புதன், 3 நவம்பர், 2010

மத்ஹப் நூல்களில் உள்ள பொய்களில் சில...

மத்ஹப் நூல்களில் உள்ள பொய்களில் சில...

சஹாபாக்களுக்கு நிகராம் இந்த அபு ஹனீபா!!

அவர் (அபூ ஹனீஃபா இமாம்) அபூ பக்கர் (ர ) அவர்களைப் போன்றவராவார் (நூல் : துர்ருல் முஹ்தார் பா : 1 ப : 57 )


ரசூல் (ஸல்) அவர்களுக்கும் இல்லாத தனி சிறப்பா???

அபூ ஹனீஃபா இமாம் அவர்கள் இஷாவினுடைய ஒலுவுடன் 40 வருடங்கள் ஃபஜ்ரைத் தொழுதுள்ளார். 55 ஹஜ் செய்துள்ளார். நூறுதடவை அல்லாஹ்வை கனவில் பார்த்துள்ளார்.(துர்ருல் முஹ்தார் பா : 1 ப : 51 )


அட்வான்ஸ் மன்னிப்பு !


அல்லாஹ் கூறினானாம் : அபூ ஹனீஃபாவே நீ நம்மை அறிய வேண்டிய முறைப்படி அறிந்து விட்டாய். அழகிய முறையில் நமக்கு பணிவிடை செய்து விட்டாய். எனவே உம்மையும், கியாமத் நாள்வரை உம்முடைய மத்ஹபில் உம்மை பின்பற்றியோரையும் மன்னித்து விட்டோம் . முஸாஃபிர் பின் கிராம் என்பவர் கூறுகிறார் யார் தனக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தயில் அபூ ஹனீஃபாவை ஆக்குகிறாரோ அவர் எவ்வித கவலையும் இல்லாமல் ஈடேற்றம் பெறுவார் (துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 52)


அவரை கண்டு ரசூல் (ஸல்) அவர்களே பெருமை கொண்டார்களாம் !!


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆதம் என்மூலம் பெருமை கொண்டார். நான் என்னுடைய உம்மத்தில் ஒருவரைக் கொண்டு பெருமை கொள்கிறேன். அவர் பெயர் நுஃமான். அவருடைய பட்டப் பெயர் அபூ ஹனீஃபா. அவர் என்சமுதாயத்தின் விளக்காவார்.

அவருக்கு நிகர் யாருமே இல்லையாம் !!

மொத்தத்தில் பற்றற்ற வாழ்க்கையிலும் பேணுத லும், வணக்கத்திலும் , கல்வியிலும் விளக்கத்திலும் அபூ ஹனீஃபாவிற்கு நிகரானவர் யாருமில்லை (துர்ருல் முஹதார் பா : 1 ப : 61)


ஈசா நபி இறுதியில் தீர்ப்பளிப்பதே இவருடைய சட்டத்தின் படி தானாம் !


அபூ ஹனீஃபாவின் காலம் முதல், இன்றைய காலம் வரை அல்லாஹ் அவரை பின்பற்றக் கூடியவர்களுக்கும், அவருடைய தோழர்களுக்கும் ஞானத்தை வழங்கிவிட்டான்.. அவருடைய மத்ஹபைக் கொண்டுதான் ஈஸா (அலை) அவர்கள் தீர்ப்பளிப்பார்கள் (துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 56 )


நபியின் அந்தஸ்தா?


ஸஹ்ல் பின் அப்தில்லாஹ் என்பவர் வழியாக ஜ‎ýர்ஜானி அவர்கள் தன்னுடைய நூ ல் அறிவித்திருக்கிறார் : என்னுடைய உம்மத்தில் அபூ ஹனீஃபாவைப் போல் மூஸா , ஈஸா இருந்திருந்தால் அவர்கள் யூதர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்க மாட்டாரர்கள் (துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 53 )


ஒளு செய்வதில் வினோத சட்டம் !!


(உளுவில்) அவன் ஒரு உறுப்பை கழுகவில்லை என்பதை அறிந்தால், அது எது என்று குறிப்பாக்குவதில் சந்தேகம் கொண்டால் தன்னுடைய இடது காலை கழுக வேண்டும். ஏனென்றால் இதுதான் அவனுடைய கடைசி செயல் ஆகும் (துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 150

பாங்கா தேசிய கீதமா?


பாங்கு சப்தத்ததைக் கேட்கும் போது எழுந்து நிற்பது சிறப்பிற்குரியதாகும் (துர்ருல் முஹ்தார் : பா : 1 பக் : 397 )


ஆபாசக்களஞ்சியம் !


ஆசையில்லாத சிறிய குழந்தைகளை உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை. இன்னும் உளூவும் முறியாது ( ரத்துல் முஹ்தார் பா : 1 பக் : 146




மதஹப் என்னும் அசிங்கத்தை நம்பி நம் ஈமானை இழக்க வேண்டாம் சகோதரர்களே, குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மட்டுமே மார்க்கம்! இவை இரண்டுமே நம்மை சொர்க்கத்தில் கொண்டு சென்று சேர்க்கும்.
இவை அல்லாத அனைத்துமே வழிகேடு என்பதை நினைவில் கொள்வோம், வெற்றி பெறுவோம்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக