வெள்ளி, 28 ஜூன், 2013

போகாத ஊருக்கு வழி


சூனியம் என்பது ஒரு அற்புத செயல் என்று நம்புகிற சாரார் ஒரு பக்கமும் சூனியம் என்றால் அது அற்புதமில்லை அது ஒரு வித்தை என்று சொல்கிற இன்னொரு சாராரும் சமூகத்தில் இருக்கிறோம். இந்த இரு சாராரில், சூனியத்தை அற்புதம் என நம்ப வேண்டும் என்று கூறுவோர் நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸை நம்புகின்றனர், சூனியம் என்றால் அற்புதமில்லை என்று சொல்பவர்கள் அந்த ஹதீஸை நம்புவதில்லை.

இப்போது, மூன்றாவதாக ஒரு கருத்து கிளம்பியுள்ளது. அதாவது, சூனியம் என்றால் அற்புதமில்லை, அது ஒரு வித்தை தான், ஆனால் நபிக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுக்க கூடாது என்று சொல்கிற கருத்து.

சமீபத்தில் இந்த கருத்துடையவர்கள் நமக்கு அனுப்பிய சில மின்னஞ்சல்களை வாசித்த போது இவர்களது வாதமும் நியாயமாக இல்லை என்பது தெரிய வருகிறது. இவர்களுக்கான சுருக்கமான மறுப்பு இங்கே..

இவர்களது ஒரே இலக்கு அந்த ஹதீஸை (நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ்) எப்படியாவது நியாயப்படுத்த வேண்டும். அதை நியாயப்படுத்த வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் இவர்கள் செயல்படுவதால், எத்தகைய மார்க்க முரண்களை எல்லாம் இவர்கள் செய்கிறார்கள் என்பது இவர்களது கண்களை மறைத்து விடுகிறது. 
மேலும், அந்த ஹதீஸை  நியாயப்படுத்த புகுந்தவர்கள் என்னதான் சிஹ்ர் என்றால் அற்புதமில்லை என்று விளக்க முயற்சித்தாலும் தங்களையும் அறியாமல் அது அற்புதம் தான் என்று ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.

இவரது மின்னஞ்சலில் ஒரு இடத்தில சிஹ்ர் என்றால் மேஜிக் என்று எழுதியவர்,  வேறொரு இடத்தில,சிஹ்ர் என்றால் கண் கட்டி வித்தை மட்டுமல்ல, அதற்கு வேறு பல அர்த்தங்களும் உள்ளன என்று சூசகமாக வேறு பக்கம் தாவவும் செய்கிறார்.

சிஹ்ர் என்றால் கண் கட்டி வித்தை மட்டுமல்ல, அதற்கு வேறு பல அர்த்தங்களும் உள்ளன என்று இவர் சொல்வாரானால் எந்த சிஹ்ரை பெரும் பாவம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்பதற்கு இவர் விடை சொல்ல வேண்டும்.

மேலும், சிஹ்ர் என்பது அற்புதம் என்று வைத்துக்கொண்டாலும், முன் அந்த கலை இருந்தது, இப்போது அது அழிந்து விட்டது என்று புரிய வேண்டும்  என்கிறார்.

சரி, என்ன வகையான சூனியம் இருந்தது?
அது இருந்தது என்பதற்கு என்ன சான்று?
அது அழிந்து விட்டது என்றால் அதற்கு என்ன ஆதாரம்?? 
அதை அழித்தது யார்? 
அழிப்பேன் என்று அல்லாஹ் சொன்னானா??
சரி,  அழிந்து விட்டது என்றால் இப்போது அது இல்லை தானே?? இல்லாத ஒன்றை அது பெரும்பாவம் என்று ஏன் அல்லாஹ் சொல்ல வேண்டும்?
அல்லது, இவரே வேறொரு இடத்தில ஒப்புக்கொண்டது போல, சிஹ்ர் என்பது வித்தை, மேஜிக் என்றால் அத்தகைய கலை ஒன்றும் அழியவில்லையே? அப்படியானால் ஒரு வகையான சிஹ்ர் மட்டும் தான் அழிந்ததா?

என்கிற விடையில்லா கேள்விகள் எழும். 

கை கால்களை முடமாக்கும் சக்தியுடைய சிஹ்ர் என்பது இப்போது இருந்தால் அதை வெளிக்கட்டுங்கள் என்று கேட்கும் போது, இப்போது அழிந்து விட்டது என்று கூறுவது தக்க பதிலாகுமா??இப்போது அழிந்து விட்டது என்பது காரண காரியத்துடனும் சான்றுகளுடனும் விளக்கப்படும் போது தான் முன்பு அத்தகைய கலை இருந்தது என்பது மெய்யாகுமேயொழிய, அழிந்து விட்டது என்று வாயளவில் சொல்வது, முன்பு இருந்ததை உறுதி செய்யாது.

குர்ஆனிலும் சூனியம் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது, ஹதீஸிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவை எல்லாம் முன்னரே அழிந்து போன அந்த கலையை பற்றியா?? இல்லை. குர் ஆன் சொல்வதும் ஹதீஸ் சொல்வதும், கண் கட்டி வித்தையை தான். 
இது அழியவுமில்லை, இதை நாம் மறுக்கவுமில்லை. இதை தாண்டி வேறென்ன ஆற்றல் இந்த சூனியத்திற்கு உள்ளது என்றால் கேட்டால் அத்தகைய ஆற்றலுக்கான சான்றுகளை முன் வைப்பதை விட்டு விட்டு, எதை சொன்னால் சான்று தராமல் தப்பித்துக்கொள்ள முடியுமோ அதை சொல்கிறார்கள்.

குர்ஆன் நெடுகிலும் சொல்லப்படும் சூனியம் என்பது கண் கட்டி வித்தை தான் என்றாலும் சில காரணங்களால் அல்லாஹ் அதை பெரும் பாவம் என்கிறான். 
இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள மூஸா நபியின் வரலாற்றை நாம் புரட்டி பார்க்க வேண்டும். தான் இறைவனின் தூதர் என்று சமூக மக்களிடம் நிரூபிப்பதற்காக பல அற்புதங்களை அவர்கள் செய்து காட்டினார்கள். ஆனால் அவற்றை எல்லாம் மறுத்த எதிரிகள், நீ செய்வதை போல எங்களாலும் செய்ய முடியும் என்று சவால் விட்டார்கள். 

கவனிக்க :  ""நீ செய்வதை போல எங்களாலும் செய்ய முடியும்"" என்றால், அல்லாஹ்வின் அற்புதமாக எதை  நபி அவர்கள் காட்டினார்களோ அதை எங்களாலும் செய்ய முடியும் என்பது பொருள். அல்லாஹ் செய்வது போல எங்களாலும் செய்ய முடியும் என்பது அதன் அர்த்தம் !
இதை தான் சவாலாக வைத்தார்கள், இதற்கு தான் அன்று பெரும் மக்கள் புடை சூழ மூஸா நபி ஒரு பக்கமாகவும் பிர்அவனின் கூட்டம் இன்னொரு பக்கமாகவும் நிற்க,போட்டியும் நடை பெறுகிறது.

மூஸா நபி செய்தது உண்மையான அற்புதமாக காட்சி அளிக்க, அந்த எதிரிகள் செய்ததோ, நம் கண்களுக்கு அற்புதம் போல காட்சி அளித்தது என்று அல்லாஹ் குர்ஆனில் வேறுபடுத்தி சொல்கிறான். அதாவது, மூசா நபி நிஜமாகவே அற்புதத்தை நிகழ்த்தி காட்டினார்கள், அந்த எதிரிகளோ ஏதோ ஒரு வித்தை காட்டி மக்களை ஏமாற்றி நம்ப வைத்தனர்.

இதை உறுதி செய்யும் முகமாக தான் மூஸா நபி அந்த எதிரிகளிடம், "நான் உண்மையை சொல்கிறேன், நீங்கள் அதை சிஹ்ர் என்கிறீர்களா?" என்று கேட்கிறார்கள். 
அதாவது, எந்த உண்மையை மூஸா நபி கொண்டு வந்தார்களோ அதற்கு எதிர் பதம் தான் சூனியம். அற்புதத்திற்கு எதிர் பதம் தான் சூனியம் !

அத்தகைய பொய்யை, அல்லாஹ் காட்டும் அற்புதத்திற்கு நிகராய் காட்டி அதன் மூலம் மக்களை ஏமாற்றி, பார், என்னாலும் இது போன்று செய்ய முடியும் என்று கூறி அல்லாஹ்வின் தன்மைக்கு இந்த சூனியம் செய்கிறவர்கள் உரிமை கொண்டாடுவதால் அது பெரும் பாவம் !!

மேலும், நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்புவது வஹீயின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தாது எனவும், நபிக்கு மன நோய் என்பது ஹதீஸில் இல்லாத, நாமாக திணித்து கொண்ட அர்த்தம் என்றும் இவர் கூறியிருக்கிறார்.



மேலும், இந்த வேதத்தை அல்லாஹ் பாதுகாப்பேன் என்று குர்ஆனில் வாக்குறுதி அளித்து விட்டதால் அது பற்றி கவலை கொள்ள கூடாது என்கிறார்கள்.

அது பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை, அல்லாஹ் ஒரு காரியத்திற்கு பொறுப்பெடுக்கிறான் என்றால் அந்த பொறுப்புக்கு பக்கம் எற்படுபவைகளாக மக்கள் கருதுவதற்கு இடம் அளிக்கா வண்ணம் பாதுகாக்கவும் செய்வான். அது தான் அல்லாஹ்வின் தன்மை. இதை நாம் யூகத்தில் சொல்லவில்லை, இதை அல்லாஹ்வே சொல்கிறான்.

29:48 வசனத்தில், நபிக்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் அதை காரணம் காட்டி மக்கள் இது இறைவனின் வார்த்தையில்லை என்று கூறி இருப்பார்கள், ஆகவே நபியை எழுத படிக்க தெரியாதவராக ஆக்கினேன் என்கிறான்.

வேதத்தை அல்லாஹ் பாதுகாப்பேன் என்று வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்றுவதற்கு மக்களிடையே நிலவும் குழப்பங்கள் எதையும் கருத்தில் அவன் கொள்ள தேவையில்லை தான். ஆனால், அல்லாஹ்வின் பார்வை எப்படி இருக்கிறது என்றால், வேதத்தை பாதுகாக்கவும் வேண்டும், அந்த பாதுகாப்பில் சந்தேகம் எழாமலும் இருக்க வேண்டும்.

ஆக, நபிக்கு சூனியம்  வைக்கப்பட்டதா நம்பினால் என்ன? அது தான் அல்லாஹ் வேதத்தை பாதுகாப்பேன் என்று சொல்லி விட்டானே,  என்று கேட்பதும் தவறான வாதமே..

தனது நிலையை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த ஹதீஸில் நபிக்கு மனக்குழப்பம் ஒன்றுமில்லை, சூனியம் என்பது கணவன் மனைவியை பிரிக்கும் செயல் என்று 2:102 வசனம் சொல்வது போல இங்கும் நபிக்கும் அவர்களது மனைவிக்கும் பிரிவினை உண்டாக்கும் பொருட்டு தான் சூனியம் வைக்கப்பட்டது என்கிறார்.

இவர்கள் சில அடிப்படைகளையே தவறாக புரிந்து, நபிக்கு பைத்தியம் என்று கூறப்படும் பயங்கரத்தையும் தாண்டி நபி வேண்டுமென்றே தவறான வழியில் சென்றார்கள் என்று சொல்ல வருகிறார்கள்.

நபிக்கு சிஹ்ர் வைக்கப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸில் சொல்லப்படக்கூடிய சூனியத்திற்கும், 2:102 வசனத்தில் கணவன் மனைவியை [பிரிப்பதற்கு செய்யப்படும் சூனியத்திற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. 

2:102 வசனத்தில் சூனியம் என்பது மனதில் தீய எண்ணங்களை இட்டு, உள்ளங்களை வழிகெடுக்கும் காரியத்திற்கு சொல்லப்படுகிறது. உள்ளங்களை வழிகெடுக்கும் வேலையும் அதற்கான ஆற்றலும் ஷைத்தானுக்கு உள்ளது என்பதால் அத்தகைய சூனியத்தை கொண்டு வந்த ஹாரூத் மாரூத் ஆகிய இருவரை ஷைத்தானுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸில், நபியின் மனதில் தீய எண்ணங்களை இட்டதாக சொல்லப்படவில்லை, செய்ததை செய்யவில்லை என்று கருதும் அளவிற்கு குழப்பமான மன நிலையை அடைந்ததாக தான் கூறப்பட்டுள்ளது.

மனதில் கெட்ட எண்ணங்கள் ஏற்படுவதும், மனக்குழப்பம் ஏற்படுவதும் சமமானவையல்ல. மனக்குழப்பம் இல்லாத, தெளிவான மன நிலையில் இருப்பவர்கள் தான் இன்று பல ஷைத்தானிய காரியங்களில் ஈடுபடுகிறார்கள். 
சூழ்ச்சி செய்து மனதில் தவறான நம்பிக்கையை புகுத்துவது தான் கண் கட்டி வித்தை , ட்ரிக் ஆக இருக்க முடியுமே தவிர, மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவது ட்ரிக் ஆகாது. 
அப்படி உள்ளங்களில் குழப்பங்களை ஏற்படுத்தும் வேலையை மூஸா நபியின் எதிரிகள் செய்ததாக அல்லாஹ் சொல்லவில்லை. கண்களை ஏமாற்றினார்கள் என்று தான் சொல்கிறான்.
இவர்கள் வாதப்படி  நபி (ஸல்)  அவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு கெட்ட எண்ணம் கொண்டார்கள் என்கிற அபாயகரமான கருத்து தான் மிஞ்சும்..
அல்லாமல், செய்ததை உண்மையில் செய்தோமா? என்று உறுதி செய்து கொள்ள கூட இயலாத அளவிற்கு ஒருவர் இருந்தார் என்றால் அவர் பெருத்த மனக்குழப்பத்தில் இருக்கிறார், மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தான் பொருள். 

நபிக்கு மன நோயா இல்லையா? என்கிற வாததிற்கெல்லாம் முன்னோடியாக, நபிக்கு யாருமே சூனியம் வைக்க முடியாது என்று அல்லாஹ் 17:47 வசனத்தில் தெளிவாக கூறுகையில் அதற்கு முரணில்லாத வகையில் தான் எந்த ஹதீசையுமே நாம் விளங்க வேண்டும். 

நபிக்கு சூனியம் செய்ய முடியாது என்று அல்லாஹ் சொல்வது போல நபிமார்களை ஷைத்தானால் தீண்டவே முடியாது எனவும் சொல்லி விட்டான் (பார்க்க 15:40, 26:221).

இவ்வளவு தெளிவாக சூனியம் பற்றி அல்லாஹ் சொல்லியிருக்கும் போது நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக யார் சொன்னாலும் அத்து கட்டுக்கதை தான்.
முரணில்லாமல் ஒரு ஹதீஸை விளங்கவே முடியாது என்றால் அந்த ஹதீஸை மறுத்து அதை குர்ஆனை விட்டும் தூரமாக்கி விட வேண்டுமே அல்லாமல் நாம் குர்ஆனை விட்டும் தூரமாகி சென்று விடக்கூடாது.

ஆக, ஒன்று, சூனியம் என்றால் அது ஒரு மிகப்பெரிய அற்புதம் மனித சக்திக்கு அப்பாற்ப்பட்ட ஆற்றலை அதை கொண்டும் செய்து காட்ட இயலும் என்று கூறி நபிக்கு சூனியம் செய்யப்பட ஹதீஸை நம்ப வேண்டும் (சூனியம் என்றால் அற்புதம் என்று நம்புவது தவறு என்பது நிரூபணமான உண்மை)
அல்லது, சூனியம் என்றால் வெறும் வித்தை தான், அற்புதமில்லை என்று கூறி அந்த ஹதீஸை மறுக்க வேண்டும்.

இரண்டுக்கும் நடுவே நின்று கொண்டு வாதம் புரிவது போகாத ஊருக்கு வழி சொல்வது போன்றதாகும்.

புதன், 26 ஜூன், 2013

ஹதீஸ்கள் தொகுக்கப்பட துவங்கியது எப்போது??



ஹதீஸ்களை தொகுத்த ஆசிரியர்களின் காலங்களை அறிந்து கொண்டால் ஹதீஸ்கள் எப்போது தொகுக்கப்பட துவங்கியது என்பதை அறிந்து கொள்ளலாம்.


சயீத் இப்னு மன்சூர்     பிறப்பு : ஹிஜ்ரி 47

ஷு'பா பிறப்பு : ஹிஜ்ரி 82

மாலிக் பிறப்பு : ஹிஜ்ரி ஹிஜ்ரி 93 (முஅத்தா நூல்)

அபு அவானா பிறப்பு : ஹிஜ்ரி  90

இப்னு ஜுரைஜ் பிறப்பு : ஹிஜ்ரி 80

மாமர் பின் ராஷித் பிறப்பு : ஹிஜ்ரி 96

சயீத் பின் அபு அரவபா மரணம் : ஹிஜ்ரி  156

ஹம்மாத் பின் சலமா பிறப்பு : ஹிஜ்ரி 91

சுபியான் பின் ரூவைனா பிறப்பு : ஹிஜ்ரி 107

சுபியான் தவ்ரீ மரணம் ஹிஜ்ரி 163

அப்துல்லாஹ் பின் முபாரக் மரணம் ஹிஜ்ரி 181

ஹுசைன் பின் பஷீர் பிறப்பு : ஹிஜ்ரி 104

ஜரீர் பின் அப்துல் ஹமீத் பிறப்பு : ஹிஜ்ரி 110

அஹ்மத் இப்னு ஹம்பல் பிறப்பு : ஹிஜ்ரி 164

இப்னு அபி ஷைபா பிறப்பு : ஹிஜ்ரி 160

தாரமி பிறப்பு : ஹிஜ்ரி 181

ஷாபி பிறப்பு : ஹிஜ்ரி 150

அப்துர் ரசாக் பிறப்பு : ஹிஜ்ரி 126

புஹாரி பிறப்பு : ஹிஜ்ரி 194

முஸ்லிம் பிறப்பு : ஹிஜ்ரி  204

திர்மிதி பிறப்பு : ஹிஜ்ரி 210

நசாயி பிறப்பு : ஹிஜ்ரி 215

அபு தாவூத் பிறப்பு : ஹிஜ்ரி 202

இப்னு மாஜா பிறப்பு : ஹிஜ்ரி 209

பஸ்ஸா பிறப்பு : ஹிஜ்ரி 210

இப்னு ஹிப்பான் பிறப்பு : ஹிஜ்ரி 270

இப்னு ஹுஸைமா பிறப்பு : ஹிஜ்ரி 213

ஹாகிம் பிறப்பு : ஹிஜ்ரி 290

பைஹகி பிறப்பு : ஹிஜ்ரி 384

தப்ரானி பிறப்பு : ஹிஜ்ரி 260

அபு யா'லா பிறப்பு : ஹிஜ்ரி 210

தாரகுத்னி பிறப்பு : ஹிஜ்ரி 300








செவ்வாய், 25 ஜூன், 2013

சூனியம் - சில கேள்விகள்


சூனியம் தொடர்பாக நாம் பல கேள்விகளை முன் வைக்கிறோம்.

1. சூனியத்தால் கை கால்களை முடமாக்க முடியுமா??

2. சூனியத்தின் அதிகபட்ச தாக்கம் / ஆற்றல் என்று குர்ஆன் என்ன கூறுகிறது?

3. சூனியத்தின் அதிகபட்ச தாக்கம் / ஆற்றல் என்று ஹதீஸ் என்ன கூறுகிறது?

4. ஹாரூத் மாரூத் மலக்கு இல்லை ஷைத்தான் தான் என்பதற்கு பிஜே தரும் விளக்கத்தில் உள்ள குறைகள், தவறுகள் என்னன்ன?

5. சூனியம் என்றால் என்ன என்பதற்கு நாங்கள் தரும் விளக்கத்திற்கும் நீங்கள் தரும் விளக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடாக நீங்கள் கருதுவது எதை??

6. அல்லாஹ்வின் உதவியுடன் சூனியம் செய்யலாம் என்று புரிய வேண்டும் என்றால், அல்லாஹ்வின் உதவியுடன் சிலைகளால் தீங்கு செய்ய முடியும் என்று இப்ராஹிம் நபி சொன்னார்கள் (6:80) என்றும் புரியலாமா? 

7. மூஸா நபியின் எதிரிகள் செய்ததும் சூனியம் தான்,  அதை பற்றி அல்லாஹ் பேசும் எல்லா இடங்களிலும் அது ஒரு கண் கட்டி வித்தை, அது பொய் என்று தானே சொல்கிறான்? நீங்களோ அவர்கள் செய்ததும் அற்புதம் என்று எப்படி சொல்கிறீர்கள்?

8. நான் உண்மையை கொண்டு வருகிறேன்,நீங்கள் அதை சூனியம் என்கிறீர்களா?? என்று மூஸா நபி 10:77 கேட்பதாக வசனம் சொல்கிறது. மூஸா நபி காட்டிய அற்புதம் உண்மை, அதை பொய் என்று மறுப்பதற்கு எதிரிகள் பயன்படுத்திய வார்த்தை சூனியம். அற்புதத்தை மறுப்பதற்கு தான் சூனியம் என்கிற வார்த்தை  பயன்படுதப்பட்டது என்று இருக்கும் போது, நீங்களோ சூனியம் என்றாலே அற்புதம் என்று எப்படி குர் ஆனுக்கு மாற்றமாக பேசுகிறீர்கள்??

9. நபிமார்களை ஷைத்தானால் தீண்ட முடியாது என்று 15:40 வசனம் கூறும் போது, அதற்கு எதிராக நபிக்கு சூனியம் செய்யப்பட்டது என்று எப்படி சொல்கிறீர்கள்.?

10. அப்படியே ஒரு வாதத்திற்கு நபிமார்களை ஷைத்தான் தீண்டுவான் என்றாலும் முஹம்மது நபிக்கு யாரும் சூனியம் செய்ய முடியாது என்று அல்லாஹ் தனியாக வேறு சொல்கிறானே (17:47,48), நீங்களோ, இந்த வசனத்தையும் பொய்யாக்குகிறீர்களே ??

11. சூனியம் என்றாலே அது அற்புதம் என்று இருக்குமானால், நபிமார்கள் அற்புதங்களை கொண்டு  போது  இது ஒரு சூனியம் (அற்புத செயல்) என்று எதிரிகள் சொல்வார்களா?

12. முகமது நபி (ஸல்) அவர்களுக்கு பைத்தியம் பிடிக்குமா?

13. அப்படியானால் இந்த வேதத்தை அல்லாஹ் பாதுகாப்பான் என்பதற்கு இந்த நம்பிக்கை முரணாக நிற்கிறதே?

14. நபிக்கு சீப்பிலும் முடியும் சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ் பல முரண்பாடுகளை கொண்டதாக இருக்கிறதே, இதை எப்படி முரணில்லாமல் புரிவது?

15. நபியை மறுப்பதற்கும் , அவர்களது நபித்துவத்தை மறுப்பதற்கும்  எதிரிகளுக்கு இந்த ஒரு சம்பவமே போதுமே ஆனால் ஏன் எவருமே இதை பெரிதுப்படுத்தவில்லை ? இது பற்றி எதிரிகள் வெளியே செய்தி பரப்பி முஹம்மது சூனியம் செய்யபட்டு படுத்து கிடக்கிறார், அவர் ஒரு பொய்யர், பைத்தியக்காரர் என்று இத்தனை காலமாக நாங்கள் சொல்லி வந்தது மெய்யாகி விட்டது பாருங்கள் என்று எவருமே பேசவில்லையே ஏன்? 


  இன்னும் ஏராளமான கேள்விகள் கைவசம் இருந்தாலும் அடிப்படையாக மேலே உள்ள 15 கேள்விகளை சூனியம் குறித்த கேள்விகளாக உங்கள் முன் வைக்கிறேன். 

இவற்றுக்கு நீங்கள் தரும் சப்பை கட்டுகள்  என்னவாக இருக்கும் என்பதெல்லாம் நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம் என்பதால் அத்தகைய சப்பை கட்டுகளையே வழக்கம் போல பதிலாக தராமல் ஆக்கப்பூர்வமான விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்.


திங்கள், 24 ஜூன், 2013

கேள்விக்கு பிறந்த ஞான சூனியங்கள்




சில வருடங்களுக்கு முன்பு, தப்லீகில் ஊறிப்போன சகோதரர் ஒருவரிடம், இதுவெல்லாம் மார்க்கத்தில் இல்லாதது என்று விளக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். சட்டென ஒரு பதிலை சொன்னார் அவர்.
தப்லீக்கை நியாயப்படுத்தி எதையும் சொல்லி விட்டாரா?  நான் எடுத்து வைத்த வாதங்களுக்கு தக்க பதிலை சொல்லி விட்டாரா??
எதுவும் இல்லை அவர் சொன்ன பதில் " பிஜே முன்பு பீடி குடித்தார் தெரியுமா??? ""

இது உதாரணத்திற்கு நான் மேற்கோள் காட்டும் ஒரு உண்மை சம்பவம். எடுத்து வைக்கப்படும் வாதங்களுக்கு பதில் இல்லாத நிலை வரும் போது நாம் சார்ந்திருக்கும் இயக்கத்தையோ அதன் ஸ்தாபகர் சகோ. பிஜெவையோ விமர்சனம் செய்வது என்கிற போக்கு இது போன்ற பெயர்தாங்கி முஸ்லிம்களிடம் பெருமளவு காண முடிகிறது.

இதே நிலையை தான் சுய இன்பத்திற்கு வக்காலத்து வாங்கக்கூடிய சலபு கும்பலிடமும் காண முடிகிறது. நேரடியாக விவாதத்தில் சந்தித்து நம் வாதங்களுக்கு பதிலடி தருகிற முதுகெலும்பு அற்ற இந்த பேடிக்கும்பல், ஒளிந்திருந்து கொண்டு வழக்கம் போல் பிஜே காலை கழுவி குடித்து அதில் இன்பம் கண்டு வருகிறது. 
சுய இன்பத்தில் கிடைக்கும் ஆனந்தத்தை விட பிஜேவை கழுகி குடிப்பதினால் கிடைக்கும் இன்பம் சலபுகளுக்கு அதிகம் தான் போல..

சூனியத்தை நம்ப வேண்டும் என்றும் நம்ப கூடாது என்று சொல்கிற பிஜே ஒரு காபிர் என்றும் அவரது தரஜாவை உயர்த்துவதற்கு பாடுபடும் இந்த பேடிக்கும்பல், தாங்கள் நியாயபடுத்தி வரும் சூனியம் என்றால் உண்மையில் என்ன என்பதை தெளிவாக கூறுவதற்கு முக்கி மோதுகிறது என்பது தான் வேடிக்கை.

சமீபத்தில் இந்த கும்பலை சேர்ந்த ஒருவரிடம், சரி சூனியத்தை நம்பலாம், எந்த சூனியத்தை நம்ப வேண்டும் என்கிறீர்கள்?? சிலர் கை கால்களை கூட சூனியத்தால் முடமாக்க முடியும் என்கிறார்களே, அதை நம்பலாமா? என்று கேட்டதற்கு, இதற்கெல்லாம் எனக்கு விடை தெரியாது என்று வெளிப்படையாகவே (?) கூறி தமது அறிவாற்றலை வெளிக்காட்டினார்.

ஆக, சூனியத்தை நம்ப வேண்டும் என்று சொல்பவர்களிடம் சூனியத்திற்கான முழு அர்த்தம் தான் என்ன? அதன் பரிணாமங்கள் என்ன? எதையெல்லாம் செய்ய முடியும் எதையெல்லாம் செய்ய இயலாது என்கிற அனைத்து கோணங்களிலான விளக்கம் அறவே கிடையாது.
   
முன்னோர்கள் நம்பினார்கள், ஆகவே நாங்களும் நம்புகிறோம் என்று, எந்த கூட்டத்தின் தகுதிக்கு ஆடு மாடை அல்லாஹ் உதாரணத்திற்கு சொல்கிறானோ, அந்த உதாரண புருஷர்கள் நாங்கள் தான் என்று வெட்கமில்லாமல் கூறி திரிபவர்கள் தான் இவர்கள்.

அப்பன் பாட்டன்மார்கள் எதை நம்பினார்களோ அதையே நாங்களும் நம்புவோம், 
அதன் மூலம் பெரும் பாவத்தை மலக்குமார்கள் செய்தார்கள் என்று கூற வேண்டி வந்தாலும் பிரச்சனையில்லை, 
நபிகள் (நாயகம் ஸல்) அவர்கள் சில காலம் பைத்தியமாக இருந்தார்கள் என்று நம்ப வேண்டி வந்தாலும் பரவாயில்லை, 
அதன் மூலம் இந்த நபிக்கு யாராலும் சூனியம் செய்யவே முடியாது என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது அதையும் அனாயாசமாக மறுக்க வேண்டி வந்தாலும் பிரச்சனையில்லை, 
மூஸா நபிக்கு எதிராக எதிரிகள் செய்தவை அனைத்தும் வெறும் கபட நாடகம் எனவும் அவை பொய் எனவும சொன்ன அல்லாஹ்வின் வார்த்தைகளை காலால் மிதித்து, இல்லை எதிரிகளும் சில அற்புதங்களை தான் நிகழ்த்தி காட்டினார்கள் என்று நா கூசாமல் அல்லாஹ்வுக்கு எதிராக போர் செய்ய வேண்டி வந்தாலும் பரவாயில்லை, 
எங்களுக்கு எங்கள் மூதாதையர் தான் முக்கியம் என வெட்கமில்லாமல் அறிவிப்பும் செய்கிறது இந்த சல்லாப கூட்டம்.

மார்க்கத்தின் ஆணி வேரையே அசைத்து, நரக படுகுழிக்கு ஆயுத்தமாகி இருக்கும் இந்த கும்பலுக்கு, தங்கள் மீது தொடுக்கப்படும் கேள்விகள் எதையும் எதிர் கொள்ள திராணி இல்லது போவதால், பிஜேவை கழுவி குடிப்பது என்கிற உயரிய (?) பணியில் இறங்கி இருக்கிறார்கள். 
ஒன்றரை டன் மனித கழிவுகளை சுமக்க முடியுமா? நாங்கள் பிஜேவை விமர்சனம் செய்கிறோம் என்று யாராவது இந்த சல்லாபிகளிடம் முன் வந்தால், என்னது பிஜேவை விமர்சனம் செய்ய போகிறீர்களா?? ஒன்றரை டன் என்ன ஏழரை டன் கூட சுமப்போமே அதையும் ஓசியிலேயே சுமப்போமே என தங்களது கொள்கை உறுதியை காட்டும் வீரமிக்கவர்கள் தான் இந்த சல்லாபிகள்.

சூனியம் தொடர்பாக சில அரைவேகாட்டுதனமான கேள்விகளை இந்த கும்பல் முன் வைக்கிறது.. அவற்றை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

முதலில் இவர்கள் எடுத்து வைக்கும் கேள்வி.. நபியே தனக்கு சூனியம் வைக்கப்பட்டதை சொல்லி இருக்கும் போது இவர்கள் சூனியத்தை மறுத்தால் நபியின் சொல் பொய் என்று இவர்கள் சொல்கிறார்கள் என்று பொருள் வருகிறது என்கிற அறிவுப்பூர்வமான (??) வாதத்தை முன் வைக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த பைபிள் இறை வேதமா என்கிற விவாதத்தில், அது இறை வேதமில்லை என்பதற்கு நம் தரப்பில் அடுக்கடுக்கான சான்றுகள் முன் வைக்கப்பட்டன. அவற்றுக்கெல்லாம்  அசராத கிறிஸ்தவ கூட்டம், பைபிள் இறை வேதம் என்று பைபிளிலேயே வசனம் இருப்பதை பாருங்கள் என்று எடுத்துக்காட்டி மொத்த சபையையும் சிரிக்க வைத்தனர். 
அடேய்.. எந்த நூல் இறைவன் பேசியது இல்லை என்கிறோமோ அந்த நூலில் இது இறை வேதம் என்று எழுதி இருக்கிறது என்று எடுத்துக்காட்டுவது எந்த அறிவுக்காவது பொருந்துகிறதா? என்று நாம் திருப்பி கேட்டோம்.
இந்த சல்லாப ஞான சூனியங்களிடமும் இதே மெய் சிலிர்க்கும் ஞானத்தை தான் நாம் காண்கிறோம்.

எந்த ஹதீஸை இட்டுக்கட்டப்பட்டது, நபியின் பெயரால் பொய்யுரைக்கப்பட்டது என்று நாம் கூறுகிறோமோ அந்த ஹதீஸில் நபி சொல்கிறார்களாம், தமக்கு சூனியம் செய்யப்பட்டது என்று. 
இது போன்ற அறிவுசார் வாதங்களை ஊடகங்களில் எடுத்துக்கூறினால் நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பார்கள்.

இவர்கள் எழுப்பும் மற்றுமொரு வாதம்,  இந்த ஹதீஸை பதிவு செய்த புஹாரி இமாம் இணை வைத்தவர்களா? என்பதாகும். இதற்கும் பல முறை நாம் பதில் சொல்லியாகி விட்டது. 

புஹாரி இமாமும் மனிதர் தான் அவரும் கவனக்குறைவாக இருக்கத்தான் செய்வார். இதிலுள்ள் நுணுக்கமான தவறு அவருக்கு புலப்படாமல் இருந்திருக்கலாம், எப்படி காபாவின் மீது சத்தியமாக என்று சொல்லப்பட்டதில் உள்ள நுணுக்கமான தவறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதன் மூலம் சுட்டிக்காட்டப்பட்டதோ அது போல..
இதை கூறுகையில் இவர்கள் இதற்கு பதிலாக, வஹி எப்போது இறங்குகிறதோ அப்போது முதல் தான் அந்த சட்டமே துவங்கும், இந்த இடத்தில, அந்த யூதன் மூலம் தான் அல்லாஹ் அது தவறு என்கிற அந்த சட்டத்தையே இறக்குகிறான்  ஆகவே இதற்கு முன் அவர்கள் அந்த ஷிர்க்கை அறியவில்லை என்று கூற கூடாது என்கிறார்கள்.

இதுவும் அரைவேக்காட்டுத்தனமான பதிலே. 
அந்த யூதன் மூலம் தான் அல்லாஹ் இந்த  முதன் முதலாக உணர்த்துகிறான் என்று இருக்குமானால், "நீங்களும் ஷிர்க் செய்து கொண்டு தானே இருக்கிறீர்கள்" என்று அந்த யூதன் கேட்கும்படி அல்லாஹ் செய்திருக்க மாட்டான். ஏனெனில், அதற்கு முன்பு தான் அது ஷிர்கே இல்லையே, அதுவரை ஷிர்கே இல்லாத ஒரு காரியத்தை முதன் முதலாக நபியிடம் சுட்டிக்காட்டும் போது இதுவரை நீங்கள் ஷிர்க் தானே செய்து வந்துள்ளீர்கள் என்று கூறும்படி அல்லாஹ் செய்ய மாட்டான், இது முதல் காரணம்.

இரண்டாவது அப்படியே அந்த யூதன், "நீங்களும் ஷிர்க் செய்து கொண்டு தானே இருக்கிறீர்கள்", என்று கூறினாலும், அதை கேட்ட நபி அவனது அந்த வாசகத்தை திருத்தி இருப்பார்கள். 
"உன் மூலமாக தான் இந்த சட்டமே எனக்கு வருகிறது, ஆகவே இது நாள் வரை நாங்கள் செய்தது தவறல்ல, ஆகவே நீங்களும் இவ்வளவு நாள் ஷிர்க் செய்து கொண்டு தானே இருந்தீர்கள் என்று சொல்லாதே" என்று விளக்கம் கொடுத்திருப்பார்கள்., கண்டித்திருப்பார்கள்.

இந்த இரண்டுமே நடக்காத போது அது நாள் வரை, அந்த யூதன் கூறிய அந்த நுணுக்கமான விஷயத்தை நபி அவர்கள் கவனிக்காமல் இருந்துள்ளார்கள் என்பது தான் உறுதியாகிறது. கவனக்குறைவுக்கு அப்பர்ப்பட்டவன் அல்லாஹ் மட்டும் தான். நபியும் பலகீனங்களை கொண்ட மனிதர் தான் என்பதற்கு இந்த சம்பவத்தை அல்லாஹ் சான்றாக நிற்க செய்கிறான்.

ஆக, இதிலும் இவர்களது நுனிப்புல் ஆய்வு வெளிப்படுகிறது.

அடுத்து, பிஜே சமீபத்தில் உம்ரா சென்ற போது அங்குள்ள இமாம் பின்னால் நின்று ஏன் தொழுதார்? என்கிற உலக மகா ஞானோதயத்தை கேள்வியாக வடிக்கிறார்கள். அதாவது, இவர்களை போல நுனிப்புல் மேய்பவர்களாக மற்றவர்களும் இருப்பார்கள் என்று எண்ணுவதால் தான் இது போன்ற ஞானோதய கேள்வி எழுகிறது..

சூனியத்தை நம்புவது எப்படி இணை வைப்போ அது போல, தர்கா மீது நம்பிக்கை வைப்பதும் அப்பட்டமான இணை வைப்பு தான். இதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம். 
இப்போது, தர்காவிற்கு செல்பவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்றால் அதன் பொருள் என்ன?? வெளிப்படையாக ஒரு நபரை பற்றி இவர் தர்கா நம்பிக்கையாளர் என்று நமக்கு தெரியும் பட்சத்தில், அவர் தான் தொழுகையில் இமாமாக நிற்கிறார்  என்றும் தெரிகிற பட்சத்தில், அந்த தொழுகையை நாம் புறக்கணித்து தனியாக தொழ வேண்டும்.

இது தான் இணை வைப்பவர்களுக்கு பின்னால் நின்று தொழக்கூடாது என்பதன் அர்த்தமேயொழிய, ஒவ்வொரு இமாமையும் அழைத்து உங்கள் தர்கா நம்பிக்கை என்ன? இஸ்லாம் என்றால் என்ன என்று பேட்டி எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது பொருளல்ல!

நாம் பயணத்தில் இருப்போம், பேருந்து நிற்கும் இடத்தில பள்ளிவாசலை கண்டதும் தொழலாம் என்று செல்கிறோம், அங்கே ஒரு ஜமாஅத் நடந்து கொண்டிருந்தால் அதில் சேர்ந்து விட வேண்டும், இந்த இமாம் எப்படிப்பட்டவராக இருப்பார், ஒரு வேளை அந்த தர்க்காவில் இவரை பார்த்திருக்கிறோமோ, அன்று மொவ்லூத் வசூலுக்கு இவர் தான் வந்தாரோ?? என ஆய்வு செய்து கொண்டிருப்பது அந்த நேரத்தின் வேலையல்ல. 

மார்க்கத்தில் எதையுமே துருவி துருவி ஆராய வேண்டியதில்லை. அது போல, பிஜே சவுதிக்கோ குவைதிற்கோ சென்றார் என்றால் அங்குள்ள இமாம்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள், அவர்களது நம்பிக்கை என்னன்ன என்கிற ஆராய்சிகளை எல்லாம் செய்து கொண்டிருப்பது அவரது வேலையல்ல. 
பொதுவாக அனைவருமே சிஹ்ரை நம்புபவர்களாக அறியப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட இமாம், மனதளவில் அதை நம்பாதவராக கூட இருக்கலாம், அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரியும். இதை தொண்டு துருவிக்கொண்டிருப்பது உம்ராவிற்கு சென்று கடமையை முடிக்க நாடும் பிஜேவின் வேலையல்ல. 
தாம் யார் பின்னால் நின்று தொழ போகிறோமோ அவரை பற்றி ஏற்கனவே தனிப்பட்ட முறையில் பிஜேவிற்கு தெரிந்து, அவர் இணை வைக்ககூடியவர் என்றோ சூனியத்தை நம்பக்கூடியவர் என்றோ பிஜேவிற்கு ஏற்கனவே அறியும் பட்சத்தில், அப்போது அவர் பின்னால் நின்று தொழுவது கூடாது தான்.
இதை அறிய வேண்டியது பிஜேவின் வேலையல்ல. இதை புரிகிற சாதாரண அறிவும் இந்த சல்லாபிகளுக்கு இல்லாததால் இது போன்ற சப்பை கேள்விகள் இவர்கள் புறத்தில் இருந்து எழுகிறது. அல்லாஹ்வை போல எந்த குப்பனும் சுப்பனும் அற்புதம் செய்வான் என்று எப்போது ஒருவன் நம்பி விடுகிறானோ அந்த நிமிடமே அவன் அல்லாஹ் குர்ஆனில் சொல்கிற ஆடு மாடுகளாக ஆகி விடுகிறான். ஆடு மாடுகள் சிந்திக்காததில் ஆச்சர்யம் கொள்ள வேண்டியதில்லை.

 இந்த கும்பல் எழுப்பும் மற்றொரு கேள்வி, பிஜேவின் தமிழ் ஆய்வுகள் யாருக்கெல்லாம் சென்றடைந்ததோ அவர்கள் தொடர்ந்து சூனியத்தை நம்பி கொண்டிருப்பது தவறு, பிஜேவின் ஆய்வுகள் சென்றடையாத மற்ற மொழி வாசிகளுக்கு மறுமையில் கேள்வி கணக்கு இல்லை, இது என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள்.

இங்கே பிஜேவின் ஆய்வு சென்றடைந்ததா, தமிழ் தெரிந்தவர்களா இல்லையா என்பதல்ல பிரச்சனை. சூனியம் பற்றிய அந்த நுணுக்கமான செய்தி அந்த மக்களிடம் சென்றடைந்ததா இல்லையா என்பது தான் விஷயம். 

சூனியம் என்றல் உண்மையில் என்ன? அதன் ஆற்றல்கள் என்று சொல்லப்படுபவை என்ன? அதை நம்புவது எப்படி அல்லாஹ்வின் சிபத்துடன் மோதும் வகையில் உள்ளது என்பதை அறியாமல் பல்லாயிரக்கணக்கனோர் நபிக்கு சூனியம் செய்யப்பட்ட அந்த ஹதீஸை இன்று நம்புகிறார்கள். 

அவர்கள் எல்லாம் தர்காவிற்கு செல்வது போன்றதான பிழையை செய்யக்கூடியவர்கள் இல்லை. 

அந்த செய்தியை நம்பும் போது ஒரு நுணுக்கமான் பிழையையும் சேர்த்தே நம்புகிறோம் என்கிற விஷயம் அவர்கள் கவனத்திற்கு செல்லவில்லை என்பது தான் பிழை. 
இந்த பிழையை அல்லாஹ் பொறுக்ககூடியவன். அதே சமயம், அடேய் சூனியம் என்றால் இவர்கள் சொல்வது என்ன தெரியுமா? அதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும்  யார் வேண்டுமானாலும் வேறு யாரை வேண்டுமானாலும் எந்த புற சாதனமின்றி வீழ்த்தலாம், அவர்களது கை கால்களை முடமாக்கலாமாம் , இது அல்லாஹ்வின் தன்மையுடன் இனையாகிறது, இதற்கு எந்த இறை வசனமும் சான்றாக நிற்காது இப்படி நாம் நம்ப கூடாது என்று எடுத்து சொல்லப்பட்ட பிறகும் எவரெல்லாம் இந்த சல்லாப கும்பல் போல் முரண்டு பிடிக்கிறதோ, அப்போது, எதையுமே அறியாத நிலையில் சூனியம் பற்றி வருகிற ஹதீச நம்புகிற அந்த முஸ்லிமும் இவனும் எப்படி சமமாவான்?? 

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் இருவரும் சமமேயல்ல. இங்கே பிஜே சொல்கிறாரா, தமிழ் தெரிந்த மக்களிடம் சொல்கிறாரா என்பது, இந்த பிரச்சனையின் ஆழத்தை குறித்து எந்த சிந்தனையையும் செலுத்த இயலாத குறைமதியாளர்களின் கேள்வியாகும்..

இன்னும் சொல்லப்போனால், இன்று சூனியம் என்பதை நம்ப கூடாது என்று பிஜே மட்டும் சொல்லவில்லை பிஜெவிற்கோ தவ்ஹீத் ஜமாதிற்கோ சம்மந்தமில்லாத மலையாளிகள் என்னிடம் சொல்லி நான் கேட்டிருக்கிறேன் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பேசி கேட்டிருக்கிறேன். 
அல்லாஹ் யார் மூலமும்  மக்களுக்கு ஹக்கை கொண்டு செல்வான். 

கொண்டு வரப்படும் செய்தியின் உள்ள நம்பகத்தன்மை என்ன? அதில் உள்ள உண்மைகள் என்ன என்பதை சிந்தித்து அதனடிப்படையில் முடிவு செய்வது தான் ஒரு மார்க்க பற்றுள்ளவனின் போக்காக இருக்க வேண்டுமே தவிர, இதை தமிழன் தானே சொல்கிறான், இவனது பேச்சுக்கள் சென்றடையாத மக்களின் நிலை என்ன? என்றெல்லாம் வறட்டு வாதம் பிடிக்க கூடாது.

இது போன்ற ஏளனக்காரர்கள் பற்றி அல்லாஹ் சொல்வதை கூறி இந்த ஆக்கத்தை நிறைவுக்கு கொண்டு வருகிறேன். அல்லாஹ், 16:34 வசனத்தில் கூறுவதை பாருங்கள்.

அவர்கள் செய்த தீமைகள் அவர்களைப் பிடித்தன. அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது (தண்டனை) அவர்களைச் சுற்றி வளைத்தது 

தமிழ் கண்டுபிடிப்பு, ஆங்கிலத்தில் எடுபடுமா சவுதியில் எடுபடுமா என்றெல்லாம் ஏளனம் பேசுபவர்களை நோக்கி அவர்கள் பேசுகிற ஏளனமே நாளை மறுமையில் அவர்களை சுற்றிக்கொள்ளும், சூழ்ந்து கொள்ளும், அந்த நொடிக்கு இவர்கள் அஞ்சட்டும். 

அந்த நேரத்தில் புஹாரி இமாம் ஷிர்க் வைத்தார்களா? ஹதீஸை  தவறு செய்து விட்டார்களா?  தமிழ் பேசக்கூடிய பிஜே சொல்லை கேட்க வேண்டுமா என்றெல்லாம் அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டிருக்க முடியாது.

எனது ஆற்றலை போல வேறு எவராலும் செய்ய முடியும் என்று நீ எப்படியடா நம்புவாய்?? என்று அல்லாஹ் கேட்கும் அந்த அதி பயங்கரமான கேள்விக்கும், அவனது கோபப்பார்வைக்கும் அஞ்சுகிறவர்கள் ஏளனத்தை விடுத்து சிந்தினையை செலுத்த வேண்டும்.

யாருடைய தயவும் பலனளிக்காத நாள் அது !!



சனி, 22 ஜூன், 2013

முகநூல் பதிவுகள் : அல்லாஹ் நாடினால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுமா?




அல் குர்ஆன் 2:102 வசனத்தில் அல்லாஹ் நாடாமல் இந்த சூனியத்தால் எதுவும் செய்ய முடியாது என்று அல்லாஹ் சொல்கிறான். 
இதன் மூலம், சூனியம் என்பது அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கும் என்று நம்ப வேண்டும் என்று சிலர் வாதம் வைக்கிறார்கள்.

இது நுனிப்புல் மேய்வதால் வெளிப்படக்கூடிய சிந்தனை தான்.

அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் சூனியத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றால் சூனியம் என்கிற ஒன்றே இல்லை என்பதற்கு தான் அது சான்று !!!

சூனியம் என்பதே பொய், அது ஒரு கற்பனை, அதனால் யாருக்கும் எதுவும் செய்ய முடியாது என்கிற செய்தியை சொல்வதற்கு அல்லாஹ் அருளிய வசனத்தை எப்படி அல்லாஹ்விடமே திருப்பி விடுகிறார்கள் பாருங்கள் இவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக யுத்தம் செய்பவர்கள் அல்லாமல் வேறு யார்???

ஒரு உதாரணத்தை பார்ப்போமே. பூனை குறிக்கே சென்றால் சகுனம் சரியில்லை, அன்று உனக்கு ஏதேனும் துர்பாக்கியம் நிகழும் என்று ஒருவர் சொல்கிறார். அவருக்கு பதில் சொல்கிற நாம், அட முட்டாளே இப்படி எல்லாம் நம்பாதே, உனக்கு அல்லாஹ் நாடியதை தவிர வேறு எதுவும் யாராலும் செய்ய முடியாது என்று நம்பு.. என்று சொன்னால் இதன் பொருள் என்ன?

பூனை குறுக்கே செல்வதற்கும் உனக்கு துர்பாக்கியங்கள் நிகழ்வதற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பொருளாகுமா?? அல்லது அல்லாஹ் நாடினால் பூனை குறிக்கே செல்வதன் மூலம் உனக்கு துர்பாக்கியம் ஏற்படும் என்று பொருளாகுமா???

அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் வாதம் வைப்பவர்கள் தான இந்த சூனியத்தை நம்பிய முஷ்ரிக்குகள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

சரி, இது தான் இவர்கள் வாதம் என்றால், குர் ஆனில் வரக்கூடிய இன்னொரு வசனத்தை இதே போல இவர்கள் பொருள் செய்வார்களா??

அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். 'அல்லாஹ் எனக்கு நேர் வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?' (6:80)

இந்த வசனத்தில், சிலை வணங்கிகள் இப்ராஹீம் நபியிடத்தில் தங்கள் சிலைகளை அவர்கள் உடைத்ததால் ஆத்திரப்பட்டு இந்த சிலை உமக்கு தீங்கு செய்யும் என்று கூறினார்கள். அதற்கு மறுப்பு சொன்ன இப்ராஹிம் நபி, இந்த சிலை ஒன்றும் எனக்கு தீங்கு செய்யாது, என் இறைவன் நாடினாலே தவிர எதுவும் எனக்கு தீங்கீழைக்காது என்று சொன்னார்கள்.

இந்த வசனத்தின் படி, சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை, அதனால் இப்ராகிம் நபிக்கு தீங்கிழைக்க முடியாது என்று இவர்கள் சொல்வார்களா? அல்லது அல்லாஹ் நாடினால் சிலைகள் இப்ராஹிம் நபிக்கு தீங்கு செய்யும், சிலைகளுக்கும் சக்தி உண்டு என்று பேசுகிற வசனம் இது என்று கூறுவார்களா??

ஆக, எந்த வகையிலும் சூனியம் என்பது மாய மந்திரங்கள் தான் என்பதற்கு இவர்கள் வைக்கும் வாதங்கள் எதுவுமே ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்பதை விளங்கலாம்.

வெள்ளி, 21 ஜூன், 2013

முகநூல் பதிவுகள் : தவறுகள்



தவறுகள் எல்லாருக்கும் ஏற்படும் என்பதை உளப்பூர்வமாக நம்பியதால் தான் நாம் சுன்னத் (?) ஜமாஅத்தினர் இல்லை.
அதனால் தான் நாம் மத்ஹப்வாதிகள் இல்லை,
அதனால் தான் நாம் சஹாபாக்கள் சொல்வதும் மார்க்கம் தான் என்று கூறவில்லை.

எந்த மனிதனாக இருந்தாலும் அவன் தவறுகள் செய்யக்கூடியவன் தான், அவ்வாறே அல்லாஹ் எல்லாரையும் படைத்திருக்கிறான் என்பதை உறுதியுடன் நம்பியதோடு மட்டுமல்லாமல் அதை நமது வாழ்வியல் நடைமுறையில் செயல்படுத்தியும் வருகிறோம் என்பதால் தான் இன்று நாம் ஏகத்துவ வாதிகளாக திகழ்கிறோம்.!

இந்த நம்பிக்கை நம் மனதில் இருப்பதை கொண்டு நாம் பெருமை அடைகிறோம், இந்த நம்பிக்கை இருக்கும் காலமெல்லாம் நாம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொண்டே இருக்கலாம்.

எப்போது இந்த நம்பிக்கையை விட்டும் தடம் புரள்கிறோமோ, அப்போது ஏகத்துவமும் நம்மிலிருந்து அகன்று விடும் என்பதை நம் சகோதரர்களும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

முகநூல் பதிவுகள் : மத்ஹபில் உள்ள அசிங்கத்தை எடுத்து சொல்லக்கூடாதா?


மத்ஹபில் இன்னின்ன அசிங்கங்கள் உள்ளன என்று நாம் எடுத்துக்காட்டும் போது ஏன் பாய் கண்ணியக்குறைவாக பேசுறீங்க?? இஸ்லாம் அழகிய முறையில் பேச தானே சொல்கிறது? என்று நமக்கு அறிவுரை கூற புறப்படுகின்றனர் சிலர்.
கண்ணியமாக பேச வேண்டும் என்று குர்ஆன் கூறுவது, மத்ஹபில் உள்ள அசிங்கங்களை எடுத்துக்காட்டுவதை விட்டும் நம்மை தடுக்காது. 

இந்த நூலில் அசிங்கமாக எழுதப்பட்டுள்ளது பாருங்கள் என்று எடுத்துக்காட்டுவது, இஸ்லாம் கண்ணியமாக தான் பேச சொல்கிறது என்கிற சட்டத்தை மதிப்பதாக தான் ஆகும்.
நானே சுயமாக கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது தான் தவறே தவிர, ஒரு சமுதாயத்தை நரகத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் நம்பும் நூலில் உள்ள அபத்தங்களை எடுத்து சொல்வது குற்றமாகாது மட்டுமல்ல, அது தான் சரியான வழியும் கூட.

ஒருவர் தம் மனைவியிடம் பின் பக்கத்தில் இருந்தவாறு இல்லறத்தில் ஈடுபட்டால் குழந்தை மாறு கண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே 'உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். ஆகவே உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்!' என்ற (2:223வது) வசனம் இறங்கியது. அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 4528

இந்த ஹதீஸில் யூதர்களின் கருத்து தவறானது என்பதை அல்லாஹ் தனது திருமறையில் வசனம் இறக்கி மக்களுக்கு அறிவிக்கின்றான். இந்தச் செய்தி ஹதீஸ் நூற்களிலும் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் ஆபாசம் என்று கருதி இஸ்லாம் விட்டு விடவில்லை.

உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்து உரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன் 5:94)

முகநூல் பதிவுகள் : அஹ்லே குர்ஆன் ஏன் தோன்றினார்கள்?



ஹதீஸ்களை முழுமையாக மறுக்கும் கூட்டத்தினர் ஏன் உருவானார்கள்? குர்ஆனுக்கு முரணாக இருந்தாலும் அதை ஏற்று குர்ஆனை மறுக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் காரணமாகத் தான் உருவானார்கள். 
குர் ஆனுக்கு முரண்பட்டால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்ற சரியான நிலைபாட்டை மார்க்க அறிஞர்கள் சொல்லி இருந்தால் ஹதீஸ்களை மறுக்கும் கூட்டத்தினர் உண்டாகி இருக்க மாட்டார்கள். 

எந்தக் கோட்பாடு ஹதீஸ்களை மறுக்கும் போக்கைத் தடுத்து நிறுத்துமோ அந்தக் கோட்பாடுதான் ஹதீஸ்கள் மறுக்கப்படுவதற்குக் காரணம் என்று கூறுவதை விட வேடிக்கையான வாதம் எதுவும் இருக்க முடியாது.

இவர்கள் கூறுவது போல் குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற அறிவற்ற வாதத்தை யாராவது எடுத்து வைத்தால் அது குர்ஆனுக்கு முரண்படவில்லை என்று எடுத்துக் காட்டி அதை முறியடிப்பது தான் முறையாகும் .
கொசுவுக்குப் பயந்து குடிசையைக் கொளுத்தக் கூடாது. குடிசையை வைத்துக் கொண்டு கொசுவைத் தான் கொல்ல வேண்டும்.

குர்ஆனிற்கு முரண்படாத ஹதீஸை யாராவது குர்ஆனிற்கு முரண்படுவதாக ஆதாரங்கள் இன்றிக் கூறினால் அவருடைய அந்த கருத்தை தவறு என்பதை விளக்கி அதன் முதுகெலும்பை முறிக்கும் வகையில் நாம் பதிலளிப்போம்.

நபிகள் நாயகத்தின் எந்த ஒரு ஆதாரப்பூரவமான வழிமுறையும் மறுக்கப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். அல்லாஹ் அத்தகைய சத்தியவாதிகளை கியாமத் நாள் வரை கொண்டுவரத்தான் செய்வான்.

Article Copied From: www.onlinepj.com ,

முகநூல் பதிவுகள் : பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?


ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதைச் செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும். 

(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது)

மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது)

பராஅத் இரவன்று பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் கடைவீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராயிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!

Article Copied From: www.onlinepj.com , Read more at:http://onlinepj.com/egathuvam/2013-/

முகநூல் பதிவுகள் : குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை



குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

இதை செய்தால் சாக்லேட் தருவேன் இந்த வேலையை செய்தால் வெளியே அழைத்து போவேன் என்றெல்லாம் குழந்தைகளிடம் பேரம் பேசக்கூடாது. நாளடைவில் ஒவ்வொன்றுக்கும் எதையேனும் எதிர்பார்த்து செய்யும் சுபாவமே குழந்தைகளிடம் தலை தூக்கும். வீட்டு வேலைகள் செய்வதும் அப்பா அம்மாவுக்கு பணிவிடை செய்து கொடுப்பதும் தனது அடிப்படை கடமை என்பதை குழந்தை கவனிக்க தவறி விடும்.

படித்ததில் முக்கியமாக நான் கருதிய இரண்டு...

முகநூல் பதிவுகள் : பாகிஸ்தான் தவ்ஹீத் ஜமாஅத்


பாகிஸ்தானை சேர்ந்த நண்பர் ஒருவர் தற்செயலாக சகோ. பிஜே புகைப்படம் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டு சைனுல் ஆபிதீன் தானே, தவ்ஹீத் தானே என்று என்னிடம் விசாரித்தும் கொண்டார்.

எப்படி இவரை தெரியும் என்று கேட்டதற்கு, நான் சவுதியில் தமிழர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில தங்கி இருந்தேன், இவரது சிடி அதிகம் ஓடும், என்று சொன்னவர், ரூமில் உள்ளவர்கள் மத்தியில் அது சரியா இது சரியா என அதிகமாக விவாதங்கள் எல்லாம் எல்லாம் வரும், என்றும் கூறினார்.

"அச்சா ஆத்மி பாய்.." என்றும் பிஜே பற்றி சிலாகித்துக்கொண்டார்.

பாகிஸ்தானில் தர்காவாதிகளும் தரீக்காக்களும் அதிகமாக இருந்தாலும், இந்த சகோதரர், அவையெல்லாம் மிகப்பெரிய தவறு என்று நம்மை விடவெல்லாம் மிக ஆவேசமாக பேசுகிறார். நபியின் சுன்னாஹ் இருக்கும் போது இமாம் எதற்கு, சஹாபாக்கள் எதற்கு? என்று தெளிவாக கேள்வி கேட்கிறார்.

அங்கும் ஒரு தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுகிறதாம்.. அதையும் சொன்னார்,.அல்ஹம்துலில்லாஹ் !!

பாகிஸ்தானி ஒருவர் மார்க்கத்தை இவ்வளவு தெளிவாக பேசி இன்றைக்கு தான் நான் கேட்கிறேன் என்பதால் இதை இங்கே பதிகிறேன்.

வியாழன், 20 ஜூன், 2013

முகநூல் பதிவுகள் : (ரலி) என்று சொல்வது கட்டாயமா?



ரஹ்மதுல்லாஹி அலைஹி என்று பெரியார்களின் பெயருக்கு பின்னால் சொல்ல வேண்டும் என்பது கட்டாய கடமை போல ஆகி விட்டது ஆக்கப்பட்டு விட்டது, பலரும் அர்த்தமே தெரியாமல் ஷாபி (ரஹ்) ,அபு ஹனீபா (ரஹ்) என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

அவர் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும் என்கிற துஆ தான் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்கிற வாசகத்தின் அர்த்தம் எனும் போது இதை யாருடைய பெயருடனும் சொல்லலாம், யாருடனும் சொல்லாமலும் இருக்கலாம். 

இமாம்கள் பெயரை சொல்கிற போது இதை கூடவே சேர்த்து சொல்வது கட்டாயம் போல் ஆக்குவது வழிகேட்டுக்கு கொண்டு செல்லும் பித்அத் ஆகும். மார்க்கம் கட்டாயமாக்காததை கட்டாயம் ஆக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை !

இது போல் சஹாபாக்களின் பெயருடன் ரலியல்லாஹு அன்ஹு (ரலி) என்று சேர்த்து சொல்வதும் கட்டாயம் போல கருதப்படுகிறது. இதுவும் மார்க்கம் கட்டாயமாக்காத ஒரு காரியமாகும். சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் என்கிற அளவோடு நிறுத்திக்கொள்வது தான் ஈமானுக்கு பாதுகாப்பானது.

- சகோ. பிஜே கேள்வி பதில் உரையிலிருந்து புரிந்தெடுத்தது..

முகநூல் பதிவுகள் : தக்லீத்


இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்றால் பிஜேவின் விளக்கம் எதற்கு???

பாமரருக்கும் இஸ்லாம் புரியும் என்று ஒரு பக்கம் சொல்லி இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்று பிரசாரம் செய்து விட்டு, இன்னொரு பக்கம் பிஜே பயானை கேட்டு விளக்கம் பெற ஏன் செல்கிறீர்கள்? இது முரண்பாடில்லையா? என்கிற இந்த கேள்வி, சமீபத்தில் எனது இன்பாக்ஸை நிரப்புகிறது.

மடத்தனமான கேள்வியை கேட்பதை விடவும் கொடுமையானது, அதை கேட்டு விட்டு, தான் அறிவுப்பூர்வமாக கேட்டு விட்டதாக பெருமிதம் கொள்வதாகும் !
இந்த கேள்வியே இஸ்லாத்திற்கு வெளியே நின்று கொண்டு கேட்கப்படும் கேள்வி என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரியாததால் தான் ஏதோ அதி பயங்கர கேள்வியை கேட்டு விட்டதாக எண்ணுகிறார்கள்.

ஏன் இது இஸ்லாத்தின் வரம்புகளை விட்டும் வெளியே நின்று கேட்கப்படும் கேள்வி??

எந்த இஸ்லாம், இந்த மார்க்கத்தை எளிமை என்று சொல்லியுள்ளதோ அதே இஸ்லாம் தான் நன்மையை ஏவுங்கள் என்றும் சொல்லியுள்ளது, அதே இஸ்லாம் தான் தீமையை தடுக்கவும் சொல்லியுள்ளது.

நன்மையை இன்னொருவருக்கு ஏவுதல் என்பதே அந்த நபர் எளிமையான இந்த மார்க்கத்தை புரியவில்லை என்கிற போது தான் வரும்.

எந்த மார்க்கம் பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக்கப்பட்டிருக்கிறதோ அந்த மார்க்கத்தில் இருந்து கொண்டே சிந்தனையை செலுத்தாதவர்கள் இருப்பார்கள், எது நன்மை,எது தீமை என்பதை அறியாதவர்கள் இருப்பார்கள். ஆக. எளிமையான மார்க்கம் என்பதனுடைய அர்த்தம் முழுமையாவதே நாம் நமது சிந்தனையை செலுத்துகிற போது தான் !

குர் ஆனில், அறிந்தவர்கள் அறியாதவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ் அனுமதிக்கிறான்.
இங்கு வந்திருபவர்கள் வராத மக்களிடம் இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள் என்று தனது இறுதி உரையில் நபி (ஸல்) கூறினார்கள்.

வெள்ளை வெளீர் என்கிற மார்க்கம், பாமரருக்கும் புரிகிற வேதம் என்று சொல்லப்படுபவைகளுக்கெல்லாம் இவை முரண் இல்லை !

அறியாதவர்கள் அறிந்தவர்களிடம் கேட்டு தங்களை சரி செய்து கொள்ள முடிவதால் தான் இந்த மார்க்கம் வெள்ளை வெளீர் என்கிற மார்க்கம்.
ஒரு போதனையை கேட்டவர்கள் அதை கேட்காத பிற மக்களுக்கு எடுத்து சொல்கிற காரணத்தால் தான் இந்த மார்க்கம் எளிமையான மார்க்கம் !

ஆக, இது போன்ற கேள்வி மிகவும் அபத்தமானது மட்டுமல்ல, குர் ஆனிலேயே முரண்பாட்டை கற்பிக்கும் கேள்வியாகும். !

அடுத்ததாக, பிஜேவை விமர்சனம் செய்து ஏதேனும் பதிவுகள் இட்டால் உடனே ததஜவினர் மத்ஹப் இமாம்களை பற்றி எதையாவது போட்டு விடுவார்கள், உங்க இமாம் பெருசா எங்க இமாம் பெருசா என்பது தான் இவர்களது எண்ணமாக இருக்கிறது என்று கப்ர் வணங்கி கூட்டம் நம்மை விமர்சிக்கிறது.

ஏகத்துவத்தை போதிக்கிற, தனி மனித போற்றல், தனி மனித வழிபாடு போன்றவைகளுக்கு கூட அவ்வளவு அழகான விளக்கத்தை வைத்திருக்கிற நம்மை நோக்கி, மார்க்கத்தின் பெயரால் எவன் என்ன சொன்னாலும் நம்புகிற கூட்டம் ஒன்று விமர்சனம் செய்வது ஈயத்தை பார்த்து பித்தளை கேலி செய்ததற்கு சமமாகும்.

இமாம்களை இவர்கள் ஈமான் கொண்டிருப்பதற்கும் சகோ பிஜேவின் ஆய்வுகளை நாம் மேற்கோள் காட்டுவதற்கும் இடையே மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது, இந்த வேறுபாட்டினை புதிதாக இந்த ஏகத்துவ கொள்கையை ஏற்ற ஒரு சகோதரன் கூட மிக துல்லியமாக விளக்குவான்.

உன் இமாம் பெருசா என் இமாம் பெருசா என்று போட்டி இடுவது ஒரு தவ்ஹீத்வாதியை பொறுத்தவரை சிரிப்பை வரவழைக்க கூடிய ஒரு காரியமாகும்.

தவ்ஹீத்வாதிகளுக்கு எந்த இமாமும் தேவையில்லை. அல்லாஹ்வை கேலி செய்கிற நபியின் பெயராலேயே புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிற, தொழுகை, நோன்பு என அனைத்து மார்க்க சட்டங்களையும் இழிவுப்படுத்துகிற வேலையை மத்ஹப் இமாம்கள் செய்துள்ள போது அவற்றுக்கும் முட்டுக்கொடுத்து நியாயப்படுத்தும் இழி நிலையை இவர்கள் அடைந்தது போல ஒரு தவ்ஹீத்வாதி அடையவே மாட்டான்.

பிஜெவாக இருந்தாலும் அவர் மார்க்கத்தை தப்பும் தவறுமாக போதிப்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அடுத்த நொடியே பிஜே இந்த சமுதாயத்தால் தூக்கி வீசப்படுவார், எட்டி உதைக்கப்படுவார்.

குர் ஆன் ஹதீஸுக்கு ஒத்ததாக பேசுகிற வரை தான் யாருக்கும் மதிப்பு ! அதை விட்டு தடம் புரண்டு விட்டால் எங்களுக்கு ஜமாலியும் ஒன்று தான் பிஜேவும் ஒன்று தான்.
இதை உரக்க சொல்வதால் தான் நாம் தவ்ஹீத்வாதிகள் எனப்படுகிறோம் என்பதை இமாம்களுக்கு ஜால்ரா தட்டும் கூட்டத்தினர் உணர வேண்டும்.

இது பற்றி, அனைத்து கோணங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான ஆய்வு கட்டுரை விரைவில் தயாராகி வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.

சனி, 15 ஜூன், 2013

மூன்றாம் இரவில் இறங்குவது அல்லாஹ்வா அல்லாஹ்வின் அருளா?




கீழ் வானம் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ் உண்மையில் என்ன தான் சொல்கிறது என்பதை விளக்குவதற்கு முன்பாக, ஒரு சில அடிப்படைகளை இங்கே விளக்க வேண்டியுள்ளது.

ஒரே நேரத்தில் அர்ஷிலும் இருந்து கொண்டு கீழ் வானத்திலும் இறங்குவது அல்லாஹ்வுக்கு சாத்தியமாகாதா? என்கிற அதி பயங்கர (?) கேள்வியை கேட்கிறார்கள்.  சிந்தனையை அடகு வைத்து விட்டு எதையும் அணுகுவதால் தான் இத்தகைய அபத்தமான கேள்வி எழுகிறது.

அல்லாஹ்வின் சிபத்துகளை பற்றி பேசக்கூடிய எந்த இடமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு சாத்தியமா சாத்தியமில்லையா என்கிற ரீதியில் சிந்திக்க கூடாது. எது அல்லாஹ் கற்றுத்தந்த இயற்கை நியதியோ அந்த நியதிக்குள் நின்று தான் சிந்திக்க வேண்டும்.

ஒரு நேரத்தில் இரண்டு இடங்களில் இருப்பது அல்லாஹ் கற்றுத்தந்த இயற்கை விதிக்கு முரண். இந்த வசனத்தில் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்கிற விதி தான் இயற்கையானது, அது தான் இயற்கையாக அல்லாஹ் கற்று தந்தது. அந்த விதிக்கு முரணாக, அல்லாஹ்வுக்கு எதுவும் சாத்தியம் தானே என்கிற கோணத்தில் நாம் சிந்திக்க தேவையில்லை.


அப்படி சிந்திப்பதாக இருந்தால் கபருக்குள் இருக்கும் மய்யித் அல்லாஹ்வின் ஆற்றலை பெற்று  குறைகளை கேட்டறிகின்றன என்று சொல்கிற முஷ்ரிக்குகளின் வாதத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். ஏன்? அல்லாஹ் நாடினால் கப்ருக்குள் இருக்கும் மய்யித்துக்கு தனது ஆற்றலை வழங்க முடியாதா?? முரணான ஒன்றை அல்லாஹ் நாடினால் முரண்பாடில்லாமல் புரிய முடியாதா என்று இதற்கும் கேள்வி கேட்கலாம்.

இரவும் பகலும் சமமாகாது என்று அல்லாஹ் சொல்வது கூட நம்மளவில் புரிய தான். உண்மையில் அல்லாஹ்வின் சிபத்திற்கு இது போன்ற முரண்பாடுகளை முரண்பாடு இல்லாமல் அமையும், இரவும் பகலும் அல்லாஹ்வின் புறத்தில் சமம் தான் என்று தான் புரிய வேண்டும் என்று கூட வாதம் வைக்கலாம்.

நன்மை தீமை சமமாகாது, படித்தவர் படிக்காதவர் சமமாக மாட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லும் ஏராளமான வசனங்களை இப்படி கூறிய பொருள் மாற்றி விடலாம்.

சரி இப்படி கேள்வி கேட்பவர்கள், தமக்கு தாமே முரண்படும் வகையில் இன்னொரு கேள்வியையும் கேட்கிறார்கள். என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பார் இல்லையா என்று அல்லாஹ்வின் அருள் பேசுமா?? என்று கேட்கிறார்கள்.

இவர்களது பாணியிலேயே நாம் இதற்கு பதில் சொல்லலாம். ஏன், அல்லாஹ்வுக்கு  தனது அருளை பேச வைக்க முடியாதா?? அல்லாஹ்வுக்கு ஒரே நேரத்தில் அர்ஷிலும் இருந்து கொண்டு கீழ் வானத்திற்கும் வர இயலும் என்று நம்புவது போல அல்லாஹ்வுக்கு தனது அருளை கூட பேச வைக்க முடியும், இப்படியும் நம்பலாம்.
இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? அல்லாஹ் தனது அருளை இறக்கினான் அருள் பேசியது, ஏனெனில் அல்லாஹ் நாடினால் எதுவும் நடக்கும் என்று இவர்கள் பாணியில் நாம் விளக்கம் கொடுப்பதற்கு எது தடையாக இருக்கும்??

இது முதல் விஷயம்.

இரண்டாவதாக, அல்லாஹ்வுக்கு ஒரே நேரத்தில் அர்ஷிலும் இருந்து கொண்டு கீழ் வானத்திற்கும் வர இயலும், அது அல்லாஹ்வுக்கு சாத்தியம் தான் என்று நம்பலாம் என்று சொல்பவர்கள், அவர்களின் கட்டடங்களின் அடிப்புறத்தில் அல்லாஹ் வந்தான். என்று வரக்கூடிய வசனத்திற்கு மட்டும் (16:26) அல்லாஹ்வின் ஆற்றல் வந்தது என்று ஏன் பொருள் செய்ய வேண்டும்?? 

அர்ஷில் இருந்து கொண்டே கட்டிடங்களின் அடியில் அல்லாஹ்வால் வர இயலாதா??

நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். என்று வரக்கூடிய வசனத்திற்கு மட்டும் (57:4), அல்லாஹ்வின் கண்காணிப்பும் பாதுகாப்பும்   நம்மை சுற்றியிருக்கும் என்று ஏன் பொருள் செய்ய வேண்டும்??? அர்ஷில் இருந்து கொண்டே நம்முடன், நாம் செல்லக்கூடிய கடை வீதி, அலுவலகம், பேருந்து நிலையம் என எங்கு வேண்டுமானாலும் அல்லாஹ்வால் வர இயலுமே.. இப்படி இவர்கள் ஏன் புரிவதில்லை?

ஆக, தெளிவான சந்தர்ப்பவாதமே இவர்கள் வாதங்களில் வெளிப்படுகிறது. உண்மையை அறியும் ஆர்வமும் இவர்களுக்கு இல்லை, அதற்கான தகுதியையும் இவர்கள் வளர்க்கவில்லை என்பதற்கு இவை சான்று.

அர்ஷில் இருந்து கொண்டே கீழ் வானத்திலும் இருக்கலாம் என்று சொல்வது முரண்பட்ட நம்பிக்கையாகும் என்றாலும், அது நமக்கு தான் முரண், அல்லாஹ்வின் சிபத்தில் இது போன்ற முரண்பாடுகள் நமது கற்பனைக்கே எட்டா வண்ணம் முரணில்லாமல் கூட இருக்கும், ஆகவே இதை முரண் என்று நாம் சொல்ல கூடாது என்றும் இவர்கள் வாதம் வைக்கிறார்கள். 

இது தான் வாதம் என்றால், அல்லாஹ் வேறொரு வசனத்தில், நிராகரிப்பாளர்கள், ஊசியில் காதில் ஒட்டகம் நுழைகின்ற வரை சுவர்க்கம் செல்லவே மாட்டார்கள் என்கிறான். 
இதன் சரியான பொருள், எந்த நிலையிலும் இவர்கள் சுவர்க்கம் செல்லவே மாட்டார்கள் என்று அடித்துக்கூற கூடிய வசனம் இது என்று எவருமே சொல்வர். 

மேலே உள்ள கீழ் வானம் ஹதீஸுக்கு சப்பைக்கட்டு கட்டும் சலபிகளிடத்தில் இந்த இறை வசனத்திற்கு விளக்கம் கேட்டால், நிராகரிக்கின்றவர்களால் சுவர்க்கம் செல்ல முடியாது தான், ஆனால் இங்கே அல்லாஹ் ஊசியின் காதில் ஒட்டகம் நுழைகிற வரை என்று ஒரு நிபந்தனையை சொல்கிறான், இந்த நிபந்தனை இயற்கை நியதிப்படி முடியாது என்றாலும் அல்லாஹ்வின் சிபத்திற்கு இது நடத்திக்காட்டக்கூடிய ஓன்று தான், இது அல்லாஹ்வுக்கு சாத்தியம் தான் என்பதால், அல்லாஹ், ஊசியின் காது வழியாக ஒட்டகத்தை புக செய்து நிராகரிப்பாளர்களை சொர்க்கத்திற்கு கொண்டு செய்வான் என்று பொருள் செய்வார்களா??

சரி இந்த ஹதீஸுக்கு சரியான புரிதல் தான் என்ன??

அல்லாஹ்வின் அருள் மூன்றாம் இரவின் போது நம்மை நெருங்குகிறது என்பது தான் இதன் பொருள். அப்படியானால் என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பவர்கள் இல்லையா? என்று அருள் பேசுமா?? என்று கேள்வி எழும். 

இங்கே தான் ஒரு நுணுக்கமான புரிதலை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஹதீஸில் இரண்டு செய்திகள் உள்ளன. 

ஒன்று, அல்லாஹ் கீழ் வானத்தில் இறங்குகிறான் என்கிற செய்தி. 
இரண்டு, என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பவர்கள் உண்டா என்று அல்லாஹ் கேட்கிறான் என்கிற செய்தி. 

இரண்டையுமே அதன் நேரடி பொருளில் புரிந்தாலோ, ஏதேனும் ஒன்றை  அதன் நேரடி பொருளில் புரிந்தாலோ, இப்படி தான் சலபுகள் போல நுனிப்புல் மேய்ந்தவர்கலாக ஆவோம். 

உண்மையில் இந்த இரண்டு செய்திகளுமே உவமையான செய்திகள் தான்.

என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பவர்கள் உண்டா என்று அல்லாஹ் கேட்கிறான் என்கிற செய்தியை அல்லாஹ்வே பேசினான் என்று புரிய இயலவே இயலாது. 
அல்லாஹ் பேசினான் என்றால் யாரிடம் பேசினான்??? தூங்கிக்கொண்டிருக்கும் நம்மிடமா?? அப்படியானால் அல்லாஹ் பேசினான், அல்லாஹ் இப்படி கேட்டான் என்று ஒவ்வொரு மூன்றாம் இரவிலும் நாம் உணர்கிறோமா? நம் காதுகளில் அல்லாஹ் பேசுவது விழுகிறதா? 
இல்லை. இறை தூதர்களிடம் தவிர மற்றவர்களிடம் அல்லாஹ் பேசுவதில்லை, அப்படியே ஒரு வாதத்திற்கு அல்லாஹ் மற்றவர்களிடமும் பேசுவான் என்று சொன்னாலும் இங்கே கேட்பவர் எவருமின்றி அல்லாஹ் பேசுவதாகவே பொருள் வருகிறது. கேட்பவர் எவருமின்றி அல்லாஹ் பேசினான் என்று சொல்வது அல்லாஹ்வை கேலி செய்வதாகும். அர்த்தமில்லாத ஒன்றை அல்லாஹ் சொல்ல மாட்டான்.

ஆக அல்லாஹ் இவ்வாறு கேட்டான் என்பதற்கு, அல்லாஹ் இவ்வாறு எதிர்பார்க்கிறான் என்று பொருள் செய்வதே எல்லா விதத்திலும் பொருத்தமுள்ளதாக உள்ளது, முந்தைய வசனத்திற்கு, அல்லாஹ்வின் அருள் நம்மை நெருங்கும் என்று அர்த்தம் வைக்க இது உதவிகரமாகவும் இருக்கும்.
அல்லாஹ் தமது அருளை ஒவ்வொரு மூன்றாம் இரவிலும் அதிகமான அளவிற்கு நம்மீது பொழிய செய்து, இந்த அருளை, உங்கள் பாவ மன்னிப்பின் மூலமும் துஆக்களின் மூலமும் தொழுகைகளின் மூலமும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ் எதிர்பார்க்கிறான். 
இப்படி புரிவது தான் சரி, என்பது கருத்து.

ஏதேனும் தவறுகள் இருக்குமேயானால் மாற்றுக்கருத்துடையவர்கள் சுட்டிக்காட்டலாம்.


திங்கள், 3 ஜூன், 2013

தஜ்ஜால், ஈசா நபி அற்புதங்களும் மறுக்கப்பட வேண்டிய ஹதீஸ்களா??



சூனியம் கண் திருஷ்டி போன்றவை அல்லாஹ்வுக்கு இணையான காரியங்கள் என்று கூறி மறுக்கும் நீங்கள் எப்படி தஜ்ஜால் சம்மந்தமான ஹதீஸை மட்டும் ஏற்றுக்கொள்வீர்கள்??


ஒரு குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட விதத்தில் குறிப்பிட்ட காரியத்தை செய்வார் என்று மனித தன்மைக்கு அப்பாற்ப்பட்டதாக குர்ஆனோ ஹதீசோ ஒருவரை பற்றி கூறினால் அதை நம்பலாம், நம்ப வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அது அல்லாஹ்வுக்கு இணையானதில்லை.

குறிப்பிட்ட நேரத்திலும், குறிப்பிட்ட விதத்திலும் மட்டும் தான் அவரால் இதை செய்ய முடியும் என்கிற விதியே, அவர் அல்லாஹ்வின் தன்மையை கொண்டிருக்கவில்லை, மாறாக அல்லாஹ் தான் சோதனைக்காக இந்த ஆற்றலை அவருக்கு வழங்கியுள்ளான் என்கிற கருத்தை அழுத்தமாக புரிய வைக்கிறது,

சாமிரி என்பவன் மாட்டை போல ஒன்றை செய்கிறான், அது சத்தம் போடுகிறது என்று குர்ஆன் சொல்கிறது என்றால் அந்த நேரத்தில் அது மாடாக ஆனது, இன்னொரு சந்தர்ப்பத்தில் அது ஆகி இருக்காது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அது சத்தம் போடாது.

ஈசா நபி இறந்தவர்களில் சிலரை உயிர் கொடுத்து எழுப்பியதும் இதே நிலையில் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலவை பிளந்தார்கள் என்றால் அதுவும் இதே விதிக்கு உட்பட்டு தான்.

கியாமத் நாளுக்கு சமீபமாக தஜ்ஜால் சில அற்புதங்களை செய்து காட்டுவான் என்றால் அதையும் இதே அளவுகோலின் படி தான் நாம் புரிய வேண்டும்.

அதே சமயம், இவர்களுக்கு எல்லாம் இத்தகைய அற்புத சக்தியை அல்லாஹ் வழங்கி இருக்கிறான் என்பதை நம்புவதும், எந்த மனிதனாக இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும், உலகின் எந்த பாகமானாலும், எந்த காலகட்டமானாலும், எந்த மனிதரையும் எந்த வித புற சாதனமும் இன்றி வீழ்த்தி விடலாம் என்று நம்புவதும் மலைக்கும் மடுவுக்கும் இடையே இருக்கும் வேறுபாடாகும்.

இந்த அடிப்படை வேறுபாட்டை கூட நாம் புரியாமல் இருப்பதால் தான் பில்லி சூனியம் என்றும் மாய மந்திரம் என்றும் கண் திருஷ்டி என்றும் ஊரை ஏமாற்றி திரிகிறது ஒரு கூட்டம் !


இது தொடர்பாக மேலும் விரிவாக பின்னர் எழுதப்படும் இன்ஷா அல்லாஹ் !