புதன், 3 நவம்பர், 2010

மார்க்கத்தோடு விளையாடும் சில மத்ஹப் சட்டங்கள் !

மார்க்கத்தோடு விளையாடும் மேலும் சில சட்டங்கள்!


குர் ஆன் சொல்லாத திருமண தடை !

இச்சையுடன் ஒரு பெண் ஒரு ஆனை தொட்டால், தொட்டவளின் தாயும் மகளும் இவனுக்கு (திருமணம் செய்ய தடை, அவள் தொட்டது , அவனது தலை முடியாக இருந்தாலும் சரியே! (துர்ருல் முக்தர் பக்கம் 32 )

ரசூல் சொல்லாத சட்டம்

மாதத்தின் முதல் நாள் இரவிலும், கடைசி இரவிலும் நாடு இரவிலும் உறவு கொள்வது வெறுப்புக்குரியதாகும். ஏனெனில், இன்னாட்ட்களில், ஷைத்தான் விஜயம் செய்கிறான். (ஈ யானா பக்கம் 273 )


தொழுகைக்கு கொடுக்கப்படும் "மேன்மை"

அஹஹஹா என்று வெடிச்சிரிப்பு சிரிப்பது, வேண்டுமென்றே காற்று விடுவது, அல்லது பேசுவது போன்ற செயல்களை செய்த்து தொழுகையை விட்டு வெளியேறி விடலாம். (ஷாஹியா இப்னு ஆபிதீன் பக்கம் 448 )



நாய் அல்லது பூனையை இச்சு கொட்டி அன்புடன் அழைத்தாலோ, அல்லது கழுதையை விரட்டினாலோ, தொழுகை வீணாகாது! காரணம், இது எழுத்து வடிவிலான வார்த்தை அல்ல!
(துர்ருல் முக்தார் பக்கம் 614 )


தவ்ராதையோ, இன்ஜீலையோ தொழுகையில் ஓதலாம். ஆனால், அது அல்லாஹ்வை நினைவுப்படுதுபவையாக இருக்க வேண்டும், சரித்திரங்களாக இருந்தால் தொழுகை கெட்டுப்போய் விடும்.
(துர்ருல் முக்தர் பக்கம் 485 )


"குர் ஆனின் தாயை" கேவலப்படுத்தும் சட்டம்!

மூக்கு உடைந்து விட்டால், தன்னுடைய நெற்றியில் இரததைக்கொண்டு பாத்திஹா சூராவை குணமாவதற்காக எழுதலாம் . மூத்திரத்தில் (பாதிஹாவை) எழுதினாலும் தப்பில்லை! (சாகிய இப்னு ஆபிதீன் பக்கம் 210 )


விபசாரத்திலிருந்து தப்பிக்க..

தன்னுடன் (விபச்சாரத்தினால் பிடிபட்ட) அந்த பெண் அடுத்தவரின் மனைவியாக இருந்தாலும் சரி, அவளை தான் மனைவி என்று வாதிட்டால் தண்டனை கிடையாது! (ஷாஹியா இப்னு ஆபிதீன் பக்கம் 29 )


இன்னும் ஏராளம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக