வெள்ளி, 31 டிசம்பர், 2010

சகோதரர்களின் கவனத்திற்கு..

அஸ்ஸலாமு அலைக்கும்..

சகோதரர்களின் கவனத்திற்கு..

புதிய, பழைய குழுமங்கள் வாயிலாகவும், புதிதாக துவங்கப்பட்ட பெயரில்லா புல்லுருவிகள் மூலமாகவும், என்னையும், தவ்ஹீத் ஜமாத்தையும் விமர்சித்து பல ஆக்கங்கள் வெளியாகி வருகின்றன.

அவசியமில்லாத வீண் விவாதங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்போரும் கூட, எனது கட்டுரைகளும் எழுத்துக்களும் தான் தங்களுக்கு அவசியமில்லாததாக தோன்றுவதாகவும், ஆகவே தங்களுக்கு இனிமேல் எந்த ஆக்கங்களையும் அனுப்பக்கூடாது என்றும் என்னிடம் சொல்லி வருகின்றனர்.


இரண்டு செய்திகளை அனைவருக்கும் கூறிக்கொள்கிறேன்.

தனிப்பட்ட முறையில் என்னை குறித்தோ, அல்லது தவ்ஹீத் குறித்தோ விமர்சனங்களை, பலருக்கும் cc வைத்து ஒருவர் எனது மெயிலுக்கு அனுப்பினால், அதே cc யுடன் சேர்த்து அவருக்கு என் தரப்பில் இருந்து பதில் மெயில் அனுப்பப்படும். இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
இது அல்லாமல், எனது புதிய ஆக்கங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவை யாருக்கெல்லாம் அவசியமில்லை என்று கருதுகிறீர்களோ, அவர்கள் என்னை தொடர்பு கொண்டு தங்கள் முகவரியை எனது லிஸ்டில் இருந்து நீக்கி விட கோரலாம். அவ்வாறு நீக்கப்பட்டவர்கள், எனது cc யிலும் bcc யிலும் இனி இருக்க மாட்டார்கள்.

இரண்டாவது, என்னை குறித்தோ, ஏகத்துவக்கொள்கை குறித்தோ, தவ்ஹீத் ஜமாஅத் குறித்தோ விமர்சனங்களை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பக்கூடியவர்களுக்கு நான் சொல்லும் செய்தி..

எந்த விஷயத்திற்கு உங்களிடம் ஆதாரம் இல்லையோ, அல்லது நீங்கள் எடுத்து வைக்கும் எந்த விமர்சனம் குறித்து நான் ஆதாரம் கேட்கும் போது அதை உங்களால் தர இயலாதோ, அது போன்ற விமர்சனங்கள் எனது மின்னஞ்சலுக்கு வரக்கூடாது.
நான் ஆதாரம் கேட்டு அதை அடுத்த பதிலில் நீங்கள் தரவில்லை எனில், தொடர்ந்து உங்களுடன் நான் உரையாட மாட்டேன்.
இந்த இழையில் என்னோடு பேசி வரும் நபராகட்டும், வேறு வேறு இழைகளில் அவதூறுக்கட்டுரைகளை பரப்பி வருபவராகட்டும், அனைவரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலே உள்ள இரு விஷயங்களையும் முக்கியமானது எனக்கருதி, இங்கே பதிவு செய்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக