செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பெண் குழந்தை ஒரு பாக்கியம்




பெண் குழந்தை பிறப்பதை விரும்பாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். பெண் குழந்தை என்றாலே அது ஒரு பாரம்,குடும்ப தலைவருக்கு பொருளாதார சுமை என்று எண்ணுகிற மக்கள், அத்தகைய சிந்தனை இஸ்லாத்திற்கு வெளியில் நின்று கொண்டு தான் நமது உள்ளத்தில் ஏற்பட வேண்டுமே தவிர, ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு இத்தகைய எண்ணமே நம் மனதில் எழக்கூடாது என்பதை உணர வேண்டும்.

இந்த உலகில் ஐம்பது வருடமோ அறுபது வருடமோ வாழ்ந்து விட்டு மரணிக்கும் நாம், இயன்ற வரை மறுமை வெற்றிக்காக பல காரியங்களை செய்கிறோம். தொழுகிறோம் நோன்பு நோற்கிறோம், ஏழைகளுக்கு உணவளிக்கிறோம் சகாத் வழங்குகிறோம், இன்னும் ஏராளமான நல்லறங்களை செய்கிறோம்.
இதை செய்வதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது ஒன்றே ஓன்று தான். அது மறுமையில் அல்லாஹ் நம்மை அன்பு பார்வை பார்க்க வேண்டும். அல்லாஹ் நம்மை நல்லவன் என்று அங்கீகரிக்க வேண்டும்.
இந்த எண்ணத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்தக்கூடிய நாம், அல்லாஹ்வும் அவன் தூதரும் எதையெல்லாம் செய்யுமாறு சொல்லியுள்ளார்களோ , அதை இயன்றவரை செய்யக்கூடியவர்களாகவும் எதை விட்டெல்லாம் தவிர்ந்து கொள்ள சொல்கிறார்களோ அதை எல்லாம் விட்டு தூரமாகி கொள்பவர்களாகவுமே தான் நாம் வாழ வேண்டும்.

இந்த உலகில் ஒரு சில நல்லமல்களை செய்து விட்டு மரணித்து விடும் நாம், நமது மரணத்திற்கு பிறகும் நமக்கு நன்மையை ஈட்டு தரக்கூடிய ஒன்றை இந்த உலகில் விட்டு செல்கிறோம் என்றால் அது நமது குழந்தைகள் !


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே நின்று விடுகின்றன. 
1. நிலையான தர்மம். 2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி. 3. அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள்.
முஸ்லிம் 3358

எந்த குழந்தையாக இருந்தாலும், அவர்களை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால், நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், சொர்க்கத்தில் ஒரு அடியானின் தகுதியை உயர்த்துவான். யா அல்லாஹ், இது எனக்கு எப்படி கிடைத்தது? என்று அவன் கேட்கும் போது, உனக்காக உன் குழந்தை பாவ மன்னிப்பு கேட்டது அதனால் தான், என்று அல்லாஹ் விடையளிப்பான்.
அஹ்மத் 10202 

அத்தகைய பாக்கியம் நமக்கு கிடைப்பதற்கு நாம் எந்த வகையிலாவது உழைக்க வேண்டுமா பாடுபட வேண்டுமா?? எதுவும் இல்லை, நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தாலே போதும்.

குழந்தைகள் நமக்கு கிடைத்த பாக்கியமாக நாம் கருத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கும் போது, பெண் குழந்தைகளை நாம் வெறுப்பது என்பது, நபியை விட்டு நாம் விலகி செல்கிறோம் என்பதையே காட்டும்.


இவ்வாறு தாங்கள் பெற்ற பெண் குழந்தைகளை கண்டு வெறுப்பு அடைகிற பெற்றோர்களை அல்லாஹ் கடுமையாக சாடுகிறான்.


அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (6:140)

என்று கண்டிக்கிற அல்லாஹ், இன்னொரு வசனத்தில் 

அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்கு கூறப்பட்ட கேட்ட செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து வாழ்கிறான்.இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா அல்லது மண்ணில் புதைத்து விடுவதா? (என்று எண்ணுகிறான்). கவனத்தில் கொள்ளுங்கள் அவன் தீர்பளிப்பது மிகவும் கேட்டது. (16:58)

என்று கூறுகிறான்.

பெண் குழந்தைகளை வெறுப்பதோ அதனால் கவலைப்படுவதோ, அதை இழிவானதாக கருதுவதோ, அதை கொலை செய்து விடவதோ அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவமான காரியமாக இருக்கிறது.

இதை கண்டிப்புடன் சொன்ன அல்லாஹ், பெண் குழந்தை பிறந்த செய்தியை பற்றி சொல்கிற போது அது ஒரு நற்செய்தி என்கிறான் !!

பெண் குழந்தைகளை வெறுப்பவர்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் நமக்கு பாரமாக இருக்கும் என்றால், அல்லாஹ் அதை நற்செய்தி என்று சொல்வானா?? அப்படியானால் நிச்சயம் அதில் ஏதோ ஒரு நற்செய்தி இருக்கத்தான் செய்யும்.

ஹதீஸ்களில் இதற்கு விடை கிடைக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் முஸ்லிம் 5127


முதல் ஹதீஸில், நல்ல சாலிஹான குழந்தைகள் நமக்காக பிரார்த்தனை செய்வதன் மூலம் சொர்க்கத்தில் நம் அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், இந்த ஹதீஸில், பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே நாம் சொர்கத்திற்கு செல்வதற்கு காரணமாகி விடுகிறது என்பதை விளக்குகிறார்கள் என்றால், நாம் எந்த அளவிற்கு பெண் குழந்தைகளை அன்புடனும் பாசத்துடனும் வளர்க்க வேண்டும் என்பதை புரிய வேண்டும்.

இந்த பெண் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்று கொள்கிறார்களோ, அவர்கள் நரகம் சென்று விடாமல் தடுக்கும் தடையாக இந்த குழந்தை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 5995

அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்த கூடிய ஒரு முஸ்லிம், என்றைக்கும் தனது குழந்தைகளை, அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அன்புடனும் பாசத்துடனும் வளர்த்து, அதன் மூலம் சொர்க்கம் செல்லவே ஆசைப்பட வேண்டும்.

பொருளாதார சுமை அதிகரிக்கும் என்று எண்ணி கூட நமது பெண் குழந்தைகளை கொன்று விடகூடாது.

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் என்று அல்லாஹ் 17:31 வசனத்தில் எச்சரிக்கிறான். 

இந்த எச்சரிக்கையோடு சேர்த்து நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்கிற வாக்குறுதியையும் தருகிறான். 

நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்று அவன் வாக்குறுதி தந்து விட்ட பிறகு, அதை பொருட்படுத்தாமல் நாம் செயல்படுவது அல்லாஹ்வின் வாக்குறுதியை கூட நாம் மதிக்காதது போல ஆகும் என்பதையும் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பெண் குழந்தைகளை நமக்கு கிடைத்த பாக்கியமாக கருதி வளர்ப்போம், மறுமையில் வெற்றி பெறுவோம்.


வியாழன், 21 பிப்ரவரி, 2013

வட்டி கட்டாமல் க்ரெடிட் கார்ட் பயன்படுத்தலாமா??


காலக்கெடு முடிவதற்குள் பணத்தை அடைத்து விடுவோம் என்றால் கிரடிட் கார்ட் பயன்படுத்துவதில் என்ன தவறு என்று சிலர் கேட்கிறார்கள்.


காலக்கெடுவுக்குள் பணத்தை செலுத்தி விட்டால் வட்டி வராது என்பது உண்மை தான். 
ஆனால், க்ரெடிட் கார்ட் பயன்படுத்தக்கூடாது என்பதற்கு காரணம் வட்டி செலுத்த வேண்டியுள்ளது என்பதால் மட்டுமல்ல. வட்டி செலுத்தாமல் காலக்கெடுவுக்குள் பணத்தை செலுத்தி கொண்டே வருவதாக இருந்தாலும் கூட இது தடுக்கப்பட்டது தான்.

இதற்கு காரணம், இஸ்லாம் கடன் வாங்குவதை மிகவும் கடுமையான முறையில் பார்க்கிறது.. மிக நெருக்கடியான நிலை இருந்தாலே தவிர, நாம் கடன் வாங்க கூடாது.
அப்படியே கடன் வாங்கி விட்டால் அதை திருப்பி செலுத்துவதில் நாம் மிகவும் முனைப்பு காட்ட வேண்டும்.

ஒரு முறை ஒரு ஜனாஸா நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுகிறது, அவர் கடனாளியாக மரணித்திருக்கிறார் என்று அறிந்த உடன், இவர் நாளை பாவியாக எழுவார் என்பதால் நான் இவருக்கு பவ மன்னிப்பு கேட்கும் வகையில் ஜனாசா தொழுகை கூட தொழ மாட்டேன் என்று கூறி விட்டார்கள் நபி (ஸல்) அவர்கள். பார்க்க புஹாரி 2295

அதாவது, கடனாளியாக நாம்  மரணித்தால், நமது கடனை தள்ளுபடி செய்து நம்மை மன்னிப்பதற்கு கடன் தந்தவர் தயாராகவில்லை என்றால்  நாளை மறுமையில், நமது நல்லமல்கள் அனைத்தும் அந்த கடன் கொடுத்தவருக்கே தந்து விட வேண்டிய துர்பாக்கியமான நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.!

இதுவெல்லாம், உயிர் போகிற அவசரத்திற்கு கடன் வாங்குவோரின் நிலை பற்றிய செய்திகள்.
ஆனால் இன்றைக்கு க்ரெடிட் கார்ட் மூலம் உயிர் போகின்ற அவசரங்களுக்கா கடன் பெறுகிறோம்?? இல்லவே இல்லை. கோடீஸ்வரனும் கூட க்ரெடிட் கார்ட் பயன்படுத்துகிறான். தனது மணி பர்சில் கட்டுகட்டாக பணத்தை வைத்திருப்பவன் கூட, அதை கொடுத்து பொருளை வாங்காமல், நமக்கு தான் இந்த அட்டை இருக்கிறதே, என்று எண்ணி, அதை வைத்து பொருட்களை வாங்கி செல்கிறான். 

ஏழைகள் கடனை வாங்கி திருப்பி செலுத்தாமல் இறந்தால் அவர்களையே அல்லாஹ் மன்னிக்க மாட்டான் எனும் போது செல்வந்தர்கள் இந்த விஷயத்தில் எந்த அளவிற்கு அச்சத்துடன் செயல்பட வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், செல்வந்தர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தவணை கேட்டு இழுத்தடிப்பது அநியாயமாகும்.
புஹாரி 2287

ஆக, எந்த காரியத்தில் இஸ்லாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி நம்மை எவுகிறதோ, 
அதை மிகவும் சாதாரணமான ஒன்றாகவும், எந்த முக்கியத்துவமும் அற்றதாகவும் ஆக்கும் மாபாதக செயலை செய்யும்படி இந்த க்ரெடிட் கார்ட் மோகம் நம்மை தூண்டுகிறது. 

இன்னும் சொல்லப்போனால், நமது நண்பரிடமோ உறவினரிடமோ நாம் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிலையில் நாம் மரணித்து விட்டால், நம் மீது கொண்ட அன்பின் காரணமாக அந்த கடனை அவர் தள்ளுபடி செய்து விட வாய்ப்புள்ளது.  
அதுவே க்ரெடிட் கார்ட் மூலம் கடன் பெற்று அதை திருப்பி செலுத்துவதற்கு முன் நாம் மரணித்து விட்டோம் என்றால் கடன் தந்த வங்கி நம்மை மன்னித்து விடும் என்பதற்கு ஏதேனும் உத்திரவாதம் உள்ளதா??  நிச்சயம் இல்லை !!!

அந்த வங்கிக்காரன் காபிராகவே இருந்தாலும் கூட, நாளை மறுமையில், அவனுக்கும் அல்லாஹ் நீதி வழங்குவானே, அந்த நீதி, நமது நல்லமல்கள் எல்லாம் வீணாகி போகின்ற அளவிற்கு அமையுமே? என்பதையெல்லாம் நாம் சிந்தித்து பார்த்து இதிலிருந்து முற்றிலுமாக விலகி கொள்ள வேண்டும்.

மேலும், இன்னொரு கோணத்தில் சிந்தித்தாலும் இந்த க்ரெடிட் கார் என்பது தவிர்க்க பட வேண்டிய ஒன்று தான் என்பதை புரியலாம்.

க்ரெடிட் கார்ட் வியாபாரத்தை செய்கிற வங்கிகள், நுகர்வோரை கைவசம் வைத்துக்கொள்வதற்கு பல வகையான யுக்திகளை கையாண்டு வருகிறது. 

முன் பணம் ஏதும் அவசியமில்லை என்பார்கள், தங்கள் வங்கியில் கணக்குகள் ஏதும் நம் பெயரில் உருவாக்க வேண்டியதில்லை என்பார்கள்.
அந்த வரிசையில் தான், பணத்தை திருப்பி செலுத்துவதற்கு அவர்கள் தருகிற காலக்கெடுவும். ஒரு மாதம் கழித்து பணம் கட்டினால் போதும் என்று ஒரு வங்கி சொன்னால் இன்னொரு வங்கி, இரண்டு மாதம் என்று சலுகை தரும்.

இது போன்ற சலுகைகளை அவர்கள் தருவதினுடைய நோக்கம் என்ன என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். காலக்கெடுவை நீட்டி தரும் போது ஒரு சராசரி மனிதனை இன்னும் அதிகமாக பொருட்கள் வாங்கிக்கொள்வதற்கு அதுவே ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும். 

அவர்கள் தந்துள்ள காலக்கெடுவிற்குள் நாம் பணத்தை திருப்பி செலுத்தி விட்டோமேயானால் நாம் செலவு செய்த பணத்தை மட்டும் கட்டினால் போதும். அதுவே கெடு முடிந்து கட்டுகிறோம் என்றால் நாம் செலவு செய்த பணத்துடன், கூடுதல் பணத்தை அபராதம் என்று கூறி செலுத்த வேண்டும். இந்த அபராதப்பணம் என்பது வட்டி.

இந்த வட்டியை நாம் கட்டினால் தான் க்ரெடிட் கார்ட் வியாபாரம் செய்கிற வங்கிக்கு இலாபம். அபராதம் இன்றி, குறித்த நேரத்திற்குள் நாம் பணத்தை கட்டிக்கொண்டே இருந்தால் வங்கிக்கு எந்த லாபமும் இல்லை. 

நாம் செலுத்தும் வட்டி தான் அவனுக்கு கிடைக்கும் லாபம் எனும் போது இத்தகைய வட்டியை லாபமாக எதிர்பார்க்கும் ஒரு வியாபாரத்திற்கு நாம் துணை நிற்கலாமா?? என்று சிந்தித்தாலும் இது அறவே தவிர்க்கப்பட வேண்டிய ஒரு காரியம் என்பதை விளங்கலாம்.

இது எனது புரிதல் மட்டுமே, தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.


புதன், 20 பிப்ரவரி, 2013

சூனியம் - ஆய்வு தொகுப்பு



சூனியம் என்பது வெறும் தந்திர வித்தை தானே தவிர அது புற சாதனங்கள் ஏதும் இன்றி நிகழ்த்தப்படும் அற்புதம் கிடையாது என்கிற உண்மையை நாம் பிரசாரம் செய்து வருகிறோம். சில ஹதீஸ்கள் இந்த கருத்துக்கு மாற்றமாக இருந்தாலும் குர் ஆனின் உறுதியான நிலை இது தான் என்பதால் அத்தகைய ஹதீஸ்களை நிறுத்தி வைத்து, குர் ஆனுக்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் சொல்லி வருகிறோம்.

இந்நிலையில், சூனியம் தொடர்பாக குர்ஆன் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை சுருக்கமாக தொகுப்பது அனைவருக்கும் பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.

முதலில், சூனியம் என்பது அற்புதம் தான் என்று சொல்பவர்கள் குர் ஆனில் இருந்தே எடுத்து காட்டும் ஆதாரம் 2:102 வசனம் தான்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றி னார்கள். (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்பட வில்லை.  ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத்  என்ற ஷைத்தான்களே  மறுத்தனர். 'நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவைனை) மறுத்து விடாதே!' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததை யும் கற்றுக் கொண்டார்கள். 'இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா? (2:102)


மேற்கண்ட வசனத்தில் அவர்கள் முதலில் எடுத்து வைக்கும் வாதமானது, ஹாரூத் மாரூத் என்பவர்கள் ஷைத்தான்கள் அல்ல, அவர்கள் மலக்குகள் தான் என்பதாகும்.

இது அந்த வசனத்தின் இலக்கண நடைபடியும் தவறு என்றாலும் அதை விட, இந்த வாதம் இஸ்லாத்தின் நம்பிக்கையையே ஆட்டம் காண செய்வதாகும்.

மலக்குகள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுபவர்கள், அல்லாஹ்வுக்கு பொருத்தமில்லாத எந்த காரியங்களிலும் ஈடு பட மாட்டார்கள் என்று அல்லாஹ் வேறு பல வசனங்களில் சொல்கிறான். (பார்க்க 66:6 , 21:26)

இல்லை, இதை அல்லாஹ்வே மலக்குகளிடம் கட்டளையிட்டிருக்கலாம் அல்லவா? என்று சிலருக்கு கேள்வி எழும். அதவும் தவறான வாதம் தான்.

அல்லாஹ் ஒருவன் தான், அவனுக்கு நிகராக எவருமே உலகில் இல்லை என்பதையே தனது முக்கிய அறிவுரையாக அல்லாஹ் குர்ஆன் நெடுகிலும் கூறி வருகிறான், இணை வைப்புக்கு  எதிரிகளிடம் எந்த ஆதாரமும் இருக்காது என்றும் அல்லாஹ் சொல்கிறான். அப்படி குர் ஆனில் பல இடங்களில் அல்லாஹ்வே சொல்லி விட்டு, அதற்கு மாற்றமாக மலக்கை விட்டு ஷிர்க்கையே அல்லாஹ் ஏவுவானா?? என்கிற ரீதியில் சிந்தித்தால், அல்லாஹ் ஏவியிருப்பான் என்று கூறுவதும் அல்லாஹ்வுக்கு எதிரான யுத்தம் தான் என்பதை விளங்கலாம்.

இனியும் அல்லாஹ் தான் ஏவினான் என்று இவர்கள் கூற வருவார்கள் என்றால், அந்த வசனத்தின் மொழி அமைப்பே இவர்களுக்கு அடுத்த பதிலை சொல்கிறது.

அந்த வசனத்தில் அல்லாஹ் சொல்வது என்ன? இவர்கள் மொழியாக்கத்தின் படியே அல்லாஹ் சொல்வது என்ன?? சுலைமான் நபி அல்லாஹ்வை மறுக்கவில்லை..சூனியத்தை கொண்டு வந்த மலக்குமார்கள் தான் மறுத்தார்கள்.. என்று பொருளாகிறது. இது சரியான அர்த்தமாக வருமா?? 

சுலைமான் நபி எப்படி அல்லாஹ்வுக்கு கட்டுப்படுபவர்களோ அதை விடவும் அதிகமாக மலக்குமார்கள் கட்டுப்படுபவர்கள். ஆனால் இவர்களின் மொழியாக்கத்தின் படி மலக்குமார்கள் என்றால் சுலைமான் நபிக்கு எதிரானவர்கள் என்கிற கருத்து தான் மிஞ்சுகிறது.

ஹாரூத் மாரூத் என்பது மலக்குகள் அல்ல, அவர்கள் மனித உருவில் வந்த ஷைத்தான்கள் தான் என்பதை இன்னும் ஏராளமான சான்றுகளுடனும், இலக்கண ரீதியிலும், வேறு வேறு இறை வசனங்களின் நடையுடன் ஒப்பீடு செய்தும் தெளிவாக அறிந்து கொள்ள இந்த ஆக்கத்தின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள கட்டுரையை வாசிக்கவும் .

அடுத்ததாக, இந்த வசனத்தில் இருந்து இவர்கள் வைக்கும் வாதம், கணவன் மனைவியை பிரிப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அதற்கு மிகப்பெரிய அற்புதங்கள் செய்ய வேண்டும் அதை தான் இந்த வசனம் சொல்கிறது என்கிறார்கள்.

இந்த வாதம் இவர்களது கொள்கைக்கே முரணாக தான் நிற்கிறது. கணவன் மனைவியை பிரிப்பதற்கு என்ன வேலையை செய்ய வேண்டுமோ அதை செய்வது தான் சூனியம் என்பதில் இருந்தே சூனியம் என்பது, மாய மந்திரங்கள், என்றோ அல்லது இங்கிருந்தே கொண்டே வெளியூரில் உள்ளவனின் கை கால்களை முடக்கி விடும் சக்தி கொண்டது, இங்கிருந்து கொண்டே வேறு நபரை எந்த தொடர்பும் இல்லாமல் இயக்கவல்லது, என்றெல்லாம் சொல்லப்படும் வாதங்கள் இவர்கள் வாயாலேயே நொறுங்கி விட்டன.

இவர்களே ஒப்புக்கொண்டுள்ள படி, சூனியம் என்பதினுடைய அதிகபட்ச ஆற்றல் என்பது கணவன் மனைவியை பிரிப்பது தான். சாதாரண கோள் மூட்டி இருவரிடையே மனக்கசப்பை உண்டாக்கலாம்.. 
இன்னும் கொஞ்சம் தேர்ந்த நபர் நமக்கு சொல்லி தரும் போது நிரந்தரமாகவே பிரித்து விடலாம். 
இது ஒரு ஷைத்தானிய செயல். நமது மனதில் தோன்றும் கெட்ட எண்ணங்கள் ஷைத்தானின் தூண்டுதல். எப்படி செய்தால் சரியான முறையில் பேசி கணவனையும் மனைவியையும் ஏமாற்றலாம் என்கிற வித்தை ஷைத்தானால் நமக்கு உள்ளத்தில் போடப்படுகிறது.. இதை தான் இந்த வசனம் சொல்கிறது, இதற்கும், எந்த புற சாதனங்களும் இல்லாமல் இங்கிருந்து கொண்டே ஒருவனது கைகளை முடக்கலாம் என்பதற்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா??


அடுத்ததாக, இவர்கள் இந்த வசனத்தில் இருந்து வைக்கும் வாதம், இதை கற்று இறைவனை மறுத்து விடாதே என்று அல்லாஹ் சொல்கிறான். சூனியம் என்பது அல்லாஹ்வுக்கு இணையான காரியம் என்பதால் தான் இதை அல்லாஹ் சொல்கிறான் 
கணவன் மனைவி இடையே கோள் மொத்துவது தான் சூனியம் என்றால் கோள் மூட்டுவது அந்த அளவிற்கு பாரதூரமான காரியமா? என்று கேட்கிறார்கள்.

இது இவர்களது முந்தைய வாதத்திற்கே முரணாக உள்ளது.

அல்லாஹ் தான் சூனியத்தை ஏவினான் என்று முதலில் சொன்னார்கள்.. அதுவும் பரிசுத்த மலக்குமார்கள் மூலமாக அதை ஏவி, அந்த மலக்குமார்களே அல்லாஹ்வை மறுத்து விட்டனர் என்றார்கள்..

அப்படி சூனியத்தை அல்லாஹ்வே ஏவி விட்டு, இதை நம்பி விடாதே என்று அல்லாஹ் சொல்வானா? என்று சிந்திக்கையில் இதுவும் தவறான வாதம் என்று புரிகிறது.

ஒரு விஷயத்தை நம்பாதே, நம்பினால் அது இறை நிராகரிப்பு என்று அல்லாஹ் சொன்னால் அதற்கு அது தான் பொருள். அது எந்த விஷயமானாலும் அல்லாஹ் சொல்லி விட்டால் அது இறை நிராகரிப்பு தான்.  இப்படி நம்புவது தான் நமது ஈமானுக்கு பாதுகாப்பானது.

வெறும் கோள் மூட்டுவதால் அதை இறை நிராகரிப்பு என்று அல்லாஹ் சொல்லவில்லை, நன்றாக விளங்கி கொள்ளுங்கள். அல்லாஹ் இதை இறை நிராகரிப்பு என்று சொல்வதற்கு காரணம், கணவன் மனைவி இடையே கோள் மூட்டும் இந்த காரியத்தை ஷைத்தான்களிடம் இருந்து கற்று, ஷைத்தானின் வார்த்தையை சரி என்று நம்பியதால் இறை நிராகரிப்பு என்கிறான்.

சுலைமான் நபி அல்லாஹ்வை மறுக்கவில்லை. அதற்கு மாற்றமாக, அல்லாஹ்வை யார் மறுத்தார்களோ அவர்களின் கூற்றை நம்பி செயல்பட்டதால் அதை இறை நிராகரிப்பு என்று அல்லாஹ் சொல்கிறான்.

இன்னும் சொல்லப்போனால் ஷைத்தானின் காரியங்களிலேயே மிகவும் பெருமைக்குரிய காரியமாக அவன் கருதுவது கணவன் மனைவி இடையே பிரிவினையை உருவாக்குவது தான். இதற்கு பல ஹதீஸ்களில் சான்றுகள் உள்ளன.
(பார்க்க முஸ்லிம் 5419)

அந்த வகையில் சிந்தித்தாலும், எந்த காரியம் ஷைத்தானுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றோ, அதை அவன் ஒருவனிடத்தில் ஏவி, ஏவப்பட்டவன் அதை நம்பிக்கை கொண்டு விட்டால் அவன் ஷைத்தானை நம்பி அல்லாஹ்வை நிரகாரித்தவன் ஆகிறான். 

ஆகவே வெறுமானே கோள் மூட்டுவது இறை நிராகரிப்பு ஆகி விடுமா? என்கிற இவர்களது கேள்வியும் அர்த்தமற்றது ஆகி விட்டது.


அடுத்ததாக இந்த வசனத்திலிருந்து இவர்கள் வைக்கும் இன்னொரு வாதம், அல்லாஹ் நாடாமல் இந்த சூனியத்தால் எதுவும் செய்ய முடியாது என்று அல்லாஹ் சொல்கிறான். 
இதன் மூலம், சூனியம் என்பது அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கும் என்று நம்ப வேண்டும் என்கிறார்கள்.

இதுவும் நுனிப்போல் மேய்வதால் வெளிப்படக்கூடிய சிந்தனை தான்.

அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் சூனியத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றால் சூனியம் என்கிற ஒன்றே இல்லை என்பதற்கு தான் அது சான்று !!!

சூனியம் என்பதே பொய், அது ஒரு கற்பனை, அதனால் யாருக்கும் எதுவும் செய்ய முடியாது என்கிற செய்தியை சொல்வதற்கு அல்லாஹ் அருளிய வசனத்தை எப்படி அல்லாஹ்விடமே திருப்பி விடுகிறார்கள் பாருங்கள் இவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக யுத்தம் செய்பவர்கள் அல்லாமல் வேறு யார்???

ஒரு உதாரணத்தை பார்ப்போமே. பூனை குறிக்கே சென்றால் சகுனம் சரியில்லை, அன்று உனக்கு ஏதேனும் துர்பாக்கியம் நிகழும் என்று ஒருவர் சொல்கிறார். அவருக்கு பதில் சொல்கிற நாம், அட முட்டாளே இப்படி எல்லாம் நம்பாதே, உனக்கு அல்லாஹ் நாடியதை தவிர வேறு எதுவும் யாராலும் செய்ய முடியாது என்று நம்பு.. என்று சொன்னால் இதன் பொருள் என்ன?

பூனை குறுக்கே செல்வதற்கும் உனக்கு துர்பாக்கியங்கள் நிகழ்வதற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பொருளாகுமா?? அல்லது அல்லாஹ் நாடினால் பூனை குறிக்கே செல்வதன் மூலம் உனக்கு துர்பாக்கியம் ஏற்படும் என்று பொருளாகுமா???

அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் வாதம் வைப்பவர்கள் தான இந்த சூனியத்தை நம்பிய முஷ்ரிக்குகள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

சரி, இது தான் இவர்கள் வாதம் என்றால், குர் ஆனில் வரக்கூடிய இன்னொரு வசனத்தை இதே போல இவர்கள் பொருள் செய்வார்களா??

அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். 'அல்லாஹ் எனக்கு நேர் வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?' (6:80)


இந்த வசனத்தில், சிலை வணங்கிகள் இப்ராஹீம் நபியிடத்தில் தங்கள் சிலைகளை அவர்கள் உடைத்ததால் ஆத்திரப்பட்டு இந்த சிலை உமக்கு தீங்கு செய்யும் என்று கூறினார்கள். அதற்கு மறுப்பு சொன்ன இப்ராஹிம் நபி, இந்த சிலை ஒன்றும் எனக்கு தீங்கு செய்யாது, என் இறைவன் நாடினாலே தவிர எதுவும் எனக்கு தீங்கீழைக்காது என்று சொன்னார்கள்.

இந்த வசனத்தின் படி, சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை, அதனால் இப்ராகிம் நபிக்கு தீங்கிழைக்க முடியாது என்று இவர்கள் சொல்வார்களா? அல்லது அல்லாஹ் நாடினால் சிலைகள் தீங்கு செய்யும் என்கிற கருத்து வரும் என்று கூறுவார்களா?? 

ஆக, எந்த வகையிலும் சூனியம் என்பது மாய மந்திரங்கள் தான் என்பதற்கு இவர்கள் வைக்கும் வாதங்கள் எதுவுமே ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்பதை விளங்கலாம். 

அப்படியானால் அந்த வசனத்தின் உண்மையான பொருள் தான் என்ன?

2:102 வசனம் சொல்வது சூனியம் என்கிற ஒன்று உள்ளது, அதன் மூலம் கணவன் மனைவியை பிரிக்கலாம். அதாவது, கணவன் மனைவியை பிரிப்பதற்கு பொய்யை கூட உண்மை போல அழகாக பேசும் தந்திர வித்தை தான் இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்கிற சூனியம் என்பது.

பேச்சில் கூட சூனியம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி புஹாரி 5146 இல் பதிவாகியுள்ளது.

பேச்சின் நளினத்தை கொண்டு யாரையும் ஏமாற்றலாம், பொய்களை உண்மையை போல் சொல்லி அவரை வென்றெடுக்கலாம்.. இந்த வகை சூனியத்தை தான் உச்சபட்சமாக ஒருவனால் செய்ய முடியும்.இவ்வாறு பொய்யை உண்மை போல காட்டி கணவன் மனைவியை பிரித்தால் அது அல்லாஹ்விடம் கடும் குற்றம்..

இது அல்லாமல், சூனியம் என்றால் எந்த புற சாதனங்களும் இன்றி இன்னொருவரை செயல் இழக்க வைக்கலாம் என்று நம்புவதையோ, எந்த துணையும் இல்லாமல் மந்திரத்தில் ஒருவரை உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிப்படைய செய்ய முடியும் என்று சொல்வதையோ இந்த வசனம் திட்ட வட்டமாக மறுக்கிறது.

சூனியம் என்று இவர்கள் சொல்கிற ஒன்றை தெளிவாக மறுக்கும் வசனத்தை தங்களுக்கு சாதகமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் இந்த நுனிப்புல் ஆய்வாளர்கள்.

அடுத்ததாக சூனியம் தொடர்பாக இவர்கள் இன்னொரு அற்புத (?) கேள்வியையும் கேட்கின்றனர். அதாவது, சூனியம் என்பதே கிடையாது என்று சொன்னால், சூனியம் பெரும்பாவம் என்றெல்லாம் ஹதீஸ்களில் வருகின்றதே, அவற்றுக்கு என்ன பொருள்?? இல்லாத ஒரு விஷயம் எப்படி பெரும்பாவம் ஆகும்?? என்று கேள்வி எழுப்புகிறார்கள்..

இதுவும் அடிப்படையற்ற ஒரு வாதமாகும். சூனியம் என்கிற ஒன்றே கிடையாது என்று யாரும் சொல்லவில்லை. சூனியம் என்பது உண்டு, அது ஒரு தந்திர வித்தை தானே தவிர மாய மந்திரங்கள் இல்லை என்பது தான் நமது வாதம். பேச்சு கூட சூனியம் என்று நபி சொல்லித்தான் இருக்கிறார்கள், கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்படுத்துவதற்கு கூட சூனியம் பயன்படும் என்று அல்லாஹ்வே சொல்கிறான். எனும் போது சூனியம் என்கிற ஒன்றே கிடையாது என்று எந்த முஸ்லிமாவது சொல்வானா???

சூனியம் என்பது உண்டு ஆனால் இவர்கள் சொல்லும் அர்த்தத்தில் உள்ள சூனியம் அல்ல. மாய மந்திரங்கள், அற்புதங்கள் என்கிற அர்த்தத்தில் சூனியம் என்பது உலகில் இல்லை, கியாமத் நாள் வரை அதை காட்ட இயலாது.

அதே சமயம், தந்திரங்கள் செய்து ஒருவரை ஏமாற்றுகிறோமே, அத்தகைய வித்தைகள் உண்டா? என்றால் உண்டு. அப்படிப்பட்ட வித்தைகளை வெறும் தந்திரம் என்று சொல்லி செய்யாமல் அற்புதங்கள் என்று சொல்லி ஒருவன் செய்தால் அது மிகப்பெரிய பாவம் என்று தான் ஹதீஸ்களில் சொல்லப்படுகின்றன.

சூனியம் தொடர்பாக குர் ஆனில் இன்னும் ஏராளமான இடங்களில் அல்லாஹ் பேசுகிறான்.. அந்த வசனங்களின் பொருள் என்பதையும் நாம் தெரிந்து கொண்டால் மேலே நாம் விளக்கியவைகள் இன்னும் தெளிவாகும்.

மூஸா நபியின் வரலாற்றை அல்லாஹ் குர் ஆன் நெடுகிலும் விளக்கியுள்ளான்.. அதில் மூசா நபிக்கு பல அற்புதங்களை அல்லாஹ் வழங்கியிருந்ததையும் அவர்களை எதிர்த்த பிர்அவ்ன் கூட்டத்தார் அதை முறியடிப்பதற்கு சூனியம் செய்ததாகவும் அல்லாஹ் பல்வேறு வசனங்களில் கூறுகிறான்.

ஆனால், சூனியம் என்று அல்லாஹ் பயன்படுத்திய எல்லா வசனங்களிலும் அது ஒரு கண் கட்டி வித்தை என்கிற அர்த்தத்தில் தான் அல்லாஹ் பேசுகிறான்.

மூஸா நபி அற்புதங்கள் செய்ததை பற்றி அல்லாஹ் சொல்வதையும் அவருக்கு எதிரான சூனியக்காரர்கள் செய்ததை பற்றி அல்லாஹ் சொல்வதையும் ஒப்பீடு செய்து பார்த்தாலே சூனியம் என்பதன் பொருள் என்ன என்பதை விளங்கி கொள்ளலாம்.

மூஸா நபி கைதடியை கீழே போட்டார்கள்.. அது பாம்பாக மாறியது என்று அல்லாஹ் 7:107 வசனத்தில் சொல்கிறான்.

மூஸா நபிக்கு போட்டியாக களம் இறங்கிய எதிரிகள் செய்த சூனியத்தை பற்றி அல்லாஹ் சொல்லும் போது 

அவர்கள் கைதடியை இட்டது பாம்பு போல தோற்றமளித்தது என்று 20:66 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
மூஸா நபியின் எதிரிகள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று 7:116 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

அதாவது, மூஸா நபி செய்தது, உண்மையில் நடந்ததாக சொன்ன அல்லாஹ், அவர்களது எதிரிகள் செய்ததை பற்றி சொல்கிற போது அது அவ்வாறு தோற்றமளித்தது, கண்களை ஏமாற்றியது என்கிற வார்த்தைகளை தான் உபயோகிக்கிறான்.. இதிலிருந்தே, சூனியக்காரர்கள் கண் கட்டி வித்தை தான் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

மேலும், மூசா நபி அற்புதங்கள் செய்து காட்டிய போது அதை மறுப்பதற்கு எதிரிகள் பயன்படுத்தியதும் இதே சூனியம் என்கிற வாசகத்தை தான்.
பார்க்க 28:36

சூனியம் என்பது உண்மையிலேயே மிகப்பெரிய அற்புத காரியம் என்று இருக்குமானால் ஒரு நபி செய்த அற்புதத்தை மறுப்பதற்கு சூனியம் என்கிற வார்த்தையை எதிரிகள் பயன்படுத்தியிருப்பார்களா??  நிச்சயம் மாட்டார்கள். காரணம், அற்புதத்தை அற்புதமில்லை என்று நிரூபிப்பது தான் அவர்களது நோக்கம். சூனியம் என்றாலே அற்புத செயல் என்பது தான் பொருள் என்றால் அதை சொல்லி மூஸா நபியின் செயலை விமர்சிப்பது அவர்கள் செய்ததை மறுப்பது போல் ஆகாது, மாறாக அற்புதம் தான் என்று ஒப்புக்கொள்வது போல தான ஆகும்.

இன்னும் தெளிவாக, இறைவான் புறத்தில் இருந்து தரப்பட்ட இந்த அற்புதத்தை எதிரிகள் சூனியம் என்று கூறி மறுத்த போது மூசா நபி அவர்களுக்கு சொன்ன பதில், இந்த கருத்தை இன்னும் உறுதி செய்கிறது.

மூஸா நபி அவர்களுக்கு பதில் சொல்லும் போது உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதை சிஹ்ர் (சூனியம்) என்கிறீர்களா?? என்று கேட்கிறார்கள். பார்க்க 10:77

இந்த வசனம் நமக்கு எதை உணர்த்துகிறது? மூஸா நபி செய்தது உண்மையான அற்புதம். அதை மறுக்க எதிரிகள் அதை சூனியம் என்றார்கள்.. அதற்கு தான் மூசா நபி கேட்கிறார்கள், நான் உண்மையை காட்டுகிறேன் நீங்கள் சூனியம் என்கிறீர்களா?? என்று. அதாவது, இந்த இடத்தில உண்மைக்கு எதிர்பதம் சூனியம்.

அல்லாஹ்வின் புறத்தில் நிகழ்த்தப்பட்ட அற்புதம் உண்மை ! அதை மறுத்து, அது வெறும் சூனியம் என்று சொல்வது பொய்!
அதற்கு போட்டியாக எதிரிகள் செய்த சூனியமும் பொய் !!

இன்னும் சொல்லப்போனால், எல்லா நபிமார்களையும் எதிரிகள் சூனியக்காரர்கள் என்று கூறியே விமர்சனம் செய்தார்கள். 

மூஸா நபியை சூனியக்காரர் என்று சொன்னார்கள் 48:24

ஈசா நபியை சூனியக்காரர் என்று சொன்னார்கள் 61:6

முஹம்மது நபியை சூனியக்காரர் என்று சொன்னார்கள் 10:2


இன்னும் ஏராளமான வசனங்களில் நபிமார்களை எதிரிகள் சூனியக்காரர் என்றே விமர்சனம் செய்தனர். சூனியம் என்பது உண்மையில் செய்ய இயன்ற மிகப்பெரிய அற்புத காரியம் என்று இருக்குமானால் இந்த வார்த்தையை பயன்படுத்தி நபிமார்களை அவர்கள் விமர்சனம் செய்திருக்க மாட்டார்கள். 
குர் ஆனை கொண்டு அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்ட போதும் கூட, இவர் சூனியக்காரர் என்று தான் அவர்கள் கூறினார்கள் என்றால், நீ குர்ஆனை மிகப்பெரிய அற்புதமாக காட்டுகிறாய், அது அற்புதமெல்லாம் இல்லை, ஏதோ தந்திர வித்தை தான் செய்கிறாய் நீ, என்று அவர்கள் சொல்லி குர் ஆனை நிராகரித்தார்கள் என்பது தான் இதன் மூலம் நாம் புரிய வேண்டிய விஷயம்.


சிலர், நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ்களை ஏற்கலாமா? என்று கேட்கிறார்கள். 

நிச்சயமாக ஏற்க கூடாது. சூனியத்தை நம்புவது என்பது மிகப்பெரிய பாவம் என்றும் அது எந்த வகையிலும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் , நன்மையையும் தீங்கும் அல்லாஹ்வின் புறத்தில் இருந்தே மட்டும் தான் வரும் என்றும் அல்லாஹ் குர் ஆனில் தெளிவாக சொல்லியுள்ள போது அதற்கு முரணான செய்திகள் ஒரு சில ஹதீஸ்களில் வருமானால் அந்த ஹதீஸ்களில் ஏதேனும் தவறுகள் நடந்திருக்கும் என்று கருதி அவற்றை நிறுத்தி வைத்து குர் ஆனை தான் நாம் மேன்மைப்படுத்த வேண்டும்.

சூனியத்தால் (புற சாதனங்கள் இன்றி செய்யப்படும் மாய மந்திரங்கள் மூலம் ) மனிதனுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது என்று அல்லாஹ் பல்வேறு இடங்களில் கூறுகிறான்.

அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது.  2:102

என்று அல்லாஹ் சொல்வதில் இருந்தே, சூனியத்தால் யாருக்கும் எந்த தீங்கையும் ஏற்படுத்த இயலாது என்று புரியலாம்.

யாருக்குமே சூனியம் செய்ய முடியாது என்று அல்லாஹ் சொல்லியிருக்கும் போது, நபிக்கு சூனியம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்வது எந்த வகையிலாவது சரியா? என்பதை சிந்தித்து பார்கையில் இது அல்லாஹ்வின் வசனங்களை கேலி செய்யும் போக்கு தான் என்பதை புரியலாம்.

இன்னும் சொல்லப்போனால், முகமது நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவேயில்லை என்று தெள்ள தெளிவான வார்த்தைகளை கொண்டு அல்லாஹ் குர் ஆனில் அறிவிப்பும் செய்து விட்டான்.

முகமது நபி சூனியம் செய்பவர் தான் என்று எதிரிகள் கூறியது போல அவர்களுக்கு வேறு யாரோ சூனியம் செய்திருக்க வேண்டும் எனவும் எதிரிகள் கூறினார்கள். 

நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்' என்று அவர்கள் கூறினர். 26:153 

அதாவது, புஹாரியில் வரக்கூடிய ஹதீஸில் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று இன்றைக்கு சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் சொல்கிறார்களே, குர் ஆனை மறுத்து, நபி (ஸல்) அவர்கள் இழிவுப்படுத்தப்பட்டாலும் பரவாயில்லை எங்களுக்கு புஹாரி இமாம் தான் முக்கியம் என்று கூறுகிறார்களே, அதே போன்று, நபி (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைக்கத்தான் செய்தார், அவர் (முகமது நபி) சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் தான் என்று அன்றைய இஸ்லாமிய எதிரிகளும் சொன்னார்கள் என்று அல்லாஹ் மேலே  உள்ள வசனத்தில் சொல்லி காட்டுகிறான்.

இதற்கு பதிலை அல்லாஹ் வேறு வசனங்களில் விளக்கியும் விடுகிறான்.

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?' என்றும் 'சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.  (25:8, 9)

என்று அல்லாஹ் சொல்லி, முகமது நபிக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்கள் அனைவருமே வழிகேடர்கள் என்று தெளிவாக அறிவித்து விட்டான்.

வேறொரு வசனத்தை பாருங்கள்.

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்' என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள்' என்று கவனிப்பீராக! இதனால் அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது.
(17:47,48)

அதாவது, நபி (ஸல்) அவர்களை பொய்யர், ஏமாற்றுபவர் என்றெல்லாம் சொன்ன போது அதற்கு பதில் அளிக்காத இறைவன்,, நபிக்கு சூனியம் செய்யப்பட்டது என்று சொன்ன போது கோபம் கொள்கிறான். உம்மை எத்தகைய உதாரணத்தை கொண்டு இவர்கள் பேசுகிறார்கள் பார்த்தீர்களா?? இவர்கள் தான் வழி கெட்ட கூட்டத்தார். இதை மாற்றிக்கொள்ளாதவரை இவர்களால் நேர்வழியை அடையவே முடியாது என்று மிக தெளிவான முறையில் அல்லாஹ் பிரகடனப்படுதுகிறான்.

மேலே தரப்பட்ட விளக்கங்கள் அனைத்துமே மிகவும் குறைவான சுருக்கமான விளக்கங்கள் தான்.

சூனியம் தொடர்பான அனைத்து செய்திகளையும் விரிவாக அறியவும், நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ்களை பற்றி அறியவும், குர் ஆனுக்கு முரணாக இருக்க கூடிய ஹதீஸ்களை மறுப்பது பற்றிய நிலைபாடுகளை தெளிவாக அறிந்து கொள்ளவும் கீழ்காணும் ஆய்வு கட்டுரைகளை படிக்கவும்.


சூனியத்தால் என்ன செய்ய முடியும்?
http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/suniyathal_enna_seyya_mudiyum/

இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் 
http://onlinepj.com/books/billi-soonoyam/

சூனியம் ஒரு ஆய்வு 
http://onlinepj.com/aayvukal/sihr_9/

நபிகள் நாயகத்திற்கு சூனியம் செய்யபட்டது உண்மையா?
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/357/

சூனியம் என்று இவர்கள் சொல்வது வெறும் கற்பனையே 
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/182-sooniyam-karpanaiye/

சூனியம் என்பது வெறும் தந்திரம் தான் 
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/285/

சூனியம் வதமும் எதிர்வாதமும் (கேள்வி பதில்)
http://onlinepj.com/bayan-video/vivathangal/soonoyam_vathamum_ethirvathamum/

சூனியம் மறுப்புக்கு மறுப்பு 
http://onlinepj.com/aayvukal/suniyam_marupuku_maruppu/

ஹாரூத் மாரூத் மலக்குகளா அல்லது ஷைத்தான்களா?
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/395/

ஹதீஸ்கள் குர் ஆணுக்கு முரண்படுமா? - ஆய்வு நூல் 
http://onlinepj.com/books/hadith_kuranirku_muranpaduma/

திங்கள், 18 பிப்ரவரி, 2013

மரண தண்டனை சரியா? விவாதம் - இம்ரான் 2



Imran Sheriff 18 February


அரசு தான் சட்டம் இயற்றும் நாடு சட்டம் இயற்றாது, இந்த உண்மை புரியாதவர்களிடம் எப்படி விவாதம் செய்வது என்பதாக சொல்லியுள்ளீர்கள்.
நாடு சட்டம் இயற்றாது, அரசு தான் சட்டத்தை இயற்றும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே . "மக்களை ஆட்சி செய்யும் நாடு" என்பது அரசை தான் குறிக்கும் என்பது இதை படிக்கும் எவருக்கும் விளங்கும், சராசரி பேச்சு வழக்கில் அது கூறப்பட்டது. அப்படி இருக்கையில் இதை காரணம் காட்டி விவாதத்தை தொடர்வதை கேள்விக்குறியாக்குவது என்ன நோக்கத்திற்காக என்பதை நீங்களே விளக்கவும். 

சட்டங்கள் மக்களை நல் வழிப்படுத்துவதற்காக அல்ல, என்றும் முதலில் சொல்லி, பிறகு சட்டங்கள் நல் வழிப்படுத்தும் என்று எனக்கு நானே முரண்படுவதாக கூறி அதில் ஆச்சர்யமும் அடைவதாக கூறியுள்ளீர்கள். நான் சொன்னதில் எந்த முரண்படும் இல்லை. ஒரு நாடு சட்டங்கள் வகுப்பதன் முதல் நோக்கம் மக்களை நல்ல மக்களாக மாற்றுவதற்காக அல்ல, மாறாக மக்களை பாதுகாக்கத்தான். மக்களை பாதுகாப்பதற்காகவும் நாட்டில் அமைதி நிலைபெறுவதற்காகவும் இயற்றப்படும் சட்டமானது, மக்களை நல்வழிப்படுத்தும். இது தான் நான் ஏற்கனவே சொன்ன கருத்து. இதில் நீங்கள் ஆச்சர்யம் கொள்ளத்தக்க முரண்பாடு ஏதும் இல்லை.

எந்த சட்டங்களும் மக்களை நல்வழிப்படுத்திவிட முடியாது. ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆண்டுகள் பாரம்பர்யமான இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் உள்ள
நாடுகளில் குற்றங்கள் குறைந்து விட்டனவா? - ஜெய பிரகாஷ் 

சட்டங்கள் கடுமையாக்கப்படும் பட்சத்தில் நாட்டில் குற்றங்கள் குறையும். இது அடிப்படையான சிந்தனையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளும் வாதம். கடுமையான சட்டங்கள் விதிக்கப்படாத நாடுகளில் நடக்கும் குற்றங்களை விட கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் குற்றங்கள் குறைவு.
கருத்துக்கணிப்பின் படி கொலை , கற்பழிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதில் அமெரிக்க முதல் இடத்தில உள்ளது. நம் இந்தியா பத்தாவது இடத்தில உள்ளது. சவூதி, கத்தார் போன்ற வளைகுடா நாடுகள் 48, ஐம்பதாவது இடத்தில உள்ளது. (புள்ளிவிவரங்களை ஆதாரங்களுடன் கேட்டால் தரலாம் லிங்குகள் அனுப்ப கூடாது என்பதால் இங்கே தரவில்லை).மேலும் ஒவ்வொரு 100,000 பேரில் எத்தனை பேர் கொலை செய்யப்படுகிறார்கள் என்கிற கணக்கை பார்க்கையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளின் ரேட் 15 க்கும் மேல். ஆப்ரிக்காவில் 17. ஆசியா கண்டத்தில் 3. ! ஆசிய கண்டத்தில் தான் இஸ்லாமிய சட்டங்களை உறுதியாக கடைபிடிக்கும் சவூதி, கத்தார், இரான் போன்ற நாடுகளும் இஸ்லாமிய சட்டதை அதிகமாக கடைபிடிக்கும் சிங்கபூர் போன்ற நாடுகளும் உள்ளன.

நாடுகள் வாரியாக எடுத்துக்கொண்டால், இந்தியாவில் 3.5 பேர், (ஒவ்வொரு 100,000) , அதுவே சவுதியில் 1, கத்தாரில் 0.8 என்கிற கணக்கில் உள்ளது என்றால், சட்டங்கள் கடுமையாக்கடுவது தான் குற்றங்கள் குறைவதற்கான ஒரே வழி என்பதை இதை விட எளிதாக புரிய முடியாது !

மனிதனின் பலகீனம் என்பது தவறிழைப்பது தான். தான் சார்ந்திருக்கும் மதத்திற்காக தவறிலிருந்து தவிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்காக தவறிலிருந்து தவிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள், சட்டங்களின் கடுமைக்கு பயந்து தவறில் இருந்து விலகி கொள்பவர்களும் இருக்கிறார்கள். சட்டங்கள் கடுமையாக்கடவில்லை என்றால், முதல் இரு தரப்பும் வழக்கம் போல் தவறிழைக்காமல் தான் இருப்பார்கள் ஆனால் மூன்றாவது தரப்பை தவறில் இருந்து பாதுகாப்பது எப்படி? என்பதற்கு நீங்கள் ஒரு வழி சொல்ல வேண்டுமல்லவா? பகுத்தறிவுடன் சிந்திப்பது என்றால் இது தானே?? இதற்கு பகரமாக சிந்திப்பவர்கள் உணர்வு அடிப்படையில் சிந்திப்பவர்கள் என்று தானே பொருளாகும்?
சட்டத்திற்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பார்கள் என்பது தவறான வாதம் என்பதை அத்தகைய சட்டத்தை இயற்றி நிரூபித்து விட்டு தானே நீங்கள் சொல்ல வேண்டும்?? 
ஆறு முறை சைக்கிள் திருடியவன் ஆறாவது முறையாக கைது செய்யப்படுகிறான் என்கிற செய்திகள் தின செய்திகளில் வருகிறதே ஏன்?? ஒரு முறை திருடினால் கைகளை வெட்டும் சட்டம் என்றால் யாருமே திருட மாட்டார்களே?? தவறுகளை தடுப்பதற்குரிய சரியான முறையை கையாண்டு விட்டு தானே, குற்றங்கள் குறைந்ததா இல்லையா என்பதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டும்??? வேலியை அடைக்காமல் ஆடு புகுந்து விட்டதே என்று அழுவதில் என்ன பயன்?? 

குண்டு வைத்தால் தடா பொடா தேசியப்பாதுகாப்பு சட்டம் துக்குதண்டனை என்று எத்தனையோ மிரட்டும் அங்கங்கள் இருந்தும் குண்டுகள் வெடிப்பது குறைந்துள்ளதா? 

என்று நீங்கள் கேட்டிருப்பதன் மூலம், மேலே நான் சொன்னது நிரூபணம் ஆகிறது.

குண்டு வைத்தால் தடா போடா தூக்கு தண்டனையா??? நீங்கள் எந்த நாட்டை பற்றி கேட்கிறீர்கள்?? நம்ம இந்தியாவை பற்றியா???  சுதந்திர இந்தியாவில் இதுவரை (புள்ளி விவரங்களின் படி) கிட்டத்தட்ட ஐம்பது மிக பெரிய வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் எத்தனை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டன???  ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விட்டதா?? குஜராத் கலவரத்தை நடத்தியவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?? கோத்ரா, சபர்மதி ரயிலை எரித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா??மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டதா??? 
கடும் சட்டங்கள் என்பது வெறும் ஏட்டில் உள்ளதா அல்லது நடைமுறையில் உள்ளதா?? வெறும் ஏடுகளில் சட்டத்தை வைத்துக்கொண்டு குண்டு வெடிப்பு குறைந்துள்ளதா என்று அப்பாவித்தனமாக கேட்கிறீர்களே!!! குண்டு வைத்தால் தூக்கு தண்டனை என்று சட்டங்கள் இருந்தால் குண்டு வெடிப்பு குறையாது, அதை செயல்படுத்தினால் குறைந்து விடும். 
இஸ்லாமிய சட்டங்களை உள்ளடக்கிய நாடுகளில் இது போன்ற சட்டங்கள் உள்ளன, அவற்றை தக்க முறையில், எந்த பண பலத்திற்கும், அதிகாரத்திற்கும் வளைந்து கொடுக்காமல் பயன்படுத்துகிறார்கள் அதனால் குற்றங்கள் குறைவு. நம் நாட்டில், பணத்திற்காக சட்டங்கள் வளைகின்றன, அதிகார பலதிற்காக வளைகின்றன என்பது தெளிவாக தெரிகிற போது குற்றம் செய்கிற ஒருவன் ஏன் பயப்பட வேண்டும்??

ஒருவரை கொலை செய்ய எனக்கு ஒரு கோடி பணம் தருகிறார்கள் நான் கூலி படை உதவியுடன் காரியத்தை முடிக்கிறேன், மாட்டிக்கொண்டால் மிஞ்சிப்போனால் ஒரு வருடமோ இரண்டு வருடமோ ஜெயில் தண்டனை, அதற்குள் காசு கொடுத்து வெளியே வரலாம், என்கிற சிந்தனை எனக்கு ஏற்பட்டால், நான் கொலை செய்வதற்கு ஏன் தயங்க வேண்டும்?? அப்படியே உயர் நீதி மன்றம் தூக்கு தண்டனை கொடுத்து விட்டால், உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டு வெளியே வந்து விடலாம். அதுவும் இல்லை என்றால், ஜனாதிபதி பரிந்துரைப்பார் , வெளியே வந்து விடலாம் என்கிற பல அடுக்கு பாதுகாப்பை இந்தியா எனக்கு வழங்கியிருக்கும் போது கொலை செய்வதற்கோ கற்பழிப்பு செய்வதற்கோ நான் ஏன் அஞ்ச வேண்டும்? என்று சிந்திக்கிற ஒரு சாதாரண மனிதனை உங்கள் சட்டம் என்றைக்கும் திருத்தாது.

இஸ்லாமிய சட்டங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்புகள் நடப்பதிலையா? பயத்தை விதைப்பதால்நீங்கள் ஒன்றையும் அறுவடை செய்து விட முடியாது.

நிச்சயமாக நடப்பதில்லை. இதை அறிவதற்கு சில புள்ளிவிவரங்களை படித்தாலே போதும். இஸ்லாமிய சட்டம் பேணப்படும் நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் 2003 முதல் 2010 வரையிலான வருடங்களின் கணக்குப்படி வருடத்திற்கு சராசரியாக 59 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகின்றன. கூட்டிப்பார்க்கையில் இந்த எட்டு வருடங்களில் மொத்தம் நடந்த கற்பழிப்புகளின் எண்ணிக்கை 472 (500 என்று வைப்போம்.) நம் இந்தியாவின் கணக்கு என்ன தெரியுமா?? 1,41,713 - அதாவது, ஒரு வருடத்தின் சராசரி கிட்டத்தட்ட 20,000 !!

இஸ்லாமிய சட்டத்தை பேணாமல், தப்பி தவறி கடும் குற்றங்கள் விதிக்கப்பட்டு விட்டால் கூட, பண பலம், அரசியல் பலம், ஜனாதிபதி கருணை மனு போன்ற ஆயுதங்களின் மூலம் வெளி வரக்கொடிய ஓட்டைகள் மிகுந்த இந்திய நாட்டில் கடந்த எட்டு வருட கற்பழிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் !! அதுவே, எதற்கும் வளைந்து கொடுக்காத இஸ்லாமிய சட்டங்களை பேணக்கூடிய சவுதியில் வெறும் 500. இந்த புள்ளிவிவரங்கள் நாமாக உருவாக்கியவை அல்ல, விகீபீடியாவில் நீங்கள் சென்றாலும் காணக்கூடிய உண்மைகள்.

75 வரிகளுக்குள் சுருக்க வேண்டும் என்பதால் உங்கள் முதல் பதிவில் நீங்கள் எழுதியுள்ள சில தவறான கருத்துக்களுக்கான மறுப்புரையை அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறேன்..

பூமியின் எடையும் மனிதன் ஒப்படைக்க வேண்டியவையும்





பூமியில் எத்தனை மனித உயிர்கள் தோன்றினாலும் அதன் மூலம் பூமியின் எடையில் மாற்றம் வருவதில்லை. காரணம், பூமியில் இருந்தே தான் மனிதன் தமது எடையை பெற்றுக்கொள்கிறான். 

விஞ்ஞான ஆய்வால் மட்டுமே சொல்ல முடிந்த இந்த பேருண்மையை 1400 வருடங்களுக்கு முன் குர்ஆன் சொல்லியுள்ளது.

அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். (அல் குர் ஆன் 50:4)

இதை இன்னும் தெளிவாகவும், ஆச்சர்யம் கொள்ளத்தக்க வாசகங்களை பயன்படுத்தியும் இறைவன் வேறொரு வசனத்தில் விளக்குகிறான்.

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைதான். (பூமியில்) தங்கும் இடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. சிந்திக்கும் சமுதாயத்திற்கு சான்றுகளை விளக்கியுள்ளோம். (அல் குர்ஆன் 6:98)

தங்குமிடம் என்றால் புரிகிறது - இந்த பூமி.

ஒப்படைக்கப்படும் இடம் என்றால்?? சாதாரண அறிவை கொண்டு பதில் சொல்வதாக இருந்தால் மீண்டும் மண்ணுக்குள் செல்கிறோமே, அதை சொல்கிறது என்று சொல்லலாம்.

அப்படியானால், செல்லும் இடம் என்று தானே அந்த வசனத்தில் வார்த்தை இருக்க வேண்டும்?? ஒப்படைக்கப்படும் இடம் என்கிற முற்றிலும் மாறுபட்ட வார்த்தையை இறைவன் ஏன் இங்கே பயன்படுத்துகிறான்??

சிந்தித்து பார்க்கையில், பூமியின் எடை என்பது மனிதர்கள் மற்றும் இன்னபிற பொருட்களின் எடை தான். ஒரு மனிதன் இந்த மண்ணில் பிறக்கிறான் என்றால் அவனுக்கு தேவையான எடையை இந்த பூமியில் இருந்து பெற்றுக்கொள்கிறான் என்பது பொருள்.

உதாரணத்திற்கு, பூமியின் எடை 100 கிலோ என்றால், 3 கிலோ குழந்தை இந்த பூமியில் பிறக்கும் போது பூமியின் முந்தைய எடையான 100 கிலோ என்பது 97 கிலோவாக குறைந்து விட்டது என்று பொருள்.

அந்த 97 கிலோவும் குழந்தையின் 3 கிலோவும் சேரும் போது பூமி தமது பழைய எடையை தக்க வைக்கிறது.

ஆக, ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து, 70 கிலோ 80 கிலோ என்று தமது உடலை வளர்கிறான் என்றால் இந்த பூமியில் விளையக்கூடியவைகளில் இருந்து தான் அந்த எடையை பெறுகிறான். இறுதியில், பூமியிடமிருந்து பெற்றுக்கொண்ட அந்த எடையை மரணத்திற்கு பிறகு இந்த பூமிக்கே கொடுத்தும் விடுகிறான்..!! 
மனிதன் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனாலும் கூட, அவன் "ஒப்படைத்த" அந்த அமாநிதத்தின் மூலம் பூமி அதன் எடையை சீராகவே வைத்துக்கொண்டிருக்கிறது !!!


சிந்திக்கும் சமுதாயத்திற்கு சான்றுகளை விளக்கியுள்ளோம். (அல் குர்ஆன் 6:98)




இதை பற்றியும் இது போன்ற  ஏராளமான அதிசயங்களையும் முழுமையாக விளக்கம் நூல் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் ஆக்கத்தில் உருவான "வருமுன் உரைத்த இஸ்லாம்".

இணைப்பில் காணலாம் 
http://onlinepj.com/books/varu-mun-uraitha-islam/








மாற்று மத நண்பருடன் ஒரே தட்டில் சாப்பிட தடையா?






ஹிந்துக்களுடன் ஒரே தட்டில் சாப்பிட தடை போட்டவர் தானே உங்கள் முகமத்
- நளினன்.



(ஹிந்து சகோதரர் ஒருவருடன் பேசிய போது அவர் கூறிய சில குற்றச்சாட்டுகள்  ஒவ்வொன்றிற்கும் பதில் அளிக்கப்படுகிறது)


அரைகுறையாக செய்திகளை தரக்கூடிய ஒரு சிலரின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.


வேதக்காரர்கள் விஷயத்தில், அவர்கள் பாத்திரம் அல்லாத வேறு பாத்திரம் உங்களுக்கு கிடைத்தால் அவர்கள் பாத்திரத்தில் உண்ணாதீர்கள் கிடைக்கவில்லை என்றால் கழுவி விட்டு உண்ணுங்கள்.
என்று புஹாரி 5478 இல் இருக்கும் ஹதீஸ், மாற்று மதத்தவரோடு ஒரே தட்டில் உணவு உண்பதை தடுப்பதாக பொருள் கொள்ள முடிகிறது.

இதை வைத்து இந்த கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள் அல்லது உங்களுக்கு சொல்லி தந்தவர் சொல்கிறார். 

ஆனால், இஸ்லாமிய சட்டங்கள் பலவும் ஒரே ஹதீஸை அடிப்படையாக வைத்து முடிவு செய்யத்தக்கதாக இருக்காது. ஒரு ஹதீசுக்கு இன்னொரு ஹதீஸ் விளக்கமாகவும் , அல்லது ஒரு இறை வசனத்திற்கு ஒரு ஹதீஸ் விளக்கமாகவும் , ஒரு ஹதீஸ் ஒரு கால சூழலுக்கும் இன்னொரு ஹதீஸ் வேறு கால சூழலுக்கும் பொருந்துகிற வகையிலும் தான் சட்டங்களை அளிக்கும்.
அனைத்தையும் உள்ளடக்கி தான் நாம் முழு சட்டத்தையும் புரிய வேண்டும்.

மேற்கண்ட ஹதீஸில், வேதக்காரர் உண்ணும் தட்டை கழுகாமல் பயன்படுத்தக்கூடாது என்று பொதுவாக சொல்லப்பட்டிருந்தாலும் கீழ்காணும் இன்னொரு ஹதீஸில் அதற்கான காரணம் சொல்லப்பட்டுள்ளது.


நாங்கள் வேதக்கரர்களை கடந்து செல்கிறோம், தங்களுடைய பாத்திரத்தில் பன்றி கறியை சமைக்கிறார்கள், தங்கள் பாத்திரத்தில் மதுவை குடிக்கிறார்கள் என்று அபு சலபா கேட்கிறார்கள். அதுவல்லாத வேறு பாத்திரம் உங்களுக்கு கிடைத்தால் அதில் உண்ணுங்கள், வேறு பாத்திரம் கிடைக்கவில்லை என்றல் இதை கழுவி விட்டு உண்ணுங்கள் என்று நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்.

அபூதாவூத் 3342


மாற்று மதத்தவர்கள் பயன்படுத்தும் உணவு பாத்திரங்களை கழுவ சொன்னதாக முதல் ஹதீஸில் சொல்லப்பட்டதற்கு, காரணம் மேற்கண்ட ஹதீஸில்,சொல்லப்படுகிறது.

பன்றி கறியோ மதுவோ பயன்படுத்தாத பாத்திரங்கள் என்றால் அதை நாம் பயன்படுத்துவதற்கு எந்த தடையுமில்லை. 
மாற்று மதத்தவர்களுடன் ஒரே தட்டில் உண்ணுவதற்கும் எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை..


ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

மரண தண்டனை சரியா? விவாதம் - ஜெய பிரகாஷ் 1



ஜெய பிரகாஷ்  17 february 2013


அன்பின் இம்ரான்

சட்டங்கள் மக்களை நல்வழிப்படுத்த அல்ல; என்றும் சட்டங்கள் மக்களை
நல்வழிப்படுத்தும் என்றும் அடுத்தடுத்த பத்திகளில் முரண்படும் உங்கள்
விவாதம் ஆச்சர்யப்பட வைக்கிறது. அரசு-நாடு-ஆட்சி-அரசாங்கம் என்பவற்றின்
தாத்பர்யம் மீதான உங்களின் முதிர்ச்சியின்மை மேலும் விவாதம்
செய்யத்தடையாக இருக்கும். நாடு சட்டம் இயற்றாது. அரசு தான் சட்டத்தை
இயற்றும். அரசு என்றால் மன்மோகன் தலைமையிலான அரசு போல. அரசாங்கம் என்பது
அரசின் அங்கம். அரசின் கொள்கை முடிவுகளை சட்டங்களை நிறைவேற்றி
பாதுகாக்கும் அரசின் துறைகள் நீதித்துறை போல. இது உங்கள் புரிதலுக்காக.

எந்த சட்டங்களும் மக்களை நல்வழிப்படுத்திவிட முடியாது. ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆண்டுகள் பாரம்பர்யமான இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் உள்ள
நாடுகளில் குற்றங்கள் குறைந்து விட்டனவா? குற்றங்களூக்கும் மேலாக மக்கள்
நல்வழியை அடைந்து விட்டார்களா? சட்டங்கள் மதிக்கப்பட வேண்டியவை. பயப்பட
வேண்டியன அல்ல. இஸ்லாமிய சட்டங்கள் அதீத குரூர தண்டனைகளை முன்வைத்து
மக்களை பயப்படுத்துகின்றன. ராணுவத்தில் தான் இத்தனை ஒழுங்கும்
கண்டிப்பும் தேவை. சிவில் சமூகத்தில் சுதந்திரம் வேண்டும். சுதந்திரம்
என்றால் கட்டற்ற காட்டுமிராண்டித்தனம் அல்ல. பொறூப்பை உணர்ந்த
அடுத்தவனுக்கு தொல்லை தராததே சுதந்திரம். அப்படியான சுதந்திரத்தை
பெயரளவேனும் பிற அரச சடங்கள் வழங்குகின்றன. சல்மான் ருஷ்டிக்கு ஃபத்வா.
தாலிபன்கள் மதக் காவலர்கள். இதுவா இஸ்லாமின் சமூக நீதி?

மனித உரிமைப்பாதுகாப்பு என்பது நம் இந்தியச்சூழலில் எனக்கு ஒரு
கெட்டவார்த்தை. மக்களை அரசிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயல்சக்திகளின்
சதிவேலைகளின் பங்காகவே நான் மனித உரிமை அரசுசார தொண்டு நிறுவனங்கள்
இவற்றை பார்க்கிறேன். மரணதண்டனிக்கு எதிரான என் வாதங்கள் மனிதநேயத்தின்
அடிப்படையில் தான். மேலாக ஒரு நாகரீக சமூகத்தை நாடும் எனக்கு அந்தச்
சமூகத்தில் மரணதண்டனை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் தேவையற்றவையாகத்
தோன்றுகின்றன.

கோவையில் சிறு பெண்ணை சீரழித்துக் கொலை செய்த மோகன்ராஜை மக்களின் அல்லது
அந்தக்குழந்தையின் சமூகத்தை திருப்திப்படுத்த சுட்டுக்கொன்றது போலீஸ்.
அப்போதும் நான் எதிர்த்தேன். மறுமடியும் சொல்கிறேன். தனிமனிதன் தப்பு
செய்தால் அது பலவீனம். அதையே அரசும் சட்டமும் செய்தால் அநீதி.

டெல்லி சம்பவம் பற்றி. இதுவரை எத்தனை பெண்களை அப்படிக்கொன்று
இருப்பார்கள்? எத்தனை தண்டனைகள்? இருந்தும் குற்றங்கள் குறைய வில்லை.
பூலான் தேவி அனுபவிக்காத கொடுமைகளா? அவர் திருப்பி கொடுத்ததை
பார்த்துமாவது திருந்தினார்களா? மாட்டார்கள். வெறும் பயம் மட்டுமே மனிதனை
குற்றத்தில் இருந்து விலக்கிவைக்காது. மனத்தெளிவும் நாகரீகமும் வளரும்
போதுதான் குற்றங்கள் குறையும். இவற்றை எந்த மரண தண்டனையும் ஏற்படுத்தி
விட முடியாது. அந்த 6 பேரை தூக்கிலிட்ட பின்பு டெல்லியிலோ வேறெங்குமோ
இப்படி நடக்காது என்று யார் உத்தரவாதம் தருவார்கள்? இதெல்லாம் வெறும்
ஆவேசப்பேச்சுக்கள். நிதானிப்பவன் இப்படி பேசமாட்டான்.

பாதிப்புக்கு உள்ளானால் மட்டும் தான் வலி தெரியும் என்று இம்ரான் நாசித்
எத்தனை பாதிப்புக்கு உள்ளாகி வலியை தெரிந்துள்ளீர்கள்? இதெல்லாம் விவாதம்
செய்ய சரியாக இருக்கும். உண்மை நிலை என்னவென்றால் பகுத்தறியும் எல்லா
மனிதனுக்கும் மற்றவனின் வலி கண்டிப்பாக தெரியும்.

குற்றவாளிக்கு பாதிக்கப்பட்ட குடும்பம் தண்டனை விதிக்கலாம்-விலக்கலாம்
என்பது இஸ்லாமிய சட்டத்தின் மேன்மையென சொல்கிற என் சகோதரர்களே அதுதான்
இஸ்லாமிய சட்டத்தின் ஆகப்பெரும் பலவீனம். சட்ட்டங்கள் எல்லாருக்கும்
பொதுவில் இருக்க வேண்டியவை. அது நெகிழும் தன்மையோடிருந்தால் அது
சட்டமல்ல. சம்பிரதாயம்.

சட்டங்களின் கடுமை-நாகரீக சமூகம் குறித்து.
பொது இடத்தில் சிறிநீர் கழிக்காமல் இருப்பது; நாலு பேர் இருக்கிற
இடத்தில் எச்சில் துப்பாமல் இருப்பது; பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணம்
செய்வது இப்படி சமூகத்துக்கான நாகரீகம் இருக்கிறது. இதை மீறுபவர்களுக்கு
சட்டமும் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் குறைய வேண்டுமானால் சட்டம் மட்டும்
போதாது. நாகரீகம் வளர வேண்டும். இதே போலத்தான் பிற பெரிய குற்றங்களும்;
கற்பழிக்காமல் இருப்பது ஒரு சமூக மனிதனின் அடிப்படைக்கடமை. அதை விடுத்து
அவ்வாறு செய்பவன் சமூகத்தின் வியாதி. அத்ற்கு அவன் மட்டுமே காரணம் அல்ல.
காலங்காலமாக ஆணாதிக்கத்தை போற்றி வரும் ஒரு சமூகத்தின் வெளிப்பாடே அந்தக்
காமவெறியன்.

அந்த 10 மிருகங்களை அழித்தால் நாட்டில் கோடி மக்கள் நிம்மதியாக
இருப்பார்கள் என்கிற உங்கள் கருத்தையே வேறு வரிகளில் சமூகத்தின்
மனசாட்சியை திருப்திப்படுத்த  என்று சொல்லி அஃப்சல் குருவை
தூக்கிலேற்றிவிட்டார்கள். அஃப்சல் குரு அஜ்மல் கஸாப், பேரறிவாளன் அவ்வளவு
ஏன் ராஜபக்‌ஷே உட்பட யாரும் அரசால் கொல்லப்படக்கூடாது. சண்டையில்
சாவதற்கும் ஒரு சமூகத்தால் சாவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

குண்டு வைத்தால் தடா பொடா தேசியப்பாதுகாப்பு சட்டம் துக்குதண்டனை என்று
எத்தனையோ மிரட்டும் அங்கங்கள் இருந்தும் குண்டுகள் வெடிப்பது
குறைந்துள்ளதா? இஸ்லாமிய சட்டங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில்
உள்ள இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்புகள் நடப்பதிலையா? பயத்தை விதைப்பதால்
நீங்கள் ஒன்றையும் அறுவடை செய்து விட முடியாது.

குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பதைக் கண்டறிந்து காரணிகளை சரி செய்யாமல்
குற்றம் செய்தவனைக் கொண்று விட்டால் அந்தக் குற்றத்தை அங்கீகரித்தது
போலாகும். எதனால் குற்றம் நடந்தது, மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்ய
வேண்டும் என்று யோசிப்பதுதான் அறிவு.

உங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி உள்ளேன். வாழ்த்துக்கள்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

மரண தண்டனை சரியா? விவாதம் - இம்ரான் 1


அஸ்ஸலாமு அலைக்கும் 


முகநூல் வழியாக இஸ்லாத்தை பல்வேறு வழிகளில் விமர்சித்து வரும் டாக்டர். ஜெயப்ரகாஷ் என்பவரை நாம் இது தொடர்பாக முழுமையான முறையில் விவாதம் செய்ய அழைப்பு விடுத்தோம். அவரோடு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை இந்த இணைப்பில் காணலாம். 


ஒரு சில தலைப்புகளில் பேச முடியாது என்று அவர் மறுத்து விட்ட நிலையில், அவர் முதலில் பேசுவதற்கு ஒப்புக்கொண்ட தலைப்பான மரண தண்டனை சரியா? என்கிற விவாதம் துவக்கப்பட்டுள்ளது.

நம் தரப்பில் சகோ இம்ரான் ஷெரிப் அவர்கள் வாதங்கள் வைக்கிறார். எதிர் தரப்பில் டாக்டர். ஜெயப்ரகாஷ் எழுதுகிறார்.

சகோ. இம்ரான் ஷெரிபின் முதல் பதிவை கீழே பார்க்கலாம்.


----------------------------------------------------------------------------------------------------



 Imran Sheriff  15 February 2013 16:23




 ஐந்து வாய்ப்புகள் கொண்ட இந்த விவாதத்தில் இது எனது முதல் வாய்ப்பு.  

அன்பு சகோதரர் ஜெயப்ரகாஷ் அவர்களுக்குஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டும். 
மரண தண்டனை சரியா தவறா என்பதை பற்றி பார்ப்பதற்கு முன் ஒரு அடிப்படையை நாம் மனதில் கொள்ள வேண்டும். எந்த நாட்டினுடைய சட்டமானாலும் அதன் முதல் நோக்கம் மக்களை நல்வழிப்படுதுவதல்ல !!! எந்த காலகட்டத்திலும் எந்த நாட்டிலும் இது இரண்டாம் பட்சம் தான். நல்வழிபடுதுவதற்கு அது ஒரு சித்தாந்தத்தையோ மத போதனைகளையோ செய்யும் கேந்திரமல்லமாறாக மக்களை ஆட்சி செய்யும் நாடு. மக்களை ஆட்சி செய்யும் நாட்டில் சட்டம் இயற்றும் போது மக்களிடையே குற்றங்கள் குறைவதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்கொடுக்கிறார்கள்.. 
குற்றங்களை குறைப்பதற்கு அவர்கள் இடும் சட்டமானதுமக்களை நல்வழிப்படுத்தத்தான் செய்யும். இது தான் அடிப்படை. 
 இஸ்லாம் சொல்லும் சட்டமானதுகுற்றங்களை  குறைக்க உதவுகிறது. இஸ்லாமிய சட்டங்களை எதிர்க்கும் இன்னபிற சட்டங்களானது குற்றங்களை குறைக்க உதவவில்லை என்கிற சாதாரண உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தும் இது போன்ற விவாதத்திற்கு நீங்கள் வந்திருப்பதே ஆச்சர்யமான ஓன்று. 
 அடுத்துமரண தண்டனை அல்லது தூக்கு தண்டனை என்பது காட்டுமிராண்டிதனமானது என்பது உங்கள் கருத்து என்றால்அது போல ஒரு குற்றத்திற்கு ஆயுள் தண்டனை கொடுப்பதும் காட்டுமிராண்டி தனமானது என்று இன்னொருவர் வாதம் வைக்கலாம். 
 என்னப்பா !!! ஒரு கொலையை செய்தான் என்பதற்காக அவனை அவனது வாழ்நாள் முழுவதும் தனி சிறையில் அடைப்பது என்பது மனித உரிமை மீறல் இல்லையா?? என்று ஒருவர் கேட்கலாம். 
 ஒரு குற்றத்தை ஒருவன் செய்தான் என்பதற்காக ஆறு மாதம் சிறையில் அடைப்பதை கூட ஒருவர் விமர்சனம் செய்வார். அதுவும் மனித உரிமைக்கு அப்பாற்பட்டது என்று வாதம் வைப்பார். ஒரு பிக்பாகட் அடித்தான் என்பதற்காக அவனுக்கு 15 நாள் காவலா?? இது மனித உரிமைக்கு விடப்பட்ட சவால் இல்லையா?? என்று வேறொருவர் கேட்பார்.
 அதாவதுமரண தண்டனை விதிப்பது தான் காட்டுமிராண்டித்தனமானதுஅதை விடுத்த வேறெந்த தண்டனையும் காட்டு மிராண்டிதனமானது இல்லை என்று வாதம் வைப்பவர்கள் அதை தர்கா ரீதியாக நிரூபிப்பதாக இருந்தால் மேற்கண்ட கேள்விகள் எழத்தான் செய்யும்.

மேலும்கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களால் பாதிப்பிற்கு  உள்ளானவர்  ஒரு புறம் இருக்க ,இது போன்ற குற்றச்செயல்கள் நிகழ்வது ஒரு சமுதாயத்தில் வாழும் அனைத்து மனிதர்களையும் எப்போதும் நிம்மதியற்றபாதுகாப்பற்ற அச்ச நிலைக்கு வழி வகுக்கும் 

உதாரனத்திற்க்கு டெல்லியில் நடந்த அந்த கொடூரமான கற்பழிப்பு சம்பவத்தை எடுத்து கொள்ளுங்கள்,அந்த பெண் இரவில் தன் ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதும் அப்பெண் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம்
 இந்த சம்பவத்தில் நபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை சித்ரவதை செய்து கற்பழித்துள்ளனர்அந்த பெண் துடித்து கொண்டு இருந்த வேலையில் நீங்களோ நானோ இல்லைஅந்த பெண் மாத்திரம் தான் இருந்துள்ளார்அந்த பெண்ணை கற்பழிக்கும் பொழுது அவள் எத்துனை முறை கதறி இருப்பால்எதிர்த்து போரிட்டிருப்பால் ஆனால் அந்த மனித மிருகங்கள் ஒன்று அல்ல பேரும் சேர்ந்து கற்பழித்துக் குடலை உருவிக் கொன்றுள்ளனர். இப்படிப்பட்ட மனித மிருகங்களை தூக்கிலிட வேண்டும் என்று கூறுவது எந்த விதத்திலும் நீங்கள் கூறியது போல அடிபடைவாதமோகாட்டுமிராண்டித்தனமோ கிடையாது.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவேளை உயிர் பிழைத்திருந்து கயவர்களை தூக்கிலிடுங்கள் என்று அந்த பெண்ணே உரிமை கூறினாலும் தாங்கள் அவளை நோக்கி, "என்னம்மா காடுமிராண்டிதனமா சட்டம் சொல்றன்னு" நீங்கள் அந்த பெண்ணை நோக்கி கூறுவது எந்த அளவிற்கு பகுத்தறிவு (?) வாய்ந்தது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பாதிப்பிற்கு உள்ளான பெண்ணிற்கும் அவள் தாய் தந்தை மற்றும் குடும்பதினர்க்கே அந்த வலி தெரியும் ,கருத்து சொல்லும் நீங்களோ ஏன் என்னாலோ கூட முழுமையாக அனுபவிக்க முடியாது .
ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல,குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு போராடும் மனித (?)உரிமைப் போராளியாகஇஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று கூறும் உங்கள் கருத்து அதிர்ச்சியை தான் தருகிறது .. 
சரி இவ்வளவு வேண்டாம்தாங்கள் பெரும் அளவிற்கு வன்மையாக கண்டித்த இலங்கையில் நடந்த அந்த கொடூர கொலைகள் மனிதநேயமற்ற அந்த காட்டுமிராண்டிதனத்தை செய்த இராஜபக்க்ஷேவை தூக்கிலிட்டால் அது மனித உரிமை மீறல்அப்படி தானே?அதாவது பாதிக்கபட்டவன்பாதிப்பு அரங்கேறி விட்டது இப்போ என்ன செய்ய? , பாதிப்புக்கு உள்ளாகியவன் உயிருடன் உள்ளான்இவனை எப்படி தூக்கு தண்டனையில் இருந்து காப்பற்றலாம் என கூறுவது எந்த பகுத்தறிவோ?
திரு .ஜெயபிரகாஷ் அவர்களே : பாதிப்புக்கு உள்ளானால் தான் அந்த வலி தெரியும் ..
இங்கு மற்று ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்இவை போன்ற கொடூர செயல்கள் செய்திருப்பவரை கொன்றே ஆக வேண்டும் என்று இஸ்லாமிய சட்டம் கூரவி ல்லைஅந்த பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னித்தால் அந்த குற்றம் புரிந்தவரை மன்னித்து விட முடியும் .
இங்கு பாதிபிர்க்கு உள்ளானவர்களிடம் தண்டிபதர்க்கான உரிமை வழங்க பட்டுள்ளதுஇவர் தான் முடிவெடுக்க வேண்டியவர்கள் நீகளோ நானோ அல்லது நாட்டின் ஜனாதிபதியோ அல்ல .
சட்டங்கள் கடுமையாக ஒரு சமுகத்தை பாதுகாப்பான நிம்மதியான வாழ்விற்கே வழிவகுக்குமே தவிர அது" சட்டங்கள் கடுமையாக இருந்தால் அந்த சமுதாயம் நாகரீகமடையவில்லை என்றுதான் அர்த்தம்" என்ற தங்கள் கருத்து எப்படி விளங்கி கொள்வது என்றே புரியவில்லை .
கொலை கற்பழிப்பு போன்ற குற்றம் செய்த மனித மிருகங்களை தண்டிக்க மரண தண்டனை விதிப்பது எந்த விதத்திலும் தவறு கிடையாது .
குற்றவாளியை மென்மையாக பாவிக்கும் பார்வை இது அறிவு முதிர்ச்சியில்ல .
ஒரு கோடி மனிதர்கள் நிம்மதியாக வாழ, 10 மனித மிருகங்களை தூக்கிலிடுவது எந்த வகையிலும் காட்டுமிராண்டி தனம் கிடையவே கிடையாது .
இவ்வாறு சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் தனி மனிதன் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் .
தாங்கள் கூறிய "சட்டங்கள் பயப்பட அல்ல. மனிதன் பண்பட." என்பது கவிதை நடைக்கு அழகாக உள்ளதே தவிர நிஜ வாழ்விற்கு பொருந்தாத வரிகள் அவை .
மனிதம் பாதுகாப்பாக இருக்கவும்பயன்பெறவும்மனித தோல் போர்த்தி உலா வரும் மிருகங்களின் உள்ளத்தில் பயம் இருக்க வேண்டியது என்பது ஒரு தேவை என்று நான் கூறவில்லைஅது கட்டாயம் என்று கூறுகிறேன்.
தூக்கு தண்டனை என்பது மனிததை மிருக இனத்திடமிருந்து காபற்றுமே தவிர அழிக்காது.

உங்களது முதல் வாய்ப்பின் போது மேலே நான் எழுப்பியுள்ள எல்லா கேள்விகளுக்கும் பதில்களை தந்து உங்கள் கருத்தை நிலைநாட்டவும்.