வியாழன், 17 ஜூலை, 2014

ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்


ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்கிற சொல்லுக்கேற்ப, சூனியத்தால் எதையும் செய்யலாம் என்று இத்தனை நாள் முழங்கியவர்களை நோக்கி, நீ எதை சொல்லிக் கொண்டு திரிகிறாயோ அதை என் முன்னே வந்து செய்து காட்டு, என்று சவால் விட்டதும், பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுகிறது ஒரு கூட்டம்.

அதற்கு அவர்கள் சொல்லும் சால்ஜாப்பானது, சூனியத்தை ஒரு முஸ்லிம் செய்தால் அவன் காஃபிராகி விடுவான், எனவே எந்த முஸ்லிமும் செய்து காட்ட மாட்டானாம்.

சூனியத்தை நம்பி நரகத்திற்கு முன்பதிவு செய்திருக்கும் இந்த கூட்டத்தின் அறியாமையும் தற்போது இத்தகைய மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற சமாளிப்பு நமக்கு தெளிவாக்குகிறது.

சூனியத்தை ஒரு முஸ்லிம் செய்து காட்டினால் அவன் காஃபிராகி விடுவான் என்று அல்லாஹ் சொல்லவில்லை.
சூனியத்தை யார் கற்கிறார்களோ அவர்கள் காஃபிர்கள் என்று தான் அல்லாஹ் சொல்கிறான்.
சூனியம் உண்மை என்று யார் நம்புகிறார்களோ அவர்கள் காஃபிர்கள் என்கிறான் அல்லாஹ்.

நமது நம்பிக்கைப்படி சூனியத்தை கற்பது என்றால், இல்லாத அற்புதத்தை இருப்பதாக காட்டும் வித்தையை கற்பது.

இந்த சூனியப்பிரியர்களின் நம்பிக்கையோ, அற்புதக் கலையை கற்பது.

இவர்கள் கருத்துப்படி, இவர்கள் முன்வைக்கும் இறை வசனப்படி, எந்த நிமிடம், அந்த அற்புதத்தை ஒரு முஸ்லிம் கற்றானோ அந்த நொடியே அவன் காஃபிராகி விட்டான்.

எனவே ஏற்கனவே கற்று காஃபிராகி போன முன்னாள் முஸ்லிமைப் பார்த்து தான் இதை எனக்கு செய்து காட்டு என்கிறோம்.

எனவே, இதை செய்து காட்டி காஃபிராகி போவோம், எனவே செய்து காட்ட மாட்டோம் என்கிற கூற்றே முதலில் கேலிகுரியது.

எங்கள் நம்பிக்கைப்படி, எந்த நிமிடம் சூனியம் உண்மை என்று ஒரு முஸ்லிம் நம்பினானோ அந்த நொடியே அவன் காஃபிராகி விட்டான். நிரந்தர நரகில் தள்ளும் ஷிர்க்கை செய்தவனாகி விட்டான்.

மறுபக்கம், இவர்கள் நம்பிக்கைப்படி, சூனியத்தை கற்று காஃபிராகி விடாதீர்கள் என்று தான் 2:102 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

சூனியத்தை செய்து காட்டுவதற்கும் முந்தைய படி, அதை கற்றுக் கொள்வது.
அதை கற்றுக் கொண்ட முஸ்லிமானவன் காஃபிராகி விட்ட பிறகு, அந்த காஃபிரை நோக்கி தான் சகோ. பிஜே சவால் விடுகிறார்.

சிலைகளுக்கு சக்தி இருக்கிறது என்று சொல்கிறீர்களே, முடிந்தால் எனக்கெதிராக அவைகளை சூழ்ச்சி செய்ய வையுங்கள் பார்க்கலாம் என்று நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மக்கத்து முஷ்ரிக்குகளை நோக்கி சவால் தான் விடுகிறார்கள்.

சிலைக்கு சக்தி இருக்கிறது என்று நம்புவது ஷிர்க் தான். அவை ஒரு மனிதனுக்கு எதிராக தீங்கு செய்யும் என்று நம்புவது ஷிர்க் தான்.

அத்தகைய‌ ஷிர்க்கை நம்பிய கூட்டத்தாரை நோக்கி தான், அப்படியா? அப்படியானால் நிரூபித்துக் காட்டு என்கிறார்கள் பெருமானார் (சல்) அவர்கள்.

அதெப்படி? சிலையை கொண்டு தீங்கு செய்ய முனைவதும் ஒருவனை குஃப்ரில் தள்ளும் காரியமல்லவா? அத்தகைய காரியத்தையா நபி (சல்) அவர்கள் சவாலாக விடுவார்கள்?
அப்படி சவால் விடுவதில் அர்த்தம் இருக்குமா?

என்று எவனாவது கேட்டால் அவன் தான் அறியாமையில் சுழல்கிறான் என்று பொருளாகும்.

அல்லாமல், எதை ஒருவன் நம்புகிறானோ, எதை நேருக்கு நேராக நிரூபிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றனவோ, அவற்றையெல்லாம் நிரூபிக்கும்படி தான் கேட்க வேண்டும்.
குர் ஆனின் ஒட்டு மொத்த நடையே இது தான்!

இன்னும் சொல்லப்போனால், இந்த சூனியப்பிரியர்களுக்கு தான் இதை நிரூபிக்கும் கூடுதல் கடமையும் இருக்கிறது.

இந்த சூனியத்தை நம்ப முடியாது என்று கூறி பல ஹதீஸ்களை மறுப்பது நாம் தான்.

இவர்கள் பார்வையில் நாம் ஹதீஸ்கள் சிலவற்றை மறுப்பது மிகப்பெரிய வழிகேடு என்றால், சூனியத்தை கண்ணுக்கு நேராக வந்து நிரூபித்து, வழிகேட்டிலிருந்து அனைவரையும் மீட்கும் கடமை இவர்களுக்கு இருக்கிறது.

அதை செய்யாமல், இருக்கு ஆனா செய்ய மாட்டோம்.. படித்திருக்கிறோம், ஆனால் அதை செய்து காட்டினால் குஃப்ர்.. என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்வது என்பது, திருடன் திருடன் என்று திருடனே சத்தமிட்டுக் கொண்டு ஓடுவதற்கு சமமானது !

மேலும், சகோ. பிஜே ஒன்றும் முஸ்லிம்கள் என்று குறிப்பிட்டு சவால் விடவில்லை. ஒட்டு மொத்த உலகிற்கும் தான் இந்த சவால்.

முஸ்லிம்கள் சூனியத்தை நம்புவது போல, அதை விடவும் பல மடங்கு அதிகமாக ஹிந்து, கிறித்தவர்கள் நம்புகிறார்கள்.
"இங்கு பில்லி சூனியம் எடுக்கப்படும்" என்று போர்ட் மாட்டி வைத்து பிழைப்பு நடத்தும் அளவிற்கு சூனியம் என்பது மாற்று மத்தத்தவர்களிடமும் பிரசித்தம்.

இவர்கள் வாதப்படி சூனியத்தை முஸ்லிம்கள் தானே செய்யக்கூடாது, காஃபிர்கள் செய்யலாம் தானே, அப்படியானால், இவ்வாறு போர்ட் மாட்டி சூனியத்தையே தொழிலாக செய்யக்கூடிய எவனையாவது இவர்கள் அழைத்து வரட்டுமே. அதை செய்யவாவது இவர்களுக்கு திராணி உண்டா?

அல்லது, அத்தகைய உலக மகா சூனியக்காரனின் முகவரி, தொலைப்பேசி இலக்கத்தை அதிகாரப்பூர்வமாக தந்து, போய் சரி பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிற திராணியாவது உண்டா?

மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது அரிவாளை கொண்டு வந்து வெட்டுவது இவர்களை குஃபுரில் தள்ளாதாம்,
வெளிநாடுகளில் தாஃவாவிற்கு செல்லும் போது ஏதேனும் பொய் வழக்குகள் இட்டு சிறையில் அடைக்கும் மொள்ளமாறித்தனங்களை செய்வதெல்லாம் இவர்களை வழிகேட்டில் தள்ளாதாம்,
சூனியம் செய்து அவருக்கு பாதிப்பை உருவாக்கு பார்ப்போம் என்று சொல்கிற போது தான், குஃப்ர், வழிகேடு, மறுமை, சொர்க்கம் என்பதெல்லாம் இவர்கள் கண்களுக்கு தென்படுமாம்..

என்றால் இது எதை காட்டுகிறது?

எதை செய்ய இயலுமோ அதை செய்ய இவர்கள் தயங்க மாட்டார்கள், அதன் மூலம் பிஜேவை கொலை செய்ய முடிந்தால் கூட செய்து விடுவார்கள்.
அதற்கு மார்க்கம், மறுமைபயம் என எதுவும் கண் முன் வராது, அதற்கெல்லாம் எந்த பாவ புண்ணியங்களையும் பார்க்க மாட்டார்கள்.

அதுவே செய்து காட்ட துப்பு கெட்ட நிலையை அடைகிற போது மட்டும், ஆஹ் இதை செய்வது வழிகேடு, இதை செய்தால் அல்லாஹ் தண்டிப்பான் எனவே செய்து காட்ட மாட்டோம் என்று ஓட்டமெடுப்பர்.

இந்த நயவஞ்சகப் பிழைப்பு பிழைப்பதற்கு பேசாமல், நாங்கள் காஃபிர்கள் தான் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு போகலாம் !!

பெப்ஸியா அப்பாவிகளின் இரத்தமா?


கொல்லப்படுவது இலங்கையிலுள்ள தமிழர்களாக இருந்திருந்தால் இன்னேரம் 
தமிழர் நலன் காப்போர் (?) எல்லாம் கொந்தளித்திருப்பர்.
ஒட்டு மொத்த தமிழக ஊடகங்களும் வெகுண்டெழுந்திருக்கும்.

நாட்டில் எங்கோ ஒரு மூலையில் குண்டு வெடித்து ஒருவருக்கு காயம் என்று செய்தியறிந்தால் அதை வைத்து ஆறு மாத திரைக்கதை எழுதி வியாபாரம் பார்ப்பர்.

ஒரே ஒரு பெண்ணை மானபங்கம் செய்து கொலை செய்து விட்டமைக்காக இரண்டு வருடமாக அந்த செய்தியே ஊடகத்தின் வயிற்றுப் பிழைப்பானது.

ஆனால், பாலஸ்தீனத்தில் ஒரு இனமே அழிந்து கொண்டிருக்கிறது, குழந்தைகளை நிற்க வைத்து சுட்டுப் பொசுக்குகிறார்கள்,
குழந்தையின் கண் முன்னே தாயை கொலை செய்கிறார்கள்.. வீடுகளில் குண்டு வீசி கண நேரத்தில் மக்களை தீக்கிரையாக்குகிறார்கள்.

சமூக வலைதளங்களில் காணொளிகளையும் செய்திகளையும் பார்த்து விட்டு, இது பற்றி எந்த இந்திய ஊடகமாவது செய்தி வெளியிட்டிருக்கிறானா என்று தேடிப் பார்க்கிறேன்..

படுபாவிகள்.. ஒரு துண்டு செய்தியை கூட இடவில்லை.

அதே சமயம், ஒரு கையில் பெப்ஸியை குடித்துக் கொண்டு, உலகமே அழிந்தாலும் கால்பந்துப் போட்டிக்காக தொலைகாட்சி முன் தவம் கிடக்கும் இளிச்சவாய் முஸ்லிம் சமூகம் இருப்பது வரை, இவர்களை குறை சொல்லியும் பயனில்லை !

நீங்கள் நம்பவில்லையென்றாலும், பாலஸ்தீனத்தில் செத்து மடிந்த ஒவ்வொரு உயிரும் மறுமையை நம்பக்கூடியவை !

இன்று இறந்து போகும் அந்த பிஞ்சுகள் நாளை அல்லாஹ்வின் சன்னிதானத்தின் முன் கேட்பார்கள், நீங்கள் குடித்தது பெப்சியையா அல்லது எங்கள் இரத்தத்தையா? என்று !

அல்லாஹ்வின் முன்னால் அந்த பிஞ்சுகளுக்கு பதில் சொல்லுங்கள், போதும் !

பறவைகளுக்கான கழிப்பிடம்


பெட்ரோல் விலை 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டால் கொந்தளிக்கும் மக்களுக்கு வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக்க 200 கோடி மக்கள் வரிப்பணத்தை அரசு செலவழிக்கும் போது கொந்தளிக்க‌ தெரியவில்லை !

பறவைகளுக்கு இலவச கழிப்பிடமாகவே தவிர, வேறெந்த பயனையும் தராத கற்சிலைக்கு 200 கோடி ரூபாயை இழக்க ஒரு இந்தியக் குடிமகன் தயாரென்றால், பெட்ரோல் விலை ஒரு ரூபாய் ஏற்றியதையும் பால் விலை ஐந்து ரூபாய் ஏறுவதையும் கண்டிக்கும் தார்மீக உரிமை அவனுக்கு இல்லை !

முந்தைய காங்கிரஸ் அரசு விலையேற்றம் செய்த போதெல்லாம் அதை கண்டித்து பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிய பத்திரிக்கைகள் இந்த இலவச கழிப்பிடத்தையும் கண்டித்து ஒரு பக்கமேனும் எழுதினால் இவர்கள் நியாய உணர்வுகள் என்று நாம் ஒப்புக் கொள்ளலாம் !

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (Q)


காதியானிகளின் மடமை வாதங்கள்

ஈஸா நபி இறக்கவில்லை (பாகம் 17)
----------------------------------------------------

ஈஸா நபி இறந்து விட்டார் என்று கூறுகிற கூட்டம், ஹதீஸில் மர்யமின் மகன் ஈசா மீண்டும் வருவார் என்று சொல்லப்படுபவைகளுக்கு திரிபு அர்த்தம் கொடுத்து, ஈஸா என்றால் மிர்சா என்றும் ஈஸாவின் தாய் மர்யம் என்றாலும் மிர்சா தான் என்றும் சொல்லி உலக மகா கேலிகூத்தினை நடத்துகின்றனர்.

இவ்வாறு திரிபு அர்த்தம் கொடுப்பது எந்த அளவிற்கு அபத்தமானது, இதன் காரணமாக கியாமத் நாளுக்கு சமீபமாக ஈஸா நபி இவ்வுலகில் செய்யக் கூடிய காரியங்களாக ஹதீஸ்கள் சொல்லும் எல்லா சம்பவங்களும் பொருளற்றவைகளாக மாறி விடுகின்றன என்பதையெல்லாம் முந்தைய பாகத்தில் விளக்கமாக பார்த்தோம்.

ஈஸா தான் மிர்சா என்பது உளரல் தான் என்பது எந்த பாமரனும் படித்து தெரிந்து கொள்வான்.

ஆதாரங்களும் உதாரணங்களும் உதவாமல் போகும் போது சில வரட்டு வாதங்களை முன் வைத்து தங்கள் கொள்கையை நிலைனிறுத்த பார்க்கிறது இந்த மிர்சாவின் சிஷ்யக்கூட்டம்.

ஈஸாவை உதாரணமாக எடுத்து சொல்வதாக அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்.
இதற்கு அர்த்தம், ஈஸா நபியை முஃமீன்களுக்கு உதாரணமாக கூறுகிறான் என்பது தானே தவிர, இன்னொரு மனிதரை ஈஸாவுக்கு பகரமாக அல்லாஹ் சொல்கிறான் என்று அர்த்தம் வைப்பது அபத்தம்.

அவ்வாறு அபத்தமான அர்த்தத்தை வைத்து, இங்கே அல்லாஹ் உதாரணம் என்று சொல்வது இவர்களது குருனாதர் மிர்சா சாஹிபை தான் என்று கொஞ்சவும் கூச்சமோ வெட்கமோயின்றி சொல்கின்றனர்.

ஈஸாவை உதாரணத்திற்கு சொல்லும் போது அவர்கள் கேலி செய்வார்கள் என்று அல்லாஹ் சொல்லி விட்டானாம்.
இதோ எங்கள் மிர்சாவை இவர்கள் கேலி செய்கிறார்கள், எனவே அல்லாஹ் சொல்வது நிரூபிக்கப்பட்டு விட்டது என்று..

மடமையான வாதமொன்றை எழுப்பி சிரிப்பு மூட்டுகின்றனர்.

மிர்சாவை ஈஸாவுக்கு உதாரணமாக அல்லாஹ் கூறுவது ஹதீஸ்களில் மட்டும் தானோ?

ஏன், குர் ஆனில் ஈஸா, ஈஸா என்று வரக்கூடிய பல வசனங்களுக்கும், இந்த இடத்தில் ஈஸா என்று அல்லாஹ் சொல்வது கிபி 1750 ல் எங்கள் ஊரில் வாழுந்து மறைந்த முஸ்தஃபா என்பவரை தான் என்று ஒரு கூட்டம் சொல்லும்.

ஈஸா பறவைக்கு ரூஹை ஊதினார் என்று அல்லாஹ் சொல்கிறான். இங்கே ஈஸா என்று யாரை அல்லாஹ் சொல்கிறான் தெரியுமா? கிபி 1250 இல் ஹைதரபாதில் வாழ்ந்த சலாஹுதீனை தான் அல்லாஹ் இங்கே சொல்கிறான் என்று ஆந்திராவிலிருந்து ஒரு கூட்டம் இதே போன்று கிளம்பும்.

இப்படியே ஈஸா ஈஸா என்று வரக்கூடிய இடங்களிலெல்லாம் அவரவர் அவரவருக்கு வசடிப்பட்ட நபர்களை சேர்த்து வைத்து தனி மதத்தை உருவாக்குவர்.

தப்பித் தவறிக் கூட அந்த நபர்களையெல்லாம் யாரும் விமர்சித்து விடக் கூடாது. அப்படி விமர்சித்தால், ஈஸாவை உதாரணத்திற்கு கூறும் போது உன் சமுதாயம் கேலி செய்வர் என்று அல்லாஹ்வே சொல்லி விட்டான் என்று கூறி எல்லா கூட்டமும் அந்த வசனத்தையே தூக்கிக் கொண்டு வரும்.

நல்லா இருக்குதுங்க உங்க கூத்து !

சரி அதுவும் போகட்டும்.

டமாஸ்கஸ் நகரில் ஈஸா இறங்குவார் என்று சொல்லும் போது, இங்கே ஈஸா என்றால் மிர்சா என்று பொருள் செய்ய வேண்டும் என்கிறீர்கள். சரி.

அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், குர் ஆனில் ஈஸாவை நாம் உதாரணத்திற்கு கூறும் போது.. என்கிற பொருத்தமேயில்லாத வசனத்தை தூக்கிக் காட்டுகிறீர்கள்.

சரி போகட்டும்..

அந்த உதாரணமெல்லாம் ஹதீஸில் மட்டும் தான் பொருந்துமோ? ஏன், குர் ஆனில் ஈஸா ஈஸா என்று வரக்கூடிய இடங்களிலும் மிர்சா மிர்சா என்று பொருத்துங்களேன்.

அப்படி செய்தால் பிழைப்பு சிரிப்பா சிரிக்கும் என்பதால் தான், தங்களுக்கு சாதகமான இடங்களில் மட்டும் மிர்சா என்பர்.
பாதகமான இடங்களில் ஈஸா என்றால் ஈஸா தான் என்று அந்தர் பல்டி அடிப்பர்.

வேதக்காரர்கள் அனைவரும் அவரை நம்பிக்கை கொள்வார்கள், அவர்களுக்கு மறுமையில் சாட்சியாக ஈஸா இருப்பார் என்று 4:159 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
இங்கே ஈசா என்றால் மிர்சாவாக்கும் என்று சொல்லுங்களேன் பார்போம்

'மர்யமின் மகன் ஈஸாவே! 'அல்லாஹ் வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!' என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?'' 459 என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்பதாக 5:116 வசனத்தில் சொல்கிறான்.

இங்கே மர்யம் என்றால் மிர்சா.. மர்யம் பெற்ற அவரது மகன் என்றாலும் மிர்சா.. எனவே ஈஸா என்றாலும் மிர்சா என்கிற நோபல் பரிசுத் தத்துவத்தை உதிர்த்து, அல்லாஹ் மறுமையில் இவ்வாறு கேட்பது ஈஸா நபியிடமல்ல, அவருக்கு உவமையாக்கப்பட்ட மிர்சாவிடம் தான் என்று சொல்லுங்களேன்.

இது போன்று ஈஸா என்று குர் ஆனில் வரக்கூடிய இடங்களிலெல்லாம் மிர்சா என்று சொல்லிப்பாருங்கள். உங்கள் ஞானபீடங்கள் சந்தி சிரிக்கும் என்பதை உணர்வீர்கள்.

இங்கெல்லாம் மிர்சா மிர்சா என்று பொருள் செய்தால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்து, எங்கெல்லாம் மிர்சா என்று பொருள் செய்தால் மிர்சாவின் புகழை ஓங்க செய்து, மீண்டும் வருவார் என்று நிலைனாட்ட முடியுமோ அங்கெல்லாம் ஈஸாவுக்கு பதில் மிர்சா என்று பொருள் செய்கிறீர்கள்.

இதை விட கேலிக்குரிய காரியம் வேறில்லை.

அடுத்ததாக

ஈஸா நபியை உடலோடு அல்லாஹ் உயர்த்தினான் என்கிற சான்றுக்கு பதில் என்கிற பெயரில் ஒரு அர்தமற்ற வாதமொன்றை முன்வைத்திருக்கிறீர்கள்.

அதாவது, இது போன்று முஹம்மது நபியும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எதிரிகள் அவர்களை சூழ்ந்தார்கள். அப்போது கூட ஈஸா நபியை உயர்த்தியது போல் முஹம்மது நபியை அல்லாஹ் ஏன் உயர்த்தவில்லை?
அப்படி இயற்கைக்கு மாற்றமாக அல்லாஹ் எதையும் செய்யவில்லையே, ஈசா நபிக்கு மட்டும் அப்படி செய்வானா?

என்கிற கேள்வியொன்றினை எழுப்பியுள்ளீர்கள்.

சிந்தித்து வைத்த வாதம் தானா இது?

முஹம்மது நபியை அவ்வாறு உடலோடு உயர்த்தவில்லை தான். அதனால் ஈஸா நபி உடலோடு உயர்த்தியதும் நம்ப தேவையில்லை என்பது அர்த்தமுள்ள வாதம் தானா?

சரி நான் கேட்கிறேன், ஃபிர் அவ்னின் கூட்டம் துரத்திய போது கடல்கள் பிளக்க மூசா நபியை அல்லாஹ் காப்பாற்றினானே, அது மட்டும் என்ன இயற்கையான நிகழ்வு தானோ?

காதியானி மதத்தவர் ஈஸா நபி குறித்து கேட்பது போல் ஒரு ஹிந்து நாளை உங்களிடம் வந்து,

என்னது? மூசாவை கடல் பிளந்து அல்லாஹ் காப்பாற்றினானா? என்ன கதை விடுறீங்க?

உங்க முஹம்மது நபிக்கு இப்படியொரு இக்கட்ட்டான நிலை வந்த போது இப்படி ஏதும் அற்புதம் செய்து அல்லாஹ் அவரை காப்பாற்றினானா? அல்லது இயற்கையான முறையில் காப்பாற்றினானா?

என்று கேள்வி வைப்பான். அப்போது திரு திரு என முழிப்பீர்களா? அல்லது,

அட கூறு கெட்டவனே, ஒருவரை அற்புதம் கொண்டு காப்பாறீனான் என்பதற்காக எல்லாரையும் எப்போதும் அற்புதம் கொண்டே காப்பாற்ற வேண்டும் என்று அல்லாஹ்வுக்கு எந்த அவசியமும் இல்லை என்பீர்களா?

சிந்திக்கவும்.

இப்படியெல்லாம் வாதம் வைக்க வேண்டிய அளவிக்கு உங்கள் நிலை தரைமட்டமானது பற்றி சிந்தித்து பாருங்கள்.

அடுத்ததாக ,

///குரானில் நீ காட்டிய ஆயத்தில் ரஃபஅ என்ற சொல்லுக்கு உடலோடு உயர்த்துதல் என்று பொருள் உள்ளதாக ஒரு ஆதாரமும் காட்ட முடியாது.////

என்று ஒரு இடத்தில் எழுதியிருக்கிறீர்கள்.

வண்டி வண்டியாக, அடுக்கடுக்கான ஆதாரங்களை ஏற்கனவே தந்திருக்கிறேன்.

தூர் மலையை உங்கள் மீது உயர்த்தி உடன்படிக்கை எடுத்தோம் என்று அல்லாஹ் சொல்கிறான். அதற்கு அந்த மலையையே (உடலோடு) உயர்த்துதல் என்று தான் பொருள். அல்லாமல், மலையின் அந்தஸ்த்தை உயர்த்தினோம் என்று பொருள்.

தொழுகையில் கைகளை உயர்த்துதல் பற்றி வரும் இடத்திலும் இதே ரஃபஅ என்கிற சொல் தான் உள்ளது. கையையே உயர்த்துதல் என்று தான் அர்த்தமேயொழிய கையின் செல்வாக்கை உயர்த்துதல் என்று பொருள் இல்லை.

இன்னும் பல சான்றுகளை ஏற்கனவே இந்த தொடரின் துவக்க பாகங்களில் வைத்திருக்கிறேன்.

எதையுமே சிந்திக்காமல், ரஃபஅ என்றால் உடலோடு உயர்த்துதல் என்று எந்த ஆதாரமுமே கிடையாது என்று அப்பட்டமாக பேசுகிறீர்கள்.

ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற உங்கள் நம்பிக்கையை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டுமே என்பதற்காக குர் ஆனிலிருந்து ஐந்து ஆதாரங்களை சொல்லிப் பார்த்தீர்கள்.

அவையாவும் முந்தைய நபிமார்கள் இறந்து விட்டதையும், மனிதன் பூமியில் தான் வாழ்வான், மனிதர்கள் யாரும் நிரந்தரமாக வாழ மாட்டார்கள் என பொதுவாக அல்லாஹ்வின் வரைவிலக்கணங்களையும் பற்றி பேசுகிற வசனங்கள்.

எதுவுமே ஈஸா நபி இறந்து விட்டார் என்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லவேயில்லை என்பதை விளக்கமாக பார்த்தோம்.

தொடர்ந்து, ஈஸா நபி இறக்கவில்லை, உயிருடன் மீண்டும் இவ்வுலகில் அல்லாஹ்வால் அனுப்பப்படுவார்கள், என்று குர் ஆன் கூறும் ஆறு சான்றுகளை தெளிவான முறையில் அறிந்து கொண்டோம்.

அடுத்து, மீண்டும் ஈசா நபி இந்த உலகிற்கு வருவார்கள் என்று நபி (சல்) அவர்கள் சொல்லும் ஹதீஸ்களை அடுக்கடுக்காக கண்டோம்.

ஒரு வாதத்திற்கு ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற உங்கள் நம்பிக்கை தான் சரி என்று ஒப்புக் கொண்டால் கூட, அதனால் அவர் திரும்ப இவ்வுலகிற்கு வருவார் என்கிற ஹதீஸின் கூற்றினை மறுக்க தேவையில்லை என்பதையும் விளக்கினோம்.

மர்யம் என்றால் மிர்சா, மர்யம் கற்பமானார், அவர் ஈஸாவை பெற்றெடுத்தார்,
மர்யமை மிர்சாவோடு முதலில் உவமைப்படுத்தி விட்டதால், இப்போது அந்த மர்யம் பெற்ற ஈஸாவும் மிர்சா தான்.
எனவே ஹதீஸ்களில் மர்யமின் மகன் ஈஸா.. என்று வரும் இடங்களில் எல்லாம் மிர்சா என்று பொருள் செய்ய வேண்டும் என்கிற கேலிக்குத்தினை தான் உங்களால் அரங்கேற்ற முடியுமே தவிர, கியாமத் நாள் ஆனாலும் எமது ஆக்கப்பூர்வமான எந்த கேள்விகளுக்கும் விடை சொல்ல இயலாது !

ஈஸா நபி தொடர் இத்துடன் நிறைவடைகிறது.

நபிக்கு பிறகு இன்னொரு நபி வர இயலுமா? என்கிற தலைப்பின் கீழ் நீங்கள் எழுதியுள்ள பல வேடிக்கைகளையும் நகைச்சுவை துணுக்குகளையும் அடுத்தடுத்து பார்க்கலாம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்

சூனியம் செய்ய சொல்லி சவால் விடலாமா?


எனக்கு சூனியம் செய்ய முடியுமா என்று சகோ. பிஜெ விடும் சவால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இவ்வேளையில், இந்த சவாலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பேருண்மைகளை புரிந்து கொள்ளாமல் சிலர் அதையும் கேலி செய்து வருகின்றனர்.

எனக்கு சூனியம் செய் என்றெல்லாம் சவால் விடக்கூடாது என்கிற விமர்சனம் ஒரு பக்கம் செய்கின்றனர்.

சிலைகளை கடவுளாக வணங்கிய கூட்டத்தாரிடம் இத்தகைய சோதனையை செய்து பார்க்க தான் அல்லாஹ் சொல்கிறான்.

இது தான் எங்கள் கடவுள் என்று சொன்னவர்களிடம், இதை உன் கடவுள் என்கிறாயே, இவற்றுக்கு இருக்கும் கால்களை கொண்டு இவற்றால் நடக்க இயலுமா?
இவற்றுக்கு இருக்கும் கைகளை கொண்டு இவற்றால் பிடிக்க இயலுமா?
இவற்றுக்கு இருக்கும் கண்களைக் கொண்டு இவற்றால் எதையாவது பார்த்திட தான் முடியுமா?

என்று நபியிடம் கேள்வியெழுப்ப சொல்கிறான்.

அத்துடன் நிறுத்தாமல்,
இவற்றுக்கு ஆற்றலும் சக்தியும் இருப்பது உண்மையென்றால் இவற்றை எனக்கெதிராக சூழ்ச்சி செய்ய வையுங்கள் பார்க்கலாம் என்று நபியை சவால் விட சொல்கிறான் அல்லாஹ் ! (பார்க்க 7:195)

அது போல்,

இப்ராஹிம் நபியுடன், உன் இறைவன் உயிர் கொடுப்பதை போல எங்களாலும் கொடுக்க முடியும் என்றெல்லாம் விதண்டாவாதம் செய்து வந்த இணை வைப்பாளர்களை நோக்கி, அத்தகைய இணை வைப்பு செயல் ஒன்றை செய்து காட்டி தங்களுக்கும் இறை சக்தி இருக்கிறது என்று நிரூபிக்குமாறு இப்ராஹிம் நபி, அவர்களை நோக்கி சவால் விடுக்கிறார்கள்.

இதை அல்லாஹ் 2:258 வசனத்தில் சொல்கிறான்.

சூரியனை மேற்கில் உதிக்க செய்யும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு தான் உண்டு. அதை உளப்பூர்வமாக நம்பிய இப்ராஹிம் நபி, அல்லாஹ்வை போல் தனக்கும் ஆற்றல்கள் உள்ளதாக பிதற்றியவனை நோக்கி, அப்படியானால் அல்லாஹ்வின் இந்த ஆற்றலை நீ வெளிகாட்டு பார்க்கலாம் என்று கேட்கிறார்கள்.

இவ்வாறு கேட்பதை அல்லாஹ் அங்கீகரிக்கிறான் !

இதே போல, எந்த சாதனமுமின்றி இன்னொருவனது கை கால்களை முடமாக்க முடியும் என்று நம்புவதும் அல்லாஹ்வின் ஆற்றலில் சொந்தம் கொண்டாடுவது தான் என்கிற வகையில், இப்ராஹிம் நபி பாணியில், நீ உண்மையாளன் என்றால் அதை செய்து காட்டு பார்ப்போம் என்று கேட்கலாம் !

இது போன்ற கேள்விகள் கேட்பது தான் மார்க்கத்திற்கு உட்பட்டது, பொய்யர்களை அடையாளம் காட்டவல்லது ! குர்ஆன் காட்டும் வழிமுறையே இது தான் !

சகோ. பிஜே இப்படி சவால் விடுகிறார் என்றால் இதன் பின்னால் ஒளிந்திருக்கும் சத்தியத்தை தான் இதன் வாயிலாக நாம் புரிய வேண்டும்.
சூனியம் என்பது இல்லவே இல்லை, அதன் மூலம் புற சாதனமின்றி எந்த பாதிப்பையும் செய்யவே இயலாது என்பது 100 % உண்மை.

அதன் காரணமாக தான் எனக்கு செய் பார்போம் என்று ஒருவரால் துணிந்து சொல்ல முடிகிறது. அவர் போல், இந்த சத்தியக் கொள்கையை ஏற்றிருக்கும் ஒவ்வொரு தவ்ஹீத்வாதிகளாலும் சொல்ல முடிகிறது.

ஒரு வேளை சவாலில் தோற்றுப் போனால் என் சார்பாக தான் இந்த பணத்தை தருவேன், ஜமாஅத்திலிருந்து அல்ல, என்று வேறு சொல்லியிருக்கிறார் பிஜே.

இந்த சவாலை விடுத்தவர் ஏதோ பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியுமல்ல, ஒரு வேளை சவாலில் தோற்று விட்டால் கூட கொடுப்பதற்கு ஐம்பது லட்சம் இருக்கிறது என்று சிந்திக்க.

சகோ. பிஜேவின் எதிரிகள் கூட அவர் சில லட்சங்களைக் கூட சம்பாதித்தவரில்லை, எந்த பெரிய சொத்துக்கும் அதிபதியில்லை என்பதை புரிந்து தான் வைத்துள்ளனர்.

பிறகு என்ன நம்பிக்கையில் சொல்கிறார்? என்ன நம்பிக்கையில் தவ்ஹீத்வாதிகள் அனைவருமே இந்த சவாலை விடுக்கிறோம்?

அல்லாஹ்வின் மீது கொண்டிருக்கும் ஈமான் !!

இந்த ஒற்றை காரணம் நெஞ்சில் இருப்பதை தவிர வேறெந்த ஒன்றுமே இந்த சவாலுக்கு தூண்டுகோலாக இருக்கவில்லை !!

அல்லாஹ்வை நம்பினேன் என்று சொன்னால் போதாது, நம்ப வேண்டிய விதத்தில் நம்ப வேண்டும் என்பது மிக மிக முக்கியம் !

இந்த சவால் அதற்கு ஒரு சான்று !!

இந்த சவால் முறியடிக்கப்படாமல் இருக்கும் காலமெல்லாம் சத்தியக் கொள்கை மேலோங்குகிறது என்பதே நிரூபிக்கப்ப‌டும் உண்மையாக இருக்கும் !!

அல்லாஹு அக்பர் !!

நயவஞ்சகப் போக்கு


மார்க்க ஆதாரங்கள் குர் ஆனும் ஹதீஸும் மட்டும் தான் என்பதை தெளிவான முறையில் நம்பிப் பின்பற்றாத காரணத்தால் தான், மக்காவில் இரவுத் தொழுகை 20 ரக்காஅத் தானே தொழுகிறார்கள்? அவர்களுக்கு ஏன் அது தவறென்று தெரியவில்லை?
என்று சிலர் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இதையே தனது நிலைக்கு வலிமையான சான்றாக வேறு காட்டும் விதத்தில் பேசுகிறார்கள் என்றால் இவர்கள் எந்த அளவிற்கு அறியாமையில் மூழ்கித் திளைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இதுவே போதுமாக இருக்கிறது.

தங்களுக்கு எதுவெல்லாம் சாதகமோ அதற்கெல்லாம் சவுதியையும் பெரும்பான்மையையும் சான்றாக எடுத்துக் கொள்வார்களாம்.

சரி நான் கேட்கிறேன், இந்த வாதத்தை முன் வைக்கும் நபர் தர்காவில் மூழ்கி திளைப்பவர் மத்ஹப் தான் வாழ்க்கை என்று நம்பி இருப்பவர்.

சவுதியில் தர்கா இருக்கிறதா? சவுதியில் மத்ஹப் பின்பற்றப்படுகிறதா? இருபது ரக்காஅத் தொழுவது தவறு என்று எந்த அறிஞருக்கும் ஏன் தெரியவில்லை? என்று இவர் கேட்கும் கேள்வியை நாம் இவரிடமே திருப்பிக் கேட்கிறோம்.

தர்கா கட்டுவது தவறில்லை என்று எந்த அறிஞருக்கும் ஏன் தெரியவில்லை?
மத்ஹபின் படி தான் வாழ வேண்டும் என்று எந்த அறிஞருக்கும் ஏன் புரியவில்லை?

குர் ஆனையும் ஹதீஸையும் மட்டுமே வாழ்க்கை நெறியாக கொண்டவர்களுக்கு சவுதியென்ன, அமெரிக்கா என்ன, ஒட்டு மொத்த உலகமே திரண்டு மாற்றான ஒரு கருத்தை சொன்னாலும், தவறு தவறு தான் !

குர் ஆனையும் ஹதீஸையும் பின்பற்றும் நபர் உலகில் ஒருவர் மட்டுமே மிஞ்சினால் கூட, அவரிடம் மட்டும் தான் சத்தியம் இருக்கிறது என்று பொருள் !

அதிகமான மக்கள் நன்றி செலுத்தாதவர்கள் தான் (திருக் குர் ஆன் 12:38)

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (P)


ஈஸா தான் மிர்சா என்கிற கொள்கை அபத்தம்

ஈஸா நபி இறக்கவில்லை (பாகம் 16)
--------------------------------------------------------------------

ஈஸா நபி மீண்டும் இவ்வுலகில் வருவார்கள் எனவும், வந்த பின்னர் அவர்கள் என்னன்ன செய்வார்கள் என்பதும் பல்வேறு ஹதீஸ்கள் வாயிலாக நபிகள் நாயகம் (சல்) அவர்கள் நமக்கு விவரிக்கிறார்கள்.

ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்கிற நம்பிக்கையை கொண்டிருக்கும் கூட்டத்தார் கூட, ஈஸா நபி கியாமத் நாளுக்கு சமீபமாக மீண்டும் வருவார் என்பதை நம்பலாம்.

அந்த நம்பிக்கையானது எந்த வகையிலும், ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற அவர்களது நம்பிக்கையை தகர்க்காது.

காரணம், இறந்து போனவர் என்று நம்பப்படுகிறவர் கூட மீண்டும் வருவார் என்று நம்பலாம். இறந்தவரைக் கூட மீண்டும் அல்லாஹ் அனுப்புவான்.

இவர்கள் நம்பிக்கைப்படி குர் ஆனில் ஈஸா நபி இறந்து விட்டதாக அல்லாஹ் சொல்கிறான் என்றால், அதை நம்பிக் கொண்டே, ஹதீஸில் அவர் திரும்ப வருவார் என்பதையும் இணைத்தே நம்ப எந்த தடையுமில்லை.

இதை விளக்கமாக முந்தைய பதிவில் பார்த்தோம்.

ஆனால், மார்க்கத்தை இப்படி புரியாமல், தங்கள் சுய இலாபத்திற்காக திரித்தும் வளைத்தும் மார்க்கத்தை கேலி செய்யப் புகுந்துள்ள இந்த காதியானிக் கூட்டம்,
அவர்களது தலைவரான மிர்சா சாஹிபை எப்படியாவது நபியாக ஆக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, எந்த வகையிலெல்லாம் அவருக்கு புகழ் சேர்க்க முடியுமோ அந்த வகைகளையெல்லாம் பயன்படுத்தி புகழ் சேர்க்க முனைகிறது.

தவிர, அந்த மிர்சா சாஹிபே கூட, ஒரு புகழ் விரும்பியாக இருக்கிற காரணத்தால் தான், ஈஸா நபி வருவார் என்று சொல்லப்படும் ஹதீஸை எடுத்துக் கொண்டு, இங்கே சொல்லப்படும் ஈஸா என்பது என்னை தான் குறிக்கும் என்று எந்த வெட்கமுமின்றி, இறைவனைப் பற்றி சிறு அச்சமுமின்றி புளுகினார்.

அதை அட்சரம் பிசகாமல் அப்படியே பின்பற்றி ஒழுகும் அவரது சீடர்களும், ஆஹா.. ஈஸா என்றால் மிர்சா.. ஈஸாவின் தாய் என்றாலும் மிர்சா என்று, தலைவன் எவ்வழியோ நாங்களும் அவ்வழி என்று கூறி பிதற்றி வருகின்றனர்!

ஈஸா நபி வருவார் என்பதாக சொல்லப்படும் ஹதீஸ்களை தற்போது ஒவ்வொன்றாக பார்ப்போம். இதற்கும் மிர்சாவுக்கும் என்ன தான் சம்மந்தம் என்று குட்டிக்கரணம் அடித்து சிந்தித்தாலாவது புரிகிறதா என்று பாருங்கள்.

மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான் என்று ஹதீஸ் சொல்கிறது.

இன்னொரு பக்கம்,
நானே மர்யமாக இருந்தேன், நானே கருவுற்றேன் என்று தமது நூலில் மிர்சா தத்துவம் பொழிந்திருக்கிறார்.

அதெப்படி அவர் மர்யமாக இருக்க முடியும்? அவர் ஆணா பெண்ணா? சரி, அப்படியே மர்யமாக இருந்தாலும் அவரே ஈஸாவை பெற்றெடுத்து, பின் அவரே ஈஸாவாகவும் ஆகி விடுவது என்பது உலக மகா கிறுக்குத்தனமல்லவா?

என்று நம் தரப்பில் கேள்வியொன்று வைக்கப்பட்டது.

இதற்கு பதில் சொன்ன காதியானிக் கூட்டமானது, மர்யமாக இருந்தேன் என்றால் நேரடியாக புரியக் கூடாது, அது உவமை. மர்யமாக என்றால்.. மர்யமைப் போன்று.. என்று புரிய வேண்டும்..
என்று வியாக்கானம் கொடுத்தனர்.

இது அர்த்தமற்ற வியாக்கானம் என்று அப்போதே மறுப்பும் சொல்லப்பட்டது.

ஒருவரை பற்றி உவமையாக சொல்வதாக இருந்தால் அதற்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணத்தைக் கடந்த உவமை பேச்சு இருக்காது.

உதாரணத்திற்கு, ஒருவரை சிங்கத்தோடு உவமைப்படுத்தி சொல்வதாக இருந்தால் அவர் சிங்கம் போன்றவர் என்று சொல்லலாம்.
இடத்திற்கு தகுந்தாற்போல், அவர் ஒரு சிங்கம்.. என்று கூட சொல்லலாம்.

இத்தோடு உவமை நிறைவு பெற வேண்டும். அப்போது தான் அது உவமை என்று ஆகும்.

அல்லாமல், அவர் ஒரு காலத்தில் சிங்கமாக இருந்தார், பின்னால் வாலெல்லாம் இருந்தது, காட்டில் தான் வசித்திருந்தார், மான்களையெல்லாம் வேட்டையாடி உண்பார்..

என்றெல்லாம் சொல்லி விட்டு, சிங்கம் என்றால் சிங்கம் போன்றவர் என்று உவமையாக சொன்னேன் என்று சொல்லக் கூடாது.
அதற்கு பெயர் உவமையல்ல, கிறுக்குத்தனம்.

மிர்சாவை மர்யமோடு உவமையாக சொல்ல நினைத்தால், மர்யமைப் போல் இருந்தார் என்று சொல்லலாம்.

அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லாமல், அவர் மர்யமாக இருந்தார், அவர் கற்பமுற்றார், குழந்தையை பெற்றெடுத்தார்.. என்றெல்லாம் சொல்வது அறிவுக்கு பொருந்தாத உவமை !

பின், அவ்வாறு பெற்றெடுத்த குழந்தை தான் ஈஸா என்று சொல்லி விட்டு, அந்த ஈஸாவும் மிர்சா தான் என்று கூறி, இதையும் உவமையாக தான் சொன்னேன் என்று சொன்னால், கீழ்பாக்கத்தில் அனுமதி இலவசம் என்று பொருள் !!

இதைப் பற்றி, மிர்சா சாஹிப் பற்றிய எனது முந்தைய தொடர்களில் விலாவாரியாக விளக்கப்பட்டிருக்கிறது.

விஷயத்திற்கு வருவோம்.

இவ்வாறு மர்யமை, மிர்சாவுக்கு உவமையாக சொல்லிவிட்டு, அந்த மர்யம் பெற்ற மகன் ஈஸா வருவார் என்று அல்லாஹ் சொன்னால், மர்யமும் உவமை, ஈஸாவும் உவமை என்று எந்த அறிவுள்ளவனாவது புரிவானா?

அல்லாஹ்வை இவர்கள் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்?

உவமை என்கிற பெயரில் அல்லாஹ் இப்படி தான் மனிதர்களை பைத்தியக்காரர்களாக ஆக்குவானா? இதற்கு பேசாமல், மிர்சா வருவார் என்றே சொல்லியிருக்கலாமே?

சரி அது போகட்டும்.

அல்லாஹ் அனுப்புவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அனுப்புதல் என்றால் மிர்சாவின் பிறப்பை தான் இங்கே சொல்கிறது என்கிறார்களா?

மிர்சா சாஹிப் இந்த பூமியில் பிறந்ததை தான் அல்லாஹ் அனுப்புவான் என்று இந்த ஹதீஸ் சொல்கிறதா?

அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து வருவார்கள் என்றூ நபி (சல்) அவர்கள் சொல்கிறார்கள்.

பிறக்கும் போது மிர்சா சாஹிப் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் தான் அணிந்திருந்தாரா?

சரி, இது மிர்சா சாஹிபின் பிறப்பைக் குறிக்கவில்லை என்றால், தொடர்ந்து, டமாஸ்கஸ் நகரில் இறங்குவார்கள் என்று நபி சொல்வது போல் மிர்சா சாஹிப் டமாஸ்கஸ் நகரில் வந்தாரா?

அப்போது தான் அவர் குங்கும சாயமிட்ட ஆடையை அணிந்திருந்தாரா?

சரி அதுவும் போகட்டும், மலக்குகள் புடை சூழ, அதுவும், மலக்குமார்களின் சிறகுகளின் மேல் கைகளை வைத்தவராக இறங்குவது மிர்சா சாஹிப் தானா?

அவர் பிறக்கும் போது அப்படி தான் பிறந்தாரா?

அல்லது, காதியான் நகரிலிருந்து டமாஸ்கஸ் நகருக்கு மலக்குகளின் சிறகில் கை வைத்து பயணம் சென்றார் என்கிறீர்களா?

என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார் என்று நபி (சல்) அவர்கள் சொல்லியுள்ளார்களே,
மிர்சா சாஹிப் விட்ட பெருமூச்ச்சின் காரணமாக இறந்து போன காஃபிர்களின் பட்டியல் எங்கே?

தஜ்ஜாலை தேடுவார்கள் என்று நபி (சல்) அவர்கள் சொல்லியுல்ளார்கள்.
மிர்சா சாஹிப் எந்த வருடம், எங்கே வைத்து தஜ்ஜாலை தேடினார்? என்ன ஆதாரம்?

பைத்துல் முகத்தஸில் வைத்து அவனை அவர்கள் கொல்வார்கள் என்றும் ஹதீஸ் சொல்கிறது.

மிர்சா சாஹிப் எந்த வருடம் பைத்துல் முகத்தஸ் சென்றார் ? பாஸ்போர்ட், விசாவோடு சென்றாரா அல்லது மலக்குகளின் தோளில் சென்றாரா?
அங்கே தஜ்ஜாலை கொன்றார் என்பதற்கு என்ன ஆதாரம்?

நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர் தான் மிர்சா என்றால் அப்போதும் புகைப்படக் கருவிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டனவே.. தஜ்ஜாலை கொலை செய்யும் காட்சி படமாக்கப்ப‌ட்டதா? என்றால் புகைப்படங்களை வெளியிடுங்களேன்.

பன்றியை கொல்வார், சிலுவையை முறிப்பார் என்றெல்லாம் சொல்லப்படும் ஹதிஸ்களுக்கு மட்டும் வியாக்கானம் கொடுத்து, பன்றி என்றால் கெட்ட காரியம், சிலுவையை முறித்தல் என்றால் கிறுத்தவ மதத்தை அழித்தல்..

என்று சால்ஜாப்பு சொல்ல தெரிந்த மிர்சாவின் சீடர்கள், மேலே நாம் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கும் அதே போன்ற சால்ஜாப்புகளை சொல்ல வேண்டியது தானே?

சரி, பன்றியை கொல்வார், சிலுவையை முறிப்பார் என்பதற்கு சால்ஜாப்பு சொன்னார்கள், வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதற்கு ஏதேனும் சால்ஜாப்பு சொன்னார்களா?

இல்லையே !!

மிர்சா சாஹிப் அகில உலகையும் ஆட்சி செய்யும் ஆட்சியாளராக எப்போது இருந்தார்?
சரி, அப்படியே ஆட்சி செய்தார் என்றால், அவர் ஆட்சி காலத்தில் செல்வம் கொழித்து, வாங்குவதற்கு எவருமே இல்லை என்கிற நிலை ஏற்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?

இதை அறிவுள்ள எவனாவது நம்புவானா?

ஈஸா நபி இறங்கும் போது பொறாமையும், கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் என்று ஹதீஸ் சொல்கிறது. ஈஸா என்றால் மிர்சா என்று சொல்பவர்கள், மிர்சா சாஹிப் காலத்தில் எந்த பொறாமையும் கள்ளம், கபடமும் இருக்கவில்லை என்று சொல்கிறார்களா?

இதே மிர்சாவுக்கும், இவரது காலத்தில் வாழ்ந்த இன்னொருவருக்கும் இடையே நடந்த தகறாறு ஒன்று நீதி மன்றம் வரை சென்று, அது நாள் வரை, என்னை நம்பாதவார்கள் காஃபிர்கள் என்று பிரச்சாரம் செய்து வந்த மிர்சா சாஹிப், நீதிபதி முன்னால் என்னை நம்பாதவர்கள் காஃபிர்கள் என்று நான் சொல்லவில்லை..

என்று ஆகாயப்பல்டி அடித்த வரலாறுகள் எல்லாம் மிர்சா சாஹிபே தனது நூலில் எழுதி வைத்திருக்கிறார்.

கள்ளமும் கபடமும் இவர் காலத்தில் ஒழிந்து விடும் என்றால் இவருக்கும் இன்னொருவருக்கும் இடையே ஏன் சண்டை மூண்டது?
ஏன் இருவரும் நீதி மன்றம் சென்றார்கள்?
சரி, மிர்சா பக்கம் தான் நியாயம் என்றே வைப்போமே, அப்படியானால் அந்த மற்றொரு நபர் பொய்யர் என்று தானே பொருள்?
அப்படியானால் மிர்சா காலத்தில் பொய்களும் புரட்டுகளும் ஒழியவில்லை என்று தானே ஆகிறது?

அப்படியானால் மேற்படி ஹதீஸ் எப்படி மிர்சாவைக் குறித்து பேசுகிறது என்கிறீர்கள்?

உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்'' என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்.

ஈஸா தான் மிர்சா என்றால், உங்கள் நம்பிக்கைப்படி மிர்சா காலத்தில் அவர் கலிஃபாவாக இருந்தாரா அல்லது வேறொருவரா?
அவர் கலிஃபாவாக இருந்தார் என்றால் உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும் என்று மிர்சா சாஹிப் எப்படி சொல்லியிருப்பார்?

அவர் அப்படி சொன்னது உண்மையென்றால் மிர்சா சாஹிப் கலிஃபாவாக இருக்கவில்லை.
அவர் கலிஃபாவாக இருக்கவில்லை என்றால், ஈஸா நபி நீதமாக ஆட்சி புரிவார் என்கிற ஹதீஸ் ஈஸா நபியை தான் சொல்கிறதே தவிர, மிர்சாவை சொல்லவில்லை என்று நிரூபணமாகிறது.

எந்த வழியில் யோசித்தாலும் மிர்சா சாஹிப் பொய்யர் என்று நிரூபணமாகாமல் இருக்கவில்லை என்பதை சிந்திக்கவும்.

யாராலும் வெல்ல முடியாத ஒரு கூட்டத்தை தூர் மலைக்கு ஈஸா நபி அழைத்து சொல்வார்கள், அல்லாஹ் அப்படி அவர்களுக்கு கட்டளையிடுவான் என்று நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்களே, அது மிர்சா சாஹிப் காலத்தில் என்றைக்கு, எப்போது நிகழ்ந்தது?

தூர் மலைக்கு மிர்சா எப்போது அவர்களை அழைத்து சென்றார்?

யாராலும் வெல்ல முடியாத கூட்டம் என்றால் மிர்சா சாஹிப் அந்த கூட்டத்தைக் கொண்டு ஒட்டு மொத்த உலகையும் ஆட்டிப் படைத்திருக்க வேண்டுமே.. ஏன் செய்யவில்லை?

மிர்சா சாஹிபின் காலத்தின் போது தான் உலகப் போர்கள் மூண்டன.

யாராலும் வெல்ல முடியாத கூட்டத்தார் அந்த போர்களில் கலந்து கொண்டார்களா? அப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

இன்றைக்கு அந்த கூட்டம் எங்கே? அழிந்து விட்டார்களா? அழிந்து விட்டார்கள் என்றால் அதற்கு என்ன ஆதாரம்?

ஆக, ஈஸா தான் மிர்சா, கியாமத் நாளுக்கு சமீபமாக வருவது ஈஸா என்று ஹதீஸ் சொன்னாலும், அந்த ஈஸா என்பது மிர்சாவை தான் குறிக்கிறது என்று சொல்வது அர்த்தமற்ற உளரல் என்பது மேற்கூறிய கேள்விகளுக்கு இவர்கள் செய்யும் சமாளிப்புகளே சான்றாக நிற்கும் !

ஈஸா நபி இறந்து விட்டதாக இவர்கள் நம்புவதற்கு இவர்கள் முன் வைத்த ஆறு காரணங்களும் அர்த்தமற்றவை என்பது நிரூபணமானது.

ஈஸா நபி இறக்கவில்லை என்று மிகவும் அழகிய முறையில் அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருப்பதை காரண காரியங்களுடனும், இலக்கன சான்றுகளுடனும் தெளிவாக விளக்கப்பட்டன.

ஏழு சான்றுகள் மூலம் ஈஸா நபி இறந்து போகவில்லை, மீண்டும் இவ்வுலகில் வந்த பின்னர் தான் இறப்பார்கள் என்று நிரூபிக்கப்பட்டன.

தொடர்ந்து, ஒரு வாதத்திற்கு ஈஸா நபி இறந்து விட்டார் என்று வைத்துக் கொண்டால் கூட, அப்போதும் இந்த மிர்சா சாஹிப் கொள்கை நிலைபெறாது என்பதும் ஹதீஸ்கள் வாயிலாக விளக்கப்பட்டன.

ஈஸா நபி தொடரில் இவர்கள் சில அபத்தமான வாதங்க‌ள் சிலவற்றை எழுப்பியிருப்பது தற்போது தான் நம் கவனத்திற்கு வந்தது.

இவர்களது வாதம் ஒன்று கூட பதிலளிக்கப்படாமல் விடுபடாது என்று நாம் முன்னரே சொன்னது போல், அந்த அபத்தங்களை அடுத்த பாகத்தில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

தொடரும்.
 

ஊடகங்களுக்கு ஓர் வேண்டுகோள்


பட்டப்பகலில் ஓடும் பேருந்தில் பெண்ணை மானபங்கப்படுத்தி வெளியே தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்யக்கூடிய நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை ஊடகம் நினைவில் கொள்ள வேண்டும்.

தனது ஆசைக்கு அடிபணிய மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசி மிருகத்தனம் காட்டுகிற இந்தியாவில் நாம் வசிக்கிறோம்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாய், நாட்டை பாதுகாக்க வேண்டிய ராணுவமே வீடு புகுந்து பெண்களை கற்பழித்த கொடுமைகள் நிறைந்த நாடு நம் நாடு.

குடித்து விட்டு, தாய் யார், மகள் யார், சகோதரி யார் என்கிற பாகுபாடு கூட தெரியாத காம வெறியர்களைக் கொண்ட நாடு நம் பாரத நாடு !
தமது காமப்பசிக்கு செத்த பிணங்களைக் கூட விட்டு வைக்காத மனித மிருகங்கள் நிறைந்திருக்கும் நாட்டில் தான் நாம் வசிக்கிறோம்.

பச்சிளங் குழந்தையை கற்பழித்து கொலை செய்யும் மாபாதக செயல்கள் நிரம்பப் பெற்ற தேசம் இந்த பாரத தேசம்.

பெண்கள் என்றால் அவர்களும் மனிதர்கள், ஆண்களைப் போன்ற உணர்வுள்ளவர்கள் என்கிற நிலையை கடந்து பெண்களையும் ஒரு சந்தைப் பொருளாக பார்க்கும் வக்கிரப் புத்தி நிரம்பப் பெற்ற நாடு இந்திய நாடு.

தொழிலாக செய்தால் தான் தவறு, அதையே விரும்பி செய்தால் தவறில்லை என்று விபச்சாரத்திற்கு பச்சைக் கொடி காட்டும் அரசு இந்திய அரசு !

தாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலையில் கூட, தங்கள் விரல் நகம் கூட படா வண்ணம், நம் பெண்களை பத்திரமாக அனுப்பி வைத்தவர்களை விமர்சனம் செய்து பிழைப்பு நடத்துவதை ஒதுக்கி வைத்து விட்டு,

இந்திய நாட்டில் பெண்களுக்கு எதிராக நொடிக்கொரு பொழுது நடைபெறும் கொடுமைகளை கண்டித்து, அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் அனைவரையும் தோலுரித்து, ஊடகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டும் வேலையை செய்யுங்கள் என்று இந்திய ஊடகத்தை கேட்டுக் கொள்கிறோம் !

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (O)


டமாஸ்கஸில் வருகை தரும் ஈஸா நபி

ஈஸா நபி இறக்கவில்லை (பாகம் 15)
----------------------------------------------------------

இதுவரையுள்ள தொடர்களில், ஈஸா நபி இறந்து விட்டார் என்று தான் புரிய முடிகிறது என்று சொல்லி அஹமதிய்யாக்கள் எடுத்து வைக்கும் இறை வசனங்கள் உண்மையில் அவர் இறந்து விட்டார் என்கிற கருத்தை தரவேயில்லை என்பதையும், ஈஸா நபியைப் பற்றி அவை பேசவேயில்லை என்பதையும் தெளிவாக அறிந்து கொண்டோம்.

அதை தொடர்ந்து, ஈஸா நபி இறக்கவில்லை, அவர் மீண்டும் அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்படுவார் என்பதை குர் ஆனின் பல்வேறு வசனங்கள் வாயிலாக அடுக்கடுக்கான சான்றுகளுடன் அறிந்து கொண்டோம்.

ஈஸா நபி கடவுளில்லை என்பதை சொல்வதற்கு அவர் மரணித்து விட்டதை சொல்லாமல், அவருக்கு முன் வந்தவர்கள் மரணித்து விட்டார்கள் என்று சொல்வதன் மூலம் ஈஸா நபி இன்னும் மரணிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறான்.

அத்துடன், ஒருவரது மரணம் தான் அவரிடம் கடவுள் தன்மை இல்லை என்பதற்கு மிகப்பெரிய சான்று எனும் போது, ஈஸா நபி விஷயத்தில் அதை சொல்லாத அல்லாஹ், அவர் உணவு உண்டு வந்ததால் கடவுள் இல்லை என்று முற்றிலும் மாறுபட்ட விளக்கமொன்றினை அளிப்பதையும் பார்த்தோம்.

தொடர்ந்து, அவர் அல்லாஹ்வால் உடலோடு உயர்த்தப்பட்டதையும், உடலோடு உயர்த்துதலுக்கு அந்தஸ்து உயர்வு, தகுதி உயர்வு என்று அஹமதியாக்கள் சொல்லும் வியாக்கானங்கள், அவைகளுக்குரிய தக்க மறுப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாய் பார்த்தோம்.

அவர் கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார் என்று அல்லாஹ் சொல்வதன் மூலமும் அவர் மரணிக்கவில்லை, மீண்டும் வர உள்ளார் என்பது தெளிவாகிறது. அதையும் விளக்கமாய் பார்த்தோம்.

அவர் இன்னும் மரணிக்கவில்லை என்பதை இன்னும் தெளிவாக உறுதி செய்யும் விதமாய் அல்லாஹ் தொடர்ந்து கூறூம் போது, அது நாள் வரை அவரை சரியான முறையில் நம்பிக்கை கொள்ளாதவர்கள் கூட, அவர் மரணிப்பதற்கு முன்னால் நம்பிக்கை கொண்டு விடுவார்கள் என்று சொல்லி, அவரது மரணம் இனி மேல் தான் நிகழப் போகிறது என்பதை தெளிவாக்குகிறான்.

இதற்கெல்லாம் இந்த அஹமதியா மதத்தவர்கள் சொல்லும் சமாளிப்புகள் என்னவாக இருக்கும் என்பதையும் நாமே முன் வைத்து, இன்னும் சொல்லப்போனால், அவர்கள் வைக்காத வாதங்களை கூட நாமே எடுத்து வைத்து, துளியளவும் சந்தேகமில்லாத வகையில் நமது கொள்கையினை அழகிய முறையில் நிறுவியிருக்கிறோம்.

இதற்கு எதிராக வாதம் புரிபவர்கள் எவருமே நுனிப்பில் மேய்பவராகவும், தங்கள் கொள்கையை திணிக்க எத்தகைய கீழ் நிலைக்கும் இறங்குபவர்களாகவும் தான் இருக்கின்றனர் என்பதும் நிரூபணமானது !

இந்த நிலையில், ஒரு வாதத்திற்கு, ஒரு பேச்சுக்கு, ஈஸா நபி இறந்து விட்டார் என்றே வைப்போமே..

அதன் காரணமாகவாவது அவர் மீண்டும் வருவார் என்பதை மறுக்க வேண்டுமா? என்று சிந்தித்தால் அவர் மரணித்து விட்டார் என்று நம்புகிறவர்கள் கூட அவர் மீண்டும் வருவார் என்பதை மறுக்க கூடாது என்பதே ஹதீஸ்கள் வாயிலாக நாம் புரிய முடிகிற ஒன்றாக இருக்கிறது !

இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து தமது இரு கைகளையும் இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது வைத்தவர்களாக டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். அவர்கள் தலையைக் குனிந்தால் நீர் சொட்டும்! தலையை உயர்த்தினால் முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் உதிரும். அப்போது அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும். அவர்கள் தஜ்ஜாலைத் தேடுவார்கள். (பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள) லுத் என்ற கிராமத்தின் வாசலில் அவனைக் கொல்வார்கள்.

நூல் : முஸ்லிம் 5228

மர்யமுடைய மகன் நீதியான தீர்ப்பளிப்பவராக இறங்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2476

ஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும். பொறாமையும், கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 221

உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும் போது ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 3449

ஈஸா நபியவர்கள் இறங்கும் போது அப்போதைய முஸ்லிம்களின் தலைவர் 'வாருங்கள்! எங்களுக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று ஈஸா நபியிடம் கேட்பார். அதற்கு ஈஸா நபியவர்கள் 'உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்'' என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 225

ஸா நபியவர்கள் அவனைத் (தஜ்ஜாலை) தமது கையால் கொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5157 (ஹதீஸின் பகுதி)

தஜ்ஜாலைக் கொன்ற பின் தஜ்ஜாலிடமிருந்து தப்பித்த கூட்டத்தினர் ஈஸா நபியிடம் வருவார்கள். அவர்களின் முகத்தைத் தடவிக் கொடுப்பார்கள். சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்.

நூல் : முஸ்லிம் 5228

தஜ்ஜாலை ஈஸா நபி கொன்ற பின்னர் ஏழு ஆண்டுகள் எந்த இருவருக்கிடையிலும் எந்தப் பகையும் இல்லாத நிலை ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5233

இந்த நிலையில் 'யாராலும் வெல்ல முடியாத அடியார்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவர்களைத் தூர் மலையின் பால் அழைத்துச் செல்வீராக'' என்று ஈஸா நபிக்கு அல்லாஹ் செய்தி அனுப்புவான்.

நூல் : முஸ்லிம் 5228

மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் யாவுமே, கியாமத் நாளுக்கு சமீபமாக ஈஸா நபி இந்த பூமியில் வருவார்கள் என்பதை நேரடியாகவே சொல்கின்றன.

முஹம்மது நபி தான் இறுதித் தூதர் எனும் போது ஈஸா நபி எப்படி மீண்டும் வருவார் என்கிறீர்கள்? என்று எழுப்பப்படும் கேள்வியிலும் எந்த பொருளும் இல்லை என்பதற்கு மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் சான்று பகர்கின்றன.

ஈஸா நபியவர்கள் மர்யமின் மகனாக தான் வருவாரே தவிர, நபியாக வர மாட்டார் என்று அந்த ஹதீஸ்கள் சொல்கின்றன.

ஈஸா தான் மிர்சா, ஈஸா வருவார் என்றால் மிர்சா வருவார் போன்ற கிறுக்குத்தனங்களைப் பற்றியெல்லாம் நாம் பார்ப்பதற்கு முன், நாம் இங்கே அடிப்படை கேள்வியொன்றினை முன்வைக்கிறோம்.

சரி, ஈஸா நபி இறந்து விட்டார், அதனால் என்ன? அது எப்படி மிர்சா சாஹிப் மீண்டும் இவ்வுலகில் வருவதை உறுதிப்படுத்தும்?

மிர்சா சாஹிப் மீண்டும் வருவார் என்று அல்லாஹ்வோ ரசூலோ சொல்லியிருக்கிறார்களா?

ஈஸா மீண்டும் வருவார் என்று ஹதீஸ் இருந்தால், ஈஸா வருவார் என்று தானே நம்ப வேண்டும்? ஈஸா இறந்து விட்டார் என்று நம்புகிறவர்கள் கூட, அவர் மீண்டும் வருவார் என்பதை மறுக்க தேவையில்லையே?

இந்த அஹமதிய்யா மத்தவர்கள் நம்பிக்கைப் படி ஈஸா நபி இறந்து விட்டார். சரி. இறந்த ஈஸா நபியை அல்லாஹ் மீண்டும் பூமிக்கு அனுப்புகிறான். இப்படி நம்ப எது இவர்களுக்கு தடை?

ஈஸா என்றால் மிர்சா என்று போதையில் உளர வேண்டிய அவசியமென்ன?

ஆக, மிர்சா எனும் பெரும் பொய்யரை, ஃப்ராட் பேர்வழியை நபியாக அழகு பார்க்க இவர்களுக்கு ஆசை,
அவர் மீண்டும் இவ்வுலகில் வருவார் என்று பிரச்சாரம் செய்ய ஆசை.
ஆனால், இப்படி சொல்கிறீர்களே, இதற்கு என்ன ஆதாரம்? என்று எவராவது கேட்டால் என்ன செய்வது?
இருக்கவே இருக்கிறது, ஈஸா வருவார் என்கிற ஹதிஸ்கள்.

இதோ, இங்கே ஈஸா என்று சொல்லப்பட்டிருப்பது எங்கள் மிர்சா தான்..

என்று திரிபு வேலை செய்கின்றனர் !

இவர்கள் என்ன தான் குட்டிக்கரணங்கள் அடித்தாலும், நாம் இங்கே எழுப்பியிருக்கும் கேள்வி என்றைக்கும் மிச்சமாகவே இருக்கும் !

ஒரு பேச்சுக்கு மர்யமின் மகன் ஈஸா நபி இறந்து விட்டார் என்று வைத்துக் கொண்டால் கூட, இறந்த ஈஸா நபி மீண்டும் வருவார், ஆட்சி செய்வார், தஜ்ஜாலை கொல்வார் என்றெல்லாம் நம்ப எது தடையாக இருக்கிறது இந்த அஹமதியாக்களுக்கு?

மர்யம் என்றால் மிர்சா, மர்யம் பெற்ற ஈஸா என்றாலும் மிர்சா.. ஈஸா வருவார் என்றால் மிர்சா வருவார் என்கிற கிறுக்குத்தனங்களையும் அதையொட்டிய கேள்விகளையும் அடுத்தடுத்து பார்போம், இன்ஷா அல்லாஹ்.

தொடரும்.

விமானப் பிறை


விமானத்தின் ஜன்னல் வழியே பிறை பார்க்கப்பட்டதை பற்றி மெளலானா (?) அவர்கள் அளித்த பேட்டியை தற்போது தான் முழுமையாக பார்க்க நேர்ந்தது.

நாங்கள் பிறை பார்த்து விட்டோம் எனவே எங்களுக்கு நோன்பு வைப்பது ஃபர்ல் (கடமை) ஆகி விடுகிறது.
இந்த செய்தியை யாரெல்லாம் நம்புகிறீர்களோ, அவர்களுக்கும் கடமை.
யாரெல்லாம் இதை நம்பவில்லையோ அவர்களுக்கு கடமையில்லை என்கிறார் மெளலானா.

மார்க்கத்தின் அடிப்படை கோளாறு நம்பர் 1.

யார் பிறையை பார்க்கிறார்களோ அவர்கள் அந்த தகவலை பிறருக்கு சொல்ல வேண்டும், அதை ஏற்றுக் கொண்டு அனைவரும் நோன்பை நோற்க வேண்டும்.

இவர் விமானத்தில் பார்த்த பிறை ரமலான் முதல் பிறையென்றால், நோன்பை அனைவருமே நோற்பது கட்டாயம் என்று தான் இவர் சொல்லியிருக்க வேண்டும்.

இவர் பார்த்ததை நம்பாதவர்கள் குற்றமிழைப்பவர்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.

நான் அறிவிக்கும் இந்த பிறை தகவலை ஏற்காமல் நோன்பு நோற்காதவர்கள் எல்லாம் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்க வேண்டும்.

இவர் பார்த்தது தான் சரி என்பதை இவர் நம்பியதால் தான் இவர் நோன்பு நோற்கிறார்.
இவர் நோன்பு நோற்றது தான் சரி என்றால், அந்த செய்தியை புறக்கணிப்பவர்கள் இவர் பார்வையில் குற்றமிழைப்பவர்களாக கருதப்பட வேண்டும்.

மார்க்கத்தின் அடிப்படையில் நின்று செயல்படுவது என்றால் இது தான்.

ஆனால் இவரோ, நான் சொல்வதை நம்புபவர்களுக்கு நாளை ரமலான் ஆரம்பிக்கிறது, நம்பாதவர்களுக்கு அடுத்த நாள் ஆரம்பிக்கிறது,
நம்பியவர்களுக்கு நோன்பு நோற்பது கடமை, நம்பாதவர்களுக்கு கடமையில்லை என்று மார்க்கத்தை கேலி செய்கிறார்.

சரி மெளலானா, இரவுத் தொழுகை எப்போது தொழுவது? என்று கேட்டதற்கு,
மெய்சிலிர்க்கும் அடுத்த அறிவிப்பொன்றை செய்கிறார்.

அதாவது, இரவுத் தொழுகை என்பது சுன்னத் தான். எனவே இன்று இரவு தொழவில்லையென்றாலும் பரவாயில்லை, நாளை முதல் தொழலாம்.. என்கிறார்.

அது தான் சுன்னத் தானே? பிறகு எதற்கு நாளை தொழ வேண்டும்?? இரவு தொழுகை என்பது ஏதோ ரமலானில் மட்டும் தொழப்பட வேண்டியது இல்லையே?

இதையல்லவா அவர் முதலில் சொல்ல வேண்டும்?

எல்லா காலமும் தொழ வேண்டியது தான் இரவுத் தொழுகை. எனவே அதை இன்றும் தொழுவோம் என்று அவர் சொல்லியிருக்க வேண்டும்.

அல்லது, ரமலான் என்பதற்காக தான் நாளை தொழுகிறோம் என்று இவர் சொல்வதாக இருந்தால் இவர் கணக்குப்படி இன்றே ரமலான் துவங்கி விட்டதே?

இன்று துவங்கிய ரமலானை பேணுகிறோம் என்று சொல்லி நாளை இரவுத் தொழுகை தொழலாம் என்றால் இவர் மார்க்கத்தை பொடுபோக்காக கருதுகிறார் என்றாகிறது.

கால் வலிக்கிறது என்பதற்காக இன்று தொழாமல் இருக்கவில்லை, மாறாக சமூக ஒற்றுமைக்காக தொழாமல் இருக்கிறோம் என்று வெட்கமில்லாமல் அறிவிப்பும் செய்கிறார் என்றால், மார்க்கத்தை விட இவருக்கு சல்லிகாசுக்கு பிரயோஜனமில்லாத‌ சமுதாய ஒற்றுமை தான் பெரிது என்று இவரே ஒப்புக் கொண்டதாக ஆகிறது !

மேக மூட்டம் மறைத்தால் ஒரு நிலை, மறைக்கவில்லை என்றால் இன்னொரு நிலை என்பதல்லவா நபிகள் நாயகம் (சல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை?

என்கிற கேள்விக்கு, உயர்ந்த கட்டிடத்திற்கு மேல், மொட்டை மாடிகளில் சென்று நாம் பிறை பார்ப்பதில்லையா? அது போல தான்.. என்று எந்த வித சங்கூஜமும் இல்லாமல் தனது விமான ஃபத்வாவிற்கு முட்டுக் கொடுக்கிறார்.

மொட்டை மாடியில் சென்று பிறை பார்ப்பது ஏதோ ஆகாயத்தைக் கடந்து விண்வெளிக்கு சென்று பார்ப்பது போல.. என்று கருதுகிறார் போலும்.

கீழே நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தால் வானமே தெரியாது.. அந்த அளவிற்கு கட்டடங்களும் மரங்களும் நம் கண்களை மறைக்கும் என்பதால் தான் மொட்டை மாடிக்கு சென்று பிறை பார்க்கிறார்கள்.

அல்லாமல், மேகத்தை கடந்து பிறை தென்படும் என்கிற எதிர்பார்ப்பில் அல்ல.

வானம் எந்த தடங்கலும் இன்றி முழுமையாக தென்பட்டால் தான் வானத்திலிருக்கும் பிறை தெரியும்.

அதற்காக மொட்டை மாடி செல்வதை, விமானத்தில் மேகத்தை கடந்து பிறை பார்ப்பதோடு முடிச்சு போடுகிறார் என்றால் இவர் மார்க்கத்தை கேலி செய்கிறாரா அல்லது அறியாமையில் மூழ்கித் திளைக்கிறாரா? என்று நமக்கு புரியவில்லை.

சரி, நான் கேட்கிறேன்,

இயல்பாக, மேகமூட்டம் காரணமாக‌ கண்களுக்கு தென்படாத பிறை மேகத்தை கடந்து சென்று பார்த்தால் தெரியும் தான்.

அது போல,
அஸ்தமித்து விட்ட சூரியனை, விமானத்தில் ஏறி சென்றால் கூட‌ மீண்டும் பார்க்கலாம் !

சகோதரர்களே, மதுரையில் மஹ்ரிபுக்கான பாங்கை கேட்டவாறு விமானமேறினேன்.
எனது விமானம் டேக் ஆஃப் ஆன போது அஸ்தமித்த சூரியனை நான் முழுமையாக பார்த்தேன், யாரெல்லாம் நான் சொல்வதை நம்புகிறார்களோ அவர்களுக்கெல்லாம் அசர் தொழுகை இன்னும் களா ஆகவில்லை, தொழுது கொள்ளலாம், யாரெல்லாம் இதை நம்பவில்லையோ அவர்கள் எல்லாம், மஹ்ரிப் தொழ செல்லலாம்..

என்று எவராவது சொன்னால் அது எப்படி கேலிக்குரியதாக ஆகுமோ அப்படி இருக்கிறது இவரது விமான பிறை ஃபத்வாவும் !

மேலும், 5 நிமிடம் இவரை எந்த தலைப்பைக் கொடுத்து பேச சொன்னாலும் அதில் 10 முரண்பாடுகளையாவது பேசி விடுவார் என்று இவர் குறித்து சொல்லப்படுவதை இந்த விமான ஃபத்வா உரையிலும் நிரூபித்திருப்பது தான் வேடிக்கை !

அதாவது, என்ன தான் இருந்தாலும் பிறையை கண்ணால் தான் பார்க்க வேண்டும், அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை, முன்கூட்டியே கணிப்பது, காலன்டர் அடிப்பது என்பதிலெல்லாம் எங்களுக்கு உடன்பாடு கிடையாது..

என்று ஒரு பக்கம் சொல்கிறார்.

ஆனால், விமானத்தில் மேகத்தை கடந்து பிறை பார்ப்பது கூடும் என்று இன்னொரு பக்கம் கூறுகிறார்.

சரி, அப்படியானால் நாம் கேட்கிறோம், விமானத்தில் சென்று பிறை பார்ப்பது கூடும் என்றால் ராக்கெட்டில் சென்று பார்ப்பதும் கூடும் தானே?

ஒவ்வொரு அமாவாசையின் போதும் நிலவின் மறுபக்கம் வரை ராக்கெட்டில் சென்று பார்த்தால் அமாவாசையில் கூட நிலவை பார்க்க முடியும். ஏனெனில், அமாவாசை என்றால் பூமி இருக்கும் திசைக்கு நிலா தென்படவில்லை என்று தான் பொருள். பூமிக்கு எதிர் திசையில் சூரிய வெளிச்சம் பட்டு நிலவு தெரியத் தான் செய்யும்.

எனும் போது, ஒவ்வொரு அமாவாசையின் போது, ராக்கெட்டில் புறப்பட்டு சென்றால் பிறையை தவறாமல் பார்த்து விடலாம்.

அப்படி பார்க்கிற போது, ஒவ்வொரு அமாவாசையும் மாதத்தின் முதல் நாள் என்று ஒவ்வொரு மாதத்திலுமே முடிவு செய்து கொள்ளலாம்.

இதை தானே காலண்டெர் அடிப்பவர்கள் வேறு வார்த்தையில் சொல்கிறார்கள்?

முன்கூட்டியே கணிப்பது கூடாது என்று ஒரு பக்கம் சொல்கிற இவர், செயல் ரீதியாக கணிப்பை தான் நியாயப்படுத்துகிறார் என்றால் இது தெளிவான முரண்பாடா இல்லையா?

உயர சென்றால், பிறை இன்னும் தெளிவாக தெரிய வாய்ப்பிருக்கும் எனும் போது அத்தகைய செயலை நபி (சல்) அவர்கள் செய்தார்களா?

தரைப்பரப்பில் நின்று மட்டும் பிறை பார்க்காதீர்கள், உகது மலை மீதும் ஏறி சென்று பிறை பாருங்கள் என்று சஹாபாக்களுக்கு கட்டளையிட்டார்களா?

இல்லை !

சாதாரண நிலையில் தென்படும் பிறையை வைத்து சட்டமெடுத்தால் போதும்,
அருகிலுள்ள ஊரிலிருந்து பிறை தகவல் வந்தால் கூட ஏற்கத் தேவையில்லை என்கிற அளவிற்கு மார்க்கத்தை மிகவும் இலகுவாக விட்டு சென்றார்கள் நபி (சல்) அவர்கள்.

அந்த மார்க்கத்தை பேணுகிறோம் என்று சொல்லும் இன்றைய மெளலானாக்கள், விமானப்பிறையென்றும் ஜெட் பிறையென்றும் சமூகத்தை குழப்புகிறார்கள் என்றால் இவர்கள் தான் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் !

ஒட்டு மொத்த உலகிற்கும் சவால் !



சோதனைக்கு உட்படுத்த இயலாதவைகளை சோதித்து பார்த்து தான் நம்புவேன் என்று சொல்லக்கூடாது.

சொர்க்கம் நரகம் இருப்பதை சோதித்து பார்க்க முடியாது, எனவே அல்லாஹ் சொல்லி விட்டான், அதனால் நம்புகிறோம் என்று கூறி நம்ப வேண்டும்.

இன்னும், மலக்குமார்கள், ஜின்கள், ஷைத்தான், பிற்காலத்தில் வர இருக்கும் தஜ்ஜால் போன்றோரை சோதித்துப் பார்க்க இயலாது. 
அவற்றையெல்லாம் அல்லாஹ் சொல்கிறான் என்பதற்காகவே நம்பலாம்.

ஆனால் எதையெல்லாம் சோதனைக்கு உட்படுத்த முடியுமோ அவற்றை சோதித்துப் பார்த்து தான் நம்ப வேண்டும்.

சிலைகளை கடவுளாக வணங்கிய கூட்டத்தாரிடம் இத்தகைய சோதனையை செய்து பார்க்க தான் அல்லாஹ் சொல்கிறான்.

இது தான் எங்கள் கடவுள் என்று சொன்னவர்களிடம், இதை உன் கடவுள் என்கிறாயே, இவற்றுக்கு இருக்கும் கால்களை கொண்டு இவற்றால் நடக்க இயலுமா?
இவற்றுக்கு இருக்கும் கைகளை கொண்டு இவற்றால் பிடிக்க இயலுமா?
இவற்றுக்கு இருக்கும் கண்களைக் கொண்டு இவற்றால் எதையாவது பார்த்திட தான் முடியுமா?

என்று நபியிடம் கேள்வியெழுப்ப சொல்கிறான்.

அத்துடன் நிறுத்தாமல்,
இவற்றுக்கு ஆற்றலும் சக்தியும் இருப்பது உண்மையென்றால் இவற்றை எனக்கெதிராக சூழ்ச்சி செய்ய வையுங்கள் பார்க்கலாம் என்று நபியை சவால் விட சொல்கிறான் அல்லாஹ் !

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? ''உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக! (7:195)

சிலைகள் விஷயமாக நபி (சல்) அவர்கள் விடுத்த சவாலை சூனியம் தொடர்பாக நாங்கள் விடுக்கிறோம்.

சூனியத்தால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்த இயலும் என்று நம்புகிறவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்ளுங்கள்.
உலகில் தலை சிறந்த சூனியக்காரர் என்று நம்பப்படுகிற எவனையாவது அழைத்து வாருங்கள்.
அவனுக்கு முழு பாதுகாப்பையும் நான் வழங்குகிறேன்.

எந்த புறசாதனங்களுமின்றி சூனியத்தின் மூலம் என்ன செய்ய இயலும் என்று அவன் சொல்கிறானோ அதை அவன் எனக்கு செய்து காட்டட்டும்.

பொது மேடையில் உலகமே பார்க்கும் வகையில் நான் அமர்ந்து கொள்கிறேன்.
என் சட்டை , தலை முடி, விரல் நகம் என என்னிடமிருந்து என்ன வேண்டுமோ நான் தருகிறேன்.

இந்த தேதியில் இந்த நேரத்தில் நான் ஊமையாகி விடுவேன் என்று அறிவித்து விட்டு எனக்கு செய்து காட்டட்டும்,
அவன் சொல்வது போல் என் கால்கள் முடமாகி போகட்டும் பார்க்கலாம்,
அவன் சொல்வது போல் எனக்கு வேறெந்த தீங்கையும் எந்த புறசாதனங்களுமின்றி சூனியத்தின் மூலம் செய்து காட்டட்டும்.

அப்படி செய்து விட்டால் என் சார்பில் அவனுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக தருகிறேன்.

- ரமலான் தொடர் உரையில் சகோ. பிஜெ சவால் !!

நடிகர் ஜெய் அவர்களே !


நடிகர் ஜெய் அவர்களே ! 

இஸ்லாத்தை பின்பற்றுகிறேன், ஆனால் மதம் மாறவில்லை என்பதாக உங்கள் நிலை பற்றி தற்போது விளக்கமொன்றை அளித்திருக்கிறீர்கள்.

மதம் மாறுவது என்கிற சடங்குகள் எதுவும் இஸ்லாத்தில் இல்லை என்பதை புரிந்தவராக இருந்திருந்தால் இப்படி அர்த்தமற்ற பதிலை சொல்லியிருக்க மாட்டீர்கள்.

இஸ்லாத்தை ஒருவர் பின்பற்றுகிறார் என்றால் அவர் மதம் மாறியவராக தான் கருதப்படுகிறார்.

இஸ்லாத்தை விடுவோம். எந்த சித்தாந்தத்தை யார் பின்பற்றினாலும், அந்த பின்பற்றுதலே அவரை அந்த கொள்கையில் இணைத்துக் கொண்டதாக தான் காட்டும்.

அந்த கொள்கையில் மாறிக் கொள்ளாமல் அதை பின்பற்ற முடியாது. அவ்வாறு கூறுவது தெளிவான முரண்பாடு.

எந்த கடவுளையும் வணங்காமல் இருந்தேன், இப்போது அந்த ஒரு கடவுளை வணங்குகிறேன் என்று ஒரு பக்கம் சொல்கிற நீங்கள் இதற்கு மேல் இஸ்லாத்தில் வேறெப்படி நுழைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்??

இன்று தங்களை முஸ்லிம்களாக சொல்லிக் கொள்பவர்கள் நீங்கள் சொல்வதை தான் சொல்லிக் கொள்கின்றனர். அந்த ஒரு கடவுளை வணங்குவதால் தான் அவர்கள் முஸ்லிம்கள் என அழைக்கவும் படுகின்றனர் எனும் போது,

நான் மதம் மாறவில்லை, ஆனால் பின்பற்றுகிறேன் என்று கூறுவது, உங்களிடம் ஒரு நிலையற்ற தன்மை இருப்பதையே காட்டுகிறது.

இஸ்லாமிய சித்தாந்தங்களை பின்பற்றுவதில் பெருமிதம் கொள்பவருக்கு..
அதை பின்பற்றுகிறேன் என்று சொல்லிக் கொள்வதில் தயக்கம் கொள்ளாதவருக்கு, இஸ்லாத்தில் நான் நுழைந்து விட்டேன் என்று சொல்வதில் மட்டும் என்ன தயக்கம் இருக்க வேண்டும்?

தொடர்ந்து வர வேண்டிய சினிமா வாய்ப்புகள் தடை படுமே என்பதாலா?

என்றால், நீங்கள் இன்னும் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றவில்லை என்று தான் பொருளாகிறது.

என்றைக்கு நடிகர் ஜெய் ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார் என்பதாக புகைப்படங்கள் வெளியானதோ அதற்கு இரண்டு தினங்களுக்கு பிறகு தான் இவரது புதிய திரைப்படத்தின் வெளியீடு குறித்த செய்தியும் வெளியானது.

ஒரு காலை ஆற்றிலும் ஒரு காலை சேற்றிலும் வைத்துக் கொண்டு, இஸ்லாத்தை பின்பற்றுகிறேன் என்று சொல்லாமல், இந்த மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து கொள்ளுங்கள்.

நான் இஸ்லாத்தில் நுழைந்து கொண்டேன் என்று வெளிப்படையாக சொல்லிக் கொள்ள எந்த உலகாதாயங்களும் உங்களுக்கு தடையாக இருக்க‌ வேண்டாம் என்று அன்புடன் சொல்லிக் கொள்கிறோம்.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. (திருக் குர் ஆன் 2:203)

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (N)


அவரது மரணத்திற்கு முன்..

"ஈஸா நபி மரணிக்கவில்லை" (பாகம் 14)
------------------------------------------------------------

வேதக்காரர்கள் அவரது மரணத்திற்கு முன் அவரை நம்பிக்கை கொள்வார்கள் என்கிற மொழியாக்கம் தான் சரி என்பதையும், இதற்கு மாற்றமாக என்ன மொழியாக்கம் செய்து பார்த்தாலும் அவை அனைத்துமே அர்த்தமற்றதாகவே இருக்கும் என்பதையும் முன்னர் பார்த்தோம்.

இங்கே அவரை நம்பிக்கை கொள்வார்கள் என்பதற்கு பதிலாக, ஈஸா நபி சிலுவை மரணத்தை நம்பிக்கை கொள்வார்கள் என்று பொருள் கொள்ள இடமிருக்கிறதா? என்று பார்த்தால் அதுவும் தவறான மொழியாக்கமே.

காரணம், அதை நம்புவார்கள், என்று சொன்னால், அதை என்பதற்கு, அதற்கு முன்பாக எதைப் பற்றி அல்லாஹ் சொன்னானோ அதை.. என்று தான் பொருள்.

அல்லாமல், ஏழு வசனங்களுக்கு முன்பு சொல்லப்பட்ட்தை நம்புவார்கள் என்று சொல்வது அர்த்தமில்லாதது.

இங்கும் அது தான் நிகழ்க்கிறது.

சிலுவையில் அவரை நாங்கள் தான் கொன்றோம் என்று அவர்கள் நம்பினார்கள், ஆனால் அவர் சிலுவையில் கொல்லப்படவில்லை என்று அல்லாஹ் சொல்லி விட்டு,
இதில் அவர்கள் எப்போதும் சந்தேகத்திலேயே இருக்கிறார்கள், நிச்சயமாக அவரை சிலுவையில் அவர்கள் கொல்லவில்லை என்று மீண்டும் சொல்கிறான்.
சொல்லி விட்டு, அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.
அவர் மரணிப்பதற்கு முன்பாக இதை நம்பாமல் இருக்க மாட்டார்கள்.

இது தான் அந்த வசனம்.

இங்கே இதை நம்பாமல் இருக்க மாட்டார்கள் என்றால் எதை? என்பது சிறு குழந்தையும் சொல்லும்.

அவர் கொல்லப்படவில்லை என்பதை நம்பாமல் இருக்க மாட்டார்கள்
அவர் சிலுவையில் இறக்கவில்லை என்பதை நம்பாமல் இருக்க மாட்டார்கள்
அவர் அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டார் என்பதை நம்பாமல் இருக்க மாட்டார்கள் !

இது தான் அந்த கான்டக்ஸ்டின் படியும் பொருந்துகிறது, இலக்கண ரீதியாகவும் இது தான் பொருத்தமானது.

பிஹி என்பதற்கு அவரை, என்று தான் மொழியாக்கம் செய்ய வேண்டும்
என்று நான் சொன்ன‌தற்கு சுயமான‌ காரணத்தை சொல்லவில்லை.
அந்த contஎக்ஷ்ட் அதை தான் சொல்கிறது.

ஈசா நபியை அவர்கள் கொல்லவில்லை, ஈசா நபியை தன்னளவில்
அல்லாஹ் உயர்த்திக் கொண்டான், வேதக்காரர்கள் அனைவரும்
---------------- நம்புவார்கள் - இந்த இடத்தில் அதை என்பது
வருமா அவரை என்பது வருமா?

அவைர என்பது தான் சரி என்று நான் சுயமாக கூறாமல், அந்த
கான்டக்ஸ்டையே ஆதாரமாக காட்டுகிேறன்.

ஒரு வாதத்திற்கு, அதை என்று பொருள் வைப்பதாக இருந்தால் கூட, அப்போதும் அதை என்றால்,

அவர் உயர்த்தப்பட்டதை, என்று தான் சொல்ல வேண்டும் ‍ முந்தைய‌
வசனம் அதை தான் சொன்னது.

அவரை ----> ஈசா நபியை நம்புவார்கள் என்று சொன்னாலும்
அதை -------> அவர் உயர்த்தப்பட்டதை நம்புவார்கள் என்று சொன்னாலும்,

இரண்டுமே ஒரே பொருள் தான் - இரண்டின் மூலமாக கிடைப்பது ஒரே
result தாேன.

ஈசா நபியை அவர்கள் கொல்லவில்லை, அவரை தன்னளவில்
அல்லாஹ் உயர்த்திக்கொண்டான், வேத‌க்காரர்கள் அனைவரும் ---------------- நம்புவார்கள் - இந்த இடத்தில் அதை என்று மொழியாக்கம் செய்தால் கூட, அதை என்பது ஈசா நபி உயர்த்தப்பட்டதை தான் குறிக்கும் என்று சிறு குழந்தை கூட சொல்லும், புறக்காரணங்கள் எதுவுமே தேவையில்லை!!!

அது போல, தங்களின் மரணத்திற்கு முன்னால்.. என்கிற மொழியாக்கம் பல காரணங்களால் தவறு.

முதல் காரணம், தங்களின் மரணத்திற்கு முன்னால் சிலுவை மரணத்தை நம்பியவர்கள் என்றால் பலர் அவ்வாறில்லாமல் இறுதியில் இஸ்லாத்தை தழுவிய நிலையில் கூட மரணிக்கிறார்களே? வெதக்காரர்கள் அனைவருமே சிலுவை மரணத்தை நம்பிய நிலையில் மரணிப்பார்கள் என்பது பொய்ப்பிக்கப்படும்.

இதற்கு பதில் என்கிற பெயரில், சிலுவை மரணத்தை நம்பியவராக இருந்து, பின்னர் இஸ்லாத்தை தழுவி மரணித்தாலும், அவர் மரணிக்காமல் உயிருடன் இருந்த காலத்தில் சிலுவை மரணத்தை நம்பியவர் தானே? எனவே இது பொருத்தம் தான் என்று இதற்கு சப்பை கட்டு ஒன்று கட்டப்படும்.

ஆனால், இதுவும் பொருளற்றது.

ஒரு காலத்தில் அவர்களுக்கு அந்த நம்பிக்கை இருந்தது என்பதை அல்லாஹ் இப்படியா சொல்வான்?

அல்லாஹ் அங்கே சொல்லும் வாசகம், வேதக்காரர்கள் அனைவரும் தங்கள் மரணத்திற்கு முன்னால் இதை நம்பிக்கை கொள்வார்கள்.

என்றால், வாழும் காலத்தில் நம்பிக்கை கொள்ளாதவர்கள் கூட மரணிப்பதற்கு முன் நம்பிக்கை கொண்டு விடுவார்கள் என்று தான் அர்த்தமாகிறது.

அல்லாமல், சிலுவை மரணத்தை நம்பியவர்களாக ஒரு காலத்தில் இருந்து, பின்னர் முஸ்லிமாக மாறி மரணிப்பவரை இந்த வசனம் குறிக்குமா? என்று நெஞ்சில் கை வைத்து சிந்திக்கும் எந்த நடுனிலை சிந்தனையாளருக்கும், இல்லை என்கிற பதில் எளிதில் கிடைக்கும்.

இன்னும் சொல்லப்போனால், வேதக்காரர்களில் பிறப்பு முதல் இறப்பு வரை சிலுவை மரணத்தை நம்பாதவர்கள் கூட இருந்தனர்.

வேதக்காரர்கள் அனைவரும் ஒரு காலத்தில் சிலுவை மரணத்தை நம்பியவர்கள் என்று சொன்னால், சிலுவை மரணத்தை நம்பாத எந்த மனிதருமே இருக்கவில்லை என்று ஆகிறது.

இதுவும் தவறு. காரணம், ஈஸா நபியை நபியாக நம்பிய முஸ்லிம்கள் சிலுவை மரணத்தை நம்பாதவர்கள். அப்படியும் மக்கள் வேதக்காரர்களில் இருக்கத் தான் செய்தனர் எனும் போது எல்லா வேதக்காரர்களும் சிலுவை மரணத்தை ஒரு காலத்தில் நம்பியவர்கள் தான் என்று அல்லாஹ் சொல்வானா?
அதில் பொருளிருக்குமா? என்று சிந்தித்தாலும் அந்த மொழியாக்கம் தவறு என்று புலப்படுகிறது.

தவிர, அவர்களுக்கெல்லாம் ஈஸா நபி மறுமையில் சாட்சியாக இருப்பார் என்று அல்லாஹ் சொல்கிறான்.

அன்றைய வேதக்காரர்கள் சிலுவை மரணத்தை நம்பினார்கள் என்று தான் என்பதை தான் அல்லாஹ்வே முந்தைய வசனத்தில் சொல்லி விட்டானே..

சொல்லி விட்டு தான், உண்மையில் அவர் சிலுவையில் மரணிக்கவில்லை என்கிறான். இதற்கு ஈஸா நபி சாட்சியாக இருக்க தேவையில்லை.

நடக்காத விஷயம் மாறுபட்டு நடக்கும் போது தான், இன்னார் சாட்சியாக இருப்பார் என்று சொல்வது பொருந்தும்.

எது இயற்கையிலேயே நடக்கிறதோ, எதைப் பற்றி சற்று முன்பு கூட அல்லாஹ் சொன்னானோ, அதை மீண்டும் சொல்லி விட்டு, இதற்கு ஈஸா மறுமையில் சாட்சியாக இருப்பார் என்று அல்லாஹ் சொல்வது பொருந்தவே பொருந்தாத விளக்கமாகும்.

இயற்கைக்கு மாற்றமாக ஒரு நிகழ்வு ஏற்படும் போது, அதை முன்கூட்டியே அல்லாஹ் சொல்லும் போது, அதற்கு ஈஸா சாட்சியாக இருப்பார் என்று சொல்வ்து தான் பொருத்தமானது.

அது என்ன இயற்கைக்கு மாற்றமான நிகழ்வு? அது தான் சிலுவை மரணத்தை நம்பிய வேதக்காரர்கள் எல்லாம் அவர் சிலுவையில் மரணிக்கவில்லை என்று நம்பி முஸ்லிமாக மாறுவது !

ஈஸா நபியை கடவுள் என்று நம்பியவர்கள் எல்லாம் அவர் கடவுள் இல்லை, நபி தான் என்று நம்புவது.

இந்த மாற்றம் என்பது வியப்பானது. கியாமத் நாள் வரையுள்ள பலலயிரக்கணக்கான வேதக்காரர்களும் ஈஸா நபியை கடவுள் என்று ஒரு பக்கமும், அவர் சிலுவையில் கொல்லப்பட்டு விட்டார் என்று மறு பக்கமும் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், திடீரென அனைவருமே ஈஸா நபியை நபி என்று நம்பிக்கை கொள்வார்கள் என்றால், இது அற்புதம்.

இதற்கு ஈஸா நபி மறுமையில் சாட்சியாக இருப்பார்.

ஆக, தங்கள் மரணத்திற்கு முன் நம்புவார்கள் என்கிற மொழியாக்கம் அறிவுக்கும் பொருத்தமில்லை, தொடர்ந்து அல்லாஹ் பேசும் வசனங்களோடும் பொருந்தாமல் போகிறது.

இன்னும் சொல்லப் போனால், அந்த வசனத்தின் இலக்கணமும் கூட தங்கள் மரணத்திற்கு முன்.. என்று மொழியாக்கம் செய்ய தடையாகவே உள்ளது.

அந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தும் சொல் கப்ல மவ்திஹி.

மவ்திஹி என்பது ஒருமை, படர்க்கை வார்த்தையாகும் third person singular. வேதக்காரர்கள் தங்களது மரணத்திற்கு முன் நம்புவார்கள் என்று சொல்வது பன்மை.

அப்படி சொல்ல வேண்டுமானால் கப்ல மவ்திஹிம்.. என்று வந்திருக்க வேண்டும்.

மவ்திஹிம் என்பது தான் பன்மை. அல்லாமல், மவ்திஹி என்று சொல்வது ஒருமையை குறிக்கும் சொல்லாகும்.

எனவேஎ அவரது மரணத்திற்கு முன்.. என்று மொழியாக்கம் செய்வது தான் பொருத்தமானது.

அப்படியானால், "தங்கள் மரணத்திற்கு முன்" என்று மொழியாக்கம் வேண்டாம், வேதக்காரர்கள் ஒவ்வொருவரது மரணத்திற்கு முன்..

என்று சொல்லலாம் தானே? இப்போது ஒருமை தானே வருகிறது?

என்று எவராவது சிறு பிள்ளைத்தனமான வாதம் வைத்தால் அதுவும் அர்த்தமில்லாதது.

"ஒவ்வொருவரது" என்கிற சொல் அந்த வசனத்தில் இல்லை. மவ்திஹி.. என்று மட்டும் தான் உள்ளது. எனவே இல்லாத மொழியாக்கத்தை செய்வதாக தான் ஆகும்.

இன் மின் அஹ்லில் கிதாபி .. என்று துவங்கக்கூடிய வசனத்தில்,

இன் - நிச்சயமாக
மின் - தமிழில் துைண எழுத்தான "களிலிருந்து" (அதாவது ஆங்கிலத்தில்
from )
அல்ஹில் கிதாபி ‍ வேதம் கொடுக்கப்பட்டவர்கள்.

சேர்த்து வாசித்தால் - நிச்சயமாக வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருந்து
!

இவ்வளவு தான் அரபி மூலத்தில் உள்ளது !

"வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருந்து ஒவ்வொருவரும் /
எவரும்"" என்பது ,இதை புரிந்து கொள்ள நாமாக சேர்த்துக் கொள்ளும் துணையெழுத்து !!

அதன் பிறகு, இல்லா ல யுமினன்னா - நம்பிக்கை கொள்ளாமல் இருக்க
மாட்டார்கள்.
பிஹி ‍ அவரை
கப்ல மவ்திஹி - அவரது மரணத்திற்கு முன்னால் !

ஆக, வேதக்காரர்களிலிருந்து ஒவ்வொருவரது மரணத்திற்கு முன்,
என்று பொருளே இல்லாத மொழியாக்கத்தை தான் செய்ய வேண்டும்.

ஒவ்வொருவரும் என்பதற்கு ஹி - அரபிப்பதம் அல்ல. !

அல்லது, வேதக்காரர்களில் இருந்து நம்புவார்கள் அவர்களது
மரணத்திற்கு முன் என்று மொழியாக்கம் செய்ய வேண்டும் - இது அந்த
பொருளின் படி சரி, ஆனால், ஹி என்பதற்கு மறுபடியும் முரண். ஹி
என்பது ஒருமையை குறிக்கும் , ஆகேவ அவர்களது, என்று சொல்வது
தவறாகி விடுகிறது !

எந்த முரணும் அற்றது ‍ வேதக்காரர்களில் இருந்து அவரது மரணத்திற்கு
முன், என்கிற ஒரே ஒரு மொழியாக்கம் மட்டும் தான் !!!!

ஆக அந்த வகையில் பார்க்கையிலும் கூட, ஈஸா நபியின் மரணத்திற்கு முன் நம்பிக்கை கொள்வார்கள் என்பது தான் பொருந்தமான, சரியான மொழியாக்கம் என்பது உறுதியாகிறது.

இங்கு ஈசா நபியை பற்றி தான் பேசி வருகிறது. அவரை அல்லாஹ்
உயர்த்திகொண்டான் , என்று முந்தைய வசனத்திலும் பிஹி என்கிற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தி, ஈசா நபிைய பற்றி ேபசுகிறான்.

தொடர்ந்து பிஹி என்று சொன்னால், ஈசா நபியை தான் இங்கும் சொல்கிறது !
இதுவெல்லாம் சாதாரண மொழி அறிவு.

இந்த சாதாரண மொழியறிவை கூட, நாமாக சுயமாக சொல்லவில்லை.

குர் ஆன் விரிவுரையாளரும் , சஹாபிகளில் ஒருவருமான இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் இதே கருத்தை தான் சொல்கிறார்கள்.

இது இப்னு ஜரீர் நூல் - பாகம் 4 , பக்கம் 14 இல் பதிவாகியுள்ளது.

ஈஸா நபி இறக்கவில்லை,
அவர்கள் கியாமத் நாளுக்கு சமீபமாக மீண்டும் இவ்வுலகில் வருவார்கள்,
அவர்கள் வரும் போது அவரை தவ்றாக நம்பியவர்கள் எல்லாருமே தங்கள் நம்பிக்கையை சரி செய்து கொள்வார்கள்
வந்த ஈஸா நபி மரணிப்பார்கள்,
மறுமையில், சரியாக நம்பியவர்களுக்கு சாட்சியாக இருப்பார்கள்.

இத்தனை செய்தியும் தெள்ளத்தெளிவாக இந்த வசனங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, ஈஸா நபி மீண்டும் வருவார் என்பதாக ஹதீஸ்கள் கூறுபவற்றையும், இந்த காதியானி மதத்தவர்கள் அவைகளுக்கு கூறும் சப்பைக் கட்டுகளையும், உலக மகா உளறல்களையும் அடுத்தடுத்து பார்க்கலாம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சூனியம் பற்றிய தொடர் உரை




இஸ்லாத்தின் ஆணி வேரிலிருந்தே செல்லும் சகோ. பிஜெ

சூனியத்தை நம்புவது தெளிவான இணைவைப்பு என்பதை புரிய வேண்டுமானால், முதலில் இஸ்லாத்தின் ஆணி வேர் என்ன என்பதை புரிய வேண்டும்.

ஈமான் என்றால் என்ன என்பதை புரிய வேண்டும். அல்லாஹ்வை வணங்கினால் மட்டும் போதாது, அவனை நம்ப வேண்டிய விதத்தில் நம்பிக்கை கொண்டு அதன் பின் வணங்க வேண்டும்.

அல்லாஹ்வை நம்புகிற விதத்தில் கோட்டை விட்டு அவனை என்ன தான் வணங்கினாலும் இறுதியில் அனைத்தும் செல்லாக்காசு தான் !

குர் ஆனின் நம்பகத்தன்மை என்ன? ஹதீஸ்களின் அவசியம் என்ன? ஹதீஸ்கள் எதற்காக அருளப்பட்டன, அதன் இலக்கணங்கள் யாவை? என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அடிப்படையில் தெரிந்து வைத்தால் தான் சூனியத்தை நம்புவது கூடாது என்பது புரியும்.

குர் ஆனுக்கு முரணான செய்திகள் ஹதீஸ்களில் இருந்தால் அவற்றை என்ன செய்வது?
அவ்வாறு ஏன் ஏற்படுகிறது?
சூனியம் எப்படி குர் ஆனுக்கும் அல்லாஹ்வின் சிஃபத்திற்கும் முரணாக இருக்கிறது?
இது போன்று குர் ஆனுக்கு முரணாக ஹதீஸ்களில் பதியப்பட்டுள்ள ஏனைய செய்திகள் என்னன்ன?

சூனியத்தை நம்பக்கூடாது என்றால் நபிமார்கள் செய்த அற்புதங்களையும் நம்பக் கூடாதா?

சூனியத்தை நம்புவது ஷிர்க் என்றால் தஜ்ஜால் செய்து காட்டுவதாக நம்பும் விஷயங்களும் ஷிர்கா?

சூனியத்தை நம்புவது ஷிர்க் என்றால் சாமிரி காளை மாட்டை சத்தமிட வைத்த செயலை நம்புவதும் ஷிர்க்கா?

சூனியம் என்பது மனிதர்கள் அவர்களாக செய்வது அல்ல, ஜின்களை கொண்டு செய்யக்கூடியவை தான் என்கிற கூற்று சரியாகுமா?

ஜின்களின் இலக்கணம் என்ன? ஜின்களால் என்ன செய்ய இயலும்? அவைகளை மனிதர்களால் வசப்படுத்த இயலுமா?

என..

இஸ்லாத்தின் அடிப்படைகளை தூர் வாரிக் கொண்டு விளக்கமளிக்கிறார் சகோ. பிஜெ.

மிக அருமையான உரை !

சூனியத்தை நம்பி வாழ்க்கையைத் தொலைப்போர், இந்த தொடர் உரையை கேட்டு தங்கள் ஈமானை சரி செய்து கொள்ளவும் !

நான்கு நாட்கள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் 6 நாள் உரை மீதமுள்ளது.

இதுவரையுள்ள உரைகளை கேட்க இந்த இணைப்பைப் பார்க்கவும்

http://www.onlinepj.com/bayan-video/thotar_uraikal/sooniyam-ramalan-thodar-urai/

ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு செய்தி


ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு செய்தியும் அதையொட்டி நடந்த நிகழ்வுகளும் புஹாரி 2661 இல் விளக்கமாக பதியப்பட்டுள்ளன.
நபிகள் நாயகம் (சல்) அவர்களுக்கு மறைவான விஷயம் தெரியாது என்பதற்கு இந்த நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.

அது பற்றிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

அந்த சம்பவம் பனூ முஸ்தலக் எனும் போரையொட்டி நடைபெற்ற சம்பவமாகும்.

நபி (சல்) அவர்கள் உட்பட பெரும் பயணக்கூட்டம் மதினாவை நோக்கி ஒட்டகங்களில் பயணமாகிறது. ஒட்டக சிவிகையில் ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

இடையில், இயற்கை தேவைக்காக இறங்கி தூரமாக செல்கிறார்கள். திரும்பி வரும் வழியில் அவர்களது கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையொன்று காணாமல் போக, அதை தேடுகிறார்கள்.

நேரமாக, ஆயிஷா அவர்கள் சிவிகைக்குள் ஏறி அமர்ந்து விட்டார்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டு அந்த வாகனக்கூட்டம் சென்று விடுகிறது.

ஆயிஷா அவர்கள் அங்கேயே மாட்டிக் கொள்கிறார்கள்.

சிறிது நேரம் கழித்து சஃபான் பின் முஅத்தல் (ரலி) அவர்கள் அதே வழியாக வருகிறார்கள். நபி (சல்) அவர்களின் மனைவி மட்டும் அங்கே தனியாக நிற்பதை கண்டு நிலைமையை புரிந்தவராக அவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு ஊருக்குள் நுழைக்கிறார்கள்.

அவர்கள் ஊர் வந்து சேர்வதற்குள் இருவரையும் தவறாக இணைத்து அவதூறுகள் ஊருக்குள் பரவத் துவங்கின.

இதற்கிடையே, ஆயிஷா அவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். அதன் காரணமாக வீட்டிலேயே முடங்கி விட்டவர்கள், துவக்கத்தில் வெளியே பரவியிருந்த அவதூறு செய்தியை அறிந்திருக்கவில்லை.

ஆனால், நபி (சல்) அவர்கள் தம்மிடம் நடந்து கொள்ளும் விதத்தில் வித்தியாசம் இருப்பதை உணர்கிறார்கள்.
வழக்கமாக அவர்கள் காட்டும் பரிவும் பாசமும் அன்றைக்கு இல்லை !

தமது தந்தையார் அபுபக்கர் அவர்களது சிறிய தாயார் மகள் மூலமாக வெளியே பேசப்பட்டு வரும் அவதூறு செய்தி ஆயிஷா அவர்கள் காதை எட்டுகிறது, மனம் உடைகிறார்கள்.

நோயும் அதிகமாக.. இரவெல்லாம் அழுது தீர்க்கிறார்கள், ஆயிஷா அவர்கள். ஈரல் பிளந்து விடும் அளவிற்கு அழுதார்கள் என்று ஹதீஸ்களில் பார்க்க முடிகிறது.

தனது கணவர் நபி (சல்) அவர்களிடம், தன் தாய் வீட்டுக்கு செல்ல அனுமதி கோருகிறார்கள், நபி (சல்) அவர்களும் அதற்கு அனுமதியளிக்கிறார்கள்.

ஆயிஷா அவர்களது தாயார் தனது மகளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இத்தனை அழகும், நபியின் மனைவி என்கிற அந்தஸ்தும் இருக்கும் போது இப்படியெல்லாம் அவதூறுகள் வரத்தான் செய்யும், நீ கவலை கொள்ளாதே.. என்று தன் அன்பு மகளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.

இதற்கிடையே, அவதூறு செய்தியால் நபியவர்களும் மிகவும் கவலை கொள்கிறார்கள். தனது மனைவி மீது சந்தேகம் கொள்கிறார்கள்.

பரப்பப்படும் அவதூறு செய்தி உண்மையாக இருக்குமோ? என்று கூட எண்ணுகிறார்கள்.

ஒரு கட்டத்தில், அலி அவர்களிடம் சென்று, ஆயிஷா (ரலி) அவர்களை விட்டும் பிரிந்து விடலாமா (தலாக்) என்று ஆலோசனை செய்கிற அளவிற்கு கூட செல்கிறார்கள்.

உஸாமா (ரலி) அவர்கள் உட்பட பல சஹாபாக்கள் நபி (சல்) அவர்களின் அந்த முடிவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை ஆயிஷா அவர்கள் மிகவும் நல்லவர்கள், அவரிடம் எந்த தவறும் இருக்காது என்று ஆறுதல் சொல்கிறார்கள்.
அதே சமயம், அலி (ரலி) அவர்கள், ஆயிஷா அவர்கள் இல்லை என்றால் என்ன, உங்களுக்கு வேறு பல பெண்கள் மனைவியராக கிடைப்பார்கள் என்கிற கோணத்தில் பேசுகிறார்கள்.

குழப்பத்தின் உச்சிக்கே சென்ற பெருமானார், ஆயிஷா அவர்களின் பணிப்பெண் பரீராவை அழைத்து, ஆயிஷா அவர்களைப் பற்றி விசாரிக்கிறார்கள்.

ஆயிஷாவின் பழக்க வழக்கம் பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று பரீராவிடம் கேட்க, பரீராவோ, ஆயிஷா அவர்கள் மிகவும் அப்பாவிப் பெண், குழைத்து வைத்த மாவை மறதியில் அப்படியே விட்டு விட்டு தூங்கி விடும் அளவிற்கு மிகவும் விளையாட்டுப் பெண், அவர் இப்படியெல்லாம் தவறு செய்யக்கூடியவர் இல்லை என்று நபியிடம் விளக்கமளிக்கிறார்கள்.

இதற்கிடையே, இந்த அவதூறு செய்தியானது, நபி (சல்) அவர்களும் இன்னபிற சஹாபாக்களும் இருக்கும் சபையில் பெரும் சர்ச்சையையே கிளப்புகிறது.
தங்கள் குலத்தால் ஒருவரையொருவர் பேசிக் கொள்கிற அளவிற்கு நிலைமை மோசமடைகிறது.

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இப்படியே செல்கிறது.

ஒரு நாள் தன் மனைவியருகே நபி (சல்) அவர்கள் வந்து அமர்கிறார்கள். ஒரு மாதத்திற்கு பிறகு அப்போது தான் தன் அருகில் கூட தனது கணவர் வந்திருக்கிறார்கள் என்று ஆயிஷா அவர்கள் கவலை கொள்கிறார்கள்.

அவதூறு செய்தி ஒரு பக்கம் கவலை அளிக்கிறது என்றால், தனது கணவர் கூட தன்னை முழுமையாக நம்பவில்லையே என்கிற ஏக்கம் இன்னொரு பக்கம் அவர்களை வாட்டி எடுக்கிறது.

அருகில் வந்த நபி (சல்) அவர்கள், தன் மனைவியிடம், "ஆயிஷாவே, நீ நிரபராதி என்றால் அதை அல்லாஹ் எனக்கு அறிவித்து தருவான். ஒரு வேளை நீ தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்", என்று சொல்கிறார்கள்.

" நீங்கள் என் மீது சந்தேகம் கொண்டு விட்டீர்கள், இனி என்ன சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை, நான் அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்கிறேன்" என்பதாக தனது கணவரிடம் சண்டையிட்டுக் கொண்டு கோபத்தில் படுத்துக் கொள்கிறார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள்.

அன்று இரவு அல்லாஹ் வஹி செய்தி அனுப்புகிறான்.

24:11 முதல் 20 வரையுள்ள வசனங்கள் அப்போது இறங்குகின்றன. ஆயிஷா அவர்கள் அப்பழுக்கற்றவர் என்று அல்லாஹ் தனது தூதருக்கு அறிவித்துக் கொடுக்கிறான்.

ஆனந்தமடைகிறார்கள் நபி (சல்) அவர்கள் !

அன்புடன் தனது மனைவியை அழைக்கிறார்கள். கோபமும் அளவிலா வேதனையும் மனதில் ஆட்கொண்டிருக்க, நபியருகில் செல்ல ஆயிஷா அவர்கள் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

என்ன தான் இருந்தாலும் என் கணவர் கூட என்னை நம்பவில்லையே என்கிற நியாயமான கவலையும் ஏக்கமும் அவர்கள் மனதை வாட்டியது.

அல்லாஹ் தன்னை சுத்தமானவர் என்று அறிவித்து விட்டதையறிந்து, நபியிடம் நான் செல்ல மாட்டேன், என் இறைவனுக்கு மட்டும் நான் நன்றி செலுத்திக் கொள்கிறேன்" என்பதாக மீண்டும் செல்ல சண்டையே இடுகிறார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் தன் மகளுக்கு அறிவுரை கூறி, கணவர் அருகில் செல்லுமாறு பணிக்கிறார்கள்.

இறுதியில் மனம் மாறி, கணவனும் மனைவியும் அன்புடன் இணைகிறார்கள் !

அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ் !!

படிக்கும் போதே உடலெல்லாம் சிலிர்க்கும் வகையிலான சம்பவங்கள்.

எல்லா பெண்களுக்கும் இருக்கும் அதே உணர்ச்சி, கோப தாபம், ரோஷ உணர்வு தான் ஆயிஷா அம்மாவுக்கும் இருந்திருக்கிறது.

மனிதன் என்கிற முறையில் அவதூறு செய்திகளை கூட நம்பி விடும் அளவிற்கு சாதாரண மனிதராக தான் நபி (சல்) அவர்களும் இருந்திருக்கிறார்கள் !

உண்மையை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான், அனைத்துமே நல்லதாய் முடிவுற்றது !!

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (M)


நம்பிக்கை கொள்ளும் வேதக்காரர்கள்

"ஈஸா நபி மரணிக்கவில்லை" (பாகம் 13)
-------------------------------------------------------------

ஈஸா நபியை அல்லாஹ் உடலோடு உயர்த்தினான் என்பதை முந்தைய தொடர்களில் விளக்கமாக பார்த்தோம்.

உயர்த்திய ஈஸா நபியை இவ்வுலகில் மீண்டும் அனுப்புவான் என்பதற்கு ஹதீஸ்களில் பல்வேறு சான்றுகள் இருந்தாலும், குர் ஆன் மட்டும் போதும், ஹதீஸ்களையெல்லாம் நம்ப மாட்டோம் என்று எந்த காதியானி மதத்தவராவது சொல்வாரானால், அவருக்காக, குர் ஆன் கூறும் சான்றையும் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம்.

அந்த வரிசையில், கியாமத் நாள் வருகிறது என்பதை அறிவிக்கக்கூடிய வகையில், அதற்கான அடையாளமாக ஈஸா நபி இருக்கிறார் என்று அல்லாஹ் சொல்கிற வசனத்தை பார்த்தோம்.

அடுத்து, ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதையும், மீண்டும் இவ்வுலகில் வரவிருக்கிறார் என்பதையும் மற்றுமொரு வசனம் வாயிலாகவும் அல்லாஹ் தெள்ளத்தெளிவாக விளக்குகிறான்.

வேதமுடையோரில் ஒவ்வொரு வரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப் பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர்களுக்கு சாட்சியாக அவர் இருப்பார். (4:159)

வேதம் கொடுக்கப்பட்டவர்களில் ஈஸா நபியை கொல்ல முயன்றவர்களும் இருக்கின்றனர், அவரை இறை மகனாய் புகழ்ந்தவர்களும் இருக்கின்றனர்.

அத்தகைய வேதமுடையவர்கள் அனைவருமே, ஈஸா நபியின் மரணத்திற்கு முன்பாக ஈஸா நபியை ஈமான் கொண்டு விடுவார்கள் என்று அல்லாஹ் இங்கே சொல்வதன் மூலம், ஈஸா நபி இனிமேல் தான் மரணிக்க இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

ஈஸா நபி ஏற்கனவே மரணித்திருந்தால், அவரது மரணத்திற்கு முன் நம்பிக்கை கொள்வார்கள் என்று வருங்கால வினையாக அல்லாஹ் இங்கே சொல்லியிருக்க மாட்டான்.

இனி மரணிப்பதாக இருந்தால் மட்டும் தான் இதை அல்லாஹ் இங்கே சொல்ல முடியும்.

அவரை எதிரியாகவும், கடவுளாகவும் கருதி வந்தவர்கள், அவர் மீண்டும் இவ்வுலகில் வருவதை காணும் போது, குர் ஆனின் கூற்று மெய்யாகி விட்டதை எண்ணி அவரை நபியென ஈமான் கொண்டு விடுவார்கள். இதை தான் இந்த வசனம் சொல்கிறது.

ஹதீஸ்களிலும், அவரது மீள்வருகைப் பற்றி சொல்லும் போது, ஈஸா நபி இவ்வுலகில் நாற்பது ஆண்டு காலம் ஆட்சி புரிவார்கள் எனவும், ஜிஸ்யா வரியை ஒழிப்பார்கள் எனவும் நபி (சல்) அவர்கள் சொல்லியுள்ளதும் இதையே உறுதிப்படுத்துவதாய் இருக்கிறது.

அவரை கடவுளாக கருதி வந்த வேதக்காரர்கள் எல்லாம் அவரை நபியென ஈமான் கொண்டு உண்மை முஸ்லிம்களாக மாறி விடும் போது ஜிஸா வரி தானாய் விலகி விடும்.

ஆக, ஈஸா நபி இதுவரை மரணிக்கவில்லை என்பதையும், மீண்டும் இவ்வுலகில் வருவார்கள் என்பதையும், வந்த பின் மரணிப்பார்கள் என்பதையும் ரத்தின சுருக்கமாக அல்லாஹ் இந்த வசனத்தின் மூலமாக எடுத்துரைக்கிறான்.

பல்வேறு சால்ஜாப்புகளை சொல்லி இந்த மொழியாக்கத்திற்கும் இந்த காதியானிகள் திரிபு அர்த்தம் கொடுக்க முயல்வர்.

அவர்கள் எவற்றையெல்லாம் எடுத்து வைப்பார்கள் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்திருப்பதால், அவற்றை தெளிவான முறையில் அறிந்து கொள்வோம்.

முதலில், வேதக்காரர்கள் என்றால், ஈஸா நபி மீண்டும் வருகின்ற போது இருக்கிற வேதக்காரர்கள் என்று எப்படி பொருள் கொடுக்க முடியும்? என்பது இவர்கள் எழுப்பும் ஒரு வகையான கேள்வி.

அந்த வசனமே அதை தான் சொல்கிறது எனும் போது, இந்த கேள்வியே அர்த்தமற்றது.

வேதக்காரர்கள் என்பது ஈஸா நபி காலந்தொட்டு, கியாமத் நாள் வரை இருக்கிறார்கள்.

அத்தகைய கூட்டத்தாரைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது, ஈஸா நபியின் மரணத்திற்கு முன் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்றால், அவர் மரணிப்பதற்கு முன் உயிருடன் இருப்பவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்று தான் பொருள்.

நான் அடுத்த வருடம் ஊருக்கு வருவதற்கு முன் இந்த ஊர் மக்கள் அனைவரும் என்னை நம்புவார்கள் என்று எனது ஊர் மக்களைப் பார்த்து பேசுகிறேன் என்று வைப்போம்.ை

அதே போன்று அடுத்த வருடம், நான் வருவதற்கு முன் என்ைன எல்லாரும் நம்பி விட்டார்கள். ஆனால், நான் இவ்வாறு அறிவிப்பு செய்து, நான் மறுபடியும் ஊருக்கு வருகிற இந்த இடைப்பட்ட காலத்தில் எனது ஊர் மக்களில் பலர் இறந்து போயிருப்பார்கள், அவர்கள் என்னை நம்பாமல் தான் இறந்தார்கள்.

இருந்தாலும், எனது வாசகத்திற்கு அப்போதும் பொருள் சிதைவு எதுவும் ஏற்படவில்ல.
இப்பாது எனது ஊர் மக்கள் அனைவரை நாக்கி தான் நான் பசுகிேறன் என்றாலும்,
அடுத்த வருடம் நான் ஊருக்கு திரும்புவதற்கு முன் என்
ன குறித்து நம்புவதற்கு
உங்களுக்கு சில காரணங்கள் கிடைக்கும், அந்த காரணம் கிடைக்கும் போது யாரெல்லாம் இந்த ஊரில் இருக்கிறார்களோ அல்லது உயிருடன் இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் என்னை நம்புவார்கள் என்பது
தான் எனது அறிவிப்பில் ஒளிந்துள்ள வாசகம் !

அதெப்படி? நீ அறிவிப்பு செய்து, திரும்ப வருவதற்கிடையில் பலர் இறந்து விட்டார்களே, நீ எப்படி இந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் என்னை நம்புவீர்கள் என்று பொதுவாய் சொன்னாய்?

என்று கேள்வியெழுப்புவது அறிவீனம்.

அது போல தான், முஹம்மது நபி காலத்தில் அல்லாஹ் சொல்லும் போது, வேதக்காரர்கள் அனைவரும் நம்பிக்கை கொள்வார்கள் என்கிறான்.

அவர் மரணிப்பதற்கு முன் நம்பிக்கை கொள்வார்கள் என்கிறான் எனும் போது, அவர் மரணிப்பதற்கு முன்பாக ஏதேனும் ஒரு சம்பவம் அவர்களை அவ்வாறு நம்பிக்கை கொள்ள வைக்க்ம்.
அந்த நாளில் எவரெல்லாம் உயிருடன் இருக்கிறாரோ, எவரெல்லாம் அந்த சம்பவத்தை உணர்கிறாரோ, அவர்கள் அனைவருமே நம்பிக்கை கொள்வார்கள்.

ஆக, இந்த வாதம் தவறானது.

இவர்கள் வைக்கும் மற்றுமொரு வாதம், இங்கே ஈஸா நபியின் மரணத்திற்கு முன்..என்று மொழியாக்கம் செய்வது தவறு, மாறாக வேதக்காரர்கள், தங்கள் மரணத்திற்கு முன்.. என்று மொழியாக்கம் செய்ய வேண்டும்..

இந்த வாதமும் அறிவுக்கு பொருத்தமில்லாத வாதமாகும்.

வேதக்காரர்கள் அனைவரும் தங்கள் மரணத்திற்கு முன் ஈஸா நபியை ஈமான் கொள்வார்கள் என்பது தான் சரியான மொழியாக்கம் என்றால் அப்படி இன்று உலகில் நடைபெறுகிறதா?
இன்று இறக்கக்கூடிய யூதர்கள் எல்லாம் ஈஸா நபியை நபியென்று நம்பித் தான் இறக்கிறார்காளா?

இன்று மரணிக்கும் வேதம் கொடுக்கப்பட்ட நசாராக்கள் அவ்வாறு தான் நம்பிக் கொண்டு இறக்கிறார்களா? இல்லை என்பதற்கு நிதர்சன நடப்புகளே சான்று.

ஈஸா நபியை ஈமான் கொள்வார்கள் என்றால் முஸ்லிம்களாக ஆவார்கள் என்று பொருள்.

அப்படியானால், மரணிக்கின்ற ஒவ்வொரு வேதக்காரனும் முஸ்லிமாக மாறித் தான் மரணிக்கிறான் என்று பொருள் செய்ய வேண்டி வரும்.
இது அர்த்தமில்லாத பொருள்.

சரி, ஈஸா நபியை நம்பிக்கை கொள்வதைப் பற்றி இந்த வசனம் சொல்லவில்லை, மாறாக, ஈஸா நபி சிலுவையில் இறந்தார் என்பதை நம்புவார்கள் என்று தான் அந்த வச்னம் சொல்கிறது.. என்று எவராவது பொருல் செய்வாரானால், அந்த வாதமும் தவறு.

அப்படியானால், மரணிக்கும் எல்லா வேதக்காரனும் அவ்வாறு நம்புவதில்லை. இன்று எத்தனையோ யூத நசாராக்கள் இஸ்லாத்தை தழுவிய நிலையில் மரணிக்கிறார்கள்.
அப்படி முஸ்லிம்களாக மாறி விட்ட வேதக்காரர்கள் இதில் விதிவிலக்கு பெற்றவர்கள் என்று அந்த வசனமும் சொல்லவில்லை. பொதுவாய் எல்லா வேதக்காரர்கள் என்று தான் சொல்கிறான்.
அப்படிப் பார்க்கையில், இந்த வசனம் பொய்ப்பிக்கபடுவதாக ஆகி விடும். எனவே அந்த மொழியாக்கமும் தவறு.

அவ்வாறு சிலுவை மரணத்தை நம்பிய வேதக்காரர்களை தான் இது சொல்கிறது என்றால், தொடர்ந்து மறுமை நாளில் அவர்களுக்கு சாட்சியாக ஈஸா நபி நிற்பார்கள் என்று அல்லாஹ் எப்படி சொல்வான்?

சிலுவையில் மரணித்தார்கள் என்று நம்பி, அதனடிப்படையிலேயே இறந்து போன ஒருவருக்கு ஈஸா நபி எப்படி சாட்சி சொல்வார்???

ஆக, அந்த வகையிலும் இது தவறான அர்த்தமாகி விடுகிறது.

யவ்மல் கியாமத்தி வகூனு அலைஹி ஷஹீதா.. என்கிற அரபிப் பதத்திற்கு சிலர், மறுமை நாளில் "எதிர்" சாட்சியாக இருப்பார் என்றே மொழியாக்கம் செய்திருக்கின்றனர்.

இந்த மொழியாக்கம் தவறு. "எதிர்" என்று பொருள் செய்யத்தக்க எந்த அரபு வாசகமும் அங்கே இல்லை.

அலைஹி என்றால் அவர்களுக்கு. ஷஹீதா என்றால் சாட்சி..

அவர்களுக்கு சாட்சியாக இருப்பார் என்று தான் பொருள் செய்ய வேண்டும். அது தான் நேரடி மொழியாக்கம்.
இதையும் இங்கே பதிய வைக்கிறேன்.

இது தவிர, இந்த வசனம் இலக்கண ரீதியாகக் கூட, ஈஸா நபியின் மரணத்திற்கு முன் வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்கிற மொழியாக்கம் தான் சரியானது என்கிற முடிவுக்கு வர முடியும்.

அதைப் பற்றியும், தொடர்ந்து இவர்கள் எழுப்பும் வேறு சில வாதங்கள் பற்றியும் அடுத்தடுத்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

தொடரும்..