புதன், 3 நவம்பர், 2010

இஸ்லாத்தின் பார்வையில் விதி..!

விதி படிதான் எல்லாம் நடக்கிறது என்றால் நாம் அமல்கள் செய்வதால் என்ன பயன்????
கேள்வி :
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிறது என்றால் தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படி தானே நடக்கின்றது. ஒருவன் தீமை செய்வதும் நன்மை செய்வதும் அல்லாஹ்வின் விருப்பப்படி தானே நடக்கிறது. அல்லாஹ் விதித்த விதிபடித்தான் எல்லாம் நடக்கிறது என்றால் நாம் சொர்க்கம் செல்வதும் நரகம் செல்வதும் முன்கூட்டியே விதிக்கப்பட்டுவிட்டதல்லவா? அப்படியானால் நாம் அமல்கள் செய்வதால் என்ன பயன்? நம் இஷ்டப்படி வாழ்ந்து விடலாமே. விதியை பற்றி ஒரு அளவிற்கு மேல் சிந்திக்காதீர்கள் என்று ஹதீஸில் படித்திருக்கின்றேன். என்னுடைய இந்த குழப்பத்திற்கு தெளிவான பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லாஹ் போதுமானவன்.
நிஷாத்
பிஜே பதில் : இஸ்லாத்தில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கு தெள்ளத்தெளிவான பதில் உண்டு. அது பற்றி கலந்துரையாடல் விவாதம் செய்வதற்கும் அனுமதி உண்டு.

ஆனால் இதிலிருந்து விதி மட்டும் மாறுபடுகின்றது. நம்முடைய இறை நம்பிக்கைக்கு விதியை அல்லாஹ் சோதனையாக ஆக்கியுள்ளான். விதியை நம்பினால் அதிகமான நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது.

விதியை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. நடந்து முடிந்த விஷயங்களுக்கு மட்டுமே விதியின் மீது பலிபோட முடியும். அதாவது விதியை நம்பக்கூடியவரின் வாழ்க்கையில் பாரதூரமான துன்பம் ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் மனவலிமை விதியின் மூலம் அவருக்கே ஏற்படுகிறது. அதே போல் சந்தோஷமான நிகழ்வுகளை அவர் சந்திக்கும் போது ஆணவம் கொள்ளாமல் எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படித்தான் நடந்தது என்று பணிவுடன் நடப்பதற்கும் இந்த விதி காரணமாக உள்ளது.

مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنْفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ مِنْ قَبْلِ أَنْ نَبْرَأَهَا إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ(22)لِكَيْلَا تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ(23)57

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் (57 : 22)

விதியை நம்பும்போது சில சிக்கலான கேள்விகள் எழுவதைப் போன்று விதியை நம்பாவிட்டால் அப்போதும் சிக்கலான கேள்விகள் எழத்தான் செய்கின்றன. எனவேத் தான் விதிதொடர்பாக சர்ச்சை செய்ய வேண்டாம் என மார்க்கம் வழிகாட்டியுள்ளது.

82 حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ وَهُمْ يَخْتَصِمُونَ فِي الْقَدَرِ فَكَأَنَّمَا يُفْقَأُ فِي وَجْهِهِ حَبُّ الرُّمَّانِ مِنْ الْغَضَبِ فَقَالَ بِهَذَا أُمِرْتُمْ أَوْ لِهَذَا خُلِقْتُمْ تَضْرِبُونَ الْقُرْآنَ بَعْضَهُ بِبَعْضٍ بِهَذَا هَلَكَتْ الْأُمَمُ قَبْلَكُمْ قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو مَا غَبَطْتُ نَفْسِي بِمَجْلِسٍ تَخَلَّفْتُ فِيهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا غَبَطْتُ نَفْسِي بِذَلِكَ الْمَجْلِسِ وَتَخَلُّفِي عَنْهُ رواه إبن ماجه

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபித்தோழர்கள் விதி தொடர்பாக தர்க்கம் செய்துகொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் வருகை தந்தார்கள். உடனே கோபத்தால் அவர்களின் முகம் மாதுளை முத்துக்களைப் போன்று சிவந்துவிட்டது. இவ்வாறு செய்யுமாறு நீங்கள் உத்தரவிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? குர்ஆனில் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிடுகின்றீர்களே. உங்களுக்கு முன்னால் உள்ள சமுதாயங்கள் விதியில் சர்ச்சை செய்த காரணத்தினால் தான் அழிந்துபோனார்கள் என்று கூறினார்கள்.

இப்னு மாஜா (82)

எனவே விதிதொடர்பாக நாம் சர்ச்சை செய்யக்கூடாது. நடந்து முடிந்த விஷயங்களுக்கு விதியை காரணம் காட்டலாம். இனி நடக்கவிருக்கின்ற விஷயங்களைப் பொறுத்தவரை விதியை காரணம் காட்டி செயல்படாமல் இருந்துவிடக்கூடாது. நாம் செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

விதியை காரணம் காட்டி நல்லமல்கள் செய்யாமல் இருந்துவிடலாமா? என்று நீங்கள் கேட்ட கேள்வியை நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை இங்கே தருகிறோம்.

1362 حَدَّثَنَا عُثْمَانُ قَالَ حَدَّثَنِي جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا فِي جَنَازَةٍ فِي بَقِيعِ الْغَرْقَدِ فَأَتَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ وَمَعَهُ مِخْصَرَةٌ فَنَكَّسَ فَجَعَلَ يَنْكُتُ بِمِخْصَرَتِهِ ثُمَّ قَالَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ مَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ إِلَّا كُتِبَ مَكَانُهَا مِنْ الْجَنَّةِ وَالنَّارِ وَإِلَّا قَدْ كُتِبَ شَقِيَّةً أَوْ سَعِيدَةً فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَفَلَا نَتَّكِلُ عَلَى كِتَابِنَا وَنَدَعُ الْعَمَلَ فَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ السَّعَادَةِ وَأَمَّا مَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ الشَّقَاوَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ قَالَ أَمَّا أَهْلُ السَّعَادَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ السَّعَادَةِ وَأَمَّا أَهْلُ الشَّقَاوَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ الشَّقَاوَةِ ثُمَّ قَرَأَ فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى الْآيَةَ رواه البخاري
அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நாங்கள் பகீஉல் கர்கத் என்னும் பொது மையவாடியில் ஒரு ஜனாஸாவில் கலந்துகொண்டோம் அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும் நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தலை குனிந்தவர்களாகத் தமது கைத்தடியால் தரையைக் கீறிக்கொண்டு, “உங்களில் யாரும் அல்லது எந்த ஆத்மாவும் அதன் இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பது பற்றித் தீர்மானிக்கப்படாமலில்லை; தீய கதியுடையதா, நற்பேறுடையதா என்பதும் நிர்ணயிக்கப்படாமலில்லை” எனக் கூறினார்கள். உடனே ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியாயின் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதை நம்பி, (நற்) செயல்களில் ஈடுபடுவதை நாம் விட்டுவிடலாமா? ஏனெனில் நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாக நல்லவர்களின் செயல்களில் ஈடுபடுவார்கள்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாகத் தீயவர்களின் செயல்களில் ஈடுபடுபவர்கள்தாமே?” என்றதும், நபி (ஸல்) அவர்கள், “”நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்களுக்கு நல்லமல்கள் செய்வது எளிதாக்கப்படும்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்களுக்குத் தீய காரியங்கள் எளிதாக்கப்படும்” என்று கூறிவிட்டு, “”எவர் தான தர்மம் கொடுத்து, பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகின்றாரோ…” என்ற (92: 5,6ஆகிய) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்
புகாரி (1362)

நாம் சொர்க்கவாசியா? நரகவாசியா? என்பது நமக்குத் தெரியாது. நான் நரகவாசி என்று எனக்கு உறுதியாகத் தெரிந்தாலே இனி நான் நல்லறங்கள் செய்து என்ன புண்ணியம் என்று கேட்பதில் நியாயம் இருக்கின்றது. நமது முடிவு என்னவென்பது நமக்குத் தெரியாமல் இருக்கும் போது நல்லதை நோக்கியே நமது முயற்சி இருக்க வேண்டும்.

உலக விஷயங்களில் இவ்வாறு தான் நாம் நடந்துகொள்கிறோம். அல்லாஹ் நமக்கு விதித்த செல்வம் வரும் என்று கூறிக்கொண்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கமாட்டோம். நம்மால் முடிந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொள்வோம். நோய் வந்தால் இறைவன் நாட்டப்படி நடக்கட்டும் என்று கூறி மருத்துவம் செய்யாமல் இருப்பதில்லை. நமது முயற்சியையும் மீறி ஏதேனும் நடந்தாலே விதியை காரணம் காட்டுவோம். இதுபோன்றே நல்லமல்கள் விஷயத்திலும் நாம் நடந்துகொள்ள வேண்டும்.

அல்லாஹ் நம்மை ரோபோ மிஷின்களைப் போன்று சுயவிருப்பம் வழங்கப்படாத படைப்பாக படைக்கவில்லை. மாறாக நல்லவற்றையையும் தீயவற்றையையும் நமக்கு காட்டித்தந்துள்ளான். இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்கின்ற அதிகாரத்தையும் ஆற்றலையும் இந்த உலகத்தில் நமக்கு வழங்கியிருக்கிறான். அறிவைத் தந்திருக்கின்றான். நமக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒரு வேதத்தையும் இறைத்தூதரையும் அனுப்பியுள்ளான். எனவே சிந்தித்து நல்லவற்றை செய்து தீயவற்றை விட்டும் விலகி இருப்பது தான் அறிவுடமை. அப்போது தான் வெற்றி கிடைக்கும். விதியை நம்பச் சொன்ன அல்லாஹ் தான் நல்லறங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறான்.

قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُوا لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا(110)18

“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் (18 : 110)
இந்த கேள்வி தொடர்பாக முழுமையான விளக்கம் பெற “ஈமானின் கிளைகள்” என்ற நமது சொற்பொழிவில் “விதியை நம்புதல்” என்ற உரையை பார்க்க அதற்குரிய லிங்க

30.03.2010. 22:37

thanks

onlinepj.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக