சனி, 25 அக்டோபர், 2014

சட்டம் தெரியாத அரை வேக்காடுகள்


ஒரு விஷயம் சட்ட விரோதம் என்று கூறி ஒரு கூட்டம் பத்திரிக்கையில் பேசுகிறது, பேட்டி கொடுக்கிறது, தெருக்களில் பேனர் வைக்கிறது, அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறது, பல பராக்கிரமங்களையெல்லாம் செய்து பார்க்கிறது,
ஒரு பயலும் திரும்பி பார்க்க மாட்டேன் என்கிறான்.. ஒருத்தனும் சீரியஸாக எடுத்தபாடில்லை..
அட போயா கூமுட்டைகளா, உனக்கு சட்டம்னாலும் என்னானு தெரியல, அதை மீறுவது என்றாலும் என்னான்னு தெரியல..
போங்கய்யா போய் பிள்ளைகளை படிக்க வையுங்க..
என்கிற ரேஞ்சில் இவர்களின் குட்டிக்கரணங்களை அரசு கேலிச் சிரிப்புடனே பார்க்கிறது.
அப்போதாவது தங்களது கூமுட்டைத்தனத்தை இவர்கள் நிறுத்திக் கொண்டு வேறு பிழைப்பை பார்க்க சென்றிருக்க வேண்டும்.
ஆனால், இப்போதும், சட்ட விரோதம், சட்ட விரோதம் என்று பேனர் வைத்து நாங்களும் இருக்கோம்ல.. என்று மீண்டும் காட்டிக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
அட கூறு கெட்டவர்களே, சட்ட விரோதமான ஒரு செயல் என்றால் சட்டம் அதன் கடமையை செய்யும், இன்னேரம் செய்திருக்கும்..
நீ மாங்கு மாங்கென்று கூப்பாடு போட்டும் சட்டம் எதுவும் பாயவில்லையென்றால், கோளாறு சட்டத்தில் இல்லை, உன் தலையில் தான்.. என்பதை இன்னுமா விளங்கிக் கொள்ள இயலவில்லை உங்களுக்கு?
ஒன்று, நீ குர் ஆனை படி, ஹதீஸ படி, அது உனக்கு இயலாது என்றால் குறைந்த பட்சம் இந்திய அரசியல் சட்டத்தையாவது படி..
ஒரு விளக்கெண்ணெய் அறிவும் இல்லாமல் இப்படி நகைச்சுவை செய்து கொண்டிருந்தால், நீ சொல்கிற சட்டம் கூட உன்னைப் பார்த்து சிரிக்கும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக