வியாழன், 22 செப்டம்பர், 2011

இஸ்லாமிய மானம் காக்கும் படை !




நரேந்திர மோடி மனித நேயமிக்கவர், அவரது மனித நேயக்கொள்கை தான் எனது கொள்கையும், ஆகவே எல்லா வகையிலும் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு அதிமுக ஒத்துழைப்பு அளிக்கும் என்று ஜெயலலிதா அறிவிப்பு செய்த மறுநாள், நமது மனித நேய (?) மக்கள் கட்சி தலைவர் பேராசிரியரின் அறிவிப்பு :

தமிழக உள்ளாட்சிமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்!!

மவ்லூத் 3

அஸ்ஸலாமு அலைக்கும்..

(((பைசல் என்கிற ஒரு சகோதரர் மட்டுமல்லாமல், இது போன்ற கொள்கைகளை கொண்டுள்ள எல்லா சகோதரர்களும் படித்து புரியும் வண்ணம் இந்த ஆக்கம் என்னால் இயன்ற அளவிற்கு செம்மையாக தரப்பட்டுள்ளது..)))

சகோ. பைசல் அவர்களே,
வரிக்கு வரி பதில் தரப்படும் என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்த நீங்கள் , வரிக்கு வரி பதில் என்றால் இப்படி இல்லை, என்று நான் அதை மறுத்த பிறகு, வரிக்கு வரி பதில் குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை என்கிறீர்கள்.
ஏதோ, வரிக்கு வரி பதில் என்பதை குறித்து நான் முதலில் கவலைப்பட்டது போல சொல்கிறீர்.
வரிக்கு வரி பதில் சொல்லி தோலை எல்லாம் உரிக்கிறேன் என்று சவடால் விட்டது நீங்கள் தானே தவிர நாம் இல்லை. வரிக்கு வரி பதில் குறித்து முதலில் கவலைப்பட்டது நீங்கள் தானே தவிர நாம் கிடையாது!
அதே சமயம், உங்களது வரிக்கு வரி பதில் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை நான் அளிக்கும் பதிலின் மூலம் தெளிவாக புரியலாம்.
நீங்களே ஒப்புக்கொண்டது போல, உங்களுக்கு புரியவில்லை என்றாலும் இதை படிக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் எளிதாக புரியும்!!

நாஷித் பதில் சொல்லாத கேள்விகள் என்று சில கேள்விகளை பட்டியலிட்டுள்ளீர்கள்.
படிக்கிறவர்கள், உண்மையில் இத்தனை கேள்விகளுக்கும் நாஷித் பதில் சொல்லவேயில்லையா? என்று எண்ணுகிற அளவுக்கு நீண்ட பட்டியல் தான் அது! பாராட்டுக்கள்!!
ஆனால், அந்த பட்டியலை முடித்து விட்டு, உங்கள் பதில்களுக்கு வரிக்கு வரி பதில் தரப்போகிறேன் என்று சொல்லி, மேலே என்னன்ன கேள்விகளுக்கு நாஷித் பதில் சொல்லவில்லை என்று பட்டியலிட்டீர்களோ, அவைகளுக்கெல்லாம் நாஷித் அளித்துள்ள பதிலை எடுத்து வைத்துக்கொண்டு மறுப்பு சொல்கிறீர் !!!??!!!!!!!
வேடிக்கையாக இருந்தாலும், விஷயம் இதுவல்ல..!

மவ்லூத் சம்மந்தமாக நாம் எழுப்பிய விமர்சனங்களுக்கு மறுப்பு என்கிற பெயரில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் உள்ள உளறல்களை நாம் முழுமையாக அலசுவோம், இன்ஷா அல்லாஹ். எனக்கு நீங்கள் அளிக்கும் மறுப்பு அறிவுக்கும் மார்க்கத்திற்கும் உகந்ததாக உள்ளதா அல்லது உங்களுக்கு நான் அளிக்கும் மறுப்பு உகந்ததாக உள்ளதா என்பது இதை படிக்கிற பாமரரும் புரிந்து கொள்ளலாம்.
எனது மறுப்புக்கு செல்வதற்கு முன், உங்கள் ஆக்கத்தில் உள்ள வேறு சில உளறல்களை வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டியுள்ளது.

விவாதம் என்றால் என்ன தெரியுமா ? நான் ஒரு கருத்தை மறுப்பதற்காக ஒரு இறை வசனத்தை ஆதாரமாக எடுத்து வைத்தால், அந்த கருத்தை நியாயப்படுத்துபவரது கடமை,
  • அந்த கருத்தை நியாயப்படுத்தும் ஆதாரத்தையும் தர வேண்டும்,
  • அதோடு, நான் அந்த கருத்துக்கு மறுப்பாக எடுத்து வைத்த குர் ஆன் வசனத்திற்குரிய பதிலையும் சொல்ல வேண்டும்.

உதாரணமாக, மவ்லூதில் இந்த வரி, இந்த இறை வசனத்துடன் மோதுகிறது என்று நான் சொன்னால், உங்கள் கடமை என்ன?
  • இல்லை, இந்த வரி, இந்த ஹதீசுடன் ஒத்துப்போகிறது என்று மட்டும் சொன்னால் போதாது,
  • கூடவே, ஒரு இறை வசனத்திற்கு முரணாக இருக்கிறது என்று நான் சுட்டிக்காட்டினேனே, அதையும் காரண காரியத்துடன் மறுத்து விளக்க வேண்டும்.

மவ்லூத் குப்பைகள் குறித்தானாலும் சரி, பரிந்துரை குறித்தானாலும் சரி, வஹீ மட்டும் தான் மார்க்கமா, சஹாபாக்களை பின்பற்றலாமா? என்பது குறித்தானாலும் சரி, நபி (ஸல்) அவர்களின் மறைவான ஞானம் குறித்தானாலும் சரி, இந்த இறை வசனத்திற்கு முரணாக இருக்கிறதே என்று நான் கேட்ட எதற்கும் விளக்கமளிக்காமல், இதோ இந்த ஹதீசுக்கு நெருக்கமாக இருக்கிறதே என்று வேறொரு ஹதீஸை தான் எடுத்து வைக்கிறீர்கள்.
இது முதல் தவறு!
இதை சொல்வதால், நீங்கள் எடுத்து வைத்த ஹதீஸ்களும், சொல்கிற மறுப்புகளையும் நான் ஒப்புக்கொண்டு விட்டேன் என்று எண்ணி, அல்ஹம்துலில்லாஹ்,நாஷித் ஒப்புக்கொண்டு விட்டார்" என்று கூப்பாடு போட்டு விடாதீர்.
நான் வைத்த ஒவ்வொரு வாதத்திற்கும் நீங்கள் தந்துள்ள மறுப்பு எந்த அளவிற்கு உளறலாக உள்ளது என்பதை இதற்கு அடுத்து விரிவாக அலச இருக்கிறேன் . அதை படிப்பதற்கு முன், கூப்பாடு போட்டு விடாதீர்.
அதை விளக்குவதற்கு முன், இதை சொல்வதற்கு காரணம், விவாதம் எப்படி செய்ய வேண்டும் என்கிற அடிப்படை கூட நீங்கள் அறியவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதற்கு தான்.

மவ்லூதில் உள்ள அபத்தங்களிலிருந்து வருவோம்..

மெய்யாகவே எங்கள் காவல் நீங்கள் தான் என்று மவ்லூத் அழைக்கிறது.

இறை வசனமான 2 :107 , இதை நேரடியாக மறுக்கிறது. அல்லாஹ் மட்டும் தான் காவல் என்று சொல்கிறது.
இதற்கு விளக்கம் கேட்டால், இந்த வசனம் அல்லாஹ் மட்டும் காவல் என்று ஏன் சொல்கிறது தெரியுமா? என்று அதற்கு ஒரு விளக்கத்தை கூறி, அதன் பிறகு 5 :55 வசனத்தில் நபியையும் அல்லாஹ் காவல் என்று சொல்கிறான் என்று சொல்ல வேண்டும்.

அதை சொல்லாமல், உங்கள் வாதத்திற்கு நெருக்கமாக ஒரு இறை வசனம் இருப்பது போல உங்களுக்கு தோன்றுவதை வைத்து, இதோ ஆதாரம் என்று அதை கட்டுகிறீர். ஆனால், அதற்கு முரணாக, அதற்கு நேர் எதிரான கருத்தை தரக்கூடிய ஒரு வசனம் இருக்கிறதே, என்று சுட்டிக்காட்டும் போது அதற்கு பதில் இல்லை!!

இறை வசனங்களில் பல இடங்களில் அல்லாஹ் தான் அனைவருக்கும் பாதுகாவலன் என்றும், ஒரு சில இடங்களில் நபியையும் அந்த பட்டியலில் சேர்த்து கூறினால், இரண்டையும் ஒரே அந்தஸ்த்தில் புரியக்கூடாது என்பது, நீங்கள் அங்கீகரிக்ககூடிய மதரசாக்களிலேயே பாடமாக சொல்லப்படும் விதிகளில் ஒன்றாகும் .
அனைத்திற்கும் பாதுகாவல் நான் தான் என்று சொல்லக்கூடிய இறைவன், அதிகாரத்தில் உமக்கு எந்த பங்கும் இல்லை என்று சொல்லக்கூடிய இறைவன், நபியை அவனது ஒரே அந்தஸ்தில் வைப்பானா? நிச்சயம் மாட்டான்! மாட்டான் என்று சொல்வது ஊகமா? இல்லை. எந்த வசனத்தை நீங்கள் ஆதாரமாக தந்தீர்களோ, அந்த வசனமே சொல்கிறது, பாதுகாப்பதில் அல்லாஹ்வும் நபியும் ஒன்று கிடையாது என்று!
அல்லாஹ்வும் நபியும் பாதுகாவலர்கள் என்று மட்டும் அந்த வசனம் சொல்லவில்லை, எல்லா முமின்களும் பாதுகாவலர்கள் என்று தான் அந்த வசனம் சொல்கிறது!

உங்கள் வாதப்படி, தமக்கு மட்டும் உள்ள அந்தஸ்தை நபிக்கு அல்லாஹ் கொடுத்திருப்பதை போல (நவூதுபில்லாஹ்!) எல்லா முமின்களுக்கும் அல்லாஹ் அதே வசனத்தின் மூலமாக கொடுத்துள்ளானே! எல்லாரும் எல்லாருக்கும் பாதுகாவலர்கள் என்று இதன் மூலம் சொல்லி விடலாமா?
எல்லாரும் எல்லாருக்கும் பாதுகாவலர்கள் என்று இந்த வசனத்தின் மூலம் புரிகிற நாம், அதற்கு என்ன வியாக்கானம் கொடுப்போமோ, அதே வியாக்கானத்தை தானே நபி குறித்து இந்த வசனம் சொல்வதற்கும் கொடுக்க வேண்டும்.?
அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் வேறு பொருள், நபியும் மற்ற முமின்களும் பாதுகாப்பார்கள் என்றால் வேறு பொருள்!!

அல்லாஹ்வின் காவலுக்கு எல்லையில்லை, அளவில்லை, நபியின் காவலுக்கோ, மற்ற முமின்களின் காவலுக்கோ அளவும் எல்லைகளும் உள்ளன, நபிக்கும் பலகீனங்கள் உள்ளன, முமின்களுக்கும் பலகீனங்கள் உள்ளன. அந்த பலகீனங்களுக்கு உட்பட்டு தங்களால் இயன்ற பாதுகாப்பை அவர்கள் தருவார்கள். தங்கள் பலகீனங்களுக்கு அப்பாற்ப்பட்ட காவலை நபியிடமும் எதிர்ப்பார்க்கக்கூடாது, வேறு எவரிடமும் எதிர்ப்பார்க்கக்கூடாது! பதர் போரின் போது , தமக்கு ஏற்பட்ட வெட்டுக்காயத்தை தன்னாலேயே தடுத்துக்கொள்ள முடியாமல், தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ளாத பலகீனமான நிலையில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள் எனும் போது, அகில உலகத்திற்கும், எல்லா படைப்பிற்கும் நீங்கள் தான் பாதுகாவல் என்று சொல்வது, எந்த பலகீனங்களும் இல்லாத, எந்த எல்லையும் அற்று உதவியும் காவலும் செய்கிற அல்லாஹ்வின் இடத்தில் நபியை தூக்கி அமர்த்துவது போல இல்லையா?

யூத நாசராக்கள் தங்கள் தலைவருக்காக எழுந்து நிர்ப்பது போல எனக்கு எழுந்து நின்று விடாதீர்கள் என்று எச்சரிக்கிற அளவிற்கு தம்மை யாரும் வணங்கி விடக்கூடாது என்பதிலும், அல்லாஹ்வுக்கு இணையாக தம்மை கருதி விடக்கூடாது என்பதிலும் அத்தனை சிரத்தை எடுத்த நபி (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்கிற பெயரில் இவ்வாறு பாடுவதை உண்மையில் நபி (ஸல்) இன்று நம் அருகில் இருந்து கேட்டால் ஒப்புக்கொள்வார்களா? என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்.
இன்னும் சொல்வதானால் , எல்லா படைப்புக்கும் நபி தான் காவல் என்றால் , பயணம் மேற்கொள்ளும் போது தவக்கல்து அலல்லாஹ் என்று சொல்லுமாறு ஏன் நபிகளார் சொன்னார்கள்? அனைத்தையும் தன்னாலேயே காத்துக்கொள்ள முடியுமென்றால், தன்னிடமே துஆ கேட்குமாறு தானே நபி சொல்லியிருக்க வேண்டும்? காவல் தாமில்லை, அல்லாஹ் தான் என்பதால் தானே பயணம் மேற்கொள்ளும் போது அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்க சொன்னார்கள் என்று சிந்தித்தாலும், இதிலுள்ள அபத்தம் தெளிவாக புரிகீறது..


அடுத்து, கவலைகளை போக்குபரே என்று சொல்வது ஷிர்க் இல்லையா என்று கேட்டால், அதற்கும் அதே போன்று இன்னொரு ஆதாரத்தை காட்டுகிறீர். நான் சொன்ன வசனத்திற்கு என்ன பதில்? மவ்லூதின் வரிக்கு இந்த வசனம் (6 :64 ) முரணாக இருக்கிறதே என்கிற கேள்விக்கு முதலில் பதிலை சொல்லி விட்டு, இன்னொரு ஹதீஸை காட்டுங்கள். அவ்வாறு சொல்லியிருந்தால் , உங்கள் வாதத்திற்கு உங்கள் விளக்கமே பதிலாய் அமைந்து விடும்!!

நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)

என்று நபி (ஸல்) சொல்லும் போது, கவலைகளை போக்குவதற்கு மட்டும் அந்த நபியிடமே கேட்கலாமா?


சரி, புஹாரி 4476 வசனம் என்று ஒரு ஹதீஸை காட்டி, (நீண்ட ஹதீஸின் இரத்தின கருத்து) என்று சொல்லி விட்டால் நீங்கள் சொல்வது உண்மையாகி விடுமா என்ன? சிந்திக்க வேண்டாமா?

இரத்தின கருத்து என்று நீங்கள் சொன்னாலும், ஹதீஸின் முழு தொகுப்பையும் யாரும் வாசிக்க மாட்டார்கள் என்ற எண்ணமா?

அந்த ஹதீஸில் என்ன வருகிறது? ஒவ்வொரு நபிமார்களும் பரிந்துரைக்காக கேட்கப்படும் போது, மறுத்து விடுவார்கள், இறுதியில் நான் பரிந்துரை செய்வேன் என்று நபி (அல்) சொல்கிறார்கள். சொல்லி விட்டு, தாம் பரிந்துரைக்கலாமா? என்று அல்லாஹ் விடம் கேட்கிறார்கள். அல்லாஹ் அனுமதிக்கிறான். பொதுவாக அனுமதிக்காமல் யாருக்கு பரிந்துரைக்கலாம், யாருக்கு பரிந்துரைக்க கூடாது என்று வரம்புகள் இட்டு, அதன் பிறகு அனுமதிக்கிறான்.
இதன் மூலம், நபி (ஸல்) அவர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்றாலும், அது கூட, அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு தானே தவிர, அவர்கள் விரும்பிய வகையில் இல்லை. இதில் நமது கவலையை போக்குவார்கள் என்று அந்த ஹதீஸில் எங்கே உள்ளது?
அதன் அரபி பதத்தை தந்து, கவலையை போக்குவார்கள் என்கிற வாசகம் இந்த ஹதீஸில் எங்கே உள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுங்கள்.

தான் நாடிய விதங்களில் அனைவருக்கும் பரிந்துரை செய்வார்கள் , என்றால் அவர்களே ஏன் அல்லாஹ்விடம் நரகத்திலிருந்து பாதுகாவல் தேடினார்கள் (புஹாரி 1377 )

பரிந்துரை செய்வதால் மட்டுமே நபியை கவலைகளையெல்லாம் போக்ககூடியவர் என்று சொல்லலாம் என்றால், அதே போன்ற பரிந்துரைகளை எல்லா நல்லடியார்களும் செய்யலாம் என்று முஸ்லிம் 302 ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதே , எல்லா நல்லடியார்களும் பிறரை நரகத்திலிருந்து காப்பார்களே, அவர்களையும் இதே போன்று தான் அழைப்பீர்களா ?


ஒரு வாதத்திற்கு, இவ்வாறான கட்டுப்பாடுகளுடன் கூடிய பரிந்துரை மூலம் சிலரை சொர்க்கம் செல்ல வழி செய்வார்கள் என்று சொன்னாலும், இதை வைத்து,

எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக.

என்று அவர்களிடமே துஆ செய்வது, கவலைகளை போக்குபவன் அல்லாஹ் தான் என்று நான் சுட்டிக்காட்டிய இறை வசனத்துடன் மோதுகிறதே, இதற்கு என்ன பதில்?

சரி அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்..

நபியை புகழ்வதற்கு, இவ்வாறெல்லாம் செய்பவர் நீங்கள் என்று செய்திகளை சொன்னாலாவது பரவாயில்லை.. இவ்வாறு எங்களுக்கு செய்யுங்கள் என்று நேரடியாக கேட்கலாமா? நபி இறந்த பிறகு சஹாபாக்கள் இவ்வாறு அழைத்தார்களா? இதற்குரிய ஆதாரத்தையும் நீங்கள் தர வேண்டும். எந்த சஹாபி, என்ன தேவைக்காக நபியை நோக்கி இவ்வாறு துஆ செய்தார்?
ஆதாரம் தரவும்.

அடுத்து,
நபியை நோக்கி சத்தியம் செய்கிறீர்களே, அதுவும் இறை வசனத்திற்கும் ஹதீஸுக்கும் முரணாக இருக்கிறதே என்று கேட்டேன்..

இதோ, நபி இவ்வாறு சத்தியம் செய்துள்ளார்கள் என்று ஆதாரம் தருகிறீர்கள்.
நான் சொன்ன இறை வசனத்திற்கு என்ன பதில்???? நான் சுட்டிக்காட்டிய ஹதீசுக்கு என்ன பதில்????

அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் (நூல் : அபூதாவூத் 2829)

என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்களே, இதற்கு என்ன பதில்??? இதை சொல்லி விட்டு தானே, இன்னொரு ஹதீஸில் நபி இப்படி சத்தியம் செய்துள்ளார்கள் என்று காட்ட வேண்டும்?

சத்தியம் செய்யக்கூடாது என்று ஒரு ஹதீஸ் இருக்கிறதே, என்று நான் ஒன்றை காட்டினால், இதோ செய்யலாம், என்று இன்னொரு ஹதீஸ் இருக்கிறதே, என்று இன்னொரு ஹதீஸை காட்டி, இதை வைத்து சத்தியம் செய்யலாம் என்று வாதிடுவது அறிவுக்கு பொருந்துகிறதா?

இதை வைத்து சத்தியம் செய்யலாம் என்று நீங்கள் சொல்வது போல, நான் சொன்ன ஹதீஸை வைத்து அவ்வாறு சத்தியம் செய்யக்கூடாது என்று இன்னொருவன் சொல்வானே, அவனுக்கு என்ன பதிலை சொல்கிறீர்கள் என்பதையும் சேர்த்தே அல்லவா இங்கு நீங்கள் சொல்ல வேண்டும்?

சரி, அப்படியானால், இவ்வாறு இரு முரணான ஹதீஸ்கள் இருக்கும் போது அதற்குரிய பதில் என்ன?

ஒரு யூதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் இணைக் கடவுள்களை ஏற்படுத்துகின்றீர்கள். நீங்கள் இணைகற்பிக்கின்றீர்கள். (அதாவது) நீங்கள் அல்லாஹ்வும் நீங்களும் நாடியது நடந்து (என்று இறைநாட்டத்திற்கு சமமாக மனித நாட்டத்தை இணைத்துக்) கூறுகின்றீர்கள். இன்னும் கஅபாவின் மீது சத்தியமாக என்றும் கூறுகின்றீர்கள் என்று கூறினார். உடனே நபியவர்கள் (ஸஹாபாக்களாகிய) அவர்களுக்கு சத்தியம் செய்யும் போது கஅபாவின் இரட்சகன் மீது சத்தியமாக என்று கூறவேண்டும் என்றும், அல்லாஹ் நாடினான் பிறகு நீங்கள் நாடியது நடந்தது என்றுகூறவேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.

நூல் : நஸாயீ (3713)


என்கிற ஹதீஸ், மேலே நான் சுட்டிக்காட்டிய கேள்விக்கு விடை தருகிறது!!

அல்லாஹ் அல்லாத வேறு அனைத்து பொருட்கள் மீதும் சத்தியம் செய்கிற வழக்கம் நபி (ஸல்) அவர்களிடத்தும், சஹாபாக்களிடமும் இருந்து வந்துள்ளது !!
ஒரு யூதன் அதை குறித்து கேள்வி எழுப்பிய போது, அது சரியான கேள்வியாக தெரிந்ததால் அதை ஒப்புக்கொண்டு, இனி முதல் அவ்வாறு செய்யாதீர்கள் என்று சஹாபாக்களுக்கு கட்டளையிடுகிறார்கள்!!
ஆக,இதற்கு முன், அல்லாஹ் அல்லாத பொருட்கள் மீது நபி (ஸல்) அவர்கள் சத்தியம் செய்திருக்கிறார்கள்.
நீங்கள் சுட்டிக்காட்டிய ஹதீஸ் அதற்கு ஒரு உதாரணம்!

மேலே நான் சொல்கிற ஹதீஸின் படி, அவ்வாறு செய்வது தவறு என்று நபிகளாரே ஒப்புக்கொள்கிறார்கள். இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள் என்று சஹாபாக்களுக்கு கட்டளையும் பிறப்பிக்கிறார்கள்.

இப்போது அபூதாவூத் 2829 ஹதீஸை படித்தால் தெளிவாக புரியும்!!

எனது வாதம், நான் சொல்கிற ஹதீசையும், நீங்கள் சொல்கிற ஹதீசையும் அர்த்தமுள்ளதாக்குகிறது.
நீங்கள் வக்காலத்து வாங்குகிற மவ்லூத் வரியானது, ஒரு ஹதீஸை மறுத்து, நம்மை இணை வைப்பாளன் ஆக்குகிறது.
எது சரி??

சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி 2679)

என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வருகிற மற்றுமொரு ஹதீஸை கூடுதல் ஆதாரமாக இங்கு தருகிறேன்.

அடுத்து.. நோய்களை நீக்குபவரே, என்று அழைப்பது தவறில்லையா என்று கேட்டோம்.
இதற்கும், அதே நிலை தான்.
எந்த இறை வசனத்திற்கு முரண் என்று நான் சுட்டிக்காட்டினேனோ, அந்த வசனத்திற்கு இது தான் விளக்கம் என்று எந்த விளக்கத்தையும் நீங்கள் தரவில்லை.
தராமல், நபி (ஸல்) அவர்கள் துஆ செய்ததன் பேரில் தான் எனது நோய் குணமானது என்று சஹாபாக்கள் அறிவிக்கிற ஹதீஸை ஆதாரம் என்று கூறுகிறீர்கள்.

நபியின் பிரார்த்தனையின் மூலமாக சஹாபியின் நோய் குணமானது என்பதால் எங்கள் நோய்களை குணமாக்குபவரே என்று அழைக்கலாம் என்றால் நான் நோயுறும் போது அல்லாஹ்வே எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)
என்கிற இறை வசனத்திற்கு என்ன பதில்? என்பது தான் எனது கேள்வி..

சரி, தருகிற ஹதீசாவது உருப்படியான ஆதாரமாக இருக்கிறதா? அதுவும் இல்லை.

நோய்களை குணமாக்குபவரே! என்று அழைப்பது ஏன் என்று கேட்டால், நோயாளிகளுக்காக பிரார்த்தனை செய்ததை ஆதாரமாக காட்டுவது அறிவுக்கு பொருந்துகிறதா?

நோய்களை அல்லாஹ் குணமாக்குகிறான் என்பதால் தான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள், நீங்கள் தந்த அந்த ஹதீஸின் படி, அல்லாஹ் தான் நோய்களை குணமாக்குகிறான் என்கிற கருத்து தெளிவாக தெரிகிறது.
சஹாபி பெண்மணிக்கு நோய், அந்த நோய் குணமாவதற்காக நபி (ஸல்) அவர்கள் துஆ செய்கிறார்கள், அல்லாஹ் அந்த நோயை குணமாக்குகிறான்.
இப்போது, நோயை குணமாக்கியது அல்லாஹ்வா? நபியா ? என்று மூன்றாம் வகுப்பு படிக்கிற சிறுவனிடம் கேட்டால் அவனும் சொல்வான், அல்லாஹ் தான் என்று!!

ஆனால், மவ்லூதை எழுதிய கழிசடை சொல்கிறான்..

اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.


கழிசடைக்கும் வக்காலத்து வாங்கிறீர்கள் நீங்கள்!! வக்காலத்து வாங்குவது பெரிதில்லை,, எடுத்து வைக்கும் ஆதாரங்கள் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

ஆக, மவ்லூதின் அபத்தமான குப்பைகள் என்று சாம்பிளுக்கு நான் தந்த நான்கு வரிகளின் நிலை இது தான்.
அதை மறுக்கிறோம் என்கிற பெயரில் சகோ. பைசல் மறுத்த லட்சணம் இது தான்.

மவ்லூத் குப்பையில் மேலே உள்ள நான்கு குப்பைகள் மட்டும் இல்லை. இன்னும் இருக்கிறது..

وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ

என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் ழையேனே! ஆத­னால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.

الْكَرَمْ

وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்! நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்


என்று கூறும் மவ்லூத் வரியானது, நபி (ஸல்) அவர்கள் நம் பாவத்தை மன்னிப்பதாக கூறப்படுகிறது.
ஏராளமான இறை வசனங்கள், அல்லாஹ் தான் பாவங்களை மன்னிப்பவன் என்று சொல்லப்பட்டுள்ளது.
அவைகளுக்கு நேர் முரணாக உள்ளது, இந்த குப்பை!

அதோடு, அல்லாஹ் யாருக்கு சிரமம் தர எண்ணுகிறானோ, அவரகளுக்கு உதவி செய்ய நபியாலும் முடியாது என்று அல்லாஹ் 5 : 41 வசனத்தில் சொல்கிறான்.


عَالِمُ سِرٍّ وَأَخْفى

அகமிய ரகசியம் அறிபவரே, ஆழிய மர்மம் அறிபவரே, அகமுணர்ந் திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே.



என்று சொல்லப்படும் மவ்லூத் வரியானது,

"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 27:65)



என்கிற இறை வசனத்துடன் நேரடியாக மோதுகிறது!

சாம்பிளுக்கு இரண்டு.. அவசியப்பட்டால் இன்னும் தொடரும்..
மவ்லூத் குப்பை குறித்த இத்தகைய கொள்கைவாதிகளின்(?) நிலை இது தான்.

தொடர்ந்து

வஹீ அல்லாதவஈகள் மார்க்கமாகுமா? என்கிற தலைப்பில் பேசுகிற போது, வஹீ மட்டும் தான் மார்க்கம் என்பதற்கு ஆதாரம் என்ன என்று கேட்கிறீர்கள்.
நான் ஆதாரமாக தந்த இறை வசனங்கள் அனைத்துமே வஹீ மட்டும் தான் மார்க்கம் என்று தான் சொல்கிறது.

2 :170 வசனத்தில் அல்லாஹ் அருளியதை பின்பற்றுங்கள் என்று சொல்கிறான். அல்லாஹ் அருளாததை பின்பற்றாதீர்கள் என்பது இதனுடைய பொருள்!
அருளியதை மட்டும் பின்பற்றுங்கள் என்பது தான் இதன் முழுமையான கருத்து!

இதை விட தெளிவாக, 6 :106 வசனத்தில், இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மட்டும் பின்பற்றுவீராக, என்று அல்லாஹ் சொல்கிறான்.
நீங்கள் கேட்ட மட்டும் என்பது இந்த வசனத்தில் சேர்த்தே தான் சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டதையே பின்பற்றுங்கள் என்று 7 :3 வசனத்தில் அல்ல்லாஹ் சொல்கிறான்.
பின்பற்றுதல் என்றாலே அது அல்ல்லாஹ்விட்டம் இருந்து கிடைக்கும் செய்திகளை மட்டும் தான் என்பதற்குர் மேலே உள்ளவை ஆதாரங்கள்.
நாம் ஆதாரம் என்று ஒன்றை சொன்னால், அவற்றை மறுக்க வேண்டும். ஏற்கனவே நான் விளக்கியதை போல, இத்தகைய போக்கு உங்கள் வாதங்கள் எதிலும் காண முடியவில்லை!!

ஒரு வரலாறை ஒருவர் பதிவு செய்து நூல் ஒன்றை வெளியிடுகிறார் என்றால் அந்த நூலை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பதன் மூலம் அந்த வரலாறை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பது பொருள்.
அதே சமயம், மறுமை வெற்றிக்கு இன்னின்ன விஷயங்களை செய்யுங்கள் என்று ஒருவர் ஒரு நூலில் சுயமாக எழுதினால், அதை ஏற்றுக்கொள்கிற போது அந்த நபரை ஏற்றுக்கொள்கிறேன் என்பது தான் பொருள்.

புஹாரி இமாம் என்பவர், சுயமாக மறுமை வெற்றிக்குரிய வழிகள் என்று நூல் எதுவும் எழுதவில்லை, மாறாக, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் பேசிய, செய்த, அப்போது நடந்த சம்பவங்கள் ஆகியவற்றை தொகுத்து தரும் ஒரு வரலாற்று தொகுப்பு பணியை தான் செய்து தந்துள்ளார்.
அந்த வகையில், புஹாரி இமாம் எழுதிய நூலை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பதன் மூலம், அவர் தொகுத்த வரலாறுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பது தான் பொருள்.!!

அப்படியானால், அந்த நூலில் உள்ள அனைத்தையும் பின்பற்ற தயாரா? என்று கேட்கிறீர்கள். இறை வசனத்திற்கு முரணாக எந்த செய்தியாவது இருந்தால் அதை பின்பற்ற கூடாது.

ஆனால், இதை கேட்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா?
இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் - பராத் இரவு என்கீற ஒன்றுக்கு, அதை பின்பற்றுகிற இணைவைப்பாளர்கள் தரும் ஆதாரம் - அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கக்கூடிய திர்மிதி 670 ஹதீஸாகும்.
இந்த ஹதீசை பதிவு செய்துள்ள திர்மிதி இமாமே அந்த ஹதீசின் இறுதியில் இந்த செய்தி பலகீனமான செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் என்ன சொன்னாலும் பின்பற்ற வேண்டும் என்கிற கொள்கையை கொண்டுள்ளவர்கள், இதையும் சேர்த்தே பின்பற்ற வேண்டுமல்லவா? பின்பற்ற மாட்டார்கள்.
இதற்கு பதில் சொல்லாமல், நம்மை நோக்கி இமாமை பின்பற்றலாமா என்கிற கேள்வியை கேட்க உங்களுக்கு தகுதி உள்ளதா?
பதில் இந்த ஒரு ஹதீசுடன் நின்று விடுமா என்றால் அதுவும் இல்லை.. அடுக்கடுக்காக பல ஹதீஸ்களை இங்கு நாம் வைத்து, அனைத்து ஹதீஸ்களிலும் அதை பதிவு செய்த நூலின் ஆசிரியரே அதை பலகீனம் என்று சொன்னதை ஆதாரத்துடன் நிரூபிப்போம். அத்தகைய ஹதீஸ்களை இன்றைய கபுர் வணங்கிக்கூட்டம் பின்பற்றிக்கொண்டு தான் உள்ளது !!

விஷயத்திற்கு வருவோம்..

சஹாபாக்களுக்கு வஹீ கிடைக்காது, ஆகவே அவர்களை பின்பற்றக்கூடாது என்று நாம் சொல்லும் போது, சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று கூறி சில ஹதீஸை முன்வைக்கிறீர்கள்.

நண்பிகையளர்களே ! நீங்கள் அல்லாஹுவுக்கும், அவனது தூதருக்கும் கட்டுபடுங்கள் ,உங்கள் அதிபருக்கும் கட்டுபடுங்கள் (அல் குர்ஹான் - 4 :59 )

என்று அல்லாஹ் சொல்வதன் மூலம் சஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

எந்த பாமரனுக்கும் புரியும், இந்த வசனம் மார்க்க விஷயங்களில் பின்பற்றுவது குறித்து சொல்லவில்லை என்பது.
மார்க்க விஷயங்களில் பின்பற்றுவதை தான் குறிக்கிறது என்றால் உங்கள் அதிபரையும் மார்க்க விஷயங்களில் பின்பற்ற வேண்டும்.
அதிபரை பின்பற்றுங்கள் என்கிற வசனம், சஹாபாக்களை பின்பற்றுவதற்கு ஆதாரமாக ஆகுமா?

ஆகும் என்றால் உங்கள் நாட்டு அதிபரை மார்க்க விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கிற சட்டத்தையும் அமுல்ப்படுத்த தயாரா? மார்க்கம் கேலிக்கூத்தாகி விடும்!!

அடுத்து 9:100 வசனத்தை காட்டுகிறீர்.

இதுவும் அரை வேக்காடு!!

ஹிஜ்ரத் என்கிற தியாகத்தை செய்த சஹாபாக்களை சிலாகித்து சொல்கிறான் அல்லாஹ். அவ்வாறு முதலில் ஹிஜ்ரத் செய்தவர்களை பின்தொடர்ந்து யாரெல்லாம் ஹிஜ்ரத் செய்தார்களோ, அவர்களை அல்லாஹ் போருந்திக்கொண்டான் என்பது அந்த வசனம் சொல்லும் விளக்கம்.

ஹிஜ்ரத்தை முதலில் செய்தவர்களை பின்பற்றி அடுத்து செய்தவர்களையும் அல்லாஹ் போருந்திக்கொண்டான் என்பதை வைத்து மார்க்க விஷயங்களில் எந்த சஹாபி என்ன சொன்னாலும் அதை கியாமத நாள் வரை எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்வது எந்த அறிவுக்காவது எட்டுகிறதா?
திர்மிதியில் இருந்து ஒரு ஹதீஸை எடுத்து காட்டுகிறீர். ஹதீஸை முழுமையான அரபிப்பதம் இருந்தால் அதை வைத்து வார்த்தைகளை நிரூபிக்கவும்.
அந்த ஹதீஸில் சஹாபாக்களின் சுன்னத்தையும் பின்பற்றுங்கள் என்கிற வாசகம் இல்லை! எனது சஹாபாக்களை பின்பற்றுங்கள் என்று மொட்டையாக இருக்கிறதா அல்லது, அதனை தொடர்ந்து வேறு ஏதேனும் வாசகங்கள் சொள்ளப்பட்டுள்ளனவா என்பது அப்போது தெரியும். நீங்கள் தர மறுத்தால், அதன் பிறகு, நாம் இந்த ஹதீஸை முழுவதுமாக தருகிறோம்.

ஏற்கனவே நாம் சொன்னது போல, வஹீயை தவிர வேறு எதையும் பின்பற்றக்கூடாது என்கிற ஏராளமான இறை வசனங்களுக்குரிய பதிலை சொல்லி, அவற்றை மறுத்து விட்டு அதன் பிறகு இது குறித்து பேச வேண்டுமே தவிர, நான் தருகிற எந்த ஆதாரத்தையும் குறித்தும் எதுவும் பேசாமல் இருப்பது, தன் பக்கம் உண்மை இல்லை என்பதையே காட்டும்!

இறை வசனங்கள் பலவற்றில் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே அவைகளுக்குரிய விளக்கம் என்ன?
நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்க்கையையே வஹீ மற்றும் வஹீ அல்லாதது என்று இரண்டாக பிரித்து, வஹீயை அடிப்படையாக கொண்டவற்றை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்றும், வஹீ அல்லாமல் சுயமாக தான் செய்யும் எதுவும் கூட மார்க்கமாகாது என்றும் தரம் பிரித்திருக்கும் நிலையில், அறவே வஹீ கிடைக்காத மனிதர்களுடைய சொல் செயல்கள் எப்படி மார்க்கமாகும்?
ரசூல் (ஸல்) அவர்கள் வஹீ அல்லாமல் ஒன்றை சொன்னால் அது மார்க்கமில்லை, அதுவே வேறு நபர்கள் வஹீ அல்லாமல் சொன்னால் அது மார்க்கம், என்று அறிவுள்ள யாராவது சொல்வார்களா? என்பதற்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

அடுத்து, ஒழுவின்றி குர் ஆனை தொடக்கூடாது என்று கூறினீர்கள்.
இத்தகைய கூறுகெட்ட வாதத்தை சொல்கிறீர்களே, ஒரு முஸ்லிமல்லாதவர் வந்து கேட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு, மொழியாக்கத்தை கொடுப்போம் என்று பதில் சொல்கிறீர்.
இது அதை விடவும் கூறு கெட்டதனம்!!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரோமாபுரி மன்னருக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்கிற இறை வசனத்தை கடிதத்தில் எழுதி அனுப்பியிருக்கிறார்கள்!
அதோடு, ஆல இம்ரான் அத்தியாயத்திலிருந்து ஒரு வசனத்தையும் எழுதி அனுப்பினார்கள் என்று புஹாரியில் பதிவு செய்யப்பட ஹதீஸ் சொல்கிறது!
அதை முஸ்லிமல்லாத ஒரு நபர் படிப்பதற்காக தான் அனுப்பியிருக்கிறார்கள். !!
அதோடு , அதை எடுத்துக்கொண்டு செல்பவர் பல நாட்கள் பிரயாணப்பட்டு தான் அந்த கடிதத்தை எடுத்து செல்வார்.
ஒவ்வொரு முறை அவருக்கு ஒளு நீங்கும் போது அந்த கடிதத்தை தரையில் வைத்து விட்டு, ஒளு எடுத்த பின்னர் மீண்டும் அதை கையால் தொடுவாரா? அப்படி தான் சொல்ல வருகிறீர்களா?
உங்கள் கைப்பேசியில் குர் ஆன் சாப்ட்வேர் உள்ளது, முஸ்லிமல்லாத நண்பர் உங்கள் மொபைலை கேட்டால் தர மாட்டீர்களா?
ஒளு முறிந்து விட்டால் மீண்டும் ஒளு செய்து கொள்ளாமல் உங்கள் மொபைலை தொட மாட்டீர்களா?
அடி முட்டாள்தனமான ஒரு காரியத்தை செய்து இஸ்லாத்தை கேலிக்கூதாக்குவதற்கு வெட்கமில்லையா உங்களுக்கு?
குர் ஆன் என்பது ஓசை தானே தவிர, எழுத்து வடிவிலானது கிடையாது என்கிற அடிப்படை கூட விளங்காமல் இவ்வாறு மார்க்கத்தை கேலி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்!

எழுத்து வடிவிலான ஒரு புத்தகத்தை இவருக்கு கொடுத்தால் கூட இந்த காபிர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அல்லாஹ் தனது திருமறையில் சொல்வதிலிருந்து, குர் ஆனை ஓசையாக தான் அல்லாஹ் தந்துள்ளான் என்பது தெளிவாகிறது.
ஒளு இல்லாமல் குர் ஆனை ஓதக்கூடாது, ஒளு இல்லாதவர், குர் ஆன் வசனங்களை கேட்க கூடாது என்று சொன்னாலாவது, மேலே உள்ள கூறு கெட்டதனத்தை விட சற்று குறைவான உளறலாக இருந்திருக்கும்..

அடுத்து, மறைவான ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கு தெரியாது என்பதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸை சுட்டிக்காட்டினோம்.
அதை முழுவதுமாக தர முடியுமா? அதை சுக்குநூறாக உடைக்கிறேன் என்று வீராவேசம் பொங்க முழங்கியவர், நமது வாதத்தை சுக்கு நூறாக்கிய லட்சணத்தை பார்ப்போம்..

சில சிறுமிகள், சஹாபா பெருமக்களை புகழ்ந்து பாடல்கள் பாடிக்கொண்டிருக்கும் போது அவ்வழியே வந்த நபியை பார்த்ததும் நாளை நடப்பவற்றை அறிகிறவர் இதோ வருகிறார், என்று பாடுகிறார்கள்.
உடனே இதை நிறுத்த சொன்ன நபி (ஸல்) அவர்கள் இதை சொல்லாதே, மற்ற பாடல்களை வேணடுமானால் பாடு, என்று சொல்கிறார்கள்.

இதன் மூலம், நாளை நடப்பதை அறிகின்ற ஆற்றல் தமக்கு இருக்கிறது என்பதை தெளிவாக மறுத்து, அல்லாஹ்வுக்கு இணையாக தம்மை யாரும் கருதி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வந்துள்ளனர் நபிகளார்.

இதற்கு விளக்கம் சொல்கிறேன் என்ற பெயரில், ஏன் அவ்வாறு நிறுத்த சொன்னார்கள் தெரியுமா, சஹாபாக்களை புகழ்கிற சமயத்தில் தம்மை புகழ வேண்டாம் என்பதால் தான் என்கிறீர்கள்.
இது யார் கொடுத்துள்ள விளக்கம்?
சுயமாக உங்களுக்கு தோன்றுகிற காரணங்களையெல்லாம் ஹதீசுக்கு விளக்கம் என்ற பெயரில் சொல்லி விட்டால் சரியாகி விடுமா? காரணத்தை ரசூல் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்களா? இல்லை.
சரி, இது தான் காரணம் என்று வேறெந்த சஹாபியாவது சொல்லியிருக்கிறார்களா?
நீங்களாக யூகிதுகொண்டு ஒரு காரணத்தை சொன்னால், அது போன்று நாமும் பல காரணங்களை பல ஹதீஸ்களுக்கும் சொல்லலாமே.
நாளை நடப்பதை அறிகின்ற ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கிறதே, அவைகளுக்கெல்லாம் உங்கள் பதிலை சொல்லி, அதன் பிறகல்லவா இதை சொல்ல வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸ் ஒன்றில், மூன்று விஷயங்களை யார் சொன்னாலும் அவர் பொய்யர்! அதில் ஒன்று நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உள்ளது, என்று சொல்பவர்.. என்று சொல்கிறார்களே,

இதற்கு என்ன பதில்?

எனக்கு மட்டும் மறைவானவை தெரிந்திருக்குமானால், அதிகமதிகமாக நன்மைகளை நான் செய்திருப்பேனே, எந்த தீங்கும் என்னை நேராதவாறு என்னை காத்துக்கொண்டிருப்பேனே, என்று நபி (ஸல்) அவர்கள் சொல்வதாக அல்லாஹ் (7:188 ) வசனத்தில் சொல்கிறானே, அதற்கு என்ன பொருள்?

சில மறைவான விஷயங்களை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள் என்றால், அல்லாஹ் சொல்லிக்கொடுத்தான் அடிப்படையில் அறிவித்திருக்கிறார்கள். சொல்லிக்கொடுக்கவில்லை என்றால் தெரியாது.
சிலவற்றை சொல்லிக்கொடுத்துள்ளான் என்பதை நாமும் மறுக்கவேயில்லை. அனைத்தையும் சொல்லிக்கொடுத்துள்ளானா என்பது தான் எனது கேள்வி.
அனைத்தையும் சொல்லிக்கொடுத்துள்ளான் என்றால் மேலே நான் குறிப்பிட்டுள்ள இறை வசனங்களுக்கும் ஹதீஸுக்கும் உரிய பதிலை நீங்கள் தர வேண்டும்.

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் யுத்தத்தின் போது அவர்களுக்கு கடவாய்ப்பற்கள் உடைக்கட்டிருக்குமா ?
உடைக்கப்பட்டிருக்காது. ! அப்படி தான் 7 :188 வசனத்தில் அவர்கள் சொல்கிறார்கள்!!

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் தூரத்தில் ஏற்ப்பட்ட சத்தம் எதனால் ஏற்ப்பட்டது என்பதை அறிந்து கொள்வதற்காக இரவோடு இரவாக குதிரையில் பயணப்பட்டு நபி (ஸல்) அவர்கள் ஏன் சென்றார்கள்?

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் சஹாபாக்களை கொலை செய்யத்தான் அழைக்கிறார்கள் என்பதை அறியாமல் எதிரிகளுடனான உடன்படிக்கைக்கு சஹாபாக்களை ஏன் அனுப்பினார்கள்? தெரிந்தே தான் அனுப்பினார்கள் என்று சொல்ல வருகிறீரா?

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் , ஆயிஷா அம்மா மீது அவதூறு சொல்லப்பட்ட போது, அதை நினைத்து அவர்கள் சொல்லனா மனவேதனையை ஏன் அடைய வேண்டும்?
இவ்வாறு அவதூறுகள் பரவும் என்பது முன்க்கூட்டிய அவர்களுக்கு தெரியும் எனும் போது, ஆயிஷா அம்மாவையும் தன்னுடனே அவர்கள் அழைத்துக்கொண்டே சென்றிருக்கலாமே?

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் தன் மனைவி மீது அவதூறு கிளம்பியதும், அதை அறிவதற்காக ஆயிஷா அம்மாவின் பணிப் பெண்ணிடமேல்லாம் இதை குறித்து ஏன் விசாரிக்க வேண்டும்?

அனைத்து மறைவான விஷயங்களையும் அறிவித்து விட்டார்கள் என்கிற ஒரு ஹதீஸை இதற்கு ஆதாரமாக காட்டுகிறீர்கள். அது பலகீனமான் செய்தி என்பது ஒரு புறம் இருக்கட்டும் .
ஒரு வாதத்திற்கு சரியான அறிவிப்பு என்றே வைப்போம், மறைவான, இனிமேல் நடக்கப்போகிற எல்லா விஷயங்களையும், நாளை நடக்கப்போகிற விஷயங்களையும் , கியாமத் நாள் வரை உள்ள சம்பவங்களையும் நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு சொல்ல வேணடுமானால், தமத்து வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே தான் இருக்க வேண்டும். அவர்கள் காலத்தில், ஆப்ரிகா கண்டத்தில் வசிக்கக்கூடிய ஒரு எறும்பு இப்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறது தெரியுமா? என்று அதையும் அவர்கள் சொல்ல வேண்டும்.
சொர்கதிற்குரிய , நரகத்திற்குரிய ஒவ்வொரூ நபரையும் பெயர் குறிப்பிட்டு, இவர் நரகத்திற்கு செல்வார், இவர் சொர்கத்திற்கு செல்வார் என்று சொல்ல துவங்கினால், தமத்து நபித்துவ வாழ்வில் பெரும்பகுதியை இதை அறிவிப்பதற்கு தான் அவர்கள் செலவிடிருக்க வேண்டும்.
இதை மறுத்து, இல்லை, எல்லாவற்றையும் இல்லை, அவசியமான செய்திகளை மட்டும் சொன்னார்கள் என்று நீங்கள் பதில் சொல்வீர்கள் என்றால், அவசியமான சில செய்திகள் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, மற்ற எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொண்டவராவீர் !

ஆக, எந்த நிலையிலும் உங்கள் கொள்கை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லவே இல்லை. அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை பெரும் பாவமாக அவன் சொல்லும் போது, அதை கூட நியாயப்படுத்தி, விவாதமெல்லாம் செய்யாதீர்கள். அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
மவ்லூதை எதிர்ப்பதால் எனக்கு என்ன லாபம்? எதுவும் கிடையாது!
விவாதம் செய்து யார் வெற்றியாளர் என்று பார்ப்பது எனது நோக்கமாகவோ உங்கள் நோக்கமாகவோ இருக்க வேண்டாம். மறுமை வெற்றிக்காகவே நாம் அனைவரும் இவ்வுலகில் வாழ்கிறோம் என்பதை கவனத்தில் கொண்டு, அதனை நோக்கி மட்டுமே செல்வோம்.. தனி நபரை புகழ்த்தியோ, அல்லது தாழ்த்தியோ நமக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. அந்த தனி நபர் கூட நாளை அல்லாஹ்விடம் கை கட்டி தான் நிர்க்கப்போகிறார்!

இறை வசனங்களை சிந்தித்து பின்பற்றுங்கள்.

வேறு தலைப்புகளான, கபுர் வணங்கி யார், சிலையை யார் வணங்குகிறார், அல்லாஹ்வின் உருவம், ஒழுவின்றி குரானை தொடுதல், மறைவான ஞானம், வஹீ அல்லாதவற்றை பின்பற்றுதல் போன்ற எந்த தலைப்பை குறித்து பேசுவதற்கும் நாம் எப்போதும் தயார் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்..

வஸ்ஸலாம்.



சனி, 17 செப்டம்பர், 2011

பித்அத் குறித்த ஒரு மாறுபட்ட கேள்வி.

அஸ்ஸலாமு அலைக்கும்..

நாம் பித் அத் என்று கூறுகிற பல விஷயங்களை மார்க்கம் என்ற பெயரில் பலர் செய்து வருகிறார்கள்.

  • மத்ஹப் என்கிற பெயரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்கு பின்னர் வந்த சிலரின் நூலை மார்க்கம் என்கிறீர்களே, இது அப்பட்டமான பித் அத் இல்லையா? என்று கேட்கும் போது, இல்லை என்று மறுக்கிறார்கள்.
  • தரீக்காக்கள் என்ற பெயரில் மார்க்கத்தை கேலிக்கூதாக்குகிறீர்களே என்று சொல்லும் போது அதையும் மறுக்கிறீர்கள்.
  • மிலாதுன்நபி என்று கொண்டாடுகிறார்கள், அது பித் அத் என்றால் இல்லை, அது தான் மார்க்கம் என்கிறார்கள்.
  • பரா அத் இரவு என்று கொண்டாடுகிறார்கள். அது பித் அத் என்று சொன்னால் இல்லை என்று கூறுகிறார்கள்.
  • மௌலூத் ஓதுவது பித் அத் என்றால் இல்லை என்கிறார்கள்.
  • மிஹ்ராஜ் அன்று நோன்பு வைக்க வேண்டும் என்கிறார்கள். இது பித் அத் என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.
  • ஜும்மாவுக்கு இரண்டு பாங்கு சொல்கிறார்கள். இது பித் அத் இல்லையா என்று கேட்டால் இல்லை என்கிறார்கள்.
  • தொப்பி போட்டு தான் தொழ வேண்டும் என்று கட்டாயபடுதுவது பித் அத் இல்லையா? என்று கேட்டால் அதையும் மறுக்கிறார்கள்.
  • எந்த நல்ல காரியத்திற்கும் பாத்திஹா என்ற பெயரில் சடங்கு செய்கிறீர்களே அது பித் அத் இல்லையா? என்று கேட்டல் அதற்கும் இல்லை என்கிறார்கள்.
இது போன்று, இன்னும் எண்ணற்ற விஷயங்களை குர் ஆன், ஹதீஸ் ஆதாரம் இல்லாமலேயே பின்பற்றிக்கொண்டு அதுவெல்லாம் பித் அத் கிடையாது என்று கூறி வருபவர்களை நோக்கி ஒரு கேள்வி..

"எனக்கு பின் வரக்கூடிய ஒவ்வொன்றும் பித் அத்!
ஒவ்வொரு பித் அத்தும வழிகேடு
ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்"

என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லி விட்டு சென்றிருக்கிறார்களே, இதற்குரிய பொருள் என்ன?
  • நபிகளார் சொன்ன பித்அத் என்பது எதை குறிக்கிறது?
  • பொதுவாக, பித்அத் என்கிற வார்த்தையின் பொருள் / விளக்கம் என்ன?
  • என்ன செய்தால் / எப்படி செய்தால் அது பித்அத்தின் பட்டியலில் வரும்?

பித் அத்தான செயல்களாக நாம் ஏற்கனவே பட்டியலிட்டவைகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்கள் குறைந்த பட்சம் இந்த கேள்விக்காவது பதில் சொல்ல வேண்டும்.

என்னே மதனிமார்களின் சிந்தனை திறன் !!!!

அஸ்ஸலாமு அலைக்கும்..

சகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் சகாத் கொடுக்க தேவையில்லை என்கிற கருத்தை விமர்சிக்கிறவர்கள் சொல்லும் மறுப்பை கேளுங்கள்.


  • கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க தேவையில்லை என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லையாம் (எதற்கு ஆதாரம் கேட்க வேண்டும் என்கிற விவஸ்தை இல்லையா?)

  • அல்லாஹ், மனிதர்களை அதிகமாக தானா தர்மங்களை கொடுக்க சொல்கிறான், கொடுப்பதை அதிகமாக ஊக்குவிக்கிற ஒரு மார்க்கம் இஸ்லாம் - ஆகவே கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் !!??!!!??!! (என்னே கண்டுப்பிடிப்பு!)


  • ஒரு பொருளுக்கு ஒரு முறை சகாத் கொடுத்தால் அது சுத்தமாகி விடாது, எப்படி, சுத்தமான ஒரு சட்டையை அணிந்தால் சில நாட்களில் அழுக்காகி விடுகிறதோ, அது போல கொடுக்கப்பட்ட பொருள் சிறிது நாளில் அசுத்தமாகி விடும், ஆகவே மீண்டும் கொடுக்க வேண்டும்!!!!???!!

என்னே மதனிமார்களின் அறிவு ! என்னே மதனிமார்களின் சிந்தனை திறன் !!!!


அமெரிக்கா செல்லும் சறுகல் பாதை !


மவ்லித்2



((நீண்ட ஆக்கமாக இருப்பதால் பொறுமையாக படிக்கவும்.. நேரம் பிரச்சனையில்லை..!))

வ அலைக்குமுஸ்ஸலாம்

வரிக்கு வரி பதில் சொல்ல வேண்டும் என்கிற ஆசை இருந்தால் போதாது, அதை சரியான முறையில் சொல்ல தெரிய வேண்டும்.
எனது வாதங்களையும் கேள்விகளையும் கவனமாக படிப்பதை விட, வஹாபி (?) எதிர்ப்பு சிந்தனையே தங்களிடம் மேலோங்கி இருப்பதால் பதிலில் இத்தனை குழப்பம் , இத்தனை காட்டம் !

உங்களையும் , நீங்கள் கொண்டுள்ள கொள்கையையும் நினைத்து நாம் வருந்துகிறோம். நம்மை எதிர்க்கிற நோக்கில் நீங்கள் வாதம் செய்தாலும், நீங்களும் உண்மையை புரிய வேண்டும் என்கிற நோக்கில் மட்டுமே நான் வாதம் செய்வேன், இன்ஷா அல்லாஹ் !!

ஒப்பந்தமீறல் குறித்த உங்கள் விமர்சனத்திலிருந்து துவங்குகிறேன். ..

இஸ்லாத்திற்கு விரோதமான சினிமா எனும் ஊடகத்தில் அம்மாவை புகழ்ந்து பாடினால் அது நல்லது தானே என்று கூறி சினிமா பார்ப்பது கூடும் என்று ஒருவன் பத்வா கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? மாட்டீர்கள் என்றால் மார்க்கத்திற்கு விரோதமான மவ்லூதில் சில வரிகள் நல்லவைகளாக இருந்தால் அதன் மூலம் முழு மவ்லூதையும் ஓதுவது கூடும் என்று கூறுவதும் எர்ப்புடையது கிடையாது. என்று நான் வாதம் வைத்திருந்தேன்.

இந்த வாதத்திற்கு பதில் சொல்லாமல், உலக நடப்புகளை உதாரணமாக வைக்ககூடாது என்கிற விதியை காட்டுகிறீர்கள்.
விதி அவ்வாறில்லை. ஒரு காரணத்தை கொண்டும் நாட்டு நடப்பை காரணம் கட்டி ஒரு செயலை விமர்சிக்ககூடாது
என்பது தான் நீங்கள் சொல்லியுள்ள, நானும் ஒப்புக்கொண்டுள்ள விதி!

இதன் பொருளுக்கும் மேலே நான் சினிமாவை பற்றி சொன்னதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சினிமா குறித்து நான் சொன்னது ஒரு உவமை, ஒரு உதாரணம். இதை தவறு என்று சொன்னால், அதையும் தவறு என்று தான் சொல்ல வேண்டும் என்கிற ஒப்பீடு.

உங்கள் ஒப்பந்த விதி சொல்வது, உலக நடப்புகளில் ஒரு விஷயத்தை ஒருவர் செய்கிறார் என்றால், அதை காரணமாக சுட்டிக்காட்டி, இதோ இவர் இப்படி செய்கிறார் பார்த்தீர்களா, ஆகவே நீங்கள் வாதிக்கும் விஷயம் தவறு! என்று கூறக்கூடாது என்பது.
இரண்டுக்கும் எந்த சம்மந்தமுமில்லை.

ஒப்பந்த மீறலை குறித்து இத்தனை சிரத்தை எடுக்கிற நீங்கள், ஒப்பந்தத்தில் நீங்களே கூறியுள்ள இன்னொரு விஷயத்தை மீறுவதற்கு மட்டும் எந்த சிரமத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை.
ஒருபோதும் தர குறைவான வார்த்தைகளை டைப் செய்ய கூடாது
என்பது, நீங்கள் சொன்ன விதி!!

உங்கள் ஆக்கத்தின் முதல் வரியிலேயே இதை மீறி விட்டு என்னை நோக்கி ஒப்பந்த மீறல் என்று சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளவும்..

அல்லது, தரக்குறைவான வார்த்தை என்கிற பட்டியலில் நீங்கள் உபயோகித்த வார்த்தைகள் அடங்காது என்று சொல்வீர்கள் என்றால் , அதை இங்கு கூறி விடுங்கள்.

தலைப்புக்கு வருவோம்..

நபியின் வஹி மட்டும் தான் ஆதாரம் என்று நீங்கள் முடிவு எடுப்பதற்கு முதலில் குர்ஹன் ஹதீஸ் ஆதாரம் தர வேண்டும் ?


வஹீ மட்டும் தான் மார்க்கம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்கள்.

ஒரு முஸ்லிம் என்பவன் மனதினில் புரிந்து வைத்துக்கொண்டு செயல்படுத்த வேண்டிய மிக அடிப்படையான ஒரு விஷயத்தை கேள்வியாக கேட்டு, மார்க்கத்தில் உங்களுக்கு இருக்கும் அபார சிந்தனையை மெய்யாக்கியுள்ளீர்கள்.

அல்லாஹ் அருளியதை பின்பற்றுங்கள் என்று 2 :170 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

முஹம்மதே, உமது இறைவனிடமிருந்து அறிவிக்கப்படுவதை மட்டும் நீர் பின்பற்றுவீராக என்று 6 :106 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

மேலும், 7 :3 , 33:2 இன்னும் பல வசனங்கள், இஸ்லாம் என்றால் என்ன என்கிற fundamental சட்டத்தை சொல்கிறது.

இஸ்லாத்தின் அடிப்படையே உங்களுக்கு ஆட்டம் என்பதால் இதில் கேள்வி கேட்கிறீர்கள்.
உங்கள் கேள்விக்குரிய பதில் ஆதாரத்துடன் தரப்பட்டுள்ளது.
பதிலுக்கு மறுப்பு சொல்கிற போது, நான் என்னன்ன வசனங்களைஎல்லாம் ஆதாரமாக சொன்னேனோ, இனியும் எதையெல்லாம் ஆதாரமாக தர இருக்கிறேனோ, அனைத்திற்கும் வரிசையாக மறுப்பு சொல்ல வேண்டும்.

அடுத்து,

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சஹாபாகளை பின்பற்ற மாட்டார்கள்அனால் அவர்களுக்கு பின்னல் வந்த இமாம் புஹாரி,முஸ்லிம் ,
இப்னு மாஜா,பைஹகி,போன்றவர்கள் எழுதிய கிதாபுகளை பின்பற்றுவர்கள்.


என்று கேட்டு, உங்களது அறிவு ஞானத்தை மீண்டும் ஒரு முறை மெய்யாக்கியிருக்கிறீர்கள்.

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது.
உங்கள் கேள்வியில் எந்த அறிவும் இல்லை என்பதற்கு இதுவே சிறந்த ஆதாரம்!

சஹாபாக்களை பின்பற்றக்கூடாது என்று சொல்கிற நாங்கள் தான் அவர்களுக்கு பின்னால் வந்த இமாம்கள் எழுதிய நூலை பின்பற்றுகிறோம்! ஆம் !!

சஹாபாக்களை பின்பற்றக்கூடாது என்று சொல்கிற நாங்கள் அடுத்து வந்த இமாம்களை பின்பற்றுவோம் என்று சொன்னால் தான் தவறு. அவ்வாறு நாங்கள் சொல்லியிருந்தால் , அப்போது தான் உங்களது இந்த கேள்வியில் சிறிதாவது அறிவுக்கு பொருந்துகிற வாதம் இருக்கும்.

எங்கள் நிலையை நீங்களே விளக்கி விட்டீர்கள்.
நாங்கள் சஹாபாக்களையும் பின்பற்றவில்லை, அடுத்து வந்த இமாம்களையும் பின்பற்றவில்லை!!
இமாம்கள் எழுதிய நூலை தான் ஹதீஸ்களின் தொகுப்பாக ஏற்றுக்கொள்கிறோம்.
ஒருவர் தொகுத்து தருகிற ஒன்றை ஒப்புக்கொள்வதால் நான் அவரையே பின்பற்றுகிறேன் என்று ஆகி விடாது.
இந்திய வரலாறு குறித்து நீங்கள் ஒரு நூல் எழுதுகிறீர்கள், அதை நான் வாங்கிப்படித்து அதை ஏற்றுக்கொள்கிறேன் என்றால் அதனுடைய பொருள், இந்திய சரித்திரத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பது தான்!!
அதே நேரம், மறுமை வெற்றிக்கு என்ன வழி என்று நீங்கள் ஒரு மார்க்க நூலை எழுதி , அதை நான் ஏற்றுக்கொண்டால், நான் உங்களை பின்பற்றுகிறேன் என்பது தான் பொருள்.
இரண்டுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது.

ஹதீஸ்களை தொகுத்து நூல் வடிவில் ஒருவர் தரும் போது, அந்த ஹதீஸ்களை நான் மார்க்கமாக ஏற்றுக்கொள்வதால், அந்த நூலை தொகுத்தவரை நான் பின்பற்றுகிறேன் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமே தவிர வேறில்லை.

வஹீ மட்டும் தான் மார்க்கம் என்பது குறித்து என்னிடம் ஆதாரம் கேட்டதை போன்று,
  • வஹீ அல்லாதவைகளும் மார்க்கம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் இங்கு தர வேண்டும்.
  • அதே போன்று, மார்க்க விஷயங்களில் சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் தர வேண்டும்.
  • இன்னும், சஹாபாக்களுக்கும் வஹீ கிடைக்கும் என்பதற்கும் ஆதாரம் தர வேண்டும்.

நீங்கள் தரக்கூடிய ஆதாரங்கள் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை வஹாபிகள் (?) ஏற்கனவே அறிந்து தான் வைத்திருப்பார்கள் என்பதை நீங்கள் முன்க்கூட்டியே புரிந்து, அதற்க்கேற்ப உங்கள் ஆதாரத்தை வலுவாக தரவும் (தர முயற்சிக்கவும்..)

அடுத்து..

மவ்லித் பாட குடியவர்கள் தாங்களாக தினம் ஒரு கவிதையை இயற்றி அதன் பொருளை உணர்ந்து நபிகள்நாயகம் (ஸல்) அவர்களை புகழட்டும் இதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று கூறி உள்ளார் இதை நீங்கள் பின்பற்ற தயாரா ?

என்று கேட்கிறீர்கள்.
ஒன்றை செய்ய அனுமதி உள்ளது என்றால் செய்யாமலும் இருக்கலாம். கட்டாயம் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை, அவ்வாறு மார்க்க சட்டமும் கிடையாது எனும் போது, இவ்வாறு பின்பற்ற தயாரா என்கிற கேள்வியே அர்த்தமற்றது!
தோன்றுகிற நேரத்தில், தோன்றுகிற சூழ்நிலைகளில் ரசூல் (ஸல்) அவர்களை அனைவரும் புகழத்தான் செய்கிறோம்.!!

முஹம்மது நபி(ஸல்) தான் காவல் என்று அழைக்கும் வரி இது. பதில் - இதை பற்றி நீங்கள் இந்த கறுத்தும் சொல்ல வில்லை சொன்னால் இதற்கும் பதில் தர தயார்

சுபஹன மவ்லிதிலுள்ள அனைத்து வரிகளும் குர்ஹன் ஹதீஸ் இக்கு உட்பட்டதுதான்.

நடைமுறையில் இன்று உள்ள சுபுஹான மவ்லூத், ஒரு முஸ்லிமை காபிராக்கும் கருத்துக்களை கொண்டுள்ளது, ஆகவே இதை ஓதுவது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்பது எனது கருத்து.

என்று கூரிய நீங்கள் அதற்குரிய குர்ஹன் ஹதீஸ் ஆதாரத்தை தர வேண்டும்



என்று கேட்டு, சுபுஹான மவ்லூதில் மார்க்கத்திற்கு முரணான எந்த கருத்துக்களும் இல்லை எனவும், அதை நிரூபிக்க தயாரா? எனவும் நம்மை நோக்கி கேட்கிறீர்கள்.

நான் ஏற்கனவே சுட்டிக்காட்டிய ஒரு அபத்தத்தை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்

என்கிற வாசகம், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)

என்கிற இறை வசனத்துடன் நேரடியாக மோதுகிறது!
பாதுகாவல் அல்லாஹ் தானே தவிர, வேறு நபர்கள் இல்லை!


عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக.


என்று மவ்லூதில் உள்ள வரியானது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கல் மக்களின் கவலையை போக்ககூடியவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இது, ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)
என்கிற இறைவனின் வார்த்தையுடன் போர் செய்கிறது!

أَقْسَمْتُ فِيْ نَصْرِيْ بِكُمْ عَلَيْكُمْ
நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.

என்று மவ்லூதில் சொல்லப்படும் பாடலானது, நபியின் மீது சத்தியம் செய்ய சொல்கிறது.

ஆனால், அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் (நூல் : அபூதாவூத் 2829)
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு இது நேர் முரணாக இருக்கிறது. அவர்கள் சொன்னதை போன்று மவ்லூதை பாடினால், நாம் இணைவைப்பவர்களாக ஆகி விடோம்!!


اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.

என்பது மவ்லூதின் வரி.

இது,
நான் நோயுறும் போது அல்லாஹ்வே எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)
என்கிற இறை வசனத்தை கேலிக்கூத்தாக்குகிறது.

மேலே உள்ளவை, சாம்பிளுக்கு சில ஆதாரங்கள்.. அவசியப்பட்டால் இன்னும் அடுக்கடுக்காக தருவோம்.
இவைகளுக்கும், இனிமேல் நாம் தர இருப்பவைகளுக்கும் பதில் சொல்வதாக இருந்தால், நான் எடுத்து வைக்கும் எந்த ஆதாரத்தையும் விடாமல், அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

அடுத்து,

பித் அத் தின் அளவு கோல் எண்ணிக்கையில் உள்ளது என்பதற்கும் ஆதாரம் காட்ட வேண்டும் ?ஒரு நன்மையான காரிய்யதை ஒருவர் தனித்து செய்தாலும் பல பேர் சேர்ந்து செயதாலும் அது பித் ஆத் அல்ல என்பது தான் சுன்னத் ஜமாத்தின் கொள்கை உலக முஸ்லிம் மார்க்க அறிநர்களின் கொள்கையும் இது தான்


என்கிறீர்கள். பித் அத் என்றால் என்ன என்பதனை கடுகளவு கூட உம்போன்றவர்கள் புரியவில்லை என்பதற்கு இந்த வாதம் ஒரு உதாரணம்.

தனியாக ஒன்றை செய்யலாம் என்பதனால் அதை கூட்டாகவும் செய்யலாம் என்று சொல்லி விட முடியாது!!

மார்க்கம் ஒன்றை இப்படி செய் என்று சொன்னால் இப்படி தான் செய்ய வேண்டும்.
அப்படி செய் என்றால் அப்படி மட்டும் தான் செய்ய வேண்டும்.,
இப்படியும் செய்யலாம், அப்படியும் செய்யலாம் என்று மார்க்கம் அனுமதிக்கிற விஷயங்களில் மட்டும் தான் நாம் இரண்டு மாதிரியும் செய்ய வேண்டும்.
இது அடிப்படை!

உதாரணமாக, ஹஜ்ஜை தனியாகவும் செய்யலாம், கூட்டாகவும் நிறைவேற்றலாம் என்று மார்க்கம் அனுமதிதிருப்பதால், நாம் இரண்டு வகையாகவும் செய்கிறோம்.
ஸுபுஹ் தொழுகையை தனியாகவும் தொழலாம்,ஜமாதுடனும் தொழலாம்.
அதே சமயம், ஒரு நபிலான தொழுகையை தனியாக தொழுவதற்கு அனுமதி வழங்கியுள்ள மார்க்கம், ஜமாத்தாக தொழுவதற்கு அனுமதிக்கவில்லை.அனுமதிக்கவில்லை என்பதால் , நபிலான (நாமாக விரும்பி தொழும் தொழுகை) தொழுகைகளை கூட்டாக நாம் செய்யக்கூடாது!
வாருங்கள், நாம் அனைவரும் இன்று மாலை ஐந்து மணிக்கு ஆறு ரக்காதுகளை கூட்டாக தொழலாம் என்று அழைத்தால் அது பித் அத் !!
ஆக, தனியாக ஒன்றை செய்யலாம் என்பதனால் அதை கூட்டாகவும் செய்யலாம் என்கிற வாதம் அபத்தமானது, மார்க்க அடிப்படையில்லாதது !

இது போன்ற பித்அத்கள் உங்களை போன்றோருக்கு புரியாது என்பதை மேலும் உறுதி செய்கிற வகையில் உங்களது அடுத்த வாதம் அமைந்துள்ளது.

நன்மை கிடைக்கும் என்று எண்ணி இமாம் புஹாரி எழுதிய கிதாபை பல பேர் சேர்ந்து படித்தால் அது குர் ஹானுக்கு கொடுக்கும் மதிப்பை போன்று என்று குருவிர்களா


என்று கேட்கிறீர்கள்.
நிச்சயமாக !!
சட்டங்களை படித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அதை வாசித்தால் அதற்குரிய நன்மை கிடைக்கும்.
ஆனால், வெறுமனே அதை வாசித்தாலேயே நன்மை என்று எண்ணினால், அதை தனியாக அமர்ந்து வாசித்தாலும் பித் அத், கூட்டாக இருந்து வாசித்தாலும் பித் அத்!! எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!!!
நன்மை கிடைக்கும் என்று எண்ணி ஒரு நூலை ஓத வேண்டுமென்றால் அது குர் ஆன் மட்டும் தான். வரிக்கு வரி நன்மை என்பது குர் ஆனுக்கு மட்டும் தான்!
குர் ஆன் அல்லாத வேறொரு நூலுக்கும் அத்தகைய நன்மை கிடைக்கும் என்றால் அதற்குரிய ஆதாரத்தை தர வேண்டும்.

அடுத்து,
யார் வேண்டுமானாலும் குர்ஹனை தொடலாம் ஓதலாம் மாதவிடாய் பெண்கள் உள்பட என்று கூறும் உங்களுக்கு இதுவல்லாம் ஒரு பிரச்சன்னை கிடையாது .


பிணத்தை வணங்குபவர்களின் கூறுகெட்ட வாதங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் வாதம் இது!

இதற்கு பல மறுப்புக்களை கொடுத்து கேள்விகள் கேட்கலாம் என்றாலும், ஒரே ஒரு கேள்வியுடன் நிறுத்துகிறேன்.அவசியப்பட்டால் தனி தலைப்பில் இதை குறித்து பேசலாம்.

ஒரு காபிர் வந்து, உங்கள் குர் ஆனை வாசிக்க வேண்டும் என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

photocopy எடுத்து கொடுப்பேன் என்கிற உளறலான பதிலை தவிர வேறு அர்த்தமுள்ள பதில் ஏதாவது இருந்தால் சொல்லவும்..

அடுத்து,

மஸ்ஜித் நபவியில் ஒரு மின்பரை அமைத்து கொடுத்தார்கள் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் அதில் சதா சமயமும் புகழ்ந்தார்கள் சஹாப பெருமக்கள்


என்று சொல்லியுள்ளீர்கள்.

இதற்குரிய குர் ஆன், ஹதீஸ் ஆதாரத்தை தரவும். நபியை புகழ்வதற்காக ஒரு மிம்பரை அமைத்தார்கள் என்பதற்கும், சதா அங்கு புகழ் பாடல்களை படித்துக்கொண்டே இருந்தார்கள் என்பதற்கும் ஆதாரத்தை இங்கு பதியவும்..

அடுத்து,
26:224 வசனத்தின் முன்னால் சொல்லப்பட்டதையும் பின்னல் சொல்லப்பட்டதையும் சற்று ஓதி பார்த்து புரிந்து
கொள்ல்லுங்கள் அதில் குறிபிடுவது யாரை என்று.


என்று கூறி, நான் என்ன வாதத்திற்காக அந்த வசனத்தை சுட்டிக்காட்டினேனோ , அதை இன்னும் உறுதிப்படுதியுள்ளீர்கள், அல்ஹம்துலில்லாஹ்..
செத்து போன பிணங்களை கும்பிட்டு அப்பட்டமான இறை நிராகரிப்பில் ஈடுபடக்கூடியவர்களை அல்லாஹ் இவ்வாறு தான் முரண்பட செய்வான்!

பொய் பேசி திரிபவர்களையும், நபியின் மீது இட்டுக்கட்டக்கூடியவர்களை பற்றியும் பேசி வருகிற இறைவன், அவர்கள் ஒட்டுக்கேட்கக்கூடியவர்கள், அவர்கள் பொய்யர்கள் என்று சொல்லி விட்டு, அத்தகைய கவிபாடக்கூடியவர்களை பின்பற்றுபவர்கள் வழிகேடர்கள் என்று சொல்கிறான்.
சொல்லி விட்டு அடுத்த வரியில், இத்தகைய பொய்யர்கள் ஒவ்வொரு இடமாக சுற்றி திரிவதை நீர் பார்க்கவில்லையா? என்கிறான்.

மவ்லூத் குறித்து நான் எதை சொன்னேனோ, அதை அப்பட்டமாக மெய்ப்பிக்கும் வசனம் இது!! முன்னுள்ள மற்றும் பின்னுள்ள வசனங்கள் அதை இன்னும் உறுதி செய்கிறது!!


அடுத்து,
நீங்கள் கூறிய சிறுமியை கண்டித்த அந்த ஹதீஸின் அரபியையும் அந்த ஹதீஸின் முழு பாகத்தையும் வெளியுடுங்கள் உங்கள் முகத்திரை கிழித்து எறியப்படும் இன்ஷா அல்லாஹ்...


என்று கோஷம் போடுகிறீர்கள்.
..
புஹாரி 4001 இல் பதியப்பட்டுள்ள ஹதீஸ் இது..

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது.
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள் (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலஙகையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி/ எங்களிடையே ஓர் இறைத்தூதர் இரக்கிறார். அவர் நானை நடக்கவிருப்பதையும் அறிவார் என்று கூறினாள். உடனே நபி (1ல்) அவர்கள்/ இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல் என்று கூறினார்கள்.

முழு மொழியாக்கம் இது தான்.. இதிலுள்ள உண்மை நிலையை விளக்குங்கள்.

அரபி மூலம் தந்தால் தான் பதில் சொல்வேன் என்று அடம்பிடிக்க தேவையில்லை, மொழியாக்கத்தை நான் தந்து விட்டேன், ஹதீஸ் நூலையும், அதன் எண்ணையும் குறிப்பிட்டு விட்டேன், நான் மொழிப்பெயர்த்ததிலுள்ள தவறு எது என்பதை நீங்கள் சுட்டிக்காட்டினாலேயே போதும்!


இறுதியாக,

நாளை நடப்பதை நபிகள் நாயகம் அறிவார்கள் என்பதற்கு ஆயிரகணக்கான அதரங்களையும் நான் தர தயார் ..


ஆயிரக்கணக்கில் வேண்டாம், ஒன்றே ஒன்றாவது தாருங்கள் போதும்.
ஆனால், ஆதாரம் எப்படி இருக்க வேண்டும் என்றால், நபி (ஸல்) அவர்கள் எல்லா மறைவான விஷயங்களையும் அறிவார்கள் என்று சொல்லும் ஆதாரமாக இருக்க வேண்டும்.
அவர்களுக்கு தெரியாமல் எந்த மறைவான விஷயமும் கிடையாது, என்கிற வாசகத்தை காட்ட வேண்டும்..

இதை விட்டு, வெறுமனே, ஒரு சில மறைவானவற்றை அவர்கள் அறிந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரம் என்று சிலவற்றை நீங்கள் தருவீர்கள் என்றால், பல மறைவான விஷயங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே இருந்துள்ளன என்பதற்கு நான் பல பல ஆதாரங்களை அடுக்குவேன். அவைகளுக்குரிய பதிலையும் நீங்கள் முறைப்படி சொல்லி, நாளை நடக்கிற எல்லா விஷயங்களையும் நபி (ஸல்) அவர்கள் அறிவார்கள் என்கிற உங்கள் வாதத்தை மெய்ப்பிக்க வேண்டியிருக்கும்!

மறைவான ஞானத்தை பற்றிய இறைவனின் வார்த்தை ஒன்றை இங்கு சுட்டிக்காட்டி காட்டி முடிக்கிறேன்..

(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால்நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.” (7 :188 )


என்று அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல சொல்கிறான்.
மறைவானவற்றை நான் அறிபவனாக இருந்திருந்தால், என்னை தீங்குகளிலிருந்து தர்க்காதுக்கொண்டிருப்பேன், என்று அல்லாஹ் சொல்ல சொல்வதிலிருந்து, இறைவன் அறிவித்து கொடுத்த ஒரு சிலதை தவிர நபிக்கு வேறெந்த மறைவான ஞானமும் கிடையாது என்பது தெளிவாகிறது!

வஸ்ஸலாம்.

குறிப்பு : சுபுஹான மவ்லூதை படிக்கும் போது உங்களிடம் கேட்க நினைத்த ஒரு கேள்வி, இந்த முஹைதீன் மவ்லூத் என்று ஒன்று இருக்கிறதே, அதுவும் மார்க்கத்திற்கு எதிரானதல்ல, என்பது தான் உங்களது நிலையா?
என்பதை சொல்லி விடுங்கள். சுபுஹான மவ்லூதை போன்று அதிலும் பல குப்பைகள் உள்ளன.. அவற்றை கொஞ்சம் கிளறுவதற்கு வசதியாக இருக்கும்..









2011/9/11 FAIZAL.A <fasilmak@gmail.com>
- Hide quoted text -
கொள்கையில் உள்ளவர்கள். அப்படி எங்களுக்கு கொள்கை எல்லை என்று சொல்லுங்கள் கண்டிப்பாக ஆதாரம் தருகிரேன் .
ஒரு சஹாபி ஓதிய அதே மவ்லித்தில் உள்ள கருத்துகலை உள்ளடக்கி இன்னொரு சஹாபி ஓதியதற்கு ஹதீஸ் ஆதாரம் தர தயார் .

பதிமுன்று

நபியின் மரணத்திற்கு பிறகு, அவரை புகழ்வது என்பது, அவரது கட்டளையின் படி நமது வாழ்க்கையை அமைதுக்கொள்வதில் அடங்குமே தவிர, ஒரு புத்தகத்தை எழுதி வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட நாட்களில் கும்பலாக கூடி இருந்து அதை படிப்பதில் இல்லை.

பதில் - சஹோதர
ஆமாம் இதில் ஒரு வரி உண்மை உள்ளது என்னவென்றால் நபிகள் நாயகத்தை புகழ்வது என்பது அவரது கட்டளையின்படி
நமது வாழ்க்கையை அமைதுக்கொள்வதில் அடங்குமே என்று நீங்கள் குறுவது உண்மை தான் அதனால் தான் அவரின் வாழ்கையை நேரில் பார்த்த சஹாபாக்கள் நபியின் (ஸல்)கட்டளையின்படி அவருடைய ஹயத்திலும் அதற்கு பிறகும் நபிகள் நாயகம் (ஸல்)கட்டி தந்த படி நபியை புகழாந்தர்கள் அதை தான் இன்றும் சுன்னத் ஜமாத்தினர் செய்து வருகின்றனர் .அதுபோன்றே ஒரு நன்மையான காரியத்தை எழுதி வைத்து கொண்டு கும்பலாக குடி இருந்து அல்லது தனியாக இருந்து அதை படித்தால் அதன் மார்க்க தீர்ப்பு என்ன என்பதை நாசித் அவர்கள் கண்டிப்பாக விளக்கா வேண்டும் விளக்குவார அல்லது விலகுவார என்பதை பொருத்து இருந்து பார்போம் இன்ஷா அல்லாஹ்.

பதினான்கு
கவிதைகளையும் அதை பாடுபவர்களையும் அல்லாஹ் வெறுக்கிறான் 26:224 வசனத்தில்
கவிஞர்களை வழிகேடர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் என்றால் அதனுடைய பொருள், இவ்வாறு ஒரு கவிதை புத்தகத்தை வீடு வீடாக எடுத்து சென்று,அதை விடிய விடிய ஓதி, வயிற்ருப்பிழப்ப்பு நடத்துகிறார்களே அவர்கள் வழிகேடர்கள் என்பது தான்

பதில் - எ

பதில் என்ற பெயரில் நாசித் அவர்கள் மிகவும் அபத்தமான மிகவும் அறியாமையான சொற்களை உபயோகபடுத்தி உள்ளார்
26:224 வசனத்தில்
கவிஞர்களை வழிகேடர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் என்றால் அதனுடைய பொருள், இவ்வாறு ஒரு கவிதை புத்தகத்தை வீடு வீடாக எடுத்து சென்று,அதை விடிய விடிய ஓதி, வயிற்ருப்பிழப்ப்பு நடத்துகிறார்களே அவர்கள் வழிகேடர்கள் என்பது தான்
என்று சுயமாக இந்த வசனத்திற்கு உலகில் இது வரை எந்த மார்க்க அறினரும் ஏன் குர் ஹானுக்கு தப்பான பல அர்த்தங்களை தர்ஜிமவாக வெளியிட்ட திரு .P.J. அவர்களும் குட இது வரை தராத ஒரு விளக்கத்தை சுய சிந்தனையின் படி தந்து நாசித் அவர்கள் தனது இருப்பிடத்தை நபிகள் நாயகம் (ஸல்)எச்சரித்தபடி நரகத்தில் பதிவு செய்து கொண்டார் போலும் .
அல்லாஹ் பதுகப்பனாக ,ஆமீன்

நபிகள் நாயகம் (ஸல்)கூறினார்கள்
யாராவது குர்ஹான் இக்கு சுய சிந்தனைப்படி விளக்கம் கொடுத்தால் நரகத்தில் தன் இருப்பிடத்தை தேடி கொள்ளட்டும் (அல் ஹதீஸ்)

அன்பானவரே இது போன்ற தப்பான அர்த்தங்களை தயுவு செய்து இனி மேல் செய்யதிர்கல்
நீங்கள் மேற்சொன்ன வசனங்கள் எல்லாம் அணைத்து சஹாப பெருமக்கள் பார்த்த பின்பு தான் நபிகள் நாயகத்தை கவிதையாகவும் பாட்டு அகவும் புகழ்ந்தார்கள் நீங்கள் குறிப்பிடும் 26:224 வசனத்தின் முன்னால் சொல்லப்பட்டதையும் பின்னல் சொல்லப்பட்டதையும் சற்று ஓதி பார்த்து புரிந்து
கொள்ல்லுங்கள் அதில் குறிபிடுவது யாரை என்று. கவிதை ஸ்லத்தில் உள்ளதுதான் என்றும் இதை மார்க்கம் வகுத்துள்ள வரும்புக்குள் நின்று இவற்றை செய்லாம் என்று உங்களின் தலைவர் திரு P.J.அவர்கள் குறி உள்ளார்கள்தயவு செய்து அதேயேனும் பின்பற்றுங்கள்

பதினயந்து

நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு நேராக, அவர்களை சிறப்பித்து பாடும் போது, அது ஒரு மகிழ்ச்சியின் வெளிப்பாடு, அவர்களின் மீதுள்ள அன்பின் வெளிப்பாடு!!

பதில் -

இதுவும் ஒரு உண்மைதான் அனால் அவர்களுக்கு நேராக மட்டும் அல்ல சஹாப பெருமக்கள் புகழ்ந்தது அவர்களின் மஸ்ஜித் நபவியில் ஒரு மின்பரை அமைத்து கொடுத்தார்கள் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் அதில் சதா சமயமும் புகழ்ந்தார்கள் சஹாப பெருமக்கள் இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் அது நீங்கள் கூறியது போல அவர்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடு, அவர்களின் மீதுள்ள அன்பின் வெளிப்பாடு அனால் உங்களை போன்று அல்ல . அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடு அவர்களின்
பிரிவின் பின்னாலும் தொடர்ந்தது இன்றும் உலகத்தில் உள்ள அணைத்து முஸ்லிம் நாடுகளிலும் மவ்லித் மிக பிரேமண்டமாக அந்த நாடுகளின் மார்க்க அறினர்களால் நடந்து கொண்டு தான் வருகிறது
இன்ஷா அல்லாஹ் தொடரும் ....

பதினாறு

அதை கூட, ஒவ்வொரு நபரும் தங்கள் தங்களுக்கு தோன்றிய வகையில் அவர்களாக தான் படுவார்கள். ஒருவர் பாடியதை குறித்து வைத்துக்கொண்டு, அதை ஒவ்வவொரு மாதமும் எல்லா சஹாபாக்களும் கூடி இருந்து படிக்கொண்டிருக்கவில்லை, மட்டுமல்லாமல், அவர்கள் பாடுவதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை நேரடியாக நபி(ஸல்) அவர்களே கண்டித்தும் விடுவார்கள்.
நாளை நடப்பதை அறிகிறவரே! என்று ஒரு சிறுமிக்கூட்டம் பாடிய போது, அதை கண்டித்துள்ளார்கள்.

பதில் -

நான் ஏற்கனவே கூறியது போல நீங்கள் சஹாபாக்கள் செய்தார்களா ,செய்ய சொன்னார்களா என்ற கேள்வியை இனி ஒரு போதும் கேட்க கூடாது காரணம் சஹாபகளை ஏன் அவர்களின் நிழலைகுடா தொட உங்களுக்கு அருகதை கிடையாது உங்களது துர் நாற்றம் பிடித்த சஹாபாகளை பின்பற்ற கூடாது என்ற கொள்கையை தூக்கி எறிந்த பின்பு எங்களை பார்த்து கேளுங்கள் நிச்சயம் ஆதாரம் தருவோம் சஹாபபெருமக்கள் மவ்லித் ஓதியதற்கு ..
அதுபோல சஹாபாக்கள் பாடியதில் தப்பு இருந்து அதை நபிகள் நாயகம் கண்டித்த ஒரு ஹதீஸை நீங்கள் காட்ட வேண்டும் கண்டிப்பாக காட்ட வேண்டும். நீங்கள் கூறிய சிறுமியை கண்டித்த அந்த ஹதீஸின் அரபியையும் அந்த ஹதீஸின் முழு பாகத்தையும் வெளியுடுங்கள் உங்கள் முகத்திரை கிழித்து எறியப்படும் இன்ஷா அல்லாஹ்...

குறிப்பு -

நாளை நடப்பதை அறிபவரே என்று கூறியதும் அந்த சிறுமியை கண்டித்ததாக கூறும் அந்த ஹதீஸை அரபியில் தந்தால் அதன் உண்மை விளக்கத்தையும் நாளை நடப்பதை நபிகள் நாயகம் அறிவார்கள் என்பதற்கு ஆயிரகணக்கான அதரங்களையும் நான் தர தயார் ..

பதினேழு -

மார்க்கத்திற்கு விரோதமான கருத்துக்களை கொண்டுள்ள ஒரு புத்தகத்தை தூக்கி செல்வது என்பது மார்க்கம் காட்டி தராத பித் அத்தாகும்!!
எல்லா பித் அத்களும் வழிகேடு!!

பதில் -

சஹோதர
இதுவும் ஒரு உண்மை தான் அனால் சிறு மாற்றம் நீங்கள் சொல்வது போன்று மார்கத்திற்கு விரோதமான கருத்துகளைதூக்கி செல்வது பித் அத்
அல்ல அதை பின்பற்றினால் பித் அத் என்பதில் எங்களுக்கு இந்த கறுத்து வேறுபாடும் இல்லை என்பது மட்டும் அல்ல மர்கதிற்ற்கு முரணான அணைத்து பித் அத்தும் வழிகேடு என்பதில் எங்களுக்கு துளி குட வேறுபாடு இல்லை .
சுபஹன மவ்லிதில் இந்த வரியும் குர்ஹான் ஹதீஸ் இக்கு முரணானது இல்லை அதனால் நீங்கள் சொல்வது எங்களுக்கு பொருந்தாது

குறிப்பு -

நான் முதலில் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை அதை மறந்து விட வேண்டாம்
கேள்வி - நடைமுறையில் இன்று உள்ள சுபுஹான மவ்லூத், ஒரு முஸ்லிமை காபிராக்கும் கருத்துக்களை கொண்டுள்ளது, ஆகவே இதை ஓதுவது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்பது எனது கருத்து.

என்று கூரிய நீங்கள் அதற்குரிய குர்ஹன் ஹதீஸ் ஆதாரத்தை தர வேண்டும்


கோவை பைசல்
09382222202




அன்பான சஹோதர
உங்களை இவ்வளவு முட்டாளாக நான் கருதவில்லை சரி உங்களின் ஒவ்வரு வரிக்கும் பதில் தருகிறேன் வாருங்கள்

முதலாவது,

ஆதாரம் என்பது குர் ஆனும், முஹம்மது நபியும் சம்மந்தப்பட்ட வஹீ தானே தவிர, வஹீக்கு சம்மந்தமில்லாத நபர்கள் அறிவிப்பவை ஆதாரமாகாது

பதில் - நபியின் வஹி மட்டும் தான் ஆதாரம் என்று நீங்கள் முடிவு எடுப்பதற்கு முதலில் குர்ஹன் ஹதீஸ் ஆதாரம் தர வேண்டும் ?

இரெண்டாவது
பதில் - அய்யோ பாவம் இந்த செய்தி இமாம் புஹாரிக்கும் இமாம் முஸ்லிம்(ரஹ்) போன்ற மேதைகள் விளங்காமல் சஹாபாக்கள் சொன்ன ஹதீஸ்களை அவர்களுடைய கிதாபுகளில் எழுதி விட்டார்கள் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சஹாபாகளை பின்பற்ற மாட்டார்கள்அனால் அவர்களுக்கு பின்னல் வந்த இமாம் புஹாரி,முஸ்லிம் ,
இப்னு மாஜா,பைஹகி,போன்றவர்கள் எழுதிய கிதாபுகளை பின்பற்றுவர்கள்.

ஹசான் (ரலி) அவர்கள் ஒன்றை அறிவிக்கிறார்கள் என்றால் அவருக்கு வஹீ கிடைக்காது. வஹீ என்கிற ஆதாரத்தை தாருங்கள், சஹாபிகள் சொல்லும் கருத்துக்களை அல்ல!

பதில் - இப்படி சொல்ல குர்ஹனிலும் ஹதீஸிலும் ஆதாரம் இருந்தால் தரவும் ?ஹதீஸ் கலை வல்லுனர்களிடம், சஹாபாக்கள் ஒரு செய்தியை அறிவித்தால் அதற்க்கு பெயர் என்ன ?அதை பின்பற்றலாமா ?

முன்றாவது

நபியை புகழ்வது நன்மையான விஷயம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை
அல்ஹம்துலில்லாஹ் நாசித் அவர்கள் கூறியதில் உள்ள ஒரு உண்மை இது மட்டும் தான்

நான்காவது

சுபுஹான மவ்லூதை ஓதுவதற்கு என்ன ஆதாரம்?

பதில் - நண்பரே
இது போன்ற கேள்வியை கேட்டல் நிச்சயம் அழகான பதில் கிடைக்கும் மவ்லித் என்ற சொல்லிற்கு அரபு மொழியில் பிறப்பு என்று பொருள் இஸ்லாமியர்கள் வழக்கில் நபிகளாரின் பிறப்பு மற்றும் சிறப்புகளை கவிநடையில் புகழ்வதற்கு மவ்லித் என்று கூறப்படும் .உலகில் உள்ள கோடானகோடி முஸ்லிம்கள் ஓதி வருகின்ற மவ்லிதிற்கு
குர்ஹனும் நபி மொழியும் சான்றாக உள்ளன . நபி (ஸல்)அவர்களின் பிறப்பை பற்றிய விவரங்கள் அவர்களின் மகத்துவங்கள் மற்றும் மாண்புகள் மவ்லிதில் கூறபட்டுஉள்ளன .இவற்றிற்கு சான்றாக குர்ஹன் அமைத்துள்ளது எநேன்றல் பல்வேறு நபிமார்களின் பிறப்பு பற்றி குர்ஹனில் தெரிவிக்கபட்டுள்ளது

உதரணமாக ;

மூஸா நபியின் பிறப்பு (அல்குர்ஹன் 28 : 7 )

யஹ்யா நபியின் பிறப்பு (அல்குர்ஹன் 19 : 7 ,15)

ஈஸா நபியின் பிறப்பு (அல்குர்ஹன் 19:19,33)

முஹம்மது நபியவர்களின் (ஸல்)அவர்களின் பிறப்பு (அல்குர்ஹன் 3:81 , 61:6) நாயகம் (ஸல்) அவர்களை குர்ஹனில் இறைவன் பல இடங்களில் புகழ்ந்து பேசுகிறான்
உதரணமாக ;
(நபியே )திண்ணமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருகிகிர்கள் (அல்குர்ஹன் 68:4)
நபியே உங்கள் மகிமையை நாம் உயர்த்தியுள்ளோம் (அல்குர்ஹன் 94: 4) நபியே அகிலாத்தற்கு அருட்கொடையாகவே உங்களை நாம் அனுபியுள்ளோம்
(அல்குர்ஹன் 21:107)
இது போன்ற எண்ணற்ற குர்ஹன் வசனங்களும் ஹதீஸ்களும் ஏராளம் அதன் அடிபடையில் உருவாக்கப்பட்டது தான் சுபஹன மவ்லித் .
சுபஹன மவ்லித் என்பது நபியை புகழ்வதற்காக உருவாக்கின ஒரு கிதாப் தான் .நான் ஏற்கனவே அனுப்பிய ஹதீஸில் உள்ளது நபியை புகழ்ந்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்று அதை நீங்கள் மறுத்தால் முதலில் நீங்கள் ஆதாரம் தர வேண்டும் நபிகளாரை புகழ கூடாது என்பதற்கு
ஐந்து
சினிமா பார்ப்பது தவறு என்பது எல்லாரும் ஒப்புகொள்வது.
அதே சமயம், சினிமா பார்ப்பது தவறில்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்று ஒருவன் கேட்கும் போது, பாருங்கள், சினிமாவில் அம்மாவை புகழ்வது போல பாடல் இருக்கிறது, அம்மாவை புகழ்வது நல்லது தானே, ஆகவே சினிமா பார்க்கலாம், என்று ஒருவன் சொன்னால் அவனை என்னவென்று சொல்வீர்கள்?

அம்மாவை புகழ்வது நல்லது தான், அதற்காக வேறு வேறு அனாச்சாரங்களையும் தவறுகளையும் சேர்த்தே பெற்றுள்ள ஒரு வழி மூலம் தான் அம்மாவை புகழ வேண்டுமா? அம்மாவை புகழ வேறு வழியே இல்லையா? என்று கேட்ப்போம்.

பதில் - அன்பான நாசித் அவர்களே !

நீங்கள் மட்டும் அல்ல உங்களை போன்ற அணைத்து போலி தௌஹீது வாதிகளும் எப்படித்தான் யோசிபார்கள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் அதனால் தான் விவாதம் துவங்கும் முன்னால் ஒரு நிபந்தனை போட்டேன் அதை நிங்களும் ஒப்புக்கொண்டுதான் விவாதம் ஆரம்பித்தோம் தயவு செய்து விவாத ஒப்பந்தத்தை ஒரு முறை படியுங்கள் மீறி இது போன்ற உவமைகளை சொன்னால் P.J ஜெயலலிதாவையும் கருணாநிதியையும், இப்னுஅப்துல்வாஹாப் நஜ்தியய்யும் , S.M.பாக்கர் ,சைப்புல்லாஹ் காஜா,
T.M.M.K. போன்றவர்களை புகழ்ந்து மவ்லித் ஓதியதை நானும் மக்களுக்கு காண்பிக்க வேண்டியது வரும் வேண்டாம் நிறுத்தி அழகான முறையில் விவாதம் நடக்க ஒத்துழைப்பு தாருங்கள்.

ஒப்பந்தம்

4 , ஒரு காரணத்தை கொண்டும் நாட்டு நடப்பை காரணம் கட்டி ஒரு செயலை விமர்சிக்ககூடாது
5 , குரான் ஹதீஸ் மட்டும் ஆதாரம் வைத்து பேச வேண்டும்

ஆறு

நபியை புகழுவது நீங்கள் தனிப்பட்ட முறையில், உங்களுக்கு தோன்றுகிற முறையில் செய்கிற ஒன்று.
அதை தவிர்த்து , இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒருவனது நூலை வாசிப்பது தான் நபியை புகழ்வது என்று கருதுவது எந்த வகையில் இறைவனது பார்வையில் நியாயமாகும்?
அதிலும், பொருள் தெரியாமல் வாசிக்கும் பொழுது அதில் எத்தனை எத்தனை குபுறும் இறை மறுப்பும், நிறைந்துள்ளது என்பதை கூட அறியாமல் அதை படிப்பது எந்த வகையில் நியாயம்?

பதில் - என்று கேட்ட உங்களிடம்
எங்களது கேள்வி நீங்கள் ஏன் தனியாகவோ அல்லது குட்டகவோ நிங்களே குர்ஹன் ஹதீஸின் படி ஒரு புகழ்மலையை தயாரித்து அதை ஏன் ஓதுவதில்லை உங்களுக்கு அதுவெல்லாம் காரணம் கிடையாது நபிகளாரை புகழ்ந்தால் எப்படி முனாபிக்களுக்கு பிடிக்கதோ அது போன்றே உங்களுக்கும்.
நாங்கள் என்னவோ சுபஹான மவ்லிதின் அர்த்தம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் ஓதியது போலவும் இவர்கள் வந்த பின்பு தான் எங்களுக்கு அர்த்தம் தெரிந்தது போலவும் ஒரு மாயையை ஏற்படடுத்தி என்னமோ சுபஹன மவ்லித் மட்டும் தான் ஓத வேண்டும் வேற எப்படியும் நபியை புகழ வேண்டாம் என்று சொன்னது போல ஒரு மாயை ஏற்படுத்தி மக்களை வழிகேடுக்க பார்க்கிறார் ஒரு சவால் அகவே உங்களுக்கு கூறி கொள்ளவது என்னவென்றால் P.J. அவர்கள் சொல்ல்யபடி மவ்லித் பாட குடியவர்கள் தாங்களாக தினம் ஒரு கவிதையை இயற்றி அதன் பொருளை உணர்ந்து நபிகள்நாயகம் (ஸல்) அவர்களை புகழட்டும் இதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று கூறி உள்ளார் இதை நீங்கள் பின்பற்ற தயாரா ?அடுத்து இறைவனது பார்வை யில் ஏது சரி ஏது தவறு என்று முடிவு எடுப்பதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் ?

எழு

نْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

என்று ஒரு வரி உள்ளது , எல்லா படைப்புகளுக்கும் முஹம்மது நபி (ஸல்)தான் காவல் என்று அழைக்கும் வரி இது. பதில் - இதை பற்றி நீங்கள் இந்த கறுத்தும் சொல்ல வில்லை சொன்னால் இதற்கும் பதில் தர தயார்
குறிப்பு - (ஸல்) என்ற சொல் நான் சேர்த்து சொன்னது

எட்டு

நபியை புகழ்வதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கும் போது, இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட நபரால் எழுதப்பட்ட ஒரு நூலை அனைவரும் கூடி இருந்து வாசித்தால் அது தான் நன்மை என்று சொல்லும் போது, மேற்கூறிய இந்த வரியையும் சேர்த்தே படித்தால் தான் நன்மை என்பது தான் அதன் பொருளாகிறது.

பதில் -நபியை புகழ்வதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கும் பொது அதில் இந்த வழியையும் நீங்கள் பின்பற்றாதது ஏன் ?நபியை புகழ்வதற்கு அணைத்து வழிகளையும் பின்பற்றுபவர்கள் சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்த நங்கள்தான் .நீங்கள் குறுவது போன்று சுபஹன மவ்லிதில் உள்ள வரிகள் எதோ 200 ஆண்டுகளில் மட்டும் எழதிய வரிகள் அல்ல நபிகள் நாயகம் (ஸல்) காலம் தொட்டு என்று வரை சொல்லும் வரிகள் கியாமத் நாள் வரைக்கும் முஸ்லிம்கள் சொல்லுவார்கள் . சுபஹன மவ்லிதிலுள்ள அனைத்து வரிகளும் குர்ஹன் ஹதீஸ் இக்கு உட்பட்டதுதான்.

ஒன்பது
ஒரு வாதத்திற்கு, அந்த நூலில் எந்த தவறான கருத்துக்களும் இல்லை என்று கூட வைப்போமே, அப்போதும், ஒரு குறிப்பிட்ட நூலின் வரீகளை அனைவரும் குழுமி இருந்து வாசித்தால் நன்மை கிடைக்கும் என்று கூறுவது பித் அதா இல்லையா?
பதில் -சுபஹன மவ்லித் உதியவன் காபிர் என்று சொன்ன உங்களுக்கு ஒரு வாதத்திற்கு, அந்த நூலில் எந்த தவறான கருத்துக்களும் இல்லை என்று கூட வைப்போமே, என்று சொல்லும் அளவுக்கு உங்கள் கொள்கையில் இருந்து வெளியே உங்களை அறியாமல் சென்று விட்டிர்கள் அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லாஹ் இது போன்று என்னும் தொடரும் .
ஒரு குறிப்பிட நூலின் வரிகளை பலபேர் சேர்ந்து வாசித்தால் நன்மை கிடைக்கும் என்று குறுவது பித் அத் என்றல் தனியாக வாசித்தல் பித் அத் இல்லையா என்ன? பித் அத் தின் அளவு கோல் எண்ணிக்கையில் உள்ளது என்பதற்கும் ஆதாரம் காட்ட வேண்டும் ?ஒரு நன்மையான காரிய்யதை ஒருவர் தனித்து செய்தாலும் பல பேர் சேர்ந்து செயதாலும் அது பித் ஆத் அல்ல என்பது தான் சுன்னத் ஜமாத்தின் கொள்கை உலக முஸ்லிம் மார்க்க அறிநர்களின் கொள்கையும் இது தான்

பத்து

அப்படியானால், குர் ஆனுக்கு இருக்கும் மதிப்பை நீங்கள் அந்த நபரின் நூலுக்கு கொடுக்கிறீர்கள் என்பது பொருள்!
இன்னும் சொல்வதானால், ஒரு நபரை புகழ்வது என்றால் என்ன? என்கிற அடிப்படையை புரியாததால் தான் இந்த குழப்பம்

பதில் - நன்மை கிடைக்கும் என்று எண்ணி இமாம் புஹாரி எழுதிய கிதாபை பல பேர் சேர்ந்து படித்தால் அது குர் ஹானுக்கு கொடுக்கும் மதிப்பை போன்று என்று குருவிர்களா அல்லது P.Jஎழுதிய நூலை படித்தாலும் குர்ஹானுக்கு கொடுக்கும் மதிப்பை போன்று தான் என்று குருவிர்களா இதை கூறினாலும் அதிசயம் இல்லை காரணம் யார் வேண்டுமானாலும் குர்ஹனை தொடலாம் ஓதலாம் மாதவிடாய் பெண்கள் உள்பட என்று கூறும் உங்களுக்கு இதுவல்லாம் ஒரு பிரச்சன்னை கிடையாது .
ஐயோ பாவம் ஒருவரை எப்படி புகழ்வது என்று சுன்னத் ஜமாஅத் க்கு பாடம் எடுக்க ஒரு நாசித் புறபடுகிறார் சஹோதர உங்களை போன்ற எததனை வஹ்ஹபிகள் வந்தாலும் எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை நங்கள் எங்கள் உயிரினும் மேலாக
புக
த்தான் செய்வோம் அதை கியாமத் நாள் வரை யாராலும் தடுக்க முடியாது.

பதினொன்று

நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில், அவர்களை புகழ்ந்து சில சஹாபிகள் கவிதை படித்து உள்ளார்கள்

பதில் -

அல்ஹம்துலில்லாஹ் இதுவும் ஒரு உண்மை
பனிரெண்டு

அது அவர்களுக்கு தோன்றிய சில வரிகள். ஒரு சஹாபிக்கு மனதினுள் ஒரு வரி தோன்றியது என்பதனால், அதே வரியை மனப்பாடம் செய்து வைத்து எல்லா சஹாபாக்களும் ஓதிக்கொண்டிருக்கவில்லை

  1. பதில்-
  1. polaநீங்கள் என்னவோ சஹாபாக்கள் செய்தது எல்லாம் செய்வதை பிதற்றுகிரிர்கள்
காரணம்
  1. உங்களின் வாதபடி
நீங்கள் சஹாபாக்கள் எதை செய்தாலும் அது நமக்கு மார்க்கம் அல்ல என்ற