சனி, 25 அக்டோபர், 2014

பப்ளிசிடி எனும் நோயின் ஆரம்ப அறிகுறிகள்


விவாதத்திற்கு அழைப்பது என்றால் கடிதம் எழுத வேண்டும் அல்லது சம்மந்தப்பட்டவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும்.
இது தான் விவாதத்திற்கு அழைப்பது என்பதன் பொருள்.
சிலர் இருக்கிறார்கள்..
நேற்று குளிக்கும் போது, குளியலறையில் இருந்து கொண்டு "விவாதத்திற்கு தயாரா?" என்று சத்தமிட்டேன். இதுவரை சம்மந்தப்பட்டவர் பதில் சொல்லவில்லை..
நேற்று அடுப்பாங்கரையில் இட்லிக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்த போது, விவாதத்திற்கு தயாரா? என்று சத்தமிட்டேன்.
சம்மந்தப்பட்டவர் பதிலே சொல்லவில்லை.
எனவே அவர் பயந்து விட்டார்.. என்னோடு விவாதிக்க அவருக்கு திராணியில்லை, அவருக்கு தெம்பில்லை.. முதுகெலும்பில்லை..
இப்படி பேசி திரிகிறது ஒரு கூட்டம்.
இவர்களைப் பார்த்து மிகவும் பரிதாபம் கொள்கிறோம்.
பப்ளிசிடி எனும் நோயின் ஆரம்ப அறிகுறிகள் தான் இவை.
உடனே "மருத்துவம்" பார்த்தால் குணமாக வாய்ப்புண்டு !
அல்லாமல், ஆஹா.. என்னே இவரது அறிவு, என்னே இவரது திராணி என அல்லக்கைகள் இதற்கும் ஜால்ரா அடித்து திரிந்தால்..
நோய் முற்றி சகராத் தான் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக