யுமாறு ஷேக் அப்துல்லா ஜமாலீ வகையறாக்களை வற்புறுத்துங்கள்

ومن كراماته رضي الله عنه ما أخبرني به الحاج إبراهيم المذكور (إبراهيم الحداد من اللاذقية)، قال: دخلت في هذا النهار إلى الحمام مع شيخنا الشيخ علي العمري، ومعنا خادمه محمد الدبوسي الطرابلسي، وهو أخو إحدى زوجات الشيخ، ولم يكن في الحمام غيرنا، قال: فرأيت من الشيخ كرامة من أعجب خوارق العادات وأغربها، وهي أنه أظهر الغضب على خادمه محمد هذا وأراد أن يؤدبه، فأخذ الشيخ إحليل نفسه بيديه الاثنتين من تحت إزاره، فطال طولاً عجيباً بحيث إنه رفعه على كتفه وهو زائد عنه، وصار يجلد به خادمه المذكور، والخادم يصرخ من شدة الألم، فَعل ذلك مرات ثم تركه، وعاد إحليله إلى ما كان عليه أولاً، ففهمت أن الخادم قد عمل عملاً يستحق التأديب، فأدَّبه بهذه الصورة العجيبة. ولما حكى لي ذلك الحاج إبراهيم، حكاه بحضور الشيخ، وكان الشيخ واقفاً، فقال لي الشيخ: لا تصدقه وانظر، ثم أخذ بيدي بالجبر عني، ووضعها على موضع إحليله، فلم أحس بشيء مطلقاً، حتى كأنه ليس برجل بالكلية، فرحمه الله ورضي عنه ما أكثر عجائبه وكراماته(2).

جامع النبهاني: (2/396)

இவரெல்லாம் அவ்லியாவா? சுன்னத் ஜமாஅத்தின் காவலர்களே! ஷைகு முரீது வியாபாரிகளே! இதற்குப் பொது மேடையில் அர்த்தம் செய்ய முன்வருவீர்களா? அல்லது இந்தக் குப்பைகளைக் கொளுத்தத் தயாரா?

அரபியில் எழுதப்பட்டதால், முன்னோர்கள் அங்கீகரித்ததால் மத்ஹபைக் கட்டிக் கொண்டு அழுவோரே! சிந்தியுங்கள்.

கம்ப ராமாயணத்தின் காம ரசத்தை விளக்க அறிஞர் அண்ணா, கம்ப ரசம் எழுதினார். அவருக்கு இந்த ஷஃரானியின் ஆபாசக் களஞ்சியம் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் இந்த அம்மண சாமியார்களின் ஆபாச ரசத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்காக தபகாத் ரசம் எழுதியிருப்பார்.

ஷேக் அப்துல்லாஹ் போன்றவர்கள் கோவணத்தைக் கட்டிக் கொண்டு, அல்லது அஷ்ஷைகு (?) இப்ராஹீம் என்ற அவ்லியாவைப் போன்று கோவணமும் இல்லாமல் மேடைக்கு வந்து இந்த ஆபாசக் களஞ்சியத்திற்கு அர்த்தம் செய்வார்கள் என்று ஆர்வத்துடன் எதிர்பார்ப்போமாக!

இதைப் பொது மேடையில் மொழிபெயர்ப்பவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். தற்போது பண மதிப்பைக் கவனத்தில் கொண்டு ரூ. 5,000 வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

23.03.2010. 18:௧௭

- onlinepj

திங்கள், 7 பிப்ரவரி, 2011

நழுவும் சிராஜ்

அஸ்ஸலாமு அலைக்கும்..

உங்கள் கொள்கையில் எதை தவறு என்று பிஜே சொல்லி வருகிறாரோ, அதற்கு தான் மறுப்பு சொல்ல வேண்டுமே அல்லாமல், அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டதை, அவர் சரி காண்பதை நீங்கள் "வாக்குமூலம்", என்ற பெயரில் எடுத்துக்காட்ட தேவையில்லை..


பிறையை என்றைக்கு பார்க்க வேண்டும், எந்த திசையில் பார்க்க வேண்டும் என்பதை விஞ்ஞானம் உறுதியாக சொல்லும் என்பதில் மாற்றுக்கருத்து எவரும் கொண்டதில்லை!
அதை வைத்து, அந்த தேதியில், அந்த திசையில் பார்க்க வேண்டும்.. கண்ணால் பார்க்க வேண்டும்.. ஒவ்வொரு மாதமும் பார்க்க வேண்டும்.
உங்களது கொள்கை, 3000 வருடங்களை இன்றே கணிக்கிட்டு காலண்டர் அடிக்கலாம் என்பது!.
அதை தவறு என்று பிஜே சொல்கிறார்.

உங்கள் கடமை, பிஜே அதை ஒப்புக்கொண்டு விட்டார் என்று காட்டுங்கள்..
அல்லது, நீங்களே சவடால் விட்டதை போல், அவரை விவாத ஒப்பந்தத்திற்கு அழையுங்கள்..
அதற்கும் இயலாது என்றால் விவாதத்திற்கு நாங்கள் தயார் இல்லை என்று அறிவித்து விடுங்கள்..

ஏதோ, பிஜே இதுவரை ரகசியமாக வைத்திருந்ததை போலவும், அவரிடம் துருவி துருவி விசாரித்த நிலையில் அவர் வாக்குமூலம் அளித்து விட்டார் என்பதை போலவும் பேசுகிறீர்கள். இது வேடிக்கையிலும் வேடிக்கை..

அவர், விஞ்ஞானப்படி பிறையை முன்கூட்டியே கணக்கிட முடியாது என்று கூறியதில்லை. முன்கூட்டியே கணக்கிட கூடாது என்பதே அவரது வாதம்.. இதற்கு தான் நீங்கள் பதில் சொல்லும் நிலையில் இருக்கிறீர்கள். இதற்கு தான் நீங்கள் அவரை விவாதத்திற்கு அழைக்கும் நிலையில் இருக்கிறீர்கள்.

பிறையை கணக்கிட கூடாது, கண்ணால் பார்க்க தான் வேண்டும் என்று சொல்வது ஒரு கொள்கை என்றால், எந்த தினத்தில், எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் என்று விஞ்ஞானம் சொல்கிறதோ, அந்த நேரத்தில் தான் பார்க்க வேண்டும் என்று சொல்வதும் அதே கொள்கையில் அடங்கிய விஷயம் தான். .
இதனால் பிறை விஷயத்தில் முன்கூட்டியே கணக்கிடும் விஞ்ஞானத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக ஆகாது..

உதாரணமாக, பகல் 1 மணிக்கு பிறை பார்த்தேன் என்று ஒருவர் கூறினால், அவர் பிறை பார்த்து விட்டதாக சொல்லி விட்டார் என்பதற்காக அவரது அறிவிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.. அவரை நோக்கி, "பகலில் எப்படியப்பா பிறை பார்க்க முடியும்? என்று திருப்பிக்கேட்போம்..
இவ்வாறு கேட்பதில் என்ன அடங்கியுள்ளது என்றால், பகலில் முதல் பிறை தெரியாது என்று விஞ்ஞானம் சொல்கிறது, ஆகவே நீ பகலில் பாத்திருக்க முடியாது!
பகலில் பிறை தெரிவதை விஞ்ஞானம் மறுக்கிறது என்ற காரணத்திற்க்காக பகலில் பிறை பார்க்கப்பட்ட செய்தியை நாம் மறுத்தால், பிறை விஷயத்தில் முழுமையாக விஞ்ஞானத்தை நாம் ஏற்றுக்கொண்டதாக ஆகாது. மாறாக, பிறையை கண்ணால் தான் பார்க்க வேண்டும்.ஆனால், எங்கே பார்ப்பது, எப்போது பார்ப்பது என்ற அடிப்படை விபரத்தோடு பார்க்க வேண்டும், என்பது அதனுடிய பொருள்.

ஆகே, எந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளதோ, அதை குறித்து விவாதத்திற்கு அழைத்தால், சம்மந்தமில்லாத செய்திகளை பேசுவது முறையல்ல!


விவாதத்திற்கு அழைப்பு விடுத்து விட்டு, அதை ஏற்றுக்கொண்ட பின்னர் செய்வதறியாது விழி பிதுங்கியுள்ள நீங்கள், பிஜேயின் எழுத்துக்களில் விமர்சனம் என்ற பெயரில் கட்டுரை மட்டும் எழுதுவது கேலிக்கும் நகைப்புக்கும் உரியது.

விவாதத்திற்கு நீங்கள் சவால் விட்டதை அவரும் ஏற்றுக்கொண்ட பின்னர், நீங்கள் விவாதத்திற்கு முன் வராமல் இவ்வாறு கோழைத்தனம் காட்டக்கூடாது.

பிறை குறித்த அவரது கொள்கை, உங்களது கொள்கைக்கு மாற்றமாக இருக்கிறது என்பது தான் உங்களது நிலை. அவ்வாறு நிலை இருப்பதால் தான் அவரை விவாதத்திற்கு வருமாறு ஒளிந்து கொண்டு சவால் விட்டீர்கள்.
ஒளிந்து கொண்டு சவால் விட்டதை நேரடியாக விடுங்கள் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.
ஒன்று, அதை ஏற்று, அவரிடம் விவாத ஒப்புதலுக்கு தகுந்த பதிலை அளித்து, விவாதத்திற்கு முன் வர வேண்டும்.
அல்லது, நான் அறியாமல் பிஜேவை விவாதத்திற்கு அழைத்து விட்டேன் என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

எதையும் செய்யாமல், இவ்வாறு கட்டுரைகள், மெயில்கள் மூலம் இன்னுமொரு மின்னஞ்சல் விவாதத்தோடு மட்டும் நிறுத்திக்கொண்டு, நாங்களும் விவாதம் செய்கிறோம் என்று காட்ட நினைப்பதை எந்த ஒரு நியாயவானும் ஏற்றுக்கொள்ள மாட்டான்..!















2011/2/6 Aero Travels Eruvadi
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

கணக்கிடுவதை நபியவர்கள் தடுக்கவில்லை என்ற பி.ஜே அவர்கள் தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். பிறை ஹதீஸ்களை அறிவியல் உதவி கொண்டே பின்பற்ற வேண்டும். அவைகளை கண்மூடி பின்பற்ற தேவையில்லை என்று விளக்கமளித்துள்ளார். மேலும் குர்ஆனில், சூரியனும் சந்தினும் கணக்கின் அடிப்படையில் உள்ளது என்று கூறுவதால் சாட்சி சொல்பவர்களை முழுமையாக நம்பாமல், பிறை கணக்கை கொண்டு பிறை தேதிகளை சரிபார்த்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ்.

அதே போல் வருடங்களின் கணக்கை அறிந்து கொள்ள முடியும் என்று அல்குர்ஆனின் 10:5 வசனம் கூறுவதால், நாம் வருடங்களின் கணக்கை அறிந்து செயல்பட முடியும் என்பதை பி.ஜே அவர்கள் கூடிய விரைவில் விளங்குவார்கள் என நம்புவோமாக.

விபரங்கள் அவருடைய தளத்திலிருந்தே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி


பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா?

ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாமா?

எம். ஷபீர் - திருவனந்தபுரம்.

இரண்டு சாட்சிகள் பிறை பார்த்ததாகக் கூறினால் அதை அப்பகுதியினர் ஏற்க வேண்டும் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளது. ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் பொருள் கொள்ளக் கூடாது.

இரவு பத்து மணிக்கு தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது.

நண்பகலில் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதையும் ஏற்க முடியாது. ஏனெனில் நண்பகலில் தலைப்பிறையைப் பார்க்க முடியாது. மாலை நேரத்தில் கூட கிழக்கில் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால்
அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் கண்ணால் பார்க்கும் வகையில் தலைப்பிறை தோன்றுவது மேற்குப் பகுதியில்தான்.

பிறை 25ல் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அது தலைப் பிறை பார்ப்பதற்குரிய நாள் அல்ல.

இது போன்று தான், சாதாரணக் கண்களுக்குப் பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் உறுதியாகக் கூறும் ஒரு நாளில் பிறை பார்த்ததாக நம்பத் தகுந்த சாட்சியங்கள் கூறினாலும் அதை ஏற்க வேண்டியதில்லை.

வேண்டுமென்று பொய் கூறாத சாட்சிகளாக இருந்தாலும் கண்கள் தவறு செய்வதுண்டு. சிறிய மேகத் துண்டு கூட பிறையாகத் தோற்றமளிக்க வாய்ப்பு உள்ளது.

நாம் வானத்தில் ஓரிடத்தை உற்று நோக்கும் போது அந்த இடத்தில் ஒரு நட்சத்திரம் இருப்பது போல் தெரியும் உடனே மறைந்து விடும். ஆனால் உண்மையில் அந்த இடத்தில் நட்சத்திரம் எதுவும் இருக்காது. இந்த தவறு பிறை விஷயத்திலும் நடக்க வாய்ப்புள்ளது.

ஒருவரை விஷம் வைத்துக் கொடுத்துக் கொன்றதாக நம்பகமானவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள். ஆனால் பிரேதப் பரிசோதனையில் விஷம் கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் சாட்சிகள் கூறியதை யாரும் ஏற்க மாட்டார்கள்.

இது போல் பிறை பார்க்கச் சாத்தியமற்ற நாளில் பிறை பார்த்ததாகக் கூறுவதை ஏற்கக் கூடாது. காரணம், பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் கூறுவது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருப்பதால் அதை மறுக்க முடியாது.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம். பிறை தோன்றி விட்டது. என்று அறிவியல் உலகம் கூறினாலும் புறக்கண்ணால் பார்க்காமல் நோன்பைத் தீர்மானிக்கக் கூடாது என்று சொல்லும் நாம், பிறை தோன்றாது என்று அறிவியல் கூறுவதை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்பதே அந்த சந்தேகம்.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவாகப்ப புரிந்து கொள்ள வேண்டும். வானியல் கணிப்பை ஏற்று, முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால்
கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது.

பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த
மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவுக்கு வானியல் வளர்ந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

இன்று இந்த பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்க இயலும். மேகம் மற்றும் சில புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும்.

அவர்களது கணிப்பு சரியானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப் பிறையைத் தீர்மானிக்க அதை அளவுகோலாகக் கொள்ளக் கூடாது என்பது தான் நமது வாதம். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்குக் கண்களால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்து விட்டனர்.

வானியல் கணிப்பின் படி எங்கே எப்போது பார்க்க முடியும் என்று கூறுகிறார்களோ அதை நம்பி அங்கே அப்போது பார்க்க முயற்சிக்கலாமே தவிர பார்க்காமல் தலைப் பிறை என்ற தீர்மானத்திற்கு வரக் கூடாது. அதே சமயம் குறிப்பிட்ட நாளில் பிறை தென்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று அறிவியல் உலகம் கூறும் போது அதை நாம்
ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.

அல்குர்ஆன் 55:5

இந்த வசனத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட இடத்தில் சந்திரன் தோன்றாது என்ற கணக்கிற்கு மாற்றமாக நம்பத்தகுந்த சாட்சிகள் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

21.01.2011 08:39

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

சுயநலம் பிடித்த ஊழல் பெருச்சாளிகள்


சுயநலம் பிடித்த ஊழல் பெருச்சாளிகள் சிலரை எம்.பி. ஆக்குவதால் சமுதாயத்திற்கு என்ன பயன்?


சமுதாய நலனில் அக்கறை கொண்ட முஸ்லிம்களின் கவனத்திற்கு...
திமுக அரசு அமைந்த பின் தவ்ஹீது ஜமாஅத் இட ஒதுக்கீடு கோரிப் போராடிய போது மாமா கட்சியினர் என்ன சொன்னார்கள்?
மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அதிகாரமே இல்லை. அதனால் நாங்கள் டெல்லிக்குச் சென்று போராடப் போகிறோம் என்றார்கள். எதற்காக?
திமுக அரசை எதிர்த்துப் போராடினால் வாரியப் பதவி கிடைக்காது என்பதற்காக! ஹைதர் அலீ என்ற தனி மனிதருக்குக் கிடைக்க வேண்டிய பதவிக்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களின் நலனையும் திமுகவிடம் அடகு வைத்தார்களா இல்லையா?நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்.
அதன் பின்னர் தவ்ஹீது ஜமாஅத்தின் வீரியமிகு போராட்டத்தின் காரணமாக திமுக அரசு இடஒதுக்கீடு வழங்கியவுடன் அதற்கு உரிமை கொண்டாடுவதற்காக கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்து நேரு விளையாட்டரங்கில் கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடத்தி அதில் கருணாநிதியின் .............. தாங்கிக் கொண்டு சென்றார்கள்.
இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருப்பதை தவ்ஹீது ஜமாஅத் சுட்டிக் காட்டிப் போராடிய போதும் அதை விமர்சித்தார்கள். கருணாநிதி என்ன செய்தாலும் ஜால்ரா தட்ட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டார்கள். இட ஒதுக்கீடுக் குளறுபடிகளை ஆதரித்து முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப் பெரும் துரோகத்தைச் செய்தார்கள்.
தேர்தலில் திமுக ஜெயித்ததற்கு வெற்றி விழா நடத்தினார்கள். திமுக நடத்திய கூட்டங்களில் கலந்து கொண்டு கருணாநிதியை வானளாவப் புகழ்ந்தார்கள். சமுதாய நலனைப் பற்றிச் சிந்திக்காமல் திமுக நடத்திய போராட்டங்களில் போய் பங்கு கொண்டார்கள்.
எல்லாம் எதற்காக? சமுதாயத்திற்காகவா? முஸ்லிம்களின் நன்மைக்காகவா? இப்படியெல்லாம் கருணாநிதியின் ....... கொண்டு அலைந்தால் தங்களுக்கு சீட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தானே! இதை மறுக்க முடியுமா?
இன்று தங்களுக்கு சீட் தரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கருணாநிதியைத் திட்டுகிறாகள்.
இதில் எங்கே சமுதாய நலன் இருக்கிறது? சுயநலம் பிடித்த ஊழல் பெருச்சாளிகள் சிலரை எம்.பி. ஆக்குவதால் சமுதாயத்திற்கு என்ன பயன்?
விபச்சாரத்தை விடக் கேவலமான அரசியல் நடத்தும் மாமா கட்சிக்கு சீட் கொடுக்காததை முஸ்லிம் சமுதாயத்திற்குச் செய்யப்பட்ட துரோகமாகச் சித்தரிப்பது எந்த வகையில் சரி?
ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்காகவும் இடஒதுக்கீடு வழங்கியதற்காக திமுகவை ஆதரிக்க வேண்டுமா?
அல்லது பதவி வெறி பிடித்த ஊழல் பெருச்சாளிகள் சிலருக்கு சீட் கொடுக்காததற்காக திமுகவை எதிர்க்க வேண்டுமா?
முஸ்லிம்களே சிந்திப்பீர்!


- ஹபிப் உர் ரஹ்மான்


__._,_.___
\

வியாழன், 3 பிப்ரவரி, 2011

மண்ணறை வாழ்க்கை இல்லையா?



சிலர் ”கப்ர் (மண்ணறை) வாழ்க்கை என்பதே கிடையாது” என வாதிடுகின்றனர். அவ்வாறு வாதிடுபவர்கள் தங்கள் வாதத்துக்குச் சான்றாக இவ்வசனங்களைக் காட்டுகின்றனர். ((திருக்குர்ஆன் 36:51, 52)

எங்கள் உறக்கத்திலிரிருந்து எங்களை எழுப்பியவன் யார்?” என்று கேட்டுக் கொண்டே எழுவார்கள் என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது. இவ்வாறு எழுப்பப்படுவது குறித்து அவர்கள் கை சேதம் அடைவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

கப்ரில் அவர்கள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தால் எங்கள் உறக்கத்திரிலிருந்து எங்களை எழுப்பியவன் யார் என்று எப்படிக் கூறுவார்கள்? எந்த வேதனையும் இல்லாமல், இருந்தால் தான் அவர்களால் இவ்வாறு கூற முடியும். இவ்வாறு எழுப்பப்பட்டது குறித்து அவர்கள் கை சேதமும் கவலையும் அடைகிறார்கள் என்றால் எள்ளளவும் அவர்கள் வேதனை செய்யப்படவில்லை என்பதைச் சந்தேகமற அறியலாம்.

கப்ரில் வேதனை இருப்பதாக ஹதீஸ்களில் கூறப்பட்டாலும் இந்த வசனங்களுடன் அவை நேரடியாக மோதுவதால் அதை நாம் நம்பத் தேவையில்லை என்று இந்தக் கருத்துடையவர்கள் வாதிடுகின்றனர்.
தங்கள் வாதத்துக்கு வரிலிமை சேர்ப்பதற்காக மற்றொரு சான்றையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

அல்லாஹ் யாருக்கும் எந்த அநியாயமும் செய்ய மாட்டான். கப்ரில் வேதனை இருப்பதாக நம்புவது அல்லாஹ் அநீதி இழைக்கிறான் என்ற கருத்தை மறைமுகமாக உள்ளடக்கியுள்ளது என்பது இவர்களின் மற்றொரு வாதம்.
ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர் அவர் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்கு பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம்.
இரண்டாமவன் வெறும் பத்து நாட்கள் மட்டுமே கப்ரில் வேதனையை அனுபவிக்கிறான். ஆனால் ஆதம் (அலை) அவர்களின் மகனோ இலட்சோப லட்சம் வருடங்கள் கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.
ஒரே குற்றத்தைச் செய்த இருவரில் ஒருவருக்கு பத்து நாள் தண்டனை என்பதும், இன்னொருவருக்கு பல லட்சம் வருடங்கள் தண்டனை என்பதும் எப்படி நீதியான தீர்ப்பாக இருக்க முடியும்? இத்தகைய அநீதியான தீர்ப்பை இறைவன் வழங்குவானா? என்றும் இவர்கள் கேட்கின்றனர்.
ஆகவே, கப்ரில் வேதனை இருப்பதாக நம்புவது திருக்குர்ஆனை மறுப்பதாகவும், அல்லாஹ்வின் நீதியைச் சந்தேகிப்பதாகவும் அமைந்துள்ளது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.


இவர்களின் வாதத்தில் உண்மையுள்ளதா? இந்தக் கேள்விகளுக்கான விடை என்ன?


”எங்கள் உறக்கத்திரிலிருந்து எங்களை எழுப்பியவன் யார்?” என்று மனிதர்கள் கூறுவதால் கப்ரு வாழ்க்கை இல்லை என்ற முடிவு முற்றிலும் தவறானதாகும். குர்ஆனை முழுமையாக ஆய்வு செய்யாமல் இவ்விரு வசனங்களை மட்டும் தங்கள் மனோ இச்சைப்படி புரிந்து கொண்டதன் விளைவு தான் இந்த வாதம்.

ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்தை அடைபவர்கள் முந்தைய உலகில் நடந்தவற்றை மறந்து விடுவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பது அவர்களுக்கு அறவே நினைவுக்கு வராமல் போய் விடும். எனவே தான் கப்ரு வேதனையை அனுபவித்தவர்கள் மீண்டும் எழுப்பப்பட்டு வேறு உலகிற்கு கொண்டு செல்லப்பட்டவுடன் கப்ரில் நடந்ததை அடியோடு மறந்து விடுகிறார்கள்.
ஒரு உலகில் நடந்ததை வேறொரு உலகிற்கு இடம் பெயரும் போது மறந்து விடுவார்கள் என்பது நமது கற்பனை அல்ல. மாறாக திருக்குர்ஆனிலேயே இதற்குச் சான்றுகள் உள்ளன.
முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தவுடன் அவர் வழியாகப் பிறக்கவுள்ள எல்லா சந்ததிகளையும் வெளிப்படுத்தி ”நான் உங்கள் இறைவனல்லவா?” என்று அல்லாஹ் கேட்டான். அனைவரும் ”ஆம்” என்றனர் என்பதை திருக்குர்ஆன் 7:172 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
இவ்வாறு இறைவன் கேட்டதும் நாம் ”ஆம்” எனக் கூறியதும் நமக்கு நினைவில் இல்லை. இறைவன் திருக்குர்ஆன் மூலம் நமக்குச் சுட்டிக் காட்டிய பிறகும் நமக்கு அது நினைவுக்கு வருவதில்லை. இறைவன் கூறுவதால் அதை நாம் நம்புகிறோமே தவிர, நமக்கு நினைவுக்கு வந்து நாம் இதை நம்புவதில்லை.
ஒரு உலகிலிருந்து மறு உலகுக்கு மனிதன் இடம் பெயரும் போது முந்தைய உலகில் நடந்த அனைத்தையும், மனிதன் அடியோடு மறந்து விடுவான் என்பதை இவ்வசனத்திரிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
கப்ருடைய வாழ்வு என்பது தனி உலகம், திரும்ப எழுப்பப்பட்டு இறைவன் முன்னால் நிறுத்தப்படுவது வேறு உலகம். எனவே, இவ்வுலகத்திரிலிருந்து இன்னொரு உலகத்துக்குச் செல்லும் போது ”எங்கள் உறக்கத்திலிரிருந்து எழுப்பியவன் யார்?” என்று கேள்வி கேட்பதை மட்டும் சான்றாகக் கொண்டு கப்ரில் வேதனை இல்லை என்று மறுப்பது அறிவீனமாகும்.
பொதுவாக மனிதன் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகும் போது அதற்கு முன்னிருந்த நிலையை மறந்து விடுவான். திரும்ப உயிர்ப்பிக்கப்பட்டவுடன் மனிதன் காண்கின்ற பயங்கரமான நிகழ்வுகள் அதற்கு முன் அவன் அனுபவித்த தண்டனைகளை அடியோடு மறக்கச் செய்து விடுகின்றன. ”எங்கள் உறக்கத்திரிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று மனிதன் கேட்பதற்கு இதுவும் மற்றொரு காரணமாக அமைந்து விடுகிறது.

இந்தக் காரணமும் நமது சொந்தக் கற்பனை அல்ல. மாறாக
திருக்குர்ஆனிலேயே இக்காரணம் கூறப்பட்டுள்ளதற்கு சான்று உள்ளது. (திருக்குர்ஆன் 22:1,2)

அதிர்ச்சிகரமான நிலையை அடைந்தவனின் கூற்றாகத் தான் இவ்வசனம் அமைந்துள்ளது. அல்லாஹ்வின் கூற்றாக அமையவில்லை. இறந்தவர்கள் உறங்கிக் கொண்டு இருப்பதாக அல்லாஹ் எங்கேயும் கூறவில்லை.
அதிர்ச்சிக்கு ஆளானவன் இவ்வாறு புலம்புவதாகத் தான் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். மறுமையில் இத்தகைய காபிர்கள் புலம்புவதைச் சான்றாகக் கொண்டவர்கள் நபிகள் நாயகத்தின் கூற்றை மறுப்பது தான் விந்தையிலும் விந்தை.
மேலும் மறுமை நாளில் இறை மறுப்பாளர்கள் இது மட்டுமின்றி இன்னும் பல உண்மைக்கு மாற்றமான கூற்றுகளைக் கூறுவார்கள். அவர்கள் கூறுவதை அல்லாஹ் எடுத்துக் காட்டுவதால் அதுவே உண்மை நிலை என்று நம்ப முடியாது.

மறுமையில் எழுப்பப்படும் இறை மறுப்பாளர்கள் உறக்கத்திரிலிருந்து விழித்ததாக மட்டும் கூற மாட்டார்கள். மாறாக, ஒரு மணி நேரம் கூட உலகில் அல்லது கப்ரில் தங்கியிருக்கவில்லை எனவும் கூறுவார்கள். (திருக்குர்ஆன் 30:55) அதுவும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுவார்கள் என்று இவ்வசனம் கூறுகின்றது..

இதைச் சான்றாகக் கொண்டு மனிதன் இறந்து ஒரு மணி நேரத்தில் கியாமத் நாள் வந்து விடும் என்று இவர்கள் கூறுவார்களா? அல்லது இவ்வுலகில் சிறிது நேரமே வாழ்ந்தார்கள் என்று கூறுவார்களா? அதிர்ச்சியின் புலம்பல் என்பார்களா?
மறுமையில் வழங்கப்படும் தண்டனை தவிர வேறு தண்டனை இருப்பதாக குர்ஆனில் கூறப்படவில்லை என்ற இவர்களின் வாதமும் அறியாமையின் வெளிப்பாடு தான்.
‘கப்ருடைய வேதனை’ என்ற வார்த்தை தான் குர்ஆனில் கூறப்படவில்லை. அத்தகைய வேதனை உள்ளது பற்றி வேறு வார்த்தைகளால் கூறப்பட்டுள்ளது. இதை அறியாத காரணத்தினால் தான் இவ்வாறு வாதிடுகின்றனர்.
கியாமத் நாள் வருவதற்கு முன், ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் நரக நெருப்பின் முன்னால் காலையிலும், மாலையிலும் அதாவது தினந்தோறும் காட்டப்படுகிறார்கள் என்றும் கியாமத் நாளில் இதை விடக் கடுமையான வேதனையுள்ளது எனவும் திருக்குர்ஆன் 40:45,46 வசனங்கள் கூறுகின்றன.
கியாமத் நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவதற்கு முன் காலையிலும், மாலையிலும் அவர்கள் அன்றாடம் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று தெளிவாகவே இவ்வசனங்கள் கூறுகின்றன.
இதற்கு விளக்கமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கப்ருடைய வேதனை பற்றி விளக்கமளித்துள்ளனர். இத்தகைய ஹதீஸ்கள் யாவும் இவ்வசனத்தின் விளக்கவுரைகளே தவிர முரணானவை அல்ல.
மலக்குகள், அக்கிரமக்காரர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது அவர்களை அடிப்பார்கள். மேலும், ”சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்” எனக் கூறுவார்கள் என்று கூறுகின்ற இறைவன் ”ஃபிர்அவ்னின் கூட்டத்தினருக்குச் செய்யப்படுவது போல்” எனவும் கூறுவதை அறிவுடையோர் சிந்திக்க வேண்டும். (திருக்குர்ஆன் 8:50,52)

கப்ர் வேதனை பற்றி ஃபிர்அவ்ன் கூட்டத்தார் விஷயமாக மட்டுமே இறைவன் குறிப்பிட்டுள்ளான். மற்றவர்களுக்கு இது இருக்காது என்று யாரும் கருதி விடக் கூடாது என்பதற்காகவே இவ்வசனத்தில் அற்புதமாக இவ்வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான்.
உயிர்களைக் கைப்பற்றிய பின்னர் அளிக்கப்படும் வேதனை ஃபிர்அவ்னின் கூட்டத்தினருக்கு அளிக்கப்படும் வேதனை போன்றதாகும் எனக் கூறி மற்றவர்களுக்கும் கப்ரு வேதனை உள்ளது என்று இறைவன் வலிரியுறுத்திக் கூறுகிறான்.
எனவே கப்ர் வேதனை குர்ஆனில் இல்லை எனக் கூறுவதும், அது குர்ஆனுக்கு எதிரானது என வாதிடுவதும் குர்ஆனை அறியாதவர்களின் கற்பனையில் உதித்ததாகும் என்பதை இதிலிரிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
சிலர் அதிக காலமும் சிலர் குறைந்த காலமும் தண்டிக்கப்படுவது என்ன நியாயம்? என்ற கேள்வியும் தவறாகும். இறைவனின் ஏற்பாடு இது தான் என்பது தெரிந்த பின்னர் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது.
அப்படிக் கேட்டால், அதற்கு நியாயமான விடையும் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது. நூறு வருடங்களுக்கு முன் ஒருவன் ஒரு பாவத்தைச் செய்கிறான். இன்றைக்கு ஒருவன் அதே பாவத்தைச் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

பாவத்தைப் பொருத்த வரை இரண்டும் ஒரே மாதியானவை என்றாலும் குற்றத்தில் இருவருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
நூறு வருடங்களுக்கு முன் பாவம் செய்தவன் தனக்கு அடுத்து வருபவன் அதே பாவத்தைச் செய்திட தைரியமளித்து விட்டுச் செல்கிறான். மற்றவன் அப்பாவத்தைச் செய்வதற்கு முன் மாதிரியாகவும் திகழ்கிறான்.
நூறு வருடத்திற்குப் பின், நாம் செய்யும் அந்தப் பாவத்துக்கு அவன் வழிகாட்டியாக இருந்துள்ளான். நூறு வருடத்தில் நடைபெற்ற அந்தப் பாவத்துக்கும் வழி காட்டியாக இருந்துள்ளான்.
எனவே இவன், தான் செய்த தப்புக்கும் தண்டிக்கப்பட வேண்டும். இத்தனை பேரைக் கெடுத்ததற்கும் தண்டிக்கப்பட வேண்டும். கப்ரு வேதனையின்
மூலமே இத்தகைய நீதியை வழங்க முடியும்.

ஆதமுடைய ஒரு மகன் செய்த கொலை தான் உலகில் நடக்கும் எல்லாக் கொலைகளுக்கும் முன்னோடியாக இருந்தது. அவன் தான் கொலையாளிகளின் வழிகாட்டி. எனவே, அவன் மற்ற எவரையும் விட அதிக நாட்கள் தண்டனை அனுபவிப்பது தான் சரியான நீதியாகும்.
எத்தனை பேரைக் கெடுத்தார்கள் என்ற வகையில் சிந்தித்தால் ஒருவர் அதிக நாட்களும், இன்னொருவர் குறைவான நாட்களும் கப்ரில் தண்டிக்கப்படுவது அநீதி என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

விவாத சவடாலை ஏற்றுக்கொண்ட பிறகும் இழுத்தடிக்கும் ஹிஜ்ரா கமிட்டிக்கு நமது பதில்

JAQH.net admin

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

நாஷித் அவர்களின் சவடால்க்கு பதில்.

நாம் பி.ஜே அவர்கள் எஸ்.கமாலுதீன் மதனீ அவர்களின் சர்வதேச பிறை கொள்கையை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதால், எஸ்.கே. யையும் சேர்த்து அழைத்து வரும்படி பி.ஜே அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

//அட கூறு கெட்டவர்களா நாங்கள் ஏன் உங்கள் தலைவர் கமாலுத்தீன் மதினியை சேர்த்து அழைத்து வர வேண்டும்? இதை எழுதும் போது மூளையைக் கழற்றிக் காயப்போட்டு விட்டுத் தான் எழுதினீர்களா? // PJ

எஸ்.கமாலுதீன் மதனீயை பாராட்டும் போது அதே சகோதரர் பி.ஜே அவர்கள் கூறுகெட்டு போய், மூளையைக் கழற்றிக் காயப்போட்டு விட்டா? பாராட்டினார்கள் என்று நாமும் பி.ஜே அவர்களை நோக்கி கேள்வி எழுப்பமுடியும்.

எனவே சர்வதேச பிறைக் கொள்கையை பி.ஜே அவர்கள் ஒப்புக்கொண்டதை நாங்கள் பகிரங்கப்படுத்தியதால், கோபமுற்ற சகோதரர் பி.ஜே அவர்களின் மேற்கண்ட வார்த்தைகள் பயன்படுத்தியதை யாரும் மறைக்க முடியாது.

எனவே நாஷித் போன்றவர்களுக்கு இந்த விவாத ஒப்பந்தத்தில் எந்த பங்கும் கிடையாது. அதனால் விவாதக்குழு என்றெல்லாம் பதிந்து மக்களை திசைதிருப்புவதை விட்டுவிட்டு, பி.ஜே யின் கொள்கையை மட்டுமாவது இணையத்தில் ஒழுங்காக பிரச்சாரம் செய்து வந்தால் சரி. மேலும் யாருடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டுமோ அதை நாங்கள் நன்கறிவோம். ஆகவே சம்மந்தமில்லாத உங்களை போன்றவர்கள் தலையிடாமல் ஒதுங்கியிருப்து நலம்.

நிர்வாகி



JAQH .net admin

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்……
பொய்யர்கள் எதை வேண்டுமானாலும் கூறிக்கொண்டே இருப்பார்கள். நாம் அல்லாஹ் சொன்ன அடிப்படையில் அவனுடைய மார்க்கம் வெற்றி பெற போராட வேண்டும். எப்படி போராட வேண்டும் என்பதற்கும் அல்லாஹ் நமக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளான். எனவே பொய்யர்கள் எப்படி எல்லாம் பொய் பேசுகின்றார்கள் என்று மக்களிடம் இனம் காட்ட வேண்டுமென்பது தான் விவாதம். அது சாதாரண விஷயமல்ல என்பதை புரியுங்கள். அதற்காக பல திட்டங்களை தீட்டி வேண்டியுள்ளது. ஷைத்தான் சாதாரணமானவன் கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளாதால் அவனை பற்றி உங்களுக்கு பயம் இல்லாமல் உள்ளது. ஷைத்தானை தோற்கடிப்பது தான் நமது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக அல்லாஹ் கூறுகின்றான்.

எனவே எல்லா விஷயத்திலும் அவன் மனிதர்களின் சிந்தனையை சீர் குலைப்பான். அதை நாம் எப்படி தடுப்பது என்பதை ஆலோசிக்கமால் முடிவெடுக்க முடியாது. எவ்வளவு தீவிரமான அல்லாஹ்வின் அடியார்கள் கூட ஷைத்தானை வீழ்த்துவதற்கு பல வியூங்கள் வகுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது தான் வரலாறு. அதற்கு அடுத்தாற்போல் அவனை வெற்றி கொள்ள அல்லாஹ்வின் கிருபையை நாம் எதிர்பார்த்தே வாழ்பவர்களாக இருக்க வேண்டும்.

பிறை கொள்கையை நாம் பிரச்சாரம் செய்து வருகின்றோம். பிறை நாட்காட்டியை போடுவதை எதிர்த்து யாராவது ஒரு குர்ஆன் வசனத்தையாவது, அலலது ஹதீஸையாவது காட்டியிருந்தால் நீங்கள் குறிப்பிடவும். எனவே விவாதத்திற்கும் நமது பிரச்சாரத்திற்கும் அவர்கள் எந்த வகையிலும் முடிச்சு போட முடியாது. எனவே விவாதம் அல்லாஹ்நாடினால் கூடிய விரைவில் நடைபெறும். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.

இப்படிக்கு
நிர்வாகி











நமது பதில் :

அலைக்குமுஸ்ஸலாம்..

விவாதத்திற்கு தயாரா? என்று நாம் முதலில் அழைப்பு விடுத்தது போல பேசுகிறீர்கள். விவாதத்திற்கு மௌலவி பிஜே வை அழைத்தது நீங்கள்.
அவர் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
நேரடியாக உங்களுக்கும் தவ்ஹீத் ஜமாதிற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை எழுதி, நேரடியாக அழைப்பு விடுங்கள் என்பது அவரது கோரிக்கை.

சகோ. கமாலுதீன் மதனி அவர்களது கொள்கையை பிஜே ஏற்றுக்கொண்டார் என்ற உங்களது வடி கட்டிய பொய்யையும் விவாதத்தின் ஒரு அங்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பிஜேவின் வாசகத்தில் சர்வதேச பிறையை அவர் ஆதரித்துள்ளார் என்று உங்களுக்கு புரிகிறது என்பது விபரமற்ற புரிதல். கூறுகெட்டதனமாக ஒன்றை புரிந்தும் கொண்டு அதனால் தான் கமாலுதீன் மதனியையும் அழைத்து வர சொன்னோம் என்று வேறு பேசுகிறீர்கள்.


ஒரு வாதத்திற்கு , பிஜே சர்வதேச பிறையை ஆதரித்தார் என்றே வைத்துக்கொள்வோமே, அதனால் அவர் கமாலுதீன் மதனியை அழைக்க வேண்டும் என்று சொல்வது எந்த அறிவுக்காவது பொருந்துகிறதா?

நாத்திகர்கள் உங்களோடு விவாதம் செய்ய முனைகிறார்கள் என்று வைப்போம். .. அவர்கள் உங்களை நோக்கி, பிஜேவையும் அழைத்து வாருங்கள். நீங்களும் பிஜேவும் கடவுள் உண்டு என்று தானே சொல்கிறீர்கள், ஆகவே ஒத்த கருத்துடைய நீங்கள், அவரை அழைத்து வந்தால் நாங்கள் உங்களுடன் விவாதிக்கிறோம், என்று அவர்கள் கூறினால் அது எவ்வாறு மூடத்தனமோ,கிறுக்குதனமோ, அதற்கு சற்றும் பிசகாமல் இருக்கிறது உங்கள் வாதமும்!!

பலருக்கும் ஒரு விஷயத்தில் ஒத்த கருத்து இருக்கத்தான் செய்யும். மாற்றுக்கருத்தும் இருக்கும். மாற்றுக்கருத்து உடையவர் என்ன செய்ய வேண்டும்? தனது கொள்கைக்கு மாற்றாக கருத்துடைய எவரையும் தனி தனியாக அழைத்து, நாங்கள் உங்களோடு விவாதிக்கிறோம், என்ற பகிரங்க அறைகூவல் விட வேண்டும். தங்கள் கொள்கையை நிலைநாட்டுவது தான் முக்கியமாக கருதப்பட வேண்டுமே அல்லாமல், யாரோடு விவாதிக்கிறோம், அவரது கருத்தை வேறு யாரெல்லாம் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றெல்லாம் பார்க்க தேவையில்லை.

இவையெல்லாம், ""விவாதத்திற்கு அழைத்தது போன்றும் தோற்றமளிக்க வேண்டும், விவாதம் உண்மையில் நடைபெறாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்!"", என்ற எண்ணத்தை தவிர வேறு எதையும் இது போன்ற உங்கள் செயல் வெளிக்காட்டவில்லை!

விவாதத்திற்கு அழைப்பு விடுத்து விட்டு மௌனமாகி விடுகிறீர்களே என்று கேட்டால், நாஷித் இதில் சம்மந்தப்பட தேவையில்லை என்கிறீர்கள்.
விவாதத்திற்கு சவால் விட்டு, பின் ஒளிய நினைக்கும் உங்களை வெளிக்கொண்டு வருவதற்கு விவாதக்குழுவில் அங்கத்தினராக வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை. நம்மை போன்ற எந்த சாதாரணமானவனும் இதை செய்யலாம்..

பகிரங்க விவாதத்திற்கு அழைத்து விட்டு, அதை ஏற்றுக்கொண்ட பின்னர், ""நாங்கள் திட்டம் தீட்டி வருகிறோம், தயாராகி வருகிறோம், யோசித்துக்கொண்டிருக்கிறோம், விவாதம் என்பது சாதாரண விஷயம் இல்லை, என்றெல்லாம் பேசுவதன் மூலம், மக்களுக்கு உங்கள் மீதுள்ள எண்ணம் எவ்வாறு இருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.!