சனி, 25 அக்டோபர், 2014

ஒரே வார்த்தை பலமுறை பயன்படுத்தப்பட்டால் என்ன??


ஒரு வார்த்தை இந்த நூலில் எத்தனை தடவை வந்திருக்கிறது பார்த்தீர்களா? எனவே அது உண்மை தான்.. என்பதான அளவுகோல் எவ்வாறு சிலரது அறிவுக்கு ஏற்றதாக தெரிகிறதோ நமக்கு புரியவில்லை.
குர் ஆனிலும் ஹதீஸிலும் சூனியம் என்கிற வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாம், எனவே சூனியம் என்பது உண்மையாம்.
கோபப்பட்டவனுக்கு கோவணம் தான் மிச்சம் என்கிற கதையாய், சூனியத்தை நிலைநாட்டப் போகிறேன் என்று புறப்பட்டவர்களின் வாதம் கடைசியில் இந்த நிலையை அடைந்திருப்பது தான் வேடிக்கை.
பேய் பிசாசுகள் இல்லை என்பதை நூல் வடிவில் ஒருவன் எழுதினால் கூட அதில் 1008 இடங்களில் பேய்,பேய் என்று எழுத தான் செய்வான்.
பாருங்கள், பேய் பேய் என்று எத்தனை இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது, எனவே பேய் என்பது உண்டு என்று எவராவது சொன்னால் இதுவா வாதம்??
அல்லாஹ் குர் ஆனில் பல்வேறு இடங்களில் சூனியம் என்கிற சொல்லை பயன்படுத்தியிருக்கிறான் என்பது என்ன 21 ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பா??
அல்லாஹ் அவ்வாறு பயன்படுத்தியிருப்பதால் தானே சூனியம் என்பதே பொய் என்கிற முடிவுக்கு எளிதில் வர முடிகிறது என்கிறோம் !
சூனியம் என்பது கற்பனை என்பதற்கு சான்றே அல்லாஹ் குர் ஆனில் சூனியம் பற்றி பேசியுள்ளவை தான் எனும் போது வார்த்தை எத்தனை முறை வந்திருக்கிறது என்பதா பிரதானம்??
ஷிர்க் என்கிற வார்த்தை கூட தான் அதிக இடங்களில் உள்ளது, ஆகவே அல்லாஹ்வுக்கு இணையாக உலகில் பல விஷயங்கள் இருக்கின்றன, இதோ அல்லாஹ்வே ஷிர்க் ஷிர்க் என்று சொல்லி விட்டான், என்று வாதம் வைத்து விடலாமா??
என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை... இதில் இம்தாதி என்று பட்டம் வேறு கொடுத்திருக்கிறார்கள் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக