புதன், 11 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (H)


மிர்சா சாஹிப் ஆணா அல்லது பெண்ணா? அல்லது இரண்டுமா? அல்லது இரண்டுமேயில்லையா?

Mirza Sahib Subject (Part 8)
-------------------------------------------------------------------------------

ஈஸா நபி இறந்து விட்டார், ஈஸா நபி இறந்து விட்டார் என்று, அஹமதிய்யா மதத்தவர்கள் அதை ஒரு பெரிய வாதமாக எல்லா இடங்களிலும் வைத்த வண்ணம் இருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.

நபி (சல்) அவர்களுக்கு பிறகு இன்னொரு நபி வருவார், அவர் தான் மிர்சா.. இது இவர்களது கொள்கை.

இங்கே எங்கிருந்து ஈஸா நபி வந்தார்? நபிக்கு பிறகு இன்னொரு நபி வருவார் என்கிற புது மதத்தை உருவாக்கும் இவர்களுக்கு ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற கொள்கையை நிறுவ வேண்டிய அவசியம் என்ன?

என்று பலரும் எண்ணலாம்.

பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. இவர்கள் என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்பதை அறிய துவங்கிய காலகட்டங்களில் நான் கூட இதை எண்ணி வியப்படைந்ததுண்டு.

ஆனால், மிர்சா சாஹிபை நபியாக ஆக்குவதற்கும் ஈஸா நபி மரணித்து விட்டார் என்று வாதம் புரிவதற்கும் நிறைய தொடர்புகள், சம்மந்தங்கள் உள்ளன.

இதை நாம் சற்று விரிவாக பார்ப்போம்.

தான் ஒரு நபி என்பதை நிறுவுவதற்கு இந்த மிர்சா சாஹிப் பல தந்திர வித்தைகளையும், பொய் புரட்டுகள் பலவற்றையும் செய்தார் என்பதை ஒவ்வொன்றாக நாம் கண்டு வருகிறோம்.

அந்த வரிசையில், தான் நபி என்று மக்களை நம்ப வைக்க இவர் கையில் எடுத்த ஆயுதங்களில் ஒன்று தான் ஈஸா நபியின் மரணம்.

இறக்காத ஈஸா நபி இறந்து விட்டார் என்று சொல்வதன் மூலம் தன்னை நபியென, சிந்திக்காத மக்களை நம்ப வைக்க முடியும்.

அதாவது, குர் ஆனில் நேரடியாக ஈஸா நபி இறக்கவில்லை என்று இல்லை.
இதை ஒரு ஆதாரமாக எடுத்து வைத்துக் கொண்டு, பார்த்தீர்களா, குர் ஆனில் ஈஸா நபி இறக்கவில்லை என்று இல்லை, மாறாக எல்லா மனிதர்களும் இறப்பார்கள், நீடித்து வாழும் வாழ்க்கை எவருக்கும் இல்லை என்று தான் அல்லாஹ் பொதுவாய் சொல்கிறான்..

ஆகவே ஈஸா நபியும் இறந்து விட்டார் என்கிற மிகவும் பாமரத்தனமான வாதமொன்றை இந்த மிர்சா சாஹிப் பிரச்சாரம் செய்து வந்தார்.

(((ஈஸா நபி இறக்கவில்லை என்பதை ஈஸா நபியின் சப்ஜக்டின் போது குர் ஆனை கொண்டே தெள்ளத்தெளிவாக நிரூபிப்பொம், இன்ஷா அல்லாஹ்)))

சரி சாஹிபே, அப்படியானால், ஹதீஸ்களில் மர்யமின் மகன் ஈஸா இவ்வுலகில் மீண்டும் வருவார் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதே அது எப்படி?

என்று இவரிடம் எதிர் கேள்வி கேட்ட போது, அதற்கு இவர் சொன்ன பதில் தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
அந்த பதிலின் மூலம் தான் தன்னை நபியென நிறுவுகிறார் இந்த சாஹிப்.

அதாவது ஹதீஸ்களில் அல்லாஹ் ஈஸா என்று உவமையாக சொல்கிறானாம்.
அவன் ஈஸா என்று சொல்வது தன்னை தானாம்.
ஆகவே ஈஸா என்றால் மிர்சா குலாம் அஹமதாகிய நான் தான் !

இது தான் இவரது வாதம் !

சரி சார், அங்கே வெறும் ஈஸா என்று வரவில்லையே, மர்யமின் மகன் ஈஸா என்றல்லவா வருகிறது என்று கேட்கப்பட்டதற்கு..

ஆம்.. அதற்கு காரணம் " நான் முதலில் மர்யமாக இருந்தேன்"
மர்யம் என்றாலும் நான் தான்.

பின் நானே கற்பமானேன்.. நான் தான் ஈஸாவை பெற்றெடுத்தேன்.

மர்யம் என்றாலும் நான் தான், மர்யம் பெற்ற ஈஸா என்றாலும் அது நான் தான்"
எனவே மர்யமின் மகன் என்றாலும் நான் தான் "

இது தான் இந்த சாஹிபின் உயரிய தத்துவம். இந்த தத்துவ முத்தை தான் தோண்டியெடுத்து சீராட்டி வருகின்றனர் இவரை சார்ந்த மதத்தவர்கள்.

அதாவது, ஹதீஸில் ஈஸா வருவார் என்று உள்ளது, அதை எப்படி தனக்கு சாதகமாக ஆக்குவது? என்று சிந்தித்திருக்கிறார் இந்த மிர்சா.

சிந்தனையின் முடிவாக இவருக்கு கிடைத்த பதில், குர் ஆனில் ஈஸா நபி இறக்கவில்லை என்று எந்த வசனமும் இல்லை என்பதை பிரச்சாரம் செய்து ஈஸா நபியை கொலை செய்து விடுவோம், பிறகு ஹதீஸில் வரக்கூடிய ஈஸா என்பது நான் தான் என்று சொல்லி விடலாம்..

இது தான் இவரது விஷமமான சிந்தனை.

சரி இப்போது இப்போது விஷயத்திற்கு வருவோம்.

நானே ஈஸா, நானே மர்யம் என்கிற இவரது உளரல்களையும் அதற்கு இந்த அஹமதியா மதத்தவர்கள் கொடுக்கும் முட்டுகளையும் விரிவாக காண்பதற்கு முன்னால்,

மிர்சா சாஹிபின் இன்னொரு வரலாறை நாம் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

அதாவது, துவக்க காலத்தில் ஈஸா நபி இறந்து விட்டார் என்பது இவரது கொள்கை கிடையாது. இதை அவரே சொல்லியும் இருக்கிறார்.
எல்லா முஸ்லிம்களை போல நானும் ஈஸா நபி இறக்கவில்லை, வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று தான் நம்பிக் கொண்டிருந்தேன் என்று தனது நூலில் அவரே சொல்லியும் இருக்கிறார்.
அல்லாஹ் ஒரு நாள் இவரை பார்த்து ஈஸாவே ஈஸாவே என்று அழைத்தானாம்..

அப்போதும், இவருக்கு புரியவில்லையாம்.. ஏதோ வேறு அர்தத்தில் அழைப்பதாக இவர் எண்ணினாராம்.
தொடர்ந்து பல முறை அவ்வாறு அழைத்த போதும் அதை புரியாத இவர், கடைசியாக மழை போல் வஹி வர துவங்கியப் பிறகு தான் ஓஹோ இது நாள் வரை தன்னை ஈஸா ஈஸா என்று அல்லாஹ் அழைத்ததற்கு காராணம், தன்னை ஈஸா என்று உவமைப்படுத்தியிருக்கிறான் என்று புரிந்து கொண்டாராம்.

அன்றிலிருந்து, ஈஸா இறந்து விட்டார்.. ஹதீஸில் வரும் ஈஸா என்பது தன்னை குறிக்கும் என்று நிலைபாட்டினை மாற்றி கொண்டார் இந்த சாஹிப்.

இது தான் அவரது நிலைபாட்டின் வரலாறு. (இதை Mirza Sahib Subject பாகம் 4இல் விலாவாரியாக காணலாம்.)

இப்போது, இந்த நானே ஈஸா, நானே மர்யம் என்கிற உளரல்களுக்கு நீங்கள் சொல்லும் உப்புக்கு சப்பான சமாளிப்புகளை பார்ப்போம்.

இப்னு மர்யம் (மர்யமின் மகன்) என்று அல்லாஹ் சொல்வதை நேரடியாக புரியக் கூடாது, இது உவமை என்கிறீர்கள்.

இதற்கு ஆதாரம் என்கிற பெயரில் 3:7 இறை வசனத்தை காட்டுகிறீர்கள்.

உறுதி செய்யப்பட்ட வசனங்களும் குர் ஆனில் உள்ளன.இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன என்று சொல்கிற வசனம் இது.

நேரடியாக புரியும் வசனங்களும் உள்ளன, இரண்டு அர்த்தங்களை கொண்ட, சிந்தனையுடையவர்கள் சிந்திக்கும் போது அது எந்த அர்த்தம் என்று புரிகிற அளவிலான வசனங்களும் உள்ளன என்பது இந்த வசனத்தின் பொருள்.

இதை வைத்துக் கொண்டு ஈஸா என்று சொன்னால் ஈஸா இல்லை அது இரு அர்த்தம் கொண்ட வசனம் என்று சொன்னால் இது நியாய உணர்வுள்ளவர் வைக்கும் வாதம் தானா?

நேரடி அர்த்தமும் இருக்கும், இரு வேறு அர்த்தம் கொண்டதும் இருக்கும் என்று சொன்னால்,

நேரடியாக சொல்லப்பட்டவை எவை, இரு அர்த்தத்துடன் சொல்லப்பட்டவை எவை என்பதை கண்டு கொள்ள முடியும் என்பது பொருள்.

நேரடியாக சொல்லப்பட்டதை நேரடியாக புரிய வேண்டும். இரு அர்த்தம் கொடுக்கும் வகையிலான வழிவகை அத்தகைய நேரடியாக சொல்லப்படும் வசனங்களுக்கு இருக்காது.

உதாரணமாக, பணம் கேட்டு முஸ்தஃபா என்னிடம் வந்தார் என்று சொல்வது நேரடி பொருள்.

இதற்கு முஸ்தஃபா நான் இருக்கும் இடத்திற்கு வந்தார் என்கிற நேரடி பொருளை தான் கொடுக்க வேண்டும்.

அதுவே, மரண செய்தி கேட்டு வளைகுடாவிலிருந்து முஸ்தஃபா ஓடோடி வந்தார் என்று சொன்னால், இங்கே வளைகுடாவிலிருந்து இந்தியாவுக்கு ஓடி வந்தார் என்று பொருள் கொள்ளக் கூடாது.

மாறாக, விரைவாக வந்ததை தான் ஓடி வந்தார் என்கிற அர்தத்தில் சொல்லப்படுகிறது என்று புரிய வேண்டும்.

இது தான் இரண்டு அர்த்தம் தரும் பேச்சு என்பது.

குர் ஆனிலும் இது போன்ற சில வசனங்கள் உள்ளன.

உதாரணத்திற்கு நீ எறிந்த போது அதை நீ எறியவில்லை, நான் தான் எறிந்தேன் என்று அல்லாஹ் சொல்கிறான்.

இது நேரடி பொருளை கொண்ட வசனமல்ல.

அல்லாஹ்வின் உதவி என்கிற அர்தத்தில் சொல்லப்படும் வசனம் தான் இது.

இதை நேரடியாக அல்லாஹ்வே போர்களத்தில் வந்து போரிட்டான் என்று படிக்கும் எவருமே புரிய மாட்டோம்.
அனைவருக்குமே தெரியும், இது நேரடி அர்த்தம் கொண்ட வசனமல்ல என்பது.

இதை நான் எதற்கு விளக்குகிறேன் என்றால், நேரடி அர்த்தம், இரு வேறு அர்த்தம் என இந்த காதியானிகள் கூறி, அதை வைத்து ஈஸா என்றால் மிர்சா தான் என்று பொருள் செய்வது எந்த அளவிற்கு அபத்தமானது என்பதை புரிய வைக்க தான்.

நேரடியாக எல்லாருக்கும் புரியக்கூடிய வசனங்கள் என்றைக்கும் நேரடியானவை தான்.

இரு வேறு அர்த்தங்கள் உள்ள வசனங்களும் குர் ஆனில் இருக்கின்றன என்பதால் தங்களுக்கு சாதகமான எல்லா வசனங்களையும் இது இரு பொருள் தரும் வசனம், அது இரு பொருள் தரும் வசனம், என்று சொல்லிக் கொண்டே சென்று விடலாமா?

ஈஸா, மூஸா, இப்ராஹிம் என்றெல்லாம் தனி தனி நபர்களை கொண்ட வசனங்களையெல்லாம் இரு பொருள் தரும் வசனம் என்று எந்த மூடரும் ஒப்புக் கொள்ள மாட்டார்.

அப்படியானால், மூஸா நபி கைத்தடியை போட்டார் என்றால் மூஸா நபி இல்லை, அது ஆதம் நபியை தான் அல்லாஹ் சொல்கிறான் என்று உளரலாம்.

இப்ராஹிம் நபி சிலையை உடைத்தார்கள் என்றால் அது இப்ராஹும் என்று நேரடியாக புரியக் கூடாது, சுலைமான் நபியை தான் அல்லாஹ் இங்கே இப்ராஹிம் நபி என்று சொல்கிறான் என்று தத்துவ மழை பொழியலாம்.

நூஹ் நபி கப்பல் செய்தார்கள் என்றால் அது நேரடி வசனமல்ல, அது இரு பொருள் தரும் வசனமாக்கும், இங்கே நூஹ் நபி என்றால் நபி (சல்) அவர்களின் தோழர் அபுபக்கர் சித்தீக்கை தான் அல்லாஹ் சொல்கிறான்..

என்று கதையளக்கலாம்.

இப்படியெல்லாம் ஏன் சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்டால், இதோ 3:7 வசனம் என்ன சொல்கிறது? குர் ஆனில் நேரடி அர்த்தம் கொண்ட சொல்லும் இருக்கிறது, இரு பொருள் தரும் வசனமும் இருக்கிறது என்று அல்லாஹ்வே சொல்கிறான் பார்த்தீர்களா, அதனால் தான் இப்படி சொல்கிறேன்..

என்று அவர் சொன்னால் அவரை சிந்தனையற்றவர் என்று தான் நாம் சொல்வோம்.
அஹமதியா மதத்தவர்கள் அதை தான் செய்து வருகிறார்கள்.

ஈஸா நபி வருவார்கள், ஈஸா நபி அதை செய்வார்கள்,ஈஸா நபி இதை செய்வார்கள்

என்றெல்லாம் அல்லாஹ் சொல்லியிருக்கும் போது, ஈஸா என்றால் மிர்சா என்று புரிய வேண்டுமாம்.

அதிலும், மர்யமின் மகன் ஈஸா என்று தெளிவாக, நேரடியாக அல்லாஹ் சொல்லும் போது, மர்யம் என்றாலும் மிர்சா தான், மர்யம் பெற்ற ஈஸா என்றாலும் மிர்சா தான் என்று புரிய வேண்டுமாம்.

எங்களுக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது இப்படி பைத்தியக்காரத்தனமாய் புரிவதற்கு?

நீங்கள் இப்படி தான் புரிவீர்கள், கண்டவனையும் நபி என்று சொல்லி அவன் பின்னால் செல்பவர்களுக்கு இது போன்ற பைத்தியக்காரத்தனங்கள் ஒன்றும் ஆச்சர்யமில்லை.

முஸ்லிம்களாகிய நாங்கள் அப்படியல்ல என்பதை இங்கே சொல்லி கொள்கிறோம்.

////இதற்கு, வரக்கூடியவர் நபியாக இருப்பார், மேலும் அவர் பண்பிலும் ஆற்றலிலும் (மரணித்து போன) ஈசாவை ஒத்திருப்பார் என்பதே பொருளாகும்.////

என்று சொல்கிறீர்கள்.

அதாவது, இப்ராஹிம் நபி என்று அல்லாஹ் எங்காவது சொன்னால், அது எங்க பக்கத்து வீட்டு இப்ராஹிமையாக்கும் அல்லாஹ் சொல்கிறான், இந்த இப்ராஹிம் அந்த இப்ராஹிம் நபியை போல இருப்பான் என்று இதன் பொருள்

என்று உலக மகா தத்துவத்தை உதிர்க்கலாம்..

மூஸா நபி என்று அல்லாஹ் சொல்லும் இடத்திலும் இது போன்று எதையாவது உளரித்தள்ளலாம்.

சரி, ஈஸா என்றால் பண்பிலும் ஆற்றலிலும் ஈஸாவை போன்றவர் என்று தான் பொருள் செய்ய வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம்?

நான் சொல்வதற்கு என்னிடம் ஆதாரம் ஆதாரம் என்று கேட்கிற நீங்கள், இங்கே வைக்கும் எந்த வாதத்திற்காவது ஆதாரத்தை சமர்ப்பித்திருக்கிறீர்களா?

ஈஸா என்றால் பண்பிலும் ஆற்றலிலும் ஈஸாவை போன்றவர் என்று தான் பொருள் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் சொன்னானா? நபி (சல்) அவர்கள் அப்படி விளக்கம் கொடுத்தார்களா?

நீங்களாக எதையாவது சொல்லி திரிந்தால் அதை கேட்டு ஆமாம் என்று தலையாட்ட நாங்கள் என்ன அஹமதிய்யா மதத்தவர்களா??

சரி நான் கேட்கிறேன், ஈஸா என்றால் பண்பிலும் ஆற்றலிலும் ஈஸாவை போன்றவர் என்று பொருள் என்றால், மிர்சா சாஹிபின் எந்த பண்பு ஈஸா நபியை ஒத்ததாக இருந்தது?
மிர்சா சாஹிபின் எந்த ஆற்றல் ஈஸா நபியின் ஆற்றல் போல் இருந்தது?

ஈஸா நபி இறந்தவர்களை உயிர்ப்பித்தார்கள், பார்வையில்லாதவர்களுக்கு பார்வை கொடுத்தார்கள்.

மிர்சாவும் இதையெல்லாம் செய்தார் என்று சொல்ல வருகிறீர்களா? நீங்கள் சொன்னாலும் சொல்வீர்கள்.

இதில் உச்சகட்ட வேடிக்கை என்ன தெரியுமா?

அல்லாஹ் ஈஸா என்கிறான்..

அது நான் தான் அது நான் தான் என்று ஓடோடி வருகிறார் இந்த மிர்சா சாஹிப்.

சரிப்பா.. அதே அல்லாஹ், மர்யமின் மகன் ஈஸா என்கிறானே?

என்று கேட்டால்..

அப்போதும் சிறு தயக்கமுமின்றி.. அதுவும் நானே நானே என்கிறார்.

அது எப்படி என்று கேட்டதற்கு தான், ஒரு காலத்தில் நான் மர்யமாக இருந்தேன், நான் கருவுற்றேன்.. என்கிற சினிமாக்கதை.

சரி அதுவும் போகட்டும், 66:12 வசனத்தில் இம்ரானின் மகன் மர்யம் என்று அல்லாஹ் சொல்கிறானே.. இப்போ என்ன சொல்கிறீர்கள்?

ஈஸா என்றாலும் நான், ஈஸாவை பெற்ற மர்யம் என்றாலும் நான் என்று சொன்னவருக்கு, அந்த மர்யமை பெற்ற இம்ரான் என்றாலும் நான் தான் என்று சொல்வதற்கு மட்டும் நேரமா ஆகும்?

அல்லது, அதை கூட உலக மகா தத்துவமாக எடுத்து வந்து, எம்மோடு வாதம் புரிய உங்களுக்கு வெட்கமோ சங்கூஜமோ இருக்குமா என்ன?

ஆக, மர்யமின் மகன் என்றால் மர்யமும் நானே, மகனும் நானே என்பவர்,
66:12 வசனத்தின் படி,
இம்ரானும் நானே,
இம்ரான் பெற்ற மர்யமும் நானே,
மர்யம் பெற்ற ஈஸாவும் நானே

என்று தத்துவ மழை பொழிந்தாக வேண்டும்.

வேடிக்கை இத்தோடு நிற்கவில்லை.

மிர்சா எப்படி மர்யமானார்.. அவர் எப்படி ஈஸாவானார்.. என்பதற்கு குர் ஆனை கொண்டே..(?*&*^$*) அதி பயங்கர ஆதாரங்களையெலலம் காட்டி அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறீர்கள்.

அவை ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து பார்க்கலாம்..

தொடரும், இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக