சனி, 28 ஜூன், 2014

முற்றுகையிடுவோம் இலங்கை தூதரகத்தை..


உடன் பணிபுரியும் இலங்கை சகோதரர் இன்று பணிக்கு வரவில்லை, தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தால் தேம்பி தேம்பி அழுகிறார்..

உறவினர்கள் மூவரை புத்த தீவிரவாத கும்பல் கொலை செய்திருக்கிறதாம்.. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

இவர் குடும்பமும் அந்த பகுதியில் உள்ள அனைவரும் வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளார்களாம்..

ஏன்? அரசாங்கமும் காவல்துறையும் பாதுகாப்பு தரவில்லையா? என்று கேட்டதற்கு, 2 நாட்களாக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தான் உள்ளனர், இருந்தும் எல்லாமே புத்தர்களுக்கு சார்பாய் நடக்கிறார்கள் என்றார்..

அங்கே பாதிக்கப்பட்ட ஒருவரின் அழுகைக்குரலை நேரடியாக கேட்ட கனத்த இதயத்தில் இதை இங்கே பகிர்கிறேன்.
இலங்கையில் அமைதி திரும்பி மக்கள் பாதுகாப்பு பெற அல்லாஹ் உதவி செய்வானாக..

நாளை தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டம் வெற்றியடைய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்..

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் நாளை காலை நுங்கம்பாக்கம் இலங்கை தூதரகம் முன்பு அலைகடலாய் திரள வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக