புதன், 3 நவம்பர், 2010

சாக்கடை சட்டங்கள்

மத்ஹபு சட்டங்கள் - அசிங்கத்தின் மொத்த உருவம்!

சில உதாரணங்கள்..

1. கசையடிக்கு விசித்திரமான விளக்கம்

ஐம்பது குச்சிகளை ஒன்றாக இணைத்துக் கட்ட வேண்டும். ஐம்பது குச்சிகளும் அவனது மேனியில் படுமாறு இரண்டு தடவை குத்த வேண்டும். இவ்வாறு செய்தால் நூறு கசையடி அடித்ததாக ஆகிவிடும்.


2. அடுத்தவன் குழந்தை

ஒருவன் நான்கு ஆண்டுகள் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும் அவள் கர்ப்பமுற்றால் அந்தக் குழந்தை அவனையே சேரும்.
(மஙானி பக்கம் 507)


3. இமாமின் தகுதிகள்:

அழகிய மனைவியை உடையவராக இமாம் இருக்க வேண்டும்

அவரது தலை பெரியதாகவும், உறுப்பு சிறியதாகவும் இருக்க வேண்டும். (துர்ருல் முக்தார்)


4.
இந்தியாவில் ஜும்ஆ

மன்னரோ, மன்னரின் உத்தரவு பெற்றவரோ தவிர மற்றவர்கள் ஜும்ஆவை நடத்துவது செல்லாது.
ஹனபி மத்ஹபின் சட்டநூலான ஹிதாயா, முதல் பாகம், பக்கம் 168
பெரு நகரங்களில் தவிர மற்ற பகுதிகளில் ஜும்ஆ செல்லாது. எந்த ஊரில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றும் அமீரும், நீதிபதியும் உள்ளாரோ அதுவே பெருநகரமாகும்.
(அதே நூல், அதே பாகம், அதே பக்கம்)


5. ஊரை அடித்து உலையில் போடலாம்


பொது வழியை விற்பதும், அன்பளிப்பாக வழங்குவதும் செல்லும்.
(ஹிதாயா பாகம் 2, பக்கம் 4)
ஒரு மனிதன் தனக்கு உரிமையானதைத்தான் விற்க முடியும் உரிமையில்லாத எதனையும் எவரும் விற்க முடியாது, அறிவுடைய எந்த மனிதரும் இதை ஏற்கமட்டார். ஆனால் ஹனபி மத்ஹபின் சட்ட நூல் விற்கலாம் எனக் கூறுகிறது,

6. விசித்திரமான ஆராய்ச்சி


ஹனபி மத்ஹபின் இமாம்களில் மூன்றாவது இடத்தை வகிக்கும் முஹம்மத் இமாமுடைய கருத்துப்படி யானை, பன்றியைப் போல் முழு நஜீஸாகும். இந்த விசித்திரமான சட்டம் ஹிதாயா பாகம் 2, பக்கம் 39ல் காணப்படுகிறது. இதற்கு என்ன ஆதாரம் என்பதை ஷரீஅத் பேரவை விளக்குமா?




7. விற்கக் கூடாதவைகளை பிறர் மூலம் விற்கலாம்


ஒரு முஸ்லி ம் சாராயத்தை வாங்குமாறு அல்லது விற்குமாறு கிறித்தவருக்குக் கட்டளையிடுகிறார். அந்தக் கிறித்தவரும் அதைச் செய்கிறார். இது அபூஹனீபா அவர்களின் கருத்துப்படி ஆகுமானதாகும்.
(ஹிதாயா பாகம் 2, பக்கம் 41)


8. கற்பனைக் கதைகள்


அபூஹனீபா இஷாவுக்கு செய்த உளூவின் மூலம் பஜ்ரு தொழுதார். இவ்வாறு நாற்பது வருடங்கள் லி (அதாவது 15 ஆயிரம் நாட்கள்) லி தொழுதிருக்கின்றார். ஐம்பத்தி ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கின்றார். தமது இறைவனை நூறு தடவை கனவில் பார்த்திருக்கிறார்.
துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 38


அபூஹனீபா அவர்கள் தமது கடைசி ஹஜ்ஜின் போது ஒரு இரவு கஅபாவின் காவலாளியிடம் கஅபாவிற்குள் நுழைய அனுமதி கேட்டார். அவரும் அனுமதி கொடுத்தார். உள்ளே நுழைந்து லி இரண்டு தூண்களுக்கிடையில் இடது காலை வலது கா ன் மீது வைத்துக் கொண்டு, வலது கா ல் நின்றார். இப்படியே பாதி குர்ஆனை ஓதி முடித்தார். பின்னர் ருகூவு செய்து ஸஜ்தா செய்தார். பின்னர் வலது காலை இடது கா ன் மீது வைத்துக் கொண்டு இடது கா ல் நின்றார். மீதி இருந்த பாதி குர்ஆனையும் ஓதி முடித்தார். ஸலாம் கொடுத்ததும் தம் இறைவனிடம் பின்வருமாறு உரையாடினார்.
என் இறைவா! உனது பலவீனமான இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. ஆயினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளான். எனவே எனது முழுமையான அறிவின் காரணமாக என் பணியில் ஏற்படும் குறைகளைப் பொறுத்துக் கொள் என்று அபூஹனீபா கூறினார்.
உடனே கஅபாவின் மூலையி ருந்து, ”அபூஹனீபாவே! நம்மை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து விட்டீர். அழகிய முறையில் பணியும் செய்து விட்டீர். எனவே உம்மையும் கியாம நாள் வரை உம்மைப் பின்பற்றுவோரையும் நான் மன்னித்து விட்டேன்” என்று ஓர் அசரீரி கேட்டது.
துர்ருல் முக்தார், பாகம் 1, பக்கம் 39



9. ஆபாசக் களஞ்சியம்


மிருகத்துடன் அல்லது செத்த பிணத்துடன் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை. லி துர்ருல் முக்தார் பாகம் 1 பக்கம் 23


ஒருவன் தனது ஆணுறுப்பை தனது பின் துவாரத்தில் நுழைத்தால், விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பு கடமையில்லை. லி துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 150



10. கோமாளிக் கூத்து


ஒருவர் உளூச் செய்யும்போது ஏதோ ஓர் உறுப்பைக் கழுவவில்லை. எந்த உறுப்பு என்று தெரியவில்லை. அப்படியானால் (இடது காலாகத் தான் அது இதுக்க வேண்டும். எனவே) இடது காலைக் கழுவ வேண்டும். ஏனெனில் அதுதான் கடைசிச் செயல்.
(துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 51)


11. செத்த பிணத்தில் சூப் போட்டு குடிக்கலாமாம்


தாமாகச் செத்தவை ஹராம் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. அவை முழுமையாக ஹராம் என்பதில் சந்தேகமில்லை. தோலை மாத்திரம் பாடம் செய்து பயன்படுத்த நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளனர். ஆனால் மத்ஹபு என்ன கூறுகின்றது?


செத்த பிராணிகளின் முடியும் அதன் எலும்பும் தூய்மையானவை.
ஹனபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா பாகம் 1, பக்கம் 41


செத்த ஆட்டின் எலும்பை சூப் போட்டு குடிக்கச் சொல்கிறார்களா? இந்தச் சட்டத்தை எங்கிருந்து எடுத்தார்கள்? ஷரீஅத் பேரவை விளக்கட்டும்.



12.மூத்திர வைத்தியம்


ஒருவருக்கு மூக்கில் இரத்தம் வடிந்தால் அல்ஹம்து அத்தியாயத்தை மூத்திரத்தினாலும் இரத்தத்தினாலும் நிவாரணம் நாடி நெற்றியிலும் மூக்கிலும் எழுதலாம். அதில் நிவாரணம் இருப்பதாக அறியப்பட்டால் இவ்வாறு செய்யலாம். ஆயினும் அவ்வாறு நிவாரணம் கிடைக்கும் என்று தகவல் இல்லை. (துர்ருல் முக்தார் லி பாகம் 1, பக்கம் 154)


தாகமாக இருப்பவர் மதுபானம் அருந்த அனுமதிக்கப் படுவது போல் வறுமை நேரத்தில் செத்த பிணத்தைச் சாப்பிட அனுமதிக்கப் படுவது போல்இதற்கும் அனுமதியளிக்கப் படும். இதுதான் பத்வா! (அதே நூல், அதே பக்கம்)



13. தொழுகையா? விளையாட்டா?


நீ லுஹர் தொழு! உனக்கு ஒரு தங்கக் காசு தருகிறேன் என்று ஒரு மனிதரிடம் கூறப்படுகிறது. அவர் அதே நிய்யத்தில் லி நோக்கத்தில் தொழுகிறார். இவரது தொழுகை செல்லும் என்றே கூற வேண்டும். ஆனால் தங்கக் காசை அவருக்குக் கொடுக்க வேண்டியதில்லை.
துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 223


14. தொழுகையில் பைபிள் ஓதலாமாம்!


தொழுகையில் பாரசீக மொழியில் ஓதினால் அல்லது தவ்ராத் இஞ்சீலை (பைபிளை) ஓதினால் அது கதைப் பகுதியாக இருந்தால் தொழுகை பாழாகிவிடும். போதனைகளாக இருந்தால் தொழுகை பாழாகாது.
(துர்ருல் முக்தர், பாகம் 1, பக்கம் 359)


15. குழந்தைகளைத் திருடலாம்.


நகைகள் அணிந்துள்ள குழந்தையை (நகையுடன்) யாரேனும் திருடிச் சென்றால் அவனது கைகளைத் துண்டிக்கக் கூடாது.
(ஹிதாயா பாகம் 1, பக்கம் 540)


16. இப்படியும் திருடலாம்


ஒருவன் மற்றவரின் வீட்டில் துவாரமிட்டு அதன் வழியாக எதையேனும் எடுத்தால் அவனது கையைத் துண்டிக்கக் கூடாது.
(ஹிதாயா பாகம் 1, பக்கம் 546)


17. விபச்சாரத்தை அனுமதிக்கும் மத்ஹபு


விபச்சாரம் செய்வதற்காக ஒரு பெண்ணை வாடகைக்குப் பேசி அவளுடன் விபச்சாரம் செய்தால் அபூஹனீபாவின் கருத்துப்படி அவனுக்குத் தண்டனை இல்லை.
கன்ஸுத்தகாயிக், பாகம்லி1, பக்.184
காசு கொடுக்காமல் ஓசியாக விபச்சாரம் செய்வது தான் கூடாது. காசு கொடுத்து விட்டால் அதற்குத் தண்டனை இல்லை

இன்னும் ஏராளம் ஏராளம்...

இன்னுமா இந்த மத்ஹபு சாக்கடையை தூக்கி பிடிக்கிறீர்கள்??

--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக