சனி, 24 மே, 2014

எந்த முகத்தை வைத்துக்கொண்டு ராஜபக்சவை எதிர்க்கிறீர்கள்?


மோடிக்கு வாக்களித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்போம், ஆனால் ராஜபக்ச எங்கள் நாட்டில் காலடி வைத்தால் போர்க்கொடி தூக்குவோம்.

அட சிந்தனை சிற்பிகளே !

நீங்கள் என்ன காரணத்திற்காக ராஜபக்சவை எதிர்க்கிறீர்களோ, அதே போன்ற காரணங்கள் மோடியிடம் இல்லையா? 
அதை விட ஒரு படி மேலான காரணங்கள் மோடியிடம் இல்லையா?

அவர் உங்கள் பார்வையில் தமிழ் இன அழிப்பை நடத்தியவர் என்றால் இவர் குஜராத்தில் நடத்திய இன அழிப்பை என்னவென்று சொல்வது?

காரணங்கள் சமமாக இருக்கையில் ஒருவரை நாட்டின் பிரதமராக ஆக்குவோமாம், இன்னொருவரை நம் நாட்டில் காலடியெடுத்து வைக்கக்கூட அனுமதிக்க மாட்டோமாம்..

என்னாங்கடா உங்க லாஜிக்..?

மோடியை பிரதமராக்கிய நீங்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ராஜபக்சவை எதிர்க்கிறீர்கள்?

ராஜபக்சவை எதிர்க்கும் நீங்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மோடியை பிரதமராக்கி அழகு பார்க்கிறீர்கள் ?

மோடி பிரதமராகலாம் என்றால் ராஜபக்ச இந்தியாவின் ஜனாதிபதியாக கூட ஆகலாம் ! அது தான் நியாயமானவனின் கூற்று !!

தமிழன் மானமிழந்தவன் மட்டுமல்ல, அறிவையும் இழந்தவன் தான் என்கிற கூற்றில் உண்மையில்லை என்றால் நியாயப்படி அவன் ராஜபக்சவுக்கு சிகப்பு கம்பள வரவேற்பை தான் அளிப்பான் !!

தோல்வி உண்டென்றால் வெற்றியும் உண்டு


தாங்கவே இயலாத துன்பம் நமக்கு நேர்ந்து விட்டதாய் கருதுவோர் அதையும் கூட சகித்துக் கொண்டால் அல்லாஹ் அவருக்கு உயரிய சொர்க்கத்தை வழங்குவான்.

அல்லாஹ் கூறுகிறான் : நான் என் அடியானை, அவனுக்கு விருப்பமான இரு பொருட்களை (கண்களைப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் அதைப் பொறுத்துக் கொண்டால், அவற்றுக்குப் பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (நூல் : புகாரி 5653)

மிகப்பெரிய சோதனையை தந்த இறைவனுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை தருவது சிரமமான காரியமில்லை..!
எதிர்பாராத தோல்விகளை அல்லாஹ் நமக்கு தருகிறான் என்றால் நாம் கற்பனையிலும் எண்ணிடாத அளப்பரிய வெற்றிகளையும் அவனால் தர முடியும் என்கிற அர்த்தம் அதிலேயே அடங்கித்தான் உள்ளது ..!!

இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமைகின்றன. இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இது கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது.
அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. (நூல் : முஸ்லிம் 7692)

Suggestion to Mr.Owaisi


These media just wanted to bring Mr.Asaduddin Owaisi in front and create an intellectual scene where-in he is forced to reply or not, for questions raised against muslims or questions for modi. 

And the amount of space they give for him to answer is very much limited. Owaisi is not being given a free space at all.. Watching many of such media interviews, we can understand. 

It is evident that the only nation-wide strong front end voice for muslims in the parliament is Mr. Owaisi which the media knew and these media people play a smart game.. making him face certain questions and suppressing him whenever he goes with strong facts and figures against BJP or Modi..

I suggest, Mr.Owaisi, instead of participating in such group discussions, choose and participate only in one-to-one debates..

There were instances in Times Now, when he had participated in few one-to-one debates, which were much more effective.

In the next 5 years, it is important that Mr.Owaisi participates in more of such debates instead of falling prey to these one-sided group discussions !

இல்லாத இணையை நம்புவது எப்படி பாவமாகும்?


சூனியம் என்பதே இல்லை என்றால் இல்லாத சூனியத்தையா அல்லாஹ் பாவமான செயல் என்கிறான்? என்று சிலர் கேள்வியெழுப்பி வந்தனர்.

இல்லாததை இல்லாததாகவே காட்டினால் அது பாவமில்லை.
இல்லாததை இருப்பது போன்று காட்டுவது தான் பாவம்.

மேஜிக் நிகழ்ச்சி நடக்கிறது, அதில் காட்டப்படும் காரியங்கள் நமக்கு வியப்பை ஏற்படுத்தும் காரியங்கள் தான். ஆனால் அவை கற்பனைக்கே எட்டாத அற்புதங்கள் என்கிற ரீதியிலா செய்யப்படுகின்றன? இல்லை.

மேஜிக் ஒன்றை செய்கிறார் என்றால் அது உண்மையில் அற்புதமில்லை, ஏதோ தந்திர வித்தை தான் அதில் ஒளிந்துள்ளது என்று பார்ப்பவரும் நம்புகிறார், அதை செய்பவனும் அதை வெளிக்காட்டும் விதத்தில் தான் வித்தை காட்டுவான்.

இல்லாதததை அற்புதத்தில் கொண்டு வருகிறேன் என்று அவன் செய்து காட்டுவது கிடையாது.

இது தான் சூனியம். இந்த சூனியம் பாவமில்லை. காரணம் இது அற்புதமில்லை என்று செய்பவனும் ஒப்புக் கொள்கிறான், பார்ப்பவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.

அதுவே, சாய்பாவா வாயிலிருந்து லிங்கம் எடுத்தார் என்றால் இதுவும் சூனியம் தான், ஆனால் இங்கே அதை செய்த சாய் பாபா அதை வித்தை என்று கூறி செய்யவில்லை, இல்லாததை இருப்பதாக காட்டும் அற்புதத்தை செய்து காட்டுவதாக தான் சொன்னார்.
பார்ப்பவர்களும் அவர் அற்புதம் செய்வதாக தான் நம்பினர்.
ஆகவே இந்த வகை சூனியம் என்பது பாவம்.

சூனியம் என்பது ஒன்று தான், என்ன நம்பிக்கையில் அதை செய்கிறோம் என்பதைப் பொறுத்து அது பாவமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

இது ஒரு பக்கமிருக்க, இவர்கள் எழுப்பிய‌ இதே வாதத்தை இவர்களை நோக்கி நாம் திருப்பி வைக்கிறோம்.

அல்லாஹ் தமக்கு இணை வைப்பதை மிகப்பெரிய பாவமான காரியம் என்கிறான்.
இதன் மூலம் இவர்கள் என்ன புரிகிறார்கள்?

அல்லாஹ்வுக்கு இணையான ஒன்றும் உலகில் இருக்கிறது அதனால் தான் அல்லாஹ்வுக்கு இணையாக எதையும் கருதாதே என்கிறான் என்று சொல்வார்களா?

இல்லாத சூனியம் எப்படி பாவமாகும் என்று மேதாவித்தனமாக கேள்வி கேட்பவர்களிடம், இல்லாத இணை வைப்பு எப்படி பாவமாகும் என்கிற கேள்வியை நாம் திருப்பிக் கேட்கிறோம் !

ஆக, அல்லாஹ்வுக்கு இணையில்லை தான். இணையிருப்பதாக நீ நம்பாதே என்பது தான் அல்லாஹ்வின் கட்டளை

சூனியத்தால் எதுவும் செய்ய முடியாது தான். செய்ய முடியும் என்று நீ நம்பாதே என்பது தான் அல்லாஹ்வின் கட்டளை.

இல்லாத இணை துணை இருப்பதாக நம்புவதும் பாவம்.. இல்லாத சூனியம் இருப்பதாக நம்புவதும் பாவம் !

புரிய வேண்டிய விதத்தில் புரிந்தால் மார்க்கம் எளிமையானது !

ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது !



மதக்கலவரங்களின் தூண்டுதலால் மனித உயிர் கருவறுக்கப்பட்டால் கூட பழி போட ஆளும் காங்கிரஸ் அரசுகள் இருந்தன..

மாங்காய் பறிப்பது போல் மரத்திலிருந்து குண்டுகளை பறித்து, ஆளும் அரசின் கையாலாகாத்தனத்தால் இது விளைந்தது என்று பத்திரிக்கைகளைக் கொண்டு எழுத வைக்க முடிந்தன.

போலியாக என்கவுன்டர் நடத்தி அந்தப் பழியையும் செத்தவன் தலையிலேயே இட முடிந்தது.

பழிகளை சுமந்து கொள்ள இந்தியன் முஜாஹிதீன் என்கிற இல்லாத அமைப்பு இருந்தது.

ஆனால் அப்போதெல்லாம் ஆட்சி அவர்களிடம் இல்லை.

குண்டுவெடிப்புகளின் சத்தத்தினூடே இன்று ஆட்சி பிடித்தாயிற்று.

இனி நாட்டில் இது போன்ற மதக்கலவரங்களோ குண்டுவெடிப்புகளோ முன்பு நடந்தது போன்று அத்தனை பட்டவர்த்தனமாய் நடந்து விடாது.
ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது !

மோடி செல்லும் இடங்களில் மரத்தில் குண்டுகளை கட்டி விட வேண்டிய அவசியம் இனி இல்லை, ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது !

குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி அதை இந்தியன் முஜாஹிதின் தலையில் இனி இட முடியாது.. ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது !

அந்த இந்தியன் முஜாஹிதீன் தலைவரை கைது செய்து அந்த இயக்கத்தையே கலைத்து விட முடியாத கையாலாகா அரசா உன் பாஜக அரசு? என்று பத்திரிக்கைகள் கேட்டு விடும் என்கிற அச்சம் காரணமாக அந்த போலி இயக்கத்திற்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் விடுமுறை வழங்கப்படும்.

ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது !

ராமர் கோவிலை கட்டுவோம் என்றும் பொது சிவில் சட்டங்களை கொண்டு வருவோம் எனவும் சாத்தியமே இல்லாத முழக்கங்களை முழங்கினால் பாமர ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறலாம் என்கிற வகையில், ஆட்சியில் இல்லாத போது அவற்றை முழங்க முடியும்.

இவை எதுவுமே இனிமேல் அவசியமில்லை.. ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது !

இந்தியா என்றைக்கும் அமைதியான நாடு. அமைதியை சீர்குலைக்க இடையில் சில வருடங்கள் சில எதிர்கட்சிகள் இருந்தன.
இனிமேல் அந்த எதிர் கட்சி இல்லை !
நாடு வழக்கம் போல் அமைதியாகவே இருக்கும் !!

அதையும் மீறி சிறுபான்மையினரின் உயிருக்கோ உடமைக்கோ உரிமைக்கோ சிறு அசம்பாவிதம் நேர்ந்தாலும், ஆளும் மத்திய அரசின் சட்டையை அவர்களுக்கு வாக்களித்த பாமர ஹிந்து சமூகமே பிடித்து உலுக்கி விடும் !

சிறுபான்மையினரின் வேதனையில் பெரும்பான்மையினரும் பங்கு கொண்டு விட்டால் நாடு தாங்காது என்பதை முன்னாள் எதிர் கட்சியினர் உணர்ந்து தான் இருப்பார்கள் ..

ஏன்னா ஆட்சியை பிடித்தாகி விட்டது !!

பாடம் கற்க வேண்டிய பெயர்தாங்கிகள்


மமகவின் மயிலாடுதுறை தோல்வி குறித்து தனிப்பட்ட எந்த விமர்சனமும் நமக்கு கிடையாது.

அதிமுகவிற்கு ஆதரவான அலை தான் எல்லா தொகுதியிலும் திமுகவை தோல்வியடைய செய்திருக்கின்றன, மயிலாடுதுறையிலும் அது தான் நடந்திருக்கிறது. 

அதே சமயம், மமகவானாலும், எஸ்டிபிஐயானாலும், முஸ்லிம் லீகானாலும் அனைத்துமே இஸ்லாத்தின் அடிப்படைக்கு புறம்பாக நின்று தான் அரசியல் செய்கின்றன‌ என்பதில் இப்போதும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

நாம் பலமுறை எடுத்துச் சொன்னதைப் போல, இக்கட்சிகளினால் இஸ்லாமிய சமூகத்திற்கு சிறிதேனும் அவப்பெயர் தான் உருவாகியுள்ளதே அல்லாமல், கிஞ்சிற்றும் நன்மை விளையவில்லை.
அதற்கான அறுவடையை பாசிச ஆதரவாளர்கள் பெற்றுள்ளனர்.

ஒரு தொகுதி அரசியலுக்காக அம்மாவிடமிருந்து விலகி அய்யாவிடம் தஞ்சம் புகுந்து, இன்று உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா என வருந்துபவர்கள், என்றைக்கும் கொள்கைக்காக அரசியல் நடத்தப்போவதில்லை என்பதை தான் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய சமூகத்தின் கண்ணியம் இவர்களால் ஒரு போதும் காப்பாற்றப்படாது என்பதை மக்கள் விளங்கிக் கொண்டு விட்ட நிலையில், தங்களது இருப்பை மீண்டுமொரு முறை இவ்விரு கட்சிகளும் சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்.

கொள்கையை விற்ற காசில் கிடைக்கும் அற்ப பதவி சுகங்கள் நமக்கு வேண்டாம் என்கிற சபதத்தை இந்த தேர்தல் தோல்வியிலிருந்து பெறக்கூடிய பாடமாக இவர்கள் கருதி தங்களை மாற்றிக் கொண்டாலே தவிர, இவர்கள் மென்மேலும் இழிவையே சந்திப்பார்கள்.

ஏற்றிருக்கக்கூடிய கொள்கையை தன் உயிரை விடவும் பெரிதாய் மதிக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்குங்கள்,
அதை அஸ்த்திவாரமாக இட்டு அதில் இயக்கம் காணுங்கள், அதில் ஏற்படும் சமூக ஒற்றுமைக்கு தான் அல்லாஹ் வெற்றியை தருவான் என்பதை இனியாவது புரியுங்கள்.

அந்த வெற்றி மகத்தான வெற்றியாக இருக்கும், ஒட்டு மொத்த சமுதாயமும் திரண்டு வந்து தரக்கூடிய வெற்றியாக அது இருக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறோம் !

அத்துடன், இஸ்லாத்தின் ஆறாவது கடமையை சரி வர நிறைவேற்றாத முஸ்லிம் லீக் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்பதையும்,
ஃபர்ளில் குறை வைத்த குற்றத்திற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரும்படியும் இதன் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம் !!

வென்றது பாஜக !


மோடி அலை என்பது எப்படி நேற்று வரை பொய் பிரச்சாரமாக பார்க்கப்பட்டதோ, அதே பொய் தகவலாய் தான் இன்றும் நிற்கிறது.

காரணம், 300 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் தகுதியை அக்கட்சி பெற்றாலும், ஒட்டு மொத்த தேசிய அளவிலான வாக்குகளில் 32 சதவிகிதம் தான் பாஜகவினருக்கு உரித்தானது.

அதாவது, நாட்டில் அதிகமானோர் மோடி ஆட்சிக்கு வரக் கூடாது என விரும்பியவர்கள் தான்.

இந்தியாவின் ஜனநாயக முறை என்பது கேலிக்கூத்தானது என்பதால் அதிகமானோர் வேண்டாம் என்று கூறியும் கூட ஒரு கட்சியால் வெற்றி பெற முடியும், ஆட்சியும் புரிய முடியும் என்பதற்கு இந்த தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.

மோடி ஆட்சிக் கட்டிலில் அமரக்கூடாது எனக்கூறி எதிர்த்தவர்களெல்லாம் ஓரணியில் நிற்காது சிதறிப்போனது மோடிக்கு சாதகமாய் போனது.
எதிர்ப்பது மட்டும் போதாது, சாதுரியத்துடன் எதிர்க்க வேண்டும் என்கிற பாடத்தை அரசியலின் கைக் குழந்தை ஆம் ஆத்மி கட்சி இன்னேரம் உணர்ந்திருக்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெற்று விடலாம் என்கிற வெற்றி கணக்கை துவக்கம் முதலே முதல்வர் ஜெயலலிதா கொண்டிருந்தது அவரது தன்னம்பிக்கைக்கும் அரசியல் சாதுரியத்திற்கும் எடுத்துக்காட்டு.

செய்வீர்களா செய்வீர்களா ... கோஷம் கேலியாக பார்க்கப்பட்டாலும் ஜெயாவின் அரசியல் சாதுரியத்தில் அதுவும் ஒரு பாகம் என்பது மறுக்க இயலாத உண்மையாகி விட்டது.

மாநில அளவில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனை, விலை வாசி உயர்வு போன்ற எதுவும் மக்கள் மனதில் நிலைத்திருக்கவில்லை என்பதும், பொது ஜனத்தின் நினைவாற்றல் குறைவினை சாதகமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியமும் அதிமுகவிற்கு உள்ளது என்பதும் அதிமுகவின் தேர்தல் வெற்றி உணர்த்துகிறது.

தேர்தலுக்கு பிறகு மோடியை திமுக ஆதரிக்குமா அல்லது அதிமுக ஆதரிக்குமா? என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு யாரும் எதிர்பாராத விடையொன்று கிடைத்திருப்பது தான் இந்த தேர்தல் முடிவு தந்திருக்கும் வியப்பின் உச்சம் !

வென்றாலும் மோடிக்கு ஆதரவளிக்க மாட்டேன் என்று கூறிய திமுகவிற்கு, அதை நிரூபிப்பதற்கான சூழல் ஏற்படவில்லை.
அது போல்,
வென்றால் ஆதரிக்கலாம் என்று ரகசியமாய் காய் நகர்த்திய அதிமுகவிற்கு அதற்கான அவசியமும் ஏற்படவில்லை.

காங்கிரஸின் கையாலாகா ஆட்சி, அதை சாமர்த்தியமாய் பயன்படுத்த தெரியாத மூன்றாம் அணி, காசுக்காக மோடி அலை என்கிற பொய் பிம்பத்தை உருவாக்கிய ஊடக வியாபாரிகள் என பல்வேறு காரிணிகள், பாஜக வரலாறு காணாத வெற்றியை காண வழி கோலியுள்ளது !

பாஜக வென்றது.. நாட்டின் ஜனநாயகமும் மதசார்பின்மையும் நட்டாற்றில் விடப்பட்டது !

துஆ செய்வோம்


நாளைய தினம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வேண்டி அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மறவாதீர் !

நமது ஈமானுக்கு தான் என்றைக்கும் இறுதி வெற்றி என்பதை நாம் எந்த நேரத்திலும் மறந்து விடக்கூடாது.

நமது பலகீனங்களை அறிந்தவன் அல்லாஹ் !

மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமர்ந்தால் அதனால் சிறுபான்மையினருக்கு ஏற்படும் கேடுகள் ஏராளம் என்பதை புரிந்து பாஜகவுக்கு எதிரான பலகட்ட பிரச்சாரங்களை, அரசியல் காய் நகர்த்தல்களையெல்லாம் இத்தனை நாட்களாய் செய்தோம்.

இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை, கடமையை செய்து விட்டு அதற்கான பிரதிபலனை உள்ளச்சத்தோடு அல்லாஹ்விடம் முறையிட்டால் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை வழங்குவான்.

அல்லாஹ் என்கிற மகத்தான சக்தியிடம் நாம் சரணடைந்து விட்டால் ஈருலகிலும் பாதுகாப்பு பெற்றோர் நாம் தான் என்பதை என்றைக்கும் நினைவில் கொள்வோம் !

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?
(2:107)

நோன்புக் கஞ்சி ஒற்றுமை


ஒற்றுமை நாடுவோரில் பெரும்பான்மையானோர் குறைமதியாளர்களாகவும் மார்க்கத்தில் உறுதியான பிடிப்பற்றவர்களாகவும் தான் இருக்கின்றனர்.

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்று கூடி பின் கலைவது என்பதெல்லாம் காலணா பெறுமானம் இல்லாத போலியான ஒற்றுமை.

இஸ்லாம் கூறும் ஒற்றுமை என்பது கொள்கைகளை இணைப்பது தானே தவிர, ஏதேனும் பொது நிகழ்ச்சியில் ஒன்று கூடி டீயும் பருப்பு வடையும் சாப்பிட்டு சலாம் கூறி பிரிவதல்ல !

அப்படி பார்க்கப்போனால், இது போன்ற போலி ஒற்றுமையை அரசியல்வாதிகள் தினம் தினம் உருவாக்கிக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

ஒரு படி மேலே சென்று, கட்டியணைத்து டிவிக்கு போஸ் கூட கொடுப்பார்கள்,
இவரை விட்டால் நாதியில்லை என்று எதிர் தரப்பு நபரை ஆஹா ஓஹோ என புகழக் கூட செய்வார்கள்.
அவையெல்லாம் இருவரிடையே நிஜமான ஒற்றுமைக்கு வழி கோலியதா?
இல்லவே இல்லை !
அவை சந்தர்ப்பவாத ஒற்றுமைக்கு தான் வழி வகுக்கும்.

சில நோக்கங்களுக்காக ஏற்படும் அந்த போலி ஒற்றுமை,வேறு சில நோக்கங்களுக்காக கலைந்தும் விடும்.

இஸ்லாமிய இயக்கங்களின் ஒற்றுமைக்கான ஒரே சாத்தியக்கூறு தவ்ஹீத் கொள்கை தான்.
இன்றைய அரசியல், தவ்ஹீதுக்கு எதிரானது.. இதிலேயே பல இயக்கங்கள் அவுட்.
தனி மனித புகழ்ச்சி தவ்ஹீதுக்கு எதிரானது
கப்ர் வணக்கம், கத்தம், கொடியேற்றம், மீலாது ஊர்வலம் போன்றவை தவ்ஹீதுக்கு எதிரானது..மாற்று மத கலாச்சாரங்கள் இஸ்லாத்திற்கு எதிரானவை.

இவை அனைத்திற்கும் எதிரான நிலையை எந்த அமைப்புகளெல்லாம் கொண்டிருக்கின்றனவோ அவை தான் ஒற்றுமையடைய முடியும்.

அல்லாமல், பிறை 1 இல் அனைத்து இயக்கமும் இஃப்தாருக்கு ஒன்று கூடி சலாம் சொல்லிக் கொள்ளுங்கள் என்று கூறி அழைத்தால், நோன்புக் கஞ்சி சூப்பர் என்று கூறி கலைந்து விடுவார்களே அல்லாமல்,
ஒரு சுண்டக்காய் ஒற்றுமையும் ஏற்படாது !

பிறை 1 இல் அனைவரும் கூட வேண்டும் என்கிற அழைப்பிலேயே, அத்தகைய ஒற்றுமை சாத்தியமில்லை என்கிற கருத்து ஒளிந்துள்ளது தான் உச்சகட்ட வேடிக்கை.

பிறை 1 இல் அனைத்து இயக்க தலைவர்களும் கூட வேண்டும், சரி. பிறை 1 என்பது எந்த கிழமை?
எந்த இயக்கம் சொல்கிற பிறை 1 இல் கூட வேண்டுமாம்?

ஒரு இயக்கம் திங்கட்கிழமையை பிறை 1 என்று சொல்லும், இன்னொரு இயக்கம் செவ்வாயை பிறை 1 என்று சொல்லும், இன்னொரு இயக்கம் புதனை சொல்லும்.

இதில் எந்த கிழமையில் கூட வேண்டும் என்கிற கருத்தொற்றுமை கூட ஏற்படாத நிலையில் இவர்கள் ஒன்று கூடுவார்களாம், கஞ்சி குடிப்பார்களாம்.

போகாத ஊருக்கு வழி கேட்டானாம் ஒருவன்.. அந்த கதையாத்தான் இருக்கு..!

நம்பிக்கை என்பது நாவில் அல்ல


வாகன‌ அணிவகுப்புகள் இல்லை, இடது பக்கம் நான்கு பேர், வலது பக்கம் நான்கு பேர் என்கிற படோதாபங்கள் இல்லை, ஆடம்பர வாழ்க்கையில்லை..

ஏகத்துவவாதிகளின் மார்க்க காரியங்களில் மாத்திரமல்ல, அன்றாட வாழ்க்கையிலும் கூட‌ அந்த உத்தம நபிகளாரின் பிரதிபலிப்பு மின்னும்.

அந்த மகத்தான மனிதர், இந்த உம்மத்தின் தலைவர் நபி (சல்) அவர்கள் அத்தகைய படோதாபங்களை மேற்கொண்டதில்லை. 
அவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் சஹாபாக்கள் புடை சூழ அணிவகுத்ததில்லை,
எந்த சபையிலும் தன்னை தனித்துவமாக அவர்கள் காட்டியதில்லை.
எதிரிகளின் நடமாட்டமோ என்கிற சந்தேகம் வலுத்த போது தனியொரு ஆளாக குதிரையேறி அந்த சந்தேகத்தை தீர்த்து விட்டு வந்த நெஞ்சுரமிக்க தலைவரை பெற்றவர்கள் நாம்.

அந்த மாமனிதரை பின்பற்றுகிறோம் என வெறும் வாயில் கதையளந்து காற்றில் பறக்க விடும் பெயர்தாங்கிகளல்ல தவ்ஹீத்வாதிகள்.

அதை செயலில் காட்டுபவர்கள் !

எத்தகைய நிலை வந்தாலும் நிலை தடுமாறாதவ்ர்கள். அத்தகைய ஈமானுக்கு தான் அல்லாஹ் வெற்றியை மென்மேலும் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

அல்லாமல், தவ்ஹீத்வாதிகளை வெட்டி வீழ்த்துவது ஒன்றும் சிரமமான காரியமல்ல.
அதை செய்வதற்காக‌ நான்கு மாத திட்டங்களை தீட்ட வேண்டியதுமில்லை.

உனது கையால் தான் இறப்பார் என்று அல்லாஹ் விதித்திருக்கிறான் என்றால் அது நடந்தே தீரும், நீ நான்கு மாத திட்டத்தை தீட்டாமல் முயற்சி செய்தாலும் நடக்கும்.

உன்னால் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட‌ முடியாது என்று அல்லாஹ் எழுதியிருந்தானேயானால், நீ ஒட்டு மொத்த உலகத்தை அழைத்து வந்தாலும் அவர் தலை மயிரை கூட அசைத்துப் பார்க்க முடியாது !

இதை வாயளவிலல்லாமல், உளப்பூர்வமாக நம்பி அதை அனுதின வாழ்க்கையிலும் கண்ணார கண்டு அனுபவித்து வருபவர்கள் தான் தவ்ஹீத்வாதிகள்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்' என்று கூறுவீராக! (9:51)

நீ செய்யும் ஒவ்வொரு துரும்பு வேலைக்கும் ஏகத்துவத்தின் கொடி இன்னும் மேலோங்கத் தான் செய்யும் !
நீ காட்டும் ஒவ்வொரு எதிர்ப்புக்கும் அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் இன்னும் சுடர் விட்டு தான் எரியும் !!

அதை உன்னால் அணைத்து விட முடியாது !!

படிப்பும் மதிப்பெண்களும் மட்டுமே வாழ்க்கையல்ல



இன்று உயரிய பல பதவிகளை வகிப்போரும், கை நிறைய பணம் சம்பாதிப்போரும் தங்கள் பிளஸ்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இல்லை.

மதிப்பெண்களுக்கும் வருங்காலத்தில் நாம் அடையப்போகும் இடத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இன்றைய சமூக சூழல் நமக்கு கற்றுத் தருகிறது.

இதை இன்றைய பெற்றோரும் புரிய வேண்டும், புரிவதோடு அதையே தங்கள் பிள்ளைகளுக்கு புரிய வைக்கவும் வேண்டும்.

தேர்வில் தோல்வியடைந்தால் மன உளைச்சல் அடைவதற்கு காரணம், தமது வாழ்க்கையே இத்தோடு இருண்டு விட்டது என்று அவன் எண்ணுவதால் தான்.

இந்த எண்ணத்தில் சிறு அளவு தான் அவன் சுயமாக சிந்தித்து முடிவுக்கு வந்தது.
மீதமுள்ள பெரும் பகுதியானது, பெற்றோர், உற்றார், உறவினர்,ஆசிரியர்கள் போன்ற்றோரின் மனப்போங்கினாலும் அவர்கள் தரும் அழுத்தத்தினாலும் தான் ஏற்படுகிறது.

மிக அதிக மார்க் வாங்கினால் மருத்துவராகவோ பொறியாளராகவோ மட்டும் தான் ஆகலாம்.
மார்க் குறைவாக எடுத்தால் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். எதில் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதே இன்றைய நிதர்சன உண்மையாக இருக்கிறது !

இதை பெற்றோரும் தேர்வை எழுதி முடித்த மாணவர்களும் மனதில் கொண்டால் தேர்வில் அடையும் தோல்வி அதிகம் பாதிக்காது !

கப்ரு வணங்கிகளில் உள்ள‌ வகையினர்


கப்ரு வணங்கிகளில் மூன்று வகையினர் உள்ளனர்.

முதலாவது வகையினர் : 

அவ்­லியாவே என்னுடைய நோயைப் போக்குங்கள், எனக்கு குழந்தைப் பாக்கியத்தைத் தாருங்கள். என்று நேரடியாக கப்ரில் அடங்கியிருப்பவர்களிடமே கோரிக்கை வைப்பர்.

இரண்டாவது வகையினர்;

அவ்லி­யாவே அல்லாஹ்விடம் வாங்கித்தாருங்கள் என்று கேட்பார்கள். இவர்கள் நாம் நேரடியாகக் கேட்டால் அல்லாஹ் தரமாட்டான். இந்தச் சமாதியில் இருப்பால் கேட்டால் அல்லாஹ் உடனடியாகத் தருவான் என நம்பிக்கை வைத்துள்ளனர்.

மூன்றாவது வகையினர் :

அல்லாஹ்வே இந்த அவ்­லியாவின் பொருட்டால் என்னுடைய நோயைப் போக்குவாயாக. என்னுடைய நாட்டத்தை நிறைவேற்றுவாயாக என்று கேட்கின்றனர். அதாவது அவ்­லியா இவர் பேசுவதை கேட்கவும் மாட்டார். பார்க்கவும் மாட்டார். மாறாக இறந்து போனவரின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் கட்டாயம் தருவான் என நம்புகின்றனர்.

முதல் இரண்டு வகையினர் தவறிழைப்பவர்கள் என்று எண்ணுகிற சுன்னத் (?) ஜமாஅத்தினரில் சிலர் கூட மூன்றாவது வகையான இன்னாரின் பொருட்டால் துஆ கேட்பது கூடும் என்கின்றனர்.

இதுவும் பச்சை ஷிர்க் என்பதற்கு ஏராளமான குர் ஆன் ஹதீஸ் சான்றுகள் உள்ளன என்பது ஒரு பக்கமிருக்க, மத்ஹப் நூல்கள் சொன்னால் தான் கேட்போம் என்று கூறுபவர்களுக்காக கீழ்காணும் சான்றுகள்..

அல்லாஹ்வின் பொருட்டால் தவிர பிரார்த்தனை செய்வது வெறுப்பிற்குரியதாகும். இறைவா உன்னிடம் இன்னாரின் பொருட்டால் கேட்கிறேன். அல்லது உன்னுடைய மலக்குமார்களின் பொருட்டால் அல்லது உன்னுடைய நபிமார்களின் பொருட்டால் கேட்கிறேன் என்று கூறுவது கூடாது. ஏனெனில் படைப்பினங்களுக்காக அல்லாஹ்வின் மீது எந்தக் கடமையும் இல்லை.
நூல் : ஹனஃபி மத்ஹபின் இஹ்தியார் என்ற நூல் பாகம் : 4 பக்கம் : 175)

இறைவா இன்னாரின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறுவது கூடாது. அவ்வாறே உன்னுடைய நபிமார்களின் பொருட்டால், உன்னுடைய அவ்­யாக்களின் பொருட்டால் உன்னுடைய தூதர்களின் பொருட்டால் கஅபாவின் பொருட்டால் மஷ்அருல் ஹராமின் பொருட்டால் என்று கேட்பது கூடாது. ஏனெனில் படைப்பினங்களுக்காக அல்லாஹ்வின் மீது எந்தக் கடமையும் இல்லை. மேலும் அல்லாஹ் அவன் மீது எத்தகைய நிர்பந்தமும் இல்லாமல் தன்னுடைய அருளை தான் நாடியோருக்கு வழங்குகிறான்
றீல் : ஹனஃபி மத்ஹபின் அல்பஹ்ருர் ராயிக் பாகம் : 8 பக்கம் : 235)

இப்படியும் ஒரு அற்பத்தனம்


பணிகள் பலவற்றை செய்ய இயக்கம் இல்லை என்கிற காலமிருந்தது. 
பணிகள் செய்வதற்காகவே இயக்கங்களும் பின் துவக்கப்பட்டன.

ஆனால் இன்றைக்கு சில் புகழ் விரும்பிகள் இருப்பதை பார்க்கிறோம்.

இயக்கம் ஆரம்பிப்பதையே பணியாக கொள்கின்றனர் !!?!!

நீ என்ன செய்றே? நான் இந்த கேகூகா கூட்டமைப்பில் செயலாளர்.
நீ??
நான் அந்த‌ மாகாக கூட்டமைப்புக்கு துணைத் தலைவர்..

என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில் தான் எத்தனை அற்ப சுகம் !

எல்லாம் சரிப்பா, உன் கூட்டமைப்பின் நோக்கம் தான் என்ன? என்று கேட்டால்..

...அதுவா.. .அது வந்து... அது தான் பேசிகிட்டிருக்கோம் ..
என்கின்றனர்.

என்ன நோக்கம், அதன் திட்டங்களும் செயல்பாடுகளும் தான் என்ன? என்பதை கூட வரையறுக்காத நிலையில் கூட்டமைப்பென்றும் தலைவர் என்றும் செயலாளர் என்றும் உருவாவது இந்த சமுதாயத்தின் மிகவும் அருவருப்பான முன்னுதாரணம் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

ரஜினிக்கு ரசிகர் மன்றம் வைத்து அதில் தலைவர், துணைத் தலைவர் என்றெல்லாம் இருக்கைகள் இட்டால், அதன் பிறகு தான் இந்த ரசிகர் மன்றத்தை வைத்து என்ன செய்யலாம் என்று சிந்திப்பர்.
அவர்களது இலக்கு தங்களுக்கென பெயரும் அடையாளமும் வேண்டும் என்பது தானே தவிர, நோக்கமோ இலக்கோ ஏதும் கிடையாது !!

தற்பெருமையும் ஆணவமும் இருக்கும் எவனுமே சொர்க்கம் செல்ல முடியாது என்கிற நபிமொழியை தான் நாம் நினைவுப்படுத்த வேண்டியுள்ளது !

ஹிந்து தீவிரவாதி கைது


சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த 1–ந் தேதி கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வெடித்தது. இதில் சுவாதி என்ற பெண் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. நேற்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசியவர் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள கழிவறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

இதையடுத்து ரெயில் நிலையத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே போனில் பேசிய வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அவன் செல்போனில் பேசியிருந்தது தெரியவந்தது.

அவனது செல்போன் தற்போது எங்கிருக்கிறது என போலீசார் செல்போன் டவர் மூலம் கண்காணித்தனர். நேற்று இரவு சென்னை–புதுவை ஈ.சி.ஆர். சாலையில் வழி நெடுக உள்ள டவர்களில் அவனது செல்போன் பதிவானது.

இதையடுத்து அவன் புதுவைக்கு வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறான் என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். இதனால் ஈ.சி.ஆர். சாலையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை டோல்கேட்டில் சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த பஸ்சை சோதனையிட்டனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவன் அந்த பஸ்சில் பயணம் செய்வது தெரியவந்தது. அவனை உடனடியாக போலீசார் கைது செய்தனர். அவன் பெங்களூரை சேர்ந்தவன். பெயர் சிவக்குமார் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது.

அவனிடம் ஏராளமான சிம் கார்டுகளும் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சிவக்குமாரை விசாரணைக்காக போலீசார் சென்னை அழைத்து சென்றுள்ளனர்.
- நன்றி மாலைமலர்

தாடியின் அளவு குறித்த ஒரு கேள்வி




நீளமாக வைக்க வேண்டும் என்று கூறுவோர் ஒரு சாரார்.
நீளம் முக்கியமில்லை, பரப்பளவு தான் முக்கியம், மீசையை கத்தரித்து, அதை விடவும் பெரியதாக தாடியை வைத்துக் கொண்டால் போதுமானது என கூறுவோர் மற்றொரு சாரார்.

இரண்டில், நீளமாக வைப்பது அவசியம் இல்லை என்கிற கருத்து தான் சரியானது. காரணம், நீளம் பற்றி நபி (சல்) அவர்கள் எந்த வரையறையையும் இடவில்லை. நபிகள் நாயகம் (சல்) அவர்கள் எதை சொன்னார்களோ அது தான் மார்க்கம். நபியின் தாடி நீளமாக தான் இருந்தது என்று வைத்துக் கொண்டால் கூட, அவர்கள் அவ்வாறு நீளத்தை வலியுறுத்தாத காரணத்தால் அவர்களது செயல் மார்க்கமாகாது !

இது ஒரு பக்கம் இருக்க,
நபி (சல்) அவர்கள் ஒரு கைப்பிடி அளவிற்கு நீளமாக வைத்திருந்தார்கள் என்கிற சஹாபியின் கூற்றினை (அல்லது செயலினை) ஆதாரமாக கொண்டு ஒரு கையளவு நீள்மாக தாடி வைப்பது தான் சுன்னத் என்று சொல்வோரிடம் இப்போது ஒரு கேள்வி..

ஒரு கையளவு நீளம் தான் சஹாபி சொன்னது, அப்படி தான் நபி அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதால் அதை விடவும் சிறிதாக தாடி வைப்பது சுன்னத் இல்லை என்கிறீர்கள். சரி.
அப்படியானால், ஒரு கையளவு நீளத்தை விடவும் பெரியதாக தாடி வைப்பதும் சுன்னத் இல்லை என்று தானே நீங்கள் சொல்ல வேண்டும்?

சொல்வீர்களா?
அப்படி இதுவரை சொல்லியிருக்கிறீர்களா?

நபி (சல்) அவர்கள் எப்படி வைத்தார்களோ அப்படி வைப்பது தான் சுன்னத் என்று கூறி தவ்ஹீத்வாதிகள் வைக்கும் தாடிகளை விமர்சனம் செய்பவர்கள், நெஞ்சு பகுதி வரையிலும் தொப்புள் அளவு வரையிலும் தாடியை வளர்த்து வைத்திருப்பவர்களையும் விமர்சனம் செய்யட்டும் பார்க்கலாம் !

நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட வேண்டாம்


பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்த மறு கணமே,சொல்லி வைத்தாற்போல் இதை செய்தது (இல்லாத) இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு என்று ஊடகத்தில் பரப்பி விட்டால் இஸ்லாமியர்களை களங்கப்படுத்தியதாக ஆகி விடும்.

தாடியும் தொப்பியும் வைத்துக்கொண்டு நடமாடும் இளைஞர்களை பிடித்து வந்து பொய் வழக்குகள் இட்டு உள்ளே தள்ளி விட்டால் ஃபைலை மூடி விடலாம்.
ஆனால் இவையெல்லாம் குற்றங்கள் குறைவதை ஒரு காலத்திலும் தடுத்து நிறுத்தாது.

முஸ்லிம்களின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற இவர்களது ஆர்வத்தில் சிறு பகுதியையாவது உண்மை குற்றவாளிகளை துப்பறிவதற்கு காட்ட வேண்டும்.
அப்போது தான் நிஜத்தில் தவறு செய்பவன் அஞ்சுவான்.
நாம் என்ன செய்தாலும் அரசின் பார்வை முழுக்க இன்னொரு மதத்தின் மீது தான் விழும் என்கிற நிலை உருவானால் தவறிழைப்பவன் பாதுகாப்பு பெறுகிறான். மென்மேலும் தவறுகள் செய்வதற்கு தயங்க மாட்டான்.

வெறுமனே டிசம்பர் ஆறின் போது ரயில் நிலையங்களில் பாதுகாப்பு, சுதந்திர தினத்தன்று மூன்றடுக்கு பாதுகாப்பு, குடியரசு தினத்தின் போது விமான நிலையங்களில் இரண்டடுக்கு பாதுகாப்பு என்றெல்லாம் இடுவதால் எந்த பயனுமில்லை.

ஒரு மதத்தை களங்கப்படுத்துகிறோம் என்கிற பெயரில் நாட்டின் அமைதிக்கும் ஒருமைபாட்டிற்கும் அச்சுறுத்தலாய் விளைவது நாட்டின் காவல்துறை தான் என்கிற அவப்பெயர் அரசுக்கு வந்து விடக்கூடாது !

நீதிமன்றங்களில் இருக்கும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது வரை தான் நாடு அமைதியாய் இருக்கும் !
அது அவிழாமல் காக்க வேண்டிய கடமை ஆள்வோருக்கு உள்ளது !!

விகிதாசார பிரதிநிதித்துவம்



கட்சிகளின் எண்ணிக்கை பெருகி, அனைவரும் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்ததை தொடர்ந்து சிறு அளவிலான வாக்குகள் கூட ஒரு கட்சியின் வெற்றியை தீர்மானித்து விடும்.

100 ஓட்டுகளில் A வுக்கு 25 ஓட்டு, B க்கு 23, மீதமுள்ள கட்சிகளுக்கு அதை விடவும் குறைவான ஓட்டுகள் என்றால் அனைவரையும் விட அதிக வாக்குகள் பெற்ற A வெற்றி பெறுவார், ஆட்சியை கைப்பற்றுவார்.

ஆனால் அந்த கட்சிக்கு கிடைத்த வாக்குகளோ 25% தான்.
நூறு பேரில் 25 பேர் இந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் என்றால் 75 பேர் இந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டாம் என்று வாக்களித்திருக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது.

75% பேர் வேண்டாம் என்று கூறிய கட்சி வெற்றி பெறுவது என்பது கேலிக்கூத்தா இல்லையா?

பெரும்பான்மை மக்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய ஒரு கட்சி நியாயப்படி தோல்வியடைந்த கட்சி. தோல்வியடைந்த கட்சி ஆட்சியமைக்கும் கேலிக்கூத்து தான் இந்தியா பின்பற்றும் பிரிடிஷ் ஜனநாயக முறை !

அனைவரும் அறிந்து வைத்திருக்கும் சாதாரண உண்மை தான் இது என்ற போதும், தனித்து போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை இம்முறை அதிகம் என்பதால் இந்த கேலிக்கூத்து பல தொகுதிகளில் பட்டவர்த்தனமாய் தென்படும் வாய்ப்புள்ளது !

விகிதாசார பிரதிநிதித்துவம் தான் ஜனநாயக நாட்டில் வெற்றியை தார்மீக ரீதியாக நிர்ணயிக்கும் சரியான முறையாக இருக்கும்.

25 ஓட்டுகள் பெற்ற கட்சி அதற்கேற்றார் போல் ஆட்சியில் பங்கு செய்யும். 20 வாக்குகள் பெற்ற கட்சி அந்த விகிதத்தில் பங்களிக்கும், 2% ஓட்டு பெற்ற கட்சியாக இருந்தால் அதற்கு கூட ஆட்சியில் உரிமையுண்டு என்கிற வாக்களிப்பு முறை என்பது நாட்டு மக்களின் ஒட்டு மொத்த அங்கீகாரத்தையும் ஆதரவையும் பெற்ற ஆட்சியை நாட்டில் நிலை பெற செய்யும்!

கட்சிகள் தங்களுக்கிடையே நடத்தி வருகின்ற முகம் சுளிக்க வைக்கும் மூன்றாம் தர அரசியல் களேபரங்கள் அப்போது இருக்காது.

கட்சி தான் முன்னிலைப்படுத்தப்படுமே தவிர வேட்பாளர் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்.

அனைத்து கட்சியும் ஆட்சியில் பங்கு பெறும் பட்சத்தில் நாட்டில் ஊழல் குறையும்,
மதவாதம் தலை தூக்காது,
சிறுபான்மை குரலுக்கு விலை கிடைக்கும்,
கார்பரேட் நிறுவனங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்தியாவில் தொழில் துவங்குகிறேன் என்கிற பெயரில் அடிப்படை தேவைகளுக்கான விலைவாசி ஏற்றம் பெற காரணமாக இருக்காது,
கொள்முதல் விலையை விடவும் இரட்டிப்பு மடங்கு வரியேய்ப்பு செய்வதும் குறையும்.

சுருங்க சொன்னால் இந்தியாவின் ஒவ்வொரு தனி நபரும் இந்தியாவை ஆள்வார் !

இந்தியா வல்லரசாகும் !

விகிதாசார பிரதிநிதித்துவம் கிடைக்கும் ஜெர்மன் ஜனநாயக முறை தான் நாட்டின் எதிர்காலத்திற்கு ஏற்றது !

முகனூல் பதிவுகள் : சென்னை குண்டுவெடிப்பு


நாட்டில் எங்கே குண்டுவெடிப்பு நடந்தாலும் உடனே ஒரு அப்துல் காதரையோ ஜலாலுதீனையோ பிடித்து சென்று, இந்தியன் முஜாஹிதீனுக்கும் இவர்களுக்கும் தொடர்பு என்று பொய்களை ஜோடனை செய்து, நிஜ குற்றவாளிகளான ஆர்எஸ்எஸ் இயக்கங்களை கண்டு கொள்ளாமல் மத துவேஷத்தில் காலம் கடத்திய இந்திய புலனாய்வு துறைக்கும் உள்துறை அரசாங்கத்திற்கும் தங்கள் தவறை திருத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு.

சென்னை குண்டு வெடிப்பு சம்பவத்திலாவது, புலனாய்வுத் துறை தன் கடமையை சரியாக செய்யட்டும்.
காவல் துறை நேர்மையாக செயல்படட்டும்.

இது நாள் வரை தங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த காவி கறை, இதன் மூலம் நிவர்த்தி செய்யப்படட்டும் !

வியாழன், 22 மே, 2014

அஹமதிய்யா கொள்கையினருடனான‌ விவாதம்



அஹமதிய்யா கொள்கையை ஏற்றிருக்கும் நிசார் முஹம்மது அவர்களுடன் முகனூலில் 2014 ஆம் ஆண்டு தொடராக நடைபெற்று வந்த விவாதம் தனி தனி பாகங்களாக இங்கே வெளியிடப்பட்டுள்ளன.





விவாதம் இன்னும் முடியவில்லை.

முகனூலில் வெளிவர வெளிவர ஒவ்வொன்றும் இங்கே சேர்க்கப்பட்டுக் கொண்டே வரும், இன்ஷா அல்லாஹ்..





அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (D)


அன்புள்ள nashid க்கு,

1) “நீ எழுதி உள்ளாய்: வழிகேட்டில் சென்றவர்களை அல்லாஹ் மென்மேலும் தவறிழைக்க தான் செய்வான் “

என் பதில்:

a) அல்லாகுவின் நபியை ஏற்றுக்கொண்டவர்களை வழிகேடர்கள் என்று அல்லாஹு எங்கே சொல்கிறான்? குரானுக்கு தவறான பொருளை உங்களுக்கு கற்று தந்தது யார்?

குரானின் வசனங்களை, பாதியை மறைத்து, முழுமையாக எழுதாமல், தன் விருப்பம்போல் சொந்த கருத்தை வைத்து பொருள் கொள்ள வேண்டும் என்று உனக்கு கற்று தந்த வழிகேடர்கள் யார்?

நபி என்று வாதித்தவரை, கேள்வி மேல் கேள்வி கேட்டு, தூற்றி இழிவு படுத்துங்கள் என்று குரானில் அல்லாஹூ எங்கேயாவது சொல்லி இருக்கின்றானா?

ஆனால் நபியை ஏற்றுக்கொள்ளாதவர்களை, நிராகரிப்பவர்கள் என்று பெயர் சூட்டியது மட்டும் இல்லாமல், அவர்களை பல விதங்களில் அழித்துள்ளதாக, திரும்ப திரும்ப அல்லாஹு சுட்டி கட்டவேண்டிய தேவை என்ன?

============================================================
2) ( குர்ஆன் 16: 21,22 ) “அவர்கள் அல்லாஹ்வை அன்றி எவர்களை அழைக்கின்றனரோ அவர்களால் எதனையும் படைக்க முடியாது. மேலும் அவர்களே படைக்கப்பட்டவர்கள். அவர்கள் மரணம் அடைந்தவர்கள். உயிருள்ளவர்கள் அல்ல. மேலும் எப்போது எழுப்பப்படுவர் என்பதனை கூட அவர்கள் அறிவதில்லை.”

இப்போது நீ கூறியுள்ள ஆர்க்கிமிடீஸ் கணக்கை பார்போம்.

நான் மேலே உள்ள வசனத்திற்கு தெளிவாக விளக்கம் தந்த பிறகும், நீ மீண்டும் சாய்பாபாவை இழுத்திருப்பது உனது சிந்தனை திறன் வெறும் பூஜியம் என்பதை காட்டுகிறது.

மேலும் மறுப்பதையே குறிக்கோளாக கொண்டு, ஆர்க்கிமிடீஸ், சாக்ரடீஸ், என்றெல்லாம் ஒப்பிட்டுள்ளாய்.

அந்த எல்லா தத்துவங்களை விட அற்புதமான தத்துவங்களை உள்ளடக்கியது தான் குரான் என்பதை நினைவில் கொள்.

அல்லாஹ்வை அன்றி எவர்களை அழைக்கின்றனரோ அவர்கள், என்று சொல்லும்போது, அதில் உனது கருத்தின் படி சாய்பாபா, அமிர்தானந்தமாயி எல்லோரும் வருகிறார்கள், ஆனால் இவர்கள் இறக்கவில்லையே, என்பது உனது கேள்வி.

எந்த மக்களாவது, சாய்பாபா, அமிர்தானந்தமாயி போன்றோர்கள் 1000, 2000 வருடங்கள் உயிரோடு இருப்பார்கள் என்று எண்ணுகிறார்களா? என்றால், நிச்சயமாக இல்லை. இந்த கருத்தை தான் நான் ஏற்கனவே விளக்கி இருந்தேன்.

============================================================

இப்போது எனது கேள்வி என்ன வென்றால், சாய்பாபாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனபோது பிரார்த்தனை கூட்டம் நடத்தி இறைவனை அழைத்தார்களே, அது ஏன்?

============================================================
எனவே 2000 வருடங்களாக உண்ணாமல், குடிக்காமல் உயிரோடு இருக்கும் ஈஸா நபியை வணங்குவதற்கும், சாய்பாபா, அமிதானந்தமாயி போன்றோர்களை வணங்குவதற்கும் உள்ள வேற்பாடு புரிந்துவிட்டதா?

அதே மாதிரி சிலர் தாய், தந்தையரை கூட கடவுளாக நினைத்து வணங்குகிறார்கள் தான். ஆனால் அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமலோ, அல்லது ஏதாவது accident ஆகிவிட்டாலோ, உடனே உண்மையான இறைவனை அழைத்து வேண்டுகிறார்களே !

எனவே தாய், தந்தையரை கூட கடவுளாக நினைத்து வணங்கு- கிறவர்கள் கூட, அவர்களுக்கு துன்பம் வந்துவிட்டால், உண்மையான இறைவன் பக்கம் திரும்புகிறார்கள், என்பதிலிருந்து தாய் தந்தை மீது கொண்டுள்ள பக்தியும் , இறைவனை வணங்குவதும் வெவ்வேறானது என்று தெளிவாக விளக்கியிருந்தேன்.

நீ எழுதி உள்ளாய்:

இந்த வசனமானது இன்றைய காலகட்டத்தில் கடவுளாக வணங்கப்படும் சாமியார்களையும் தான் குறிக்கும். அவர்கள் இன்று உயிருடன் இருந்தாலும் அவர்களும் இறந்து தான் போவார்கள். அதை தான் இந்த வசனம் சொல்கிறது என்று ...

என் பதில் :

அல்லாஹு அந்த வசனத்தில் என்ன சொல்கிறான்? அல்லாஹுவை அன்றி யாரையெல்லாம் அவர்கள் அழைக்கிறார்களோ ..... அவர்கள் இறந்தவர்கள், உயிரோடு இருப்பவர்கள் அல்லர் என்று.

ஆனால் நீயோ, அவர்கள் இன்று உயிருடன் இருந்தாலும் அவர்களும் இறந்து போவார்கள், அதைத்தான் இந்த வசனம் சொல்கிறது என்கிறாய். இப்போது புரிகிறதா உனது புரிதலில் உள்ள குளறுபடி?

நீ பொருள் கொள்ளும் விதமே தவறு. அல்லாஹு என்ன கருத்தில் சொல்கிறான் என்பதை முன்னிறுத்தி பொருள் கொள்.

அதாவது அல்லாஹு சொல்கிறான், “அல்லாஹுவை அன்றி யாரையெல்லாம் அவர்கள் அழைக்கிறார்களோ ..... அவர்கள் இறந்தவர்கள், உயிரோடு இருப்பவர்கள் அல்லர்” என்று.

ஆனால் நீயோ, அவர்கள் இன்று உயிருடன் இருந்தாலும் அவர்களும் இறந்து போவார்கள் என்று உனது எண்ணத்திற்கு ஏற்ப பொருள் கொடுத்து, அல்லாஹுவின் வசனத்தை குழப்புகிறாய்.

இறந்தவர்கள் என்று எப்படி பொருள் கொள்ள வேண்டும் என்றால், இறந்தவர்களால் எப்படி எதுவுமே செய்ய முடியாதோ அதே போல் உங்கள் பொய் கடவுளால் (சாய்பாபா, அமிதானந்தமாயி) எதையுமே செய்ய முடியாது என்பதாகும்.

மேலும் அல்லாஹு சொல்கிறான்,

“அவர்கள் அல்லாஹ்வை அன்றி எவர்களை அழைக்கின்றனரோ அவர்களால் எதனையும் படைக்க முடியாது. மேலும் அவர்களே படைக்கப்பட்டவர்கள்”

இந்த வசனத்திற்கு ஏற்ப, சாய்பாபா ஆகட்டும், எந்த போலி சாமியர்கள் ஆகட்டும், அவர்கள் அனைவருமே படைக்கபட்டவர்களே, மேலும் அவர்களால் எதையுமே படைக்கமுடியாது.

நீங்கள் அவர்களை உதவிக்கு அழைக்கிறீர்களா?, உங்கள் துயரங்களை அவர்களிடம் முறையிடுகிறீர்களா?, இறந்தவர்களுக்கு எவ்வாறு, உங்கள் முறையீடுகளை கேட்டு, உங்களுக்கு உதவி செய்யும் சக்தி இல்லையோ, அதே போல் எனக்கு நிகராக, அல்லது என் உதவி இல்லாமல் அவர்களால் எதையும் செய்யமுடியாது.

எனவே எல்லாம் வல்ல அல்லாஹுவிடமே உதவி கேளுங்கள், அவனே அதற்கு தகுதி உடையவன் என்பதே அந்த வசனத்தின் கருத்து ஆகும்.

============================================================

அடுத்து, முஸ்லிம்களின் கபரு வணக்கம், ஹிந்துக்களின் சிலை வணக்கம், கிறிஸ்தவர்களின் ஈசாவை வணங்குதல் போன்ற இறந்தவர்களை வணங்குவது.

நீங்கள் இறந்தவர்களை வணங்குவது, அவர்களை உதவிக்கு அழைப்பது, துன்பங்களை அவர்களிடம் முறையிடுவது, பாவங்களுக்கு ரட்சிப்பு தேடுவது – எதுவுமே பலனளிக்காது, ஏனென்றால் அவர்களால் எதுவுமே செய்ய முடியாது, அவர்கள் இறந்துவிட்டார்கள்.

உயிரோடு இருப்பவர்கள் அல்லர்; எனவே என்றென்றும் உயிரோடு இருக்கும் எனக்கே அஞ்சுங்கள், என்னிடமே உதவி கேளுங்கள் என்று அல்லாஹு கூறுகின்றான்.

மேல் சொன்ன கருத்தில் ஈசாவும் அடங்குகிறார் தானே? எனவே ஈசாவை யாரெல்லாம் வணங்குகிறார்களோ அவர்களுக்கும் சேர்த்து தான் இந்த வசனம் கூறுகிறது.

எனவே சாய்பாபாவை உதாரணம் கட்டுகிறாய், அவரோ உண்டு உறங்கி இறந்துவிட்டார். ஆனால் ஈசாவோ உங்கள் நம்பிக்கை படி, 2000 வருடங்களாக உண்ணாமல், குடிக்காமல் உயிரோடு இருக்கிறார்.

எனவே பெரும்பான்மை மக்களால் கடவுளாக வணங்குபவர் ஈஸா நபி. எனவே அந்த பொய் கடவுள் ஈஸா இறந்துவிட்டார்.

எனவே புகாரி 3456-ன் படி நீங்கள் கிறிஸ்தவர்களை பின்பற்றுகிறீர்கள் என்பது தெளிவாகிறது.

தொடரும் இன்ஷா அல்லாஹ்.

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (C)


அன்புள்ள nashid, (11.5.2014 தொடர் 2 க்கு பதில்) 

1) நீ எழுதி உள்ளது : 

“உங்கள் தொடர் 2 ஐ மீண்டும் ஐந்து ஆதாரம் ஐந்து ஆதாரம் என்கிற அதே பல்லவியோடு துவக்கியுள்ளீர்கள்”

என் பதில் : .

ஈஸா நபி இறந்துவிட்டார்கள் என்பதற்கு 5 வசனங்களை எடுத்துவைத்தேன். ஏன் என்றால் நாம் விவாதத்தின் முதல் தலைப்பே அதுதான். நான் எடுத்து வைத்த 5-ம் எனது சொந்த கருத்தா? OR அல்லாகுவின் வசனங்களா?

நீயோ காந்தியை சம்பந்தம் இல்லாமல் இழுத்தாய். அத்துடன் விடவில்லை, அவர் சென்னை பேருந்தில் ஏறி, சாய்பாபாவின் ஆஷ்ரமத்திற்கு சென்றாரா? நான் அதை பற்றி கேட்கவே இல்லையே! பால் தாக்கரே ஒரு அரசியல்வாதி, அவர் கொன்றாரா? or இல்லையா என்பதா விவாதம்? இப்படி உனது reel ஓடிக்கொண்டே இருக்கிறது...

நான் அல்லாகுவின் வசனங்களை எழுதி உள்ளதை, நீ பல்லவி என்கிறாய். ஆனால் நீயோ அல்லாகுவின் வசனங்களுக்கு, குரான் அடிப்படையில் பதில் சொல்ல முடியாமல் திணறி உலகவாதிகளை உதாரணம் காட்டுகிறாய்.

============================================================

2) நீ ஏப்ரல் 27 இல், ஈஸா நபி இறந்துவிட்டார் என்பதற்கு சக்கராத் நிலையில் இருக்கும் ஒருவரை உதாரணம் காட்டி இருந்தாய், அதாவது அவர் இன்னும் இறக்கவில்லை என்று சொல்வது ஷிர்க் இல்லை என்றும் எழுதி இருந்தாய்.

எனது பதிலில் (ஏப்ரல் 30), சகாரத் நிலையில் உள்ளவர், சுவாசித்தும், உண்டும் இருக்கிறார், எனவே இவர் இப்போது இறக்கவில்லை என்று சொல்வது ஷிர்க்கு ஆகாது, ஆனால் இயற்கை வீதிக்கு எதிராக, 2000 வருடமாக உண்ணாமல் குடிக்காமல் ஈஸா உயிரோடு வாழ்கிறார் என்று நம்புவது ஷிர்க் ஆகும் என்று எழுதி இருந்தேன்.

அதற்கு உன் பதிலில்,

“ஈஸா இன்னும் மரணிக்கவில்லை என்றாலும் அவரும் ஒரு நாள் மரணிப்பார். அவரது ஆயுள் தான் நீட்டிக்கப்படிருக்கிறது”

என்றும், “அவரை இந்த பூமியிலிருந்து அப்புறப்படுத்தியதாக மட்டும் தான் அல்லாஹ் சொல்கிறான்” என்றும் எழுதினாய்.

அதற்கு, அவரது ஆயுள் நீட்டிக்கப்பட்டதற்கும், ஈசாவை பூமியிலிருந்து அப்புறப்படுத்தியதாக அல்லாஹு சொன்னதாக எழுதி உள்ளதற்கும் ஆதாரம் என்ன? என்று கேட்டேன்.

இதுவரையிலும் பதில் தராதது ஏன்?.

எனவே உன்னால் முடியாத உடான்ஸை எழுதி கற்பனை ஈசாவை கொண்டுவராதே.
.உனது விருப்பம்போல் அல்லாஹு சொன்னதாக எழுதிவிட்டு, ஆதாரம் கேட்டால், புரியாத்தது போல், உலக வாதிகளை வைத்து கதை அளக்காதே.

ஈசாவை அப்புறப்படுத்தியதாக அல்லாஹ் சொல்கிறான் என்று நீ கூறியது மிகப்பெரிய தவறு.

சரி போகட்டும், சகராத்து ஹாலில் இருந்தவர் இப்போது என்ன ஆனார் ? பேச்சு மூச்சில்லையே!
============================================================

3) அடுத்து குரான் 2:259 வசனத்தை காட்டி, ஒரு பிரயாணியின் உதாரணத்தை கூறி உள்ளாய்,

“ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. 'இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து 'எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?' என்று கேட்டான். 'ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்' என்று அவர் கூறினார். 'அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது 'அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்' எனக் கூறினார்.

என் பதில் :

ஒருவரை 100 ஆண்டுகள் மரணிக்கச்செய்து பின்னர் உயிர்பித்ததாக, நீ நேரடியாக பொருள் கொண்டுள்ளாய்.
ஆனால்வசனத்தை முழுமையாக படித்து பார்த்தால் உண்மையான பொருள் விளங்கும்.
ஏனென்றால் அடுத்து வரக்கூடிய வசனத்தில், ‘உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக, உமது கழுதையையும் கவனிப்பீராக’ என்று கூறுகின்றான்.

‘செத்து விட்ட’ என்று நீ bracket இல் போட்டுள்ளது உன் சொந்த கருத்து தான். இப்படி சொந்த கருத்தை சேர்த்து, தவறான பொருள் கொண்டுள்ளாய்.

அல்லாஹு கூறி உள்ளது,
உமது உணவும், பானமும் பாரும், அது கெட்டு போகவில்லை, மேலும் உமது கழுதையை பாரும் என்று மட்டுமே அல்லாஹு கூறுகின்றான்.

இதிலிருந்து, உணவும், பானமும், கேட்டுபோகவில்லை, கழுதையும் உயிரோடு இருக்கிறது என்று தான் பொருள். நீ பொருள் கொண்டதன் படி 100 ஆண்டுகள் அவர் மரணித்து இருந்தால், இவை மூன்றும் கேட்டு போயிருக்கும்.
ஆனால் அல்லாஹு, ஆவை 3-ம் கெட்டு போகவில்லை என்று கூறுகின்றான். இதிலிருந்து, இது ஒரு கனவு காட்சி என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

எனவே அடிப்படையான கருத்துக்கு எதிராக, அதாவது இயற்க்கை சட்டத்திற்கு எதிரான பொருள் ஒன்றும் இவ்வசனத்தில் இல்லை.

எனவே இந்த வசனத்தை வைத்துக்கொண்டு, ஈஸா நபி 2000 வருடங்களாக உயிரோடு இருக்கிறார் என்று நிரூபிக்க முடியாது.

மேலும் அல்லாஹு ஈஸா நபியை பற்றி அவர் உயிரோடு இருப்பதாகவோ, 2000 வருடம் என்றோ எங்கும் கூறவில்லை.
எனவே உன் வாதம் தவறு.

மேலும் அடுத்த தொடர், இன்ஷா அல்லாஹ்

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (B)



அன்புள்ள nashid, உனது 11.5.14 தொடர் 1 பாகம் 4 க்கு பதில்.

1) நீ எழுதி உள்ளாய் : “ஈஸா மரணித்து விட்டார்..ஈஸா நபி மரணித்து விட்டார் என்று கூறி கூறியே நாட்கள் கடத்திய நீங்கள் அதற்கு சான்றாக காட்டிய ஐந்து ஆதாரங்கள் எவ்வாறு உங்கள் கருத்தை நிலைபெற செய்யவில்லை என்பதை முந்தைய பதிவில் விளக்கமாக பார்த்தோம்.”

என் பதில் : முந்திய உன் பதிலில், நீ உருப்படியாக பதில் தர முடியாததால் வேண்டுமென்றே குழப்பி உள்ளாய். மேலும் சரியான பதிலை தந்தது போன்று திரும்ப திரும்ப எழுதுகிறாய்.

இதுவரையிலும், குதர்க்கமாக மறுத்தும், உலக வாதிகளை உதாரணம் காட்டியும் எழுதி உள்ளாய், மாறாக ஒரு வசனம் கூட ஆதாரமாக உன்னால் காட்டமுடியவில்லை.

2) நீ எழுதி உள்ளாய், நீங்கள் கியாமத் நாள் வரை முயன்றாலும் ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்பதற்கு எந்த சான்றையும் உங்களால் தர முடியாது.

என் பதில் : 2000 ஆண்டுகளாக ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்குத்தான் சான்று காட்ட வேண்டும். மரணித்தவருக்கு நான் சான்று காட்டவேண்டும் என்று நீ கேட்டிருப்பது விந்தையிலும் விந்தை.

ஆனாலும், பல கிஸ்ஸாக்களை நெஞ்சிலே சுமந்து கொண்டு, கிறிஸ்தவர்களை போன்று கற்பனையை, மாயையை நம்பி,

குரானை முதுகுக்கு பின்னால் எறிந்துவிட்ட ஆலிம்களை நீங்கள் பின்பற்றிக் கொண்டு இருப்பதால் தான், நேரமில்லாத நிலையிலும், நான் இந்த முயற்சியை மேற்கொண்டு, அதன் அடிப்படையில், 5 வசனங்களை வைத்து ஈஸா நபி மரணித்து விட்டார் என்று நிரூபித்துள்ளேன்.

3) விவாதம் ஆரம்பித்த பிறகு, இப்போது தான், முதல் தடவையாக ஈசாவை உயர்த்தி உள்ளதாக தவறான ஒரு கருத்தை வைத்துள்ளாய்.
நீ எழுதிஉள்ளது :

“அவரை சிலுவையில் அறைவதற்காக கொண்டு செல்லப்பட்ட சம்பவத்தை அல்லாஹ் 4 ஆம் அத்தியாயத்தில் விளக்குகிறான். அதில், அவரை கொன்று விட்டதாக யூதர்கள் எண்ணுகிறார்கள். அதைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது, அவர்கள் அவரை கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. அவர்கள் தவறான நம்பிக்கையிலேயே இருக்கிறார்கள் நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை என்று அல்லாஹ் சொல்லி விட்டு, அவரை தன்னளவில் உயர்த்திக் கொண்டதாகவும் சொல்கிறான்.
இவை 4:157,158 வசனங்களில் சொல்லப்பட்டுள்ள சம்பவம்.
இது உடலுடனான உயர்த்துதல் இல்லை, அந்தஸ்து உயர்வு, என்றெல்லாம் உங்கள் தரப்பில் வைக்கப்படும் எந்த வாதமும் அர்த்தமில்லாதது, அவற்றை நீங்கள் சொல்கிற போது, அவை எந்த அளவிற்கு பொருத்தமற்றது என்பது விளக்கப்படும்.
உடலோடு உயர்த்தப்பட்டார் என்கிற பொருளாக்கம் தான் சரியானது, இவ்விடம் பொருத்தமானது.கொல்லப்பட இருந்த ஈஸாவை தன்னளவில் உயர்த்திக் கொண்டதாய் அல்லாஹ் சொல்கிறான் என்றால், இங்கேயும் சிந்தனையை செலுத்த வேண்டும்.
அப்படியானால் அவர் அல்லாஹ்வால் உடலோடு உயர்த்தப்பட்டு விட்டார்.”என்று நீ எழுதி உள்ளாய்.

என் பதில் :

A) குரான் 4:157, 158 வசங்களை முழுமையாக வைக்காதது ஏன்?

B) நீ எழுதி உள்ள “உடலோடு உயர்த்தப்பட்டார் என்கிற பொருளாக்கம் தான் சரியானது, இவ்விடம் பொருத்தமானது”---- இதற்கு என்ன ஆதாரம்?

C) ரஃபஅ என்பதற்கு உடலோடு உயர்த்தபட்டார் என்று எழுதி உள்ளதற்கு, ஆதாரம் வைக்காமல், தான் தோன்றித்தனமாக பொருள் கொடுத்ததற்கு என்ன காரணம்?

D) ஈஸா நபி மனிதர் என்ற முறையிலும், தூதர் என்ற முறையிலும், பொய் கடவுள் என்ற முறையிலும், இயற்க்கை விதிக்கு எதிராக, உண்ணாமல்,குடிக்காமல் வழமுடியாது என்பதன் அடிப்படையிலும், நபியே நீர் மரணித்து அவர்கள் உயிரோடு இருப்பதா என்ற அல்லாகுவின் கேள்வியின் அடிப்படையிலும், ஈஸா இறந்துவிட்டார் என்று தெளிவான ஆதாரங்கள் இருந்தும்,

அந்த ஆதாரங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, கிறிஸ்தவ கொள்கையை நிலை நாட்டும் வகையில், அல்லாஹூ சொல்லாத ஒன்றை, அதாவது ஈஸா உடலோடு உயர்த்தபட்டதாக நீங்கள் சொந்தமாக எழுதி உள்ளது எதை காட்டுகிறதென்றால், 3456 ஹதீஸின் படி நீங்கள் கிறிஸ்தவர்களை போன்று ஆகிவிட்டீர்கள் என்பதைதான்.

E) எனவே எனது கேள்வி என்னவென்றால், எதன் அடிப்படையில், ரஃபஅ என்பதற்கு உடலோடு உயர்த்தபட்டார் என்று பொருள் கொடுத்துள்ளாய்?

F) 100 வருடங்களுக்கு முன்னர், கிறித்தவ பாதிரிமார்கள் போலியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, அவர்களின் நம்பிக்கையை குரான் தர்ஜுமா, மற்றும் தப்சீர்களில் நுழைத்துள்ளார்கள். அதே போல 1000- க்கணக்கான தீய முஸ்லிம் ஆலிம்கள், கிறிஸ்தவர்களாக மாறி, குரானின் வசனங்களுக்கு, அவர்களுக்கு சாதகமான அர்த்தங்களை புகுத்தி உள்ளார்கள் .

மேற்சொன்ன கருத்துக்களை PJ போன்ற ஆலிம்கள் பல வருடங்களுக்கு முன்னர் எடுத்து வைத்து பிரச்சாரம் செய்துள்ளார்கள்.

அதாவது , இன்றய முஸ்லிம்களின் மத்தியில் கபரு வணக்கம் ஏற்பட்டதற்கு காரணமே, அதாவது இறந்துபோன நல்லடியார்கள், நாம் வேண்டுவதை கேட்கிறார்கள் என்ற நம்பிக்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டதற்கு காரணமே, யூத கிறிஸ்தவர்களின் சூழ்ச்சி என்றெல்லாம் PJ போன்ற ஆலிம்கள் மார்க்க பிரச்சாரம் செய்தார்கள்.

ஆனால் அந்த backward ஆலிம்களுக்கு பதில் கொடுத்து தட்டிக்கேட்ட, இந்த forward ஆலிம்கள், ஈஸா நபி விஷயத்தில், கிறிஸ்தவர்களின் கடவுள் கொள்கைக்கு, தன்னை, தெரிந்தோ தெரியாமலோ இரையாக்கிக் கொண்டார்கள்.

G) அது மட்டுமல்ல எல்லா நபிமார்களும், எதிரிகளால் மறுக்கபட்டது போலவே, இக்காலத்தில் தோன்றிய ஹஸ்ரத் ahmed அலை அவர்களை மறுக்கவேண்டும் என்ற ஒரே கரணத்திற்காக, எந்த ஆதாரமும் இல்லாமலே ஈஸா நபியை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

.h) எனவே உடலோடு உயர்த்தபட்டார் என்று தவறாக பொருள் கொடுத்துள்ளதற்கு ஆதாரம் காட்டு .

I) அல்லாஹு அனுப்பிய பல நபிமார்களை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல், தூற்றி, பொய்ப் படுத்தி, கொடுமைப் படுத்தி, கொலை செய்வதற்கும் முயற்சி செய்துள்ளதாக மார்க்க வரலாற்றில் காணமுடிகிறது.

அதே போன்றே ஈஸா நபியும் அந்த தீய யூத ஆலிம்களால் பொய் படுத்தபட்டு, தூற்றப்பட்டு, பல கொடுமைகள் இழைக்கப்பட்டு, கொல்ல முயற்சி நடைபெற்றது.
ஆனால் அல்லாஹு ஈசாவை காப்பாற்றி, ஈசாவுக்கு மிகவும் உயர்வை, கண்ணியத்தை கொடுத்தான்.

J) ஹஸ்ரத் முஹம்மத் ஸல் அவர்களையும், பின்பற்றிய முஸ்லிம்களையும் மக்கத்து எதிரிகள் பொய்ப் படுத்தி, தூற்றி, கொடுமைப் படுத்தி, கடைசியில் முகம்மதை கொல்வதற்கு 100 ஒட்டகங்கள் பரிசும் அறிவிக்கிறார்கள். எதிரிகள் ஏராளமானோர் நபியின் வீட்டை முற்றுகையிட்டு விட்டார்கள்.

அடுத்த நொடியில், நபி அவர்களை, எதிரிகள் கொல்வதற்கான எல்லா சாத்யமும் இருந்தது.

இந்த இக்கட்டான சந்தர்பத்திலும் கூட, நபி ஸல் அவர்களை அல்லாஹு அப்படியே உடலோடு தூக்கவில்லையே! ஏன்?

ஆனால் அல்லாஹு மிகவும் எளிய முறையில் நபி ஸல் அவர்களை காப்பாற்றினான்.

அதாவது நபி அவர்கள், மிகவும் தைரியமாக வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள், மிகவும் தைரியமாக எதிரிகளின் முன்னிலையிலேயே நடந்து, வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

ஒரு நபி அல்லாஹு மீது கொண்ட நம்பிக்கை, அல்லாஹு மீது வைத்துள்ள தவக்கல், இதன் காரணமாக நபிக்கு அல்லாஹு தைரியத்தை கொடுக்கிறான்.

அதே போன்று தன் மீது தவக்கல் வைத்துள்ள நபியை, மிகவும் எளிய முறையில் அல்லாஹு காப்பாத்துகிறான்.

இயற்கை சட்டத்துக்கு எதிராக நபியை உடலோடு உயர்த்தவேண்டிய கட்டாயமே அல்லாகுக்கு தேவை இல்லை.

அதன் பிறகு தவ்ரு குகையில் மறைந்து தங்கிய, நபி ஸல் அவர்களை ஒரு சிலந்தி வலையின் மூலம் அல்லாஹு காப்பாற்றினானே ஒழிய, தனது ரசூலை உடலோடு உயர்த்தவில்லையே?

பின்னர் மக்காவிலிருந்து, மதீனா சென்று, கடைசியில் மக்கா வெற்றியை கொடுத்து நபி ஸல் அவர்களுக்கு மிக பெரிய உயர்வை கொடுத்தான்.

K) இதே போன்ற ஒரு நிலை தான் அல்லாகுவின் அடியாரான ஈசாவுக்கும் ஏற்பட்டது. ஆனால் அல்லாஹுவோ எதிரிகளின் திட்டங்களை முறியடிக்கின்றான். ‘

அவர்களும் திட்டம் தீட்டுகிறார்கள், அல்லாஹுவும் திட்டம் தீட்டுகிறான், அல்லாஹுவின் திட்டம் வெற்றிபெறும்’ என்ற குரான் வசனத்திற்கு ஏற்ப ஈஸா நபியை காப்பாற்றி அவர்களுக்கு மேலான உயர்வை அளிக்கின்றான்.
எப்படி நபி ஸல் அவர்களை எதிரிகளின் பிடியிலிருந்து காப்பாற்றி, தவ்ர் குகையில் தங்க செய்து, பின்னர் மதீனாவில் புகலிடம் அளித்து, கடைசியில் மக்கத்தை வெற்றி கொள்ள செய்து, மேலான உயர்வையும், கண்ணியத்தையும், அந்தஸ்தையும் அல்லாஹூ வழங்கினானோ,

அதே போன்று ஈஸா நபியை எதிரிகளின் பிடியிலிருந்து காப்பாற்றினான்; மேலான உயர்வை வழங்கினான்.

L) குரானில் நீ காட்டிய ஆயத்தில் ரஃபஅ என்ற சொல்லுக்கு உடலோடு உயர்த்துதல் என்று பொருள் உள்ளதாக ஒரு ஆதாரமும் காட்ட முடியாது.

இப்போதுள்ள forward ஆலிம்கள், ஈஸா நபியை பற்றி மட்டும் கிஸ்ஸாவை அளந்துள்ளார்கள் என்று நினைக்க வேண்டாம். எல்லா நபிமார்களை பற்றியும், தப்ஸீர் என்ற பெயரால் கிஸ்ஸாக்களை புனைந்துள்ளார்கள், என்பதை இன்ஷா அல்லாஹ் எடுத்துரைப்பேன்.

M) நான் ஏற்கனவே ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்பதற்கு குரானிலிருந்து 5, 6 வசனங்களை காட்டி உள்ளேன். அதற்கு மாறாக நீ ரஃபஅ என்பதற்கு தவறான பொருள் கொடுத்து ஈசாவை அல்லாஹு உடலோடு உயர்த்தி உள்ளதாக கூறி உள்ளாய்.

எனவே ரஃபஅ என்பதற்கு உடலோடு உயர்த்துதல் என்று பொருள் உண்டு என்பதை நீ நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால், ஈஸா நபி விஷயத்தில் நீங்கள் ஷிர்க் செய்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

இதிலிருந்து புகாரி 3456 இன் படி முஸ்லீம்கள் ,யூத கிறிஸ்தவர்களை சாணுக்கு சாண் பின்பற்றுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது.

4) நீ எழுதி உள்ளது: “43:61 வசனத்தில் கியாமத் நாளுக்கு
அடையாளமாக ஈஸாநபி இருப்பார் என்றும் அல்லாஹ் சொல்கிறான் !”

என் பதில் :

ஈஸா நபி என்று அந்த மூல வசனத்தில் இல்லை.

மேலும் நீ எழுதி உள்ளது: அவர் தான் தஜ்ஜாலை கொல்வார், ...... டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். ........ அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார்........

என் பதில்:

இவைகளை எல்லாம் நீ இப்போது எழுதுவதற்கு என்ன தேவை? அதற்கு பதில் சொல்ல தேவையும் இல்லை. ஒவ்வொரு தொடரிலும் நாம் பேசும் கருத்தை குழப்பிவிட்டு, மேலே உள்ள ஹதீசுகளை கூறி TRACK மாறுகிறாய். இதிலிருந்தே உன்னிடம் எந்த உண்மையும் இல்லை என்று புலனாகிறது.

ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்பதற்கு தெளிவான,உறுதியான 5 வசனங்களை வைத்துள்ளேன்.
அதற்கு ஒழுங்காக பதில் சொல்லாமல், கருத்துக்களை அங்கும் இங்கும் எழுதி சாமிரி வேலை பார்க்கிறாய்.

எனவே முதலில் ஈஸா நபி உயிரோடு இருக்கிறார் என்பதற்கு சொந்த விளக்கத்தை விட்டு விட்டு, ஒரு ஆதரத்தையாவது காட்டு.

இந்த subject ஐ பேசி முடித்த பிறகு,கியமத்தில் வந்து, எப்படி தஜ்ஜாலை கொல்வார், பன்றியை கொல்வார்.....என்பதையெல்லாம் பார்ப்போம்.

எனவே TRACK மாறுவதை விட்டு விட்டு, ஈஸா நபி இறந்துவிட்டார் என்பதை ஒப்புக்கொண்டு, ஷிர்க்கிலிருந்து வெளியே வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் மேலும் தொடரும்.