வியாழன், 13 மார்ச், 2014

நிரூபணமான எஸ்டிபிஐயினரின் நயவஞ்சகம்



நயவஞ்சகர்களின் குணாதிசியங்களில் ஒன்றாக 9:58 வசனத்தில் அல்லாஹ் சொல்கிற போது, தங்களுக்கு இலாபமெனில் ஒன்றை அனுசரிப்பர், நட்டமெனில், ஆத்திரம் கொள்வர் என்கிறான்.

இந்த வசனத்திற்கு அப்படியே பொருந்திப் போகிற ஒரு நயவஞ்சக கூட்டமாக எஸ்டிபிஐ என்கிற இஸ்லாமிய துரோகிகள் திகழ்வதை கண் கூடாக நாம் காணலாம்.

இவர்களுக்கு இலாபமெனில் அனுசரிப்பர்.

முஸ்லிம் ஓட்டுக்கள் பெற வேண்டிய நிலை வரும் போது, ஆமாம் நாங்கள் முஸ்லிம் தான், நாங்களும் 24 கட்சிகள் கொண்ட கூட்டமைப்பில் இருக்கிறோம் என்பர்.
ஆர்எஸ்எஸை எதிர்க்க போகிறோம் என்கிற முழக்கம் எழுப்பப்படும் போது, அவர்கள் இஸ்லாமிய எதிரிகள், நாங்கள் இஸ்லாமிய பாதுகாவலர்கள் என தங்களை அப்போது முஸ்லிமாக காட்டிக் கொள்வர்.
அதில் அவர்களுக்கு இலாபம் இருக்கிறது என்பதால் அப்போது அனுசரிப்பர்.

அதுவே, இந்த கூற்றுகள் தங்களுக்கு இழுக்கை தரும் பட்சத்தில், அதை விட்டும் விரண்டு ஓடுவர். அதை எதிர்ப்பர், அதற்கெதிராக ஆத்திரம் கொள்வர்.

என்னப்பா முஸ்லிம் என்கிறாய், கோவில் கும்பாபிஷேகம் செய்வதை ஆதரிக்கிறாய், முஸ்லிம் கூட்டமைப்பில் இருக்கிறேன் என்கிறாய், கல்லுக்கு மலர் வளையம் வைத்து கொண்டாடுகிறாய் என்று நாம் கேட்கும் போது

ஆஹா, முஸ்லிம் என்று நம்மை சொல்வதாக இருந்தால் இப்படியெல்லாம் செய்யக் கூடாதே, ஆனால், இதை செய்யாமல் ஹிந்து ஓட்டுக்களை பெறவும் முடியாதே.. என்கிற இக்கட்டான (?) நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர்
அத்தகைய இக்கட்டான நிலையில், நாங்கள் முஸ்லிம்களே இல்லை, நாங்கள் எங்களை இஸ்லாமிய இயக்கம் என்று சொல்லிக் கொள்ளவேயில்லை நாங்கள் அனைவருக்கும் பொது..
என வெட்கமின்றி தங்கள் நிலைபாட்டையே மாற்றிக் கொள்வர் ; அதை விட்டும் விரண்டோடுவர் !

அப்துர்ரஹ்மான் மிஸ்பஹி தலைமையில் தமிழகத்தில் செயல்படும் சிறு சிறு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒரே கூட்டமைப்பின் கீழ் வருகின்றன.
அந்த கூட்டமைப்பின் பெயர் பட்டியல் தான் இங்கே இணைக்கப்பட்டிருக்கின்றன.

இவர்கள் மான ரோஷமுள்ளவர்களாக இருந்தால், இந்த கூட்டமைப்பை விட்டும் நாங்கள் வெளியேறுகிறோம், யாரடா எங்களை இந்த இஸ்லாமிய பட்டியலில் சேர்த்தது என்று கொந்தளிக்க வேண்டும்.

புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் இருக்கும் இந்த கூட்டமைப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது கண்டனத்தை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும்.

செய்வார்களா?
அல்லாஹ் சுட்டிக்காட்டும் நய வஞ்சகர்கள் தாங்கள் இல்லை என்பதை நிரூபிப்பார்களா?

நிச்சயம் மாட்டார்கள் !

அப்படி செய்தால், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று கூறி இனி பல்லிளித்துக் கொண்டு வர முடியாது.

பாபர் மஸ்ஜித் பிரச்சனையில் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கப் போகிறோம் என்று கொடி தூக்கி வர முடியாது,

பாஜகவிடமிருந்து முஸ்லிம்களை பாதுகாக்கப்போகிறோம் என்று ஊரை ஏமாற்றி திரிய முடியாது..

அரசியல் இலாபத்திற்காக, தங்கள் நய வஞ்சக போக்கினை தொடர்வதை தவிர இவர்களுக்கு வேறு வழியேயில்லை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக