ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

நான் ஏன் இந்த ஜமாஅத்தை விட்டு விலக வேண்டும்?


நான் ஏன் இந்த ஜமாஅத்தை விட்டு விலக வேண்டும்?
தன்னிலை விளக்கம்



தன்னிலை விளக்கம் தற்போது ஃபேஷனாகி வருவதையொட்டி நானும் ஒரு தன்னிலை விளக்கமொன்றை கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஆனால், நிச்சயம் இது விளம்பரத்தை எதிர்பார்த்தல்ல, என்று, இதை படிக்கும் போதே புரியும்.

தொழுகையோ இன்னபிற இபாதத்களோ குறைவாய் இருந்த சிறு பிராயத்தில், மார்க்கத்தில் எமக்கு பிடிப்பினை ஏற்படுத்தித் தந்தது தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்கள்.

மார்க்கம் என்றால், அறிஞர்கள் சொல்வது மட்டும் தான், நமக்கெல்லாம் எதுவும் புரியாது என்கிற பிரம்மையில் இருந்த காலகட்டத்தில், குர் ஆன் ஹதீஸை என் போன்ற பாமரர்கள் கைகளில் தவழச் செய்தது சகோ. பிஜெ கொண்டிருந்த எளிய அணுகுமுறை.

ஏகத்துவம் என்றால் வெறுமனே தர்காவுக்கு செல்லாமல் இருப்பது என்கிற மேலோட்டமான ‍புரிதலுடன் மட்டும் இருந்த எனக்கு தவ்ஹீதின் அனைத்து பரிணாமங்களையும் புரிய வைத்தது அவரது எழுச்சிமிகு உரைகள் மற்றும் வீரியமிக்க எழுத்துக்கள்.

குர் ஆனை ஒளு இல்லாமல் தொடலாமா கூடாதா என்கிற மடமையான சர்ச்சையில் இந்த சமூகம் ஒரு பக்கம் வீழ்ந்திருக்க, மற்றொரு பக்கமோ, காஃபிர்கள் உள்ளத்தில் கூட இந்த குர் ஆன் சென்று சேர்வதற்கு காரிணியாய் இருந்த சகோ. பிஜெவின் தர்ஜுமா நம்மை மெய்சிலிர்க்க வைத்தது.


ஒவ்வொரு கொள்கையுடையவர்களும் தங்கள் கருத்துக்கு ஆதரவாக குர் ஆன் ஹதீஸை தான் காட்டுகிறார்கள்,
எனவே அனைத்தும் சரி, நாம் உண்டு, நம் இபாதத் உண்டு என்று இருப்போம் என்பதாக அரை முஸ்லிமாக மார்க்க அறிவை பெறத் துவங்கிய காலங்களில், சத்தியத்திற்கு எதிராக எந்த ஆதாரமும் இருக்கவே இருக்காது என்கிற ஆணித்தரமான புரிதலை எமக்களித்தது தவ்ஹீத் ஜமாஅத் களம் கண்ட விவாதங்கள்.

ஹதீஸ் கலையா? அது நமக்கெல்லாம் புரியாத பாடம் என்று எண்ணி அதை விட்டும் தூரமாய் போன சமூகத்தை இந்த ஜமாஅத்தானது ஹதீஸ்கள் குறித்த ஆய்வில் ஈடுபட வைத்தது.

மார்க்க அறிவினை மதரசா கல்வியுடன் சுருக்கிக் கொண்ட ஆலிம்சாக்களை மட்டுமே கண்டு வளர்ந்த நான், அனுதினமும் ஆய்வில் கழித்த தவ்ஹீத் அறிஞர்களை கண்ட போது வியப்பின் உச்சிக்கே சென்றேன்.

உலகமே எதிர்த்தாலும், சத்தியம் இது தான் என்று தெரிந்த பிறகு அதை எவ்வித தயக்கமும் இன்றி சமுதாயத்தின் முன் எடுத்தியம்பிய துணிச்சலை ஜகாத் உள்ளிட்ட ஆய்விகளின் போது கண்டு மெய் சிலிர்த்தேன்.

பிஜெ அன்றைக்கு ஒன்று சொன்னார், இன்றைக்கு மாற்றி சொல்கிறார் என்கிற எதிரிகளின் விமர்சனம், எம்மை இன்னும் அவர் விஷயத்தில் நெருக்கமாகவே ஆக்கியது.
மதரசா கல்வியோடு மார்க்க அறிவுத் தேடலை முடித்துக் கொண்டவர்களுக்கு என்றைக்கும் ஒரே கருத்து தானே.. மாறவா போகிறது என்று அப்போதெல்லாம் அவர்களைக் குறித்து ஏளனம் பேசிக் கொள்ளும் மனம் !


பதவி ஆசை இல்லா பண்பு,
தலைவர் என்பதில் எந்த பகட்டும் இல்லாமை, வருக வருக என்கிற கோஷம் இல்லை,
மேள தாளங்கள் கிடையாது,
தாரை தப்பட்டைகள் இல்லை,
பொன்னாடைகள் இல்லை,
மேடையில் அமர்ந்திருப்பவர்களை வரவேற்கும் முறை கிடையாது,
யாருக்காகவும் எழுந்திருக்கக் கூடாது என்கிற உயரிய நபிவழி,
தவறு செய்த ஒருவர் ஜமாஅத்தின் தலைவர் என்றாலும் தயவு தாட்சணியமின்றி அவரை தூக்கி வீசக் கூடிய நேர்மை..
அரசியல் தலைவரே வந்தாலும், சுய கெளரவத்தை விட்டுக் கொடுக்காமல் அவரை சந்திக்கும் மாண்பு,
ஜால்ரா இல்லை, நெளிவு சுழிவு இல்லை,
ஜமாஅத்திற்கு கிடைத்திருக்கும் அதிகார வர்க்கத்தின் அங்கீகாரத்தைக் கூட தங்கள் சுய இலாபத்திற்காக ஒரு போதும் பயன்படுத்திடாத நிர்வாகிகள்..

இவையெல்லாம் நான் வேறெந்த இயக்கத்திலும் காணாத ஒன்று !


பல அடி, உதைகளுக்குப் பிறகு, தியாகத்தினாலும், இரத்தச் சிதற‌ல்களினாலும் உருவாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கான முதல் இயக்கமான தமுமுகவை கூட, கொள்கைக்காக விட்டு விலகிட கடுகளவு தயக்கம் கூட காட்டாத அறிஞர்கள், நம் கண் முன் தனித்துவம் பெற்றார்கள்.
 

அனைத்து இயக்கங்களும் பிஜெவை திட்டுவதிலேயே பொழுதை கழித்த, கழித்துக் கொண்டிருக்கிற காலத்தில்,
இஸ்லாத்திற்கு எதிராக தோன்றிய ஒவ்வொரு கொள்கையையும் வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்தெறியும் உன்னத பணியில் தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே ஈடுபட்டதை கண்ட போது உள்ளம் பெருமிதம் கொண்டது.

சத்தியத்தை நிலைநாட்ட முபாஹலா எனும் குர் ஆனிய வழிமுறை துவங்கி, பரேலவி, மதுஹப், தரீக்கா, மவ்லூது, மீலாது, தர்கா வழிபாடு, காதியானிசம், நாத்திகம், ஹிந்துத்துவம், கிறுத்தவம், அஹ்லே குர் ஆன், போன்ற, நம் சமூகத்தில் களைகளாய் தோன்றிய எல்லா கொள்கைவாதிகளுடனும் நேருக்கு நேராய் விவாதம் செய்து சத்தியத்தை உறுதி செய்த இந்த ஜமாஅத் எம் மனதில் உயர்ந்தது.

ஹசரத்திடம் கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது என்கிற சமூகத்தை மட்டுமே இஸ்லாமிய சமூகமாக கண்ட எமக்கு, இந்த ஜமாஅத்தின் அறிஞர்களிடமே கூட நேருக்கு நேராய் கேள்விகள் கேட்டு உண்மையை கண்டறிகின்ற சூழலை பெற்றது நமக்கு பெருமையாய் இருந்தது.

தான் கொண்டிருந்த கொள்கையிலேயே உறுதியும் பிடிமானமும் இல்லாத சமூகத்தின் மத்தியில், அவன் என்ன சொல்றான், இவனது கொள்கை என்ன, இந்த இயக்கம் அதற்கு என்ன ஆதாரம் வைக்கிறது, அது எதனால் தவறு என்பதையெல்லாம் அடுக்கடுக்காக அறிந்து, பிறருக்கு போதிக்கவும் செய்கிற பயிற்சியினை தவ்ஹீத் ஜமாஅத் இந்த சமூகத்திற்கு தந்திருப்பது வியப்புக்குரிய ஒன்று.

எத்தனை வெட்டுக் குத்துக்கள்.
எத்தனை அடி உதைகள்
எத்தனை ஊர் விலக்குகள்
எத்தனை ஜனாசா அடக்கம் மறுப்புகள்.

குடும்பத்தில் எதிர்ப்பு, தந்தை தாய் கூட புறக்கணிக்கும் நிலை
உறவினர்கள் செய்யும் உதாசீனங்கள்

என எது நடந்தாலும், அனைத்தையும் விட கொள்கை தான் பெரிது என்று நெஞ்சுறுதியுடன் நிற்கின்ற இளைஞர் படையை இந்த ஜமாஅத் உருவாக்கியிருக்கிறதே, அதற்கு ஈடான தியாகமும் அற்பணிப்பும் வேறு எந்த இயக்கத்திடமும் நாம் காணாத ஒன்று !

இந்த ஜமாஅத்தும், இந்த ஏகத்துவ பிரச்சாரமும் இச்சமூகத்தில் வேரூன்றுவதற்கு முன்னால் ஃபித்ரா வசூல் என்கிற ஒன்றை இந்த சமூகம் கண்டிருக்குமா?
அது அனைவரின் மீதும் கட்டாயக் கடமை என்பதையே ஏகத்துவம் மலர்ந்த பிறகு தான் பலருக்கும் தெரியவே செய்யும்.

ரத்த தானம் செய்த ஜமாஅத்தை இதற்கு முன் நாம் கண்டிருக்கிறோமா?
இரத்தத்தை தானம் செய்வது ஹராம் என்று ஃபத்வா வழங்கப்பட்ட ஜாஹிலியத்தில் தானே நாமெல்லாம் வீழ்ந்திருந்தோம்?

கூட்டுக் குர்பானி என்கிற திட்டத்தை இதற்கு முன் எவராவது அறிந்திருக்கிறார்களா?
வட்டியில்லா கடனுதவி திட்டத்தை எந்த இயக்கமாவது இந்த சமூகத்தில் அறிமுகம் செய்திருக்கிறதா?

ஆதரவற்ற அநாதை குழந்தைகளை,  முதியோர்களை தத்தெடுக்கும் உன்னத பணியில் எந்த பரேலவி ஜமாஅத்துகளாவது இதற்கு முன் தங்களை ஈடுபடுத்தி நாம் பார்த்திருக்கிறோமா?

ஒன்றும் வேண்டாம்..

வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுக்கும் இறையச்சமிக்க சமூகமாக இந்த சமூகத்து இளைஞர்கள் மாறியிருக்கிறார்களே, இதற்கு முன் இந்த நிலையை இந்த சமுதாயம் கனவிலாவது எண்ணிப் பார்த்திருக்குமா?

இல்லை. இதையெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தில் தான் நான் முதன்முதலாய் கண்டேன்.

ஐம்பது வருடம் பிந்தங்கியிருக்கின்ற ஒரு சமுதாயம்.
கல்வியறிவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம்
இன்றைக்கும் பீடி சுற்றியே பிழைப்பை ஓட்டும் சமூகம்..

இவர்களிடையே இந்த ஜமாஅத் உருவாக்கிய விழிப்புணர்வு சாதாரணமல்ல.

வரதட்சணை எதிர்ப்பு புரட்சி
இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு
உரிமைக்காக போராட வேண்டும் என்கிற உயரிய‌ குணம்
சமுதாயத்தில் நம்மை சுற்றி நடக்கும் அவலங்கள்,
உரிமை மீறல்கள்,
அரசியல் வஞ்சனைகள்,
மத துவேஷங்கள்

அனைத்தையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று இந்த ஜமாஅத் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.

கோழைகளாய் இருந்த இந்த சமூகத்தை நெஞ்சுரத்துடன் எதையும் தாங்கும் இதயமாய் மாற்றியது இவ்வாறு பெறப்பட்ட விழிப்புணர்வினால் தான் என்பதை எண்ணுகையில், இந்த ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் இன்னமும் பெருமை கொள்கிறது மனம்.

தெருமுனை பிரச்சாரம் துவங்கி மார்க்க பிரச்சாரத்தில் பல்வேறு பரிணாமங்களை இந்த ஜமாத் செய்து காட்டியிருக்கிறது என்றால் அது எமக்கு மிகையல்ல.

தமிழகமெங்கும் வீதிக்கு வீதி பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், மாநிலம் கடந்து, இதர மாநிலங்களில், இலங்கையில், மலேசியாவில், வளைகுடா நாடுகளில், ஐரோப்பிய கண்டங்களில், அமெரிக்காவில்..
என ஆங்கில அறிவு கூட இல்லாத இந்த ஜமாஅத் அறிஞர்கள், இந்த தாவாவினை கொண்டு சென்றிருக்கும் தொலவு கற்பனையில் அடங்காதது.

இன்றைக்கும், நாங்கள் தாவாவிற்கு வந்திருக்கிறோம் என்று ஒருவரிடம் சொன்னால், நீங்க தவ்ஹீத் ஜமாஅத்தா? என்று தான் அவர் திருப்பிக் கேட்பார் என்கிற அளவிற்கு, எந்த இயக்கமும் தாவா என்கிற ஒன்றை வெறுமனே பிஜெ எதிர்ப்பு கூட்டமாக நடத்தும் இக்காலத்தில், அல்லாஹ் நமக்கு விதியாக்கியிருக்கின்ற‌ நன்மையை ஏவி தீமையை தடுக்கின்ற இந்த நற்காரியத்தை எந்த தொய்வுமின்றி செய்து வருகின்ற ஒரே ஜமாஅத்தாக தவ்ஹீத் ஜமாஅத் எம் உள்ளத்தில் மிளிர்கிறது.


முஸ்லிம்கள் என்றால் அடங்கி ஒடுங்கி வாழ வேண்டும் என்றே நான் சிறு வயதுகளில் எண்ணியிருந்தேன்.
ஆனால், நமக்கான முகவரியை ஆள்வோர் கண் முன் நிலைநிறுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்.
ஆள்வோரைக் கண்டு நாம் அச்சப்பட்ட காலம் போய், முஸ்லிம்களின் எழுச்சி ஆள்வோரை மிரள செய்த காலங்களை பின்னோக்கும் போது மயிர்கூச்செரிகிறது.

ஒரு போதும் அரசியலுக்குள் நுழைய மாட்டோம் என்று 18 வருடங்களுக்கு முன்பாக சென்னை தீவுத்திடலில் லட்சம் பேர் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதியை இன்றைய தேதி வரை கட்டிக் காத்து வரும் இந்த ஜமாஅத் எம் உள்ளத்தில் மாணிக்கமாய் மிளிர்கிறது.


அப்போது தமுமுகவிற்கு இருந்த செல்வாக்கென்ன ,இன்றைக்கு அரசியலுக்கு நுழைந்த பிறகு அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கென்ன?
ஏணி வைத்தாலும் எட்டாது என்கிற அளவிற்கு, ஒட்டு மொத்த சமூகமும் அன்றைக்கு ஒரு குடையின் கீழ் வரக்காத்திருந்தது.

சகோ. பிஜெவோ தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏனைய அறிஞர்களோ புகழ் போதையில் வீழ்ந்திருக்க வேண்டும் என்றால் அன்றைக்கு தான் வீழ்ந்திருக்க வேண்டும்.

ஆனால், ஏகத்துவத்தை போதிக்க முடியாத அமைப்பென்றால், அப்படிப்பட்ட அமைப்பே தேவையில்லை என்று, அனைத்தையும் உதறித் தள்ளிய போது, இதை விட சிறந்த தலைமையை அன்றைக்கு தமிழகம் பார்த்திருக்கவில்லை !

மனிதர் என்கிற முறையில் தவறுகளுக்கே அப்பாற்பட்ட இயக்கமாக எதுவும் இவ்வுலகில் இருக்க முடியாது என்ற போதிலும், சத்தியத்தை உள்ளச்சத்தோடு இவர்கள் சொல்வார்கள் என்று என்னில் முழு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது அந்த பிரிவினை தான்.

எனது நம்பிக்கையை இந்த ஜமாஅத் சம்பாதித்து கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன.

 இன்றைய கணம், இதே நம்பிக்கையை மறு பரிசீலனை செய்து கொள்ள எண்ணுகிறேன்.

ஆனால்,

மறு பரிசீலனையில் அந்த நம்பிக்கை குறைவதற்கான எந்த காரணத்தையும் என்னால் கண்டறிய‌ முடியவில்லை.

ஏகத்துவக் கொள்கையில் எந்த வளைவு நெளிவும் இல்லை. இன்னும் உறுதியுடனே தான் செயல்படுகிறது.

சத்தியத்தை அதே உறுதியுடன் சொல்வதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் மேம்பட்டு தான் இருக்கிறது.

நிர்வாகிகளின் எளிமையான வாழ்க்கை முறையில் மாற்றத்தை காண முடியவில்லை.
அன்றும் இன்றும் பதவி மோகம் கொண்டவர்களாய் அவர்களை பார்க்க முடியவில்லை.

கொள்கையில் சமரசம் செய்யும் போக்கினை காண முடியவில்லை.
சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இயக்கமாக அன்றைக்கு திகழ்ந்த இந்த ஜமாஅத்தில் இன்றைக்கும் எந்த மாற்றமும் இல்லை.

அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது என்கிற உயரிய தத்துவத்தில் வீறு நடை போடக் கூடிய ஒரே ஜமாஅத்தாக தமிழக அளவில் தவ்ஹீத் ஜமாஅத் ஒன்று மட்டுமே தான் எம் கண் முன் நிற்கிறது.

நான் ஏன் இன்னொரு ஜமாஅத்தை நாட வேண்டும்? நான் ஏன் இந்த ஜமாஅத்தை விட்டு விலக வேண்டும்?

மேற்கூறிய அனைத்து செயல்திட்டங்களையும் செய்து காட்டிய ஒரு வரலாற்றை எந்த ஜமாஅத்தாவது காட்ட முடியுமா?
என்றால், தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு விலகி அதில் சேர்ந்து கொள்ளலாம்.

அப்படி ஏதேனும் இருக்கிறதா?

இஸ்லாத்தின் அஸ்திவாரமான திருக் கலிமாவிலேயே உறுதியும் தெளிவும் காட்டக் கூடிய ஒரு இயக்கம் தமிழ் பேசும் இவ்வுலகில் இல்லையெனும் போது, நான் ஏன் இந்த ஜமாஅத்தை விட்டு விலக வேண்டும்?

அட, தவறுகளே இருக்கட்டுமே.. இந்த ஜமாஅத் ஒன்றும் மலக்குகளைக் கொண்டு நடத்தப்படவில்லையே, தவறுகளுக்கு அப்பாற்பட்ட ஜமாத்தாக வலம் வருவதற்கு?
ஆதம் நபியின் வழித்தோன்றல்கள் தானே நாமெல்லாம்...

தவறுகள் இருப்பது தான் நாம் மனிதர்கள் என்பதற்கும், அல்லாஹ் தான் நம்மையெல்லாம் கட்டுப்படுத்துகிறான் என்பதற்குமான சான்று எனும் போது, தவறுகள் இருக்கத் தான் செய்யும்.
ஆனால், அவையெல்லாம் சுட்டிக்காட்டினால் திருத்தப்படக் கூடிய  தவறுகள். இஸ்லாத்தின் அடிப்படையை தகர்த்திடாத தவறுகள்.
இந்த ஜமாஅத்தில் பத்து தவறை காட்டுவதாக இருந்தால், மற்றொரு ஜமாஅத்தில் நூறை நான் காட்டுவேனே, ஆயிரத்தை காட்டுவேனே, இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கிற தவறுகளை மூட்டை மூட்டையாக மற்ற மற்ற இயக்கங்களில் நான் காண்கிறேனே,

நான் ஏன் இந்த ஜமாஅத்தை விட்டு விலக வேண்டும்?

தவ்ஹீத் ஜமாஅத் இந்த சமூகத்திற்கு கிடைத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி தான் என்னால் சொல்ல முடியுமே தவிர, நான் எப்படி இதிலிருந்து விலக முடியும்???

என்னை சீர்ப்படுத்தியது இந்த ஜமாஅத் !
என்னை மார்க்கத்தில் பிடிப்புள்ளவனாக மாற்றியது இந்த ஜமாஅத் !
எனது அமல்களை செம்மையாக்கிக் கொள்ள பயிற்சியளித்தது இந்த ஜமாஅத் !
ஏகத்துவத்தின் முழு பரிணாமங்களையும் எனக்கு போதித்தது இந்த ஜமாஅத் !

நான் ஏன் இந்த ஜமாஅத்தை விட்டு விலக வேண்டும்???






செவ்வாய், 28 ஜூலை, 2015

ஹதீஸ் வகைகள் : அட்டவணை




1. யார் கூறுகிறார் என்பதன் அடிப்படையிலான வகைகள்

2. அறிவிப்பாளர் எண்ணிக்கையின் அடிப்படையிலான வகைகள்



1. யார் கூறுகிறார் என்பதன் அடிப்படையிலான வகைகள் :

அ. ஹதீஸுல் குத்ஸி
ஆ. ஹதீஸுல் மர்ஃபூவ்
இ. ஹதீஸுல் மவ்கூஃப்
ஈ. ஹதிஸுல் மக்தூஃ

2. அறிவிப்பாளர் எண்ணிக்கையின் அடிப்படையிலான வகைகள் :

அ. முதவாதிர்
ஆ. ஆஹாத்


அ. முதவாதிர் :

1) மஃனவீ (கருத்தில் முதவாதிர்)
2) லஃப்லீ (வார்த்தையில் முதவாதிர்)


ஆ. ஆஹாத் :

1) அறிவிப்பாளர் தொடர்களின் எண்ணிக்கையை கவனித்து
2) அறிவிப்பாளர்களின் பலம், பலகீனங்களை கவனித்து


1) அறிவிப்பாளர் தொடர்களின் எண்ணிக்கையை கவனித்து :

a. மஸ்ஹூர்
b. அசீஸ்
c. கரீப்


2) அறிவிப்பாளர்களின் பலம், பலகீனங்களை கவனித்து :

a. மக்ஃபூல் (ஏற்கப்படுபவை)
b. மர்தூத் (மறுக்கப்படுபவை)




a. மக்ஃபூல் (ஏற்கப்படுபவை) :

1) படித்தரங்கள் அடிப்படையில்
2) நடைமுறைப்படுத்துவதன் அடிப்படையில்


1) படித்தரங்கள் அடிப்படையில் :

அ. சஹீஹ்
ஆ. ஹசன்



அ. சஹீஹ் :

1) சஹீஹ் லிதாதிஹி
2) சஹீஹ் லி கைரிஹி

ஆ. ஹசன் :

1) ஹசன் லிதாதிஹி
2) ஹசன் லி கைரிஹி


2) நடைமுறைப்படுத்துவதன் அடிப்படையில்

அ. நடைமுறைக்கு ஏற்றவை
ஆ. நடைமுறைக்கு ஏற்றமில்லாதவை


அ. நடைமுறைக்கு ஏற்றவை :

1) முஹ்கம் (தெளிவானவை)
2) நாசிஹ் (இறுதியான சட்டம்)


ஆ. நடைமுறைக்கு ஏற்றமில்லாதவை :

1) முஹ்தலஃபுல் ஹதீஸ் ( முரண்படும் செய்திகள்)
2) மன்சூஹ் (மாற்றப்பட்ட சட்டங்கள்)



ஆ. மர்தூத் (மறுக்கப்படுபவை) :

1) அறிவிப்பாளர் தொடரில் ஏற்படும் குறைகளால் மறுக்கப்படுபவை
2) அறிவிப்பாளரிடம் ஏற்படும் குறைகளால் மறுக்கப்படுபவை





1) அறிவிப்பாளர் தொடரில் ஏற்படும் குறைகளால் மறுக்கப்படுபவை :

அ. வெளிப்படையான குறைகள்
ஆ. மறைமுகமான குறைகள்


அ. வெளிப்படையான குறைகள் :

1) முஅல்லக்
2) முர்ஸல்
3) முஃளல்
4) முன்கதிஃ


ஆ. மறைமுகமான குறைகள் :

1) முதல்லிஸ்
2) முர்சலுல் ஹஃபிய்யு



2) அறிவிப்பாளரிடம் ஏற்படும் குறைகளால் மறுக்கப்படுபவை :

அ. நம்பகத்தன்மையில் குறை ஏற்படுத்துபவை
ஆ. மனனத்தன்மையில் குறைவு ஏற்படுத்துபவை


அ. நம்பகத்தன்மையில் குறை ஏற்படுத்துபவை :

1) பொய்யுரைத்தல்
2) பொய்யர் என்று எண்ணுவதற்கு தகுதியான காரியங்களை செய்தல்
3) பெரும்பாவங்களை செய்தல்
4) தவறான கொள்கையுடையவராக இருத்தல்
5) யாரென்று அறியப்படாதவர்


ஆ. மனனத்தன்மையில் குறைவு ஏற்படுத்துபவை :

1) முத்ரஜ் (கடுமையாக குழப்பமடைதல்)
2) மக்லூப் (மோசமான மனனத்தன்மை)
3) அல்மஸீது ஃபீ முத்தசிலில் அஸானிது (கவனமின்மை)
4) முழ்தரிப் (அதிகம் தவறிழைத்தல்)
5) முஸஹ்ஹஃப் ( நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்தல்)



புதன், 22 ஜூலை, 2015

ஹதீஸ் கலையின் ஐந்து விதிகள்



"இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே" 
சகோ. பிஜெவின் இந்த வருட தொடர் உரையிலிருந்து எடுக்கப்பட்டது
-------------------------------------------------------------------------------------------------------------


ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா அலல்து பலகீனமானதா என்பதை அறிவதற்கு ஐந்துஅளவுகோல்களை இந்த இமாம்கள் முன்வைக்கின்றனர்.
இந்த ஐந்து அளவுகோலும் சரியாக இருக்கும் பட்சத்தில் தான் ஒரு ஹதீஸை சஹீஹ்அந்தஸ்திற்கு கொண்டு வருகின்றனர்.

1. அறிவிப்பாளர் நேர்மையாளராக இருத்தல் வேண்டும் :

இது முதல் அளவுகோலாகும்.
ஒரு செய்தியை ஒருவர் சொல்லும் போது அவர் சொல்வதை நாமே சென்று உறுதி செய்துவிடலாம் என்றால் சொல்பவரின் நம்பகத்தன்மையோ அவரின் நேர்மையையோ நாம் அலசத்தேவையில்லை.

உதாரணமாகஒரு இடத்தில் புதையல் ஒன்று இருப்பதாக ஒருவர் சொல்கிறார்.
சொல்பவர் நேர்மையாளரா பொய்யரா என்றெல்லாம் இவ்விடம் நாம் ஆய்வு செய்யத்தேவையில்லைகாரணம்அவர் சொன்னது போல் அந்த இடத்தில் புதையல் இருந்தால் அவர்நேர்மையானவர்புதையல் இல்லையென்றால் அவர் பொய்யர்ஆகஅவர் சொன்னதை நாமேநேரடியாக சரி பார்க்க வழி இருக்கும் போதுஅதுவே நமக்கு போதுமானது.

ஹதீஸ்களை அறிவிப்பதைப் பொறுத்தவரைஇப்படி நபி (சல்அவர்கள் சொன்னார்கள் என்றுஒரு அறிவிப்பாளர் ஒன்றை சொல்லும் போதுஉண்மையில் இப்படி நபி (சல்அவர்கள்சொன்னார்களாஎன்பதை நபி (சல்அவர்கள் வாழும் காலம் என்றால் நாம் அவர்களிடமேநேரடியாக சென்று கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
நபி (சல்அவர்கள் காலம் முடிந்த பிறகு இந்த வாய்ப்பு இருக்கிறதா?
அறிவிப்பாளரின் வார்த்தையை தான் நம்ப வேண்டியுள்ளது.

அப்போதுசொன்னவர் நல்லவராசொன்னவர் உண்மை பேசுபவராஎன்கிற ஆய்வைஅடிப்படையாக கொண்டு தான் ஒன்றை உறுதி செய்ய இயலும்.

ஆகஅறிவிப்பவர் நேர்மையாளராக இருக்க வேண்டும் என்கிற அளவுகோல் இங்கேஅவசியமாகிறது.
நேர்மையாளர் என்றவுடன் 100% சதவிகிதம் தவறே செய்யாதவர் என்று அர்த்தமில்லை.
மனிதன் என்கிற முறையில் எல்லா தவறுகளும் இருப்பவராக தான் இருப்பார்.
எனினும்தன்னளவில் தவறுகள் செய்பவன் கூட பிறரை வஞ்சிக்கக் கூடாது என்கிறகொள்கையில் இருப்பான்பிறரிடம் மோசடி செய்யக் கூடாது என்கிற ஒழுக்கத்தோடுஇருப்பான்,முக்கியமாக நபியின் பெயரால் பொய்யுரைக்கக் கூடாது என்கிற அச்சத்துடன்இருப்பான்.
அத்தகையோர் தான் ஒரு ஹதீஸை அறிவிப்பதற்கு தகுதியானவர்கள்.

இந்த அளவுகோலை கூட இமாம் ஷுஃபா போன்றவர்கள் சுயமாக முடிவு செய்து விடவில்லை.
மாறாகஒரு செய்தியை நாம் அறிந்தால் கேட்டவுடன் அதை நம்பாமல் ஆய்வு செய்யவேண்டும்சொன்னவரின் நம்பகத்தன்மையை எடை போட வேண்டும் என்பதாக குர் ஆன்கூறுகின்ற பல்வேறு அளவுகோல்களை சான்றாக முன்வைத்து தான் இந்த விதியினைவகுக்கிறார்கள்.

 நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதி ருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (49:6)

இந்த வசனத்தில், ஒருவர் கொண்டு வரக்கூடிய செய்தியினை அப்படியே ஏற்றுக்கொண்டு விடாமல் இயன்றவரை விசாரித்துக் கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அது போல்,

உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை (17:36)

எந்த விஷயத்தில் போதுமான அறிவு நமக்கு இல்லையோ அதை பின்பற்றக் கூடாது எனும் போது, அறிவிப்பாளர் எதை சொன்னாலும் அதை கண்மூடித்தனமாய் பின்பற்றுவது தகாது என்று எளிதில் புரிந்து கொள்ளலாம்.


இதைக் கேள்விப்பட்ட போது 'இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு' என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா? (24:16)

ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பாக பரப்பப்பட்ட அவதூறு செய்தி குறித்து அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லும் போது, அதைப் பற்றிய ஞானமில்லாமல் பரப்பிய குற்றத்திற்காக அல்லாஹ் கடுமையாக கோபம் கொள்கிறான்.
உங்களுக்கு ஞானமில்லாத விஷயங்களை பரப்புவது அவதூறு என்று அல்லாஹ் இதில் சொல்வதிலிருந்தும், ஹதீஸ் எனக்கூறி அறிவிக்கப்படும் அனைத்தையும் தக்க ஞானமின்றி ஏற்கக் கூடாது என்று புரியலாம்.

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! (65:2)

விவாகரத்தின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று பொதுவாக அல்லாஹ் சொல்லாமல், நேர்மையான சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வதிலிருந்து, மனிதர்களின் நேர்மையை உரசிப் பார்ப்பதும், அதை கண்டறிவதும் அவசியம் என்று புரிகிறது
இதே கருத்தை கீழ்காணும் வசனமும் விளக்குகிறது.

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ரா முடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும்.  (5:95)

இதிலும் நீதமான இருவரிடம் தீர்ப்பு கேட்குமாறு அல்லாஹ் சொல்வதிலிருந்து மனிதர்களின் நிதமாக நடப்பவர் யார், நீதி தவறி நடப்பவர் யார் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிகின்றது.



நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்' என்று அவர் கூறினார். (27:27)

இவ்வசனத்தில், சுலைமான் நபியிடம் ஹூத் ஹூத் பறவை அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் ராணியின் செயல்கள் குறித்த செய்தி ஒன்றை கூறும் போது, அதை கூட உடனடியாக சுலைமான் நபி ஏற்கவில்லை.
மாறாக, நீ சொல்வது உண்மையா பொய்யா என்பதை நான் முதலில் ஆராய்வேன் என்றே கூறினார்கள். 

ஆகநபி (சல்அவர்கள் சொன்னதாக அறிவிப்பவர் நேர்மையாளர் என்று அறியப்பட்டால் தான்அதை சஹீஹ் அந்தஸ்த்துக்கு கொண்டு வருவார்கள்.

பொய்யர் என்று தெரிந்தாலோ அல்லது அவர் பொய்யரா நேர்மையாளரா என்கிற தகவலேகிடைக்காமல் இருந்தாலோ அவர் கூறுகின்ற ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்கிறபட்டியலில் சேர்க்க மாட்டார்கள்.


2. செய்தியை சரியான முறையில் உள்வாங்கி புரியக் கூடியவராக இருக்க வேண்டும்.

இதுவும் ஹதீஸ் விதிகளில் உள்ளது இரண்டாவது அளவுகோல்.

அறிவிப்பவர் நல்லவராகவும் நேர்மையாளராகவும் இருந்தாலும் கூடசொல்லப்படும்செய்தியை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு அவை போதுமான தகுதிகளாக ஆகாது.
நேர்மையாளர் கூட ஒன்றை தவறாக புரிந்து விடுவார்கேட்பதில் சில வார்த்தைகளைகவனக்குறைவால் தவற விடுவார்அதனாலும் கூட கருத்துக்கள் மாறிப்போய் விடலாம்.

ஆகசொல்லப்படும் செய்தி என்னவோ அதை அதே பொருளில் புரிந்து கொள்வது என்பதுஹதீஸ் அறிவிப்பாளரின் முக்கிய தகுதியாக இமாம்கள் நிர்ணயம் செய்கின்றனர்.

நாம் கூட இன்று சஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்கிறோம்.
ஆனால் அதை வெளியே பிரச்சாரம் செய்பவர்கள் எப்படி சொல்கிறார்கள்இவர்கள்சஹாபாக்களை திட்டுகிறார்கள் என்கிறார்கள்.
இது தான் அறிவிப்பாளரின் பலகீனம்.

எனவேபுரிதலில் கவனத்துடன் இருந்துசொல்லப்பட்ட செய்தியை முழுமையாகஉள்வாங்கக்கூடியவரா என்பதை அலசுவதை இரண்டாவது விதியாக வகுக்கின்றனர் இந்த இமாம்கள்.


3. அறிவிப்பாளர்களில் ஒருவருக்கொருவர் சங்கிலித் தொடர்பு இருக்க வேண்டும்.

இப்ராஹிம் என்கிற ஒருவர் வாயிலாக நான் இதை கேட்டேன் என்று இஸ்மாயில் என்பவர்சொன்னால்இந்த இஸ்மாயில் இப்ராஹிம் காலத்தில் வாழ்ந்தவர் தானாஎன்பதை சரி பார்க்கவேண்டும்.
அவர் காலத்தில் வாழாதவர் அவரிடம் கேட்டிருக்க முடியாது.
அதே போன்றுசம காலத்தில் வாழ்ந்தவராக இருந்தால் மட்டும் போதாதுஇருவரும் சந்தித்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு இப்ராஹிம் டில்லியிலும் இஸ்மாயில் சென்னையிலும் வாழ்ந்தவர்களாகஇருந்தால் இவர்கள் எப்போதேனும் சந்தித்திருக்கிறார்களாஇவர் டில்லிக்கு சென்றாராஅல்லது அவர் சென்னைக்கு வந்திருக்கிறாராஎன்றெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்.
அதே போல்இப்ராஹிமிடம் கேட்டதாக இஸ்மாயில் சொல்கிறார் என்றால் கேட்டு புரிவதற்குரிய வயதில் தான் இஸ்மாயில் இருந்தாராஎன்பதையும் சரி பார்க்க வேண்டும்.
இப்ராஹிம் சென்னைக்கு வந்த சமயத்தில் இஸ்மாயிலின் வயது 6 ஆக இருக்கும்,அப்படியானால் இவர் இப்ராஹிமிடம் செய்திகளை கேட்டிருப்பாராகேட்டு அறிவிக்கின்றமுதிர்ச்சியை அவர் அப்போது பெற்றிருக்கவில்லை என்கிற முடிவுக்கு வருவார்கள்.

ஆகஒரு அறிவிப்பாளர் நேர்மையானவர் என்று முடிவு செய்த பிறகுஅவர் தெளிவாக புரியக்கூடியவர் தானா என்பதை உறுதி செய்த பிறகுஅவர் பிறந்த வருடம்அவர் வாழ்ந்த காலம்,வாழ்ந்த பகுதிஎத்தனை வருடங்கள் வாழ்ந்தார்எந்த வயதில் இந்த செய்தியை அவர் கேட்டார்,என்றெல்லாம் பல அடுக்கு ஆய்வுகளை இமாம்கள் மேற்கொள்கின்றனர்.

இதில் எந்த ஒன்றிலாவது குறைவு ஏற்பட்டாலோ சங்கிலித் தொடரில் முறிவு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டாலோஒன்றுஏதேனும் ஒரு நபர் இடையில் விடுபட்டிருக்க வேண்டும்அல்லது இவர் பொய் சொல்லியிருக்க வேண்டும்இரண்டில் எதுவாக இருந்தாலும் இந்தஹதீஸ் சஹீஹாக இருக்க முடியாது என்கிற அடிப்படையில் அதை தள்ளி விடுவார்கள்.


4. அறிவிக்கப்பட்ட செய்திஅதை விட பலமான இன்னொரு செய்திக்கு முரணாக இருத்தல்கூடாது(ஷுதூத்)

இதுவும் முக்கியமான அளவுகோலாகும்.

ஒரு செய்தியை ஒருவர் அறிவிக்கிறார்.
அதற்கு முரணான ஒரு கருத்தை மூவர் அறிவிக்கிறார்கள் என்றால் மூவர் அறிவிப்பது தான்நம்பகத்தன்மையில் அதிகம் வலுவானவைகாரணம்மூன்று பேரிடம் குறை ஏற்படுவதைவிட ஒருவரிடம் குறை ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு அதிகம்.
ஆகஅந்த ஒருவர் நம்பகமானவராக இருந்தாலும்நேர்மையானவர் என்று அறியப்பட்டாலும்,தெளிவான சிந்தனை கொண்டவர் என்று உறுதி செய்யப்பட்டாலும்அதை விட வலுவாகஅறிவிக்கப்படும் மூன்று பேரின் செய்திக்கு இவரது கூற்று முரணாக இருப்பதால் இவரதுகூற்றை பலகீனம் என்று தள்ளி விடுவார்கள்.


இஸ்மாயில் என்கிற ஆசிரியர் வழியாக 5 மாணவர்கள் ஒரு செய்தியை அறீவிக்கிறார்கள் என்று வைப்போம்.
உதாரணத்திற்கும், இரவுத் தொழுகை 8 ரக்காஅத் தான் தொழ வேண்டும் என்று நபி (சல்) அவர்கள் சொன்னார்கள் என்பதாக இஸ்மாயில் என்பவர் அறிவிக்கிறார்.
அவரிடம் கேட்ட 5 மாணவர்களில் 4 மாணவர்கள், நபியவர்கள் 8 ரக்காஅத் தொழ சொன்னார்கள் என்று அறிவிக்கிறார்கள்.
ஒரேயொரு மாணவர் மட்டும் நபியவர்கள் 8 ரக்காஅத் தொழ சொல்லவில்லை என்று அறிவிக்கிறார் என்று வைப்போம்.

அறிஞர்களின் ஆய்வில் இஸ்மாயில் என்பவரும் நம்பகமானவர் தான், அது போன்று அவரது 5 மாணவர்களும் நம்பகமானவர்கள், நேர்மையானவர்கள் தான் எனும் போது,
நபி (சல்) அவர்கள் 8 ரக்காஅத் தொழ சொன்னார்கள் என்கிற செய்தியை தான் சஹீஹ் அந்தஸ்துக்கு கொண்டு வருவார்கள்.
8 ரக்காஅத் தொழ சொல்லவில்லை என்று ஒரேயொருவர் அறிவிக்கின்ற செய்தி, அவரை விட அதிகமான அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படும் செய்திக்கு மாற்றமாக இருப்பதால் அதை புறந்தள்ளி விடுவார்கள்.

இது தான் ஷுதூத் (ஷாத் வகை ஹதீஸ்) எனப்படும்.

இப்படியாக ஏராளமான ஹதீஸ்களை நாமும் சரி, நம்மை எதிர்க்கக் கூடிய மாற்றுக் கொள்கையுடையவர்களும் சரி, ஒதுக்கி வைத்துத் தான் இருக்கிறார்கள்.

ஷாத் வகை என்று சொல்லி ஒரு ஹதீஸ் புறந்தள்ளப்பட்டால், அதனுடைய பொருள், அந்த அறிவிப்பாள்ர் பலகீனமானவர் என்பதல்ல.
அவர் பலமானவர் தான். ஆனால், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் கவனக்குறைவாக இருந்திருக்கிறார், ஏனெனில், இவரை விட அதிக எண்ணிக்கையில் மற்ற அறிவிப்பாளர்கள் இவர் சொல்வதற்கு மாற்றமாக அறிவிக்கிறார்கள் என்பதால் அது தான் சரியாக இருக்கும்.
எனவே, இந்த அறிவிப்பாளரின் கருத்தை நாம் ஏற்க மறுக்கிறோம்.
இந்த ஒரு விஷயத்தில் தான் மறுக்கிறோமே தவிர, இதே அறிவிப்பாளர் அறிவிக்கும் வேறு வேறு ஹதீஸ்களை நாம் மறுப்பது கிடையாது.

ஆக, ஒருவர் அறிவிக்கும் செய்தி, 5 பேர் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக இருக்கின்ற காரணத்தால், அந்த ஒருவர், எவ்வளவு தான் நம்பகமானவராக இருந்தாலும் அதை புறந்தள்ளுகிறோமே, 
அப்படியானால், அந்த 5 பேர் அறிவிக்கும் செய்தியில் இருக்கும் நம்பகத்தன்மையை விட குர் ஆனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை அதிகமில்லையா?

ஒரு ஹதீஸுக்கு மாற்றமாக ஒட்டு மொத்த சமுதாயமும் அறிவித்திருக்கும் குர் ஆனில் ஒரு வசனம் இருந்தால் அதை காரணம் காட்டி இந்த ஒரு ஹதீஸை மறுப்பது மிகப்பெரிய் ஷாத் வகை இல்லையா?

நாம் குர் ஆனுக்கு ஒரு ஹதீஸ் மோதுகிறது என்று சொல்லும் போது மட்டும், அந்த ஹதீஸை அறிவிப்பவர் பொய்யரா? அவர் பலகீனமானவரா அவர் நரகத்திற்கு செல்வாரா? என்றெல்லாம் வாய் கிழிய கேட்பவர்கள்,
இதே கேள்வியை, இவர்களும் நாமும் அனைவருமே சேர்ந்து மறுக்கக்கூடிய ஷாத் வகை ஹதீஸ்களுக்கு கேட்டார்களா?


நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ்களை அறிவிப்பவர்கள் 5 பேரோ 10 பேரோ இருக்கட்டும்.
ஆனால் நபிக்கு சூனியம் செய்யப்படவேயில்லை, சூனியம் செய்யப்பட்டதாக சொல்பவர்கள் அ நியாயக் காரர்கள் என்பதாக அல்லாஹ் தமது திருமறையில் சொல்கிறானே, அந்த குர் ஆன் வசனத்தை அறிவிப்பவர்கள் ஒட்டு மொத்த சமுதயாமாச்சே, இப்போது எது அதிகம் வலுவானது?

சிந்தனையை இவர்கள் இப்படி செலுத்துவதை விட்டு விட்டு, அறிவிப்பாளர் நல்லவரில்லையா, அதை எப்படி ஏற்பது என்பதாக நுனிப்புல் மேய்கிறார்கள்.
குர் ஆனுக்குரிய மகத்துவமும், அதற்கான கண்ணியமும் இவர்களது உள்ளத்தில் சரியான முறையில் பதிந்திருந்தால் இது போன்ற வாதங்களை இவர்கள் வைத்திருக்க மாட்டார்கள்.

வெறுமனே, ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்கிறது என்கிற ஒரு காரணத்திற்காக மட்டும் சூனியம் போன்ற செய்திகளை ஏற்கத் தான் வேண்டும் என்று சொன்னால், அது போல தானே மேலே நாம் குறிப்பிட்ட ஷாத் வகை ஹதீஸ்களும் இருக்கின்றன?
அவைகளும் ஹதீஸ் நூற்களில் பதியப்பட்டு தானே இருக்கின்றன?
அவற்றையும் நம்பகமான அறிவிப்பாளர் தானே அறிவிக்கிறார்?

இந்த அடிப்படையை நாம் சிந்தினையில் செலுத்த வேண்டும்.

ஆக, ஹதீஸ்களை நாம் மறுக்கவில்லை, மறுக்கவும் கூடாது, ஹதீஸை மறுத்தால் நாம் காஃபிர்களாகி விடுவோம் என்கிற இஸ்லாத்தின் அடிப்படையில் நாம் மிகவும் கவனத்துடன் தான் இருக்கிறோம்.
பிரச்சனை எங்கே எழுகிறது என்று சொன்னால், சில ஹதீஸ்கள், அவற்றையெல்லாம் விட மிக மிக பலமான ஆதாரமான குர் ஆனோடு நேரடியாக மோதுகின்ற போது, குர் ஆனா ஹதீஸா? என்கிற கேள்விக்கு நாம் தேர்வு செய்ய வேண்டியது குர் ஆனைத் தான்.

குர் ஆனில் அல்லாஹ் சொல்லும் போது,

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராள மான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (4:82)

குர் ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பதற்கான ஆதாரமே இதில் எந்த முரண்பாடும் இருக்காது என்பது தான்.
குர் ஆனுக்கு முரணாக அல்லாஹ்வின் வஹீ செய்தி இருக்கவே இருக்காது.
இது தான் இஸ்லாத்தின் அடிப்படை.
முரண்படுவது போல் சில ஹதீஸ்கள் இருக்குமானால், அதை நிச்சயம் நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள், ஏனெனில், நபியின் பணி என்பது குர் ஆனை விளக்குவது தானே தவிர, குர் ஆனுக்கு முரண்பாடு கற்பிப்பதல்ல.
ஏதேனும் ஹதீஸ்கள் குர் ஆனுக்கு முரண்பட்டால், அதை அறிவிப்பவர் தான் எதாவது குறை விட்டிருப்பார், எங்காவது கவனக்குறைவுடன் செயல்பட்டிருப்பார்.

இது தான் நாம் புரிய வேண்டிய அளவுகோல். அல்லாமல், அந்த அறிவிப்பாளர் பொய்யரா? அந்த அறிவிப்பாளர் பாவியா? என்கிற கேள்விகளுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல மாட்டோம்.

நமது அடிப்படை குர் ஆன் தான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற காரணத்தால் தான் அதற்கு முரணான ஹதீஸ்களை மறுக்கிறோம்.
இவர்களோ, குர் ஆனுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட, அந்த ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகின்றனர்.

இவர்களுக்கு தான் குர் ஆனின் போதனைகள் அவர்களது தொண்டைக் குழியை விட்டும் கடக்கவில்லை என்று நபி (சல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

வில்லை விட்டும் அம்பு எந்த அளவிற்கு வேகமாக வெளியேறுமோ அதே போன்று இஸ்லாத்தை விட்டும் இவர்கள் வேகமாக வெளியேறுகிறார்கள் என்று நபி (சல்) அவர்கள் கூறுகிறார்கள்.
குர் ஆன் இவர்களது தொண்டைக் குழியை கடந்து, அதன் கருத்துக்களையும் மகத்துவத்தையும் உள்ளத்தால் உணர்ந்தார்களெனில், அவர்கள் இந்த ஹதீஸை ஏற்கவே மாட்டார்கள்.

இதை கூட, இவர்கள் நம்மைப் பார்த்து சொல்கின்றனர், நாம் தான் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறோம் என்று.
ஆனால், இந்த ஹதீஸே குர் ஆனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பற்றிப் பேசுகிறது.
குர் ஆனுக்கு யார் முக்கியத்துவம் கொடுப்பது ? நாமா அவர்களா?

நபியின் பெயரால் புனையப்பட்ட ஒரு ஹதீஸ், ஆபாசமாக இருந்தாலும், அருவருக்கத்தக்க விதத்தில் இருந்தாலும், குர் ஆனையும் நபி (சல்) அவர்களின் கண்ணியத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் இருந்தாலும், அதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம், அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று சொல்லப்பட்டு விட்டதல்லவா, ஹதீஸ் நூற்களில் பதிவாகி விட்டதல்லவா? எனவே அதை ஏற்கத் தான் செய்வோம் என்று சொல்பவர்கள் குர் ஆனை மதிப்பவர்களா?
அல்லது, குர் ஆனுக்கு முரணாக நம்பகமான அறிவிப்பாளர் என்று அறியப்பட்டவர் ஒன்றை சொன்னாலும், அதை ஏற்க மாட்டோம் என்று சொல்லக்கூடியவர்கள் குர் ஆனை மதிக்கின்றவர்களா?

என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம்மைப் பார்த்து ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள் தான் குர் ஆன் மறுப்பாளர்கள் !

அதே போன்று, அல்லாஹ் இன்னொரு வசனத்தில் சொல்லும் போது,

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்,அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.(16:44)

குர் ஆனை விளக்குவதற்கு தான் நபி (சல்) அவர்கள் வந்தார்கள் எனும் போது அவர்கள் ஒரு போதும் அதற்கு முரண்படும் வகையில் பேச மாட்டார்கள்.

நபிக்கு சூனியம் செய்ய முடியாது என்று குர் ஆன் சொல்கிறது.

அப்படியானால், எனக்கு சூனியம் செய்தார்கள் என்று நபி பேச மாட்டார்கள். அப்படிப் பேசுவது குர் ஆனை முரணாக்குவதாக ஆகுமே தவிர, குர் ஆனை விளக்கியதாக இருக்காது.

அதே போன்று,

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக் கோனிடமிருந்து அருளப்பட்டது. (41:42)

எந்த தவறும் இந்த குர் ஆனில் வராது என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லும் போது, குர் ஆனுக்கு முரணாக சில செய்திகளை எடுத்துக் காட்டி அவையும் மார்க்கம் தான், அவையும் அல்லாஹ் அருளியவை தான் என்று சொன்னால், குர் ஆனின் மகத்துவம் அங்கே குலைக்கப்படுகிறது என்றே பொருளாகிறது.

எனவே, குர் ஆனுக்கு முதல் மரியாதையை நாம் செலுத்த வேண்டும்.
அதன் பிறகே ஹதீஸ்.
ஹதீஸ் என்று சொல்லப்பட்ட அனைத்தையும் ஏற்காமல், எவை ஏற்கத்தகுந்தவை, எவை, இஸ்லாமிய போதனைக்கு, குர் ஆனின் போதனைக்கு முரணில்லாமல் இருப்பவை என்கிற அடிப்படைகளை முதலில் அலசிப் பார்த்து அதன் பிறகு தான் ஹதீஸ்களை ஏற்க வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், அறிவிப்பாளரைக் காரணம் காட்டியெல்லாம் நாமும் சரி, மற்றவர்களும் சரி, பல்வேறு ஹதீஸ்களை மறுக்கத்தான் செய்கிறோம்.
அறிவிப்பாளரைக் காரணம் காட்டி ஒரு ஹதீஸை மறுப்பது நியாயம் என்றால், குர் ஆனைக் காரணம் காட்டி மறுப்பது அதை விட பல மடங்கு அதிக நியாயமில்லையா?

இந்த அளவுகோலின் படி நாம் ஒரு ஹதீஸை மறுத்தால் நம்மை காஃபிர் என்கிறார்களே, இதே அளவுகோலை முன்னிறுத்தி எத்தனையோ அறிஞர்கள் பல ஹதீஸ்களை மறுத்துத் தான் இருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் இவர்கள் காஃபிர் ஃபத்வா கொடுக்கவில்லை !





5. நுணுக்கமான குறைபாடுகள்  (இல்லத்) இருக்கக் கூடாது.

இதுவும் ஹதீஸ் கலை விதிகளில் ஒரு முக்கியமான விதியாக இமாம்கள்கருதியிருக்கிறார்கள்.


வெளிப்படையாக தெரியக்கூடிய குறைகள் இருப்பது போல் நுணுக்கமான குறைகளும்இருக்கக் கூடாது என்கிற அளவிற்கு ஹதீஸ்களை வகைப்படுத்துவதில் அந்த அளவிற்கு கண்ணும் கருத்துமாய் இமாம்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம்.

நுணுக்கமான குறைகளையும் கண்டறிந்து அதன் பிறகு தான் ஒரு ஹதீஸ் அறிவிப்பாளரை நம்பகமானவர் என்றும் ஒரு ஹதீஸை சஹீஹ் எனவும் பதிய வேண்டும் என்று அறிஞர்கள் முடிவு செய்கின்றனர்.
ஆனால், நுணுக்கமான குறைகளைப் பொறுத்தவரை, நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளை அறிஞர்பெருமக்கள் கொண்டிருக்கின்றனர்.
எனினும், சில சான்றுகளை இங்கே காண்போம்.

அப்துர் ரஹ்மான் பின் யசீத் என்கிற அறிவிப்பாளர் வழியாக பலர் அறிவித்தாலும், அவையெல்லாம் ஆதாரப்பூர்வமாக இருக்கின்றன, ஆனால் ஹம்மாத் பின் உசாமா என்பவர், அப்துர் ரஹ்மான் வழியாக கேட்டு அறிவிப்பது மட்டும் பலகீனம் என்கிற பட்டியலில் வருகிறது.

ஆழமாக ஆராயும் போது தான் காரணம் புரிகிறது.
சில நுணுக்கமான குறையை அறிஞர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

அதாவது, அப்துர் ரஹ்மான் பின் யசீத் என்கிற பெயரில் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள்.

ஜாபிரின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத்
அது போல், தமீமின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத்.

இவ்விருவரில் ஜாபிரின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத் தான் பலமானவர்,
தமீமின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத் பலகீனமானவர்.

அப்படியிருக்க, மற்ற அனைவருமே ஜாபிரின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத் மூலமாகவே செய்திகளை அறிவிப்பு செய்திருக்க, ஹம்மாத் பின் உசாமாவோ, ஜாபிரின் பேரன் என்று தவறாக எண்ணி, தமீமின் பேரனிடம் செய்திகளை அறிந்திருக்கிறார்.

இதை அறிஞர்கள், பல கட்ட ஆய்வுகளின் மூலம் கண்டறிகிறார்கள். இந்த ஜாபிரின் பேரன் அந்த ஊருக்கு வரும் போது எவரெல்லாம் உடனிருந்தார்கள், அப்போது இந்த உசாமா என்பவர் உடன் இருந்தாரா? என்பதையெல்லாம் வைத்து, ஹம்மாத் பின் உசாமா அறிவிப்பது ஜாபிரின் பேரன் சொன்ன அறிவிப்பை அல்ல, மாறாக தமீமின் பேரன் சொன்னவற்றை தான் என்கிற முடிவுக்கு வருகிறார்கள்.

இது தான் நுணுக்கமான குறை என்பது.

மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

இப்ராஹிம் என்கிற ஒரு அறிவிப்பாளர் வழியாக (உதாரணத்திற்கு), இஸ்மாயில் என்பவர் ஒன்றை அறிவிக்கிறார் என்றால், ஹதீஸ் கலையின் மூன்றாவது விதிப்படி, இருவருக்கிடையில் சங்கிலித் தொடர் இருக்கிறதா என்பதை அறிஞர் ஆராய்வார்கள்.
இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்களா, இருவரும் ஒரே ஊரில் வாழ்ந்தவர்களா என்பதையெல்லாம் வைத்தே ஒரு அறிவிப்பை ஏற்பார்கள்.
ஆனால், அறிஞர்கள், இத்தகைய செய்திகளில் கூட இன்னும் ஆழமாக சென்று நுணுக்கமான ஏதும் குறைகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.

இப்ராஹிமும் இஸ்மாயிலும் ஒரே ஊரில் வசித்தவர்களாக இருந்தாலும், இவர் அவர் வசிக்கும் பகுதிக்கோ, அவர் இவர் வசிக்கும் பகுதிக்கோ என்றைக்காவது சென்றிருக்கிறார்களா? என்பது வரை ஆராய்ந்து பார்க்கிறார்கள்.

ஒரே ஊரில் இருந்து கொண்டு கூட ஒருவருக்கொருவர் சந்திக்காமல் இருக்க சாத்தியக்கூறுகள் இருக்கும் போது அத்தகைய நிலை ஏதும் கண்டறியப்பட்டால் அவற்றை நுணுக்கமான குறை என்கிற பட்டியலுக்கு கொண்டு வருகிறார்கள்.

அதே போல்,

இதே இப்ராஹிமும் இஸ்மாயிலும் ஒருவருக்கொருவர் சந்தித்தவர்களாக இருந்தாலும் கூட, அதிலும் கூடுதல் ஆய்வை செய்கிறார்கள்.
இப்ராஹிம் என்பவர் தமது 65 ஆவது வயது வரை சுய அறிவுள்ளவராக இருந்தார் எனவும், 65 வயதுக்கு பிறகு மூளை குழம்பிப் போய் விட்டது எனவும் தகவல் இருந்தால், இஸ்மாயில் என்பவர் இந்த தகவலை இப்ராஹிமிடமிருந்து பெற்றது இப்ராஹிமின் 65 ஆவது வயதிற்கு முன்னரா அல்லது அதற்கு பின்னரா என்று ஆய்வு செய்கிறார்கள்.

65 வயதுக்கு பிறகு தான் அவரிடம் இந்த தகவல் கேட்கப்பட்டது என்று தெரிய வந்தால் அப்போதும் இதை நுணுக்கமான குறை என்கிற பட்டியலில் கொண்டு வந்துவிடுவார்கள்.

ஆக, மேலோட்டமாக காணும் போது சஹீஹான அறிவிப்பாளர்களைப் போன்றும் சஹீஹான ஹதீஸைப் போன்றும் தோன்றினாலும், ஆழமாக அலசிப் பார்க்கும் போது பல நுணுக்கமான குறைகள் (இல்லத்) வெளியாகும்.
இல்லத் என்கிற பட்டியல் கொண்ட நூலைக் கூட அறிஞர் பெருமக்கள் இதற்கென தயாரித்து வைத்திருக்கிறார்கள்.










ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறு


 "இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே" 
சகோ. பிஜெவி இந்த வருட தொடர் உரையிலிருந்து எடுக்கப்பட்டது



வஹீ மட்டும் தான் மார்க்கம் என்பதை விளக்கமாக அறிந்திருக்கும் நாம்அந்த வஹீயின் ஒருபகுதியான ஹதீஸ்களைப் பொறுத்தவரைசிலவற்றை வஹீ என்று ஏற்கிறோம்சிலவற்றைவஹீ இல்லையென கூறி நிராகரிக்கிறோம்.

நாமும் இதை செய்கிறோம்எல்லா கொள்கையுடையவர்களும்எல்லா இயக்கத்தவரும் இதைசெய்கின்றனர்.

ஏதேனும் காரணங்களை மையப்படுத்தி சில ஹதீஸ்களை வஹீ இல்லை எனக் கூறிபுறந்தள்ளிக் கொண்டிருக்கிறோம்.
இவை ஆதாரப்பூர்வமானவைஇவை பலகீனமானவை என்றெல்லாம் ஹதீஸ்கள்விஷயத்தில் பிரித்தறியும் நாம் குர் ஆனில் அவ்வாறு பிரிப்பது கிடையாது.

குர் ஆனைப் பொறுத்தவரைசஹீஹான வசனங்கள்லயீஃபான வசனங்கள் என்றுவேறுபடுத்தவே முடியாது.
குர் ஆன் வசனங்கள் அனைத்துமே சஹீஹ் தான்.
இந்த வேறுபாட்டினை முதலில் அறிந்து கொள்வதே இந்த தலைப்பை சரியாக புரிந்து கொள்ளஉதவுகின்ற அடிப்படையாக அமையும்.

நபி (சல்அவர்கள் இன்று நம்முடன் வாழ்ந்திருந்தாலோ அல்லது நபி (சல்அவர்கள் வாழ்ந்தகாலத்தில் நாம் இருந்திருந்தாலோ மேற்கண்ட குழப்பங்கள் ஹதீஸ்கள் விஷயத்தில்எழுந்திருக்காது.

காரணம்நபி (சல்அவர்கள் என்ன சொன்னார்களோ அதை நேரடியாக நாம் காதுகளில்கேட்டிருப்போம்.

நேரடியாக நாம் ஒன்றை நபி (சல்அவர்களிடம் கேட்டு விட்டால்குர் ஆனைப் போல் அதையும்கருதி பின்பற்றியாக வேண்டும்ஏனெனில் அது வஹீ.
ஆனால்நபி (சல்அவர்களின் காலத்திற்கு பிறகுநபி (சல்அவர்கள் சொன்னதாக நாம் ஒருவிஷயத்தைப் பற்றி அறிகிறோம் என்றால் நபியிடம் கேட்டதாக ஒருவர் சொல்லஅவரிடம்கேட்டதாக அடுத்த தலைமுறையில் ஒருவர் சொல்லஇவரிடம் கேட்டதாக இவருக்குப் பிறகுவந்த தலைமுறையில் ஒருவர் சொல்லஇறுதியில் ஒருவர் அதை எழுதி வைத்துக்கொள்கிறார்.
அப்படியானால்உண்மையில் இந்த செய்தி நபி (சல்அவர்கள் சொன்னது தானாஅல்லதுஅவர்களது பெயரைப் பயன்படுத்தி இடைச்செருகல் ஏதும் நடந்திருக்கிறதா என்பதை உறுதிசெய்யும் கடமை நமக்கு வந்து விடுகின்றது.

இஸ்லாத்தை அழித்தொழிப்பதற்காக கங்கணம் கட்டி செயல்பட்ட எதிரிகள் எல்லாகாலத்திலும் இருந்தனர் எனும் போதுஇஸ்லாதிற்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கில் நபி (சல்)அவர்கள் சொல்லாததையெல்லாம் அவர்கள் சொன்னதாக பொய்களை கூறும் நிலைஇருந்தது.
அவ்வாறு சொல்லியும் இருக்கிறார்கள்.
அந்த விபரத்தை நாம் பின்னர் காண இருக்கிறோம்.

ஆகபொய்களும் சரியானவைகளும் கலந்து வருகின்ற போதுஎவை நபி சொன்னதுஎவை நபிசொன்னது இல்லை என்று வேறுபடுத்தி அறிய வேண்டிய கட்டாயத்தின் பால் நாம்தள்ளப்படுகிறோம்.

நபி சொன்னதை மறுப்பதற்கில்லைமாறாக நபி சொன்னார்களா இல்லையா என்பதைஅறிவதற்கு தான் இதை செய்கிறோம்.

காரணம்ஹதீஸ்கள் அனைத்தும் ஒருவர் அல்லது இருவர் வழியாக தான்அறிவிக்கப்படுகின்றன.
குர் ஆனைப் பொறுத்தவரைஇத்தகைய குழப்பம் இல்லைகாரணம்அதை அறிவித்தது ஒட்டுமொத்த தலைமுறை.
நபி (சல்)அவர்கள் காலத்தில் அவர்கள் எதை குர் ஆன் என்று சொன்னார்களோ அதை ஒட்டுமொத்த சஹாபாக்களும் அங்கீகரித்து அதை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றார்கள்.
சஹாபாக்களுக்குப் பிறகு வந்த தபியீன்கள் அனைவருமே ஒட்டு மொத்தமாக அதை குர் ஆன்என அங்கீகரித்து அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றனர்.
இப்படியாக தலைமுறை தலைமுறையாக குர் ஆன் என்பது நம் கைகளில் கிடைத்திருக்கிறதுஎனும் போதுஇதில் கடுகளவு சந்தேகமும் இல்லை.
நபி (சல்அவர்களிடம் நாமே நேரடியாக கேட்டால் எந்த அளவிற்கு நம்பகமான செய்தியாகஇருக்குமோ அந்த அளவிற்கு குர் ஆனில் எந்த சந்தேகமும் இல்லை.

அதே சமயம்ஹதீஸ்களைப் பொறுத்தவரைநபி (சல்அவர்கள் ஒன்றை சொல்லும் போதோஅல்லது செய்து காட்டும் போதோ அவ்விடத்தில் 4, 5 சஹாபாக்கள் மட்டும் இருந்தால் அவர்கள்மட்டுமே அந்த ஹதீஸை அறிவார்கள்.
அறிந்த அந்த சஹாபாக்களாவது உடனடியாக எல்லாரிடமும் சென்று, "இன்றைக்கு நபி (சல்)அவர்கள் மூலம் இந்த ஹதீஸை நான் கேட்டேன்என்று சொல்லிக் கொண்டிருப்பாரா?என்றால் அப்படியும் இல்லை.

அவர் கேட்பார்அதோடு அவர் வியாபாரம்மற்ற பணிகள் என சென்று விடுவார்.
பிற்காலத்தில் அவர் தனிப்பட்ட முறையில் வாழ்க்கையில் ஏதும் பிரச்சனைகளை சந்திக்கின்றபோதுஇதற்கு நபி (சல்அவர்கள் இப்படியொரு தீர்வை சொல்லியிருக்கிறார்கள்நான்கேட்டிருக்கிறேன்", என்று அந்த சமயத்தில் சொல்வார்.

அந்த நேரத்தில் தான் இப்படியொரு ஹதீஸ் இருப்பதே பலருக்கும் தெரியவரும்.

ஆகநபி (சல்அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களைப் பொறுத்தவரைஅதைஅறிவித்த அறிவிப்பாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால்தலைமுறை கடந்து அறிவிக்கப்பட்டு நூற்களில் பதிவு செய்யப்படும் போது இது உண்மையில்நபி (சல்அவர்கள் சொன்னது தானா அல்லது பொய்யர்கள் எவராவது இடையில் நுழைந்துவிட்டார்களாஎன்பதை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.



எந்த அமைப்பாக இருந்தாலும் சில ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானது என்றும் வேறு சில ஹதீஸ்களை பலகீனமானது எனவும் சொல்லத்தான் செய்கின்றனர்.

இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை அறிவதற்கு ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாற்றினை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.



அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்ட குர் ஆன் வசனங்களைப் பொறுத்தவரை அதை பாதுகாக்கும் பணிகளில் நபி (சல்) அவர்களே நேரடியாக ஈடுபட்டிருந்தனர்.
வஹீ செய்தி வரும் போதெல்லாம் அதை மனப்பாடம் செய்து கொள்ளும் பொறுப்பினை பல சஹாபாக்களிடம் ஒப்படைந்திருந்தார்கள்.

அதே போன்று, வருகின்ற வஹீ செய்திகளை எழுதி வைக்கும்படியும் சில சஹாபாக்களிடம் கூறியிருந்தார்கள்.

இது தான் நபி (சல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அனைவரிடமிருந்த பிரதிகளும் ஒன்றுபடுத்தப்பட்டு, ஒப்பீடு செய்யப்பட்டு இறுதியில் குர் ஆனாக தொகுக்கப்பட்டது.

ஆக, குர் ஆனானது உள்ளத்திலும் எழுத்திலும் பாதுகாக்கப்பட்டிருந்தது.

அதே சமயம், ஹதீஸ்களைப் பொறுத்தவரை இத்தகைய பாதுகாப்பு முறைகளை நபி (சல்) அவர்கள், அவர்கள் வாழும் காலத்தில் செய்து கொள்ளவில்லை.
அதை மனப்பாடம் செய்து கொள்ளச் சொல்லி எவரிடமும் சொல்லவில்லாஇ, எழுதி வைக்க சொல்லி கட்டளையேதும் பிறப்பிக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால், குர் ஆனோடு ஹதீஸ் கலந்து விடக் கூடாது என்கிற காரணத்தை சுட்டிக் காட்டி, ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்ளாதீர்கள் என்றே கட்டளையிட்டார்கள்.
(பார்க்க புஹாரி 7702).
செய்திகளை வாய் வழியாக அறிவித்துக் கொள்ள அனுமதித்த நபி (சல்) அவர்கள், அவற்றை எழுதிக் கொள்ள அனுமதிக்கவில்லை. காரணம், குர் ஆனை எழுதிக்கொண்டிருந்த சஹாபாக்கள் ஹதீஸ்களையும் எழுதினால் இறுதியில் எது குர் ஆன் எது ஹதீஸ் என்று குழப்பம் ஏற்பட்டு விடும் என்பதே அதற்கு காரணம்.

அதே சமயம், குர் ஆனை எழுதும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாத சஹாபி ஒருவருக்கு ஒரு ஹதீஸை எழுதிக் கொடுக்க அனுமதித்தும் இருக்கிறார்கள்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது அவர்கள் மக்கா மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, 'அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை)விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) இறைநம்பிக்கையாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை. 
இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கிறதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெறலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்" என்று கூறினார்கள். அப்பாஸ்(ரலி), 'இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இத்கிர் புல்லைத் தவிரத்தான்" என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ்(ரலி) என்பவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்" என்று உத்தரவிட்டார்கள்.  (புஹாரி 2434)

மற்றொரு ஹதீஸில்,

நபி (சல்) அவர்களிடம் எந்த செய்தியை நான் கேட்டாலும் அதை எழுதிக் கொள்வேன் என்பதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்  (ரலி) அவர்கள் சொன்ன செய்தி அபுதாவுத் 3646 இல் பதிவாகியுள்ளது.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் எதையெல்லாம் கேட்டார்களோ அதை மட்டும் எழுதிக் கொண்டார்கள், அவர் கேட்காத எத்தனையோ ஹதீஸ்கள் இருக்கும், அவற்றையெல்லாம் அவர் எழுதிக் கொள்ளவில்லை.

அதே போன்று, அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

என்னை விட அதிகமாக வேறு எவருமே ஹதீஸ்களை அறிவித்ததில்லை என்கிறார்கள்.
இது புஹாரி 113 இல் பதிவாகியிருக்கிறது.

ஆக, குர் ஆன் என்பது நபி (சல்) அவர்களின் காலத்திலேயே நெறிப்படுத்தப்பட்டு நிறைவுபடுத்தப்பட்டு விட்டது.
அதில் எதுவும் சேர்க்கப்படவும் இல்லை, குறைக்கப்ப‌டவும் இல்லை.
அதே நேரம், ஹதீஸ்களைப் பொறுத்தவரை அப்துல்லாஹ் இப்னு அம்ர் போன்ற ஒரு சில சஹாபாக்கள் எழுதிக் கொண்ட ஒரு சில ஹதிஸ்களைத் தவிர்த்து மீதமுள்ள அனைத்துமே வாய் வழியாக வந்தவை தான்.

இதன் காரணமாகவே, பிற்காலத்தில் வந்த அறிஞர்கள், வாய் வழியாக கிடைக்கப்பெறும் ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கு வருகின்றனர்.
அதில் முதலாவதாக இந்த திட்டத்தை செயல்படுத்த துவங்கியவர் இப்னு ஜுரைஜ் எனும் அறிஞர்.
ஹிஜ்ரி 150 இல் மரணித்ததாக வரலாற்றில் பதிவாகியிருக்கும் இந்த அறிஞர் தான் ஹதீஸ்களை எழுத்தில் தொகுக்கும் பணியினை துவக்கினார்.
ஆனால், அந்தப் பணிக்காக இவர் எங்கும் பயணம் செய்து செய்திகளை சேகரிக்கவில்லை. மாறாக இவர் வாழ்ந்த மக்கா நகரத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் என்னன்ன செய்திகள் நபி (சல்) அவர்கள் சொன்னதாக வியாபித்திருந்ததோ அவற்றை மட்டுமே எழுதிக் கொண்டார்.
அதில் கூட நபி (சல்) அவர்கள் சொன்ன விஷயங்களை மட்டும் எழுதி வைத்தாரா என்றால் இல்லை.
நபி (சல்) அவர்கள் சொன்னது, சஹாபாக்கள்  தங்கள் சுய கருத்துக்களாக சொன்னவை என அனைத்தையும் கலந்தே எழுதினார்.
ஆக, குறைந்த அளவிற்கே என்றாலும், முதன்முதலாய் ஹதீஸ்களை எழுத்தில் தொகுக்கும் பணியை செய்தது இந்த இப்னு ஜுரைஜ் என்பவர் தான்.

அதே போன்று, ஹிஜ்ரி 153 இல் மஃமர் பின் ராஷித் என்கிற அறிஞர், ஹிஜ்ரி 156 இல் சயித் அபி அவ்பா,  ஹிஜ்ரி 160 இல் ஷுஃபா,  ஹிஜ்ரி 163 இல் சுஃப்யான் அல் தவ்ரி, ஹிஜ்ரி 179 இல் மரணித்த‌ மாலிக் இமாம், ஹிஜ்ரி 188 இல் ஜரீர், ஹுசைன் போன்ற அறிஞர்கள், இப்னு ஜுரைஜை ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்ளும் பணியை இப்னு ஜுரைஜ்ஜிற்கு பிறகு தொடர்ந்து செய்து வந்தவர்களாவர்.

ஆனால், அனைவருமே ஹதீஸ்களை சேகரிக்கும் பொருட்டு எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை.
சஹாபாக்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் சென்று செய்திகளை சேகரிக்காமல், அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் நபி (சல்) அவர்கள் சொன்னவை என்று எவையெல்லாம் அவர்கள் காதுகளுக்கு எட்டுகின்றதோ அவற்றை மட்டுமே எழுதி வைப்பவர்களாக இருந்தனர்.

ஆனால், இவற்றில் பெரும்பான்மையான நூற்கள் இன்று இல்லை. காலப்போக்கில் அழிந்தே போயின.
அவை இன்று இருந்திருந்தால், அவை மிகவும் வலுவான ஹதீஸ்களாக நமக்குக் கிடைத்திருக்கும்.
காரணம், அதை தொகுத்த அனைவருமே நபி (சல்) அவர்களது காலத்திற்கு மிகவும் நெருக்கமாக வாழ்ந்தவர்கள் என்கிற வகையில் பல அறிவிப்பாளர்கள் கொண்ட சங்கிலித் தொடர் அவர்கள் தொகுத்த ஹதீஸ்களுக்கு இருக்காது.
ஆனால், அத்தகைய ஹதீஸ்கள் அனைத்தும் இன்று அழிந்து விட்டன.

இதைத்  தொடர்ந்து, ஹிஜ்ரி 200 க்குப் பிறகு தொடர்ச்சியாக வந்த அறிஞர்கள் பலரும் தொகுத்த ஹதீஸ் நூற்கள் இன்றைக்கும் காணக் கிடைக்கின்றன.

ஹிஜ்ரி 200 இல் வந்தவர்கள் இமாம் ஷாஃபி. 204 இல் தயாலிஸ் இமாம், 211 இல் அறிஞர் அப்துர் ரசாக் , அலி, இப்னு அபி ஷைபா, அஹமத், தாரமி என ஏராளமான அறிஞர்கள் ஹிஜ்ரி 200க்குப் பிறகு தோன்றியவர்கள்.
இவர்களோ, ஹதீஸ்களை தொகுப்பதற்காகவே பலகட்ட பயணங்களை மேற்கொண்டு சஹாபக்கள் பல்கிப்பெருகியிருந்த உலகின் அதிகமான பாகங்களுக்கு சென்று ஹதீஸ்களை சேகரிக்கும் மிகப்பெரிய முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆக, ஹிஜ்ரி 200க்கு முன் தொகுக்கப்பட்ட ஹதீஸ்களானது குறைந்த அளவிற்கே இருந்தன.
அவரவர் வாழ்ந்த பகுதிகளில் மக்கள் பரவலாக பேசிக் கொண்ட செய்திகள் மட்டுமே பதியப்பட்டன.
அத்தகைய நூற்களில் அதிகமானவை இன்று அழிந்தும் போயின.

ஆனால், ஹிஜ்ரி 200க்குப் பிறகோ, ஹதீஸ்களை தொகுக்கின்ற பணியோ இன்னும் விரிவுப்படுத்தப்பட்டது.
பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்டன. அவை இன்றளவும் காணக்கிடைக்கவும் செய்கின்றன.

இந்த வரிசையில் ஹிஜ்ரி 256இல் வந்தவர் தான் இமாம் புஹாரி.
இமாம் அஹமத் இப்னு ஹம்பலின் மாணவரான இவர் தான், அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் ஆதாரப்பூர்வமானவை எவை, பலகீனமானவை எவை என்று தரம்பிரித்து, ஆதாரப்பூர்வமானவற்றை மட்டும் தான் பதிய வேண்டும் என்கிற முடிவினை எடுக்கிறார்.

அதே போன்று, ஹிஜ்ரி 261 முஸ்லிம் இமாம், ஹிஜ்ரி 75 இல் இப்னு மாஜா, 279 இல் திர்மிதி, 303 இல் பஸ்ஸார், 313 இல் இப்னு குசைமா, 354இல் இப்னு ஹிப்பான், 385 இல் தப்ரானி, 405இல் தாரகுத்னி, 430 இல் ஹாகிம், 488 இல் பைஹகி என நபி (சல்) அவர்களின் காலத்திற்கும் 100 வருடங்கள் கழித்து துவங்கப்பட்ட ஹதீஸ்களை தொகுத்தெழுதும் இந்த பணியானது கிட்டத்தட்ட ஹிஜ்ரி 550 ஆண்டு வரை நீடித்தது.

இந்த காலத்தில் தான் உண்மையான ஹதீஸ்களுடன் பல்வேறு பொய்களும் நபியின் பெயரால் அதிகமதிகமாக கட்டவிழ்த்து விடப்பட்டன.