வெள்ளி, 7 மார்ச், 2014

இட ஒதுக்கீட்டு முறை


தமிழகத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 100 இடங்களில் 31 இடங்கள் பொதுப்பட்டியலில் வரும்.

மீதமுள்ள 69 சதவிகிதம் தான்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். 

இந்த 69% ஒதிக்கீட்டில் Scheduled caste வகுப்பை சார்ந்தவர்களுக்கு 18 சதவிகிதமும் ST வகுப்பை சர்ந்தவர்களுக்கு 1 சதவிகிதமும் தனியாக ஒதிக்கீடு செய்யபடுகிறது.

மீதி இருப்பது 50%

எம்பிசி எனப்படும் மிகவும் பிற்பட்ட (Most Backward) மக்களுக்கு 20 சதவிகிதம்.

எஞ்சிய 30 சதவிகிதம் தான் பிற்பட்டோருக்கானது. இதில் பிற்படுத்தப்பட்ட ஹிந்து மத‌ சாதிகளும், கிறித்தவர்களும் முஸ்லிம்களும், சீக்கியர், ஜைனர், புத்தர்கள் அடங்குவார்கள்.

இந்த முப்பதில் முஸ்லிம்கள் போட்டியிட வேண்டும் என்றால் நம்மை விட அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஹிந்து சாதியினர் நம்மை முந்திக் கொள்வார்கள்,
நம்மை விட படிப்பில் உயர்ந்திருக்கும் கிறிஸ்த்தவர்கள் வேலை வாய்ப்பை நம்மிடமிருந்து பறித்துக் கொள்வார்கள்.

இந்த நிலை ஏற்படாமல் இருக்க, இந்த 30 சதவீதத்தில் உள் ஒதிக்கீடாக முஸ்லிம்களுக்கு தனியாக பிரித்து தர வேண்டும் என்று நாம் வைத்த கோரிக்கை, பல வருட போராட்டங்களுக்கு பிறகு தமிழக அளவில் கலைஞர் ஆட்சியில் நிறைவேறியது.

3.5% ஐ, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 30% ஒதிக்கீட்டிலிருந்து தனியாக பிரித்து தந்தார்.

ஆனால், தமிழக அளவில் நாம் இருக்கும் சதவிகிதமோ 10 ஆகும். ந‌மது சதவிகித அளவிற்கு நமக்கு உரிமைகள் கிடைக்கவில்லை என்பதால் தான் 3.5% என்பதை குறைந்த பட்சம் 7% ஆக உயர்த்தி தர வேண்டும் என்கிற கோரிக்கையுடன் களம் இறங்குகிறோம்.

அதே சமயம், தேசிய அளவை பொறுத்தவரை முஸ்லிம்களுக்கென எந்த தனி ஒதிக்கீடும் இதுவரை தரப்படவில்லை. தேசிய அளவில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் இருக்கும் முஸ்லிம்கள் குறைந்த பட்சம் பத்து சதவிகித ஒதுக்கீட்டையாவது பெற வேண்டும் என்கிற வகையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசிடம் இதை கோரிக்கையாக வைக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் பிரிவுகள் :
------------------------------------------------------
அன்சர், தேக்காணி, லெப்பை (ராவூத்தர் நாற்றும் மரைக்காயர் உட்பட) , ஷேய்க் மற்றும்செய்யது ஆகிய ஐந்தும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற்ப்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவுகள் ஆகும்.

தமிழை தாய் மொழியை கொண்டவர்கள் லெப்பை எனதையும் (ராவூத்தர் நாற்றும் மரைக்காயர் உட்பட), உருதுவை தாய் மொழியாகக்கொண்டவர்கள் மற்ற இனங்களைக்கூறி வருவது தொன்று தொட்டு நடந்து வருகிறது!

மேற்கூறிய எதையும் குறிப்பிடாமல் வெறுமனே "முஸ்லிம்" என்று மட்டும் கூறுவதால் இட ஓதிக்கீட்டுக்கான பிற்படுத்தப்பட்ட சாதிப்பிரிவில் (BCM) நம்மால் இடம்பெற இயலாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக