புதன், 3 நவம்பர், 2010

இறைவனைப்பார்க்க விரும்புபவரின் தகுதி..

""உங்களில் எவரும் அவர் இறக்காதவரை தான் இறைவனைக்காண முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம் 5215

மேற்கண்ட ஹதீஸின் மூலம் நாம் அறிந்து கொள்வது,

  • இந்த உலகத்தில் அல்லாஹ்வை காணவே முடியாது, பார்த்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்கிறார்!

  • மரணத்திற்கு பின்னர், மறுமையில் அல்லாஹ்வை நாம் பார்க்கலாம்.

"தமது இறைவனின் சந்திப்பை பெறுபவர் நல்லறத்தை செய்யட்டும், தமது இறைவனுக்கு இணை கர்ப்பிக்காது இருக்கட்டும், என்று (முஹம்மதே !) நீர் கூறுவீராக!
அல் குர் ஆன் 18 : 110

  • இது , இறைவன் உருவமற்றவன் என்ற பரேலவிசக்கொள்கைக்கு நேரடி மறுப்பாகவும் உள்ளது. உருவமே இல்லாத ஒன்றை பார்க்கும் பேச்சுக்கே இடமிருக்காது. உருவத்தை தான் பார்க்க முடியும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக