புதன், 11 ஜூன், 2014

அம்மா சாராயம்


குடித்து விட்டு மனைவியை அடித்துக்கொன்றதாக செய்தி..

அம்மா உணவகம் என்றால் பெருமை.
அம்மா குடிநீர் என்றால் பெருமை.
இன்று அம்மா உப்பு என்கிற புது அறிமுகம்..

மக்களுக்கு அரசு வழங்கும் எந்த பொருளையும் அம்மா பெயரோடும் அம்மா புகைப்படத்தோடும் வெளியிடுவதில் பெருமிதம் கொள்ளும் முதல்வர், இதே பெருமிதத்தை அம்மா சாராயம் என்று பெயர் சூட்டி அடைந்து கொள்ள வேண்டியது தானே?

உப்பையும் தண்ணீரையும் போல் சாராயத்தையும் அரசு தானே வழங்கி வருகிறது ?

மற்றவைகளுக்கு பெருமை அடைவீர்கள், சாராய பாட்டிலில் தன் புகைப்படத்தை இடுவதில் மட்டும் சங்கூஜம் கொள்வீர்களோ?

தன் பெயரை இட வெட்கப்படுவீர்கள், ஆனால் அதை நீங்களே வியாபாரம் செய்வீர்கள்;

அதை குடிப்பது உடலுக்கு கேடு என்பீர்கள், ஆனால் அதை வைத்தே வருமானம் பார்ப்பீர்கள்.

பல்லாயிரம் கோடி இலாபம் பார்ப்பீர்கள், ஆனால் இது எனது வியாபாரம் தான் என்று வெளிப்படையாக சொல்ல மாட்டீர்கள்,

மனிதனுக்கு கேடு விளைவிக்கிற, குடும்பங்கள் கெட்டு சீரழிய காரணமாய் அமைந்த, உங்கள் பெயரையும் புகைப்படத்தையும் இடுவதற்கு கூட சங்கூஜம் அடையக்கூடிய ஒரு வியாபாரம் தேவை தானா?

அனைத்தையும் நிறைவேற்றி விட்டு சாய்வு நாற்காலியில் ஓய்வெடுக்கும் நாள் கூட வரலாம்;

அப்போது உங்கள் ஆட்சிகாலத்தை நீங்கள் பின்னோக்கி பார்க்கும்போது உங்களுக்கே பெருமிதமாய் தான் இருக்க வேண்டுமேயல்லாமல் பல குடும்பங்கள் சீரழிய நாம் காரணமாய் இருந்தோம் என்கிற உறுத்தல் இருக்கக்கூடாது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக