திங்கள், 10 பிப்ரவரி, 2014

யுவன் ஷங்கர் ராஜா


பிரபலங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டமையால் இஸ்லாம் கண்ணியம் பெற்று விடப்போவதுமில்லை, ஏற்காது போனால் அதனால் இஸ்லாத்திற்கு எந்த இழுக்கும் நேரப்போவதுமில்லை.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொண்டவர்களுக்கு நல்லது, எற்றுக்கொள்ளவில்லையெனில் அது அவர்களுக்கு இழப்பு.

அதேசமயம், பிரபலமானவர்கள் ஒரு சித்தாந்தத்தை ஏற்கிற போது, அந்த நபர் மீது மோகம் கொண்டவர்கள், தங்களது நிலையை சற்று சுய பரிசோதனை செய்து கொள்ள அந்த செய்தி உதவியாய் இருக்கும் பட்சத்தில் அது போன்ற விஷயங்களை பரப்பலாம்.

சமீபத்திய பரபரப்பு செய்தியாக, தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாத்தை தழுவியுள்ளதாக செய்திகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

நபிகள் பெருமானாரை கொலை செய்வதையே லட்சியமாய் கொண்ட எத்தனையோ மனிதர்களை இந்த மார்க்கம் ஈர்த்திருக்கிறது.

இஸ்லாத்தை அழித்து ஒழிப்பதையே குறிக்கோளாய் கொண்ட எத்தனையோ நபர்களின் உள்ளங்களை இந்த புனித மார்க்கம் புரட்டிப் போட்டிருக்கிறது.

நாம் கற்பனையே செய்திராத நபர்களெல்லாம் இஸ்லாத்தை தழுவியிருக்கிற வரலாறுகளை கொண்ட இந்த மார்க்கத்தில், ஒரு யுவன் ஷங்கர் ராஜா வருவது ஒன்றும் வியப்புக்குரிய செய்தியில்லை.

இது ஒரு பக்கமிருக்க, அவர் பேசியதாக எந்த ஒலி, ஒளி நாடாக்களும் இணையத்தில் காணக்கிடைக்கவில்லை, மாறாக, டிவிட்டரில் செய்தி வெளியிட்டிருக்கிறார் என்று தான் சொல்லப்படுகிறது. ஒருவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர், ஃபேஸ்புக் கணக்கு என்று அறியப்பட்ட பலரது கணக்குகள் போலியானவை என்று பின்னாளில் தெரிய வருவது, அல்லது சம்மந்தப்பட்டவரே இது எனது பெயரில் நடத்தப்படும் போலியான கணக்காகும் என்று காவல் துறையில் புகார் தெரிவிப்பது போன்றவை நடைபெறும் சூழலில்,

நேரடி சான்றாய் ஏதும் கிடைப்பது வரை இது போன்ற செய்தியை பரப்பவும் தேவையில்லை.

இவர் இஸ்லாத்தை தழுவிய செய்தி பரப்படுவதாலோ என்னவோ, முஸ்லிம் பெயர் தாங்கி ஒருவர் திருச்சி கோவிலில் சாமி தரிசனம் செய்தார் என்கிற செய்தியையும் இன்று முகனூலில் பரப்பி விட்டு, அதில் அற்ப சுகம் கண்டுள்ளனர் சில புல்லுருவிகள்.

ஒரு வாதத்திற்கு அத்தகைய சம்பவம் நடைபெற்றது உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட,சம்மந்தப்பட்ட அவன் ஒரு கூமுட்டை என்றும் இந்த செய்தியை பரப்புகிற விஷமிகளுக்கு எத்தகைய மாக்களின் அறிவு இருக்கிறதோ அதே அறிவை தான் அவனும் கொண்டிருக்கிறான் என்று தான் நிரூபணமாகுமே தவிர, இதனால் தூய இஸ்லாத்திற்கு எந்த இழுக்குமில்லை என்பதை இது போன்ற விஷமிகள் புரிந்தால் நல்லது.

இஸ்லாத்தை நோக்கி ஒருவன் வந்தானேயானால் கடவுள் அவனுக்கு வழங்கிய சிந்தனையை சரி வர பயன்படுத்தினான் என்று பொருளாகும், இஸ்லாத்தை விட்டும் தூரமாகிப் போனால், அதை அவன் பயன்படுத்தவில்லை என்று ஆகும்.

இலாபமோ நட்டமோ மனிதனுக்குத் தானே தவிர, இறை மார்க்கம் என்றும் ஓங்கி உயர்ந்தே நிற்கும் !!

முஹம்மது நபி மரணிக்க மாட்டார்களா?


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த தருவாயில், அவர்கள் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாய் அவர்கள் இறந்து விட்டதை கூட ஏற்றுக் கொள்ள சஹாபாக்களில் ஒரு தரப்பினரால் இயலவில்லை. 
உமர் (ரலி) அவர்கள், நபி இறக்கவில்லை என்றும் அவர்கள் இறந்து விட்டதாய் யார் சொன்னாலும் தம் வாளுக்கு அவர் இரையாகட்டும் என்று கொதிப்படைந்தார்கள்.
(பார்க்க 3667)

இது பற்றி சஹாபாக்களை பின்பற்றும் கூட்டத்தார், நபி அப்போது இறக்கவில்லை என்று தான் அவர்கள் கூறினார்கள், இறக்கவே மாட்டார்கள் என்றா சொன்னார்கள் ? என்று அப்பாவித்தனமாய் கேள்வி கேட்கின்றனர்.

ஆனால், நபி மீது கொண்ட அளவிலா அன்பானது, அவர்கள் எப்படி இப்போது இறப்பார்கள் ? அவர்கள் இப்போது இறக்க முடியாது, இறக்க மாட்டார்கள் என்கிற எண்ணத்தை தான் உமர் (ரலி) அவர்கள் உள்ளத்தில் தோற்றுவித்தது என்பதற்கு புஹாரி 1242 வில் வரும் செய்தி சான்றாய் நிற்கிறது.

கோபத்தின் உச்சியில் நின்ற உமர் (ரலி) அவர்களை ஆசுவாசப்படுத்தவும், உண்மையை புரிய வைக்கவும் அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கீழ்காணும் வசனத்தை ஓதிக்காட்டுகிறார்கள்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (3:144)

இந்த வசனத்தில், முஹம்மது நபியானாலும் அவரும் இறக்கக்கூடியவர் தான் என்கிற கருத்தை அல்லாஹ் பதிய வைத்திருக்கிறான்.

முஹம்மது நபி இறக்கக்கூடியவர் தான், ஆனால் இப்போது தான் அவர்கள் இறக்கவில்லை என்கிற நம்பிக்கை தான் உமர் அவர்களிடம் இருந்தது என்றால் அந்த நம்பிக்கையை இந்த வசனம் உடைக்காது,

இப்போது இறக்கவில்லை, ஆனால் பிற்காலத்தில் இறப்பார்கள் என்கிற எண்ணம் கொண்டிருந்த கூட்டத்தாரிடம் முஹம்மதும் மரணிக்ககூடியவர் தான் என்கிற வசனத்தை ஒப்பிக் காட்டுவதன் மூலம் அபுபக்கர் அவர்களது நோக்கம் நிறைவேறியிருக்காது.

நானும் நபி இறப்பார் என்பதை மறுக்கவில்லை, இப்போது அவர்கள் இறக்கவில்லை என்று தான் சொல்கிறேன் என்று அபுபக்கர் அவர்களுக்கு உமர் அவர்கள் மறுப்பு சொல்லியிப்பார்கள்.

நபியும் மரணிப்பார் என்கிற வசனம், நபி இறக்க மாட்டார் என்கிற நம்பிக்கையை கொண்டிருந்த மக்களிடம் தான் எடுபடும்,
நபியும் இறக்ககூடியவர் தான் என்று அப்போது சொல்வதில் தான் அர்த்தமும் இருக்கும்.

ஆகவே, நபி இறந்த தருவாயில், அவர்களும் மரணிப்பார்கள் என்பதை அங்குள்ள மக்கள் ஏற்காத நிலையும் இருந்தது என்பதே உண்மை.
அபுபக்கர் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை ஓதிக்காட்டிய பிறகு, இப்படி ஒரு வசனம் குர் ஆனில் இருப்பதை அப்போது தான் முதன் முதலில் கேட்பதை போன்று அங்கிருந்த மக்கள் வியப்படைந்தனர், உண்மையை ஏற்றனர்.

இவையனைத்தும் ஹதீஸ்கள் வாயிலாக நாம் புரிகிற ஒன்று.

முரண்பாடே வாழ்வாய்..


எதை செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் விடுவதிலும், எதை செய்யக்கூடாதோ அதை செய்வதில் மிகுதியான ஆர்வம் காட்டுவதிலும் பரேலவிகள் என்று சொல்லக்கூடிய இணை வைப்பாளர்களை மிஞ்ச முடியாது.

எதை இஸ்லாம் தடை செய்திருக்கிறதோ அதை செய்வர். எதை செய்ய சொல்லி நபிகள் பெருமானார் வழிகாட்டி சென்றிருக்கிறார்களோ அதை விட்டும் தூரமாகி விடுவர்.

இன்று இவர்கள் மார்க்கம் என்கிற பெயரில் செய்து வரக்கூடிய கத்தம், ஃபாத்திஹா, மவ்லூத், தரிக்காக்கள், மிலாது விழாக்கள், தர்கா வழிபாடுகள் என எதை எடுத்துக் கொண்டாலும் அவை மார்க்கம் தடுத்தவையாகத் தான் இருக்கின்றன.

இன்னொரு பக்கம், எவ்வாறு தொழுமாறு இஸ்லாம் சொல்கிறதோ அவ்வாறு தொழ மாட்டார்கள், எவ்வாறு நோன்பை பேணுமாறு இஸ்லாம் கட்டளையிட்டிருக்கிறதோ அந்த முறையில் நோன்பை பேண மாட்டார்கள். இன்னும், இஸ்லாம் காட்டித் தந்த ஜகாத் ஆனாலும், ஹஜ்ஜானாலும், வேறு வேறு நல்லறங்கள் எதுவானாலும் அவற்றை செய்ய வேண்டிய முறைப்படி செய்ய மாட்டார்கள்.

மார்க்கம் தடுத்திருக்கின்ற கத்தம், மவ்லூதுகளுக்கு நமக்கும் அழைப்பு விடுப்பர்.
அதுவே, எந்த முஸ்லிமும் நுழையலாம் என‌ மார்க்கம் அனுமதித்திருக்கிற அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் இவர்கள் நமக்கு தடையென்று போர்ட் இடுவர்.

நரகில் கொண்டு சேர்க்கும் பித் அத்கள் என இஸ்லாம் இலக்கணமிட்டிருக்கும் மீலாதுகள், கூட்டு துஆக்கள், பராஅத்துகள் போன்றவை இவர்களுக்கு ஹலால்.

அதுவே, நபி (ஸல்) அவர்கள் குழாயடியில் ஒளு செய்தது கிடையாது,ஆகவே குழாயில் ஒளு செய்வது பிதஅத் என்று சொல்வீர்களா? என்று நம்மை நோக்கி அறிவார்ந்த (?) கேள்வி எழுப்புவர்.

மார்க்க ஞானம் என்பது துளியுமின்றி, மனம் போன போக்கிலெல்லாம் தங்கள் ஆன்மீக வாழ்வை அமைத்துக் கொள்வதின் மூலம் தங்கள் அழிவை தாங்களே தேடிக் கொள்கின்றனர் இவர்கள்.

முரண்பாடே வாழ்வாய் இருக்கிறது இவர்களுக்கு..

இவர்கள் தங்களை நரகத்திற்கு தான் தயார்படுத்துகிறார்கள் என்பதை புரியும் நாள் என்றைக்கோ ?

தமுமுகவினருக்கு பகிரங்க மன்னிப்பு !




கடந்த சில நாட்களுக்கு முன், திருச்சி திமுக மாநாட்டிற்காக அங்கே வைக்கப்பட்டிருந்த கூட்டணி கட்சிகளின் கட் அவுட்கள் அடங்கிய புகைப்படத்தை காண நேர்ந்தது. ஆறேழு கூட்டணி தலைவர்களின் கட்அவுட்கள் வைக்கப்பட்ட கூட்டத்தில் மமக தலைவர் கண்ணியமிகு பேராசிரியரின் கட் அவுட்டை காணவில்லை என்றதும் பதட்டமடைந்தோம், வியப்படைந்தோம்.

திமுகவுடனான கூட்டணியை தமுமுக மறு பரிசீலனை செய்ய போகிறதா?
இட ஒதுக்கீடு தான் எங்களுக்கு முக்கியம் என்றும், சமுதாய மானம் தான் பிரதானம் என்றும் முழங்கியவாறு சட்டசபை புறக்கணிப்பை நடத்தியவர்கள், இட ஒதுக்கீடு வழங்கும் கட்சிக்கு தான் எங்கள் ஆதரவு என்கிற நிலைபாட்டினை எடுத்து விட்டார்களோ ?

அதிமுக இட ஒதுக்கீட்டை வழங்கி விடும் பட்சத்தில் அதிமுகவிற்கு ஆதரவு, அல்லது, அதிமுகவும் இட ஒதுக்கீட்டை வழங்காமல், திமுகவும் இட ஒதுக்கீட்டை பற்றி எந்த வாக்குறுதியையும் வழங்காத நிலை ஏற்பட்டால் பின்னர் பொதுக்குழு கூட்டி ஆதரவு நிலை என்ன என்பதை பற்றி அறிவிக்கலாம் என்கிற சிறப்பான நிலைபாட்டினை எடுத்து விட்டார்களோ?

என்றெல்லாம் தமுமுக குறித்து எண்ணத் துவங்கினார்கள் சிலர்.

ஒரு வேளை, இந்த நிலைபாட்டை எடுத்து விட்ட காரணத்தால் தான் திருச்சி திமுக மாநாட்டில் தமுமுகவின் கட் அவுட் வைக்கப்படவில்லை என்று கருதப்பட்டது.

இல்லை இல்லை, திமுகவுடன் தான் கூட்டணி, அதில் மாற்றமேதுமில்லை,
கட் அவுட் வைப்பது இஸ்லாத்திற்கு மாற்றமான காரியம் என்பதை அவர்கள் விளங்கி, அதன் காரணமாக அதை தவிர்க்க சொல்லியிப்பார்கள் என்று தமுமுகவின் கண்ணியத்தை சற்றே உயர்த்தி சிந்தித்தனர் வேறு சிலர்.

இரண்டில் எதை அவர்கள் செய்திருந்தாலும், தமுமுக மீது இது நாள் வரை கொண்டிருந்த வெறுப்பில் ஒரு சில சதவிகிதங்களையாவது குறைத்துக் கொள்ளலாம் என்கிற ஆர்வத்தில் நாமும் காத்திருந்தோம்.

ஆனால், அந்தோ பரிதாபம் !

நமது எதிர்பார்ப்புகளையும் சந்தேகங்களையும் உடைத்தெறியும் வகையில் சீறி வந்தார் கண்ணியமிகு பேராசிரியர்.

என்னது?? நாங்கள் திமுகவின் அடிமையில்லையா??? எவனடா சொன்னது ??

என்று கேட்கும் விதமாகவும்..

கட் அவுட் விஷயத்தில் நாங்கள் இஸ்லாத்தை பேணினோமா?? எந்த பைத்தியக்காரன் அப்படி சொன்னது??
என்று மறுக்கும் விதமாகவும்..

இன்று வெளியான அதே மாநாட்டு புகைப்படமொன்றில், கட் அவுட்கள் வரிசையில் நமது தானே தலைவர், தன்மான சிங்கம், சமுதாய போர் வாளின் உயரிய கட் அவுட் கம்பீரமாய் காட்சி தந்தது ! (இணைப்பைப் பார்க்கவும்)

நமது அறியாமையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டோம்..

திருச்சி திமுக மாநாட்டிற்கு இன்னும் சில நாட்கள் மீதமுள்ள‌ நிலையில், மாநாட்டு ஏற்பாடுகள் இன்னும் நடந்த வண்னம் தான் உள்ளன.
மாநாடு துவங்குவதற்கு ஒரு நாள் முன்பு வரை, வரவேற்பு பேனர்கள், கொடி கம்பங்கள், வண்ண விளக்குகள், கட்சி தலைவர்களின் கட் அவுட்கள் போன்றவை வைக்கப்படுக் கொண்டு தான் இருக்கும்.

இந்த விஷயம் அறியாத நாம், கட் அவுட் எல்லாம் அன்றைக்கே வைத்து முடிக்கப்பட்டு விட்டதாய் எண்ணி தமுமுக போன்ற அப்பழுக்கற்ற(?), கொண்ட கொள்கையில்(&#%@) இறுதி வரை உறுதிப்பாடு (!!) காட்டும் கட்சியினை வீணாய் சந்தேகப்பட்டு விட்டோம்.

இது தொடர்பாய் தமுமுக நண்பர்களுக்கு பகிரங்கமாய் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம் !






வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

Refutations to a Non-muslim brother on Terrorism



Firstly, the most basic point to be kept in mind is the fact that Islam is an outcome of Quran & Hadees and not from lives of muslims. Hence, any question or criticisms must be highlighted on the lights of Quran or hathees, not from individual's behaviours.

Second, Islam and Terrorism, for your surprise, are two contradictory terms.
 Prophet Muhammad warned people saying, If anyone killed a single human, then in God's register, it will be registered as though he killed the entire Humanity. Terrorism in any form is completely forbidden.
But yes, there are people who doesnt have sufficient knowledge on what Islam says, and they go astray.

I will come to your questions one by one..
Before that, you guys need to realize the fact that it is not only Muslims who do such activities but in the whole world, the entire humanity does this terror acts.
In India, there were several bomb / terror attacks in Malegan, In Assam, in Nagaland, in UttarPradesh (recently). 
I can list out atleast 30 such attacks - NONE OF THEM WAS DONE BY A MUSLIM - ALL THOSE ACTS WERE NOW PROVEN THAT IT HAD BEEN DONE BY RSS - HINDU ACTIVISTS.

In Nepal, there are internal wars in bhutan there is.In germany, the whole world knows, internal fights between South & North korea, last year saw lakhs of innocent killings. Fights between LTTE & srilankan govt. we all know.

It is not that only Muslim countries are involved in such activities. It is the media which give hypes to such activities when it comes to a muslim country.
You again have to realise a simple fact that Muslims in Afgan fight against US - which is nothing but their Freedom Struggle.
Palastine or Syria war againts Israel & US - which is again their struggle for their freedom,

How come, a freedom struggle could ever be named terrorism ? If so, then do you agree that Nethaji Subash Chandra Bose had been a terrorist ? 
Do you agree that the INC which he formed, was a terrorist group? You have to.
Because, What Nethaiji did against US, is what these muslim countries does now !! Nethaji killed many English military troops, h had set fire to many police stations, houses and military regumes. 
It was how he conquered English - we never say it was terror attacks, but we praise him as  a great warrior !



His questions and my replies to it :


1. In the link I have provided please pause at 2.02. Is that what we expect from a kid? http://www.youtube.com/watch?v=oYzP24J6A4E

Islam, as I said before, doesnt permit beheading of any person by any individual. If at all it has to be done, it must be done by a Government after chains of investigations and proofs. 

Butm when Prophet Muhammad is critisized that violently and in such an extreme vulgar manner, any Muslim will get tensed just because of the fact he is the most important person for any muslim out of the whole world !

A group of persons create a video of a person's Mother or sister so vulgarly & beyond imagination. Let us think off ourselves in that situation. Our family members are miserably criticised on video that they are prostitutes etc etc and the same, if had been uploaded on to youtube, what will be the person's reaction to it?
Out of that anger, if he proclaims "I will kill that guy", then will you come in favour of that group of people and talk against this guy? 
Will you still say - Hey, how can you talk like this? Are you not tolerant enough??

When it comes to his mother, when it comes to his sister, any human is bound to get tensed. Only if he does so, he is a human !

Muslims love prophet Muhammad 100 times more then they love their mothers. Now, what alternate reaction do you expect from a muslim for such an act?

Every Human is intolerant to a certain aspect. It is the intensity of those aspects that decide his limit of tolerance. Muslims are tested with that limit through this issue while other people are not tested. Or, their tests and results were not shown to the public over media as how this was portrayed.



2. Islam is not encouraged in Japan. After the Sarin nerve gas attack in 1995 there is no terrorist attack till now. Is that a mere coincidence?

Even Hindu population in Japan is very meager. 
UAE have very less christian & Hindu population - UAE is calm and queit
Saudi has very less or no christian & Hindu population - Saudi is calm and peaceful
Thailand has 0.06% of christians - Thailand is peaceful !
Switzerland doesnt have Hindus - It is one of the most beautiful places on earth !
There is very much negligible quantity of Hinduism in the whole world (Except countries like Nepal, India etc).. and the majority of the countries are calm and quiet !!



3. When the Innocence of Muslim trailer we released in you tube muslims from all over the world protested and its intensity were felt in my home town. After some two months the worst terror against a girl was unleashed in Delhi. If those organization is for the growth of humanity why they didn’t come to the street to have a protest with such a vigour as in the previous case? Even the Tsamaev , one of the accused in Boston bombing were supported some muslim community.


Just because I protest for something, you do not have any rights to question me on why I did not protest for anything else too. Your questions are just common to all human and you portray it as though only muslim have that quality.

If your family member is captured on a video and exposed to the world vulgarly, you will react to it. That reaction will not be equivalent to the reaction you show towards a murder news you read on newspapers !

If I come and ask you, Hey you reacted so violently when it comes to your family member but why didnt you react in a similar fashion to that murder case you read on the second page of today;s newspaper..?

Will you accept this question as an intellectual, unbiased one ??

People react differently in different conditions. I cannot condemn all day to day affairs happening in the world just because I condemn what has happened to my family member.

And to protest against that delhi attack - is just meaningless. It is one among the terror attacks on women community that happens lakhs - daily.
I read similar news daily on my newspaper and delhi case is nothing special. 



4. In Iraq there are frequent strife between Shia muslims and Sunni muslims. This year alone as per UN estimate 4400 was already killed. Still counting….But when a person from another community harms you, all you people unites as one. Is this Islamic Brotherhood or Politics of Islam?

As I said earlier, internal wars happen all through the world. Not only between shias - sunnis. Wars and riots happen everywhere and for every reason. Maoists attack Indian civilians and a war occurs between our indian regimes and maoists.
War occurs between Srilankan troops and the locals ther
War is between South and North Korea.
War occured between the local jews of East Britain and Germany Nazis.
There are internal communal riots happening between Scheduled castes and upper middle caste in states like Tamilnadu, Bihar, Andhra etc.
French wars occured in France during the 16th century which were between the protestents and Catholics.
In rome, the famous 30 year war occured between the same protestants and catholics.
Ethinic fights in Nigeria during early 20th century marked many innocent lives - Christianity involved in it
During 1960s, South Vietnam saw a major outburst among the majority Buddists and the Catholics

So what actions have you taken on this?


5. The link given below is a manual of Afghan Jihad. Please go through all the 28 pages. http://www.fas.org/irp/world/para/manualpart1_1.pdf Is this what one expects from a civilized world? Or is the translation incorrect?
6. Religion is for peaceful co-existence. But why people in Chechenya, Kashmir, Mindanoa in Philippines want a separate nation? What is there agenda? Why these peoples who follows Islam cant co-exists with other fellows?

Answered already

7. In almost all the terrorist attacks which shocks the globe muslims are pointed. Is this shows there intolerance? or Is it that muslims are being targeted in the name of Jihad?

Yes, we do not deny the fact that muslims too involve in many terror attacks. It is because they do not understand the religion the way it is supposed to be. Islam, as I said earlier, preaches peace and harmony.
Attacking / Killing a single life means killing the entire world - according to Quran. 
Wherever, Quran talks about Jihad, it is nothing but the necessities of a government !

If China or Pakistan comes for an attack, Indian government must do Jihad !

And this is what Jihad really means and not about a group of people forming an organisation and killing others - NO !

As I said, Islam is about Quran & Prophet Muhammad. 

வியாழன், 6 பிப்ரவரி, 2014

அமானுஷ்யம் : ஒரு பார்வை




இறந்தவர்கள் இவ்வுலகில் மீண்டும் வருவர் என்றும், மனிதர்களிடமும் சில அமானுஷ்ய சக்திகள் உண்டு என்றும் பலரும் நம்பியிருப்பதை காண்கிறோம்.
இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் ஒரு பக்கமெனில், இதை உண்மை என நம்பி அதனால் அச்சப்பட்டு வாழ்க்கையையே தொலைக்கின்றவர்களும் இருக்கின்றனர்.

இதை இரு கோணங்களில் பார்க்கலாம்.

அமானுஷ்யம் உள்ளது என்பதை நம்பி அதை கண்டு பயப்படுவது ஒரு வகை.
பயந்து பயந்தே ஒன்றை அமான்ஷ்யமாக நம்பி விடுவது இன்னொரு வகை.

அமானுஷ்யம் உள்ளது என்று நம்பி ஒருவன் பயந்தானேயானால், அவன் நம்பியது போல் அமானுஷ்யம் இருக்கிறதா என்பதை ஆராய சொல்லலாம்.

ஒருவன் பயந்து பயந்து அதன் காரணமாய் அமானுஷ்யத்தை நம்பினானேயானால், அவனது பயத்தை தான் போக்க வேண்டும்.

நம்பிக்கையில் இரு வகை உள்ளது. ஒரு சித்தாந்தத்தையோ கொள்கையையோ நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்கிற காரணத்தால் அதன் பரிணாமங்கள், விளக்கங்கள் அனைத்தையும் நம்புவது ஒரு வகை.

இன்னொரு வகையானது, நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கை என்றாலும் கூட, அதிலுள்ள சித்தாந்தங்கள் அனைத்தும் நம்புவதற்கு ஏற்றவை தான் என்பதை புறக்காரணங்களின் துணையோடு நம்புவது.

இரண்டில், இரண்டாம் வகை தான் அறிவுக்கும் ஏற்றது, பகுத்தறிவுக்கும் உகந்தது.

எனது வேத வசனங்களைக் கொண்டு உங்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் கூட அவற்றில் குருட்டுத்தனமாகவோ செவிட்டுத்தனமாகவோ விழுந்து விடாமல் அதை ஆராய்ந்து, புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்லாமியர்கள் நம்புகிற வேதமான திருக் குர்ஆனும் இதை தான் சொல்கிறது.

இந்த அறிவுரையை ஒரு சித்தாந்தம் கூறுகிறது என்றால் அதன் பரிணாமங்களில் எதனையும் நாம் சிந்தித்து ஏற்க முடியும் என்று பொருள். சிந்திக்காமல் அல்லது சிந்தனைக்கு எட்டாத வகையில் எந்த ஒன்றும் குர் ஆனில் இல்லை என்பதால் தான் அது தனக்கு தானே இந்த பெருமையை சூட்டிக் கொள்கிறது.

இறைவன் இருக்கிறான் என்கின்ற நம்பிக்கையை ஏற்பதை பொறுத்தவரை மற்ற மற்ற மதத்தவர்கள், மேலே நாம் குறிப்பிட்ட முதலாம் வகையின் கீழ் வருவர். ஆனால், முஸ்லிம்களை பொறுத்தவரை, அதை வெறும் சடங்காக ஏற்காமல் காரண காரியங்களுடன் உள்ளத்தில் உரசிப்பார்த்து நம்புகின்றனர்.

அதனால் தான், இறைவனை என் கண் முன்னே காட்டு, என ஒரு நாஸ்த்திகன் கேட்கும் போது, அந்த கேள்வி ஒரு ஹிந்து, கிறித்தவனை திணறடிக்கக்கூடிய கேள்வியாகவும் ஒரு முஸ்லிமுக்கு அது கேலிக்குரிய வாதமாகவும் தெரிகிறது.

இறைவன் இருக்கிறான் என்பதை சான்றுகளுடன் நம்பி விட்ட பிறகு,
அந்த இறைவனின் வார்த்தை தான் குர் ஆன் என்பதை பல்வேறு காரண காரியங்களுடன் நிரூபிக்கும் வகையில் ஏற்றுக் கொண்ட பிறகு,

அந்த குர் ஆன் சொல்கின்ற எந்த அமானுஷ்யமானாலும் அவற்றை நம்பலாம். ஏனெனில், அதை சொல்வது இறைவன் !

எதைக் குறித்து இறைவன் சொல்லவில்லையோ, அதையும் நாம் நம்பலாம், எப்போது?
அதை நேரடியாய் நம் கண்ணால் கண்ட பிறகு,
அல்லது அதை குறித்த அறிவை நாம் செலுத்தும் போது,
அது நம் சிந்தனைக்கும் நடைமுறைக்கும் உகந்ததாய் தென்படும் போது..

ஒரு முஸ்லிமை பொறுத்தவரை மேலே உள்ள அளவுகோலில் ஒரு நம்பிக்கையானது வரையறுக்கப்படவில்லையெனில், அந்த நம்பிக்கை போலியானது என்று அவன் உதறி விட வேண்டும்.

நம் பார்வைக்கு எட்டாத, சிந்தனைக்கு புலப்படாத, இறை வார்த்தைகளான‌ குர் ஆன், ஹதீஸ்களிலும் சொல்லப்படாத ஒரு அமானுஷ்ய‌ நம்பிக்கை பற்றி இவ்வுலகம் பேசுமானால் அது பொய் என அடித்துக் கூறி விடலாம்.

ஆனால், வேடிக்கை என்னவெனில், இன்று, இறைவனை கண்ணால் காட்டினால் தான் நம்புவேன் என பகுத்தறிவை அடமானம் வைத்து வாதம் புரிவோர் கூட, கண்ணாலோ கருத்தாலோ அறிந்திடாத அமானுஷ்ய சக்தி மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

மனிதனுக்கு மனித தன்மை தான் இருக்கும். அதை தாண்டிய ஒரு ஆற்றல் அவனுக்கு இருக்காது என்பதே பொதுவான விதி. இஸ்லாம் கூறும் வரலாறுகளில் இதில் விதிவிலக்கு பெற்றவர்களாக நபிமார்களையும் வேறு சிலரையும் எடுத்துக் காட்டுவதாக இருந்தால் கூட அவை குறித்து இறைவனே சொல்லி விட்ட காரணத்தால், மேற்கூறப்பட்ட பொது விதிக்கு இவை முரணாகாது.

மனிதனுக்கு அல்லாஹ்வின் ஆற்றல் இருப்பதாய் நம்புவது பெருங்குற்றம் என அல்லாஹ் சொல்லியிருக்கிறான் என்றால், அல்லாஹ்வின் ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்பது இதிலிருந்து புரிகின்ற சாதாரண உண்மை. அல்லாஹ்வின் ஆற்றலை பெற்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்றால், இருக்கின்ற ஒன்றை நம்புவது குறித்து அல்லாஹ் குற்றம் பிடிப்பதிலோ, நிரந்தர நரகத்தில் தள்ளுவதிலோ அர்த்தமிருக்காது !

அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்றால் அல்லாஹ்வுக்கு இணையாக எவரும் இல்லை

என்கிற சாதாரண உண்மை பலருக்கும் புரியாத காரணத்தால் தான் சில மனிதர்களுக்கு, அவர்களது இயல்பான ஆற்றலை மீறீய ஒரு அமானுஷ்யம் நிலவுவதாக அவர்கள் நம்புகின்றனர்.

இத்தகைய நம்பிக்கைக்கு நாம் ஏற்கனவே கூறியது போல், அவர்கள் அது குறித்து கொண்டிருக்கும் அச்சமே காரணம். அல்லாமல், இறைவன் இருப்பதை எப்படி உணர்வால் புரிந்து, பகுத்தறிவால் சிந்தித்து, உள்ளத்தால் ஏற்று வாழ்கிறோமோ அப்படி எவரும் அமானுஷ்ய சக்திகள் குறித்து ஏற்றுக்கொண்டது கிடையாது.

நாம் இதை நம்புகிறேன், அதனால் இது உண்மை என்று நிலைனாட்டும்படியாய் எந்த ஒன்றும் உலகில் கிடையாது. ஒன்றை உண்மை என ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில், அதை ஏற்பதற்குரிய புறக் காரணங்கள் இருக்க வேண்டும். தான் நம்புவது ஒன்றே ஆதாரமாகி விடாது என்பதை புரிகிற தருணத்தில், இது போன்ற அமானுஷ்ய நம்பிக்கை போலியானது என்று விளங்கிக் கொள்ள முடியும்.

இறைவன் இருக்கிறான் என்பதை நாம் நம்புவதோடு அல்லாமல் இந்த நம்பிக்கைக்கான புறச் சான்றை நான் காட்டுவேன்.

இன்னும், இறை வேதம், இறை தூதர்கள், மறுமை வாழ்க்கை என எதை நம்புவதாக இருந்தாலும், அதை நம்புவது என்பது வெறும் சம்பிரதாய ரீதியிலான நம்பிக்கையல்ல, மாறாக, அதை நம்புவது தான் அறிவுசார் சித்தாந்தங்களுக்கு ஒத்தது என்பதை எவராலும் விளக்கி சொல்ல‌ முடியும்.

ஆனால்,மனிதனே இறந்து பின் மீண்டும் இவ்வுலகில் தோன்றுவான் என்றோ
அல்லது,
மனிதனுக்கு, அவனது இயற்கை ஆற்றலை தாண்டிய ஆற்றல்களும் வெளிப்படும் என நம்புவதோ வெறும் நம்பிக்கை தானே தவிர, அது ஒரு காலும் நிரூபணமாகாது.

முஸ்லிம்களை பொறுத்தவரை, இஸ்லாமிய கோட்பாடுகள் எதை அமானுஷ்யமாக சொல்கிறதோ அதை நம்பலாம். அதை கூட, எவருடன் தொடர்புபடுத்தி சொல்கிறதோ அதோடு மட்டுமே தொடர்புபடுத்தி நம்பலாம். அதை தாண்டிய நம்பிக்கை என்பது இல்லை.

மூஸா நபி தமது கைத்தடியை பாம்பாக மாற்றிக் காட்டும் அமானுஷ்ய சக்தியை கொண்டிருந்தார்கள் என்றால் ஈசா நபிக்கும் அந்த சக்தி உண்டு என நம்பக்கூடாது.
நிலவை பிளக்கும் ஆற்றலை இறைவன் முஹம்மது நபிக்கு கொடுத்தான் என்றால் அது போல் தாவூது நபிக்கும் செய்ய முடியும் என்று நம்பக்கூடாது.

எந்த சக்தி, யாருக்கு, எப்போது இருந்ததாக குர் ஆன் சொல்கிறதோ, அவர் அந்த சக்தியை அந்த நேரத்தில் மட்டும் வெளிக்காட்டுவார் என்று தான் குர் ஆன் கூறும் அமானுஷ்யம் அல்லது மனித சக்தியை தாண்டிய அற்புதத்தை குறித்த நமது நம்பிக்கை இருக்க வேண்டும்.

இந்த அடிப்படை நம் உள்ளங்களில் ஆழமாய் பதிந்து விடுமானால், குர் ஆன் கூறாத, நம் அறிவுக்கும் எட்டாத, எந்த நம்பிக்கையும் நமது உள்ளத்தை அசைக்காது !

மனிதன் என்றைக்கும் மனிதன் தான் !




செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

தூங்குவது வணக்கத்திற்கு எதிரா?



என்னை வணங்குவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் உங்களை நான் படைக்கவில்லை என்று அல்லாஹ் சொல்கிற போது நீங்கள் ஏன் சாப்பிடுகிறீர்கள், ஏன் தூங்குகிறீர்கள்?

என்பன போன்ற புல்லரிக்கும் கேள்விகளை சிலர் முகனூலில் பரப்பி தங்களது அதிமேதாவித்தனத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

இஸ்லாம் குறித்த கேள்விகளாக எதை கேட்டும் பயனற்று போய், இஸ்லாம் என்கிற சத்தியக் கொள்கை அனைத்து சித்தாந்தங்களையும் விஞ்சி நின்று, இவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்து வரும் நிலையில்,

எதையாவது கேட்க வேண்டுமே என்பதற்காக இத்தகைய கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

என்னை வணங்குவதற்காகவே உங்களை படைத்தேன் என்கிற கட்டளையானது நாம் தூங்குவதற்கோ சாப்பிடுவதற்கோ எதிரான கட்டளையல்ல.

இந்த நோக்கத்திற்காக தான் நீ இங்கே வந்திருக்கிறாய் என்றால் அந்த நோக்கத்திற்கு எதிரான காரியத்தையோ அல்லது நோக்கத்தை அடைவதற்கு தடையாய் அமையும் செயல்களையோ செய்யக்கூடாது என்பது தான் பொருளே தவிர அந்த நோக்கத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத காரியமொன்றை செய்வதை அது தடுக்காது.

இது மனிதனின் சாதாரண பேச்சு வழக்கிலும் உள்ளது தான்.

இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கத்தான் வந்திருக்கிறாய் என்று ஆசிரியர் மாணவனைப் பார்த்து சொன்னார் என்றால், நேற்று இடைவேளையின் போது வராந்தாவில் அவன் நடந்து கொண்டிருந்ததை இதற்கு எதிரான காரியமாய் காட்டக்கூடாது.
அல்லது மதிய வேளையில் உணவருந்துவது, பள்ளிக்கூடத்தில் படிக்கத்தான் வந்த்திருக்கிறான் என்கிற ஆசிரியரின் கூற்றுக்கு எதிரல்ல.

பள்ளிக்கூடத்தில் வந்த நோக்கம் படிப்பது என்றால் படிப்புக்கு எதிரான காரியம் எதையும் அவன் செய்யக்கூடாது என்பது அதன் பொருள். படிக்கின்ற வேளையில் படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தாலோ அல்லது பரீட்சையின் போது படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாலோ அது தான் முரண்.

உண்ணுவதோ, மலஜலம் கழிக்க அவன் செல்வதோ படிப்புக்கு எதிரான காரியமல்ல.

தன்னை வணங்குவதற்காக தான் அல்லாஹ் நம்மை படைத்திருக்கிறான் என்றால், அவனை வணங்குவதை விட்டும் பாராமுகமாய் நாம் இருக்கக்கூடாது என்பது பொருள். அவனை வணங்குவதற்கு முரணான காரியம் எதையும் செய்து நம் வணக்கத்தை சீரழிக்கக் கூடாது.

அல்லாஹ் விதித்த கட்டளைகள் அனைத்தையும் மனிதன் பேணி நடப்பதே அவனை வணங்கும் முறை.

எப்படி தொழுவதும் நோன்பு வைப்பதும் வணக்கமோ அது போல் சாப்பிடுவதும், வியாபாரத்தில் ஈடுபடுவதும், தூங்குவதும் கூட வணக்கம் தான், இவையும் அல்லாஹ் விதித்த கட்டளைகள் தான் !

இதை புரிந்து கொண்டால் இது போன்ற அதிமேதாவிகளின் வாதம் எடுபடாது !













பாரத் ரத்னாவுக்கு தகுதியா சச்சின்?


சச்சின் ஒரு சாதனையாளர் என்பதிலோ கிரிக்கெட்டில் உலகில் ஜாம்பவான் என்பதிலோ யாருக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது.

தமது திறமையான ஆட்டத்தின் மூலம் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார், ரசிக்க வைத்தார்.

இதையெல்லாம் அங்கீகரிக்கும் நாம், அவர் இந்த 24 வருட காலமும் நாட்டிற்கே சேவை செய்தார் என்று புகழப்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

கிரிக்கெட் விளையாடுவது மக்களை ரசிக்க வைப்பதற்கும், 
அதை வைத்து பல்வேறு நிறுவனங்களும் கோடிகள் பார்ப்பதற்கும்,
அதன் பிரதிபலனாய் சம்மந்தப்பட்டவர் நீச்சல் குளத்துடன் அரண்மனை கட்டுவதற்கும் தானே தவிர இதில் நாட்டிற்கான சேவை என்று எதுவுமில்லை.

நாட்டு கௌரவத்தை காத்தார், சேவை செய்தார் போன்ற புகழ்மாலைகளெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள் தானே தவிர, intellectuals எனப்படும் நுண்ணறிவாளர்கள் சபையில் இதற்கு அங்கீகாரம் கிட்டாது.

இன்னும் சொல்லப்போனால், குடி நீருக்கான வரி கட்டாமல் பாக்கி வைத்திருப்பதாய் சமீபத்தில் தான் மும்பை மாநகராட்சி இவரை குறித்து குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டிருந்தது.
இது நாட்டுக்கான சேவையல்ல, துரோகம் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதே சமயம், சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கலாமா? என்றால் அதில் நமக்கெந்த ஆட்சேபனையும் இல்லை.

சினிமாவில் கூத்தடித்து அந்த பணத்தை கொண்டு அரசியல் நடத்திய எம்ஜிஆருக்கு கொடுக்கலாம் என்றால்,

இசை, நாட்டியம் என மக்களின் மூளையை மழுங்கச் செய்த, நாட்டு முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத ரவிஷங்கருக்கும் லதா மங்கேஷ்கருக்கும் பிஸ்மில்லாஹ் கானுக்கும் கொடுக்கலாம் என்றால்,

அத்துறைகளை விடவும் சற்றே மேம்பட்ட துறையொன்றில் ஜொலித்த சச்சினுக்கு கொடுப்பதில் நமக்கு எதிர்கருத்தேதுமில்லை.

என்ன ஒன்று, இனி முதல்

""பாரத் ரத்னா விருது என்பது நாட்டுக்கு சேவை புரிந்தவர்களுக்காக வழங்கப்படுவது""

என்கிற அடிக்குறிப்பை மாற்றி விடுங்கள் .. என்பது மட்டுமே நமது கோரிக்கை !!

விஜயகாந்தை மிரள வைத்த சிறை நிரப்பும் போராட்டம்


கேப்டனின் தேர்தல் கூட்டணிக் கணக்கு - ஜனவரி 28 க்கு முன், ஜனவரி 28 க்குப் பின் !

ஜனவரி 28 க்கு முன், கூட்டணி குறித்த சிந்தனை. திமுகவா பாஜகவா அல்லது இரண்டையும் சேர்த்தா? என்கிற குழப்பம்..

மோடியின் திருச்சி பொதுக்கூட்டத்தை தமது தொலைகாட்சியில் நேரலை செய்து தமது பாஜக ஆதரவு சிந்தனையை மறைமுகமாய் வெளிக்காட்டிய கேப்டனின் தேர்தல் வியூகத்தை ஜனவரி 28 முஸ்லிம்களின் வரலாறு காணாத போராட்டமானது குழப்பிப் போட்டிருக்கிறது என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

தனித்து போட்டி என்று சொல்லியிருந்தாலும், கூட்டணி பற்றி தலைவர் பின்னர் முடிவு செய்தாலும் அதை தொண்டர்கள் ஏற்பார்கள் என்று ஒரு காலியிடம் வைத்து தான் பேசியிருக்கிறார்.

வேகமாய் கூட்டணிக்கான காய் நகர்த்தல்களை திமுகவும் தேமுதிகவும் பரஸ்பரம் செய்து வந்த நிலையில், தவ்ஹீத் ஜமாஅத்தின் ஹிமாலய போராட்டமானது கேப்டனுக்கு வேகத்தடை இட்டிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

இஸ்லாமியர்களுக்கு அதிமுக இட ஒதுக்கீடு வழங்கி விட்டால், பாஜகவுடனோ திமுகவுடனோ கூட்டணி வைத்துக் கொள்ளலாம்.

அதிமுக இட ஒதுக்கீடு வழங்கவில்லையெனில், பாஜகவை கழற்றி விட்டு திமுகவுடன் கூட்டணி என்கிற நிலையை எடுத்து முஸ்லிம் ஆதரவை பெறலாம் என்கிற எதிர்ப்பார்ப்பை தேமுதிக கொண்டிருக்கக் கூடும்.

எது எப்படியோ, முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாய் எண்ணிக் கொண்டிருந்த அரசியல் கட்சிகளெல்லாம் தங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் மகத்தான சக்தியாய் இஸ்லாமியர்கள், குறிப்பாக தமிழக முஸ்லிம் சமுதாயத்தினர் மாறி வருவதை ஒப்புக் கொள்ளத் துவங்கி வருகின்றனர்.

இந்த நிலையை முஸ்லிம்கள் அடைவதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பேரியக்கம் தமிழகத்தில் ஆற்றியுள்ள பங்கு அளப்பெரியது.

அரசியல் சதுரங்கம் எக்கேடு கெட்டுப் போனாலும், கொண்ட கொள்கையிலும், தேர்வு செய்த இலக்கை அடைவதிலும் எந்த தொய்வையும் காட்டாமல் வெற்றி நடை போடுவோம், அல்லாஹ் அருள் செய்வானாக..!

கேக்கிறவன் கேனையனா இருந்தா..


அதிமுகவின் ஓராண்டு சாதனை விழாவில், சச்சின் ஒரு பந்தில் தான் சிக்சர் அடிப்பார், அம்மா எல்லா பந்திலும் சிக்சர் அடிப்பார் என்று சட்டசபையில் வீர முழக்கம் முழங்கிய வாயொன்று,

தானே புயலின் பாதிப்புக்கு அம்மா செய்த நிவாரணத்தைக் கண்டு எல்லார் வீட்டிலும் தானே புயலுக்காக‌ வாசலில் காத்துக் கிடந்தார்கள் என ஜால்ராவில் சிகரம் தொட்ட தானே தலைவர்,

கடந்த 2009 தேர்தலின் போது நாங்கள் இரு திராவிட கட்சிகளிடமும் சரி சமமாய் பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம் என வெட்கமில்லாமல் அறிவிப்பு செய்த காமெடி இயக்கமொன்று,

தற்போது சமூக அக்கறை என்கிற செம்பை தூக்கிக் கொண்டு, இட ஒதுக்கீடு அளிக்காததற்காக‌ சட்டசபை வெளிந‌டப்பு செய்திருக்கிறோம் என்கிறது.

ஒரு சீட்டு கூட கிடையாது என அம்மா துரத்தி விட்ட நிலையில், கலைஞர் பக்கம் தஞ்சம் புகுந்த போது, அவர் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பார் என உத்திரவாதம் வாங்கிக் கொண்டு தான் தஞ்சம் புகுந்தார்களா?

இவர்கள் உண்மையில் இந்த அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால் எந்தக் கட்சி இட ஒதுக்கீடை அளிக்கிறதோ அதை தான் நாங்கள் ஆதரிப்போம் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

அதை செய்ய வக்கற்று, யார் அதிகம் சீட்டு தருகிறார்களோ அவர்களை ஆஹா ஓஹோ என்று புகழ்வதும், யார் சீட்டு தரவில்லையோ அவர்களை விமர்சனம் செய்வதும்.. என்கிற நாலாந்திர அரசியல்வாதியின் போக்கை வெளிக்காட்டி சமுதாய மானத்தை அடகு வைத்திருக்கிறது இந்த தமுமுக.
சீட்டு அதிகம் கிடைக்கிறது என்றால் பாஜக பக்கம் கூட இவர்கள் செல்வார்கள் என்பதே உண்மை.

சமுதாய மானத்தை அடகு வைப்பதில் முன்னோடியாய் திகழும் இந்த தமுமுக, தற்போது இட ஒதுக்கீடு பிரச்சனை காரணமாய் வெளி நடப்பு செய்கிறோம் என்று சொல்வது வேடிக்கையின் உச்சம் !

கேக்கிறவன் கேனையனா இருந்தா எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம்..!

கறந்து குடித்தால் பிள்ளை ஆகலாமா?

தாய் - பிள்ளை உறவு ஏற்பட
தாயின் மார்பில் வாய் வைத்து உறிஞ்சிக் குடிக்க வேண்டும்
அதுவும் வயிறார (பசி தீரும் அளவு) குடிக்க வேண்டும்
அது கூட இரண்டு வயது வரை தான் இருக்க வேண்டும்,

என்றெல்லாம் பல நிபந்தனைகளை அல்லாஹ் இட்டுள்ள போது

20 வயதை கடந்த வாலிபர் ஒரு பெண்ணிடம் பால் குடித்து மகனாக போகிறேன் என்று சொன்னால் அதை விடவும் ஒரு ஆபாசம், வக்கிரம் இருக்க முடியாது. இப்படியாக எந்த செய்தி இருந்தாலும் அதை நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் !

வாய் வைத்து குடிக்கவில்லை, கறந்து தான் குடிப்பார் என்று சொல்லும்படியான எந்த வார்த்தையும் அந்த செய்தியில் இல்லை என்பது ஒரு புறமிருக்க, கறந்து குடிப்பதினால் தாய் பிள்ளை உறவு ஏற்படாது என்று அல்லாஹ் சொல்லியிருக்கும் போது, கறந்து குடித்து பிள்ளை ஆகிக் கொள்வார் என்கிற கூற்று இங்கு பொருளற்றதாகிறது.

இரண்டு வயதிற்கு மேல், அதுவும் வாய் வைத்து உறிஞ்சி குடித்தாலே தவிர தாய் பிள்ளை உறவு ஏற்படாது என்பது நேரடியான ஹதீஸ் (பார்க்க திர்மிதி 1072)

அவ்வாறிருக்க, மீசையும் தாடியும் வளர்த்த இளைஞனான சாலிமுக்கு வாய் வைத்து பால் குடிக்க நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்,

கறந்து குடிப்பதினால் பிள்ளை ஆகவும் இயலாது.

பால் கொடுக்க சொல்கின்ற இடத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை "அர்ளியீஹி" என்பதற்கு கறந்து குடித்தல் என்கிற பொருள் இல்லை.

விபச்சாரம் செய்து விட்டதற்கு வலிய வந்து தண்டனை கேட்கும் பெண்ணிடம் முதலில் குழந்தை பெற்றுக் கொண்டு வரும்படியும், பின்னர், குழந்தை பால்குடியை மறக்கும் வரை பால் புகட்டி விட்டு வரும்படியும் நபியவர்கள் சொல்கின்ற ஹதீஸில் (முஸ்லிம் 3500) இதே அர்ளியீஹி என்கிற வார்த்தை தான் உள்ளது, இதற்கு வாய் வைத்து குறிஞ்சி குடித்தல் என்று எவரும் பொருள் செய்ய மாட்டார்கள்.

ஒன்று, குர் ஆனுக்கு முரணாக நபியவர்கள் சட்டம் சொன்னார்கள் என்று சொல்ல வேண்டும்
அல்லது, ஆபாசத்தை ஏவினார்கள் என்று சொல்ல வேண்டும்.
(நவூதுபில்லாஹ்)
இரண்டுமே மார்க்கத்திற்கு எதிரான நிலைபாடு என்பதால், வேறு வழியின்றி இறுதியாய் இவர்கள் வந்து நிற்கும் இடம், இது சாலிமுக்கு மட்டுமுரிய சட்டம் என்பது தான்.

ஆனால், இந்த நிலைபாட்டுக்கும் தெளிவான மறுப்பு இருக்கிறது.

முஸ்லிம் 2881 இல் வரக்கூடிய மற்றொரு ஹதீஸில், இன்னொரு சிறுவன் ஆயிஷா அவர்கள் வீட்டுக்கு வருவது பற்றி உம்மு சலமா அவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் போது, ஆயிஷா அவர்கள், சாலிம் விஷயத்தை ஆதாரமாக காட்டி அதை நியாயப்படுத்துவது போல் உள்ளது.

இது, அந்த சட்டம் சாலிமுக்கு மட்டுமுரியது என்பதற்குரிய மறுப்பாகும்.

ஆக, என்ன தான் குட்டிக்கரணம் அடித்தாலும் நியாயப்படுத்தவே இயலாத ஹதீஸ் சாலிம் பால் குடி ஹதீஸ்.

மார்க்கத்திற்கு முரணாக இவ்வாறிருக்கும் ஒன்றிரெண்டு ஹதீஸ்கள் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை என தூக்கி வீசுவதே ஈமானுக்கு பாதுகாப்பானது !

நடு சென்டர்களின் சிறு பிள்ளைத்தனம்


பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் சக நண்பர்களுடன் விளையாடுகிற போது, குழந்தைகளுக்கே உரித்தான கர்வங்கள் வெளிப்படும்.

கண்ணாம்மூச்சி ஆடுகையில், தம்மால் ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை என்கிற நிலை ஏற்பட்டு விட்டாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள அவர்கள் மனம் விரும்பாது.
"போடே நா உன்ன அப்பவே பாத்துட்டேன்", 
"இங்க தானேலே ஒளிச்சிருந்தே, ஃபஸ்ட் உன்ன தாம்லே பாத்தேன்.."

என்று தமது தோல்வியை மறைக்க, தங்களுக்கே உரித்தான பாஷையில் சண்டையிட்டுக் கொள்வர்.

அதாவது, இன்னொருவர் தம்மை வீழ்த்தி விட்டார் என்பதையோ, இன்னொருவரிடம் தான் தோற்று விட்டோம் என்பதையோ ஒரு மனிதனால் எளிதில் ஏற்றுக் கொள்ள இயலாது.

குழந்தைப் பருவத்தில் இவை பிறரால் ரசிக்கும் அளவிற்கு இருக்கும். அத்துடன் அத்தகைய குணத்தை அவன் திருத்திக் கொள்ள வேண்டும்.
அதுவே வளர்ந்து பெரியவனாகியும் இத்தகைய குணம் நீடிக்குமானால், அது தன்னளவிலும், தன்னை சார்ந்திருக்கும் மற்றவர்களையும் அழித்து நாசமாக்கும் புற்று நோயாக வளர்ந்து நிற்கும்.

இதை தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்ட வெற்றியை சகித்துக் கொள்ள இயலாதவர்களின் புற்று நோய் நமக்கு பறைசாற்றுகிறது.

போராட்டம் நடைபெறுவதற்கு முன்னரே இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் முடிவை அம்மா எடுத்து விட்டார்களாம். இது இந்த மன நோயாளிகளின் சமீபத்திய சால்ஜாப்பு.

அதாவது, போராட்டம் மகத்தான வெற்றி பெற்று விட்டது,
நாம் எதிர்ப்பார்த்ததை விடவும்,
நம் எதிரிகள் செய்து வைத்த கணக்கை தாண்டியும்,
உளவுத்துறையின் கணிப்பை விடவுமெல்லாம் எங்கேயோ சென்றிருக்கிறது ஜனவரி 28 போராட்ட வெற்றி !

இவர்களது இந்த சிறு பிள்ளைத்தனமான மடமைகள் நமக்கு இதை தான் தெளிவாக்குகின்றன.

இந்த மகத்தான வெற்றியை துல்லியமாய் அறிந்து கொண்ட ஊடகங்களும் உளவுத்துறையும் சேர்க்க வேண்டிய முறையில் முதல்வர் காதுக்கு சேர்த்துள்ளனர்,
ஆகவே இட ஒதுக்கீடு என்கிற ஒன்று இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுமேயானால் அதற்கு முழு முதற்காரணம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் என்கிற பேருண்மையை அனைவரும் புரிந்து கொண்டனர் என்பதும் இவர்களது இந்த சிறுபிள்ளைத்தனத்திலிருந்து புரிகிறது.

இதற்கு முன்பே இட ஒது
க்கீடு வழங்கும் முடிவை முதல்வர் எடுத்து விட்டார் என்கிற இவர்களது பொய்களுக்கு இவர்களிடம் எந்த சான்றும் இருக்காது என்பது ஒரு பக்கமிருக்க, ஒரு பேச்சுக்கு அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, அதுவும் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவை பெறும் பொருட்டு தான் என்கிற சாதாரண உண்மை இந்த அரை வேக்காடுகளுக்கு புரியவில்லை.

ஊருக்கு நான்கு பேரை வைத்துக் கொண்டு தற்போது கலைஞரே கதி என்று அறிவாலய வாசலில் தட்டுடன் நிற்கும் மமகவிற்கு ஒரு தொகுதி கூட தேறாது என்கிற நிலையில், அக்கட்சி தங்களை ஆதரிக்காது, ஆதரித்தும் புண்ணியமில்லை என்று முதல்வருக்கு தெரியும்,

நாங்கள் முஸ்லிம்களுக்கான இயக்கமல்ல, நாங்கள் பொது.. என வெட்கமின்றி உரைத்து வரும் எஸ்டிபிஐயினால் ஆயுத பூஜைகளையும், வினாயகர் சதுர்த்தியையும் தான் சிறப்பாய் கொண்டாட இயலுமே தவிர, அதை தாண்டி எதையும் இந்த நாட்டில் கிழிக்க முடியாது என்றும் முதல்வர் அறிந்து வைத்திருக்கிறார்,

முஸ்லிம் லீக், தேசிய லீகுகளை பொறுத்தவரை அவர்களுகென குறிப்பிட்ட கொள்கை எதுவும் கிடையாது, அரசியல் ரீதியிலான முடிவை தான் எடுப்பார்கள், அவர்களால் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது என்பதும் அவருக்கு தெரியும்.

இன்னிலையில், நாம் செய்யும் ஒரு காரியத்தினால் ஒட்டு மொத்த சமூகமும் நம்மை பாராட்ட வேண்டுமெனில், தான் தேர்வு செய்ய வேண்டிய அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத் தான் என்பதை அவர் அறியாமல் இல்லை.

ஜனவரி 28 க்கு முன்னரே இட ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டு விட்டது என்பது வடிகட்டிய பொய் என்பது ஒரு பக்கமிருக்க, போராட்டத்திற்கு முன்போ பின்போ அத்தகைய எண்ணம், பாஜக ஆதரவு சிந்தனை கொண்ட இந்த முதல்வர் உள்ளத்தில் ஏற்படுவத‌ற்கு கூட இந்த பேரியக்கம் தான் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவான ஒன்று !

முகத்திரை கிழிக்கப்பட்ட காசிமி


முஸ்லிம் பெண்களை , கண்டவன் கூட செல்பவள், கணவன் வெளிநாட்டில் இருக்க, இங்கே அன்னியர்களுடன் ஊர் சுற்ற செல்கிறாள்,

என்று சொல்வது நாலாந்திர பேச்சில்லையா? இதில் உங்கள் குடும்ப பெண்ணும் உட்படுமே, அது பரவாயில்லை உங்களுக்கு, இவ்வாறு சொன்னவனை நாயே என்று அழைத்து விட்டால் மட்டும் கொதிப்பீர்களா?

ஏன் இப்படி பேசுகிறீர்கள்? இது நியாயமா ? என்று அவனிடம் போன் செய்து கேட்ட போது, நான் இப்படி தான் சொல்வேன், இன்னும்ஆயிரம் முறை சொல்வேன், கணவன் ஊரில் இல்லாதிருக்க, இங்குள்ள பெண்கள் கண்டவர்களுடன் சுற்றுகிறார்கள் என்கிற கருத்தை மீண்டும் சொன்னானே, அது பரவாயில்லையா? இவ்வாறு சொன்னவனை அயோக்கியன் என்று ஒருமையில் சொல்வது மட்டும் உங்களுக்கு கசக்கிறதா?

ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராய் இந்த அளவிற்கு மிருகத்தனமான பேச்சை பேசியிருக்கிற அந்த ஷம்சுதீனை உங்களில் எத்தனை பேர் கண்டித்தீர்கள் ?

சரி, இவனை திட்டியது முகனூலில் உள்ள ஆயிரக்கணக்கன சகோதரர்கள் தானே?
இவனை திட்டியது சகோ. செய்யது இப்ராஹிம் தானே?

நியாயமாக பார்த்தால் இவன் செய்யது இப்ராஹீமையும், அது போல் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏனைய உறுப்பினர்களையும் தானே ஏச வேண்டும்?
ஆனால், இவன் செய்தது என்ன?

தொலைபேசியில் பேசுகிற போது, சகோ. பிஜெவை நாய் என்றான்.
பிஜெவை அயோக்கியன் என்றான். பிஜேவை அவன், இவன் என ஏக வசனத்தில் திட்டினான்.
இவனுக்கு கேன்சர் வந்தது மட்டும் பத்தாது, நாய் மாதிரி நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு தெரு தெருவாக அலைய வேண்டும்

என்றெல்லாம் ஒரு மார்க்க அறிஞரை திட்டித் தீர்த்தானே,
இது போன்ற வார்த்தைகளுக்காக உங்களில் எத்தனை பேர் கொதித்தீர்கள்?

என்னாங்கடா உங்க நடுநிலை?

மேலும்,
எங்கள் சமுதாய பெண்களையா அவதூறு சொல்கிறாய் என்று கேட்ட போது, அதற்கு ஆதாரம் என்கிற பெயரில், பெண்கள் அனைவரையும் விபச்சாரியுடன் தொடர்புபடுத்தி, வீட்டை விட்டு வெளியில் செல்கிற அனைத்து பெண்களும், குறிப்பாக இது போன்ற போராட்டங்களுக்கு செல்லும் எல்லாருமே விபச்சாரிகள் தான் என்கிற கருத்தை மீண்டுமொரு முறை அழுத்தமாய் பதித்தானே?

இதை விட ஒரு இழி சொல் வேறு வேண்டுமா இந்த உம்மத்துக்கு?

இவனை நாய் என்றும் கிறுக்கன் என்றும் திட்டியது மிகக் கொடூரமான வார்த்தையோ?

பிஜே இவனை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார்,
பிஜே அதிமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டார்,

என்றெல்லாம் அவதூறுகளையும் புளுகுகளையும் சிறு சஞ்சலமுமின்றி சொல்லியிருக்கிறானே, இவனை கடுமையான வார்த்தையுடன் திட்டியது உங்களுக்கு பொறுக்கவில்லை என்றால்,

உங்கள் நடு நிலை சந்தி சிரிக்கிறது , உங்கள் ஈமானிய உறுதி ஆட்டம் கண்டுள்ளது.

எந்த குர்ஆன், பிறரிடம் கண்ணியத்தையும் அமைதியையும் பேண சொல்கிறதோ அதே குர்ஆன், அநியாயம் செய்பவர்களிட்ம் வரம்பு மீறவும் நம்மை அனுமதிக்கிறது.

எந்த இறைவன் நம்மை நளினமாகவும், மென்மையாகவும் மார்க்கத்தை போதிக்க சொல்கிறானோ அதே இறைவன், நமக்கு தீங்கு செய்பவர்களிடம் கண்ணியக்குறைவாய் பேசவும் அனுமதிக்கிறான்

எனும் போது அனைத்தையும் ஒரு சேர பின்பற்றுபவன் தான் முஸ்லிம்.

குர் ஆனின் ஒரு பகுதியை ஏற்று இன்னொரு பகுதியை விட்டு விடுபவன் முஸ்லிமேயல்ல !!

We deserve success !


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
போராட்டத்தில் பங்கு கொள்ளாமல் எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் எம் போன்ற ஆயிரக்கணக்கான வெளிநாடு வாழ் சகோதரர்கள் சார்பாக..
-----------------------------------------------------------------------------------------------

அரசியலில் ஈடுபடும் மற்ற இயக்கங்களின் போராட்டங்களில் பொது நலனை விட சுய நலன் மிகைத்திருக்கும்,
அரசியலில் பங்கு கொள்வதில்லை என்கிற கொள்கையைக் கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டங்களில் சமூக நலன் மட்டுமே நிறைந்திருக்கும்.

இந்த வேறுபாடினை பலரும் பொதுவாய் அறிந்து தான் வைத்திருக்கிறோம் என்றாலும், இதிலிருந்து பிரதிபலிக்கும் ஓர் அழகிய புரிதலொன்று உள்ளது.

பொது நலனும் சமூகத்தின் மீது அக்கறையும் கொண்டு களத்தில் இறங்கும் ஒருவருக்கு தான் மறுமையைப் பற்றிய அச்சமிருக்கும். சுய நலனே பிரதானமாய் கொள்வோருக்கு உலக ஆதாயங்கள் அவர்களது உள்ளங்களை மறைத்து விடும் போது, சமூக அக்கறையுடன் செயல்படும் நமக்கோ நமது பொதுத் தொண்டானது நமக்கு இரட்டிப்பு பலனை ஈட்டுத்தரும்.

15 வருடங்களுக்கு முன்னர், நாளை இன்ஷா அல்லாஹ் கூட இருக்கும் மக்கள் வெள்ளத்தில் சிறு பகுதியை கண்ட போதே தேர்தல் ஓட்டுக்கும் அரியணைக்கும் சபலப்பட்டுப் போன இஸ்லாமியத் தலைவர்கள் எங்கே,
அந்த சிறு பகுதியானது, பல லட்சமாக பெருகி, மாற்றுக் கொள்கையுடைவர்கள் கூட ஆதரவளிக்கும் அளவிற்கு ஆறாய் பெருக்கெடுத்த பிறகும், உயிரே போனாலும் அரசியலுக்காக சமுதாயத்தை அடகு வைக்க மாட்டோம் என்கிற கொள்கையை உயிர் மூச்சாய் கொண்டு உழைக்கும் தன்னலமற்ற செயல்வீரர்கள் எங்கே?

இந்த ஜமாஅத் நினைத்தால் நேரடி அரசியலில் நுழைந்து தமிழகத்தில் என்ன, ஒட்டு மொத்த இந்தியாவிலேயே ஆட்சியை தீர்மானிக்கும் அசைக்க முடியாத சக்தியாய் தன்னை உருவாக்கிக் கொள்ள இயலாதா? நிச்சயம் இயலும். அதை செய்தால், ஓட்டுக்கள் பெறலாம், பண ஒதுக்கீடுகள் பெறலாம், கூழை கும்பிடுகள் இடப்பட‌லாம், பொன்னாடை சால்வைகள் போர்த்திக் கொள்ளலாம்,ஆனால், சமூகம் காவு கொடுக்கப்படும், சமுதாய மானம், மரியாதை காற்றில் பறக்க விடப்படும், இஸ்லாமியர்கள் என்றால் கிள்ளுக்கூரைகள் என்று ஆளும் வர்க்கத்தினரால் நாம் வஞ்சிக்கப்படும் நிலையோ இன்னும் அதள‌ பாதாளம் நோக்கி செல்லும்.
அனைத்தை விட முக்கியமாய், மறுமை என்கிற ஒன்று நமக்கு கேள்விக் குறியாக்கப்படும் !

இன்றைய சமுதாயம் மார்க்க சட்ட திட்டங்களானாலும் சரி, சமுதாய விழிப்புணர்வுகளானாலும் சரி, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முன்னேற்றமடைந்திருக்கிறோம் என்றால், அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த ஜமாஅத் தான் காரணம் என்பதை புரிய மறவாதீர் !

தன்னலமற்ற இந்த ஜமாஅத்தின் நாளைய போராட்டத்திற்கு, மக்களே, உங்களாலான அனைத்து பங்களிப்பையும் செய்யுங்கள்.
நோக்கம் நிறைவேற துஆ செய்யுங்கள்.

ஒட்டு மொத்த தமிழக காவல் துறையினரின் பாதுகாப்பும் இந்த போராட்டத்திற்காக தயார்படுத்தப்பட்டிருந்தாலும், கட்டுக்கோப்பான இந்த இயக்கத்திற்கு அந்த இயக்கத்தவரே பாதுகாப்பாளர்கள் !

வல்ல ரஹ்மான் பாதுகாப்பாளர்களிலெல்லாம் தன்னிகரற்றவன் ! அவன் போதும் நமக்கு !!

யா அல்லாஹ், உன் பொருத்தத்தை பெறும் பொருட்டு போராட்டக் களம் நோக்கி படையெடுக்கும் எம் சமுதாயத்தவர்களை துவக்கம் முதல் இறுதி வரை நீ காத்தறுள் செய்.

ஈமானிய உறுதியுடன் களமிறங்குங்கள், இறையருளால், வெற்றி பெறுவதற்கான எல்லா தகுதியும் இந்த இயக்கத்திற்கு உள்ளது !

We deserve success ! May Allah be with us !!

சிறை நிரப்பும் போராட்டம் குறித்த கேள்வி பதில்


பெரும்பான்மை மதத்தவர்களால் கூட இன்றைய தேதி வரை திரட்ட இயலாத அளவிற்கு மிகப்பெரிய மத ரீதியிலான போராட்டக் களம் !

பெரும் பெரும் அரசியல் கட்சிகள் கூட கண்டிராத மகத்தான மக்கள் எழுச்சி..

சுதந்திர போராட்டத்திற்கு பிறகு இந்திய வரலாறு இதுவரை காணாத கொந்தளிப்பு !

இறைவன் நாடினால்..

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஆளும் வர்க்கத்திற்கு இஸ்லாமிய சமுதாயம் கொடுத்து வரும் நெருக்கடி தான் வருகிற ஜனவரி 28 செவ்வாய்க்கிழமை ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களும் முழங்க இருக்கும் தனி இட ஒதுக்கீடு கோரிக்கை.. !

ஊடகங்களின் கவனமும் உளவுத்துறையின் பார்வையும் இன்று நம்மீது தான் என்பதை நாம் கருத்தில் கொண்டு நமது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் இந்த போராட்டக் களத்தில் கலந்து கொள்ள செய்வோம், இன்ஷா அல்லாஹ்.

தன்னலம் பாராமலும், எத்தகைய ஆதாயங்களையும் எதிர்பார்க்காமலும் இந்த போராட்டத்தின் வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் இயக்க சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அளப்பெரிய ரஹ்மத் செய்ய வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன்,

இட ஒதுக்கீடு தருவதாக வாக்குறுதியளித்தால் அதிமுகவிற்கு ஆதரவளிப்பீர்களா?

எல்லா முஸ்லிம் இயக்கங்களும் சேர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக போராடலாமே?

இட ஒதுக்கீடு மூலம் வேலை என்றால் தகுதியற்றவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்று பொருளா?

இட ஒதுக்கீடு கேட்பது மார்க்க அடிப்படையில் சரியா?

பெண்கள், சிறுவர்கள் போராட்டங்களில் பங்கு கொள்ளலாமா?

போன்ற,

போராட்டம் குறித்து பலரும் பல சந்தர்ப்பங்களில் எழுப்பி வரும் கேள்விகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் சகோ. பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தரும் விளக்கம் இதோ..

https://www.facebook.com/photo.php?v=418106198321002

மமக திமுகவுடன் கூட்டணி சேரக் காரணம் என்ன?


முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு, திருமணப்பதிவுச் சட்டம் ஆகிய இரண்டு காரணங்களைத்தான் அதன் தலைவர் வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காகவே கூட்டணி சேர்வார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தாலும், அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நாட்டு மக்களுக்காகவும் சமுதாய நன்மைக்காகவும்தான் இந்த கூட்டணி என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதில் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கானது அல்ல.

அதிமுகவில் நாற்பதிலும் தனித்து போட்டி என்று தெளிவுபடக் கூறி விட்டதால் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தாலும் நமக்கு சீட்டு கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இதையே அவர்கள் வெளிப்படையாக சொல்லி இருக்கலாம். அல்லது பொருந்தக் கூடிய வேறு எதையாவது சொல்லி இருக்கலாம். கடுகளவும் நம்ப முடியாத ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் திமுக ஆட்சியில் 3.5 இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மமக கட்சி திமுக கூட்டணியில் இருந்தது. திமுகவுடன் இருந்த கூட்டணியைப் பயன்படுத்தி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக பல அடக்குமுறைகளையும் ஏவி விட்டது. திமுக ஆட்சி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக ஏவிவிட்ட அக்கிரமங்கள் அனைத்தையும் மறந்து விட்டு மறுநாளே திமுக தலைவரை தமிழக முதல்வரைச் சந்தித்து நன்றி அறிவிப்புக் கடிதம் கொடுத்தோம். மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று எழுதிக் கொடுத்தோம். அதன்படி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுக கூட்டணியை ஆதரித்தோம்.

திமுக ஆட்சி இட ஒதுக்கீடு அளித்ததற்காக தமுமுகவும் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தியது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின்போது இவர்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை.
இட ஒதுக்கீட்டுக்காக ஒரு அணியை ஆதரிப்பதுதான் இவர்களின் கொள்கையாக இருந்தால் 3.5 இட ஒதுக்கீடு கிடைத்ததற்காக அந்த தேர்தலில் திமுகவை ஆதரித்து இருக்க வேண்டும். கிடைத்த இட ஒதுக்கீட்டுக்கு நன்றி செலுத்தாமல் என்ன செய்தார்கள்.? அதிமுகவில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இவர்கள் இதற்கு செய்த வாதப்படி அதிமுக இட ஒதுக்கீட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று வாதிட்டு பிரச்சாரம் செய்து வந்ததை மறந்து விட்டு அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
நோட்டு எவ்வளவு சீட்டு எவ்வளவு என்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம் இட ஒதுக்கீடெல்லாம் ஒரு பிரச்சனை அல்ல என்று அடையாளம் காட்டிக் கொண்டார்கள்.

இவர்கள் ஒரு எம்பி சீட் கொடுக்கும் அளவுக்கு பலமானவர்கள் அல்ல என்று அதிமுகவுக்கு தெரிந்ததால் அதிமுகவும் சீட் கொடுக்க மறுத்து விட்டது.
இதன் பின்னர் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டார்கள். பல முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகள் ஆதரவோடு போட்டியிட்டு அவர்கள் வாங்கிய ஓட்டுக்கள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டார்கள். அதுவும் நாற்பது தொகுதிகளில் முஸ்லிம்கள் பலமாக உள்ள நான்கு தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிட்டும் பல அமைப்புகள் ஆதரித்தும் சுயேட்சை வேட்பாளர் வாங்கும் ஓட்டைத்தான் வாங்கினார்கள்.
அப்போது அது பிரச்சனை இல்லை.

கருணாநிதி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு செய்த அடக்குமுறைகளையும், தமுமுக ஆளும் கூட்டணியில் இருப்பதையும் மறந்துவிட்டு திமுகவை நாம் ஆதரித்தோம் என்பதையும் இடஒதுக்கிடு கொடுத்து அந்த ஈரம் காய்வதற்குள் இட ஒதுக்கீடு கொடுத்த கட்சிக்கு எதிராக போட்டியிட்டதையும் நினைத்துப் பார்க்கும் மக்கள் மமக சொல்லும் காரணத்தை ஏற்றுக் கொள்வார்களா?

அடுத்து திருமணப் பதிவுச் சட்டத்தையும் காரணமாகக் கூறியுள்ளனர். திருமணப்பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களைப் பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாகவும் அதை அதிமுக அரசு சரி செய்யவில்லை என்ற காரணமும் பொய்யான காரணமே.

திமுக ஆட்சியில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் இது குறித்து பல முஸ்லிம் அமைப்புகள் முறையிட்டன. தமுமுகவும் அதில் அடங்கி இருந்தது. பல முறை சந்தித்து முறையிட்டும் திமுக ஆட்சி அதை சரி செய்யவில்லை. அதுபோல் அதிமுகவும் செய்யவில்லை. இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து பல ஆண்டுகள் இவர்கள் கோரிக்கை வைத்தும் சந்திப்புகள் நடத்தியும் கருணாநிதி கண்டு கொள்ளவில்லை என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்தக் காரணத்துக்காக திமுகவுக்கு போய்விட்டோம் என்று சொல்வதை மக்கள் எப்படி நம்புவார்கள் என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை.

எந்தப் பக்கம் சீட்டு கிடைக்கிறதோ அந்தப் பக்கம் சேர்ந்து கொள்ளும் உன்னதமான கொள்கைக்காகவே அணி மாற்றம் என்பதில் சந்தேகமில்லை.

Article Copied From: www.onlinepj.com 

ஜனவரி 28 வரை எல்லாரும் முஸ்லிமா?


அல்லாஹ்வால் மறுமையில் நாம் முஸ்லிமாக அங்கீகரிக்கப்படுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்த ஞானமற்றவர்கள் தான் மறுமையில் ஒருவர் அல்லாஹ்விடத்தில் முஸ்லிமாக கருதப்படுவதற்கும் உலகில் சக மனிதர்களால் முஸ்லிமாக கருதப்படுவதற்கும் இடையே உள்ள தெளிவான வேறுபாட்டினை கூட புரியாமல் இருப்பவர்கள்.

மற்ற இடங்களில் முஷ்ரிக், காஃபிர் என்பீர்கள், 
உங்களுக்கு தேவையென்றால் மட்டும் அவர்களை முஸ்லிம் என்று கூறுவீர்களா?

என்று இவர்கள் கேட்பதன் மூலம் ஏதோ உலக மகா அறிவுப்பூர்வமான கேள்வியொன்றை எழுப்பி விட்டதை போன்று பெருமையடைகின்றனர்.

ஆனால், இது போன்ற கேள்விகளை எழுப்புவதன் மூலம் தம்மை போல் அடிமட்ட முட்டாள் வேறு எவருமே இல்லை எனவும், இஸ்லாத்தின் ஆனா ஆவன்னா கூட தெரியாத ஜாஹிலியாக்கள் தான் நாங்கள் எனவும் வெட்கமின்றி அறிவிப்பு செய்கின்றனர் என்பது அனைவரும் எளிதில் கண்டு கொள்ளும் பேருண்மை !

'நம்பிக்கை கொண்டோம்' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். 'நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம்' என்று கூறுங்கள்' (49:14)

வேறு பல சான்றுகள் இருந்தாலும் இந்த ஒரு வசனமே இவர்களுக்கு பதிலளிக்க போதுமானது.

உள்ளத்தில் ஈமானை கொண்டிராத கிராமவாசிகள் வெளிப்படையாக தங்களை முஸ்லிம்களாகத் தான் காட்டி கொண்டனர்.
அத்தகையோரை பார்த்து அல்லாஹ் சொல்லும் போது, தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறான்.

உள்ளத்தில் ஈமான் இருக்கிறதா என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த‌ ரகசியம்.
உள்ளத்தில் ஈமான் இருந்தாலும் இல்லையென்றாலும் உலகப்பார்வையில் அவர்கள் முஸ்லிம்கள் தான், தங்களை முஸ்லிம்கள் என்று அவர்கள் காட்டிக் கொள்ளலாம், பிறர் அவர்களை முஸ்லிம்கள் என்று அழைக்கவும் செய்யலாம்.

ஆக, எவரிடம் ஈமான் இல்லையோ அவர்கள் அல்லாஹ்வின் கணக்கில் ஈமானற்றவர்களாக தான் இருப்பர், மறுமையில் முஸ்லிம்கள் என்று அவர்கள் கருதப்பட மாட்டார்கள்.
ஆனால், உலகில் அவர்கள் முஸ்லிம்களே !

உலகில் அவர்களை அத்தகைய கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும்.

சரி, இவ்வாறு கேள்வியெழுப்புகிறவர்கள் தங்களுக்கென்று இது குறித்த தெளிவான ஒரு நிலைபாட்டினை கொண்டிருக்க வேண்டுமல்லவா?

இவர்கள் கருத்துப்படி தர்காவிற்கு செல்பவனும் மிர்சா குலாமை நபியாக்கியவனும் மறுமையில் சொர்க்கம் செல்லும் முஸ்லிம்கள் தானா?

ஆம் என்று இவர்கள் சொல்லத் தயாரா?

இல்லையெனில், அவர்கள் இவ்வுலகிலும் முஸ்லிம்கள் இல்லை என்று இவர்கள் சொல்வார்களா?

இணை வைப்பவர்கள் அல்லாஹ்விடத்திலும் முஸ்லிம் இல்லை, இவ்வுலகிலும் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று சொல்லி விட்டு இது போன்ற கேள்விகளை நம்மை நோக்கி வைத்திருந்தால், ஏதேனும் ஒரு அடிப்படையில் நின்று பேசும் விவரமுள்ளவர்கள் பட்டியலில் இவர்களை நாம் சேர்த்திருப்போம்.

ஆனால், எதற்கும் பதில் சொல்ல வக்கற்ற, தமக்கென எந்த நிலையையும் கொண்டிராத கையாலாகாதவர்கள் தான் நம்மை நோக்கி இது போன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள் என்பது தற்போது தெளிவாகி வருகிறது !!