புதன், 3 நவம்பர், 2010

சந்தர்ப்பவாத தமுமுக



தமிழக மக்களின் நலனுக்காக அதிமுகவுடன் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்துள்ளோம்
- தமுமுக பொது செயலாளர் ஹைதர் அலி

நரேந்திர மோடிக்கு விருந்தளித்த ஜெயலலிதாவை இவர்கள் ஆதரிக்கிறார்கள், சமுதாயதிற்க்கே துரோகம் இழைத்து விட்டார்கள் என்று தவ்ஹீத் ஜமாத்தை நோக்கி கோஷம் விழித்த தமுமுகவினர்களே!!!!!

இப்பொழுது, அதே துரோகத்தை நீங்கள் செய்கிறீர்களே !!!
உங்கள் கோஷங்கள், கொள்கைகள் என்ன ஆனது?

வெட்கம் எனும் ஈமானின் ஒரு பகுதியில் நூறில் ஒரு பங்கை வைத்திருக்கும் ஒரு முஸ்லிம் கூட செய்யாத ஒரு செயலை இப்போது நீங்கள் அரங்கேற்றி இருப்பதன் அடிப்படை என்ன??

கருணாநிதி இரண்டு தருகிறார் என்பதற்காக அவரை சமுதாய காவலன் என்றும் ஜெயலலிதாவை சமுதாய துரோகி என்றும் வர்ணனை செய்தீர்களே , இப்பொது சமுதாயத்தின் துரோகி யார் என்பது மக்களுக்கு புலப்படாமல் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா ?

சமுதாய மக்களை முட்டாளாக்கும் இந்த கூட்டத்தினரின் அன்றைய, இன்றைய செயல்பாடுகள் அனைத்தும் விரைவில் அடுக்கடுக்காக வெட்ட வெளிச்சமாகும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக