வெள்ளி, 27 செப்டம்பர், 2013

ஷாபி ஹனபி இடையே ஒற்றுமை உண்டா?


ஷாபி மத்ஹபிலோ ஹனபி மதஹபிலோ மாலிக்கி மதஹபிலோ ஹம்பலி மதஹபிலோ இருக்கும் ஒருவன் மத்ஹபுகளே கூடாது என்று கூறி வருகின்ற தவ்ஹீத் ஜமாத்தை தான் எதிர்க்கிறானே தவிர 

ஒரு ஷாபிக்காரன் ஹனபிக்காரனை எதிர்த்து யாராவது பார்த்திருக்கிறோமா?

ஹம்பலிக்காரன் ஷாபிகாரனை எதிர்த்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா?

நிச்சயமாக இல்லை ! 

ஆனால் இது பற்றி மத்ஹ்ப் நூல்கள் என்ன சொல்கிறது தெரியுமா?

இதோ..

ஒரு ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவன், ஷாபியாக மாறி விட்டால் அவன் தண்டிக்கப்பட வேண்டும்.
ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 4, பக்கம்: 249 29

ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷாபி மத்ஹபில் சேர்ந்து விட்டால் அவருடைய சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது.

ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 565 30

நமது மத்ஹபு தான் சரியானது. மற்றவர்களின் மத்ஹபு தவறானது.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 18

எங்கள் மத்ஹப் தான் சரியானது என்று தான் ஒவ்வொரு மத்ஹபும் சொல்கின்றன,

இன்னும் சொல்லப்போனால் மற்ற மத்ஹபில் இருப்பது தண்டனைக்குரிய குற்றச் செயல் என்று சொல்கிற அளவுக்கு மத்ஹப்களிடையே விரிசல்கள் உண்டு..

ஆனால் எந்த மத்ஹப்காரனாவது மற்ற மத்ஹப்காரனை விமர்சிக்கிறானா?

அனைவருக்கும் பொது எதிரி பிஜே தான் என்பதால் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற சந்தர்ப்பவாத நிலையை தான் இவர்கள் எடுக்க வேண்டியுள்ளது !

அந்தோ பரிதாபம்.. தங்கள் நூலையே தங்களால் பின்பற்ற இயலாத தர்மசங்கடமான நிலை இவர்களுக்கு..!

பிஜே மட்டும் ஏன் பல சட்டங்களை மாற்றுகிறார் ?


""எல்லாம் சரி, பிஜே இதுவரை பல நிலைபாடுகளை மாற்றி விட்டாரே, ஏன் அவரிடம் ஒரு நிலையான தன்மை இல்லை?""
இன்று ஒருவர் இப்படி என்னிடம் கேட்டார்.

கீழ்கண்டவாறு அவருக்கு பதில் கொடுக்கப்பட்டது..

பிஜே என்றில்லை, நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாத மனிதர் உலகில் எவருமே இல்லை, மனிதனின் சிந்தனை பெருக பெருக தமது இருப்பை, தமது கொள்கைகளை மறு ஆய்வு செய்து, தான் கற்ற கல்விக்கு ஏற்றவாறு மெருகேற்றி கொள்பவர் தான் உண்மையில் தமக்கான சிந்தனையை சரி வர பயன்படுத்தினார் என்று ஆகும்.

விபச்சாரத்திலும் குடி போதையிலும் மூழ்கி கிடந்த அன்றைய அரபு சமுதாயம் நேர்வழி பெற்ற நன்மக்களாக மாறியது இந்த அடிப்படையில் தான்.

தவறு என்று தெரிந்த பிறகும் அதிலேயே நீடித்திருக்கும் நிலையை தான் நீங்கள் கண்டித்திருக்க வேண்டுமே தவிர தவறிலிருந்து மீழ்பவரை குறை சொல்வது எந்த வகையிலும் நியாயமில்லை.

இன்னும் சொல்லப்போனால், தவறுகளிலிருந்து வெளிப்படையாக மீழ்வதற்கு மிகுந்த மன உறுதி வேண்டும், அதிலும் மார்க்க விஷயம் என்று வருகின்ற போது, அந்த மன உறுதி என்பது இறை நம்பிக்கை என்கிற வடிவில் ஜொலிக்க வேண்டும்.
நீங்கள் குறை கூறும் அந்த நபர் இத்தகைய தகுதிகளை கொண்டிருக்கிறார்.

மேலும், இன்று சமகாலத்தில் வாழும் மற்ற கொள்கை கொண்ட அறிஞர்களிலும் பாமரர்களிலும் கணிசமானோர், தாங்கள் கொண்டிருக்கும் கொள்கை தான் சரியானது என்று நம்பிக்கை கொண்டெல்லாம் இருக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை !

தர்கா கூடாது என்று தர்காவிற்கு செல்பவருக்கு தெரியும்,
மத்ஹ்ப் கூடாது என்று அதை நம்புகிறவர்களுக்கு தெரியும்,
தட்டு தகடு , தரீக்கா என்று மூழ்கிக் கிடப்பவர்களுக்கு அவை தவறான சித்தாந்தம் என்று நிச்சயம் தெரியும்,

ஆனால் அதிலிருந்து மீழ்ச்சி பெறுவதற்கு அவர்களது மனசாட்சி ஒப்புதல் அளிக்காது, சுற்றார் என்ன எண்ணுவர் என்கிற தயக்கம், சமூகம் கேலி செய்யுமே என்கிற பயம் அதனை விட்டும் மீண்டு வருவதற்கு தடைகற்களாய் நிற்கும்.

இது தான் இவர்களை நேர்வழியை விட்டும் தடுக்கிறது. பிஜேவுக்கோ தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கோ அந்த தயக்கம் இல்லை.

மற்றவர்கள் மாற்ற வேண்டிய கொள்கையை கொண்டிருந்தும் அதை சுயலாபத்திற்காக மாற்றாமல் இருக்கிறார்கள்..
தவ்ஹீத் ஜமாஅத்தோ, மாற்ற வேண்டிய கொள்கை தான் என்று தெரிய வருகையில் இறைவனுக்கு அஞ்சி அதை மாற்றிக் கொள்கிறது !

இதுவே வேறுபாடு ! (இந்த பதிலில் சமரசம் கொண்டார் கேள்வி கேட்டவர் !!)



அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர். (3:78)

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். (2:146)

உண்மையை ஏன் பொய்யுடன் கலக்கின்றீர்கள்? அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கின்றீர்கள்? (3:71)

நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத் தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள்! (8:27)

முகநூல் பதிவுகள் : அரசியல் களத்திலும் தனித்தன்மை


குறிப்பிட்ட இந்த நிமிடத்தில், அல்லது குறிப்பிட்ட எந்த நேரத்திலும், 

நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் பங்கு வகித்துள்ள இயக்கங்களில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற ஒரு இயக்கத்திற்கு மட்டும் தான்.. 

இந்தியாவிலுள்ள எந்த அரசியல் கட்சியையும், அவர்கள் செய்த நல்லவைகளுக்காக எந்தவித தயக்கமோ நெருடலோ இன்றி பாராட்டவும் முடியும்,

அவர்கள் செய்த தவறுகளுக்காக தயவு தாட்சணியமின்றியும் எந்த அச்சமுமின்றியும் குறை கூறி விமர்சனம் செய்வதற்கும் முடியும் 
என்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யம்!!!

புஹாரியிலும் தவறுகள் உண்டு - அறிஞர் அல்பானி




""எந்த நூலாக இருந்தாலும், அதில் பிழைகள் இருக்கத்தான் செய்யும். அந்த எண்ணத்தில் தான் நாம் எந்த நூலையும் அணுக வேண்டும்"". என்று, புஹாரியாக இருந்தாலும், அதிலும் தவறுகள் இருக்கும், இருக்கிறது என ஆணித்தரமாக இதில் விளக்குகிறார் அறிஞர் அல்பானி.

அதே சமயம், தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் நபிகள் நாயகம் என்று கூறியிருக்கிறார். நபிக்கு வஹீ வரும், ஆகவே எந்த பிழையானாலும் வஹி மூலம் திருத்தப்பட்டு விடும் என்கிற பொருளில் இதை அவர் சொல்லியிருந்தால் அது தவறில்லை, அதுவே பொதுப்படையாக சொல்லியிருந்தால் தவறு தான்.

இங்கே கேள்வி, இவ்வாறு புஹாரி நூலை கூட சந்தேக கண்ணுடனேயே தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ள ஒரு நபர் சலபுகள் பார்வையில் யார்??

http://salaf-us-saalih.com/2013/03/22/was-shaykh-al-albani-the-first-to-classify-some-hadith-in-al-bukhari-as-weak/

ஓட்டமெடுத்த ஹிந்துக்கள்


வழமையாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளில் என்ன மாதிரியான கேள்விகளை மாற்று மதத்தவர்கள் நம்மை நோக்கி எழுப்புகிறார்களோ அது போன்ற கேள்விகளில் ஆறு கேள்விகளை பட்டியல் இட்டு விட்டு, இதன் மூலம் இஸ்லாத்தை மண்ணை கவ்வ செய்யப்போகிறோம், இதன் மூலம் இஸ்லாம் பொய்யானது என்று நிறுவப்போகிறோம் என்று வெற்று கூச்சல் இட்டு வந்தனர் பெங்களூருவை சேர்ந்த ஒரு ஹிந்து குழுவினர்.

இந்த ஆறு கேள்வியல்ல, இன்னும் எத்தனை கேள்விகளை வேண்டுமானாலும் கேளுங்கள், ஆனால் நீங்கள் தலை கீழாக நின்றாலும் இஸ்லாம் மண்ணை கவ்வாது. இறை மார்க்கமான இஸ்லாம், நீங்கள் கேட்கும் எத்தகைய கேள்விகளுக்கும் ஆணித்தரமான பதில்களை சொல்லும் என்று பதில் சொன்ன நாம், மின்னஞ்சல் மூலம் விவாதிக்க (ஆங்கிலத்தில்) அழைத்த அவர்களது அழைப்பை ஏற்றுக்கொண்டோம்.

ஏற்றுக்கொண்டதோடு நிறுத்தாமல், நீங்கள் எப்படி இஸ்லாத்தை நோக்கி ஆறு கேள்விகள் கேட்கிறீர்களோ அது போல உங்கள் சித்தாந்தம் குறித்து நாங்கள் ஒரு ஆறு கேள்விகள் கொண்ட பட்டியலை தருகிறோம், அதை குறித்து விவாதிக்க நீங்கள் முன் வர வேண்டும், விவாதத்தை சமமாக்குவோம் என்றும் நம் தரப்பில் நிபந்தனை விடுக்கப்பட்டு ஆறு கேள்விகள் கொண்ட பட்டியலும் அனுப்பப்பட்டது.

எங்களுக்கு எங்கள் மதத்திலேயே தீவிர நம்பிக்கையெல்லாம் கிடையாது, நாங்கள் இப்போது கடவுள் யார் என அறிந்து கொள்வதற்கான முயற்சியில் தான் இருக்கிறோம் என்றெல்லாம் துவக்கத்தில் அந்தர் பல்டி அடித்தவர்கள், அதன் பிறகு ஒப்புக்கொண்டு விவாதத்திற்கு தயாரானார்கள். முதலில் அவர்களது முதல் தலைப்பு, அடுத்து நமது முதல் தலைப்பு என alternative ஆக விவாதிக்கலாம் என்றும் கூறினர்.

விவாதம் இன்று துவங்குவதாக இருக்க, நேற்று இரவு மின்னஞ்சல் அனுப்பிய அவர்கள், உங்களிடம் கேள்வி கேட்டால் நீங்கள் அதற்கு பதில் தான் சொல்ல வேண்டும், வேறு மதங்களை எல்லாம் இழுக்க கூடாது என்று பல்டிக்கு ஒரு பல்டி அடித்து, தங்கள் கையாலாகா நிலையை இப்போது நிரூபித்திருக்கிறார்கள் !!

அல்ஹம்துலில்லாஹ் !

தவ்ஹீத் என்கிற சொல் குர்ஆன், ஹதீஸில் உள்ளதா ?




ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். அல்குர்ஆன் (9 : 31) 

இந்த வசனத்தில் "ஒரே" என்பதன் அரபிப்பதமாக வாஹித் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. வஹ்த் என்ற சொல்லிருந்து பிரிந்து வந்தவை தான் வாஹித் தவ்ஹீத் என்ற வார்த்தைகள்.

ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) "லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் (இதோ, உன் அழைப்பேற்று வந்து விட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகி றேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவரு மில்லை)'' என்று தவ்ஹீதுடன் தல்பியாச் சொன்னார்கள்.
முஸ்லிம் (2334)

மேற்கண்ட ஹதீசில் தவ்ஹீத் என்கிற வார்த்தை நேரடியாகவே உள்ளது.


தவ்ஹீத்வாதிகளில் சிலர் (வேறு பாவங்கள் காரணமாக) நரகில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்கள் கரிக்கட்டை போல் ஆவார்கள். 

பின்னர் அவர்களுக்கு இறையருள் கிடைக்கும். நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசலில் போடப்படுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில் புல் முளைப்பது போல் பசுமையாவர்கள். 

பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) நூல் திர்மிதி 2522



நபி (ஸல்) அவர்கள் ஒரு சஹாபியை எமன் நாட்டுக்கு அனுப்புகிறார்கள். அவர் செல்லும் போது நபியவர்கள் அந்த சஹாபியிடம் "நீங்கள் வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தினரிடம் செல்கிறீர்கள், முதலில் அவர்களிடம் தவ்ஹீதை சொல்லுங்கள் , என்று சொல்லி அனுப்புகிறார்கள். 

இந்த சம்பவம் புஹாரி 7372 இல் பதிவாகியுள்ளது

TNTJ வின் 2014 தேர்தல் நிலைப்பாடு


முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதிக்கீட்டை காங்கிரஸ் அரசு சட்டமாக்கும் பட்சத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு முழு ஆதரவு அளிப்பது என்றும் 

தமிழகத்தில் கலைஞர் அரசு அளித்த 3.5% ,ஒதிக்கீட்டை 7% ஆக ஆளும் அதிமுக அரசு உயர்த்தி தந்தால் மாநில அளவில் அதிமுகவை ஆதரிப்பது என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) அறிவித்துள்ளது !

அதே சமயம், பாஜகவை ஆதரிக்கும் எவரையும் முஸ்லிம் சமுதாயம் அங்கீகரிப்பதில்லை என்கிற வகையில் அதிமுக அரசு வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் இட ஒதிக்கீடு அளித்தாலும் அதை பொருட்படுத்தாது அதிமுகவை எதிர்ப்போம் எனவும் கூறியுள்ளது.

ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் உணர்வை ப்ரதிபலிக்கும் TNTJ வின் இந்த அறிவிப்பை கருத்தில் கொள்வது அரசியல் கட்சிகளுக்கு கட்டாயமாகி விட்டது !

முகநூல் பதிவுகள் : விவாத அறைகூவல் விடுக்கலாமா ?


அறைகூவல் விடுவதும் சவால் விடுப்பதும் குர்ஆனின் அணுகுமுறை தான்.

என்னை போல இன்னொன்றை உங்களால் தயாரிக்க முடியுமா? மொத்த உலகமும் ஒன்று சேர்ந்தாவது என்னை போல இன்னொன்றை உங்களால் உருவாக்க முடியுமா? என்று ஒரு பக்கம்,
இதில் ஏதேனும் ஒரு தவறையாவது, ஒரேயொரு முரண்பாட்டினையாவது காட்டி விடுங்கள் பார்க்கலாம் என்று மற்றொரு பக்கம் 

என, குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதை குர்ஆனே அறைகூவல்களின் மூலமும் சவால்களின் மூலம் தான் நிரூபிக்கிறது.

குர்ஆன் விடுத்துள்ள சவாலை எதிர்கொள்ள எதிரிகளால் இயலவில்லை என்பதே குர்ஆன் சத்தியத்தை போதிக்கின்றது என்பதற்கு சான்றாக திகழ்கிறது !

தவ்ஹீத் ஜமாஅத், விவாத சவால் விடுவதையும், எங்கள் கூற்றினை உங்களால் முறியடிக்க முடியுமா? என்று அறைகூவல் விடுவதையும் கூட சிலர் விமர்சனம் செய்வது அவர்களுக்கு குர்ஆனின் அணுகுமுறை தெரியவில்லை என்பதையே காட்டுகிறது என்பதற்காக இந்த ஒப்பீடு !

முகநூல் பதிவுகள் : தமிழக அரசின் மத துவேஷம்


மத சார்பின்மை என்பது வெறும் வெளி வேஷம் தான் என்பதை ஒவ்வொரு அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் சாமி படங்களும் வளாகத்தின் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் சிலையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

மத சார்பின்மை பேசும் இந்திய நாட்டிலுள்ள ஒரு மாநிலம் தமது அரசாங்க முத்திரையாக, அரசாங்க சின்னமாக ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு தலத்தை வைத்திருப்பதை காட்டிலும் ஒரு மத சார்பெண்ணம் வேறு இருக்க முடியுமா?

அரசு சார்பாக ஏதேனும் திட்டம் துவக்கப்பட்டால் கூட அதை மண் பூஜை செய்தோ குத்து விளக்கு ஏற்றியோ தான் துவக்குகிறார்கள் என்றால் தங்கள் மத சார்பு கொள்கை ஒரு அரசாங்கத்தாலேயே எவ்வளவு லாவகமாக இந்த சமூகத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது ??!!

மனைவியை அடிக்க அனுமதியில்லையா?


மனைவியை அடிக்காதீர்கள் என அபூதாவூதில் வரக்கூடிய ஒரு செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு அடிக்கவே கூடாது என்கிற முடிவுக்கு வரக்கூடாது. 

காரணம், ஏராளமான இன்னபிற செய்திகளில் வலிமையாக அடிக்காதீர்கள், 
காயம் ஏற்படும் அளவுக்கு அளவுக்கு அடிக்காதீர்கள், முகத்தில் அடிக்காதீர்கள் என்றெல்லாம் 
கூறப்பட்டிருக்கும் போது அடிக்க அனுமதியுண்டு என்பதே பொதுவான விதி. அடிக்காதீர்கள் என்கிற இந்த செய்தி அவற்றிலிருந்து விதிவிலக்கு பெற்றது என்று தான் புரிய வேண்டும்.

நபியவர்கள் காயம் ஏற்படாத அளவிற்கு இலேசாக அடியுங்கள் என்று கூறி உள்ளார்கள் பார்க்க திர்மிதி 1083

அடிமையை அடிப்பது போன்று அடிக்க வேண்டாம் (புகாரி)

போன்ற ஹதீஸ்கள் இலேசாக அடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம் ஆகும்

மேலும் விதிவிலக்குக்கு காரணம் இந்த ஹதீசிலிருந்து நமக்கு புலனாகிறது..

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”அல்லாஹ்வின் அடியார்களான (பெண்களை) அடிக்காதீர்கள்” என்று கூறினார்கள். அப்போது ”உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து ”பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.
எனவே அவர்களை அடிப்பதற்கு நபியவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

(இதன் பிறகு) அதிகமான பெண்கள் தங்கள் கணவன்மார்களை முறையிடுபவர்களாக நபியவர்களின் குடும்பத்தை சுற்றி வர ஆரம்பித்தார்கள்.
நபியவர்கள் கூறினார்கள் ” தங்களுடைய கணவன் மார்களைப் பற்றி முறையிடுவதற்காக அதிகமான பெண்கள் முஹம்மது டைய குடும்பத்தாரிடம் வருகிறார்கள். (அந்தக் கணவன்மார்கள்) உங்களில் சிறந்தவர்களாக இல்லை என்று கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல் பின் அபீதுபாப் (ரலி) நூல் அபூதாவூத் (1834)

மேற்கண்ட ஹதீஸில் அடிக்காதீர்கள் என்கிற பொதுவான கட்டளையை முதலில் நபியவர்கள் இட்டாலும் பின்னர் அதை அடிப்பதற்கு அனுமதி வழங்குகிறார்கள்.
பல வீடுகளில் இது மிகவும் சர்வ சாதாரணமாக ஆகி வருவதை அறிந்த பிறகு அவ்வாறு அடிக்கும் ஆண்கள் நல்ல கணவன்மார்கள் இல்லை என்கிறார்கள்.

ஆக அடிப்பதற்கு அனுமதி அறவே இல்லை என்று கூற முடியாது. ஒரு வரம்பு வரை அடிக்க கூடாது எனவும் வரம்பு மீறி செல்கின்ற போது அடிப்பது தவறில்லை என்றும் அதே சமயம் காயம் ஏற்படாதவாறும், முகத்தில் படாதவாறும் தான் அடிக்க வேண்டும், எப்போதும் சதா அடித்துக்கொண்டே இருக்கவும் கூடாது என இத்தனை நிபந்தனைகளையும் இஸ்லாம் சேர்த்தே தான் விதிக்கிறது என்பதை புரியலாம்.

குர்ஆன் 4:34 வசனமும் மனைவியை அடிப்பதற்குரிய அனுமதியை தான் தருகிறது.

லரப என்கிற அரபு சொல்லுக்கு அடித்தல் என்பது போல் வேறு பல அர்த்தங்களும் இருந்தாலும் இந்த இடத்தில் அடித்தல் என்பதே கூடுதல் நெருக்கமாக உள்ளது.

அடித்தல் தொடர்பாக குர்ஆன் பேசுகிற ஏனைய சில வசனங்களிலும் இதே லரப என்கிற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பார்க்க 'உமது கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக!' 7:160
அதன் (மாட்டின்) ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்!' என்று கூறினோம்
2:73

ஆடை சுதந்திரம்



ஒரு காலம் இருந்தது. பெண்கள் சேலை அணிவது கண்ணியமாகவும் அது முற்ப்போக்கு சமுதாயத்தின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டு வந்த காலம்.

பின், கீழ்ஜாதி பெண்கள் மேல் சட்டை (ஜேக்கட்) அணிவது மேல் குலத்தினரால் தடை செய்யப்பட்டது.

இதற்கு எதிராக பல போராட்டங்கள், பேனா முனைகள், பல சீர்த்திருத்தவாதிகள்..!

இன்றோ, எந்த பெண் சமுதாயம் அன்றைக்கு மேல் சட்டை அணிய தடை விதித்ததை எதிர்த்ததோ அந்த சமுதாயம் இன்று யாருடைய நிர்பந்தமுமின்றி மேல் ஆடையையும் கீழாடையையும் கழற்றி, இது எங்கள் சுதந்திரம் என்கிறது !

இந்த சுதந்திரத்தை தானே அன்றைய உயர் ஜாதி இவர்களுக்கு அளித்தது? அப்போது பெண் அடக்குமுறையாக தென்பட்ட அந்த செயலானது இன்று எவருடைய திணிப்புமின்றி சுயமாக செய்யப்படும் நிலையை அடைந்ததால் அது பெண்ணுரிமை என்றும் சுதந்திரம் என்றும் முற்ப்போக்கு கலாச்சாரம் என்றும் வாய் கிழிய புகழப்படுகிறது !

நாளை இதே "முற்ப்போக்குத்தனம்" முற்றிப் போய் பெண்கள் ஆடை அணியவும் செய்யலாம், ஆடையின்றி நிர்வாணமாகவும் திரியலாம் என்கிற நிலை வரும்முன் இந்த சமுதாயம் விழித்துக் கொள்வது நல்லது.

இல்லையெனில், அதுவும் பெண்ணுரிமை தான் என்று பேசுவதற்கு மாதர் சங்கங்களும், பெண்கள் அவர்கள் விரும்பியவாறு வாழும் உரிமையை சமூகம் அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஊடக புகழ் விரும்பிகளும் மேசை தட்ட துவங்கி விடுவார்கள் !!

புதன், 25 செப்டம்பர், 2013

மோடி எதிர்ப்பும் டிசம்பர் 6 போராட்டமும் சமமா ?




மோடியின் துரோகங்கள் நடந்து வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில் அன்றைக்கு மக்களிடம் இருந்த  கொந்தளிப்பும் வேகமும் இப்போது சற்று குறைந்து தான் இருக்கும் என்பதால் மோடியின் வருகையை இப்போது எதிர்த்து போராட்டம் அறிவிப்பது பெருமளவு மக்கள் திரளை ஒன்று சேர்க்காது, இறுதியில் அதுவே அவனுக்கு விளம்பரமாக தான் ஆகும் என சகோ. பிஜே சமீபத்தில் உணர்வில் கேள்வி ஒன்றுக்கு விளக்கமளித்திருந்தார்.


தேர்தல் நேரம், மோடியை வானளாவ புகழும் ஊடகங்கள், மோடிக்கென போலியாக தயாரிக்கப்படும் பகட்டு விளம்பரங்கள் என, இல்லாத புகழை மோடியின் பக்கம் திணிக்கும் ரகசிய வேலைகள் நடைபெற்று வரும் இந்த சூழலில் அவனை எதிர்ப்பதற்கென்று முஸ்லிம்கள் அணி திரள்வது என்பது இப்போதைக்கு நமக்கு சாதகங்களை விட பாதகங்களை தான் அதிகம் ஈட்டு தரும் என்பதையும்,
ஊடகமும் கூட அதை தான் விரும்புகிறது என்கிற காரணத்தால் நாம் இப்போதைக்கு இவர்கள் வலையில் சிக்காமல் ஹிக்மத்தாக (நுணுக்கமான சிந்தனையுடன்) செயல்பட வேண்டும் என்பது  தான் சகோ. பிஜேவின் கருத்தாக இருந்தது.

பிஜே குறட்டை விட்டால் கூட, நான்கு குறட்டை தான் விட்டார், ஏன் ஒற்றைப்படையாக விடவில்லை? என்று கேட்கும் சில பிஜே வியாபாரிகள், "அப்படியானால் டிசம்பர் 6  மட்டும் ஏன் வருடம் போராட்டம் நடத்துகிறாராம்? பிஜே எப்போதும் முரண்பட்டு தான் பேசுவாரா? அதையும் ஏற்றுக்கொண்டு பிஜேவை தக்லீத் செய்கிறீர்களா? என்று நம்மை சாடியிருக்கிறது.

இது போன்ற அரை வேக்காடுகளால் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க முடியாது என்பதால் தான் நாம் என்ன நிலைபாட்டை எடுக்க வேண்டும், எது இப்போதைக்கு சரியானது என்பதை கூட சொல்லி தர வேண்டியுள்ளது. 
அது தங்களது மலட்டு மூளைக்கு எட்டவில்லை என்றால் மெளனமாக இருந்திருக்க வேண்டும், அல்லது அழகிய முறையில் சந்தேகங்கள் அல்லது கண்ணியமான விமர்சனங்கள் மூலம் இதை எதிர்க்கொண்டிருக்க வேண்டும். 

அதை விடுத்து, தரமற்ற விமர்சனங்களை செய்ய வேண்டாம் எனவும் தவ்ஹீத் ஜமாஅத் போன்ற சமுதாய பேரியக்கத்தை விமர்சனம் செய்யும் கடுகளவு தகுதி கூட இவர்கள் எவருக்குமே இல்லை என்பதையும் முதலில் இவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.

எனினும், இது போன்ற சந்தேகம் நடுநிலையாளர்களுக்கும் எழும் என்பதால் எனக்கு தெரிந்த விடையை இங்கே சொல்கிறேன்.

பாப்ரி மஸ்ஜிதை மீட்பதற்கு வருடா வருடம் போராடுவதற்கும் மோடி என்கிற ஒரு தனி மனிதனுக்கு எதிராக வருடா வருடமோ அல்லது குறிப்பிட்ட இடைவெளி விட்டோ போராடுவதற்கும் வேறுபாடு உள்ளது.

மோடியை எதிர்க்க வேண்டும் என்றால் அவன் செய்த அந்த கொடூர செயலுக்காக எதிர்க்கிறோம், நமது எதிர்ப்பின் மூலம் அந்த கொடுரத்தை செய்தவனுக்கு தக்க தண்டனை வாங்கி தர கேட்டு எதிர்க்கிறோம். இது முழுக்க முழுக்க தனி மனிதனை பற்றிய விஷயம்.
மோடியை கைது செய்ய சொல்லவும் அதன் மூலம் புண்ணாகி போன நமது உள்ளங்கள் ஆறிப்போவதற்காகவும் தான் நமது எதிர்ப்புகளும் போராட்டங்களும் உதவுமே தவிர நாம் இழந்த உயிர்களையோ உடமைகளையோ அது மீட்டு தராது. 
ஆக, மோடிக்கு எதிராக போராடுவது என்பது ஒரு கொலைகாரனை கைது செய்யுங்கள் என்று அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்காக மட்டுமே !
இதையும் செய்யத்தான் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் எந்த மனிதனை கொலைகாரன் என்றும் பயங்கரவாதி என்றும் தீவிரவாதி என்றும் நாம் விமர்சித்து போராட்டத்தில் குதிக்கிறோமோ, அவனை ஒட்டு மொத்த ஊடகமும் பாதுகாக்கிறது, வடநாட்டில் ஒரு பொதுகூட்டத்தில் பேசினால் தென்னாட்டு ஊடகம் அதை நேரடியாக ஒளிபரப்புகிறது, அவனுக்குரிய புகழ்மாலைகளை சூட்டி அழகு பார்க்கிறது, அவனை அடுத்த பிரதமாருக்குவதற்கு கூட முயற்சிக்கிறது. 

எந்த காரியத்தை அவன் செய்ததால் அவனுக்கெதிராக ஒட்டு மொத்த சமுதாயமும் களத்தில் இறங்கியுள்ளதோ, அந்த காரியத்தையே அவனுக்கு சாதகமான விளம்பரமாக மாற்றிக் கொள்ள ஒட்டு மொத்த ஊடக ஷைத்தான்களும் துடி துடிக்கிறார்கள் எனும் போது நாம் மீண்டும் போராட்டம் என்று தலை குடுப்பதில் இந்த சூழ்நிலையில், எந்த அர்த்தமுமில்லை. 
முஸ்லிம்களை கிளற வேண்டும், ஹிந்துக்களின் ஆதரவலையை அதன் மூலம் பெற வேண்டும் என்று சிந்திப்பவர்களுக்கு இது சாதகமாய் தான் முடியும்.

அதை செய்வதை விட, ஓட்டு என்கிற ஆயுதத்தின் மூலம் அவனை அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வ செய்வது தான் இப்போது அவனது இறுமாப்புக்கும் அகந்தைக்கும் கிடைக்கும் சம்மட்டி அடியாக இருக்கும் ! அந்த முடிவை நோக்கி மக்களை அழைப்பது தான் தற்போதைய கால சூழலில் அறிவுப்பூர்வமானது.  அதை நோக்கி அழைப்பு விடுக்கிறது தவ்ஹீத் ஜமாஅத் !

 அதே சமயம், பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டிப்பது என்பது மேற்கூறப்பட்டது போன்றதல்ல. அது ஒரு தனி மனித எதிர்ப்பல்ல. ஒரு தனி மனிதனின் குற்றசெயலும் அல்ல.
அது ஒட்டு மொத்த அரசாங்கம் செய்த துரோக செயல். எதிர்கட்சியாக இருந்த  ஒட்டு மொத்த சங்பரிவார கும்பலும் இணைந்து செய்த அந்த  வஞ்சகத்திற்கு ஆளும் கட்சியான காங்கிரசும் உடைந்தையாக இருந்தது என்றால் ஒட்டு மொத்த அரசியல் சக்திகளும் இஸ்லாமியர்களுக்கு எதிராக களமிறங்கிய சம்பவம் அது.

 அதற்கெதிரான நம் போராட்டம் என்பது அத்தகைய குற்றங்களை செய்தவர்களை கைது செய்வது என்கிற கோரிக்கையை கொண்டு மட்டுமல்ல, மாறாக எந்த துரோகிகள் நமது உரிமையை அன்று பறித்தார்களோ அவர்களே அந்த உரிமையை மீண்டும் நமக்கே தர வேண்டும்  என்பதற்கான கோரிக்கை. முஸ்லிம்கள் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள், அவர்களின் உரிமைகளை இனியும் யாரும் பிடுங்க எண்ணக்கூடாது என்பதை உணர்த்தவே இந்த போராட்டம்.  இது யாருக்கும் சாதகமாய் அமையாது, யாருக்கும் நாம் இலவச விளம்பரம் தேடி தந்ததாகவும் ஆகாது. மோடி புகழ் பாடுவது போல ஊடகம் ஒட்டுமொத்தமாக பாபர் மஸ்ஜித் இடிப்பை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரவில்லை. 

ஆக, என்றைக்கானாலும் இழந்த உரிமையை மீட்பதற்காக நாம் போராடுவதை தொடர்ந்து செய்து வருவது நமக்கு பாதகமாய் அமையாது ! இதுவும், இந்த தேர்தல் நேரத்தில் மோடியின் வருகையை எதிர்ப்பதும் சமமல்ல !

இந்த வேறுபாட்டை துல்லியமாக புரிந்து கொண்டதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மை விளங்குகிறது  !  

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஓணம் - வரலாறு என்ன ?



ஓணம் பண்டிகையை ஏதோ அது ஒரு மத சார்பற்ற பண்டிகை போலவும், மத பேதமின்றி மலையாளிகள் அனைவரும் கொண்டாடக்கூடிய ஒரு மாநில விழா போலவும் பள்ளிக்கூட பாடங்கள் தொட்டு போதிக்கப்பட்டு வருகின்றது.

சில சிந்தனையற்ற மலையாள முஸ்லிம்களும் இந்த ஓணத்தின் வரலாறை அறிந்து கொள்ளாமல், இது ஏதோ தங்கள் இனத்தின் விழாவாக எண்ணி கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஆனால், இது முழுக்க முழுக்க இந்துக்களின் மத நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதாகும்.

குலசேகர வம்சத்தை சேர்ந்த மகாபலி பெருமாள் என்கிற ஒரு அரசன் கேரளா சமஸ்தானத்தை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு ஆண்டு வந்ததாகவும், நாட்டை செம்மையாக ஆட்சி செய்த அவனுக்கு இந்துக்கள் வணங்கும் பிரம்மா என்கிற கடவுள் பல அற்புத சக்திகளை அருளியதாகவும் ஹிந்துக்கள் வேதங்களில் ஒன்றாக நம்பும் பாகவத புராணாவில் எழுதி வைத்துள்ளனர். 

இந்த அற்புத சக்திகளை பெற்ற மகாபலி, இந்த பூமிக்கு அரசனானது மட்டுமின்றி, வானுலகில் இருக்கும் கடவுல்களையெல்லாம் போரில் சந்தித்து அவர்களை தோற்கடித்து இந்திரலோகதிற்கும் அரசனாக ஆகி (அதாவது ruler of three worlds) அசைக்க முடியாத பெரும் சக்தியாக திகழ்ந்தானாம். 

மகாபலியின் அசுர வளர்ச்சியை கண்டு பயமுற்ற குட்டி தெய்வங்கள், பெரிய தெய்வமான விஷ்ணுவிடம் உதவி கேட்டு சென்றனர் எனவும், மகாபலியின் சக்தியை வீழ்த்துவதற்காக, விஷ்ணு, வாமணனின் அவதாரம் எடுத்து மகாபலியிடம் வரம் கேட்டு வந்தார் என்றும்  மூன்று கால் தடங்கள் மூலம் பெரும் நிலப்பரப்பை தன் வசம் எடுத்துக்கொள்ளும் வரத்தை வாமனனுக்கு மகாபலி கொடுத்தாகவும் நம்புகிறார்கள். 

இரண்டு கால் தடங்களிலேயே பூமி, ஆகாயம் என மொத்த லோகத்தையும் வாமனன் அடக்கி விட்டதால், கருணையே வடிவான மகாபலி, கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு, மூன்றாவது காலை தனது தலை மீது வைத்துக்கொள்ள வாமணனிடம் சொன்னாராம்.
ஆயினும், தனது சக்திகள் அனைத்தும் அழிந்தாலும் பரவாயில்லை, கொடுத்த வாக்கு முக்கியம் என்று கருதிய மகாபலியை கண்டு உள்ளம் நெகிழ்ந்த வாமனன் (விஷ்ணு), தேவலோகத்தின் பொறுப்பை மகாபலியிடமே ஒப்படைத்தாகவும், 

இருப்பினும், இந்த பூமியில் வசிப்பதே தமக்கு விருப்பமான காரியம் என்று சொன்ன மகாபலி, ஆண்டுக்கு ஒரு முறையேனும் பூமிக்கு சென்று தனது ராஜ்ஜிய மக்களை காண அனுமதிக்க வேண்டும் என்று விஷ்ணுவிடம் கேட்க, விஷ்ணுவும் அதற்கு சம்மதித்தார் என்று.. இப்படி செல்கிறது கதை..

இது தான் மகாபலியின் சுருக்கமான வரலாறு.. இதன் படி ஒவ்வொரு வருடமும் தனது குடிமக்கள் அனுஷ்டிக்கும் சிங்கம் மாதத்தில் மகாபலி ராஜா வானுலகிலிருந்து கடவுள் (?) விஷ்ணுவின் அனுமதி பெற்று கேரளாவிற்கு விஜயம் செய்கிறாராம்.

அவ்வாறு வருகை தரும் மகாபலியை வரவேற்பது தான் இன்று இவர்கள் கொண்டாடும் ஓணப்பண்டிகை !

அத்துடன், மகாபலிக்கு இத்தகைய அந்தஸ்தை அளித்த வாமன கடவுளை வணங்குவதும் இந்த பண்டிகையின் நோக்கங்களில் ஒன்றாகும்.

முழுக்க முழுக்க ஹிந்து மத நம்பிக்கையுடன் பிணைக்கப்பட்ட புராணங்களையும் இதிகாச நூல்களையும் வைத்து கற்பனைகளை வரலாறுகளாக எழுதி வைத்துக்கொண்டு, இந்துக்கள் கொண்டாடுகிற ஒரு பண்டிகை எப்படி மத சார்பற்ற பண்டிகையாக கருதப்படும்?

இதையும் வெட்கமின்றி கொண்டாடும் முஸ்லிம் பெயர்தாங்கிகளும் இருக்கிறார்கள் என்றால் குர்ஆன் ஹதீஸ் என இறை வார்த்தைகளை நாம் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக்கொள்வதில் என்ன பயன் ?

யார் மாற்று மதத்தினருக்கு ஒப்பாக நடக்கிறார்களோ அவரும் அவர்களை சார்ந்தவர்களே.. என்ற நபி மொழிப்படி, ஓணம் பண்டிகையை கொண்டாடும் முஸ்லிம்கள், இறைவனின் பார்வையில் முஸ்லிம்களேல்ல ! 

வரலாற்றை அறிவோம், ஈமானை பாதுகாப்போம் !!

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

பிரசாரத்தை வலுப்படுத்துவோம்



பிஜேபியை எதிர்ப்பது முஸ்லிம்களின் நிலையாக இது நாள் வரை இருந்தது, மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்நிலையில், அது நாட்டு நலனில் அக்கறை கொண்ட ஒட்டு மொத்த இந்திய குடிமகன்களின் நிலையாக மாறி விடும்.

மத துவேஷம் கொண்ட ஒருவர், மிகக்கொடிய இன அழிவுக்கு மூலமாக செயல்பட்ட ஒருவர் நாட்டு பிரதமராவது என்பது, இந்தியாவிலுள்ள எந்த மதத்தினருக்கும் ஆரோக்கியமானதல்ல என்பதை நடுநிலை மதவாதிகள் புரிந்துள்ளனர். 

இந்தியாவிலுள்ள முஸ்லிம்களை பொறுத்தவரை, எந்த நிலையிலும் ஜனநாயக ரீதியில் தங்கள் எதிர்ப்புகளை காட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அதே சமயம், எந்த தேர்தலிலும் பாஜக / சங் பரிவார கும்பல் தலை தூக்கி விடக்கூடாது என்று எப்போதும் நாம் காட்டும் வீரியம், இம்முறை இரு மடங்காக, மும்மடங்காக அதிகரிக்க வேண்டும்.

சங்பரிவார கும்பல் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது எப்படி முக்கியமோ அதை விட, மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்பது முக்கியம்.

இம்முறை இஸ்லாமியர்களின் தேர்தல் பிரசாரம் வீரியமாகவும், விவேகமாகவும் இருத்தல் வேண்டும். தேர்தலில் போட்டியிட்டு நானும் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசை கொள்ளும் தமிழ் இஸ்லாமிய இயக்கங்கள், இம்முறையாவது ஒற்றுமையாகவும், நியாயத்தின் பக்கமும் அணி திரள வேண்டும்.

தேர்தலில் போட்டியிடாத தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கின்ற மாபெரும் ஜனசக்தியை கொண்ட இயக்கம் அல்லாஹ்வின் பேருதவியால் தமிழகம் மற்றும் புதுவை கொண்டுள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டது. 

உளவுத்துறை இதை சரியான முறையில் ஆளும் வர்கத்தினர் காதுகளுக்கு எடுத்து சென்று, ஒட்டு மொத்த தமிழ் முஸ்லிம்களின் ஆதரவை தக்க வைக்க என்ன செய்வது என்று மட்டுமே ஆளும் வர்கத்தினர் சிந்திக்கும் படி ஏவட்டும், 
வெற்றி அவர்களை வந்தடையும், இன்ஷா அல்லாஹ் !

ஜாக்கின் சிக்கன திருமண குழப்பம் !




மண்டபத்தில் திருமணம் நடத்துவது ஆடம்பரம் என்றால் திருமணம், வலிமா என எதையும் மண்டபத்தில் நடத்தக்கூடாது.
மண்டபத்தில் திருமணம் நடத்தப்படுவதை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்த காலத்தில் திருமணம், வலிமா என இரண்டையும் தான் ஆதரித்தது.

மண்டபம் என்பது ஆடம்பர செலவு என்று முடிவு செய்த பிறகு திருமணம், வலிமா என இரண்டில் எதை மண்டபத்தில் செய்தாலும் அது ஆடம்பரம் தான். இவ்வாறே தவ்ஹீத் ஜமாஅத் கூறி வருகிறது.

இரண்டில் எது சரி என்கிற விளக்கத்திற்கு நான் வரவில்லை, இரண்டில் எதை செய்தாலும் ஒரு அடிப்படையில் நின்று தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுகிறது என்று தான் ஆகும்.

ஆனால், நாங்களும் தவ்ஹீத் சொல்கிறோம் என்று கூறுகிற ஒரு ஜமாஅத்தின் உலக அமீர், கடந்த வாரம் ஒரு விளக்கம் தந்திருந்தார்.

பள்ளிவாசலில் நடந்த திருமணம் ஒன்றை சிலாகித்து, திருமணம் என்றால் இப்படி தான் பள்ளிவாசலில் எளிமையாக நடத்தப்பட வேண்டும், அறியாமையால் பலர் மண்டபத்தில் திருமணம் செய்கின்றனர், இவர்களிடம் நாம் தாவா செய்து, திருமணத்தை எளிமையாக செய்வதன் அவசியத்தை புரிய வைக்க வேண்டும், அடிக்க அடிக்க அம்மியும் நகரும், எறும்பூர கல்லும் தேயும் என்றெல்லாம் மிகவும் அழகாக பயான் செய்தார். - உண்மையில் அழகிய கருத்து தான்.

ஆனால், தொடர்ந்து பேசிய திருமண ஒருங்கிணைப்பாளர், இப்போது அருகிலிருக்கும் மண்டபத்தில் வலிமா நடைபெறும் என்று அறிவிக்கிறார் !!

இது முரண்பாடா இல்லையா என்பதே எமது கேள்வி.

திருமணம் எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு பள்ளிவாசல் தான் அளவுகோல் என்றால், பள்ளிவாசலிலேயே வலிமாவும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பள்ளிவாசலில் நிக்காஹ் முடிந்து அங்கேயே வலிமாவும் கொடுக்கப்பட்டிருந்தால், மண்டபத்தில் நடத்துவது எளிமை இல்லை, பள்ளிவாசலில் நடத்துவது தான் எளிமை என்கிற உலக அமீரின் வாதத்தில் நியாயமிருக்கும்.

பள்ளிவாசலில் திருமணம் முடிந்து, பின் மண்டபம் வாடகைக்கு பிடித்து வலிமா கொடுத்தோம் என்றால் இவரது பார்வையில் எளிமை எங்கே ? என்று புரியவில்லை. மண்டபத்தை எடுப்பவர்கள் வலிமாவுக்கு என்று தனி வாடகை ,நிக்காஹ் என்றால் கூடுதல் வாடகை என்று கொடுக்க வேண்டியுள்ளதா? இல்லையே !

இவர் பார்வையில் மண்டபத்தில் பெண் வீட்டு விருந்து கொடுப்பது தவறில்லை, திருமண செலவுகளை பெண் வீட்டார் செய்வதில் தவறில்லை, நிக்காஹ்வை மண்டபத்தில் நடத்துவது தான் தவறு..!!

பழுத்த மார்க்க அறிஞர், இந்த அளவிற்கு மேம்போக்கான, குழப்பமான வகையில் மார்க்க பிரசாரம் செய்வது வியப்பை தருகிறது. !

சிக்கனத்தை பற்றி யார் யாரிடம் பேசுவது ?



எங்கே பயணம் சென்றாலும் முன்னால் எட்டு கார், பின்னால் பத்து கார் புடை சூழ்கிறது,
ஆடம்பர பங்களா, நீச்சல் குளம், இலவச முதல் வகுப்பு ரயில் பயணம், இலவச விமான பயணம், என சொகுசுக்கு மேல் சொகுசு..

இப்படி மக்கள் வரிப்பணத்தில் ஆட்டம் போடும் இந்திய அரசியல்வாதிகள், நடுத்தர வர்க்கத்தினரை நோக்கி சிக்கனத்தையும் இந்திய பணவீக்கத்தையும் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள்.

இந்த சுகங்களை அனுபவிக்கும் இவர்கள், பாராளுமன்றத்தில் வந்து தூங்கினாலும் கூட அன்றைக்கான அலவன்ஸ் கிடைத்து விடும்.
எங்கள் நடுத்தர வர்க்கம் ஒரு நாள் பணிக்கு செல்லவில்லை என்றால் அவன் வீட்டில் அன்றைக்கு அடுப்பெரியாது !

சிக்கனத்தை பற்றி யார் யாரிடம் பேசுவது ?

எம்பி பேட்டா எம்எல்ஏ பேட்டா, அந்த அலவன்ஸ், இந்த அலவன்ஸ், என எங்கள் பணத்தில் இவர்கள் அனுபவிக்கும் சொகுசுகளை நிறுத்த சொல்லுங்கள், இந்திய பண மதிப்பு உயரும் !

முகநூல் பதிவுகள் : முட்டாளை கண்டுபிடிக்க இரண்டு வழி




ஒருவரை இரண்டு வழிகளில் முட்டாள் என்று நிரூபிக்கலாம்.

அவரது வாதங்களை பதில் வாதங்கள் மூலம் முறியடித்து நிரூபிப்பது ஒரு வகை.

அவரை, அவரது முட்டாள்தனமான வாதங்களை கொண்டு மீண்டும் பேச விட்டு, அவரது வார்த்தைகளை கொண்டே அவரை முட்டாள் என்று நிரூபிப்பது இன்னொரு வகை.

இன்று, ஊடக துறையினர், அரசியல்வாதிகள் துவங்கி இஸ்லாத்தை / ஏகத்துவத்தை எதிர்க்கும் பலரிடமும் இந்த இரண்டாவது வகையை காண முடிவது வேடிக்கை !

முகநூல் பதிவுகள் : பண்டிகையா வன்முறையா?



ஒரு மதத்தினர் ஒரு பண்டிகையை கொண்டாடுகின்றனர் என்றால் அதன் மூலம் அன்பும் மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என்று தான் எவரும் எதிர்பார்ப்பார்கள்.

இந்தியாவில் ஒரு பண்டிகையாம், அந்த மதத்தினர் அந்த நாளில் தங்கள் பண்டிகையை "கொண்டாடி" விடுவார்களோ என்கிற பயத்தில் (?) அரசாங்கம் 10 ஆயிரம் காவல் துறையினரை பொது மக்களின் பாதுகாப்பிற்காக பணித்துள்ளது என்றால் .... 
இது நமக்கு உணர்த்தும் செய்தி என்ன ??

முகநூல் பதிவுகள் : கடலில் கரைவது கடவுளா?



இரவில் மறைந்து விடுவது எப்படி கடவுளாக இருக்கும் ? 
விடிந்ததும் காணாமல் போவது எப்படி கடவுளாக இருக்க முடியும் ?

என்று சூரியனையும் சந்திரனையும் கடவுளாக நம்பிய கூட்டத்தாரிடம் இப்ராஹிம் நபி கேட்ட அதே பாணியிலேயே நாமும் கேட்கிறோம், 

கடலில் கரைந்து போவது எப்படி கடவுளாக இருக்க முடியும் ?

முரண்பாட்டு மூட்டையாக இந்தியா !


தீவிரவாதம் என்றால் அது இஸ்லாம் இல்லை, இஸ்லாம் என்றால் அங்கே தீவிரவாதம் இல்லை. தீவிரவாதத்தை, மற்ற மதங்களை விடவும் கடுமையாக எதிர்க்கிற ஒரு மதம் இஸ்லாம் !

ஆனால், இன்று இத்தகைய எதிர்மறை நிலைகள் கூட, இந்தியாவிலுள்ள அதிகாரம் படைத்தவர்களாலும் ஊடக துறையினராலும் நேர்மறையாக திரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முரண்பட்ட இரு நிலைகளை கூட நேர்மறையாக பாவிக்கும் இந்த சமூகம், இது போல் இன்னும் பல முரண்பாடுகளையும் முரண்பாட்டாளர்களையும் விட்டு வைத்து தான் உள்ளது..

மதநல்லிணக்கதை பற்றி பேசும் நரேந்திர மோடி போல..

ஜாதி பாகுபாடு தமக்கு இல்லை என்று பேசும் ராமதாஸ் போல..

உலக அமைதி பற்றி ஐநாவில் பேசும் அமெரிக்கா போல..

பகுத்தறிவுக்கு சொந்தம் கொண்டாடும் நாத்திகர்கள் போல..

கலவர தடுப்பு மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பாஜக போல..

குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை பற்றி பேட்டி வழங்கும் சினிமாக்காரர்கள் போல..

சிக்கனத்தை போதிக்கும் இந்திய அரசியல்வாதிகள் போல..

ஊழலை கண்டிக்கும் ஹசாரேக்கள் போல..

தனி மனித ஒழுக்கத்தை பற்றி பேசும் நித்தியானந்தா போல..

உண்மைக்கு குரல் கொடுப்பதை சொல்லும் இந்திய ஊடகங்களை போல.. !!!!

......முரண்பாட்டு மூட்டையாக இந்தியா !!

எது நாட்டையே உலுக்கும் செய்தி ?


சொத்து தகராறில் இந்தியாவில் ஒரு கிராமத்தில் ஏதேனும் ஒரு மூலையில் ஒருவர் இன்னொருவரை கொலை செய்தால்,

அந்த செய்தியை கூட படம் எடுக்க வேண்டிய விதத்தில் படம் எடுத்து, விளம்பரப்படுத்த வேண்டிய விதங்களில் விளம்பரங்கள் செய்து, இறந்தவரின் குடும்பத்தார் பேட்டி, ஊரார் பேசியது, கொலை செய்தவன் தீட்டிய திட்டங்கள், காலை செய்தி, மாலை செய்தி, அரை மணி நேர குறும்பபம் என பூதாகரமாக்கினால்.. 
அதுவும் நாட்டையே உலுக்கும் செய்தியாக ஆகத்தான் செய்யும்.

நாட்டையே உலுக்குவதற்காக ஒரு செய்தியை இவர்களே விளம்பரம் செய்து பூதாகரமாக்கி விட்டு, இது நாட்டையே உலுக்கிய செய்தி, இது நாட்டையே உலுக்கிய செய்தி என்று அவர்களே வரிக்கு வரி பில்ட் அப் கொடுப்பது ,ஊடகத்துறையின் ஒரு வகையான அரசியல் என்றால் அது மிகையல்ல !

அல்லாமல், நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்முறை நடைபெறும் ஒரு நாட்டில் டில்லியில் இறந்த ஒரு பெண்ணின் மரணம் மட்டும் "நாட்டையே உலுக்க" வேண்டிய எந்த அவசியமுமில்லை !



முகநூல் பதிவுகள் : தமிழக அரசின் மத துவேஷம்

ஹஜ் பெருநாளின் போது குர்பானியாக ஒட்டகத்தை அறுக்க தடை என்று சென்னை உயர்நீதிமன்றம் சில வருடங்களுக்கு முன் சட்டமியற்றியது. 

மறு நாள் TNTJ மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் ஜும்மா உரையில், அப்போதைய திமுக அரசையும் உயர்நீதி மன்றத்தையும் கடுமையாக கண்டித்ததோடு, எங்கள் மத நம்பிக்கையில் கை வைக்கும் போக்கை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் இந்த சட்டத்தை அரசு திரும்பப் பெறவில்லையெனில் அரசு கண் முன்னே நாங்கள் ஒட்டகமொன்றை அறுப்போம், உன்னால் செய்ய முடிந்தது என்ன என்பதை பார்ப்போம் என்றும் முழங்கினார்.

அதன் விளைவு, அரசு அந்த சட்டத்தை அன்று மாலையே திரும்பப் பெற்றது !!

ஹிந்து பண்டிகைகளின் போது கறிக்கடைகளை மூட சொல்லும் சட்டமும் கிட்டதட்ட இது போன்ற மத துவேஷ சட்டமேயாகும்.

இது மத துவேஷமில்லை என்றால் இஸ்லாமியர்களின் நோன்பு மாதத்தின் போது எந்த உணவகத்தையும் பகல் நேரத்தில் திறக்க கூடாது என்று சட்டம் இயற்று பார்ப்போம்..



முகநூல் பதிவுகள் : சீசன் வியாபாரிகள்


வருடந்தோறும் நடக்கும் திருவிழாக்களின் போது கடை விரித்தால் வியாபாரம் போணி ஆகும் என்று மிட்டாய்க்கடைகாரர் எண்ணுவது போல், 

ஹிஜ்ரா கமிட்டி என்கிற பெயரில் பிறை வியாபாரம் செய்யும் ஒரு கூட்டம், ஒவ்வொரு வருடமும் ரமலானுக்கும் துல் ஹஜ்ஜுக்குமிடையே தங்கள் "கடையை" விரித்து வாடிக்கையாளர்களை கவர முடியுமா என்று முயற்சி செய்து வருவது வழமையாகி வருகிறது.

தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகம், இவர்கள் கருதுவது போல் சிந்திக்காத கூட்டமாக இருந்திருந்தால் இவர்களது "வியாபாரமும்" போணி ஆகியிருக்கும் தான். 

ஆனால்,எந்த மார்க்க மசாயில்களையும் சுய சிந்தனை செய்து, ஆய்வுகளிலும் விவாதங்களிலும் ஈடுபட்டு, உள்ளச்சத்துடன் பின்பற்றுகின்ற சமூகமாக இந்த சமூகம் மாறி விட்ட பிறகு, இது போன்ற "பகட்டு" வியாபாரங்களுக்கு முகவரியில்லாமல் போனது !


மாற்று மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லலாமா?



மற்ற மதத்தவர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது சரி என்றால் அந்த பண்டிகைகளை நாம் கொண்டாடுவதும் சரி தான்.

கொண்டாடுவது தவறு என்றால் வாழ்த்து சொல்வதும் தவறு தான்.

இப்படி புரிவது தான் சரியான பகுத்தறிவு.

கொண்டாட கூடாது தான், ஆனால் வாழ்த்து சொன்னால் என்ன தவறு என்று கேட்பவர்கள் சற்று சிந்தித்தாலேயே, இது பகுத்தறிவற்ற கேள்வி என்பது புலப்படும் !

கிருஷ்ணனை நான் வணங்கவில்லை, அப்படி ஒருவர் வாழ்ந்ததாகவும் நான் நம்பவில்லை. ஆகவே, இல்லாத கிருஷ்ணரை கடவுளாக வணங்குவதற்கு என்று ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டால் நான் அதை கொண்டாட மாட்டேன்.
கொண்டாடுபவர்களை ஊக்குவிக்கவும் மாட்டேன்.

மேலும், கிருஷ்ணனை வணங்குவதற்காக பண்டிகையை நான் கொண்டாடினால் நான் நரகம் செல்வேன் என்பது எனது நம்பிக்கை. 

அதை யார் கொண்டாடினாலும் அவர் நரகம் செல்வார் என்று தான் நம்புகிறேன்.

இப்படி நம்பி விட்டு, அவ்வாறு கொண்டாடும் ஒரு ராமசாமிக்கு "ஹேப்பி கிருஷ்ண ஜெயந்தி" என்று நான் சொன்னால் சந்தோஷமாக நரகத்திற்கு செல் என்று அந்த ராமசாமியை பார்த்து நான் சொல்வதாக தானே பொருளாகும் ????

ராமசாமி மீது அன்பிருந்தால் அவர் கொண்டாடும் பண்டிக்கைக்கு ஒரு முஸ்லிம் வாழ்த்து சொல்லகூடாது !!

இதில் காழ்ப்பும் இல்லை, குரோதமும் இல்லை. இது அவரவர் கொள்கையை சார்ந்தது !






நாகர்கோவில் நகர சாலைகளின் கதி


நாகர்கோவில் நகராட்சியை உட்படுத்திய கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஹெலன் டேவிட்சன் உள்ளார்.
நாகர்கோவில் நகர சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுகவை சேர்ந்த முருகேசன் இருக்கிறார்.

MP யாக திமுக , MLA வாக அதிமுக.

இன்று நாகர்கோவில் நகர சாலைகளின் கதியை பார்த்தால் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. ஊரெங்கும் குண்டும் குழியுமாக, வாகனங்களில் செல்லவே அச்சப்படுகின்ற அளவிற்கு மத்திய / மாநில அரசுகளால் கேட்பாரற்று கிடக்கிறது.

பெருகி வரும் மக்கள் தொகையில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்ட நிலையில், சாலைகள் இவ்வாறு கவனிப்பாரற்று கிடப்பது நாகர்கோவில் மக்களை மிகவும் சிரமத்திற்குள்ளாகுகிறது

இதை ஊடகங்கள் அதிகாரிகளின் காதுகளுக்கு எடுத்து செல்கின்றனவா?

தேர்தல் நெருங்கும் போது 5 லட்சம் திட்டத்தில் சாலை சீரமைப்பு என்று திட்டம் அறிவித்து அதில் முக்கால்வாசியை அதிகாரிகளின் வயிற்றில் நிரப்பி மிச்சத்தை கொண்டு நாகர்கோவில் மக்களின் உள்ளதை குளிர்வித்து ஒட்டு பொறுக்கி விடலாம் என்று இரு திராவிட கட்சிகளும் எதிர்பார்த்தால் இம்முறை ஊர் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை நினைவூட்டுகிறோம் !!

பிஜே தான் ஆதாரம் !



வழிகேடர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கொண்டுள்ள கொள்கைக்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இருக்காது. அதில் அவர்களுக்கு நம்பிக்கையும் இருக்காது. 

அவர்களை வீரியமாக எதிர்க்கக்கூடிய, தென்னிந்திய மார்க்க அறிஞர் பிஜே அவர்கள் தான் இவர்களுக்கு ஆதாரம் !

எப்படி ?

இந்த வழிகேடர்களிடம், இறைவனை மறுப்பது சரியா என்று கேட்டால் பிஜே முன்பு இறைவனை மறுத்தார் என்று ஆதாரம் காட்டுவார்கள்.

இந்த வழிகேடர்களிடம், தர்க்காவிற்கு செல்வது சரியா என்று கேட்டால் பிஜே முன்பு தர்காவிற்கு சென்றார் என்று ஆதாரம் காட்டுவார்கள்.

இந்த வழிகேடர்களிடம், சஹாபாக்களை பின்பற்றுவது சரியா? என்று கேட்டால் பிஜே முன்பு சஹாபாக்களை பின்பற்றலாம் என்றார் என்று கூறுவார்கள்.

இந்த வழிகேடர்களிடம், மவ்லூத் ஓதுவதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டால் முன்பு பிஜே மவ்லூத் ஓதிக்கொண்டிருந்தார் என்று ஆதாரம் காட்டுவார்கள்.

இவர்களிடம் தப்லீக் என்பது தவறான கொள்கை என்று சொன்னால் பிஜே முன்பு 40 ஜில்லா தப்லீக் சென்றார் என்று ஆதாரம் காட்டுவார்கள்.

இவர்களிடம், மத்ஹப் இமாம்களை பின்பற்றக்கூடாது என்று அறிவுரை கூறினால் பிஜே முன்பு மத்ஹப் முறையில் தானே தொழுதார் என்பார்கள்.

பிஜேவை எதிர்ப்பவர்கள் கூட அவரையே பின்பற்ற வேண்டிய துர்பாக்கியமான நிலையை அடைந்துள்ளார்கள். என்ன ஒரு வேடிக்கை !

சுய சிந்தனை கிடையாது, குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இருக்காது, ஆனால் நாங்களும் இருக்கிறோம் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டி இருகின்றது என்பதற்காக இப்படி பிழைப்பு நடத்த வேண்டிய அவல நிலை இவர்களுக்கு !

அல்லாஹ் திருமறையில் சுட்டிக்காட்டும் ஆடு மாடுகள் இவர்கள் .. இல்லை இல்லை, ஆடு மாடுகள் கூட இவர்களை விட கண்ணியமிக்கவை !!

போராட்டத்தை நடத்துவது யார்?



நமது கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்த வேண்டும் என்பது எப்படி முக்கியமோ அதை விட முக்கியம், அதை எப்படி நடத்த வேண்டும் என்பது.

சீட்டியடிப்பதும், வேட்டியை மடித்துக்கட்டி ஆட்டம் போடுவதும் கூட போராட்டங்களின் பகுதியாகி விட்ட இந்த காலத்தில், 
குவாட்டர் சாராயத்திற்கும் பிரயாணி பொட்டலத்திற்கும் கூட்டம் கூடும் இந்த காலத்தில், 
போராட்டத்தின் வீரியத்தை கட்டுப்படுத்த இயலாமல், கல்லெறிகள், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் என வரம்பு மீறி நடத்தப்படும் போராட்டங்களுக்கு மத்தியில்,
ஜனநாயக முறையில், எவரது உரிமை, உடமைகளுக்கும் சேதாரமில்லாமல் தான் நாம் நமது கோரிக்கைகளை, எதிர்ப்புகளை காட்ட வேண்டும் என்பது பலரும் சரிவர விளங்காத உண்மையாக ஆகி விட்டது.

இத்தகைய வரம்புகளை தாண்டாத, கொண்ட கொள்கையில் வீரியத்துடன் செயல்பட்டு, இறுதி வரை அதில் அணு அளவும் பின்வாங்காமல் செயலாற்றப்படும் போராட்டங்களே வெற்றி பெறும்.

அத்தகைய மார்க்க வரம்பை மீறா வண்ணம் செயல்படும் ஒரே இயக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திகழ்வதால் தான் மக்கள் சாரை சாரையாக இந்த இயக்கத்திற்கு அதரவு தெரிவிக்கிறார்கள்.

ஆக, இட ஒதிக்கீடு கோரிக்கைகாக அக்டோபர் 8 அன்று குழுமுங்கள் என்று சொல்வதுடன், அதை நடத்துவது யார் என்று சேர்த்து சொல்வதும் அவசியமே !

முகநூல் பதிவுகள் : மெட்ராஸ் கபே




சர்ச்சைக்குரிய எந்த திரைப்படமானாலும், அது எந்த மதத்தையோ இனத்தையோ புண்படுத்தும் என்றாலும் அத்தகைய திரைப்படங்களை தடை செய்யத்தான் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இருப்பினும், விஸ்வரூபம் என்கிற பெயரில் முஸ்லிம்கள் மீது வரம்பு மீறியதை கருத்தில் கொண்டு, மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் விரும்ப தேவையில்லை.

எனது மதத்தை புண்படுத்திய போது சிரித்துகொண்டிருந்தவர்களுக்காக நான் இப்போது குரல் கொடுக்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் இஸ்லாமிய அடிப்படையிலும் இல்லை, தார்மீக ரீதியாகவும் அதை எவரும் எதிர்பார்க்க முடியாது.

இன்னும், விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் தான் என்பதே முஸ்லிம்களின் உறுதியான கருத்து எனும்போது அதை சித்தரித்து திரைப்படமாக வெளியிடுவதில் தனிப்பட்ட முறையில் நமக்கு எந்த வஞ்சமும் இல்லை.

பொய்களையும் புரட்டுகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட கமலஹாசனின் படம் அனுமதிக்கப்படும் இந்த நாட்டில், உண்மைகள் படமாவதில் எந்த தவறுமில்லை.

இது இயக்கம் சாராத எனது தனிப்பட்ட கருத்து


முகநூல் பதிவுகள் : அப்பாவி ஊடகம்




இந்தியாவில் முதலும் கடைசியுமாய் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் 2012 டிசம்பரில் புது டில்லியில் நடந்த சம்பவம் தான்.

அதற்கு முன்னரும் பின்னரும், நாட்டிலுள்ள எந்த பெண்ணையும் எந்த ஆணும் ஏறெடுத்து கூட பார்த்தது கிடையாது.

எந்த ஆணாவது எந்த பெண்ணையாவது கேலியாவது செய்ததுண்டா ? ஊஹும்...
கற்பழிப்பு ? கேலியே செய்ததில்லை எனும் போது கற்பழிப்பா?

காந்தி கண்ட கனவு 1947 ஆகஸ்ட் முதல் 2012 நவம்பர் வரையிலும், பிறகு 2013 ஜனவரி முதலும் தொடர்ந்து அச்சுபிசகாமல் பலித்து வருகிற உன்னதமான (??) திரு நாட்டில் தான் நாம் வாழ்கிறோம்.

இந்த உண்மை தெரியாமல், டெல்லி சம்பவத்தை மட்டும் ஊடகம் பெரிது படுத்தியதன் மர்மம் என்ன ? தமிழகத்தில், இன்னபிற மாநிலங்களில் நடப்பதெல்லாம் இந்த ஊடக பச்சோந்திகளுக்கு தெரியவில்லையா? என்று அப்பாவிகளான (??) ஊடகங்களை சிலர் ஏசுகிறார்கள்..
 

வரதட்சணையின் அளவுகோல் என்ன?



"உங்க மகளுக்கு எவ்வளவு செய்றீங்க?"

இந்த கேள்வியை கேட்டு சலிப்படைந்த பெண்ணை பெற்றவர்கள் பலர் உள்ளனர்.

எனது மகளுக்கு எவ்வளவு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும், நீங்கள் எதற்கு அதைப்பற்றி கவலைப்பட வேண்டும் என்று அந்த நொடி பெண்ணின் தகப்பனார் மனதினுள் எழும் யதார்த்தமான கேள்வி கூட, தங்கள் மகளின் நலன் கருதி மனதிற்குள்ளேயே சமாதியாக்கப்படும்.

100 சவரன் என்று இவர்கள் சொல்ல, அவ்வளவு தானா? என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்க, மாப்பிள்ளைக்கு.... டொயோட்டா கார்... இன்ஷா அல்லாஹ்...... புக் பண்ணலாம் என்று பெண்ணின் தகப்பனார் மென்று விழுங்க, திருமண பேச்சுவார்த்தை இனிதே (?) நிறைவுறும்.

சில நாட்கள் கழித்து பெண்ணின் தாயாரிடம், என்ன? இப்பவே வரதட்சணை எல்லாம் பேசியாச்சு போல? என்ன நியாயம் இது? என்று உற்றார் கேட்கின்ற போது,

"இதை எப்படி வரதட்சணை என்பீர்கள்? எங்க மகளுக்கு நாங்க செய்றோம், இது தப்பா? தவ்ஹீத் தவ்ஹீத் னு சொல்லி எல்லாத்தையும் தப்பாவே பேசுறீங்களே?" என்று பொய் கோபத்தை காட்டுவதை தவிர வேறு வழி இல்லாது நிற்கும் அவர்களை எண்ணி பரிதாபப்படுவதா அல்லது கோபப்படுவதா என்று குழம்பி போவோம் நாம்.

பெண்ணை பெற்றவர்கள் அவர்களாக விரும்பி தருவதை யாரும் வரதட்சணை என்று சொல்ல மாட்டார்கள்.
அதே சமயம், பெண்ணை பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது தருவது தான் விரும்பி தருவது என்பது.
அவர்கள் எப்போது விரும்பி தர வேண்டும் என்பதை மூன்றாம் நபர் தான் தீர்மானிக்கிறார் என்றால் அது பெண்ணின் பெற்றோர் விரும்பி தருவதாக ஆகாது. பெண்ணின் பெற்றோர் விரும்பி தருவதற்கு இன்னொருவர் விரும்புகிறார் என்று தான் ஆகும் !

சுருக்கமாக கீழ்காணும் நான்கு காரணங்கள் இருந்தால் அது வரதட்சணை என்று முடிவு செய்யலாம்.

1. மாப்பிள்ளை அல்லது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் நேரடியாகவே கேட்பது.

2. இந்த குடும்பத்தில் திருமண உறவு வைத்துக்கொண்டால் நிறைய கிடைக்கும் என்று மாப்பிள்ளை அல்லது மாப்பிள்ளை வீட்டார் எண்ணி அந்த அடிப்படையில் திருமணம் செய்வது..

3. நாம் இதை செய்யவில்லை என்றால் நமது மகள் அங்கே மகிழ்ச்சியாக இருக்க மாட்டாளோ என்று பெண்ணை பெற்றவர்கள் அஞ்சுவது..

4. நாம் இதை செய்யவில்லை என்றால் இந்த சமுதாயத்தில் நமக்கான அங்கீகாரம்பறி போய் விடுமோ என்று பெண்ணை பெற்றவர்கள் அஞ்சுவது.

மேற்கண்ட நான்கோ, நான்கில் ஒன்றோ இருந்தால் அது வரதட்சணை !!
மேற்கண்ட காரணங்கள் ஒன்று கூட இல்லையெனில், பெண் வீட்டார் 100 கோடியே கொடுத்தாலும் அது வரதட்சணை ஆகாது !!

இது ஒரு வாதமா?


மக்ரிப் தொழுகை 3 ரக்காத் தொழுதோமா 4 ரக்காத் தொழுதோமா என்கிற குழப்பம் ஒருவருக்கு வருகிறது என்று வைப்போம். லுஹர் தொழுகை 4 தொழுதோமா 5 தொழுதோமா என்கிற குழப்பம் ஏற்படுகிறது என்று வைப்போம்.

இதை பார்க்கும் ஒரு பாமரன், ஒரு வக்து தொழுகை 2 ரக்காத், ஒரு வக்த் தொழுகை 4, ஒரு வக்த் தொழுகை 3 என வேறு வேறாக தொழுவதால் தானே இந்த குழப்பம் உங்களுக்கு ? 

இதை சரி செய்ய எல்லா வக்துக்கும் சீராக 4 ரக்காத் என்று முடிவு செய்வது தான் சரி என்று அவன் சொன்னால் அது எப்படி மடத்தனமான வாதமோ 

அது போல தான் 

பிறை பார்த்து மாதங்களை தீர்மானம் செய்கையில் சில இடங்களில், சில ஊர்களில் குழப்பம் ஏற்படுவதால் விஞ்ஞான முறைப்படி உலகம் முழுவதும் சீராக கணியுங்கள் என்கிற சிலரது வாதமும் அமைந்துள்ளது.