திங்கள், 27 ஆகஸ்ட், 2012

வட்டி தொழில் செய்பவரிடம் இருந்து அன்பளிப்பு பெறலாமா?







  • பரீராவுக்கு தர்மமாக தரப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது.
    இது பரீராவுக்கு தர்மம், எனக்கு இது அன்பளிப்பு என்று நபி அவர்கள் சொன்னார்கள் புஹாரி 1495

    வட்டி எப்படி ஹராமோ அதே போல, நபி (ஸல்) அவர்கள் தர்மம் பெறுவதும் அவர்களுக்கு ஹராம். இருந்தும் தர்மமாக இன்னொருவருக்கு கிடைத்த பொருள் தமக்கு வரும் பொது அது தர்மம் என்று பாவிக்காமல் அன்பளிப்பாகவே பாவிக்கிறார்கள்.

    அதே போல, வட்டியின் மூலம் ஒருவர் சம்பாதித்த பொருள் நமக்கு வந்தால், அது நமக்கு அன்பளிப்பு, அவருக்கு தான் வட்டி !
  •  வட்டி வியாபாரம் செய்பவரிடம் இருந்து எதையுமே பெற கூடாது என்றால் இந்த உலகில் நம்மால் வாழவே முடியாது.
    நாம் வேலை செய்யும் அலுவலகம் வட்டி தொழில் தான் செய்கிறது.
    நாம் கட்டுப்பட்டிருக்கும் இந்த அரசாங்கமே வட்டி தொழில் தான் செய்கிறது. அப்படி பார்த்த

    ால் ரேஷன் அரிசி வாங்க கூடாது, மின் இணைப்பு பெற கூடாது, தண்ணீர் இணைப்பு பெறக்கூடாது, இன்னும் சொல்லப்போனால், நாம் வாங்கும் தூத் பிரஷ், சோப், சீப்பு போன்ற எதையுமே வாங்க கூடாது,
    ஏனெனில் எல்லாமே இந்த அரசாங்கம் அல்லது அந்தந்த நிறுவனங்கள் வட்டி தொழிலின் மூலம் ஈட்டும் வருமானம் தான்.

    சோப் தயாரிக்கும் விப்ரோ நிறுவனம் வட்டி தொழிலான ஷேர் மார்க்கெட் இல் கணிசமான இடத்தில உள்ளது !!

    ஆக, இந்த வாதத்தில் எந்த அறிவும் இல்லை.

    வட்டி வாங்குவதும், கொடுப்பதும் சாட்சியாக இருப்பதும் தான் தவறே தவிர, ஒருவர் வட்டி வாங்குகிறார் என்பதற்காக அவரிடம் இருந்து எந்த அன்பளிப்பையும் பெற மாட்டேன் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கடவுள் கொள்கை - விவாதம்






எதிர் தரப்பு நபர் ஒப்புக்கொண்ட விதியின் படியும் ஒப்புக்கொண்ட நேரத்திலும் பதிலை தராமல் தாமதப்படுத்தியதால் இந்த விவாதம் இருவருக்கும் தலா இரு வாய்ப்புகள் முடிவடைந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. விவாதம் நிறுத்தப்பட்டு பல நாட்கள் கழித்து  அவர் அனுப்பிய மறுப்பை இத்துடன் இணைக்குமாறு சம்மந்தப்பட்ட நபர் கேட்டுள்ளார். அது நிராகரிக்கப்படும் அதே சமயம் , தொடர்ந்து இந்த இந்த விவாதத்தையும், அவர், கடவுள் பற்றி சொன்ன மற்ற விஷயங்கள் குறித்தும், ஹிந்து மதத்தின் இன்ன பிற கொள்கைகள் குறித்தும் விவாதிக்க இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. .
விவாத்திக்கலாம், ஆனால் எனது அடையாளத்தை வெளிக்காட்ட மாட்டேன் என்று தமது பெயரை வெளிக்காட்ட தயங்குவதால் அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த கட்டுரையிலும் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது !


--------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------


அஸ்ஸலாமு அலைக்கும்..

முகவரியை தெரிவிக்க தயங்கும் ஹிந்து சகோதரர் ஒருவர் நீண்ட காலமாக நம்முடன் கடவுள் கொள்கை குறித்து விவாதிக்க அழைப்பு விடுத்து வந்தார்.
தாமாக சாட்டிங் மூலமாக சீண்டுவதும், உங்கள் பிஜே அப்படி இப்படி என்று பிஜேவை அவசியமில்லாமல் இழுப்பதும் (ஹிந்து சகோதரர்கள்  மத்தியிலும் சகோ. பிஜேயின் பேசும் எழுதும் சென்றடைகிறது  !!)  இஸ்லாம் சொல்லும் கடவுள் கொள்கை தவறு எனவும், வெறும் சக்தியாக தான் கடவுள் இருக்க முடியும் எனவும் கருத்து தெரிவிப்பார். வெறுமனே கருத்தை பவ்வியமாக சொல்லாமல் நம்மை சீண்டும் விதமாக வாதம் வைக்கும் இவரிடம் நாமும் சில சந்தர்ப்பங்களில் சாட்டிங் மூலம் அவர்களது தவறான கொள்கையை விளக்கியிருக்கிறோம். (சாட்டிங் முழுவதும் நம் கைவசம் உள்ளன)

இறுதியாக எழுத்து மூலமான விவாதத்திற்கு அவர் அழைத்தான் பேரில், தலா ஆறு வாய்ப்புகளுடன் எந்த கடவுள் கொள்கை சரி என்பது குறித்து பேசலாம் என்று முடிவு செய்யப்பட்டது. வெறுமனே வள வள என்று எழுதி தள்ளாமல், ஒவ்வொரு வாய்ப்புக்கும் இடையே அதிக பட்சமாக இரண்டு நாள் அவகாசம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதன் படி, முதலில் தலைப்பு குறித்த தத்தமது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவித்து விட்டு, தொடர்ந்து இருவரும் பேசுவது என்று முடிவெடுக்கப்பட்டது. 
ஆனால், இரண்டு வாய்ப்புகள் முடிவடைந்த நிலையில் இரண்டாம் வாய்ப்பின் போது நாம் அடுக்கிய கேள்விகளை கண்டு திக்கு முக்காடிய அவர், தமது மூன்றாம் வாய்ப்பை ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டு தினங்களுக்குள் தரவில்லை.

மூன்றாம் நாள் நாம் "ஏன் இன்னும் பதில் இல்லை"? என்று கேட்ட போது, நேரமில்லை, நீளமாக எழுத வேண்டியுள்ளது என்றெல்லாம் சாக்குகள் சொல்லி காலத்தை கடத்த துவக்கினார்.

நாம் விடாமல் ஒவ்வொரு நாளும் பதில் எங்கே என்று கேட்டு, கேட்டு , பத்து நாட்கள் ஆன பிறகு, நாம் அவரிடம் "இது போன்ற விவாதத்தை நம் ஒப்புக்கொள்ளவில்லை, இரண்டு நாட்களில் பதில் வர வேண்டும் என்று தான் ஒப்புக்கொள்ளப்பட்டது, வாதங்களுக்கு பதில் இல்லை என்ற உடன், ஒரு மாத காலம் கழித்து ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தந்து, இதை படியுங்கள் என்று சொன்னால் இது விவாதமாகாது, எனவே சொன்னப்படி இன்று வரை பதில் தராமல் நீங்கள் இருப்பது என்பது விதிமுறை மீறல் என்று சொன்னேன்.

அதன் பிறகும் பதில் எழுதாமல் கிட்டத்தட்ட 18 நாட்கள் கழித்த பிற்பாடு, நான் எதிர்ப்பார்த்த வகையில் நீண்ட ஒரு பதிவை தந்திருந்தார். அதிலும் உருப்படியான சரக்குகள் எதுவும் இல்லை என்பது தனி விஷயம் என்ற போதிலும், ஏற்கனவே நான் சொன்னது போல இது விதிமுறை மீறல் என்பதாலும், தொடர்ந்து ரமலான் மாதம் வர இருந்தது என்பதாலும் இதை தொடர இயலாது, தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாம் எனவும் பதில் அளிக்கப்பட்டது.
அவரும் மிகழ்ச்சியுடன் நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டார்.

இருவரது கடவுள் கொள்கை நிலைபாடுகள், தொடர்ந்து இருவரும் இரண்டு வாய்ப்புகளுடன் விவாதித்த விவாத தொகுப்புகள் அனைத்தும் கீழே முழுமையாக தரப்பட்டுள்ளது.

நேர்வழிக்கு அல்லாஹ் போதுமானவன்.









முகவரியை தெரிவிக்க தயங்கும் ஹிந்து நண்பர் 


ஹிந்து மதத்தின் கடவுள் கொள்கை 

இந்து மதத்தின் படி கடவுள் என்பது ஒரு Primordial Consciousness...இது எப்படி என்று அறிவதற்கு முதலில் Consciousness என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்..."நான்" என்று நான் கூறினால், அது எதனைக் குறிக்கிறது? என்னுடைய உடலா? என்னுடைய உடலை என்றால், என்னுடைய உடலின் தன்மையை  - அது சோர்ந்து இருக்கிறதா, புத்துணர்வோடு இருக்கிறதா?" போன்ற விஷயங்களை ஒரு வெளியாள் போல என்னால் எப்படி கண்காணிக்க(observation) முடிகிறது...அப்படியானால் "நான்" என் உடல் அல்ல...அதே போல "நான்" என்பது என் மனமும் அல்ல...என் மனம் கொள்ளும் உணர்ச்சிகளை - உதாரணத்திற்கு, நான் குழப்பம், அச்சம் போன்ற உணர்வுகளால் பாதிப்படைந்திருந்தால், என்னால் அதனையும் வெளியாள் போல observe செய்ய முடிகிறது...அப்படிஎன்றால், "நான்" என்பது இந்த இரண்டையும் Observe செய்யும் என்னுடைய Consciousness அல்லவா?

இதுதான் Atman எனப்படும்...இதனை கடவுளுக்கும் பொருத்திப் பார்த்தால், கடவுளும் "நான்" என்று கூறினாலும் அவரும் அவருடைய Atman மட்டுமே என்றாகிறது....ஆக, கடவுள் என்றாகும்போதும், அவரை ஒரு நபராக எண்ண இயலாது...அவரை உடல் / மனம் அற்ற Pure Consciousness என்று தான் எண்ண வேண்டும். இப்படி எண்ணுவதற்கு உள்ள இன்னொரு காரணம், Consciousness என்பது ஒரு வெளியில் இருக்கத் தேவையற்ற non-spatial பொருள்...ஆக அது non-physical ஆகி விடுகிறது...இதனால், அது வெளி என்ற ஒன்று தோன்றும் முன்பே இருக்கிறது...வெளியையே அது தான் உருவாக்குகிறது...மேலும் non-physical ஆக இருப்பதானால் தோற்றமும் அழிவும் அற்றதாக இருக்கிறது...எந்த வெளிக்குள்ளும் கட்டுப்படாது இருக்கிறது....ஒரு வெளிக்குள் இருந்தால் அது Infinite ஆக இருக்க முடியாது...எனவே கடவுளை Pure Consciousness என்று எண்ணுவதால், முடிவற்ற, தோற்றமும், மறைவுமற்ற ஒரு பொருளாக எண்ண முடிகிறது.





நாஷித் அஹமத் 


இஸ்லாமிய கடவுள் கொள்கை 

கடவுள் கொள்கையை பொறுத்தவரை இஸ்லாம் சொல்லும் கொள்கை தான் சரி. இஸ்லாம் அல்லாத அனைத்து சித்தாந்தங்களும் கடவுளை குறித்து தவறாகவே பிரகடனப்படுத்துகின்றன என்பது எனது நிலை.
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கையானது, அவனை தனித்தவன் என்று சொல்கிறது. கடவுள் என்பவன் ஒருவன் தான், அவன் தான் அனைத்து உலகங்களையும் படைத்து பாதுகாத்து வருபவன், அவன் தனக்கே உரிய உருவத்திலும், தனக்கே உரிய இடத்திலும் இருக்கிறான். அவன் படைத்த ஒவ்வொன்றையும் அவன் கவனித்து வருகிறான். நாம் பேசுவதையும், பார்ப்பதையும், கேட்பதையும், மனதில் நினைப்பதையும் கூட அவன் அறிகிறான்.இது தான் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை.
அல்லாமல், மனிதன் தான் கடவுள், கடவுள் தான் மனிதன் என்று சொல்வதோ, யோகிகளாக , துறவிகளாக மாறி விட்ட மனிதர்கள் கடவுள் சக்தியை பெற்று விட்டார்கள் என்று கூறுவதோ, அதன் மூலம் மனித நிலைக்கு அப்பாற்பட்ட நிலைக்கு அவர்கள் சென்று விட்டார்கள் என்று நம்புவதோ அப்பட்டமான முட்டாள்தனம். இவ்வாறு தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொள்பவர்களும், பிற மனிதனை கடவுள் என்று சொல்பவர்களும் பொய் சொல்கிறார்கள் என்பது எனது நிலை. கடவுள் என்பது உருவமில்லாதது, பொருளற்றது, அது வெறும் சக்தி என்று கூறுகிற காரணத்தால் தான் நானும் கடவுள் சக்தி பெற்றிருக்கிறேன் என்று கூறக்கூடிய இது போன்ற பொய்யர்கள் உருவாகியுள்ளார்கள்.
மேலும் ஹிந்துத்துவம் சொல்வது போல, படைக்க ஒரு கடவுள், காக்க ஒரு கடவுள், கல்விக்கடவுள், செல்வத்திற்கான கடவுள் என கடவுளை பல வகையாக பிரிப்பதை இஸ்லாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்திற்கும் ஒரே கடவுள் என்பது தான் இஸ்லாத்தின் உறுதியான நிலை!


-----------------------------------------------------

முகவரியை தெரிவிக்க தயங்கும் ஹிந்து நண்பர் வாதம் - 1



என்ன இதுஎடுத்த உடனேயே, "நாங்கள் தான் சரி...நீங்களெல்லாம் தவறு" என்று பயங்கர தாக்குதல் தொடுக்கின்றீர்களேசரி தான்...நான் உங்கள் பாணியிலேயே விவாதம் செய்தால் தான் சரியாக இருக்கும்...

கடவுள் பற்றி இஸ்லாம் சொல்கிறதுசொல்கிறது என்கிறீர்கள்..அதைத்தான் என்னவென்று சொல்லுங்களேன்..கேட்போமே!! கடவுள் யார்?” என்று கேட்டால், “அவர் நம்மைப் படைத்தார், அங்கு இருக்கிறார்அதைச் செய்கிறார்இதைச் செய்கிறார்” என்கிறீர்கள்.ஆனால், கடவுள் என்பவர் ஒரு நபரா?அவருக்கு உடல் உள்ளதாஉடல் அற்றவராஉடல் இருந்தால் அது ரத்தமும்சதையும்எலும்பும் கொண்டு இருக்குமா? இல்லை நம்மைப்போல் அல்லாமல் ஒரு புது விதமான உடலா? அப்படி இருந்தால் அந்த உடலை அமைத்தது யார்அந்த உடல் மட்டும் எப்படி மற்ற திடப்பொருட்கள் போல அழிவு இல்லாமல் உள்ளதுஒரு வெளியில் (Cartesian Space) அடங்கி இருக்கும் உடல் எப்படி இன்னொரு வெளியைப்படைக்கிறது? அது இருக்கும் முதல் வெளியை யார் அமைத்தது?” இதில் எதற்காவது விளக்கம் உள்ளதா?

நாங்கள் சொல்கிறோமே நெற்றிப்பொட்டில் அடித்தது போல..."’நான்’ என்று நான் சொன்னால் அதைச்சொல்வது Consciousness... என்னுடைய உடலையும் மனதையும் ஒரு வேற்று நபர் போல என்னுடைய Consciousness கண்காணிக்கவோ அறியவோ (observe)முடியும். ஆக ‘நான் Consciousness’...கடவுளாகவே இருந்தாலும், அவர் Consciousness...அப்படி ஒரு Consciousness/கடவுள் இருந்தால் அவர் எதையும் சாராதிருக்க வேண்டும்...எனவே இந்த Consciousness ஆகிய கடவுள் எந்த உடலையும் மனதையும் சார்ந்து இராமல் Pure Consciousness ஆக மட்டுமே இருக்கிறார்." நம்முடைய "நான்" என்பதற்கும், கடவுளுடைய "நான் " என்பதற்கும் இதுதான் வித்யாசம்…சரி, இந்த Consciousness எப்படி உலகைப் படைத்தது? "வெளியற்று இருக்கும் Consciousness, முதலில் தன்னுடைய எண்ணத்தால் வெளியை (Spacetime) உருவாகுகிறது...அந்த எண்ணத்தினாலான வெளியில் இந்த பிரபஞ்சம் (Universe) படைக்கப்பட்டது". இது சாத்தியமா? கடவுளே படைக்காமல் வெளி இருந்தது...அதற்குள் கடவுள் இருந்தார், அந்த கடவுள் இன்னொரு வெளியைப் படைத்தார் என்கிற கட்டுக்கதையை விட, இது மிகவும் சாத்தியம். குவாண்டம் இயற்பியலும் இது சாத்தியம் என்கிறது...அதாவது “Consciousness creates matter” என்று எக்கச்சக்கமான குவாண்டம் இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள்...அது குறித்து ஆய்வும் நடக்கிறது...ஆக எங்கள் விளக்கம் நவீன இயற்பியலை ஒட்டியே இருக்கிறது...எங்கள் நம்பிக்கை, விஞ்ஞானம் அங்கீகரிக்கும் நம்பிக்கை.


எங்களைப்போல லாஜிகல் விளக்கம் தரவும் மாட்டீர்கள்...ஆனால் கேட்டால் கடவுள் தான் அனைத்தையும் படைத்தவர் என்பீர்கள்...நாங்கள் மட்டும் என்னவிவேக் சொல்வது போல "டெஸ்ட் டியூப் பேபியா?"நாங்களும் கடவுள் தான் அனைத்தையும் படைத்தவர் என்கிறோம்...வெளியையும் சேர்த்து அனைத்தையும் படைத்தவர் என்கிறோம்...உங்களைப்போல் அரைகுறையாக அறிவியலுக்கு ஒவ்வாத வகையில் Space-timeஎனப்படும் வெளியை கணக்கில் எடுக்காமலேயே கடவுளின் படைப்பைப் பற்றி கூறுவதில்லை… அதை விட முக்கியமாககடவுள் என்பது என்ன மாதிரியான பொருள் என்றும் கூறிவிட்டோம்...உங்களிடம் "யானை என்றால் என்ன?" என்று கேட்டால், “அது பெரியதாக இருக்கும்கரியதாக இருக்கும்காட்டில் இருக்கும்,சோறு உண்ணும்சாணம் போடும் என்று கதை சொல்லிக்கொண்டே போவீர்களா? "அது ஒரு காட்டு விலங்கு" என்றோ, "பாலூட்டி உயிரினம்" என்றோ அல்லவா விளக்கம் தர ஆரம்பிக்க வேண்டும்?

நீங்கள் கடவுளுக்கு கொடுக்கும் விளக்கம்உண்மையில் ஒரு விளக்கமே அல்லஅதிலும்மற்ற விளக்கங்கள் எல்லாம் தவறு என்று ஒரு மிகப்பெரிய முன்னறிவிப்பு வேறு...

முன்னறிவிப்பெல்லாம் இருக்கட்டும்…எங்களுடைய விளக்கங்களுக்கு உங்கள் மத நம்பிக்கைகளிலிருந்து லாஜிக்கோடு மாற்று விளக்கம் கொண்டு வாருங்கள்...அப்புறம் பேசுவோம் யார் சரியார் தவறு என்று?

அப்புறம் என்ன சொன்னீர்கள்? கடவுளும் மனிதனும் ஒன்று என்று நாங்கள் சொல்வதால்தான், சாமியார்களெல்லாம் தாங்கள் கடவுலாகிவிட்டதாக சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்...இதுதானே உங்கள் கருத்து?

இந்து மதத்தில் அப்படியா சொல்லப்பட்டுள்ளது?? எங்கேஇவ்வளவு நாளாக எனக்குத் தெரியாமல் போய் விட்டதே!! 

பிற மதங்கள் பற்றித் தெரியாவிட்டால் அது பற்றி முழுவதுமாக கேட்டுத் தெரிந்து கொண்டு பின் வந்து பேசுங்கள்...விவேகானந்தர் யோகி தான்..அவர் என்ன, தான் வாழ்ந்த நாட்களில்"நான் கடவுளாகிவிட்டேன்"என்று கூறிக்கொண்டா திரிந்தார்?  இல்லை நாங்கள் என்ன அவரைக் கடவுள் என்று தொழுது கொண்டு வாழ்கிறோமாஇதுவெல்லாம் ஏன் இந்து மதம் பற்றி அனைத்தும் அறிந்த அறிவுஜீவியான உங்கள் கண்களில் அகப்படாமல் போய் விட்டது??? சாய் பாபா போன்ற "பூலோகக் கடவுள்களைஏற்றுக்கொண்ட இந்துக்கள் அதிகமாஇல்லை விவேகானந்தர்இராமகிருஷ்ணர்ரமணர் போன்ற ஞாநிகளை ஏற்றுக் கொண்டஇந்துக்கள் அதிகமாசாய் பாபா போன்றவர்கள்உங்கள் அஹமதியாக்கள்இஸ்மாயிலிக்கள் போன்ற கூட்டங்களை நடத்துபவர்கள் .அவர்களை நீங்கள் எப்படி mainstream இஸ்லாமில் சேர்த்துக் கொள்வதில்லையோ, அது போல் நாங்கள் பெரும்பாலானோர் உதாசீனப்படுத்துகிறோம்.

  மனிதன் எப்படி கடவுள் ஆகிறான்இந்த கேள்வியை நீங்கள் முதலில் கேட்டிருந்தால்உங்களுக்கு பொறுமையாக விளக்கி இருப்பேன்... ஆனால் நீங்கள் என்னவோ இந்து மதத்தை முழுவதுமாக படித்து அறிந்த அறிஞர் போல உங்கள் மேதாவித்தனங்களை இங்கு அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!! இது உங்கள் மீது மட்டும் அல்லஉங்கள் கொள்கையாளர்கள் அனைவரின் மீதும் "திரித்துப் பேசும் கூட்டம்" என்று மிகத் தாழ்வான கருத்தை உருவாக்குகிறது. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்...இங்கே விளக்கத்தை தருகிறேன்...

கடவுளும் மனிதனும் அடிபடையில் ஒன்று- ?எப்படி கடவுளானதுஉடல்மனம்உலகம்பிரபஞ்சம்நேரம்-வெளி  போன்ற அனைத்திற்கும் அப்பாற்பட்ட Pure Higher Consciousness....மனிதனுடைய Consciousness இந்த அனைத்திலும் மாட்டிக்கொண்டு இருக்கிறது...  உடல்/மனம்/அகந்தை ஆகியவற்றில் சிக்கி Space-timeஇற்கு வெளியாக சிந்திக்க முடியாமல் தன்னை மனிதனாக மட்டுமே பார்க்கிறது... எப்போது மனிதன் தன்னுடைய இந்த உடல்/ மனம்/அகந்தை ஆகியவற்றை மீறி தனது உண்மை பற்றி அறிகிறானோ,  அப்போது ஆத்மா எனப்படும் மனித Consciousness முன்புஇந்த உடல்மனம்உலகம்பிரபஞ்சம்நேரம்வெளி ஆகிய அனைத்தும் அழிந்து போகிறது அப்போது ஆத்மா எனும்Human Consciousness, பிரம்மம் (Brahman) எனும் இறை Consciousnessஉடன் ஒன்றாகக் கலக்கிறதுஅதன் பின்னர் அந்த உடல்சமாதிதான்...   இதனால் தான் விவேகாந்தர்   போன்ற ஞானிகள் தாங்கள் கடவுளாகி விட்டதாக பிதற்றியதில்லை... ஆனால் இறப்பின் பின் மறுமை இல்லாமல்,கடவுளுடன் ஒன்றாவோம் அல்லது கடவுள் ஆகி விடுவோம் என்று போதித்தனர்...மனிதனுடைய ஆன்மாவும்கடவுளும் ஒன்று என்றும் போதித்தனர்...மனிதனை அவனுடைய ஆன்மாவாக மட்டுமே பார்த்துதங்கள்ஆன்மாவும்பிறர் ஆன்மாவும் ஒன்று என்று உணர்ந்துயாருக்குத் தொண்டு செய்தாலும்அது ஆன்மாவிற்கும்கடவுளுக்கும் செய்யும் தொண்டு தான் என்று உணர்ந்து வாழ்ந்தனர். நான் மேலே கூறியிருந்த கடவுள் கொள்கை புரிந்திருந்தால்இந்த நம்பிக்கைக்கான காரணமும் புரியும்.

இதைப் புரிந்து கொண்டால் போதுமே "இறை சக்திபெற்றதாக கூறும் சாமியார்கள் நாடகமாடுகிறார்கள் என்று அறிவதற்கு... இது இந்துவாகிய எனக்குத் தெரியும்என்னிடம் நீங்கள் ஒழுங்காகக் கேட்டிருக்கவேண்டும்a... அதை விடுத்து எதையாவது பேசுவீர்களா?
அதற்கப்புறம் சொன்னீர்களே, பல கடவுள்களை வணங்குகிறோம் என்று...ஒரு திருத்தம் சொல்கிறேன்...மாற்றிக் கொள்ளுங்கள்...பல கடவுள்கள் அல்ல...ஒரு கடவுளை நம்புகிறோம்..ஆனால் அந்தக் கடவுளை வழிபடுவதில்லை...அறிய முற்படுகிறோம்...ஆனால் பல தெய்வங்களை வணங்குகிறோம்...தெய்வத்திற்கும், கடவுளிற்க்கும் வேறுபாடு உண்டு...தெய்வம் என்பது ஆங்கிலத்தில் சொல்லப்படும் deity. அமானுஷ்ய சக்திகள் பெற்றஒரு குறிப்பிட்ட செயலுக்கோஇயற்கை சக்திக்கோ அதிபதியான ஒரு நபர். கடவுள் என்பவர் God. இந்து மதத்தைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் Ultimate Reality - "அடிப்படை உண்மை".
பிறகு ஏன் படைத்தல் கடவுளை பிரம்மன் (Brahman அல்ல, நான்முக தெய்வம் Bramha), கல்விக்கடவுளை சரஸ்வதி என்றெல்லாம் வைத்திருக்கிறோம்?

ஒரு விஷயம் சொல்கிறேன்...வேதங்களில், நாஸடிய சுக்தம் எனும் ஒரு பகுதி வரும். அதில் படைத்தல் குறித்து சொல்லப்பட்டிருக்கும் வரிகளை மொழிபெயர்த்து தருகிறேன், வாசியுங்கள்...

"யாருக்குத் தெரியும் படைப்பு எப்படிஎப்பொழுதுஎங்கு நிகழ்ந்தது என்றுதெய்வங்களுமே படைப்பு நாளிற்கு பின் தான் வந்தனர்...யாருக்கு உண்மையில் தெரியும் படைப்பு எப்படி தொடங்கிற்று என்று? அவர் செய்தாராஇல்லை அவர் செய்யவில்லையாஅவருக்குத் தான் தெரியும்இல்லைஒரு வேளைஅவருக்கும் தெரியாமலும் இருக்கக்கூடும்"

இதிலிருந்தே நன்றாகத்  தெரிந்து கொள்ளுங்கள்இந்து மதத்தின் கடவுள் கொள்கைப் படி,படைப்பைச் செய்தது பிரம்மன் அல்ல...பிரமன் என்று...
  
இதில் மிக முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய ஒன்று “தெய்வங்களுமே படைப்பு நாளிற்கு பின் தான் வந்தனர். அப்படி இருக்க பிரம்மன் எனும் படைத்தல்  தெய்வம்,எப்படி இந்து மதத்தில் இருக்கிறார்? பிரம்மனும் தெய்வம் தானே?

 நீங்கள் கூறும் தெய்வங்கள் வருவது புராணங்களில்..புராணங்கள்  என்பவை மனிதனால் எழுதப்பெற்றவை (ஸ்ம்ரிதி நூல்கள்)..பகவத் கீதையுமே ஒரு ஸ்ம்ரிதி தான்...உபநிடதங்கள் கடவுளால் inspire செய்யப்பட்டு எழுதப்பெற்றவை (ஸ்ருதி நூல்கள்). கடவுள் கொள்கையைப்பற்றி பேசுவது ஸ்ருதிக்கள்...தெய்வங்கள் மற்றும் அவற்றின் கதைகள்,மற்றும் செயல்கள் எல்லாமேஸ்ம்ரிதிக்களாகிய புராணங்கள் கூறுபவை...

பின் ஏன்சாதாரண இந்து மக்கள் இந்த தெய்வங்களை வழிபடுகிறார்கள்நான் மேலே கூறியிருந்தேனே கடவுள் கொள்கைஅது உங்களுக்கு எந்த அளவிற்குப் புரிந்தது?எனக்குத் தெரிந்துஒரு உருவம் அற்றSpace-time எனும் வெளி தேவைப்படாத ஒரு பொருளை (பொருள் என்பதே தவறான வார்த்தை..ஆங்கிலத்தில் சொன்னால் Abstract Entity,எனலாம்..வெளியற்ற பொருள், ) உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதாதத்துவவியல் குறித்த சிறிதளவு ஞானம் இருந்தால் மட்டும் தான் இதைக் கொஞ்சமேனும் புரிந்து கொள்ள முடியும்...அதைப் புரிந்து கொள்வதற்கு முன்னால், சாதாரண மனிதனுக்கு கடவுள் என்று வைத்துக்கொள்ள அவனுக்கு ஏற்றாற்போல் உருவமுள்ள ஒரு அமானுஷ்ய சக்தி தேவை...அந்த சக்திகள் தான் இந்த பல்வேறு தெய்வங்கள்...

அது ஏன் உருவப்படுத்த வேண்டும்கண்ணைமூடி வெறும் இருளைப்பார்த்தாலும்  கூட அதுவும் இரு பரிமாண வெளி தான்...கடவுள் வெளியற்றவர் என்று கூறியாயிற்று...அவரை கற்பனை செய்யவோஉணரவோஇப்போதைய பக்குவப்படாத மனதில்இரு பரிமாண இருட்டு வெளியைக் காண்பித்தால் என்னமுப்பரிமாண உடலைக் காண்பித்தால் என்ன?முப்பரிமாண உடலையாவது, அன்னைதந்தைபிள்ளைஆசான் வடிவாக கடவுளை உருவகப் படுத்திக் கொள்ளலாம்...Personal God என்று ஆக்கி விடலாம்...உண்மையில் இந்து மதத்தில் கடவுள் Impersonal God ...அதனை அறியும் வரைகடவுளாக எண்ணிக்கொள்ள ஒரு personal god வைத்துக் கொள்கிறோம். இது முதல் நிலை...இத்தனை பேசும் நானும் பல தெய்வங்கள் வழிபட்டவன்தான்.

அடுத்த நிலைஇந்த அனைத்து தெய்வங்களுமேஒரே கடவுளாகிய பிரமத்தின் பல்வேறு உருவகங்கள் என்று உணர்வது...இப்பொழுது நான் இருக்கும் நிலை இது தான்...

இதற்கு அடுத்த நிலைஇந்த உருவகங்களே இல்லாமல், Personal God என்ற ஒரு நம்பிக்கையே தேவைப்படாமல்பிரமம் மற்றும் ஆன்மா பற்றி தியானம் செய்துஅதனை உணர்வது....

மிகப்பெரிய வானியல் ஆராய்ச்சியாளரும் கூட சின்ன வயதில், நிலவைப் பார்த்து சோறு சாப்பிடும்போது, நிலவின் பள்ளங்களைப் பார்த்து அங்கு ஒரு முயல் இருக்கிறது என்று கூறியவறாகத் தான் இருப்பார். அந்தப் பிள்ளையிடம் போய் lunar craters குறித்து விளக்குவது மடத்தனம்...அது பக்குவம் பெரும் வரை, அது முயல் என்றே எண்ணட்டும், என்கிற நடைமுறை எண்ணம் உடையது இந்து மதம்...

இந்து மதத்தின் புராணங்களில், சொர்க்கம், நரகம், சிவன், விஷ்ணு, பிரம்மன், முருகன், பிள்ளையார் என்று தான் இருக்கும்...ஆனால் மோட்சம் எனப்படும் இந்து மதத்தின் மறுமைக் கொள்கை இருக்காது....ஏன் என்றால், இந்து மதம் தெளிவு பட சொல்லி விட்டது, மோட்சம் அடைய, தெய்வ வழிபாடு விடுத்து பிரம்ம ஞானம் அடைய வேண்டும் என்று...

ஆனால் நாங்கள் உங்களைப் போல், "பல தெய்வ வழிபாடு, கடவுளைக் கோபப்படுத்தும்..நீ நரகம் போவாய்" என்றெல்லாம் சொல்வதில்லை...ஏன் என்றால், எங்கள் கடவுள் கொள்கையில், கடவுளானவர், மனித உணர்சிகளாகிய கோபம், மானம், தன்மானம், வெட்கம் போன்றவையெல்லாம் கொண்டவர் இல்லை...இவற்றை அற்ப உணர்சிகள் என்றும், கடவுள் இவையெல்லாம் கொண்டவர் இல்லை என்றும் நம்புகிறோம்...

இவ்வளவு நேரம் நான் சொன்னதில் இருந்து ஒன்று உங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும்...எங்கள் கடவுள் கொள்கையைப் பொறுத்த மட்டில், எங்கள் வழிபாட்டு முறைகளில் தவறு ஒன்றும் இல்லை...நீங்கள் எங்கள் பிற நம்பிக்கைகளைத் தாக்குமுன், அவற்றிற்கெல்லாம் அடிப்படையான, எங்கள் கடவுள் கொள்கையை மறுத்து அதற்க்கு மேலான ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும்..அதை விடுத்து "எங்கள் கொள்கை ஓரிறைக்கொள்கை..மேலான கொள்கை" என்று சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது..ஏன் என்றால், உங்களுக்கெல்லாம் ஈராயிரம் வருடம் முன்பே நாங்கள் ஓரிறைக் கொள்கையைச் சொல்லிவிட்டோம்..அந்த ஓரிறை என்னவென்றும் ஓரளவு விளக்கி விட்டோம்...

பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி...இனிமேலும், நீங்களாக இந்து மதம் பற்றித் தவறான அனுமானங்களை வைத்துக் கொண்டு அதை வைத்து என்னிடம், என் மதத்தைப் பற்றி "நீங்கள் இப்படித்தானே" என்று சொல்லாதீர்கள்..எனக்கும் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்கள் உண்டு...ஆனால் நான் நீங்கள் சொல்வதை வைத்து மட்டும் தான் இஸ்லாம் பற்றி பேசுவேன்...கடிந்து பேசியமைக்கு மன்னிக்கவும்...இனியேனும் விவாதம், விவாதமாகத் தொடரட்டும்...மாற்றி மாற்றி தூற்றுவதாக இருக்க வேண்டாம்...நன்றி...








நாஷித் அஹமத் வாதம் - 1


அஸ்ஸலாமு அலைக்கும்.(கடவுளின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும்)

விவாதத்தில் இது எனது முதல் பதிவு.

உணர்ச்சிவயப்பட்டு எழுதினால் பல முரண்பாடுகளையும் தவறுகளையும் நாம் கவனிக்க மாட்டோம். இங்கே அதை தான் பார்க்கிறேன்.உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அறிவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுங்கள் என்கிற அறிவுரையுடன் துவங்குகிறேன்.

என் தரப்பு விவாதத்திற்குள் செல்வதற்கு முன், இந்த விவாதம் துவங்கிய அடிப்படையை தெரியப்படுத்த வேண்டும். 
இரண்டு முறை நமக்கிடையே தனிப்பட்ட முறையில் கருத்து மோதல் ஏற்பட்டது.

முதல் காரணம்  - விவேகானந்தர் சொன்னதாக ஒரு சகோதரர் எழுதிய வாசகம் - மனிதன் தான் கடவுள் கடவுள் தான் மனிதன் என்று.
இதை கண்டித்து, மனிதன் மனிதன் தான், கடவுள் கடவுள் தான், இரண்டும் ஒன்று தான் என்று சொல்பவன் முட்டாள் என்று நான் அப்போது செய்த கண்டனம், இந்த விவாதம் அமைவதற்கு ஒரு காரணம்.

இன்னொரு காரணம், திருமணம் செய்தால் கடவுளை அறிய முடியாது என்று நீங்கள் கூறிய அதி பயங்கரமான கருத்து. அந்த கருத்தை விமர்சனம் செய்த நான், திருமணத்திற்கும் கடவுளை அறிவதற்கும் என்ன சம்மந்தம்? திருமணம் செய்ததால் கடவுளை அறிந்து கொள்வதற்கு அது எப்படி தடையாக இருக்கிறது? என்பதை அறிவுப்பூர்வமாக விளக்குமாறு கேட்டதற்கு தட்டு தடுமாறிய நீங்கள், அதன் பிறகு அழைத்தது தான் இந்த ஒழுங்குப்படுத்தப்பட்ட விவாதம்.

ஆக, என்ன மூல வாதங்களின் காரணத்தால் இந்த தலைப்பு இங்கு விவாதப்பொருளாகி இருக்கிறதோ அந்த மூல வாதங்கள் அனைத்தும் பேசப்பட வேண்டும் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

ஆகவே, மனிதன் கடவுளாக முடியுமா? மனிதன் தான் கடவுளா? என்கிற உளறல்களை பேசுவதுடன் நிறுத்தாமல், உங்களது அதி பயங்கரமான, அதி மேதாவித்தனமான வாதமான உடலுறவு கடவுளை அடைவதை விட்டும் தடுக்கிறது என்பதையும் சேர்த்தே தான் பேச வேண்டும். நீங்கள் மறந்தாலும் நாம் விடப்போவதுமில்லை!

தலைப்புக்குள் வருவோம்.

எந்த விவாதத்தை விடவும் இந்த விவாதம் தான் இரண்டு தரப்பினருக்குமே மிக மிக எளிதான விவாதம். 
எந்த விவாதமானாலும் அதில் லாஜிக்குகளுன் விவாதம் செய்ய வேண்டும். தத்துவங்கள், சான்றுகள், ஆதாரங்கள், என்று பேச வேண்டும். இந்த ஒரு விவாதத்தில் தான் இவை எதற்குமே வேலை இல்லை. ஏனெனில், உங்கள் நிலைப்பாடு அப்படி !
மனிதன் கடவுள் ஆகலாம், மனிதன் தான் கடவுள், கடவுள் தான் மனிதன் என்பதை உங்கள் அடிப்படை கொள்கையாகவே கொண்டு விவாதத்திற்கு வந்துள்ளீர்கள்.

இப்போது யாராவது ஆதாரம் என்று வேதங்களையும் குர் ஆனையும் கேட்க வேண்டுமா? தேவையே இல்லை.

மனிதனால் கடவுளாக முடியும் என்பது உங்கள் நிலை, முடியாது என்பது எனது நிலை, இதற்கு தான் விவாதமே நடக்கிறது.
விவாதத்தை ஒற்றை நொடியில் முடிக்க நீங்கள் செய்ய வேண்டியது இன்ன? இதோ இந்த ஊரில், இந்த தெருவில், இந்த வீட்டில் வசிக்கிற மனிதனை பார் - அவன் கடவுள் ஆகியிருக்கிறான் பார்த்தாயா/ என்று அந்த ஆதாரத்தை புகைப்படமாகவோ வீடியோ ஆதாரமாகவோ காட்டி விட்டால் விஷயம் முடிந்தது - chapter close  !!
எதற்கு விஞ்ஞானம்? எதற்கு வேதம், உபநிஷத்துகள்? எதற்கு குர் ஆன் ஹதீஸ்?? எதுவுமே தேவையில்லை.

மனிதன் கடவுள் நிலைக்கு போக முடியும் என்பதை விவாதமாக வெறும் வாயளவில் சொல்லி விட்டு செல்லாமல், அதை நிரூபிக்கும் முகமாக நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை நான் முதலிலேயே உங்களுக்கு குறிப்பாக எடுத்து சொல்லி விட்டு என் வாதங்களுக்குள் செல்கிறேன்.

என் கொள்கை தான் சரி,  மற்ற கொள்கை தவறு என்று நான் சொல்வது எனது உரிமையை சார்ந்தது. எனது உரிமை சார்ந்த ஒன்றை நான் சொன்னால் அதற்கு நீங்கள் இவ்வாறு குதிக்க / கொதிக்க தேவையில்லை.

மேலும், இவ்வாறு கொதித்தெழுந்து விஞ்ஞானம், அறிவியல் என்றெல்லாம் பேசுபவர், வைக்கிற அனைத்து வாதங்களுக்கும் விஞ்ஞானப்படியும் அறிவியலின் படியும் தான் விளக்கமளிக்க வேண்டுமே தவிர, சாதகமான சிலவற்றுக்கு மட்டும் விஞ்ஞானிகள் இவ்வாறு நம்புகிறார்கள், ஆய்வு நடக்கிறது என்று தப்பி ஓடி விட்டு, அதே விஞ்ஞானத்தையும் ஆய்வையும் சொல்லப்படும் அனைத்து விஷயங்களுக்கும் புகுத்தாமல் விடக்கூடாது.

கடவுளின் தன்மை குறித்த உங்கள் விஞ்ஞான (?) ஆய்வுக்கு பின்னர் வருகிறேன், 
அதற்கு முன், எப்படி இதில் விஞ்ஞானத்தை புகுதுகிறீர்களோ, அதே போன்று 
ஆதி தோன்றளுக்கான விஞ்ஞான காரணத்தை விளக்க வேண்டும், 
மனிதனுக்குள் கடவுளின் கான்சியச்னஸ் புகுந்து விடும் என்பதற்கான விஞ்ஞான சான்று, 
உணர்ச்சிக்கு உட்பட்டு இருக்கும் வரை தெயவத்தை வணங்குகிறான் (?), உணர்ச்சிக்கு அப்பார்ப்பட்டு போகும் போது கடவுள் நிலையை அடைகிறான் என்கிற அறிவார்ந்த (??) கருத்துக்கான விஞ்ஞான சான்றுகளையும், 
செக்ஸ் வைத்துக்கொண்டால் அது கடவுள் நிலையை அடைவதை விட்டும் தடுக்கும் - இதோ விஞ்ஞான ஆதாரம் என்று கூறி அதற்க்கான விஞ்ஞான ஆதாரத்தையும், 
செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை என்றால் தான் கடவுளை அடையவோ கடவுள் நிலையை பெறவோ முடியும் என்பதற்கான அறிவியல் சான்றையும் பட்டியல் பட்டியலாக தந்து, உங்கள் அறிவியல் ஆர்வத்தையும் அறிவையும் இங்கு விளக்க வேண்டும்.

அதை செய்யாமல், கடவுள் என்றால் கான்சியச்னஸ் தான், பார்த்தீர்களா குவாண்டம் தியரி கான்சியச்னஸ் என்பதை பற்றி சொல்கிறது, அது தான் ஒரு பொருளை (matter ) உருவாக்கும், அகவே விஞ்ஞானம் எங்கள் பக்கம் தான் என்று அதற்கு மட்டும் விஞ்ஞானத்தை உபயோகிக்க கூடாது. மேலே நாம் பட்டியலிட்ட அனைத்திற்கும் விஞ்ஞான ரீதியாக நீங்கள் ஆதாரங்களை வைக்காதவரை நாம் விடப்போவதும் இல்லை.

சரி நீங்கள் சொல்லியுள்ள விஞ்ஞானமாவது சரியா? என்றால் quantum தியரி க்கு சரி. கடவுளை நிர்ணயம் செய்ய இந்த தியரி உதவாது.

அறிவியல் சொல்லும் தியரி என்பது consciousness creates matter என்பதல்ல.
நாம் விழித்திருக்கும் போது இந்த உலகை காண்கிறோம். அது இருப்பதாய் நம் உள்ளுணர்வு புரிகிறது. நாம் கண்களை அடைத்துக்கொண்டால், அப்போதும் இந்த உலகம் இருக்கத்தான் செய்யும், ஆனால் அதை நம் உள்ளுணர்வு அதாவது நீங்கள் சொல்கிற கான்சியச்னஸ் உணராது!
schrodinger என்கிற விஞ்ஞானியின் தத்துவம் இதை அடிப்படையாக வைத்து தான் சொல்லப்படுகிறது.

இங்கே, நாம் கண்களை அடைத்துக்கொண்ட போது இந்த உலகம் இருந்தும் நம் உள்ளுணர்வுக்கு அது இல்லாதது போல் தான். நாம் கண்களை திறக்கிற போது தான் நம் கான்சியச்னசை பொறுத்தவரை இந்த உலகம் (நீங்கள் சொல்கிற matter ) உருவாகிறது.

ஆக இது ஒரு hypothetical ஆய்வு, அவ்வளவு தான். இதுவே உண்மையான, நிலையான வாதமல்ல. இதுவே உண்மை என்று இருக்குமானால், நம் கண்கள் மூடியிருக்கிற நிலையில் உலகமே இருந்திருக்க கூடாது, நம் கண்கள் திறக்கிற நேரத்தில் தான் உலகம் தோன்றியிருக்க வேண்டும். ஆக, கான்சியச்னஸ் என்கிற அலை விஞ்ஞானத்தின் படியும் எதையும் உருவாக்கவில்லை, இருப்பதை அறிகிறது அவ்வளவு தான்!
இதை கடவுள் தன்மையுடன் நீங்கள் பொருத்தினால் கடவுளின் கான்சியச்னஸ் என்பதும் எதையும் உருவாக்காது, இருப்பதை அறிய மட்டும் செய்யும் என்கிற நிலைக்கு தான் நீங்கள் சென்றாக வேண்டும். 

தவிர, நீங்களே ஒப்புக்கொண்டதை போல, Consciousness creates matter” என்று எக்கச்சக்கமான குவாண்டம் இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள்...அது குறித்து ஆய்வும் நடக்கிறது

இந்த ஆய்வுகளெல்லாம் முடிவு எட்டப்படாத ஆய்வுகளாகவே உள்ளன.. இயற்பியலாளர்கள் நம்புவதையோ, ஆய்வு நடந்து கொண்டிருப்பதையோ வைத்து விவாதம் செய்ய கூடாது. அப்படியானால் என்னிடம் நீங்கள் திருப்பி கேட்கலாம், உங்கள் நம்பிக்கையை இது போன்ற ஆய்வுகளுக்கு அப்பார்ப்பட்டு சொல்லுங்களேன் பார்ப்போம் என்று.
அனைத்துமே வரும், ஒன்று விடாமல் அனைத்துமே விளக்கப்படும்.

அடுத்து, 

அப்படி ஒரு Consciousness/கடவுள் இருந்தால் அவர் எதையும் சாராதிருக்க வேண்டும்...எனவே இந்த Consciousness ஆகிய கடவுள் எந்த உடலையும் மனதையும் சார்ந்து இராமல் Pure Consciousness ஆக மட்டுமே இருக்கிறார்.

என்று நீங்கள் சொல்வது உண்மை என்றால், எதையுமே சாராத உங்கள் கான்சியச்னஸ் எது? என்பதை எனக்கு விளக்க வேண்டும். கான்சியச்னஸ் என்பது காலத்திற்கு அப்பாற்ப்பட்டது என்று வைத்துக்கொண்டாலும், எதையுமே சாராமல் தனித்து இயங்கும் வகையில் அது நம்மிடம் இருக்கிறதா? எவரிடமாவது இருக்கிறதா? 
கான்சியச்னஸ் என்பது உருவமற்ற ஒரு அலை வடிவு என்று சொன்னாலும் அது இயங்குவதற்குரிய ஒரு physical entity வேண்டும். அதுவும் தான் விஞ்ஞானம்.
நான் ஏற்கனவே சுட்டிகாட்டிய schrodinger தியரி அதை தானே சொல்கிறது? நான் விழிப்பது வரை எதையுமே உணராத நம் கான்சியச்னஸ், கண்களை நாம் திறந்த பிறகு இந்த உலகை உணருகிறது என்றால், அங்கே உணர்ந்தது கான்சியச்னஸ் என்றாலும் உணர்த்தியது கண் என்கிற physical entity .
உடல் என்கிற திடப்பொருளின் உதவியுடன் சிந்திக்கிற அறிவுடனும் மூளையின் உதவியுடனும் தான் கான்சியச்னஸ் இயங்கும். 

அதனால் தான் உயிருடன் இருக்கும் எனக்கு கான்சியச்னஸ் இருக்கிறது என்கிறோம், உயிரற்று போன ஒரு உடலுக்கு கான்சியச்னஸ் இல்லை என்கிறோம்.
அதனால் தான் விழித்திருக்கும் போது என் உடல் சோர்வு, கை கால் வலி ஆகியவற்றை அறிகிற எனது கான்சியச்னஸ், நான் தூங்கும் போது அவற்றை அறிவதில்லை!

அல்லாமல், கான்சியச்னஸ் என்பது தனித்து இயங்கும், அதற்கு என்று எந்த physical entity யின் உதவியும் தேவையில்லை என்று நீங்கள் சொன்னால், தூங்குகிற போது எனது கான்சியச்னஸ் என் கை கால் வலியை ஏன் உணரவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

சரி, இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தெரிந்ததை மட்டுமே பேசுவது என்கிற நோய் சிலருக்கு இருக்கிறது. தெரிந்ததை மட்டும் பேசினால், அது தமக்கே ஆபத்தாக தான் முடியும்.


கடவுள் யார்?” என்று கேட்டால், “அவர் நம்மைப் படைத்தார், அங்கு இருக்கிறார்அதைச் செய்கிறார்இதைச் செய்கிறார்” என்கிறீர்கள்.ஆனால், கடவுள் என்பவர் ஒரு நபரா?அவருக்கு உடல் உள்ளதாஉடல் அற்றவராஉடல் இருந்தால் அது ரத்தமும்சதையும்எலும்பும் கொண்டு இருக்குமா? இல்லை நம்மைப்போல் அல்லாமல் ஒரு புது விதமான உடலா? அப்படி இருந்தால் அந்த உடலை அமைத்தது யார்அந்த உடல் மட்டும் எப்படி மற்ற திடப்பொருட்கள் போல அழிவு இல்லாமல் உள்ளதுஒரு வெளியில் (Cartesian Space) அடங்கி இருக்கும் உடல் எப்படி இன்னொரு வெளியைப்படைக்கிறது? அது இருக்கும் முதல் வெளியை யார் அமைத்தது?” இதில் எதற்காவது விளக்கம் உள்ளதா?

என்று கேட்டு இதன் மூலம், கடவுளுக்கு உருவம் இருக்க முடியாது என்று வாதம் வைக்கிறீர்கள். இவ்வாறு அதிபயங்கரமான (?) கேள்விகள் வைத்து விட்டு அதன் பிறகு, எனது கொள்கை - கடவுள் என்பது கான்சியச்னஸ் தான் என்று பேசினால், மேலே நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு, உங்கள் கடவுள் கொள்கையில் பதில் உள்ளது என்று பொருள்.

கடவுள் என்பது வெறும் கான்சியச்னஸ் தான் என்றீர்கள். கடவுள் உருவமுள்ளவர் என்றால் அந்த உடலை அமைத்தது யார் என்று என்னிடம் கேள்வியும் கேட்கிறீர்கள்.

அப்படியானால், கான்சியச்னஸ் என்கிற கடவுளை அமைத்தது யார் என்கிற கேள்விக்கு உங்களிடம் பதில் உள்ளது என்று பொருளாகிறது!

நீங்களே ஒப்புக்கொண்டதை போல, உங்கள் நம்பிக்கையின் படி கடவுள் என்பது primordial consciousness . இதையும் நீங்கள் தான் சொன்னீர்கள்.
primordial என்பதன் பொருள் - existing from the beginning அல்லது primary / fundamental என்பதாகும்.
இப்போது உங்கள் அதிமேதாவித்தனமான கேள்வியை இதிலும் கேட்க முடியாதா? ஆதி முதலே இருக்கிறது என்பது தான் உங்கள் கடவுளின் கான்சியச்னஸ் என்றால் அதை முதலில் அமைத்தது யார்?
உருவமுள்ள கடவுள் என்று சொன்னால் தான் இந்த கேள்வி எழும் என்றால் உருவமில்லை என்று சொன்னால் கூட எழத்தானே செய்கிறது?

மேலும், விஞ்ஞானம் கூட இந்த primordial விஷயத்திற்கு பதில் சொல்லாமல் மௌனம் காத்து தானே வருகிறது? முதல் அணு அல்லது matter அல்லது நீங்கள் சொல்லும் கான்சியச்னஸ் தோன்றியது.
அது வெடித்து சிதறியது என்கிற பெரு வெடிப்பு கொள்கையில் இருந்து தான் விஞ்ஞானமே துவங்குகிறது. விஞ்ஞானம் துவங்குவதற்கு முன்னுள்ள நிலை தானே நீங்கள் கூறும் primordial நிலை? அது எப்படி வந்தது?
Energy can neither be created nor destroyed - It can only be changed from one form to another என்கிற தத்துவத்தின் படி, எந்த பொருளும் தாமாக உருவாக முடியாது என்பது தானே விஞ்ஞான விதி.

அந்த விதிக்கெல்லாம் மாற்றமாக primordial , fundamental என்று நீங்கள் பேசுவீர்களாம், அதுவே நான் உருவமுள்ள இறைவன் என்று சொன்னால், அந்த உருவத்தை அமைத்தது யார் என்று என்னிடம் கேள்வி கேட்பீர்களாம்! நல்லா இருக்கிறதே வேடிக்கை!

மேலும், விஞ்ஞான விதிக்கு மாற்றமாக தாமாக ஒன்று உருவாகும் என்று நம்பலாம் என்றால், அவ்வாறு உருவானது தமக்கு என்று ஒரு உருவத்தை வைத்துக்கொள்ளும் என்பதையும் நம்பலாம்!
உங்கள் நம்பிக்கையின் படி, தாமாக ஒன்று உருவானது , அது தான் கான்சியச்னஸ், அது தான் கடவுளின் கான்சியச்னஸ்     என்றெல்லாம் சொல்லும் நீங்கள் அனைத்தையும் விஞ்ஞான ஆதாரத்தின் படி நம்பவில்லையே!!!
உங்கள் வாதப்படி கான்சியச்னஸ் என்பது தனித்து இயங்கும், அதற்கு என்று எந்த உருவ அமைப்பும் தேவையில்லை , அது தான் விஞ்ஞானமும் சொல்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அதனால் நீங்கள் அனைத்தையுமே விஞ்ஞானத்தின் படி நம்பி விட்டீர்கள் என்றாகி விடுமா? உருவமில்லாத கான்சியச்னஸ் குறித்து சொல்லும் விஞ்ஞானம், அது எப்படி முதலில் தோன்றியது என்று சொல்கிறதா ? இல்லையே!
அந்த கான்சியச்னஸ் எப்படி நம்மை படைத்தது என்று சொல்கிறதா? இல்லையே. நான் பேசுவதையும் கேட்பதையும் அது கவனிக்கும் என்று சொல்கிறதா? இல்லையே.
இதையெல்லாம் விஞ்ஞானம் சொல்லாத போதும் கூட கடவுள் பரம்பொருள், அவர் அனைத்தையும் கவனிப்பார், என்று நீங்களும் தானே நம்புகிறீர்கள்?
எதற்கு உங்களிடமே பதில் இல்லையோ அதை பிறரிடம் அதிமேதாவிதனமாக கேள்வி கேட்க கூடாது என்பது சாதாரண விதி!

அல்லது அனைத்திற்கும் பதில் உள்ளது என்றால் primordial என்று ஏன் சொன்னீர்கள் என்பதற்கு பதில் வேண்டும்.

விஞ்ஞானம் கூட என்ன சொல்கிறது என்றால், அனைத்திற்கும் ஒரு துவக்கம் இருந்தாக வேண்டும். அந்த துவக்கத்திற்கு ஒரு துவக்கம், அந்த துவக்கத்திற்கு இன்னொரு துவக்கம் என்று சென்று கொண்டே இருந்தால் விஞ்ஞான ஆய்வை எதில் துவங்குவது என்பதில் முடிவு எடுக்க இயலாத சூழல் ஏற்படும். ஆக, ஒன்றை குறிப்பிட்டு, இது தான் ஆதி என்று விஞ்ஞானமே உருவகப்படுத்தி விட்டு அதில் இருந்து ஆய்வை துவங்குவார்கள்.
ஆகவே தான் Consciousness had to exist FIRST because quantum physics says that NOTHING HAPPENS unless it is first OBSERVED. This means that there had to BE an observer for the universe to be created as a form.

என்று கூறுகிறார்கள். அதாவது, ஏதேனும் ஒன்று முதலில் இருந்தாக வேண்டும். வேறு வழியில்லை, ஆகவே அது இருக்கிறது ! என்கிற அறியாமை பதில் தான் விஞ்ஞானம் சொல்வது !

உருவமுள்ள கடவுளை படைத்தவன் யார் என்கிற கேள்விக்கு பதில் இல்லை என்கிற காரணத்தால் கடவுளக்கு உருவம் இல்லை என்று சொன்னால், உருவமில்லாத கான்சியச்னசை படைத்தது யார் என்பதற்கும் பதில் இல்லை என்பதால் கடவுளுக்கு உருவம் உண்டு என்று சொல்லலாமா?
என்ன வாதம் வைக்கிறீர்கள்.????

நான் ஏற்கனவே சொன்னது போல, நம்மை திட்டுவதற்கும் உணர்ச்சிவயப்பட வைப்பதற்கும் மட்டுமே முனைகிறீர்களே தவிர நடுநிலையாக வாதம் வைக்க நீங்கள் முயற்சி செய்யவில்லை.


தொடர்ந்து, உங்கள் வாதங்களில் உங்களின் பல பல முரண்பாடுகளை பார்க்க முடிகிறது. 
மனிதன் இப்போது கடவுள் ஆக முடியாது , ஆனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் கடவுள் ஆகி விடலாம் என்கிறீர்கள்.
விவேகானந்தர் இவ்வாறு உணர்சிகளை கட்டுப்படுத்தி திருமணம் கூட செய்யாமல் வாழ்ந்தார் என்று நீங்களே சொல்லி விட்டு, நாங்கள் என்ன விவேகானந்தரை கடவுள் என்றா சொன்னோம்? என்று என்னிடம் கேட்கிறீர்கள்.
நீங்கள் தானே உணர்ச்சியை கட்டுப்படுத்தினால் தான் கடவுள் ஆக முடியும் என்றீர்கள்? விவேகானந்தர் அத்தகைய உணர்சிகளுக்கேல்லாம் அப்பாற்பட்டவாரக தானே நம்புகிறீர்கள்?
விவேகானந்தரை கடவுள் என்று நம்பும் கூட்டம் இருக்கையில் இவர் என்ன கடவுள் இல்லை என்று சொல்கிறாரே என்று பார்த்தால், தொடர்ந்து மனிதனும் கடவுளும் அடிப்படையில் ஒன்று தான் என்கிறீர்கள்.

அப்படியானால், மனிதனும் கடவுளும் அடிப்படையில் ஒன்று தான் , ஆனால் விவேகானந்தர் கடவுள் இல்லை என்கிறீர்களா?
அல்லது மனிதன் தான் கடவுள், விவேகானந்தர் மனிதனே இல்லை என்கிறீர்களா?

வெறுமனே வாதங்கள் செய்து விட்டு போக முடியாது. வரிக்கு வரி, ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் கேட்கப்படும் என்பதை நினைவில் கொள்க.

எப்போது மனிதன் தன்னுடைய இந்த உடல்/ மனம்/அகந்தை ஆகியவற்றை மீறி தனது உண்மை பற்றி அறிகிறானோ,  அப்போது ஆத்மா எனப்படும் மனித Consciousness முன்புஇந் உடல்மனம்உலகம்பிரபஞ்சம்நேரம்வெளி ஆகிய அனைத்தும் அழிந்து போகிறது அப்போது ஆத்மா எனும்Human Consciousness, பிரம்மம் (Brahman) எனும் இறை Consciousnessஉடன் ஒன்றாகக் கலக்கிறது.

என்று கூறுகிறீர்கள். 
முதலில் கடவுள் அல்லது பிரமன் என்றான் என்ன? அதற்குரிய சக்தி என்ன? என்பதை உணர்ந்து தான் பேசுகிறீர்களா?
கடவுள் என்றால் ஆகு என்று நினைத்தால் ஒரு விஷயம் ஆகி விட வேண்டும் - அத்தகைய சக்தி படைத்தது தான் கடவுள்.
சாவு என்றால் செத்து விட வேண்டும். அது தான் கடவுள். நான் மனதில் என்ன நினைக்கிறேன் என்பதை அது புரிய வேண்டும் - அது தான் கடவுள் !

மனிதன் உடல் , மனதை எல்லாம் மீறி செல்ல முடியுமா என்பதை எல்லாம் பற்றி அடுத்தடுத்த வாய்ப்புகளில் பேசலாம். அதற்கு முன், ஒரு வாதத்திற்கு, அவ்வாறு சென்று விட்டான் என்றே வைத்துகொள்வோம். அதன் மூலம் அவன் கடவுள் ஆகி விடுவான் என்பதற்கான விஞ்ஞான சான்று என்ன?
விஞ்ஞான சான்று இல்லை என்றால் அப்படி ஒரு நபரை கண்ணுக்கு நேராக காட்டி விட்டால் கூட போதுமே ! எங்கே அவர்? இப்படி மனித உணர்சிகளுக்கு எல்லாம் அப்பார்ப்பட்டு தனது உண்மை நிலையை அறிந்து அதன் மூலம் கடவுளின் கான்சியச்னசுடன் ஒன்றி போன நபர்கள் யார் யார்?
அவர்களது முகவரி என்ன?
அவர்களை எங்கே காண்பது? ஆகு என்று சொல்லி அவர் உருவாக்கியவை என்னென்ன?
சாவு என்று சொல்லி அவர் அழித்தவை என்னென்ன?
என் மனதினுள் நான் நினைப்பவைகளை கூட அவரால் அறிந்த கொள்ள முடியுமா? முடியும் என்றால் நான் எங்கே வர வேண்டும் என்று சொல்லுங்கள். வருகிறேன். நீங்கள் காட்டும் நபர், என் மனதினுள் நான் எண்ணுபவைகளை சொல்லி விட்டால் இந்த விவாதமே தேவையில்லையே.. நான் உங்கள் யோகிகளை கடவுளாக நம்புவதற்கு அதை விட வேறு ஆதாரம் எனக்கு தேவைப்படாதே..
அதை செய்யலாமே நீங்கள்? ஏன் தயக்கம்? அதை செய்யுங்கள், இந்த விவாதத்தையே முடித்து கொள்ளலாம். நான் உங்கள் அனைத்து வாதங்களையும் அப்போது ஏற்றுக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்! வேறு வழி எனக்கு அப்போது இருக்காது.
ஏனெனில், கடவுளின் தன்மைகளை கொண்ட ஒரு மனிதனை கண் முன்னே நான் பார்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

ஆகவே அதை செய்யுங்கள். 
மனிதன் அப்படி செய்தால் கடவுளை நெருங்குவான், இப்படி செய்தால் பாதி கடவுளாகி விடுவான். இன்னும் கொஞ்சம் ஏதாவது செய்தால் முழு கடவுள் ஆகி விடலாம் என்றெல்லாம் நகைச்சுவையாக பேசி மக்களை கவர நினைக்காமல், இவ்வாறு ஆனவர்கள் யாராவது இருந்தால் அவர்களை கொண்டு வாருங்கள், அல்லது அவர்கள் இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்து செல்லுங்கள்.
கடவுளின் தன்மைகளாக நான் முதலில் சொன்ன தன்மைகளை அவர் கொண்டிருக்க வேண்டும்.

அதில் எதையும் அவர் கொண்டிருக்கவில்லை என்றால் அதன் பொருள் இரண்டு !
  • ஒன்று - உங்களுக்கு கடவுளின் இலக்கணம் என்ன என்பதே தெரியவில்லை
  • இரண்டு - அந்த நபர் கடவுள் இல்லை!!!

விவாத தலைப்பில் ஒரு சில பகுதிகளை மட்டுமே இப்போது எடுத்துக்கொண்டுள்ளேன்.

இனியும், 
  • இஸ்லாம் கடவுள் கொள்கை குறித்து என்னென்னவெல்லாம் சொல்கிறது, அது எப்படி நியாயமானது என்பதை பற்றியும் 
  • கடவுள் - தெய்வம் வேறுபாடு என்று நீங்கள் சொல்லும் குழறுபடிகள் பற்றியும் 
  • மனிதன் தன் உணர்ச்சி, கால நிலை அனைத்தையும் விட்டும் வெளியேற முடியுமா? அது சாத்தியமா? என்பது குறித்தும்
  • ஒரு கடவுளை தான் வணங்க வேண்டும் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே பல கடவுள்களை வணங்கி தமக்கு தாமே முரண்பட்டுக்கொள்வது பற்றியும் 
  • பல கடவுள் நம்பிக்கைக்கு சான்றாக நிலாவில் முயல் இருப்பதாக நாம் சிறு குழந்தையாக இருக்கிற போது நம்பியதில்லையா? என்று சொல்லி, பல கடவுள் நம்பிக்கை என்பது சிறு பிள்ளைத்தனம், அது முட்டாள்தனம் என்று நீங்களே ஒப்புக்கொண்டதை பற்றியும்,
  • செக்ஸ் வைத்தால் கடவுளாக முடியாது, செக்ஸ் வைக்காமல் இருப்பவரால் தான் கடவுள் ஆக முடியும் என்று நீங்கள் சொல்வது குறித்தும்..

தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ் (கடவுள் நாடினால்)

ஏற்கனவே மிகவும் நீண்டு விட்ட எனது இந்த முதல் வாய்ப்பை இத்துடன் முடிக்கிறேன்.

குறிப்பு :

வார்த்தைகளில் கடுமை காட்டுவதை நீங்கள் சரி செய்து கொள்வது விவாதத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்ல உதவும் என்பதை நினைவுப்படுத்துகிறேன்.

அத்துடன், ஏற்கனவே சொல்வதற்கு தவறிப்போன சில நிபந்தனைகள் - வேறு வேறு இணையதளங்களின் லிங்குகளை விவாதத்தில் காட்டக்கூடாது. இணையதளத்தை ஆதாரமாக காட்ட நினைத்தால் அந்த இணையதள முகவரியை மட்டும் குறிப்பிட்டு அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த கருத்தை எடுத்து தான் சொல்ல வேண்டும். 

இரண்டாவது நிபந்தனை - உபநிஷத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, வேதங்களில் உள்ள நாஸடிய சுக்தம் என்கிற பகுதியில் உள்ளது என்றெல்லாம் சொல்வதாக இருந்தால்அந்த வேதத்தின் எந்த பாகம், எந்த அத்தியாயம் அல்லது பாகம், எந்த பக்கம் என்பதை சேர்த்து தான் சொல்ல வேண்டும்.
குர் ஆன், ஹதீஸ் குறித்து நான் எதை சொல்வதாக இருந்தாலும் நானும் இதையே கடைப்பிடிப்பேன்.

வஸ்ஸலாம்.







முகவரியை தெரிவிக்க தயங்கும் ஹிந்து நண்பர்  வாதம் - 2



உங்களுடைய பதிலில் இருந்து ஒரு விஷயம் எனக்குத் தெளிவாக விளங்கி விட்டது....நான் சொன்னது எதுவுமே உங்களுக்கு விளங்கவில்லை என்று...
இந்துக் கொள்கையான அத்வைதம் பற்றி முதலில் ஒரு முறை விளக்கி விடுகிறேன்....உங்களுடைய கேள்விகள் அனைத்திருகுமே மொத்த பதிலையும், எங்கள் கடவுள் கொள்கையை முழுமையாக விளக்கி விட்டுச் சொன்னால் தான் புரியும் என்று நினைக்கிறேன்...

கடவுள் என்பவர் வெறும் Consciousness ஆக இருந்தார்...Brahman எனப்படும் இதற்கு வெற்றிடம் தேவைப்படவில்லை...வெளி என்று சொன்னேனே, அதைதான் இங்கு வெற்றிடம் என்கிறேன்...வெற்றிடம் இல்லை என்றால், இடமே இல்லை என்று அர்த்தம்....வெகு தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்...இடமே இல்லை... அந்தக் கடவுளான Consciousness எண்ணியது..எண்ணத்தில் தோன்றியது தான் வெற்றிடம் , பிரபஞ்சம், மனித உடல், திடப்பொருள் எல்லாம்...

ஒரு உதாரணம் சொல்கிறேன்...நீங்கள் தூக்கத்தில் கனவு காண்கிறீர்கள். கனவில்  நீங்களே வருகிறீர்கள்.கனவில் வரும் நீங்கள் நீங்கள் தான்.."நான்" என்று தான் உங்களை கனவில் நீங்கள் அடையாளம் கொள்கிறீர்கள்....கனவில் வேறு இடம், வேறு நேரம் என்று எல்லாமே இருக்கிறது...வேறு மக்களும் உள்ளனர். உங்கள் கனவில் உங்களுடைய Consciousness இருந்ததல்லவா? அது கனவில் இருந்த உங்களுடையதா? இல்லைத் தூங்கிக்கொண்டிருந்த உங்களுடையதா? நீங்கள் தூங்கினாலும் உங்கள் Consciousness, கனவில் இருக்கும் உங்களுடைய Consciousness ஆக வந்து, கனவு மனிதர்களையும், இடங்களையும் உணர்கிறது...கனவில் வரும் உங்களுக்கு நீங்கள் உண்மைதான்...கனவு கலைந்து எழுந்தால் தான் கனவில் இருந்த நீங்கள் பொய்..அந்த மற்ற மக்களும், இடங்களும்  பொய்...

இப்போது இதே கனவை அந்த பிரம்மன் காண்கிறது...ஆனால் தூங்காமல் காண்கிறது...தூக்கத்தில் கனவு என்று நான் கொடுத்த விளக்கம், மனிதர்களுக்குத் தான் பொருந்தும். நீங்கள் உடனே மனித தூக்கத்தையும், கனவையும் இதற்குப் பொருத்தாதீர்கள். "கடவுள் தூங்கி விட்டாரா?" என்று கேட்காதீர்கள்....பிரம்மம் அதைச் செய்யும்போது, அது தானே உணர்ந்து செய்கிறது...பிரம்மத்தின் கனவில் பிரம்மம் ஒரு மனிதனாக அல்லாமல், பல மனிதர்களாக உருவெடுக்கிறது...ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு  Consciousness ...ஆனால் அவை அனைத்துமே ஒரே Consciousness தான்..பிரம்மத்தின் கனவு "மாயை" என்று அழைக்கப்படும்...மாயையில், நாம் அனைவரும் நம்மைத் தனித்தனி மக்களாகப் பார்க்கிறோம்...ஆனால், நாம் நம்மைப் பார்பதற்கும், உணர்வதற்கும், பயன்படுத்தும்  பிரம்மத்தின் Consciousnessஐ, நம்முடைய Consciousness என்று நினைத்துக் கொள்கிறோம்...இந்த மாயையில் வரும் consciousness தான் Atman (ஆன்மா) என்று அழைக்கப்படுகிறது...

ஆக, இவை அனைத்துமே கண்கட்டு வித்தை போல...ஆனால் இவை அனைத்தையுமே உணரும் Consciousness என்பது மட்டும் தான் உண்மை... நம் பிரபஞ்சம் அதில் உள்ள அணுக்கள், photons,quanta, electrons, இவை உருவாக்கும் பொருட்கள் என அனைத்தும் அதனதன் இடங்களில் - இருக்க வேண்டிய இடங்கள் என்று நாம் நினைக்கும் இடங்களில் - இருப்பதாகக் காண்பிக்கின்றன...இதனை நாம் பார்ப்பது Atman என்கிற அந்த Consciousness வழியாக...படைப்பு என்பது அந்த பிரமத்தின் எண்ணத்தில் நிகழ்கிறது...அந்த பிரம்மத்தின் வழியாகப் பார்க்கும் நாம் (நம் மனங்களை, உடல்களைக் கூறுகிறேன்), அது உருவாக்கிய கண்கட்டு வித்தையான இந்த உலகத்தைப் பார்க்கிறோம்...வெற்றிடமும் கூட கண்கட்டு வித்தைதான்....

இதனால்தான் சொன்னேன், Consciousness  தான் இந்த உலகத்தைப் படைக்கிறது என்று...ஆதாரமும் பின்னால் வரும்.

இப்போது நீங்கள் ஒரு கேள்வி கேட்பீர்கள்..."அப்படியானால் நாம் அனைவருமே பொய்யா? வெறும் மனதின் பிம்பங்களா?"...பிரம்மத்திற்கு மட்டும் தான் நீங்கள் மனதின் பிம்பம், பொய், மாயை எல்லாம்...எனக்கும் உங்களுக்கும், இந்த உலகம், பிரபஞ்சம் எல்லாம் உண்மை...

அப்படி எண்ணுவதற்கு கஷ்டமாக இருக்கிறதா? ஏன் அப்படிச் சொல்கிறோம் என்பதற்கு தத்துவவியல் விளக்கம் கொடுத்திருக்கிறேன்...நீங்கள் அதைக் கண்டும் காணாமல், அதற்கு பதில் சொல்லத் தெரியாமல், "இப்படி இருந்தால், இதெல்லாம் எப்படிச் சாத்தியம்?" என்று எதிர் கேள்வி எழுப்பினீர்கள்,,,இதோ, இந்த விளக்கத்திற்கு பின்னால், அந்த சாத்தியங்கள் எப்படி என்பதும் சொல்லத்தான் போகிறேன்....ஒன்று விடாமல்...அதை விட முக்கியமாக, விஞ்ஞானக் காரணங்களும், விஞ்ஞான ஆதாரங்களும் தரத்தான் போகிறேன்....

ஆனால் இப்போது நீங்கள் கேட்ட கேள்விகளை, உங்கள் பாணியில் முதலில் எதிர்கொண்டு விடுகிறேன்...

ஆதி தோன்றலுக்கு, விஞ்ஞான காரணம் வேண்டுமா? எங்கள் கொள்கையில் இருக்கிறது...
Big Bang தியரி கேள்விப்பட்டிருப்பீர்கள்...அந்த Big  Bang நடக்கும் முன் வெளியோ, வெற்றிடமோ, நேரமோ கிடையவே கிடையாது என்று தான் விஞ்ஞானம் கூறுகிறது..

வெற்றிடமே இல்லையென்றால், அதில் கடவுள் என்னும் ஒரு intelligent being  இருக்குமானால், அது எப்படி இருக்கும்? உருவம் இருந்தால், அது இருக்க ஒரு வெற்றிடம் வேண்டாமா?  அப்படியானால், இந்த கடவுள்,  உருவமற்று வெறும் Consciousness ஆக மட்டும் தானே இருக்க முடியும்? இதுதான் நாங்கள் சொல்லும் கடவுள்...சரி அந்த Consciousness எப்படி வெற்றிடம் உருவாக்கும்?

Consciousness உடைய செயல் என்ன? எண்ணுவதுதானே? எண்ணத்தில் Big  Bang நடத்தி அதில் வெற்றிடம் கொண்டு வந்தது தான் எங்கள் பிரம்மம்...ஆக, விஞ்ஞான விளக்கத்தையும் எதிர்கொள்ளும் கடவுள் வேண்டுமென்றால், அந்த கடவுள் வெற்றிடம் மீறிய ஒரு எண்ணும் பொருளாக இருக்க வேண்டும்....அப்படியென்றால் அது வெறும் Pure  Consciousness ஆக மட்டும் தான் இருக்க முடியும்..இதைப் புரிந்து கொள்வது என்ன அவ்வளவு கடினமா?



கொஞ்சம் முன்னதாக இந்த பதிலை அனுப்பியிருந்தால் Nobel Prize Committee க்கு அனுப்பி இந்த வருட இயற்பியலுக்கான Nobel வாங்கியிருக்கலாமே??

எதையாவது அவசர அவசரமாகப் படித்து விட்டு எழுதினால் இப்படித்தான்...quantum தியரி கண்ணை மூடினால் உலகம் கிடையாது, கண்ணைத் திறந்தால் உலகம் தெரியும் என்றா சொல்கிறது??? இதைச்சொல்வதர்க்கு quantum தியரி எதற்கு?? அதில் இவ்வளவு mystery எதற்கு???

முதலில் Quantum Observer effect ஐ விளக்குகிறேன்...ஒரு electron  நாம் பார்க்கும் முன் அலை வடிவமாகவும் இருக்கும், திடப்பொருளாகவும் இருக்கும்...ஒரே நேரத்தில் இரண்டு விதமாகவும் இருக்கும்...கணிதத்தின் படி பார்த்தால் பல Eigen valueக்கள் பொருந்தி பல positions உடையதாக இருக்கும்....ஆனால், நாம் அதனை அலை என்று காணத் துவங்கினால், அலையாக மட்டுமே நடந்து கொள்ளும்...particle என்று பார்கத்துவங்கினால் particle ஆக மட்டுமே நடந்து கொள்ளும்...இதைத்தான் quantum விஞ்ஞானிகள் observer effect  என்கிறார்கள்..நாம் பார்பதைப்பொருத்துதான் அது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கே வருகிறது...இதைத்தான் Reality  depends on Consciousness  என்கிறார்கள்...இந்த reality  தான் நான் மேலே சொன்ன மாயை...மாயைக்குள் சிக்கியுள்ள நம் Consciousness  பார்பதைப் பொறுத்து தான் reality  நடந்து கொள்ளும்...இதை விளக்கும் Double  Slit  Experiment  உலகப் பிரசித்தம்....உங்கள் புரிதலுக்கு ஒரு காணொளி இங்கே இணைக்கிறேன்...  www.youtube.com/watch?v=DfPeprQ7oGc&feature=player_embedded
இதைப்பார்த்தாவது குழம்பாமல் , அதை விட முக்கியமாக, அடுத்தவர்களைக் குழப்பாமல் எழுதப் பாருங்கள்...

இதில் Schrodinger ஐ வேறு துணைக்குக் கூப்பிட்டு வந்திருகிறீர்கள்...அவருடைய மிகப் பிரபலமான "Schrodinger பூனை" experiment இந்த observer effect  அடிப்படை கொண்டது தான்....

"எல்லாம் சரி...Consciousness causes reality என்று quantum  விஞ்ஞானிகள் சொன்னால், அதை எப்படி நீங்கள் உங்கள் கடவுள் கொள்கைக்கு எடுக்க்ன்றீர்கள்...உங்கள் கடவுள் கொள்கைப் படி எல்லாமே ஒரே Consciousness அல்லவா...அதை இங்கு யார் நிரூபித்தார்கள்" என்று கேட்கிறீர்களா? 
யாரும் திட்டவட்டமாக நிரூபிக்கவில்லை தான்...ஆனால், இது போன்ற ஆய்வுகளின் logical conclusion பல நேரங்களில், எங்கள் கொள்கைக்குச் சாதகமாகத் தான் அமைந்துள்ளது...

நீங்கள் கூப்பிட்டு வந்த Schrodinger என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா? "Consciousness is never experienced in the plural,only in the singular." கடவுள் தான் மனிதன் என்று நாங்கள் சொல்வதன் காரணம், ஒரே Consciousness தான் என்பதற்காக..இதை எப்படி Schrodinger சொல்கிறார் பார்ப்போமா? நான் எதற்கு அதை Copy - Paste செய்து நீங்கள் நம்பாமல் இருக்க...அந்த இணைப்பே இங்கு கொடுக்கிறேன்...பக்கம் 31 ...கடைசிக்கு வந்து வாசிக்கத் துவங்குங்கள்... http://whatislife.stanford.edu/LoCo_files/What-is-Life.pdf
இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?? Schrodinger விஞ்ஞானி இல்லை என்றா ? இல்லை, நீங்கள் சொன்ன Schrodinger இவர் இல்லை என்றா? இல்லை விஞ்ஞானமே பொய் என்றா? 

உங்கள் நம்பிக்கையை இது போன்ற ஆய்வுகளுக்கு அப்பார்ப்பட்டு சொல்லுங்களேன் பார்ப்போம் என்று.

இந்த தெரிந்த விஷயம் பற்றி மட்டும் பேசி தெரியாத விஷயங்களைச் சொல்லாத நோய் ரொம்ப மோசமான ஒன்று நண்பரே...நல்ல வேலையாக இணையம் மூலம் எனக்குப் பரவி விடாது என நம்புகிறேன்...
தத்துவவியல் வைத்துச் சொன்னேன்..நீங்கள் அதை கவனிக்கவில்லையா? இல்லை தத்துவவியல் படி பதிலும் உங்கள் கொள்கையில்  இல்லையா?
இப்போது big bang  தியரி வைத்தும், கடவுள் Consciousness மட்டும் தான் ஆதி என்றும் சொல்லி இருக்கிறேன்...quantum physics வைத்தும் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்...வேறு என்ன பதில் வேண்டும்? கடவுளே வந்து சொல்ல வேண்டுமா? இத்தனையிலும் நீங்கள் ஒன்றும் தெளிவான மறுப்பு கொடுக்க முடியாமல், மேலும் மேலும் விளக்கம் மட்டும் கேட்டிருக்கிறீர்கள்...ஒன்றும் மறுப்பு சொல்லும் அளவிற்கு சரக்கு இல்லை போலும்....

கான்சியச்னஸ் என்பது காலத்திற்கு அப்பாற்ப்பட்டது என்று வைத்துக்கொண்டாலும், எதையுமே சாராமல் தனித்து இயங்கும் வகையில் அது நம்மிடம் இருக்கிறதா? எவரிடமாவது இருக்கிறதா? 
கடவுள் தான் அப்படிப்பட்ட ஒரே Consciousness என்பது நான் சொல்லி இருக்கிறேன்...
கான்சியச்னஸ் என்பது உருவமற்ற ஒரு அலை வடிவு என்று சொன்னாலும் அது இயங்குவதற்குரிய ஒரு physical entity வேண்டும். அதுவும் தான் விஞ்ஞானம்.
பெரிய விஞ்ஞானமெல்லாம் வேண்டாம்...பன்னிரெண்டாம் வகுப்பு அறிவியல் புத்தகத்திலேயே பதில் இருக்கும்...
நாம் விவாதம் செய்யத் துவங்கியதில் இருந்து, இது வரைக்கும் நான் ஒரு 15  தடவையாவது சொல்லி இருப்பேன் என்று நினைக்கிறேன்.."Consciousness is Non-Spatial" என்று..."non-spatial" உங்களுக்கு புரிவது மாதிரி சின்ன சின்னதாக உடைத்துச் சொல்கிறேன்...non-spatial=no space...."not requiring space"...அதாவது space தேவையற்ற..."வெளி/வெற்றிடம்" தேவையற்ற...அலை, வெளியில்லாமல்  இருக்குமா? ஒன்றும் அவசரமில்லை...பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் புத்தகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்...
என்ன? இருக்கும் என்று போட்டிருக்கிறதா? அப்படிப் போட்டிருந்தால் சொல்லுங்கள்...நான் இப்போதே என் விவாதங்களை மூடி வைத்து விட்டு, கிளம்பி விடுகிறேன்...
இல்லை என்று போட்டிருக்கும் என நம்புகிறேன்...நான் சொல்லும் Consciousness, Non-Spatial ...வெளி அற்றது...அதனால் அது அலை கிடையாது...வெளி என்று ஒன்று இல்லாமல் நீங்கள் கற்பனையும் செய்ய முடியாது....ஏன் என்றால், நாம் அனைவரும் வெளி உள்ளே தான் இருக்கிறோம்..பிரபஞ்சமும் வெளி உள்ளே தான் இருக்கிறது..ஆனால் நாங்கள் சொல்லும் கடவுள், இந்த வெளியையும் படைத்தவர்...அதனால் அவர் without space அதாவது வெளி இல்லாமல் இருக்கிறார்...வெளி இல்லாமல் இருப்பதனால், உருவம் இருக்க முடியாது..ஏன் என்றால் உருவம் வேண்டுமென்றால், அது இருக்க வெளி வேண்டும்..வெளியும் இவர்தானே படைக்க வேண்டும்? என்ன, சந்தேகம் உள்ளதா? மேலே சொன்ன Big Bang தியரி ஒரு முறை நன்று படித்து விட்டு வருகிறீர்களா? அதுவுமே பன்னிரெண்டாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் உள்ளது...

நான் ஏற்கனவே சுட்டிகாட்டிய schrodinger தியரி அதை தானே சொல்கிறது? நான் விழிப்பது வரை எதையுமே உணராத நம் கான்சியச்னஸ், கண்களை நாம் திறந்த பிறகு இந்த உலகை உணருகிறது என்றால், அங்கே உணர்ந்தது கான்சியச்னஸ் என்றாலும் உணர்த்தியது கண் என்கிற physical entity 

அந்த கண் என்கிற physical entity யும் Consciousness படைத்தது தான் என்று எங்கள் கடவுள் கொள்கையால் விளக்கியாயிற்று...அதை நிரூபிக்க quantum தியரி வைத்து மேலே படம் போட்டே காண்பித்தாயிற்று...நீங்கள் கூப்பிட்டு வந்த Schrodinger ஐயும் வீட்டுக்கு போகச் சொல்லியாயிற்று...வேறு யாரையாவது கூப்பிட்டு வாருங்கள்...

இதற்குப் பின்னால் நீங்கள் எழுதியது எல்லாம், இது வரை நான் கொடுத்த விளக்கங்களை வைத்து யோசித்துப் பார்த்தாலே போதும்...
விஞ்ஞான விதிப்படி நீங்கள் சொல்வது போல் எதுவும் தானாக உருவாக முடியாது என்பதையும் மேலே எங்கள் கடவுள் கொள்கை சொல்லி விட்டது...Consciousness என்பது நீங்கள் சொன்ன energy ஆகவோ, உங்கள் உருவமுள்ள கடவுள் ஆகவோ இருந்தால் விஞ்ஞான விதிப்படி உருவாகச் சாத்தியமே இல்லை...அதனால் தான் நாங்கள் அதனை அதற்கும் அப்பாற்பட்டு என்று வெற்றிடம் இல்லாமல், உருவம் இல்லாமல், அலை வடிவம் இல்லாமல் கூறுகிறோம்....ஆக எங்கள் கொள்கை "Law of conservation of Energy", என்கிற Newtonian Mechanics பொருந்தியும் வரும்...Quantum Mechanics, Big Bang Theory, எல்லாம் பொருந்தியும் வரும்....

நான் கடவுள் கொள்கை பற்றிப் பேசினால், நீங்கள் எதோ கடவுளை Harry Potter, Voldemort போன்ற மாயக்கதை மந்திரவாதி போல் ஆக்கி அப்படிப் பட்ட சக்திகள் எல்லாம் ஏன் இல்லை எனக்கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்...
மனிதன் எப்படி கடவுள் ஆகிறான்...அப்படி ஆவதற்கு செக்ஸ் என் கூடாது என்பதற்கான விளக்கமெல்லாம் உங்களுக்குத் தரும் முன், இது வரை சொன்னதெல்லாம் புரிந்ததா என்று சொல்லுங்கள்...இது புரிந்தால் தான், அதுவும் உங்களுக்குப் புரியும்...ஏன் என்றால் நான் உங்களுடைய பதிலை வாசித்ததில், இதற்கு முந்தய அஞ்சல்களில் நான் சொன்ன கடவுள் கொள்கை உங்களுக்கு எள்ளளவும் விளங்க வில்லை என்பது தெளிவு படுகிறது...நிறைய எழுதினால் நீங்கள் ரொம்பவே குழம்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்...





நாஷித் அஹமத் வாதம் - 2



அஸ்ஸலாமு அலைக்கும்.

கடவுள் கொள்கை என்கிற தலைப்பிலான விவாதத்தில் இது எனது இரண்டாவது வாய்ப்பு.

வாதம் செய்யும் போது ஒரு சில முரண்பாடுகள் தோன்றலாம். ஆனால் முரண்பாடுகளே வாதமாக இருக்க கூடாது.
மிகைப்படுத்தி சொல்கிறேனா அல்லது உண்மையா என்பதை இதை படிப்பவர்கள் புரியலாம்.

லிங்குகளை அனுப்ப கூடாது, அதில் உள்ள கருத்துக்களை மட்டும் தான் எடுத்து அனுப்ப வேண்டும் என்று சொல்லியிருந்தேன், அதை நீங்கள் சட்டை செய்யாமல் youtube , வேறு வேறு கட்டுரைகள் என்று லிங்க் அனுப்புகிறீர்கள்.
அதை அனுப்பி என் வாதங்களுக்கு வலு சேர்க்கிறீர்கள் என்பது வேடிக்கை.

மேலும், ஆறு வாய்ப்புகள் என்றால் ஒருவரது வாய்ப்புக்கு பின்னால் இன்னொருவரது வாய்ப்பு என்று தனித்தனியாக ஆறு வாய்ப்புகள் என்று பொருள்.
நீங்களோ, உங்கள் இரண்டாவது வாய்ப்பையே இரண்டு தவணையாக வெவேறு நேரங்களில் அனுப்பி அந்த எல்லையையும் மீறியுள்ளீர்கள். இவ்வாறு இனிமேல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு முறை எதையாவது எழுதினால் அந்த வாய்ப்பு அத்துடன் முடிந்து விட்டது என்று தான் பொருள். மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து இன்னொரு மெயிலை எழுதி இதையும் அதனுடன் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது விதி மீறில்.

மேலும்,
கான்சியச்னஸ் என்பது உருவமற்றதா? என்பதற்கு இங்கு வாதம் நடக்கவில்லை. அதை முதலில் புரியுங்கள். இந்த கான்சியச்னஸ் கடவுளாக எப்படி ஆனது என்பதற்கு தான் விவாதம் நடக்கிறது.

கான்சியச்னஸ் என்பது திடப்பொருள் கிடையாது என்றாலும் அது தனித்து இயங்காமல் ஒரு திடப்பொருளின் உதவியுடனேயே இயங்கும். என்பது எனது வாதம்.
அதோடு, ஒரு வாதத்திற்கு தனித்து இயங்கும் என்று சொன்னாலும் அது கடவுள் ஆகி விடாது என்பதும் எனது வாதம்.

கான்சியச்னஸ் தனித்து இயங்காது என்பதற்கு ஆதாரமாக நாம் விழித்திருக்கும் போது நம் உடல்வலியை நாம் உணர்கிறோம். இது கான்சியச்னஸ். அதுவே நான் உறங்கி விட்டால் அந்த வலிகளை நான் உணருவதில்லை, ஆகவே தூக்கத்தின் போது எனது உடலும் மூளையும் முழுமையான முறையில் செயல்படவில்லை என்பதால் எனது கான்சியச்னசால் இயங்க முடியவில்லை. எனது மூளை , எனது உடல் என்கிற ஒரு திடப்பொருளின் தேவை அதற்கு இருக்கிறது. மூளை முழுமையான முறையில் செயல்படாத காரணத்தால் எனது கான்சியச்னசல் என் உடல்வலியை உணர முடியவில்லை.

கீழே உள்ளது, நீங்கள் என்னுடனான chat இன் போது வைத்த வாதம்

முகவரியை தெரிவிக்க தயங்கும் ஹிந்து சகோதரர் :            if i am my body, then how can i treat my body like a different subject. suppose, my body feels tired, i can observe that like an external observer and say "my body is tired" so how can i be my body?

நீங்கள் தூங்கினாலும் உங்கள் Consciousness, கனவில் இருக்கும் உங்களுடைய Consciousness ஆக வந்து, கனவு மனிதர்களையும், இடங்களையும் உணர்கிறது



அதாவது, எனது உடலில் உள்ள வலியை ஒரு வெளி ஆள் போல நான் உணர்கிறேன் என்றால் அது தான் கான்சியச்னஸ் என்று வாதம் வைத்தீர்கள். அதாவது, எனது உடல் என்பது "நான்" அல்ல, எனது கான்சியச்னஸ் என்பது தான் "நான்" என்பது உங்கள் வாதம்.


சரிப்பா, நான் விழித்திருக்கும் போது அதை நான் உணர்கிறேன், தூங்கிய பின்னர் நான் உணருவதில்லையே,, ஆக, நான் விழித்திருக்கும் போது எனது கான்சியச்னஸ் செயல்படுகிறது, நான் தூங்கிய பிற்பாடு செயல்படவில்லை என்றால் இது எதை காட்டுகிறது? கான்சியச்னஸ் என்கிற ஒன்றால் தனித்து இயங்க முடியாது என்பதை தானே காட்டுகிறது?

என்று கேட்டால், இதற்கு அந்தர் பல்டி ஒன்றை அடித்த நீங்கள் , உங்கள் இரண்டாம் வாய்ப்பில் சொல்லும் பதில்

நீங்கள் சொல்வது Consciousness கிடையாது..awareness...கண் பார்ப்பது, உடல் வலி தெரிவதெல்லாம் awareness . consciousness என்பது "நான்" என்று அறிவது..தூங்கினாலும், கனவில் "நான்" என்று அறியத்தான் போகிறீர்கள்..கோமாவில் கூட கனவு வரும் என்பது மருத்துவ உண்மை...

இது உங்கள் முதல் முரண்பாடு !!

நான் என்கிற அந்த கான்சியச்னஸ் தான் மூன்றாம் மனிதன் போல நம் உடல் வலிகளை எல்லாம் உணர்கிறது என்றால், அதனால் ஏன் தூக்கத்தின் போது உணர முடியவில்லை என்கிற எனது கேள்விக்கு பதில் இல்லை என்ற உடன், சாமர்த்தியமாக பதிலை மாற்றுகிறீர்கள். பல இடங்களில் உள்ள உங்கள் முரண்பாடுகளை ஒரே இடத்தில் கோர்க்க முடியாது என்று எண்ணுகிறீர்கள் போலும். அது இங்கே எடுபடாது.

நான் விழித்திருக்கும் போது எனது உடலின் வலியை உணர்கிற நான் (எனது கான்சியச்னஸ்), நான் தூங்கிய பின்னர் உணர்வது இல்லை என்றால் இதன் பொருள், நான் தூங்கிய பின்னர் எனது கான்சியச்னஸ் செயல்படவில்லை.
செயல்படுகிறது என்பதற்கு கனவு காண்பதை வேணடுமானால் ஆதாரமாக காட்டுவீர்கள். அது sub -conscious  என்று விஞ்ஞானமே சொல்கிறது. ஆனால், தூங்கிய பின் எனது உடல் வலியை நான் உணர்வதில்லையே ! ஆக, நான் எனப்படுகிற எனது கான்சியச்னஸ் செயல்பட வேண்டும் என்றால் எனது மூளை வேண்டும், உள்ளுணர்வு வேண்டும். கான்சியச்னஸ் என்பது தனித்து இயங்காது!!!

இதை நீங்கள் மறுக்காமல் சப்பை கட்டு கட்டியதன் மூலம் ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.

கனவு வந்தாலும் நான் என்று அறியத்தான் போகிறேன் என்கிறீர்கள். கனவே வராத எத்தனையோ தூக்கம் இருக்கத்தான் செய்கிறது. அந்த தூக்கங்களில் நான் என்பதை நான் எங்குமே உணரவில்லையே!! உங்கள் வாதம் ஒரு சில சந்தர்ப்பங்களுக்கு மட்டும் பொருந்த வேண்டுமா அல்லது அது பொதுவாக இருக்க வேண்டுமா?
கனவு கண்டால் நான் என்று அறிகிறேன் என்பது போல, காலை விழித்த உடன் ஒருவரிடம் கடன் வாங்க வேண்டும் என்பதை நான் தூக்கத்தில் நினைவுப்படுத்த முடியுமா? என்றால் முடியாது.
அதுவே விழித்திருக்கும் போது என்னால் நினைவுப்படுத்த முடியும். ஆக, கனவில் நான் என்பதை உணர்ந்தாலும், எனது கான்சியச்னஸ் என்பது அந்த கனவுக்கு மட்டும் செயல்படுகிறது, காலையில் வாங்க வேண்டிய கடனை நான் வாங்குவது குறித்து எனக்கு உணர்த்தவில்லை !
ஆக, கான்சியச்னஸ் என்பது தனித்து இயங்காது என்பதை உங்கள் வாதமே சொல்கிறது. கோமாவிலும் கனவு வரும் என்கிறீர்கள்.. வரட்டுமே.. கோமாவில் எத்தனை பேருக்கு கடன் கொடுத்தோம் என்பது நினைவுக்கு வருமா? வராதல்லவா? கோமாவில் இல்லாதவனுக்கு வருமே! ஆக, கோமாவில் இல்லாதவனின் கான்சியச்னசும் கோமாவில் இருப்பவனது கான்சியச்னசும் ஒன்றல்ல !

மூளை, சிந்தனையின் உதவியுடன் நான் இருந்தால் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் - எனது கான்சியச்னஸ் சிறப்பாக செயல்படும்.
எனது மூளை செயல்படவில்லை என்றால் என்னால் அனைத்தையும் சிறப்பான முறையில் செய்ய முடியாது - எனது கான்சியச்னஸ் இயங்க வேண்டிய முழு அளவிற்கு இயங்காது!

இருப்பினும் ஒரு வாதத்திற்கு கான்சியச்னஸ் என்பது தனித்து இயங்கும் என்று வைத்துக்கொண்டாலும் அது எப்படி கடவுள் தகுதியை பெரும்?
எனது கான்சியச்ன் நான் உயிருடன் இருக்கிற வரை கடவுள் தகுதியை பெறவில்லையே.. உயிருடன் இருக்கிற போது கடவுள் தகுதியை பெற முடியாமல் தடுத்த விஞ்ஞானம் எது? செத்த பிறகு கடவுள் தன்மையை தர உதவிய விஞ்ஞானம் எது?

அடுத்து,

ஆதி தோன்றலுக்கு, விஞ்ஞான காரணம் வேண்டுமா? எங்கள் கொள்கையில் இருக்கிறது...
Big Bang தியரி கேள்விப்பட்டிருப்பீர்கள்...அந்த Big  Bang நடக்கும் முன் வெளியோ, வெற்றிடமோ, நேரமோ கிடையவே கிடையாது என்று தான் விஞ்ஞானம் கூறுகிறது..

வெற்றிடமே இல்லையென்றால், அதில் கடவுள் என்னும் ஒரு intelligent being  இருக்குமானால், அது எப்படி இருக்கும்? உருவம் இருந்தால், அது இருக்க ஒரு வெற்றிடம் வேண்டாமா?  அப்படியானால், இந்த கடவுள்,  உருவமற்று வெறும் Consciousness ஆக மட்டும் தானே இருக்க முடியும்? இதுதான் நாங்கள் சொல்லும் கடவுள்.


என்று சொல்லி, கடவுள் கொள்கை குறித்த உங்கள் அறியாமையை வெளிப்படுதியுள்ளீர்கள்..

விஞ்ஞான காரணம் உங்கள் கொள்கையில் இருக்கிறது என்று வேறு காமடி செய்துள்ளீர்கள்.

big bang   சொல்வது என்ன? ஒரு காலத்தில் ஒன்றுமே இருக்கவில்லை, பின்னர் அணு அல்லது ஒரு particle உருவானது. அது வெடித்து சிதறி ஆண்ட சராசரங்கள் உருவாயின.
இது தான் விஞ்ஞானம் சொல்வது.

உங்கள் கேள்வி என்னவென்றால், முதலில் தான் எதுவுமே இருக்கவில்லையே, அப்படியானால் கடவுளின் வெற்றிடமும் இருந்திருக்க கூடாதே, ஆகவே கடவுளுக்கு உருவமில்லை! என்கிற அற்புத (???) வாதத்தை கேள்வியாக வைக்கிறீர்கள்.

அற்புத கேள்வி கேட்டால் கேட்டு விட்டு அமைதியாக இருந்திருக்க வேண்டுமல்லவா? அதற்கு முரணாக ஏதாவது வாதத்தை வைக்கலாமா?

இந்த கடவுள்,  உருவமற்று வெறும் Consciousness ஆக மட்டும் தானே இருக்க முடியும்? இதுதான் நாங்கள் சொல்லும் கடவுள்.

என்று அடுத்து சொல்கிறீர்கள்.

அதாவது, பிக் பங் தியரி என்பது முதலில் எதுவுமே இருக்கவில்லை என்று சொல்கிறதாம், ஆகவே கடவுளின் கான்சியச்னஸ் மட்டும் இருந்ததாம்.
மூளை உள்ளவன் இப்படி சொல்வானா? அதோடு, கடவுள் உருவத்துடன் இருக்கிறான் என்று சொல்பவர்களை இதே பிக் பங் தியரி கொண்டு மறுப்பவர் இந்த வாதத்தை வைக்கலாமா?

பிக் பங் தியரி முதலில் எதுவுமே இருக்கவில்லை என்று சொல்வதால் அதை கேட்டு தலையாட்டி கடவுளுக்கு உருவமில்லை, கடவுளுக்கு என்று வெற்றிடம் எதுவும் இல்லை என்று சொல்கிற நீங்கள், அதே பிக் பங் தியரியை ஒப்புக்கொண்டு கான்சியச்னசும் இல்லை என்று தானே சொல்ல வேண்டும்? எதுவுமே முதலில் இருக்கவில்லை என்றால் கான்சியச்னஸ் எப்படி தோன்றியது??????
உங்களுக்கு நீங்களே ஏன் முரண்படுகிறீர்கள்? தாமாக கடவுளின் கான்சியச்னஸ் என்பது தோன்றும் போது கடவுளுக்கென்று ஒரு வெற்றிடம் தாமாக தோன்ற முடியாதா?

இன்னும் சொல்வதானால், இஸ்லாம் சொல்ல கூடிய கடவுள் என்பவர் தமக்கே உரிய உருவத்துடன் இருக்கிறார், அவர் அர்ஷ் என்கிற ஆசனத்தில் வீற்றிருக்கிறார் என்பது தான்.

நீங்கள் சொல்லக்கூடிய conservation law , big bang போன்றவை குறித்து சிந்திக்க மேற்கண்ட நம்பிக்கை எதுவும் தடையில்லை. காரணம், எந்த ஒரு ஆற்றலும் தாமாக உருவாகாது என்பது தான் விஞ்ஞானம். ஆனால் தாமாக ஒன்று உருவாகியுள்ளது என்பதையும் அதே விஞ்ஞானம் தான் சொல்கிறது. அந்த ஆற்றல் வெடித்து சிதறி தான் இந்த அகண்ட வெளிகளும், இந்த கோள்களும், படைப்புகளும் தோன்றின என்பதும் அதே விஞ்ஞானத்தின் கூற்று தான்.

இதை நீங்கள் எப்படி புரிகிறீர்களோ, அதே அடிப்படையில் தான் நாங்களும் புரிகிறோம். விஞ்ஞானம் இவ்வாறு சொன்னாலும், இந்த big bang என்கிற பெரு வெடிப்பை உருவாக்க ஒரு ஆற்றல் வேண்டும். விஞ்ஞானத்தில் இதற்கு எந்த பதிலும் விளக்கமும் இல்லை என்றாலும் கூட, ஒரு ஆற்றல் இல்லாமல் இந்த பெரு வெடிப்பு நிகழ்ந்திருக்காது! இதையும் நீங்களும் ஒப்புக்கொண்டுள்ளீர்கள், நானும் ஒப்புக்கொண்டுள்ளேன். நீங்கள் இதை ஒப்புக்கொண்டு விட்டு, விஞ்ஞானத்திற்கு எதிராக, கான்சியச்னஸ் என்கிற ஒன்று இருந்துள்ளது என்கிறீர்கள். நானும் அதே போல, விஞ்ஞானத்திற்கு எதிராக கடவுள் என்பவர் தமக்கே உரிய ஒரு அகண்ட வெளியில் இருந்திருக்கிறார் என்கிறேன்.
பெரு வெடிப்பு என்பது ஏனைய அகண்ட வெளிகளை தான் உண்டாகியதே தவிர, கடவுள் இருப்பதற்கான வெளியை அது உண்டாக்கவில்லை! அது கடவுள் இருக்கிற காலம் முதல் ஆதி முதல் இருந்திருக்கிறது.

எப்படி பெரு வெடிப்பு என்பது ஏனைய கான்சியச்னச்ங்களை, matter களை உருவாக்கினாலும், ஆதியாக தோன்றிய கான்சியச்னசை peru வெடிப்பு உருவாக்கவில்லை என்று சொல்கிறீர்களோ அதே போல!

ஆக, இது விஷயமாக உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே கருத்து வேறுபாடு, கடவுளுக்கு உருவம் உண்டா இல்லையா என்பது தான்.
உருவம் உண்டு என்றாலும் அதை விஞ்ஞானம் சொல்லாது, உருவம் இல்லை என்றாலும் அதையும் விஞ்ஞானம் சொல்லாது. ஏனெனில், பெரு வெடிப்புக்கு முன்பே  இந்த உருவமற்ற ஒன்று இருந்துள்ளது என்று சொல்லி விட்டீர்கள். இதற்கு விஞ்ஞானத்தில் விளக்கம் இல்லை.

அடுத்து, observer effect , quantum தியரி, அது இது என்று எதையாவது பேசி விட்டால் விஞ்ஞானப்பூர்வமாக பேசி விட்டதாக அர்த்தமல்ல. படிப்பவர்கள் சிரிக்க போகிறார்கள்.

எதை சொன்னாலும் எனது கேள்விக்கு அது பதிலாக வேண்டும். கான்சியச்னஸ் என்பது உருவமற்றது என்றாலும் அதனால் தனித்து இயங்க முடியாது என்பதை முதலிலேயே காரண காரியத்துடன் விளக்கியிருக்கிறேன். அதை மறுக்காமல் என்ன வாதத்தை நீங்கள் புரட்டினாலும் நிற்காது. 

லிங்குகளை அனுப்ப கூடாது என்று கேட்டுக்கொண்டேன், அதை மீறி youtube லிங்க் ஒன்றை அனுப்பி எனக்கு வலு சேர்க்கிறீர்கள்.
அந்த வீடியோவில் கூட என்ன சொல்லப்படுகிறது என்றால், ஒரு ஒளியை அல்லது சில அணுக்களை சிதறடிக்கும் போது அது ஒரு தடுப்பில் (slit ) பட்டு அதன் உட்ப்புரம் வழியாக இன்னொரு இடத்தை அடைகிறது. இன்னொரு இடத்தில் அது இரு மேட்டர் ஆக உருவாகிறது.

கான்ச்யச்னஸ் என்பது ஒன்றை உருவாக்கும் என்பதற்கு நீங்கள் தட்டு தடுமாறி வைக்கும் ஆதாரம் இது. இதை நான் மறுக்கவில்லையே..
நான் கேட்பது, இந்த double slit இல்லாமல், ஒரு screen இல்லாமல், அந்த மேட்டர் உருவாகுமா? particle என்பது ஒரு மேட்டர் ஐ உருவாக்க வேணடுமானால், அதற்கு physical காரிணிகள் வேண்டும் என்பது தான் இந்த double slit experiment சொல்லும் தத்துவத்தின் கருத்து.
இதற்கு பதில் வந்ததா? என்றால் இல்லை.
அந்த physical காரிணிகளையும் கான்சியச்னஸ் தான் படைத்தது என்கிறீர்கள். உங்கள் double slit experiment இப்படி சொல்லவில்லையே..
physical காரிணிகள் மூலமாக, அதன் துணையுடன் கான்சியச்னஸ் என்பது மேட்டர் களை உருவாக்கிறது என்பது தானே அதன் பொருள்?

சரி, அது போகட்டும். இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்? கடவுள் என்றால் என்ன என்பதை கடுகளவு கூட அறிந்திருக்கவில்லை என்பதை உங்கள் வாதங்களே பறைசாற்றுகிறது.
ஆனா ஆவன்னா தெரியாமல் கடவுள் கொள்கை குறித்து பேசுகிறீர்கள். 
கடவுள் என்றால் யார், அவரது தன்மை என்ன என்பதை எல்லாம் அடிப்படை முதல் படித்து விட்டு பேசுங்கள், அல்லது, தொடர்ந்து நாம் சுட்டிக்காட்ட இருக்கும் உங்கள் தடுமாற்றங்களையும், முரண்பாடுகையும் அனைவரும் படித்து சிரிக்கத்தான் செய்வார்கள்.

கடவுளின் கான்சியச்னஸ் தான் முதலில் இருந்தது  என்று சொன்னீர்கள். அது தான் அனைத்தையும் படைத்தது, இந்த மனிதர்களையும் அது தான் படைத்தது என்றீர்கள்.

ஒரு அலை அல்லது ஒரு particle என்பது ஒரு மேட்டர் ஐ உருவாக்கும் என்றால் அது விஞ்ஞானத்தின் படி ஒரு அறிவியல் நிரூபணம். அதன் மூலம் அந்த particle என்பது கடவுள் என்று எவ்வாறு சொலல் முடியும்? அது கடவுள் என்று கூட சேர்த்து தான் விஞ்ஞானம் சொல்கிறதா? இல்லையே?

உருவமில்லாதது என்றாலே அது கடவுள் தான் என்கிற குறுகிய கொள்கையை நீங்கள் கொண்டிருப்பதால் தான் இந்த பிழைகள் ஏற்ப்படுகின்றன.
கடவுள் என்றால் என்னையும் உங்களையும் படைத்தது தான் ஐயா கடவுள். நீங்களே ஒப்புக்கொண்டதை போல, ஆதியாக ஒரு கான்சியச்னஸ் இருந்து அனைத்தையும் படைத்தது என்றீர்களே, அது தான் கடவுள்.
அல்லாமல், நம் ஒவ்வொருவரிடமும் கான்சியச்னஸ் இருக்கிறது, அது அலை வடிவிலானது என்பதால் நாம் ஒவ்வொருவரும் கடவுளாகி விட முடியாது.
அப்படி ஆவதாக இருந்தால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை படைக்க வேண்டும்.

மனிதன் தான் கடவுள் என்று துவக்கத்திலேயே வாதம் வைத்து விட்டு, அதன் தொடர்ச்சியாக பல chatting எல்லாம் முடிந்து எதற்கும் பதில் சொல்ல முடியாமல் போன போது, மனிதன் மரணிக்கிற வரை கடவுள் ஆக முடியாது என்று இறங்கி வந்துள்ளீர்கள்.

அதை கீழே பார்க்கலாம். 

மனிதன் கடவுளாவது அவன் இறப்பின் பின்னால் என்று பழைய அஞ்சலில் குறிப்பிட்டு இருந்தேன்..ஆனாலும் நீங்கள் அதை வாசிக்காமல் எங்கே இவனைக் காட்டு, அவனைக்க் காட்டு என்கிறீர்கள்..

மனிதன் தான் கடவுள், அவன் தன்னையும் தனது உணர்சிகளையும் கட்டுப்படுத்தி அனைத்தையும் விட்டும் வெளியாகி விட்டால் அவன் கடவுள் ஆகி விடலாம், அத்தகைய சக்திகளை பெற்றவர்கள் தான் யோகிகள் எனப்படுகிரவர்கள்.அவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள் 
என்றெல்லாம் மூர்க்கமாக வாதம் வைத்து விட்டு, அவர்களை காட்டுங்கள், கடவுளின் சக்தி அவர்களிடம் இருக்கிறதா என்று நான் பரிசோதிக்கிறேன் என்று சொன்ன பிறகு இப்போது அதிலும் முரண்பட்டு , இறந்த பிறகு தான் கடவுள் சக்தியை பெற முடியும் என்று உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்கள்.

முகவரியை தெரிவிக்க தயங்கும் ஹிந்து சகோதரர்:    that is only part of the requirement...read about it, meditate about brahman from what u have read/understand in your mind, live with the sole purpose of realizing Brahman
  then u can
முகவரியை தெரிவிக்க தயங்கும் ஹிந்து சகோதரர்: i can give u an example of such an yogi...i did already..can u give me an example?


மேற்கண்ட வாதங்களை யோகியின் தகுதிகளை விளக்குவதற்காக நீங்கள் என்னிடம் பேசியவை.


அதாவது, சாதாரண மனிதன் என்பவன் கடவுளை அறிய முடியும். மனித உணர்சிகளை அடக்கி விட்டு, எந்த தேவைகளும் அற்றவனாய் அவன் மாறினால் அவன் கடவுள் நிலையை அடைகிறான் என்பது உங்கள் கருத்து.

அப்படி ஒருவனை காட்டுங்கள் என்கிற எனது கேள்விக்கு பதில் இல்லாமல் திரு திருவென முழித்தன் விளைவாக இப்போது அதை மாற்றி, இறக்கிற வரை அவனால் கடவுள் ஆக முடியாது என்று சொல்கிறீர்கள்.

அப்படியானால் சில இன்னும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

  • அப்படியானால், யோகி இன்றைக்கும் வாழ்கிறார்கள் என்றீர்களே, அது பொய்யா?
  • அல்லது இறந்த பிறகு ஒருவன் கடவுள் ஆகிறானே? அந்த தகுதிகள் இப்போது இருக்கும் யோகிகளுக்கு இல்லை என்கிறீர்களா?
  • யோகி என்பவனுக்கு பசிக்காது, தாகம் எடுக்காது என்றெல்லாம் கதை விட்டீர்களே, அவையெல்லாம் ஒரு கடவுளின் தகுதியில்லையா?
  • சரி, அப்படி ஒருவனையாவது காட்ட முடியுமா? என்று கேட்டதற்கு இதுவரை பதில் சொல்லாமல் ஓடுகிறீர்களே ஏன்?
  • பசிக்காக அவன் சாப்பிடுவதில்லை, வாழ்வதற்காகவே சாப்பிடுகிறான் என்று சொன்னீர்களே, அப்படி ஒருவனை அழைத்து வாருங்கள், அவனுக்கு நரம்பு வழியாக glucose ஏற்றுக்கொண்டு மட்டுமே இருப்போம், அவன் சாபிடாமல் இருந்து காட்டட்டுமே..

எவனாவது எதையாவது சொன்னால் அதை நீங்கள் நம்புங்கள், என்னையும் நம்ப சொலாதீர்கள். நான் நம்ப வேண்டும் என்றால் எனக்கு அது போன்ற ஒரு மர்ம (???) யோகியை கண்ணுக்கு காட்டுங்கள்.


  • அதோடு, இவ்வாறான யோகிகள் மட்டும் கடவுள் சக்தியை பெறுகிறார்கள் , சாதாரண மனிதர்களால் பெற முடியாது என்று நீங்கள் சொன்னது சரியா அல்லது, எந்த மனிதனாலும் தான் இறக்கிற வரை கடவுள் சக்தியை பெற முடியாது என்று சொல்வது சரியா? இரண்டில் எது சரி?

  • மேலும், உணர்சிகளுக்கு உட்பட்ட மனிதனால் பிரமனை அடைய முடியாது, அவன் இறந்த பிறகு அவன் உடல், உணர்வுகள் அனைத்துமே அழிந்த பிறகு அவன் பிரமத்தை அடைகிறான் என்பதற்கான ஆதாரத்தை உங்கள் இதிகாசங்கள், வேதங்களில் இருந்து பக்கம், பாகத்துடன் காட்டவும்.

  • தவிர, இவ்வாறு இறந்த அனைவரும் கடவுள் ஆகி விடலாம் என்றால், நீங்கள் ஆதி கடவுள் கான்சியச்னஸ் என்று ஒன்றை சொன்னீர்களே, அந்த கான்சியச்னசின் சக்தி அனைத்தையும் பெற முடியுமா? என்பதற்கு பதில் சொல்லவும்.


ஆதி கான்சியச்னஸ் என்பது இந்த பிரபஞ்சத்தை படைக்கும், மனிதர்களை படைக்கும். நீங்கள் சொல்லும் சக்திகளை பெற்ற ஒருவனால் இதை செய்ய முடியுமா?



இதற்கு எல்லாம் பதிலை சொல்ல இயலாது என்கிற நிலை வரும் போது, எங்கள் கொள்கையின் படி, கடவுள் நாம் பேசுவதை, செய்வதெல்லாம் கவனித்து பதிவு செய்துகொண்டிருக்கும் ஒரு நபர் அல்ல.


என்று அடுத்து தாவுகிறீர்கள்.


அதாவது, கடவுள் என்பதற்கு எந்த சக்தியும் இல்லை என்று சுருக்கமாக சொல்கிறீர்கள்.
இதை விட கடவுளே இல்லை என்று ஒரு நாத்திகனாக மாறி விட வேண்டியது தானே?



கடவுள் இருக்கிறாரா பா? என்று கேட்டால் ஆமாம் இருக்கிறார், அவர் இல்லாமல் நாம் எப்படி? என்று பதில் சொல்கிறீர்கள்.

அவர் எப்படி இருக்கிறார்? என்றால் அவர் உருவமில்லாத ஒரு கான்சியச்னசாக இருக்கிறார். என்கிறீர்கள். உருவம் இருந்தால் அதற்கு ஒரு வெளி வேண்டும், பிக் பங் தியரி , முதலில் எதுவுமே இருக்கவில்லை என்று தான் சொல்கிறது என்கிறீர்கள்.

சரிப்பா, பிக் பங் தியரி முதன் முதலில் எதுவுமே இருக்கவில்லை என்றல்லவா சொல்கிறது? நீங்கள் எப்படி முதன் முதலாக கடவுளின் கான்சியச்னஸ் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்? என்கிற கேள்விக்கு சமாளிப்பை தவிர வேறு பதில் இல்லை.

சரி, கடவுளின் கான்சியச்னஸ் இருந்து விட்டு போகட்டும், அதனால் என்ன பயன்? நான் என்ன செய்கிறேன் என்பதை கடவுள் பார்ப்பாரா? என்று கேட்டால் பார்க்க முடியாது என்கிறீர்கள்.
கேட்பாரா? என்றால் முடியாது என்கிறீர்கள்.
நான் பேசுவதை விளங்கவாவது செய்வாரா? என்று கேட்டால் அதையும் செய்ய முடியாதவர் என்கிறீர்கள்.


உங்களால் அனைத்தையும் பார்க்க முடியுமாம், கேட்க முடியுமாம், உங்களை படைத்த கடவுளுக்கு கேட்க முடியாதாம் பார்க்க முடியாதாம்.

என்னப்பா உங்கள் கடவுள் கொள்கை? கேலியாக இல்லையா?

வெறும் உருவம் சார்ந்த ஒன்று மட்டுமல்ல கடவுள் என்பது. கடவுள் என்றால் சர்வ வல்லமை இருக்க வேண்டும். இஸ்லாம் அதை தான் சொல்கிறது. 


ஒன்றை நாம் நாடினால் ஆகு' எனக் கூறுவதே நமது கூற்றாகும். உடனே அது ஆகி விடும். என்று திருக்குர் ஆன் 16.40 வசனம் சொல்கிறது.

கடவுளுக்கு மரணமில்லை என்று :255 வசனம் சொல்கிறது.

கடவுளுக்கு பசி, தாகம் இல்லை என்று 6 :14 வசனம் சொல்கிறது.

அவனுக்கு எந்த தேவையும் இல்லை என்று 112 :2 வசனம் சொல்கிறது

கடவுள் தனக்கே உரிய இடத்தில் வீற்றிருக்கிரதாக 13 :2 வசனம் சொல்கிறது.

கடவுள் அனைவரையும் பார்ப்பவன் என்று 2 :110 வசனம் சொல்கிறது

அவன் கேட்பவன், நமது மன்னிப்பை ஏற்றுக்கொள்ள கூடியவன் என்று 24 :10 வசனம் சொல்கிறது.



இஸ்லாம் கூறும் கடவுள் எப்படி இருக்க வேண்டும் என்றால், அவன் தனித்தவனாக இருக்க வேண்டும். அவனது பண்புகளையோ சக்திகளையோ பங்கு போட்டுக்கொள்ள யாரும் இல்லை என்று நம்ப வேண்டும். அறிவுக்கும் இது தான் சரி எனப்புலப்படுகிறது.

ஒருவன் படைத்தால் தான் இந்த உலகமும் அண்ட சராசரமும் சீராக இயங்குகிறது. பலருக்கு ஒரே மாதிரியான சக்திகள் இருந்திருந்தால் இந்த சீர் இருக்காது! நமது கோரிக்கைகளை ஒருவன் மட்டும் கேட்பவனாக இருந்தால் தான் அனைத்துமே சீராக இயங்கும். பலருக்கு இந்த சக்தி இருந்து பலராலும் நம் கோரிக்கைகளை சரி செய்ய முடியும் என்றால் உலகம் நாசமாகி விடும்.


அவன் தான் ஆதி முதல் அந்தம் வரை இருப்பவன், அவன் தான் அனைத்தையும் படைத்தான், அவன் நான் பேசுவதையும் எழுதுவதையும், மனதினுள் எண்ணுவதையும் அறிகிறான், இது தான் அறிவுக்கு எட்டுகிற கடவுள் கொள்கை.



அல்லாமல், மனிதன் எல்லாம் கடவுள், மனிதன் செத்து விட்டால் கடவுள் ஆகி விடுகிறான் என்றெல்லாம் நம்பினால், மனிதனை விடுங்கள், நாயையும் பன்றியையும் கூட கடவுள் எனலாம்.
ஏன்? அதற்கும் கூட கான்சியச்னஸ் இருக்கிறது, பசி, தாகம் என்கிற தேவைகள் உள்ளன, அவற்றை அது துறந்து விட்டால் நாயும் கடவுள் தான் பன்றியும் கடவுள் தான்.

இது கடவுள் கொள்கையை இழுவு தான் படுத்துமே தவிர சீர்ப்படுதாது.


தவிர, இத்தகைய கடவுள் சக்திகளை பெற்றவர்கள் இன்றும் யோகிகளாக இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் கற்பனையே ! உங்கள் மூளை சலவை செய்யப்பட்டு இவ்வாறு நம்பிக்கொண்டு இருக்கிறீர்களே தவிர, கடவுளின் இலக்கணங்களை கொண்டு அந்த துறவிகளை பரிசோதனை செய்து அதன் பிறகு நம்புகிற மனப்பக்குவம் உங்களிடம் இல்லை.


யோகிகள் என்றால் காட்டில் ஒற்றைக்காலுடன் தவம் கிடந்தது, பசி தாகம் அனைத்தையும் துறந்து நிர்வாணமாக இருப்பதை தொலைகாட்சியில் தான் பார்த்திருக்கிறோம். நேரில் இன்னும் பார்க்கவில்லை. 

யோகி என்பவர் அனைத்தையும் துறந்தவர், அவருக்கு எந்த தேவையும் இல்லை, அவ பிரமத்தை அடைந்து விட்டார், இது போல அனைத்தையும் துறந்தால் பிரமத்தை அடையலாம் என்றெல்லாம் சொல்பவர்கள் கடவுளை வெறும் மந்திரவாதிகளாக எண்ணுகிறார்களா? அல்லது கடவுள் என்றால் அவன் சர்வ வல்லமை கொண்டவன், அவன் தான் என்னையும் உங்களையும் நீங்கள் சொல்கிற இந்த யோகிகளையும் படைத்தவன், அவனுக்கு எந்த தேவையும் இருக்காது என்று நம்புவது கடவுளை மந்திரவாதி ஆக்குவதா?

மந்திரத்தையே மூலதனமாக கொண்ட நீங்கள், எங்களை மந்திரவாதிகள் என்கிறீர்களா?


செக்ஸ் செய்தால் கடவுளை அடைய முடியாது என்று அதி பயங்கர கருத்தை சொன்னீர்கள்.
சுருக்கமாக எந்த தேவையும் அற்றவன் தான் கடவுளாக ஆக வேண்டும் என்பது உங்கள் வாதம். 

சரி, அப்படியானால், எந்த தேவையும் அற்றவராக நீங்கள் கருதும் யோகிகள் கூட சாப்பிடுகிறார்களே, சாப்பிடாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக கடவுளை அடையலாமே? என்று கேட்டதற்கு, அவர்கள் உயிர் வாழ்வதற்கு தான் சாப்பிடுகிறார்கள், உடல் சுகத்திற்க்காக அல்ல. என்று சொன்னீர்கள்.


உடல் சுகத்திற்க்காக சாப்பிட கூடாது என்றால், அவர்கள் வெறும் நரம்ப மூலமாக க்ளுகோஸ் மற்றும் ஏற்றிக்கொண்டு தவமிருக்க வேண்டியது தானே? எதற்கு சாப்பிட வேண்டும்? 
உயிர் வாழ்வது மட்டும் தானே சாப்பிடுவதன் நோக்கம்? அதை செய்யலாமே|?

அல்லது, பரிசோதனைக்காக வேண்டி மட்டும் அப்படி ஒருவரை அழைத்து வாருங்களேன், மாதக்கணக்கில் அவ்வாறு இருந்து விட்டு தவமிருகட்டும்.  அவரை கடவுள் என்று நான் ஒப்புக்கொள்கிறேனே.. கடவுளாவது மண்ணாங்கட்டியாவது என்று பிடரில் கால் அடிக்க ஓடுவாரா மாட்டாரா?


மேலும், quantum தியரி, scattering எபிபிச்ட் என்றெல்லாம் படம் காட்டிய நீங்கள், செக்ஸ் வைத்தல் கடவுள் தன்மையை அடைய முடியாது என்பதையும் இந்த விஞ்ஞான தியரிகள் வாயிலாக விளக்க வேண்டியது தானே?

செக்ஸ் வைத்தால் கடவுளை நெருங்க முடியாது - இதோ விஞ்ஞான காரணங்கள். என்று சொல்ல வேண்டியது தானே?

சரி அதுவும் போகட்டும். செக்ஸ் வைப்பது மட்டும் தான் உலக தேவையா? உணவு உண்பது மட்டும் தான் இலக தேவையா?
உடை அணிவதும் கூட தானே உலக தேவை/

கடவுளை அடைய வேண்டும் என்றால் உடைகளையும் துறக்க வேண்டும் என்று சொல்லி ஒரு கூறு கெட்ட கூட்டம் அலைகிறதே, உங்கள் கருத்துப்படி அவர்கள் எல்லாம் மகான்கள், யோகிகள் தானே?


அனைத்தையும் துறந்தால் தான் கடவுளை அடைய முடியும். ஆகவே செக்ஸ் செய்வதை துறக்க வேண்டும், உணவு கூட ஆசைக்காக உண்ணக்கூடாது , உயிர் வாழ்வதற்காக மட்டும் தான் உண்ண வேண்டும் என்றெல்லாம் தத்துவம் (?) பேசும் நீங்கள், உடை குறித்தும் இதே நிலையை தானே எடுக்க வேண்டும்?


உடை அணிவது என்பது உலக நடைமுறை, உலக ஆசை, உடை அணியாமல் இருந்தால் உயிர் ஒன்றும் போய் விடாது, ஆகவே மனித கான்சியச்னஸ் என்பதை விட்டு விலகி அந்த பிரமத்தின் கான்சியசை ஆடை வேண்டும் என்றால் அனைவரும் நிர்வாணமாக உலா வாருங்கள் என்று தானே சொல்ல வேண்டும்? 


உணவு குறித்து நீங்கள் செய்த experimentation ஐ உடை குறித்தும் செய்தி சாதனை படைக்க வேண்டியது தானே?


ஆக இதற்க்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். செக்ஸ் செய்தால் ஒருவனால் பிரமத்தை அறியவே முடியாதா? முடியவே முடியாதா? ஒரு முறை செக்ஸ் வைத்தால் கூட அறிய முடியாத? அதற்குரிய காரணங்கள் என்ன?
இதே அளவுகோலை உடை விஷயத்தில் ஏன் கொடுக்க கூடாது?


அடுத்து, முந்தைய உங்கள் பதிவில், கடவுள் வேறு தெய்வங்கள் வேறு, கடவுள் என்று ஒருவரை வணங்குகிறோம், தெய்வம் என்று பலரை வணங்குகிறோம் என்றெல்லாம் சொன்னீர்களே.,

அதற்கப்புறம் சொன்னீர்களே, பல கடவுள்களை வணங்குகிறோம் என்று...ஒரு திருத்தம் சொல்கிறேன்...மாற்றிக் கொள்ளுங்கள்...பல கடவுள்கள் அல்ல...ஒரு கடவுளை நம்புகிறோம்..ஆனால் அந்தக் கடவுளை வழிபடுவதில்லை...அறிய முற்படுகிறோம்...ஆனால் பல தெய்வங்களை வணங்குகிறோம்...தெய்வத்திற்கும், கடவுளிற்க்கும் வேறுபாடு உண்டு...தெய்வம் என்பது ஆங்கிலத்தில் சொல்லப்படும் deity. அமானுஷ்ய சக்திகள் பெற்றஒரு குறிப்பிட்ட செயலுக்கோஇயற்கை சக்திக்கோ அதிபதியான ஒரு நபர். கடவுள் என்பவர் God. இந்து மதத்தைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் Ultimate Reality - "அடிப்படை உண்மை". 



இது குறித்தும் பல கேள்விகள் உள்ளன. அணிதையும் statement களாக சொல்லி கொண்டு செல்கிறீர்களே தவிர, இது எந்த அளவிற்கு முட்டாள்தனமானது, எந்த வகையிலெல்லாம் முரண்பாடுகள் கொண்டது என்பதையெல்லாம் சிந்திக்க மறுக்கிறீர்கள்.


மேற்கண்ட உங்கள் கருத்துக்களை தனித்தனியாக பிரித்து பார்ப்போம்.


ஒரு கடவுளை நம்புகிறோம்..ஆனால் அந்தக் கடவுளை வழிபடுவதில்லை



ஆனால் பல தெய்வங்களை வணங்குகிறோம்



ஒரு கடவுளை நம்புவீர்களாம், ஆனால் வணங்க மாட்டீர்களாம். ஏன்? ஒரு கடவுள் தான் உங்களை படைத்தார் என்று நம்புகிற நீங்கள், அவனை ஏன் வணங்க மாட்டீர்கள்?

பல தெய்வங்களை வணங்குவீர்களாம். ஏன்? உங்களை படிக்காத சிலரை நீங்கள் ஏன் வணங்குகிறீர்கள்?


படைத்ததை வணங்காமல் இருப்பதற்கும் படைக்காததை வணங்குவதற்கும் உள்ள அறிவுப்பூர்வமான விளக்கம் என்ன?

கடவுளை வணங்கினால் அது எப்படி தவறு? தெயவத்தை வணங்காமல் இருந்தால் அது எப்படி தவறு? இவற்றை உங்கள் இதிகாசம், வேதம் உபநிஷத்துகள் வாயிலாக ஆதாரத்துடன் சொல்லவும்.

வெறும் statements  கேட்க நான் வரவில்லை. என்பதை மீண்டும் நினைவுப்படுத்துகிறேன்.



அமானுஷ்ய சக்திகள் பெற்றஒரு குறிப்பிட்ட செயலுக்கோஇயற்கை சக்திக்கோ அதிபதியான ஒரு நபர்



என்று தெய்வத்திற்கு இலக்கணம் சொல்கிறீர்கள்.


இதன் மூலம் கடவுளுக்கு எந்த சக்தியும் இல்லை, தெய்வத்திற்கு மட்டும் தான் இந்த மானுஷிய சக்திகள் உள்ளன என்று சொல்ல வருகிறீர்கள்.


இதையும் உங்கள் இதிகாசம், வேதம் உபநிஷத்துகள் வாயிலாக ஆதாரத்துடன் சொல்லவும்.



அதாவது, அமானுஷிய சக்தி, இயற்க்கை சக்திக்கு மேல் உள்ள ஒரு சக்தி என்பது பல தெய்வங்களுக்கு உண்டு, அந்த ஒரு கடவுளுக்கு கிடையாது என்பதை உங்கள் வேத ஆதாரத்துடன் சொல்லுங்கள்.


சரி, ஒரு கடவுள் என்பது நீங்கள் சொல்கிற அந்த கான்சியச்னஸ், அதை விட்டு விடுவோம். பல தெய்வங்கள் (deity ) என்கிறீர்களே, அவை எங்கே இருக்கின்றன?

இன்று கல்லையும் மண்ணையும் சூரியனையும் சந்திரனையும், கடலையும், நெருப்பையும், பூமியையும், வானத்தையும், மாட்டையும் பாம்பையும் குரங்கையும் வணங்குகிறார்களே, இவை தான் நீங்கள் சொல்கிற பல தெய்வங்களா?

இல்லை என்றால் ஏன் இல்லை? நீங்கள் சொல்கிற அமானுஷ்ய சக்திகள் பெற்றஒரு குறிப்பிட்ட செயலுக்கோஇயற்கை சக்திக்கோ அதிபதியான ஒரு நபர்
என்கிற இலக்கணம் மேலே உள்ள  பட்டியலில் உள்ள எவருக்கும் இல்லையா?

வேறு எவரிடம் தான் உள்ளது? நீங்கள் சொல்லும் யோகிகளுக்கு உள்ளதா?

உள்ளது என்றால் அவர்கள் எங்கே?

என்கிற இந்த கேள்விக்கு 

மனிதன் கடவுளாவது அவன் இறப்பின் பின்னால் என்று பழைய அஞ்சலில் குறிப்பிட்டு இருந்தேன்..ஆனாலும் நீங்கள் அதை வாசிக்காமல் எங்கே இவனைக் காட்டு, அவனைக்க் காட்டு என்கிறீர்கள்...முதலில் கடவுள் ஆவான் என்றால் என்ன என்பதே உங்களுக்கு விளங்கவில்லை என்பது தெளிவாகிறது..

என்று கூறி, நான் ஏதோ தவறாக கேள்வி கேட்பது போல பேசுகிறீர்களே, 

கடவுள் குறித்து நான் கேள்வி கேட்கவில்லை, நீங்களே ஒப்புக்கொண்ட தெய்வங்கள் இருக்கின்றனவே? அவைகளுக்கு அமானுஷிய சக்திகள் உள்ளன என்று நம்புகிறீர்களே, இயற்கையை கட்டுப்படுத்துகிற சக்தி கூட இருக்கிறது என்று நம்புகிறீர்களே, அவைகளை காட்டுங்கள். என்று தான் கேட்கிறேன்.

இயற்க்கைக்கு கூட அதிபதியான அந்த தெய்வம் எங்கே? அதுவும் இறந்து போன மனிதன் தானா? இறந்து போன பிறகு தான் அவன் தெய்வமும் ஆவான?

உங்கள் வாதப்படி இறந்து போன பிறகு தெய்வம் ஆகிறானா அல்லது கடவுள் ஆகிறானா?

தெய்வம் ஆகிறான் என்றால், ஒருவன் இறந்து விட்ட பிறகு அவனது கான்சியச்னஸ் அனைத்தும் செயல் இழந்து போகுமே அவன் எப்படி அமானுஷிய சக்திகள் பெற்று இயற்கையை கூட கட்டுப்படுதுவான்?

நீங்களே ஒப்புக்கொண்டது போல, ஒருவன் தூக்கத்தில் கூட, விழித்திருந்து செய்யும் செயல்களை செய்ய இயலாத அளவிற்கு பலகீனம் ஆகி விடும் அவனது கான்சியச்னஸ்,  அவன் இறந்த பிறகு எப்படி வேலை செய்யும்?

இறந்து போன அனைத்து மனிதனுமே இது போன்ற தெய்வமாகி விடுவானா அல்லது ஒரு சிலர் தான் ஆகிறார்களா? அனைவருமே ஆகி விடலாம் என்றால் ஒரு நாயும் பன்றியும் கூட ஆகுமா?
ஒரு சிலர் தான் ஆவார்கள் என்றால் அவர்கள் யார் யார்? அந்த பட்டியலை தாருங்கள்.

ஆக, கடவுள் தன்மை என்றால் என்ன என்பதை கடுகளவு கூட புரியாமல், 
கடவுள் ஒன்று, தெய்வம் பல.
கடவுள் வேறு தெய்வம் வேறு,
கடவுளை வணங்க மாட்டேன், தெயவத்தை வணங்குவேன், 
தெய்வங்கள் பல வகை உண்டு, 
அதற்கு அமானுஷிய சக்தி உண்டு, 
ஆனால், கடவுளை வணங்க மாட்டேன், 
ஆனால் கடவுள் தான் பரம்பொருள், 
அது தான் ஆதி முதல் உள்ளது, 
அது தான் நம்மை படைத்தது, 
ஆனால் கடவுளை அறிய தான் போகிறேன், வணங்க மாட்டேன், 
தெயவத்தை தான் வணங்குவேன், 
செத்து போய் விட்டால் அனைவரும் தெய்வம் ஆகலாம், 
அனைவருமே அமானுஷிய சக்தி பெறலாம், 
ஆனால் அனைவரும் கடவுள் ஆக முடியாது,
ஆனா, இவ்வாறு தெய்வம் ஆக வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் உணர்சிகளை கட்டுப்படுத்த வேண்டும், 
ஆசைக்காக சாப்பிடவே கூடாது, ஆசைப்பட்டு ஒரு வாய் இட்லி சாப்பிட்டால் கூட அவனது தெய்வ தன்மையை அவன் இழந்த விடுவான், 
செக்ஸ் வைக்கவே கூடாது, ஒரு நாள் , ஒரு முறை வைத்தால் கூட அவன் தெய்வ நிலையை அடைய முடியாது, 
பிறகு யாரும் அவனை வணங்க மாட்டார்கள்

என்றெலாம் பேசி, கடவுள் நம்பிக்கையில் புது சரித்திரத்தையே (??) படைக்கிற நீங்கள் கடவுளை ஒரு மந்திரவாதி போல காண்கிறீர்களா/ அல்லது கடவுள் என்பது ஒருவன் தான், அவன் தான் அனைத்தையும் படைத்து கண்காநிதுக்கொண்டு இருக்கிறான், வேறு எந்த மனிதனும், கல்லும், மண்ணும், நீரும் நெருப்பும், நாயும் பூனையும் கடவுள் அல்ல என்று சொல்கிற சித்தாந்தம் கடவுளை மந்திரவாதியாக பார்க்கிறதா?

ஆதி முதலே கடவுளின் கான்சியச்னஸ் இருக்கிறது என்று சொல்லி விட்டீர்கள். நானும், ஆதி முதலே கடவுள் இருக்கிறார் என்று சொலி விட்டேன்.
ஆக, கான்சியச்னஸ் முதலில் எப்படி தோன்றியது எனபதை நீங்கள் ஆதாரத்துடன் விளக்காதவரை நானும் கடவுளின் தோன்றலுக்கு ஆதாரம் காட்ட வேண்டியதில்லை.

அதே சமயம், நீங்கள் ஆதாரம் தர வேண்டிய கேள்விகள் இன்னும் எக்கச்சக்கம் உள்ளன.

  1. கான்சியச்னஸ் என்பது தனித்து இயங்கும் என்றீர்கள். இதை மறுத்து நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் இல்லை.
  2. கனவில் கூட கான்சியச்னஸ் இருக்கிறது என்று முதலில் சொல்லி விட்டு அதையே பிறகு மறுத்து பேசி நீங்கள் முரண்பட்டது குறித்து நான் எழுப்பிய கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.
  3. விழித்திருக்கிற போது செயல்பட கூடிய அளவிற்கு உறங்குகிற போது எனது கான்சியச்னஸ் செயல்படவில்லையே என்கிற எனது கேள்விக்கு பதில் இல்லை.
  4. உறங்கும் போதே பாதி செத்து விட்ட எனது கான்சியச்னஸ், நான் கோமாவிற்கு சென்று விட்டால் எப்படி செயல்படும்? என்பதற்கு கனவு காண்கிறதே என்கிற ஒரு சப்பை கட்டை தவிர வேறு பதில் இல்லை.
  5. கொமாவுக்கே இந்த நிலை என்றால் நான் இருந்து போன பிறகு எனது கான்சியச்னஸ் எப்படி செயல்படும்? என்பதற்கு எந்த பதிலும் இல்லை. ஆனால், இதற்கு மாற்றமாக, இதற்கு நேர் முரணாக, உயிருடன் இருக்கும் போது சாதாரணமாக செயல்படும் நமது கான்சியச்னஸ், செத்து போன பிறகு மிகவும் வீரியத்துடன், இயற்கையை கட்டுப்படுத்தும் அளவிற்கு கூட சக்தி பெற்று செயல்படும் என்று முரண்பட்டு தான் உங்களால் பேச முடிந்தது.
  6. தனித்து இயங்க முடியாது என்று விஞ்ஞானம் சொல்கிற போது நான் செத்து போன பிற்பாடு எனது கான்சியச்னஸ் மட்டும் தனித்து எப்படி இவ்வளவு வேலைகளை செய்யும் என்பதற்கு எந்த பதிலும் இல்லை.
  7. சரி அப்படி செய்யும் என்றால், சாம்பிள் க்காக, நான் தூங்கி கிடக்கிற போதாவது சில அமானுஷிய வேலைகளை எனது கான்சியச்னஸ் செய்து காட்டியிருக்க வேண்டுமல்லவா?  அதை காட்டி உங்கள் வாதத்தை நிறுவுங்களேன் என்று கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை.
  8. நான் என்கிற எனது கான்சியச்னஸ் எனது மூளை செயல்பட்டுக்கொண்டு இருக்கிற போது தான் active ஆக இருக்கும். எனது மூளை செயல் இழக்க துவங்கினால் அதுவும் செயல் இழந்து போகும். இதை மறுப்பதாக இருந்தால், மூளை செயல் இழந்த நிலையில் தூங்கி கொண்டிருக்கும் நான், விழித்திருக்கும் போது செய்கிற வேலைகளை ஏன் செய்ய முடியவில்லை என்கிற கேள்விக்கும் இதுவரை பதில் இல்லை.

தவிர, இன்னும் மிச்சமாக உள்ள கேள்விகள்

  • செக்ஸ் வைத்தால் எப்படி கடவுளை அடைய முடியாமல் போகிறது? எத்தனை முறை வைத்தால் அடைய முடியாமல் போகும்? ஒரு முறை வைத்தாலே போதுமா?
  • சுகத்திற்காக ஒரு இட்லி சாப்பிட்டாலும் நம்மால் தெய்வ நிலையை அடையவே அடையவே முடியாதா?
  • அல்லது ஒரு நேரத்திற்கு இரண்டு இட்லி வரை சாப்பிடலாம், அதற்கு மேல் சாப்பிட்டால் தெய்வ நிலை அடைய முடியாது என்கிறீர்களா?
  • அப்படியானால், சுகத்திற்க்காக அல்லாமல் வெறும் உயிர் வாழ்வதற்கு மட்டும் இவ்வாறு சாப்பிடக்கூடிய ஒருவரையாவது எனக்கு காட்டுங்களேன்.
  • உலக தேவைகள் அனைத்தையும் களைந்தால் தான் தெய்வம் ஆக முடியும் என்றால் உடைகளையும் அல்லவா களைய வேண்டும்? உயிர் வாழ உடை அவசியமில்லையே, ஆகவே அதையும் பிரசாரம் செய்யுங்களேன்.
  • உங்களை படைத்தது ஒரு கடவுள் என்று நம்பி விட்டு அதை நான் வணங்க மாட்டேன் அறிய மட்டுமே முயற்சி செய்கிறேன் என்று சொல்வது நன்றி கெட்டதனமல்லவா?
  • உங்களை படைக்காத அந்த பல தெய்வங்களை வணங்குவீர்களாம், உங்களை படைத்த அந்த ஒரு கடவுளை வணங்க மாட்டீர்களா?
  • உங்களை படைக்காத அந்த பல தெய்வங்களுக்கு இயற்கையை கட்டுப்படுத்துகிற சக்தி இருக்கிறதாம், உங்களை படைத்த அந்த ஒரு கடவுளுக்கு இந்த சக்தி இல்லையா?
  • உங்களுக்கு வயிற்று வலி தீர வேண்டும் என்றால் கடவுளிடம் பிரார்த்தனை செய்வீர்களா அல்லது தெய்வத்திடம் செய்வீர்களா? 

இவை போக..

  • உங்கள் வேத நூல்களில் இருந்து கடவுள் வேறு , தெய்வம் வேறு என்பதற்கான ஆதாரங்களையும்,
  • கடவுளை வணங்க தேவையில்லை, அறிய முயற்சி செய்தால் மட்டும் போதும் என்பதற்கான வேத ஆதாரங்களையும்,
  • தெய்வங்களை வணங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்களையும்,
  • தெய்வங்களுக்கு அமானுஷிய சக்தி இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களையும்,
  • தெய்வங்களுக்கு இயற்கையை கட்டுப்படுத்துகிற சக்தி கூட இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தையும்,
  • செக்ஸ் வைத்துக்கொண்டால் தெய்வ நிலையை அடைய முடியாது என்பதற்கான ஆதாரத்தையும்,
  • உலக தேவை அனைத்தையும் துறந்தால் தான் தெயவத்தை அடைய முடியும், அல்லது கடவுளை அறிய முடியும், உலக தேவை எதையாவது மிச்சம் வைத்தால் கடவுளை அறிய முடியாது என்பதற்கான ஆதாரத்தையும்,
உங்கள் வேதங்கள், உபநிஷத்துகள், இதிகாசங்களில் இருந்து பாகம் பக்கம், வசன என்னுடன் ஆதாரமாக சுட்டிக்காட்டவும்.
உங்கள் மதத்தின் கடவுள் கொள்கை குறித்து நீங்கள் எதை சொன்னாலும் அதை உங்கள் மத நூல் தான் சொல்ல வேண்டும் என்பதால் மேலே நான் கேட்டிருக்கிற கேள்விகள் அனைத்திற்கும் ஆதாரத்தை காட்டுங்கள்.

பல கேள்விகள் கேட்கப்பட்டிற்கும் நிலையில் எந்த ஒன்றையும் விடாமல் அனைத்திற்கும் பதில் சொல்லி உங்கள் அறிவுப்பூர்வமான கடவுளை நிலைநாட்டுங்கள். 
உங்களுக்கு இனியும் நான்கு வாய்ப்புகள் மிச்சமுள்ளன. நான் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்துமே பட்டியலாக என்னிடம் உள்ளன. நினைவில் கொள்ளவும்.

வஸ்ஸலாம்