சனி, 25 அக்டோபர், 2014

இனியும் உங்களை போன்றோரை நாம் முஸ்லிம் என்று வேறு சொல்ல வேண்டுமா?


நாங்கள் தான் நேர்வழியில் இருப்பவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் சலஃபுகளின் சுய ரூபத்தை இங்கே
அம்பலப்படுத்த விரும்புகின்றோம்.
சகோ.பிஜெவின் சூனிய ஒப்பந்தத்தை பார்த்தேன் என்று கூறி நம்மை தொடர்பு கொண்டார் ஒரு சலஃபு நபர்.
தொடர்பு கொண்டவர், அதிலிருந்து மிகப்பெரிய கேள்வியொன்றினை கேட்பதாக நினைத்து கீழ்கண்டவாறு கேட்டார்.
"ஒரு வேளை பிஜே தற்கொலை செய்து கொண்டால் சூனியம் உண்மை என்று ஒப்புக் கொள்வீர்களா?"
மேலோட்டமாக சிந்தித்தால் இது பதில் சொல்ல வேண்டிய கேள்வி போல் தோன்றலாம். ஆனால், மார்க்க கண்ணோட்டத்துடன் ஆழமான சிந்தனையுடனும் இதை அணுகும்போது இதிலுள்ள அபத்தம் நமக்கு புரியும். !
இந்த ஒரு கேள்வியே அவரை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி விட்டது என்பதே உண்மை.
நடக்கவே நடக்காத, அல்லாஹ் அமைத்து தந்த இயற்கை விதிக்கு மாற்றாக ஒரு காரியம் குறித்து கேள்வி கேட்டால், அல்லாஹ்வின் விதியில் அவர் நம்பிக்கை கொள்ளவில்லை என்று தான் பொருளாகும்.
சூரியனும் சந்திரனும் அதனதன் பாதையில் துல்லியமாக இயங்குவது அல்லாஹ்வின் விதி. அந்த விதியானது உலக அழிவின் போது தான் மாறும், அது வரை சூரியன் தினமும் கிழக்கில் தான் உதிக்கும். ஒரு வேளை இந்த துல்லியமான ஓட்டம் மாறி, நாளைய தினம் சூரியன் மேற்கே உதிப்பதை நீங்கள் பார்த்தால் இஸ்லாம் பொய் என்று ஒப்புக் கொள்வீர்களா? என்று ஒருவன் கேட்டால் கேட்பவனிடம் ஈமான் இல்லை என்று பொருள்.
அல்லாஹ்வின் கூற்றுக்கு மாற்றமாக ஒரு அணு அளவு காரியமும் நடக்காது.
நடக்காது என்றால், நடந்து விட்டால் என்ன..? என்கிற கேள்வியே அபத்தமான, மடமையான கேள்வி.
தஜ்ஜாலின் நெற்றியில் காஃபிர் என்று எழுதப்பட்டிருக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான். ஒரு வேளை மூஃமின் என்று இருந்தால் என்ன சொல்வீர்கள் என்று ஒருவன் கேட்டால் அவன் தலையை தட்டி, அப்படி நடக்காது, போய் வேலையை பார் என்று சொல்வோம்.
அல்லாமல் அந்த கிறுக்குத்தனத்திற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க மாட்டோம்.
அது போன்ற கிறுக்குத்தனத்தை தான் அறிவார்ந்த கேள்வி போல் நம்மிடம் கேட்டார், ஈமானை அடகு வைத்த சலஃபி.
சூனியம் வெற்றி பெறவே பெறாது, சூனியத்தின் விளைவாய் பிஜெ தற்கொலை செய்வது என்பது நிகழவே நிகழாது ! கடுகளவும் சந்தேகமில்லை !
இதை சொல்ல இன்ஷா அல்லாஹ் என்று கூட சொல்ல தேவையில்லை !!
இது தான் ஈமான் எனப்படும்.
அல்லாமல், நடந்து விட்டால் என்ன? என்று கேட்கும் காஃபிர்கள் அல்ல நாங்கள் .. என்பதை குஃரை கொள்கையாக கொண்ட சலஃபுகளுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால், இப்படி நம்மிடம் கேள்வியெழுப்பிய அந்த ஈமான்தாரியிடம் (?), சூனியத்தால் பிஜெ தற்கொலை செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது என்கிறீர்களா? என்று சும்மா கேட்டு பார்த்தேன், வாய்ப்பில்லை என்று சொல்வார் என்று நினைத்து..
ஆனால் என்னை உச்சகட்ட வியப்பில் ஆழ்த்தும் விதமாய் அவர் சொன்ன பதில் "ஆம், வாய்ப்பிருக்கிறது", என்பதாகும்.
இனியும் உங்களை போன்றோரை நாம் முஸ்லிம் என்று வேறு சொல்ல வேண்டுமா?
கண்ட கண்ட பொறுக்கியும் காஃபிரரும், நான் தான் அல்லாஹ் என்று ஊரை ஏமாற்றி திரிகிறான்,
அவன் அவனது வீட்டில் இருந்து கொண்டு எதாவது செய்தால் அதனால் சென்னையில் இருக்கும் பிஜெவுக்கு பாதிப்பு ஏற்படும், அதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று ஒருவன் சொன்னால் அப்படி சொல்பவன் அந்த அகோரி மணிகண்டனின் சிஷ்யனாக தான் இருப்பானே தவிர முஸ்லிமாக இருக்க மாட்டான் !
தவளை தன் வாயால் கெடுவதை போல், நாங்கள் காஃபிர்கள் தான், நாங்கள் காஃபிர்கள் தான் என்று கூவி திரிகிறது ஒரு கூட்டம் !
இதற்கு எதற்குய்யா இஸ்மாயில் என்றும் மசூத் என்றும் அப்துர்ரஹ்மான் என்றும் பெயர் வைக்கணும் ?
பேசாமல் அய்யாசாமி, முருகன், ராமகோபாலன் என்று பெயர் வைத்து விட்டு சபரிமலைக்கு போக வேண்டியது தானே..
எதற்கு இஸ்லாத்தை களங்கப்படுத்துகிறீர்கள் ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக