சனி, 21 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : பிரதமர் கனவில் ஜெயலலிதா


எந்த கட்சிக்கும் இம்முறை தனிப் பெரும்பான்மை கிடைக்காது என காங்கிரஸ் கட்சியே கூறி விட்ட நிலையில், அரசியல் சாணக்கியத்துடன் கூட்டணி அமைக்க மாநில கட்சிகள் முன் வந்து, வலிமையான மூன்றாம் அணி அமைப்பது ஏறக்குறைய‌ உறுதியாகி விட்டது.

கடந்த எந்த தேர்தலை போலும் அல்லாமல் இம்முறை தமிழக அளவில் இரு தேசிய கட்சிகளும் நட்டாற்றில் விடபட வாய்ப்புகள் உள்ள நிலையில், மூன்றாம் அணி டில்லி செங்கோட்டையை பிடிக்க வாய்ப்புகள் அதிகமுள்ளன என்கிற ஊடகங்களின் கணிப்புகளில் உண்மை உள்ளது !

40 எம்பிக்களை ஒரு கட்சி சொந்தமாக்கி கொள்ளும் பட்சத்தில், ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக அது திகழ தற்போது சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன.

ஜெயலலிதாவை பிரதமராக்குவதற்கு எவருக்கும் தயக்கமில்லை.

ஏற்கனவே முஸ்லிம்களுக்கு அமலிலுள்ள 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தி தரும் பட்சத்தில், ஜெயலலிதா இம்முறை டில்லி செங்கோட்டையை பிடிப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமே !!

அதே சமயம், வாய்ப்பிருந்தும் தர மறுக்கும் பட்சத்தில், வேண்டுமென்றே முஸ்லிம் சமூகத்தை அவர் புறக்கணித்தார் என்று தான் எடுத்துக் கொள்வோம்.
புறக்கணிப்பையும் வஞ்சனைகளையும் இனியும் இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது.
அப்படியொரு நிலை உருவாகுமானால், அதிமுகவின் பிரதமர் கனவுக்கு வேட்டு வைக்கும் சக்தியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திகழும், இறைவன் நாடினால்.. !

இன்னும் 3 மாதங்கள் அவகாசம் உள்ளன.. The ball is in your court, Jeyalalithaa Madam !!

சீனக்காரன் வைத்த இணைவைப்பு


அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றலைப் போல் இறந்தவர்களுக்கும் உண்டு என்று ஏதேனும் ஹதீஸ் இருந்து (ஒரு வாதத்திற்கு), அதன் தமிழாக்கத்தை ஒரு சீன மொழி பேசக்கூடிய ஒருவனிடம் கூறினால், அவனும் "அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றலைப் போல் இறந்தவர்களுக்கும் உண்டு" என்கிற தமிழாக்கத்தை திரும்ப சொல்வான், அதை புரியாமலேயே நம்புவான்.

அதுவே, அந்த தமிழாக்கத்தை சீன மொழியில் மொழிப்பெயர்த்து கொடுத்தால்,. ஆஹா.. இது ஷிர்க் அல்லவா? என்று கூறி தவிர்ந்து விடுவான்.

அப்படியானால், சீன மொழியில் மொழியாக்கம் செய்து கொடுப்பது வரை அவன் ஷிர்க்கை நம்பிய முஷ்ரிக், மொழியாக்கம் கிடைத்த பிறகு முஷ்ரிக் இல்லையா?

அந்த செய்தியை நம்புவது ஷிர்க் என்றாலும், சீன மொழியில் மொழியாக்கம் செய்வது வரை, அந்த செய்தியிலுள்ள ஷிர்க் என்ன என்பதை அவன் புரியவில்லை. ஆகவே அவனை முஷ்ரிக் என்று சொல்ல மாட்டோம்.

சீன மொழியில் மொழியாக்கம் செய்து கொடுப்பது வரை அவனுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளலாமா? என்றால் ஆம் என்பதே நமது பதில் !

சீன மொழியில் மொழியாக்கம் செய்து கொடுப்பது வரை அவன் பின்னின்று தொழலாமா? என்று கேட்டால் ஆம் என்பதே நமது பதில் !

மொழியாக்கம் கிடைத்த பிறகும் அவன் இதே நம்பிக்கையை தொடர்ந்தால்
அப்போது அவன் முஷ்ரிக் தான்,
அப்போது அவன் பின்னின்று தொழக்கூடாது தான்,
அவனுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது தான் !!

கண் மூடித்தனமான மார்க்கமில்லை இஸ்லாம் ! சிந்தனை செறிவுள்ள மார்க்கம் !!

செவ்வாய், 17 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : தோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ்


பாஜக பிரதமர் வேட்பாளர் பெரும்பான்மையான மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர் என்பது நிதர்ஸனமான உண்மையாக இருப்பினும், அவருக்கென பிரத்தியேகமான ஆதரவலை வீசுவது போன்ற மாயை ஊடகங்களால் பொய்யாக பரப்பபடுகின்றன.

இது குறித்து ஊடகங்களை சாடுவது ஒரு புறமிருக்க, இது போன்ற மாயத் தோற்றம் உருவாவதற்கு, அதன் எதிரி கட்சியான காங்கிரஸ் கட்சியே முக்கிய காரணம்.

ஏற்கனவே திக்விஜய் சிங் மோடியை புகழ்ந்து பராட்டியது பற்றியும், மோடியை நாங்கள் கவனத்துடன் தான் எதிர்கொள்கிறோம் என மெத்தம் படித்த மன்மோகன் சிங் பேசியதும் முதிர்ச்சியற்ற பேச்சுக்கள் என்கிற குற்றசாட்டை நாம் வைத்திருந்தோம்.

அதன் தொடர்ச்சியாய், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் நேற்று உதிர்த்த முத்து இதோ..

"வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது" !!??!@@!!#@#

அதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது என்று வெட்கமில்லாமல் இப்போதே ஒப்புக்கொண்ட புண்ணியவான் நம்ம சிதம்பரம் அய்யா !!

நாம் வெற்றி பெறுவதற்கு நமது திறமையும் மக்கள் ஆதரவும் ஒரு வகையான காரணம் என்றால், எதிரிகளின் பலகீனம் இன்னொரு காரணமாக அமையும்.

இதை கூட புரிந்து கொள்ளாத முதிர்ச்சியற்றவர்கள் எவ்வாறு இந்தியாவில் அரசியல் செய்கிறார்கள் என்பது தான் ஆச்சர்யம் !!

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : கொள்கை முரண்


நபி (ஸல்) அவர்கள் தொப்பி, தலைப்பாகை அணிந்தார்கள் என்று நமக்கு தெரிந்திருந்தும் கூட, அவ்வாறு அணிவது மார்க்கமில்லை என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். காரணம், அவர்கள் அணிந்தது உண்மை என்றாலும் கூட அணியுமாறு சொல்லவில்லை.

இதை செய்யுங்கள், இப்படி செய்யுங்கள் என்று அவர்கள் சொன்னால் தான் ஒரு காரியம் மார்க்க காரியம் என்று ஆகுமே தவிர, வெறுமனே அவர்கள் செய்தவை மார்க்கமாகாது, என்கிற நுணுக்கமான வேறுபாட்டை கூட துல்லியமாய் புரிந்து, பிறருக்கு விளக்கியும் வருகிறோம்.

இந்த நுணுக்கமான புரிதல் தான், இந்த சமூகத்தில் புரையோடிப் போன ஏராளமான நூதனங்களிலிருந்து மக்கள் விடுபடுவதற்கு முக்கிய காரணம்.

ஆனால், இந்த புரிதலில் தெளிவாக இருக்கும் சிலர், பிறை விஷயத்தில் விஞ்ஞான கணிப்பை ஏற்கலாம் என்கிற நிலைபாட்டில் இருப்பது கொள்கை முரண்பாடாகும்.

எப்படி தலைபாகை அணியுமாறு நபி அவர்கள் சொல்லாமல் வெறுமனே அணிய மட்டும் செய்தார்களோ அது போல் பிறை பார்த்து மாதங்களை தீர்மானிக்குமாறு அவர்கள் சொல்லாமல் வெறுமனே ஏதேனும் ஒரு முறையில் செயல்படுத்த மட்டும் செய்திருந்தால் அப்போது பிறையை கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்பது கட்டாயமில்லை எனவும், பார்க்கவும் செய்யலாம், பார்க்காமல் கணிக்கவும் செய்யலாம் என்கிற தொப்பி குறித்த நிலைபாட்டை போன்ற நிலைபாட்டை தான் எடுத்திருப்போம்.

ஆனால், பிறை பார்த்தலை அவர்கள் செயல்படுத்தியதோடு அல்லாமல் இவ்வாறு செயல்படுத்துங்கள் என்று சொல்லவும் செய்து விட்ட பிறகு, அவர்கள் எதை சொன்னார்களோ அது தான் மார்க்கம், எப்படி செய்ய சொன்னார்களோ அப்படி செய்வது தான் மார்க்கம் !!

மார்க்கத்தை பின்பற்றுவதில் இருக்கும் ஆர்வத்தை விட புரிய வேண்டிய முறையில் புரிந்து பின்பற்ற வேண்டும் என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது !!

பெண் வீட்டார் செலவு - ஒரு பார்வை


எதுவெல்லாம் சமூகத்தில் வழமையாக செய்யப்பட்டு அல்லது நம்பப்பட்டு வருகிறதோ அவையெல்லாம் சமூகத்தினால் ஒரு வகையில் நிர்பந்திக்கப்படும் காரியங்கள் என புரியலாம்.

திருமண நாளன்று முழு செலவையும் பெண் வீட்டார் ஏற்றெடுப்பதும் அவர்கள் சார்பிலேயே விருந்து வைப்பதும் கூட சமூகத்தில் வழமையாகிப்போன ஒன்று.

இது வழமையாகி போய் விட்டமையால் தான், அவர்களாக விரும்பி அதை செய்தால் கூட நாம் அதை கண்டிக்கிறோம், அங்கீகரிக்க முடியாது என்கிறோம். 

திருமண பேச்சுவார்த்தை நடக்கிறது, இரு வீட்டாரும் கலந்து பேசி இந்த தேதியில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு மேற்கொண்டு எதையும் பேசாமல் விட்டு விட்டார்கள் என்றால், திருமணத்திற்கென மண்டபம் பிடிப்பது, மணமக்கள் ஆடை அலங்காரங்கள், இன்னபிற ஆடம்பர செலவுகளை செய்வது, திருமண நாளன்று வைக்கப்படும் விருந்து என அனைத்துமே இயற்கையாகவே (default ஆகவே) மணமகள் குடும்பத்தாரின் தலையில் தான் சுமத்தப்படும். 

அதாவது, எதையுமே பேசவில்லையென்றால் பெண் வீட்டார் தான் செலவு செய்ய வேண்டும் என்றும், ஆண் வீட்டார் செலவு செய்வார்கள் என்று குறிப்பிட்டு சொன்னால் மாத்திரம் தான் அது ஆண் வீட்டார் கடமை என்றும் ஆகிறது என்று சொன்னால், 
இங்கே பெண் வீட்டார் மீது சுமத்தப்படும் விருந்து, செலவுகள் என்பது நம் சமூகம் அவர்கள் மீது சுமத்திய கட்டாயக்கடமை என்று புரிகிறது.

தம்மீது சுமத்தப்படும் இந்த கட்டாய சுமையை பலரும் சிரமப்பட்டு சுமப்பார்கள், சிலரோ அதை விரும்பி சுமப்பார்கள். 
அவர்கள் சிரமப்பட்டு செய்தால் அவ்வாறு சிரமப்பட வேண்டும் என்பது அவர்கள் மீது கடமையென்று ஆகும், 
அவர்கள் விரும்பி செய்தால், அது கடமை என்பதால் விரும்பி செய்கிறார்கள் என்று தான் ஆகும்.

சமூக அந்தஸ்து, மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்கிற பார்வை, சமுதாயத்தின் உந்துதல் என பல காரிணிகளால் தூண்டப்படும் பெண்ணின் தகப்பனார் தம்மீது கடமையாகிப்போன காரியத்தை கூட விரும்பி ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தான் வருவார். 

பெண்ணின் தகப்பனார் செலவு செய்வது சமூகத்தில் பெருமைமிக்க காரியமாக இன்றும் கருதப்படுவதால் தான் அதை அவர் விரும்பி செய்கிறாரே தவிர, பெண் வீட்டு விருந்து என்பது ஒரு கேவலம் என்கிற கண்ணோட்டத்திற்கு இந்த சமூகம் மாறி விடும் போது அந்த கேவலமான நிலையையும் தாண்டி எந்த பெண்ணின் தந்தையும் விரும்பி கொடுக்க முன்வர மாட்டார். 
அப்போது அவரது விருப்பத்தை விட சமூகம் தம்மை கேவலமாக பார்க்குமே என்கிற அச்சம் தான் அவருக்கு பிரதானமாக தெரியும்.

ஆக, விரும்பி தான் கொடுக்கிறார்கள் என்கிற வாதம், நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானமாகத் தான் இருக்குமேயொழிய, இதில் நடுநிலை பார்வை சற்றும் இல்லை.

நாம் ஏற்கனவே சொன்னது போல, இயற்கையான அமைப்பு என்பது ஆண் வீட்டார் விருந்து என்றும், குறிப்பிட்டுப்பேசினால் மட்டும் தான் அது பெண் வீட்டாரின் செலவு என்றும் என்றைக்கு இந்த சமூகத்தில் மாறுதல் பெறுகிறதோ அப்போது, பெண்ணின் தகப்பனார், இதை நான் விரும்பி செய்கிறேன் என்று சொல்லட்டும், நாம் ஏற்போம் !!

சமூகம் மாற்றம் காணாதவரை விரும்பி கொடுத்தலும் மறைமுக வரதட்சணை தான் என்பதே உண்மை !!

அடுத்ததாக, இன்னொரு முக்கிய விஷயத்தையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். 

மணமகன் தான் திருமண விருந்து வைக்க வேண்டும் என்கிற அடிப்படையை சிந்திக்கையில், நபிகள் நாயகம் (சல்) அவர்கள் காலத்தில் அவ்வாறான விருந்துக்கு தான் மக்கள் அழைக்கப்படவும் செய்தனர். 

திருமணம் என்பது ஐந்து நிமிடத்தில் செய்யப்படும் ஒரு ஒப்பந்தம். அதை செய்வதற்கு என நபி காலத்தில் எவரையும் எந்த சஹாபியும் அழைத்ததாக சான்றுகள் இல்லை. நபி (ஸல்) அவர்கள் செய்த திருமணங்களில் கூட, நிக்காஹ் செய்வதற்கு என எந்த தோழரையும் அழைத்து உடன் வைத்திருக்கவில்லை. 

அவர்கள் அழைத்ததெல்லாம், அழைக்க சொன்னதெல்லாம் திருமணத்தை ஒட்டிய வலிமாவுக்கு தான். 

ஆக, திருமணத்தை நடத்தி, அதில் பெண் வீட்டார் சார்பில் விருந்தும் இடுவார்கள் எனில், அது ஒரு சமூக தீமை என்பது ஒரு புறமிருக்க, அவ்வாறான நாளில் மக்களுக்கு அழைப்பு கொடுப்பதற்கு கூட மார்க்கத்தில் ஆதாரமில்லை !

வெள்ளி, 13 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : மனோஇச்சை மார்க்கமாகாது


நாம் விரும்புகிற‌ விதத்தில் மார்க்கம் இருக்க வேண்டும் என்று எண்ணுவது ஒரு வகையான நோய்.

மார்க்கம் என்பது அல்லாஹ்வுக்குரியது. எது சரி, எது தவறு என்பதை அவன் நமக்கு சொல்லித் தர வேண்டும், நமக்கு விருப்பமில்லாமல் இருந்தாலும் சரியே.

இதை அடிப்படை செய்தியாய் மனதில் கொண்டோமேயானால், மார்க்கத்தின் சட்ட திட்டங்களை கேலி செய்யும் கூட்டம் உருவாகியிருக்காது.

தொடையை மறைக்கும் வகையில் ஆடை அணிவது என்பது நமது விருப்பமாய் இருந்தாலும் கூட, திறந்து வைக்கலாம், வெளிக்காட்டலாம் என்பது தான் அல்லாஹ்வின் அனுமதி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடை திறந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை, சத்தியம் !

இதை முஸ்லிம் 4414, புஹாரி 371, புஹாரி 3695,இப்னுமாஜா 793, புஹாரி 3661, புஹாரி 365 போன்ற ஏராளமான ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.

மார்க்கம் என்பது நபியின் சொல், செயல் தானே தவிர, நமது சுய விருப்பமோ மனோ இச்சையோ இல்லை.

வழக்கம் போல், குர்ஆன், ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்பதில் உறுதியாய் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் அனைவருமே இவ்விஷயத்தில் தங்கள் மனோ இச்சையை தான் மார்க்கமாகுவார்கள் !

வியாழன், 12 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : ஓரின சேர்க்கை


ஓரின சேர்க்கைக்கு தடை விதித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தை எதிர்த்து இப்போது ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. இந்த கூட்டம் ஓரின சேர்க்கை தான் அறிவுப்பூர்வமானது எனவும், அதை தடுப்பது தனி மனித சுதந்திரத்தை தடுப்பதாகும் எனவும் குரல் கொடுத்து வருகிறது.

இந்த கூட்டம், யாருக்கும் தெரியாத சிறு சிறு குழுக்களா? இல்லை. 

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற மக்கள் ஆதரவு பெற்ற கட்சிகள் தான் ஓரின சேர்க்கை எனும் அனாச்சாரத்தை ஆதரித்து குரல் கொடுக்கிறார்கள்.

தனி மனித ஒழுக்கத்தையும், அதன் வெளிப்பாடாய் சமுகம் பெறும் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகத்தான் தனி மனித சுதந்திரம் பேணப்பட வேண்டுமேயல்லாமல், ஒழுக்கத்தை மீறிய தனி மனித சுதந்திரம் என்பது சுத்த பேத்தல் என்பதை இவர்கள் புரிய மறுப்பது வியப்பாய் உள்ளது.

தனி மனித சுதந்திரம் என்கிற அளவுகோல் கொண்டு மட்டும் சிந்திப்பதாக இருந்தால் மது அருந்துவதிலிருந்து, விபச்சாரம் புரிவதிலிருந்து சமூகத்தில் நிலவும் அனேக குற்ற செயல்களுக்கும் இதே அளவுகோலை பொருத்தி இவர்கள் அனுமதிக்க வேண்டும்.

விபச்சாரம் புரிகிறவனை சட்டமியற்றி தடுப்பது என்பது அவனது சுதந்திரத்தை பறிப்பதாக ஆகாதா? என்பதற்கு மெத்தம் படித்த மேதாவிகள் விடை சொல்வார்களா?

புதன், 11 டிசம்பர், 2013

முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்?



முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பது ஷைத்தானின் தூண்டுதலை தான் குறிக்கிறது என்பதற்கு பல சான்றுகளை நாம் முன் வைத்திருக்கிறோம்.

முடிச்சு என்பதற்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு ?

இரவில் தூங்கும் போது மூன்று முடிச்சுகளை ஷைத்தான் இடுகிறான் என புஹாரி 1142 இல் சொல்லப்பட்டுள்ளது.

ஊதுதலுக்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு?

ஷைத்தானின் தூண்டுதலை அவனது ஊதுதல் என்றும் அத்தகைய ஊதுதலிலிருந்து பாதுகாப்பு தேடுமாறும் அபுதாவுத் 651 இல் சொல்லப்பட்டுள்ளது.

ஷைத்தானை ஏன் பெண்பாலாக ஏன் சொல்ல வேண்டும்?

இதற்கான விடையை அறிவதற்கு முன், இது தொடர்பாக சலஃபிகளின் முரண்பாட்டை விளக்க வேண்டியுள்ளது. இந்த வசனம் ஷைத்தானை தான் சொல்கிறது என்று நாம் சொல்லும் போது, அப்படியானால் இங்கு ஏன் பெண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது? பெண் ஷைத்தானிடமிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா? என்று குதர்க்கமாக கேட்பர்.

அதே சமயம், இந்த வசனம் சூனியத்தை தான் குறிக்கிறது எனவும் இன்னொரு பக்கம் சொல்வார்கள்.
அப்படியானால் சூனியத்தை பெண்களால் மட்டும் தான் செய்ய முடியுமா? அல்லது பெண்கள் செய்யும் சூனியத்திலிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா? என்று, இவர்களது கேள்வியை நாம் இவர்களிடமே திருப்பிக் கேட்பதன் மூலம் இவர்களது சந்தர்ப்பவாதத்தையும் முரண்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.

இந்த வசனத்தில் பயன்படுத்தப்படும் நஃப்ஃபாஸாத் என்பது இலக்கண அடிப்படையில் பெண்பாலை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் கூட, பொருள் அடிப்படையில் அது பொதுவாய் சொல்லப்படுபவை தான்.
முடிச்சுகளில் ஊதுபவைகளின் தீமையை விட்டும், என்று பொதுவாய் மொழியாக்கம் செய்வதும் இவ்விடத்தில் தகும்.

இதற்கு சான்றாய் குர்ஆனின் வேறு பல வாசகங்களை இங்கே பார்க்கலாம்.

79:1 5 வசனங்களில் பொதுவாக மலக்குகளை பற்றி அல்லாஹ் பேசும் போது நாஸியாத், நாஷிதாத் என்கிறான். இவை, இலக்கணப்படி பெண்பாலாக இருந்தாலும் மலக்குகளில் அவ்வாறு பாலின வேறுபாடு கிடையாது என்பதே சரி. இங்கு பொதுவாய் மலக்குகள் அனைவரையும் குறிக்கும் என்று தான் புரிய வேண்டுமே தவிர மலக்குகளில் பெண் மலக்கு உண்டு என்று புரியக்கூடாது !

அது போல், 77:5 வசனத்தில் இதயத்தில் உபதேசங்களை இடும் மலக்குகள் பற்றி சொல்கிற இடத்தில் முல்கியாத் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் பெண்பாலை குறிக்கும் சொல் தான்.

அரபு மொழியில் இலக்கண ரீதியில் பாலின வேறுபாட்டுடன் குறிப்பிடுவது பயன்பாட்டில் இருக்கிறது, கருவுற்றிருக்கும் பெண்ணை குறிக்க ஹாமில் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், ஹாமில் என்பது ஆண்பால் !

மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை குறிக்க ஹாயில் என்கிற சொல் உபயோகப்பட்டாலும் ஹாயில் என்பது இலக்கணப்படி ஆண்பாலாகும்.

ஆக, முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்று மொழியாக்கம் செய்தாலும், அது ஜின் இனத்தின் ஆண், பெண் என இரு பாலரையும் பொதுவாய் குறிக்கும் பொதுவான சொல் தான்.


ஷைத்தான் உடல் உபாதை செய்வானா?


ஷைத்தானின் ஆற்றல் என்பது உள்ளத்தில் கெட்ட எண்ணங்களை இடுவதும் அதன் மூலம் நம்மை வழிகெடுப்பதும் தானே தவிர, உடல் உபாதைகள் செய்வது அவனது ஆற்றலில் உள்ளவை இல்லை.

இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றாலும், உடல் உபாதைகளை செய்யலாம் என்கிற கருத்துடையவர்கள் தங்கள் நிலைபாட்டுக்கு சான்றாய், அய்யுப் நபி தமக்கு ஏற்பட்ட நோயினை ஷைத்தான் தந்தது என்று சொல்வதையும், வட்டி வாங்கியவர் ஷைத்தானால் பைத்தியமாக்கப்பட்டவர் போல் எழுவார் என்கிற இறை வசனத்தையும் காட்டுவர்.

ஷைத்தானின் சக்தி என்ன என்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எண்ணற்ற சான்றுகள் இருக்கும் போது அவைகளுக்கு முரணில்லாத வகையில் தான் மேற்கூறிய இரு வசனங்களையும் புரிய வேண்டும்.

பொதுவாக நன்மைகளை அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்தியும், கெட்டவைகளை ஷைத்தானுடன் தொடர்புப்படுத்தியும் சொல்லும் வழமை மார்க்கத்திற்கு உட்பட்டது தான்.

இதை முஸ்லிம் 1848 தெளிவாக விளக்குகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கனவின் மூலம் கண்டவைகளாக சொல்லப்படும் செய்தியில், நன்மை யாவும் அல்லாஹ்வே, உன் புறத்திலிருந்து வருபவை எனவும், தீங்குகள் அல்லாஹ்வோடு தொடர்புடையவையல்ல‌ எனவும் சொல்கிறார்கள்.

நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் ஏற்பாடு என்ற போதிலும், அல்லாஹ் நன்மையையே நமக்கு அளிப்பான் என்பதாலும், மனிதனின் கெட்ட செயல்களுக்கு ஷைத்தானை காரிணியாக அல்லாஹ்வே படைத்திருக்கிறான் என்பதாலும், தீமைகளை அல்லாஹ்வுடன் தொடர்புப்படுத்த நபியவர்கள் விரும்பவில்லை.

நபி காலத்து நயவஞ்சகர்கள்,
தொழுகையின் போது குறுக்கே செல்பவர்கள்,
தூக்கத்தின் போது மூக்கில் படியும் அசுத்தங்கள்,
கொட்டாவி விடும் போது வாய்க்குள் நுழையும் பூச்சிகள்,
மாலை நேரத்தில் உலவும் நச்சுப்பிராணிகள்,
ஒட்டகங்கள்

என பலவற்றை ஷைத்தான் என அல்லாஹ்வும் அவனது தூதரும் உவமையாக சொல்லியிருக்கிற ஏனைய சான்றுகளும் குர் ஆன் ஹதீஸ்களில் உள்ளன !

புரிய வேண்டிய முறையில் புரிகிற போது மார்க்கம் எளிமையானதே !!

அஜ்வா முறிப்பது என்ன வகை விஷம்?


விஷத்தை முறிக்கும் ஆற்றல் அஜ்வா பழத்திற்கு உண்டு என்கிற செய்தியை நியாயப்படுத்த, சிலர் மிகவும் பலகீனமான வாதங்களை வைப்பதை காண்கிறோம்.

அதில் சொல்லப்படும் விஷம் என்பது பொதுவாக அனைத்து வகை விஷத்தையும் குறிக்காது என்கின்றனர் இவர்கள்.

குறிப்பு சொல், பொது சொல் என இரு வகை சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளதாகும். "வீடு" என்பது பொது சொல்லாகவும், "அந்த வீடு" என்பது குறிப்பு சொல்லாகவும் பொருள் தருகிறது. குறிப்பு சொல்லாக ஒன்றை சொன்னால் மட்டும் தான் பல வகைகளில் ஒரு குறிப்பிட்ட வகை என்று புரிய‌ வேண்டும். அல்லாமல், பொதுவாக ஒன்றை சொன்னால் அது பொதுவாக அனைத்தையுமே தான் உள்ளடக்கும்.

அஜ்வா தொடர்பான ஹதீஸில் விஷம் என்று நாம் மொழியாக்கம் செய்திருக்கும் சொல்லுக்கு "சம்" என அரபியில் உள்ளது. இது, பொதுவாக எந்த வகையான விஷத்தையும் குறிக்கும் சொல்லாகும். உடலில் ஏற்படும் டாக்சின் என்று இதை குறிப்பு சொல்லாக ஆக்குவதற்கு எந்த முகாந்திரமும் இதில் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூத பெண்மணி விஷம் வைத்து கொல்ல முயற்ச்சித்ததாக வரக்கூடிய செய்தியில் கூட இதே சம் என்கிற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஹதீஸுக்கு உடலிலோ அல்லது வேறு காரணங்களின் மூலமாகவோ உருவாகும் டாக்சின் என்று எதிர் கொள்கையுடையவர்கள் உட்பட எவருமே பொருள் செய்ய மாட்டார்கள்.

இன்னும் சொல்லப்போனால், சம் என்கிற வார்த்தை அக்கால மக்கள் மத்தியில் விஷம் என்கிற பொதுப் பெயருக்கு தான் பயன்பட்டது. இன்று உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், அதனால் உருவாகும் டாக்சின்கள் என்பதெல்லாம் நபியின் காலத்தில் எவருக்கும் தெரியாத ஒன்று.
அத்தகைய ஞானம் இல்லாத கால சூழலில் "சம்" என்று குறிப்பிட்டு சொன்னால், அதன் பொதுப்பெயரில் தான் அதற்கு அர்த்தம் வைத்தார்கள் என்று புரிய வேண்டுமே அல்லாமல், அக்கால மக்களுக்கு விளங்காத அர்த்தத்தில் பேசினார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது.

ஹதீசுக்கு முட்டுக் கொடுக்க, இவர்களாக அர்த்தங்களை திணிக்கிறார்களே அல்லாமல், சத்தியம் இவர்களிடம் இல்லை 

முகனூல் பதிவுகள் : காங்கிரஸின் முதிர்ச்சியின்மை


ஐம்பது வருட பாரம்பரியமும் நிர்வாக அனுபவமும் கொண்ட காங்கிரஸ், தமது அனுபவத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாத, மிகவும் பிற்போக்குத்தனமான, முதிர்ச்சியற்ற வகையில் தான் அரசியல் செய்து வருகிறது. 

பாஜக வெற்றி பெற்று விட்டது என்கிற மனக்குறை பலருக்கும் இருந்தாலும் கூட, காங்கிரஸ் கட்சி இந்த தோல்விக்கு தகுதியானது தான் என்பதே அனைவரும் புரிய வேண்டிய‌ உண்மை !

வாய் திறந்தால் முத்துக்கள் சிதறும் வண்ணம் பேசும் பாரத பிரதமர் என்னவென்றால், நரேந்திர மோடியை எங்கள் கட்சி கவனத்துடன் தான் பார்க்கிறது, அவரை நாங்கள் எளிதாக கருதவில்லை என்கிறார்,

அக்கட்சி சார்பாய் பாஜகவிற்கு உருப்படியாய் பதிலடி கொடுத்து வந்த திக்விஜய் சிங் ஒரு படி மேலே (கீழே) சென்று, மோடி நல்ல முதிர்ச்சியுடன் செயல்படுகிறார், வாஜ்பாய்க்கு நிகரான தலைவராக ஆகி விட்டார் என புகழ் மாலை சூட்டுகிறார்..

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்ட்தல் முடிவை பாதிக்காது என்று தேர்தல் வாக்கெடுப்புக்கு முன்னரே பிரதமர் கூறுகிறார்.

பாஜகவினரை விட காங்கிரஸ் கட்சியினரே இப்போது பாஜகவிற்கு ஆதரவாய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் !!

முதிர்ச்சியற்ற வகையில் அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினரின் வாழ்த்துக்கள் !!

நச்சுக்கருத்தை போதிக்கும் போகோ சேனல்


போகோ கார்டூன் சேனலில் சோட்டா பீம் என்றொரு நிகழ்ச்சி

குழந்தைகள் டிவியில் சினிமாவையும் ஆடல் பாடல்களையும் கூத்து கும்மாளங்களையும் பார்ப்பதை தவிர்க்க, இது மாதிரியான கார்டூன் நிகழ்ச்சிகளை காண்பித்துக் கொடுக்கிறோம்.

ஆனால், விபரீதங்களின் வாசல் எல்லா வழிகளிலும் திறந்தே தான் இருக்கின்றன.

சோட்டா பீம் காரக்டர் ஹிந்து புராண கதைகளில் வரும் ஒரு கதாப்பாத்திரம். (ராமரின் அவதாரம் என்று நினைக்கிறேன்)

அவன் சந்திக்கும் பிரச்சனைகளை கார்டூன் கதையாக, குழந்தைகள் ரசிக்கும் படி காட்சியாக்கியிருக்கிறார்கள்.

ஆனால் அந்தோ பரிதாபம்..

கதையில் வில்லன்கள் என சிலரை காட்டுகிறான்.

கடத்தல்காரனை போல் காட்டுகிறான், அந்த கதாப்பாத்திரத்திற்கு முகத்தில் தாடி, தலையில் தொப்பி..!

கொள்ளைக்கார கூட்டமாக சிலரை காட்டுகிறான், அவர்களிலும் முஸ்லிம் கதாப்பாத்திரம் !!

அடப்பாவிகளா, குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களையும் விட்டு வைக்க மாட்டீர்களா???

வெள்ளி, 6 டிசம்பர், 2013

சஜதா செய்தல் : விவாதம் Part 2




Ifham Mohamed

குர்ஆனிலிருந்து தான் ஹதீஸை விளங்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் கேட்கப்பட்டது அதற்கு குர்ஆன் ஹதீஸை பின்பற்ற வேண்டும் என்ற ஆதாரம் தரப்பட்டு விளக்கப்படுத்பப்ட்டது அது பற்றி பதில் கிடையாது.

சலாம் விடயத்தில் என்னுடன் வாதிக்கும் முன்பே உங்கள் நிலைப்பாடு விவாத இறுதியில் வந்தது தான் என்று கூறினீர்கள். நான் வாதம் வைக்க முன்பு உங்கள் இயக்கமோ நீங்களோ இவ்விடயத்தை கூறியதற்கான ஆதாரத்தை தாருங்கள் என்றேன் பதில் இல்லை. 

ஹதீஸிலே இடைச்செருகல் செய்ததை பல முறை சுட்டிக்காட்டியும் ஒரே ஒருமுறை எனக்கு பதில் அளிக்க முடியாத இறுதி சந்தர்ப்பத்தில் மலுப்பல் பதில் அளிக்கப்பட்டது. அதன் பிறகு வாய்திறக்கவில்லை.
யுத்தத்தில் தடை செய்தால் அந்த தடை யுத்தத்தில் தான் என்று ஒரு புதுவாதம் முன்வைத்திருக்க கழுதை இறைச்சியும் யுத்தத்தில் தடைசெய்யப்பட்டது என்று கூறினேன் வேறு பல ரிவாயத்துக்களும் இருக்கின்றது என்றீர்கள். பொதுவாக எத்தனை வந்தாலும் யுத்தத்தில் குறிப்பாக்கியதால் உங்கள் வாதப்படி யுத்தத்தில் தானே தடையாகும்??
மேலும் – 

4:23, 24 மணமுடிக்க தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் தாய் முதல் கொண்டு அல்லாஹ் கூறிவிட்டு இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.- என்பதை நேரடியாகக் கூறுகிறான். 

இதற்கு நேரடி மாற்றமாக புஹாரி 5109 இல் உள்ள அறிவிப்பை காட்டினால் – நீங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக - ஒரு சேர மணமுடிக்கலாம் என்று குர் ஆன் சொல்லியிருந்தால் தான் இது முரண் என்போம். என்று கூறுகிறீர்கள். ஆனால் 4:23 ஒன்று சேர்த்து இரண்டு சகோதரிகளை மணமுடிக்க தடை செய்வதயையும் குறிப்பிட்டே அல்லாஹ் இதற்கப்பால் எல்லாம் அனுமதி என்கிறான். உங்கள் கொள்கைப்படி ஹதீஸ் எவ்வாறு மேலதிக ஆதாரமாகும். முரண்படாதீர்கள்.

அடுத்து 12:100 – 

கட்டுப்படுவதை தான் குறிக்கின்றது என்று கூறுகின்றீர்கள். ஆனால் 41:37 வது வசனமே அவ்வாறு பொருள் கொள்வதற்கு மிகவும் தகுதியானது. இரண்டு கருத்தும் கொடுக்கலாம் எனில்,

சூரியனுக்கும் சந்திரனுக்கும் அடிபணிய வேண்டாம் அவற்றை படைத்த அல்லாஹ்விற்கே அடிபணியுங்கள். என்பதுவே சாலப் பொருத்தமானது 
ஏன் இவ்வாறு மிகத் தகுதியான முறையில் அர்த்தம் கொடுக்க முடியுமாக இருந்தும் மனிதன் மனிதனுக்கு சஜ்தா செய்யக் கூடாது என்ற உங்கள் கொள்கைக்காக இவ்வசனங்களுக்கு உங்களுக்கு ஏற்றாற் போல் விளக்கம் கொடுக்கின்றீர்கள். 

மேலும் சூரியன் சந்திரன் வணங்குவது தொடர்பாக ஒரு விடயத்தை கூறியதற்கு அப்படிச் சொல்லவில்லை என்று கூறினீர்கள். ஏனைய குர்ஆன் வசனங்களை விட்டுவிட்டு எமக்கு தேவையானதை மாத்திரம் எடுத்தால் இந்நிலை தவிர்க்க முடியாததாகும்.

சரி எவ்வாறு எடுத்தாலும் – அடிபணிவது தொடர்பாக வரக் கூடியது சாலச் சிறந்தது என்பதற்கு பின்வரும் வசனமும் ஆதாரமாக இருக்கின்றது.

27:24. இல் “அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு (ஸுஜூது செய்வதை) அடிபணிவதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை. 

என குர்ஆன் கூறுகிறது. வணக்கத்திற்காக செய்வது ஒருபுறமிருக்க, அடிபணிவது என்று 12:100 க்கு விளக்கம் கொடுப்பதை விட மேற்கூறப்பட்ட வசனங்களுக்கு விளக்கம் கொடுப்பதுவே மிகவும் தகுதியுடையதாகும் என்பதை இவற்றை வாசிக்கும் நடுநிலையாளர்கள் கண்டு கொள்வார்கள். 
மேலும்,

12:100 இல் அல்லாஹ் ஹர்ரூலஹூ – விழுந்தார்கள் என்று கூறுகிறான். கட்டுப்பட்டார்கள் என்றால் எதற்கு கட்டுப்பட்டார்கள் என்று இருக்க வேண்டும். அப்படி எதுவும் கிடையாது. கட்டுப்பட்டு விழுந்தார்கள் என்றும் எவ்வாறும் பொருள் கொள்ள முடியாது. அதிலும் சிம்மாசனத்தில் அமர வைத்து, கட்டுப்பட்டு விழுந்தார்கள் என்றால் எங்கே பொருந்துகிறது.

ஆகவே இவ்விடம் – ஸூஜூதில் விழுந்தார்கள் என்பதுவே சாலப் பொருத்தமானது. அல்லாஹ் இவ்வாறு ஸூஜூது செய்வதை தடுக்கவில்லை. 41:37 அடிபணிவதற்கே மிகவும் பொருத்தமானது. ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். உங்கள் கொள்கையின் பிரகாரம் உங்களுக்கு விளக்கப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் – அங்கே யூசுப்(அலை) அவர்கள் தாய் தந்தையரை சிம்மாசனத்தில் அமர்த்தி தான் கட்டுப்பட்டார்கள் என்றால் – அதற்கு முன்பும் பின்பும் அவரது பொற்றோருக்கு கட்டுபடாமலா இருந்தார்கள்? ஒன்றை விட்டுவிட்டு இன்னுமொன்றுக்கு பதில் அளிக்க வேண்டாம்.

//12:4 இல் சூரியன் சஜதா செய்தது என்றல் சூரியன் சிரம் பணிந்தது என்று பொருள் செய்ய மாட்டோம், கட்டுப்பட்டது என்று தான் பொருள் செய்வோம். // எனக் கூறியுள்ளீர்கள். ஆனால் நாம் அவ்வாறு பொருள் கொள்ள மாட்டோம்.

புஹாரி – 3199 சூரியன் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் சஜ்தா செய்யப் போகின்றது சஜ்தா செய்து கிழக்கிலிருந்து உதிக்க அனுமதி கேட்கும் எனவும் ஒரு நாள் அனுமதி மறுக்கப்பட்டு வந்த வழியே திரும்பி விடு என்றும் கூறுகிறது. 
அது மனிதனை போன்று கை,கால் , நெற்றி பட சஜ்தா செய்கின்றதா? என்றால் இல்லை ஆனால் சஜ்தா செய்கின்றது அது எவ்வாறு என்பது எமக்கு தெரியாது. அல்லாஹ் வானம் பூமி அவற்றில் உள்ளவைகள் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதாக கூறிவிட்டு, - அவற்றை எம்மால் உணர்ந்து கொள்ள முடியாது என்று கூறுகிறான். எமக்கு எவ்வாறு என்று தெரியாது என்பதற்காக அது சஜ்தா இல்லை என்பது பிழையான வாதமாகும்.

அதனையும் மீறி கட்டுப்பட்டார்கள் என்றால் எதற்கு கட்டுப்பட்டார்கள் என்று இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் காட்டுங்கள். 

அதே போன்று மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு சிரம்பணிதலும் ஆதம் (அலை) அவர்கள் கட்டுப்பட்டார்கள் என்றால் என்ன வாதம் இது. இவை உங்கள் அறியாமையாக விளங்கிவில்லையா..?? 
அவ்வளவு துாரம் பதில் அளித்து விட்டு – ஹதீஸ் பற்றி கேட்டதற்கு வாயே திறக்கவில்லையே! பார்த்தீர்களா? தற்போது கூறுங்கள் ஹதீஸ் – ஸஜ்தா செய்வதை குறிக்கின்றதா? அடிபணிவதை குறிக்கின்றதா? ஆதாரத்துடன் நிரூபிக்கவும்.



Nashid Ahmed

41:37 வசனத்தில் சுஜூத் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் செய்ய வேண்டும் என்று வருகிறது, இந்த வசனத்தில் சுஜூத் என்பது சிரம் பணியுதல்.ஆகவே 12:100 வசனத்தில் வரும் சுஜூதுக்கு சிரம் பணிதல் என்கிற அர்த்தம் வராது என்பதை எனது முதல் சான்றாக வைத்திருந்தேன்.இதற்கு பதிலாக‌, 41:37 வசனத்திற்கு அடி பணிதல் என்று பொருள் வைக்கிறீர்கள்.

சஜதா என்பதற்கு இரண்டு பொருள் என்பதை விட இரண்டு வகையான பொருள் என்பதே சரி.ஒரு வகை,தொழுகையில் நாம் செய்யும் முறையிலான வணக்கம்.இன்னொரு வகை,மதித்தல்,பணிவு காட்டுதல்,கட்டுப்படுதல், கீழ்படிதல்.41:37 வசனத்தில் எந்த வகையிலான அர்த்தத்தை கொடுக்க வேண்டுமோ அந்த அர்த்தத்தை 12:100 வசனத்திற்கு கொடுக்க கூடாது. இது தான் எனது அடிப்படை வாதம். 
சூரியனுக்கு சுஜூத் செய்யாதீர்கள், அல்லாஹ்வை வணங்குகிறீர்கள் என்றால் அவனுக்கே சுஜூத் செய்யுங்கள் என்கிற இடத்தில் கீழ்படிதலோ மரியாதை செலுத்துவதோ பணிவு காட்டுதலோ வராது. சிரம் பணிதல் என்கிற அர்த்தம் தான் வரும். ஸஃபா நாட்டு மக்கள் சூரியனை வணங்கக்கூடியவர்கள் என்பதற்கும், அவர்கள் தலையை நிலத்தில் வைத்து வணங்குவார்கள் என்பதற்கும் ஏராள‌மான சான்றுகள் உள்ளன, 27:24 வசனமும் கூட அன்னாட்டு மக்களை பற்றி தான் பேசுகிறது.
ஆக, என்ன அர்த்தம் 41:37 வசனத்திற்கு வருமோ, அந்த சுஜூத் அல்லாஹ்வுக்கு மட்டும் தான். அந்த சுஜூதை யூசுஃப் நபியின் சகோதரரக்ள் செய்ய மாட்டார்கள். 

41:37 க்கு நீங்கள் மரியாதை செலுத்துதல் என்று அர்த்தம் வைத்தால் 12:100 இல் அவர்கள் நபிக்கு மரியாதை செலுத்தினார்கள் என்று அர்த்தம் வைக்க கூடாது.
41:37 வசனத்திற்கு நீங்கள் சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைத்தால் 12:100 இல் அவர்கள் நபிக்கு சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைக்க கூடாது. இது தான் அல்லாஹ்வின் கட்டளை.

எனது பொருள், 41:37 இல் சிரம் பணிதல் என்பது. ஆகவே 12:100 க்கு சிரம் பணிதல் இல்லை என்கிறேன்.

நீங்களோ 41:37 இல் கட்டுப்படுதல் என்கிறீர்கள். அப்படியானால் 12:100 இல் கட்டுப்படுதல் என்கிற பொருளை நீங்கள் கொடுக்க கூடாது, சிரம் பணிதலை தான் கொடுக்க வேண்டும். அது அதை விடவும் பாரதூரமான தவறு. உங்கள் வாதப்படியே, அல்லாஹ் அல்லாதோருக்கு அடி பணிவதே தவறு என்றால் சஜதா செய்வது அதை விடவும் பெரிய தவறு. ஆகவே எந்த வகையிலும் முரண்படுவது நீங்கள் தான். 

அடுத்து, 12:4 இல் சூரியன் தமக்கு சஜதா செய்ததாய் யூசுஃப் நபி கனவு கண்டது சிரம் பணிதல் என்கிறீர்கள். எந்த அறிவார்ந்த சபையிலும் ஏற்றுக்கொள்ளதகாத, வினோதமான அர்த்தத்தையெல்லாம் கொடுத்து உங்கள் நிலையை சப்பை கட்டு கட்டி நியாயப்படுத்த தான் முயல்கிறீர்களே தவிர உண்மையை புரியும் எண்ணம் உங்களுக்கு இருப்பதாய் தெரியவில்லை.
சூரியனுக்கு மனிதன் சிரம் பணியலாம், மனிதனுக்கு சூரியனால் சிரம் பணிய முடியாது.
அதை விட, இந்த இடத்தில் யூசுஃப் நபி சிரம் பணிதலை பற்றி பேசவே தேவையில்லை. அவர்களது சகோதரர்கள் ஏகத்துவக் கொள்கையை ஏற்கவில்லை. ஆனால் அவர்கள் ஏற்பதாகவும், யுசுஃப் நபிக்கு கட்டுப்படுவதாகவும் அவர்கள் கனவு காண்கிறார்கள். அது தான் அந்த வசனம் சொல்வது.அந்த கனவுக்கு விளக்கம் தான் 12:100. 
மேலும், அதில் அந்த சகோதரர்கள் யூசுஃப் நபிக்கு கட்டுப்பட்டார்களே தவிர யூசுஃப் நபி, பெற்றோருக்கு கட்டுப்பட்டதாய் அந்த வசனம் சொல்லவில்லை. உங்களிடம் அந்த புரிதலும் இல்லை. கதையையே மாற்றுகிறீர்கள்.

கட்டுப்பட்டார்கள் என்றால் எதற்கு கட்டுப்பட்டார்கள்? என்று கேட்கிறீர்கள்.
யூசுஃப் நபிக்கு கட்டுப்பட்டார்கள், அவர்களது ஏகத்துவ தாஃவாவிற்கு கட்டுப்பட்டார்கள்.
அப்படியானால் கட்டுப்பட்டு விழுந்தார்கள் என்று ஏன் வருகிறது? 
ஹர்ரூ”(விழுந்தார்கள்) என்பது மிக அதிகம் கட்டுப்படுதல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படும். இதனை பின்வரும் வசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள் 25:73 இந்த‌ வசனத்தில் ”விழமாட்டார்கள்” என்ற வார்த்தை ”சிந்திக்காமல் ஏற்றுக் கொள்ளுதல்” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
அது போன்று ”பணிந்து வீழ்ந்தார்கள்” என்பதற்கு ”அதிகம் கட்டுப்படுதல்” என்பதுதான் சரியான பொருள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

மேலும், இவ்வசனத்தில் பெற்றோருக்கு பணிவது பற்றியோ, ஸஜ்தா செய்வது பற்றியோ பேசப்படவில்லை. மாறாக அனைவரும் அதிகாரத்தில் இருந்த யூசுபிற்கு கட்டுப்பட்டார்கள் என்பதே சரியான விளக்கம்.
பெற்றோர் இருவரையும் சிம்மாசனத்தில் வைத்து இருவருக்கும் அவர்கள் பணிந்திருந்தால் ”அந்த இருவருக்கும் பணிந்தனர்” என்றுதான் அல்லாஹ் கூறியிருக்க வேண்டும்.மாறாக ”அவருக்கு” என்ற ஒருமையாகவே அல்லாஹ் கூறியுள்ளான்.எனவே இது அனைவரும் யூசுபிற்கு பணிந்தனர் என்பதையே குறிக்கிறது. 
ஆக, சிம்மாசனத்தில் பெற்றோர் வைக்கப்பட்டனர். பின்னர் பெற்றோரும் சகோதரர்களும் யூசுஃப் நபிக்கு கட்டுப்பட்டனர். இதை தான் சூரியன், சந்திரன், நட்சத்திரம் என கனவில் கண்டிருக்கிறார்கள் யூசுஃப் நபி.

12:100 வசனம் சிரம் பணிதலை சொல்லவில்லை என்பதற்கு மற்றொரு சான்று, இப்ராஹிம் நபியின் வழிமுறை.சிரம் பணிதல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்று இப்ராஹிம் நபி கூறியுள்ளார்கள். பார்க்க 2:125

இப்ராஹிம் நபியை யூசுஃப் நபி பின்பற்றுவதாய் 12:38 வசனம் சொல்கிறது.

அந்த வகையில், சிரம் பணிதல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்கிற இப்ராஹிம் நபியின் வழிக்கு மாற்றமாய் தமக்கு சிரம் பணியும்படி யூசுஃப் நபி ஏவியிருக்க மாட்டார்கள்.ஆகவே இதன் காரணமாகவும் 12:100 வசனத்திற்கு சிரம் பணிதல் என்கிற அர்த்தம் வராது.

இதற்கு பிறகும் சிரம் பணிதல் தான் என்று சொல்வீர்கள் என்றால்,அல்லாஹ் தவிர மற்றவைகளுக்கு மரியாதை தான் செய்யக் கூடாது, சிரம் பணியலாம் என்கிற கேலியான பொருள் வரும்,
சூரியனும் சந்திரனும் தங்களது தலையை சாய்த்து (?) வணங்கின என்கிற அர்த்தமற்ற பொருள் வரும்,
இப்ராஹிம் நபி அல்லாஹ் அல்லாதவருக்கும் சிரம் பணிய அனுமதித்தார்கள் என்கிற பொருள் வரும்.

ஆக, நீங்கள் எந்த வாதம் புரட்டினாலும் நிற்காது . சிரம் பணிதல் என்று வரும் இடத்திற்கு கட்டுப்படுதல் என்கிறீர்கள், கட்டுப்படுதல் என்கிற இடத்தில் சிரம் பணிதல் என்கிறீர்கள். ஏறுக்கு மாறாய் புரிகிறீர்கள் மார்க்கத்தை !



Ifham Mohamed

இந்த தலைப்பின் இதுவே எனது இறுதியான கருத்துப்பதிவாகும். இறுதியாக முன்வைத்த எனது கருத்துப்பதிவிற்கு பாதிக்கு மேல் பதில் வரவில்லை என்பதை வாசிப்பவர்கள் இலகுவாக அறியலாம். எனினும் இனி பதில் அளித்தாலும் அதற்கு பதில் அளிக்க கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கப்பெற மாட்டாது. இவ்வாறான விவாதங்களில் இம்முறையில் தந்திரங்களை கையாள்வது மோசடியாகும்.

மனிதன் மனிதனுக்கு சஜ்தா செய்யக் கூடாது என்பது தான் எனது நிலைப்பாடும். ஆனால் இவர்கள் குர்ஆன் ஹதீஸை பிழையான கோணத்தில் அணுகுவதனை சுட்டிக்காட்டுவதே இத்தலைப்பின் நோக்கமாகும். இருவரும் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு தலைப்பில் விவாதிப்பதால் ஒரு சில வேலை சிலருக்கு குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இதன் நோக்கம் குர்ஆன் ஹதீஸ் தமக்கு ஏற்றாற் போல் எவ்வாறெல்லாம் வளைக்கின்றார்கள் என்பதுவேயாகும்.

இந்த அடிப்படையில் – 
சலாம் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம், 
ஹதீஸில் இடைச் செருகல் –
4:23,24 இற்கு தனது கொள்கைக்கு மாற்றமான மலுப்பல்களுக்கு பதில் வரவில்லை 
மேலும் –

எடுத்துக் கொண்ட தலைப்பிலே “ஹதீஸில் கூறப்பட்டுள்ள சஜ்தாவின் நிலைப்பாடு பற்றி பல முறை வினவப்பட்டும் இறுதிவரை பதில் அளிக்கவில்லை என்பதில் இருந்து இவர்கள் அல்லாஹ்வின் வஹியை தமக்கு ஏற்றாற் போல் பொருள் கொடுத்து வளைக்கின்றார்கள் என்பது உறுதியாகிறது. 
இவையாவற்றிற்கும் இனி பதில் வந்தாலும் எனக்கு பதில் அளிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற மாட்டாது என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.

41:37 வசனம் வணங்குவதை பற்றி பேசுகின்றது என்றதும் இல்லை இல்லை அவ்வாறெல்லாம் கிடையாது என்று அடம் பிடித்தவர், தற்போது ஸஃபா நாட்டு மக்கள் சூரியனை வணங்கினார்கள் என்பதை ஒப்புக்கொள்கின்றார். எனது இறுதிப்பதிவிலே அதற்கும் சேர்த்து தான் பதிலாக 27:24 வசனத்தை முன்வைத்திருந்தேன் அதனை தற்போது ஏற்றுக்கொள்கின்றார். 

ஆகவே தான் ஏனைய குர்ஆன் வசனங்களை கருத்திற் கொள்ளாமல் ஒரு வசனத்தை மாத்திரம் கொண்டு தமது நிலைக்கு வளைத்ததினால் ஏற்பட்ட விளைவு எனக் கூறியிருந்தேன்.
41:37 இல் சூரியனையும் சந்திரனையும் வணங்கிக் கொண்டு அவற்றிற்கு சஜ்தா செய்தவர்களிடமே இருந்தவர்களிடமே, அவற்றிற்கு சஜ்தா செய்யாமல் அல்லாஹ் வணங்குவதாக இருந்தால் அல்லாஹ்விற்கு சஜ்தா செய்யுங்கள் என்று கூறுகிறான் என்பது இவரது வாக்குமூலமே சான்றாகிறது. 

அடுத்து, சிரம் பணிதல் என்று எடுக்க முடியாது என்பதற்கு அவரது நிலைப்பாட்டிற்கு மாற்றமாக அவரே ஸஃபா நாட்டு மக்கள் தலையை நிலத்தில் வைத்து வணங்குவார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருப்பதாக கூறுகிறார். ஆனால் ஒரு ஆதாரத்தையேனும் முன்வைக்கிவில்லை. இது எனது இறுதிப்பதிவு என்று அறிந்தும் இதில் முன்வைக்காததும் ஒரு தந்திரமாகும். முன்வைத்திருந்தால் பதில் அளித்திருக்கலாம். ஆனால்..???

சூரியனின் சஜ்தா பற்றி – புஹாரி 3199 நேரடியாக கொடுக்கிறேன். இதனை எந்த அறிவார்ந்த சபையிலும் ஏற்றுக்கொள்ளாத வினோதமான கருத்து என்கிறீர்கள். உலகிலே அறிவாளர்கள் நீங்கள் மாத்திரம் தான் கூறிக் கொள்ளுங்கள். நான் எனது விளக்கங்களை கூறி ஹதீஸை திரிக்கவில்லை. உள்ளதை உள்ளபடி முன்வைத்துள்ளேன்.
a few seconds ago · Like

Ifham Mohamed யூசுப் (அலை) அவர்களுக்கு தான் அவர்களது தந்தையும் தாயும் சகோதரர்களும் சஜ்தா செய்தார்கள். நான் யஃகூப் (அலை) என்று கூறியது என்னில் ஏற்பட்ட தவறாகும்.

//41:37 வசனத்திற்கு நீங்கள் சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைத்தால் 12:100 இல் அவர்கள் நபிக்கு சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைக்க கூடாது. இது தான் அல்லாஹ்வின் கட்டளை.//
என அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுகின்றீர்கள். உங்கள் விளக்கங்களுக்கு அல்லாஹ்
வையும் பலிகாடாக்காதீர்கள். அல்லாஹ் எங்கே இவ்வாறு கட்டளையிடுகிறான் என்பதை எடுத்துக்காட்டவும்.

அல்லாஹ் அவனை தவிர வேறு யாருக்கும் சஜ்தா செய்ய வேண்டாம் என்றால் தான் அது தவறானவோ பாவமாகவோ மாறும். மாறாக மனிதனுக்கு சஜ்தா செய்வது கூடாது என்று கொள்கையை உருவாக்கிக் கொண்டு 41-37 அடிபணிவதை குறிக்கின்றது 12-100 மனிதனுக்கு சஜ்தா செய்யலாம் என்பதற்கு ஆதாரமாக இருந்தால் மனிதனுக்கு சஜ்தா செய்வது கூடும் என்று வருமே ஒளிய, நீங்கள் எடுத்து கொள்கையை வைத்துக் கொண்டு அடிபணிவதை விட சஜ்தா செய்வது பெரும் தவறு என்பதற்கு ஆதாரம் இல்லாமல் போகும் என்பதை கூட நீங்கள் விளங்க மறுக்கின்றீாகள்.

கட்டுப்படுவதை தான் அல்லாஹ் சஜ்தா என்று நீங்கள் விளக்கம் கூறிக் கொண்டு – யூசுப்(அலை) அவர்களின் ஏகத்துவத்திற்கு கட்டுப்பட்டார்கள் என்று கூறுவது வியக்கத்தக்க வாதம் அங்கே சஜ்தா செய்தவர்களில் யஃகூப் (அலை) உம் ஒருவர். 12:38 இல் அல்லாஹ் யஃகூப் (அலை) வழிமுறையும் யூசுப்(அலை) பின்பற்றுவதாக கூறுகிறான். சுயவிளக்கத்தில் தவறியது. இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்த்தை பின்பற்றியது பற்றி எழுதியிருக்கின்றீர்கள். 

எல்லா நபிமார்களுக்கும் அடிப்படை ஒன்று ஆனால் ஷரிஅத் வித்தியாசப்படும். யூசுப்(அலை) அவர்களின் ஷிரிஅத்தில் மனிதனுக்கு சஜ்தா செய்வதற்கான தடையை காட்டவும். மேலும் - //அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்று இப்ராஹிம் நபி கூறியுள்ளார்கள். பார்க்க 2:125//
எவ்வாசகம் கூறுகிறது காட்டுங்கள்.

ஹர்ரூ –வுக்கு விளக்கமாக : 25:73 கொண்டுவருகிறீர்கள். எந்த ஒரு வாசகத்திற்கும் அதன் நேரடிப்பொருள் மறைமுகப் பொருள் என இரண்டுவகையான பொருள் கொள்ளலாம். ஒரு வாசகத்திற்கு நேரடிப் பொருள் கொடுக்க முடியாத இடத்தில் மறைமுக பொருள் தான் கொடுக்க வேண்டும் அதனை ஆதாரமாக கொண்டு வந்து நேரடிப்பொருள் கொடுக்க முடியுமான இடத்தில் மறைமுகப் பொருளாக்க முயற்சி செய்வது உங்கள் அறியாமையாகும்.

சுருக்கம் – 
குர்ஆனிலே சஜ்தா என்ற கூறுவது இஸ்லாமிய பரிபாஷையில் உள்ள சஜ்தாவாகும். யூசுப்(அலை) அவர்களுககு ஆகுமாக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் நமக்கு தடை செய்கின்றார்கள். ஆனால் குர்ஆனை கொண்டு ஹதீஸ்களை அணுகவேண்டும் என்ற அடிப்படையற்ற உங்கள் கொள்கையின் பிரகாரம் நபி(ஸல்) அவர்கள் தடை செய்த ஹதீஸ் குர்ஆனுக்கு மாற்றம் என்று ஒதுக்க(?) வேண்டியது ஆனால் “கூடாது” என்ற கொள்கைக்காக குர்ஆனிற்கு சுயவிளக்கம் கொடுக்கின்றீர்கள். “கட்டுப்பட்டான் என்பதற்கு குர்ஆனிலே –இத்திபா என்ற வாசகமும் இன்னும் சிலவும் பயன்படுத்தப்பட்டள்ளது. சுஜூத் என்று பயன்படுத்தவில்லை. உங்கள் கொள்கையை காப்பற்றுவதற்கு பலத்த முயற்சி மேற்கொண்டீர்கள் எனினும் எக்கோணத்தில் சென்றாலும் உங்கள் கொள்கையின் விரிசல் துலாம்பரமாக தெரிகிறது. 

குர்ஆன் ஹதீஸில் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வதே ஒரு முஸ்லிமின் பண்பாகும் தமக்கு ஏற்றாற் போல் அதனை வளைப்பது மிகப்பெரும் மோசடியாகும்.

ஆக நீங்கள் பதில் அளிக்காது விட்டது தொடக்கம் நீங்கள் செய்த பல மோசடிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குர்ஆன் வசனங்களில் இல்லாததை கொண்டு வந்து புகுத்தி உங்கள் சுயவிளக்கத்தினை நிலைநாட்ட எடுத்த முயற்சியில் நீங்கள் தேரவில்லை என்பதுவே நடுநிலையாளர்களின் கணிப்பாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.




Nashid Ahmed

நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கம் கூட ஆதரிக்காத, மிகவும் பாமரத்தனமான வாதங்களை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். விவாதம் என்று ஒப்புக்கொண்டால் எதையாவது பேசித்தானே ஆக வேண்டும் என்பதற்காக தான் பேசுகிறீர்கள் என்பதை நடுனிலையாளர்கள் புரியத்தான் செய்வார்கள்.

அல்லா
ஹ்வை தவிர வேறு எவருக்கும் சிரம் பணியக்கூடாது என்று 41:37 வசனம் கூறும் போது, யூசுஃப் நபி தமக்கு சிரம் பணிவதை ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆகவே 12:100 வசனத்தில் வரும் சஜதாவுக்கு சிரம் பணிதல் என்கீற அர்த்தம் கொடுக்க கூடாது.இது மிகவும் சாதாரண புரிதல். 

இதற்கு பதில் சொல்கீறேன் பேர்வழி என்று 10 நாட்கள் எந்த சம்மந்தமுமில்லாமல் பேசி, நேரத்தை தான் கடத்துகிறீர்கள். 41:37 வசனம் சிரம் பணிதலை சொல்லவில்லை என்கிறீர்கள். சஜதாவுக்கு கட்டுப்படுதல், கீழ்படிதல் போன்ற பல அர்த்தங்கள் இருந்தாலும் கூட இங்கே அவையெதுவும் பொருந்தாது,சிரம் பணிதலை தான் சொல்லும். இதை அனைவரும் ஏகமனதாய் ஒப்புக்கொள்வர்.
ஏனெனில்,சூரியன் ஏதும் கட்டளை பிறப்பித்தால் தான் அதற்கு கீழ்படிதல், கட்டுப்படுதல் என்கிற நிலை வரும். கட்டளை எதுவும் பிறப்பிகாத வெறும் பொருளாக ஒன்று இருந்தால் அது பற்றி பேசுகையில் அதற்கு கீழ்பணிந்தார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள், அதிலும், அவ்வாறான செயல் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதாய் பேசும் இடத்தில் கீழ்படிதலையோ கட்டுப்படுதலையோ மரியாதை செய்வதையோ அல்லாஹ் சொல்ல மாட்டான், மாறாக, எது வணக்கமோ அந்த அர்தத்தை தான் அல்லாஹ் சொல்வான்.ஸஃபா நாட்டு மக்கள் கூட சூரியனுக்கு சிரம் பணிந்து தான் வணங்கினர்.
சிரம் பணிதல் தான் வணக்கம்.

மேலும், என்னை வணங்குபவர்களாக நீங்கள் இருந்தால் எனக்கு சஜதா செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்தே இங்கு சொல்லப்படும் சஜதா என்பது வணக்கத்தோடு தொடர்புடைய சஜதா என்று எளிதில் புரியலாம். வணக்கத்துடன் தொடர்புடைய சஜதா என்பது சிரம் பணிதல்.அதை தான் நம் தொழுகையில் செய்கிறோம். தவிர, அல்லாஹ்வுக்கு தான் கட்டுப்பட வேண்டும் என்று அல்லாஹ் சொல்ல மாட்டான். கட்டுபடுதல் அல்லது கீழ்படிதல் என்கிற அடிப்படையில் சிந்திக்கையில் அதை அல்லாஹ் அல்லாத ஒரு படைப்புக்கு செய்வது தவறொன்றுமில்லை. ஆனால் அல்லாஹ் தவறென்கிறான் என்றால் இங்கு சொல்லப்படும் சஜதா என்பது கட்டுப்படுதல் இல்லை, எதை செய்தால் வணக்கமாக கருதப்படுமோ அந்த சஜதா தான் இங்கு சொல்லபப்டுவது.

அத்தகைய சஜதாவை தான் 41:37 வசனம் பேசுகிறது. ஆகவே அந்த அர்த்தத்திலான சஜதா 12:100 வசனத்தில் நிச்சயம் பயன்படுத்தப்படாது. காரணம், அந்த அர்தத்திலான சஜதாவை அல்லாஹ்வுக்கே தவிர வெறு எவருக்கும் செய்யக்கூடாது என்று அல்லாஹ் சொல்கிறான்.

மேலும்,12:100 வசனத்த்தை பொறுத்தவரை, 12:4 வசனத்திற்கான விளக்கம் தான் அது. 12:4 இல் வரும் சஜதா என்பது கட்டுப்படுதல். காரணம், அதில் சூரியன் தமக்கு சஜதா செய்வதாய் யூசுஃப் நபி சொல்வதாக வருகிறது.

சூரியனுக்கு தலையோ கைகளோ இல்லை. ஆகவே சிரம் பணிதலை இது குறிக்கா
து.மேலும், 
தமது தூதுத்துவத்தை ஏற்காமல் இருக்கும் தமது சகோதரர்கள் பின்னாளில் ஏற்று யூசுஃப் நபிக்கு கட்டுப்படுவார்கள் என்கிற முன்னறிவிப்பு தான் அந்த வசனம். ஆகவே சூரியன் எனக்கு சஜதா செய்வதாய் நான் கனவில் கண்டேன் என்று அவர்கள் சொல்வது சூரியன் எனக்கு கட்டுப்படுவதாய் கண்டேன் என்பதாகும்.
12:100 இல்,சகோதரர்கள் தனக்கு சஜதா செய்வதாய் யூசுஃப் நபி சொல்லி விட்டு,இது தான் அன்று நான் கண்ட கனவின் (12:4) விளக்கம் என்கிறார்கள். ஆக, இந்த வசனத்தில் யூசுஃப் நபிக்கு சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைக்க முடியாது, கட்டுப்பட்டார்கள் என்பதே இந்த அடிப்படையிலும் சரி.

இது தவிர, அல்லாஹ்வுக்கு மட்டும் தான் சஜதா என்று இப்ராஹிம் நபி சொல்லியிருக்க,(2:125), இப்ராஹும் நபியை யூசுஃப் நபி பின்பற்றினார்கள் என்றும் அல்லாஹ் சொல்லியிருக்க,இதன் காரணமாகவும் 12:100 சிரம் பணிதலை சொல்லவில்லை என்றும் விளக்கியிருந்தேன்.

உங்கள் கொள்கைக்கு நேரடி மறுப்பாய் இருக்கும் இந்த செய்தியை கூட அவசர அவசரமாக மறுக்கத்தான் முயற்சிக்கிறீர்கள் என்பதிலிருந்து, சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லை என்று தெரிகிறது.
அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் சஜதா செய்யக்கூடாது என்று 2:125 இல் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். நிச்சயம் இருக்கிறது. காபாவில் ஏற்கனவே சிலைகளுக்கு சஜதாக்கள் நடந்து வந்த போதும் அதை சுத்தப்படுத்தி அல்லாஹ்வுக்கு சஜதா செய்யும் இடமாக ஆக்கினார்கள் என்று சொல்லப்பட்டால் சஜதா அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்று இதிலேயே புரிகிறது. 
அது போக, அதே வசனத்தில் மக்கள் ஒன்று கூடும் இடமாக ஆக்கியதாக சொல்லப்படுகிறது. காபா மட்டும் தான் மக்கள் ஒன்று கூட வேண்டிய ஒரே இடம் என்று இதற்கு அர்த்தம்.பாதுகாப்பு மையம் என்று சொல்லப்படுகிறது.அது தான் ஒரே பாதுகாப்பு மையம் என்று புரிய இடமுள்ளது.

அது போக, அந்த வசனத்திலேயே அல்லாஹ்வுக்கு சஜதா செய்வதை சொல்வதோடு தவாஃப், இஃதிகாஃப், ருகூஃ என பலவற்றை அல்லாஹ் சொல்கிறான். எப்படி தவாஃப் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமோ, எப்படி ருகூஃ செய்வதும் இஃதிகாஃப் இருப்பதும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்ய வேண்டுமோ, அது போல சஜதாவும் அல்லாஹ்வுக்கு மட்டும் தான். 
ஒரே மாதிரியான பல செய்திகளில் சஜதாவுக்கு மட்டும் தனி பார்வை என்பது பார்வையின் கோளாறு.

நான் ஏற்கனவே சொன்னது போல, இது தொடர்பாய் எந்த வாதம் புரட்டினாலும் வெறும் சமாளிப்பாய் தான் கருதப்படுமே தவிர,உண்மை என்ன என்பது இந்த விஷயத்தில் பளிச்சென தெரிகிறது. எது கீழ்படிதலையும் மரியாதை செலுத்துவதையும் குறிக்குமோ அதற்கு அந்த அர்த்தத்தை கொடுங்கள். எதற்கு தலை வணங்குதலை சொல்ல வேண்டுமோ அதற்கு அதை பொருத்துங்கள். இந்த மொத்த விவாதமும் உங்களிடம் இருக்கும் குழப்பத்தையே காட்டுகிறது.

நேர்வழிக்கு அல்லாஹ் போதுமானவன்.