சனி, 28 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (L)


காறி உமிழத் தகுதியான மிர்சாவின் கணக்குப்பாடம்

Mirza Sahib Subject (Part 12)
-----------------------------------------------------------------------------

மிர்சாவின் வண்டவாளங்களை ஒரு நிலையோடு முடித்து விட்டு, அடுத்த தொடரான ஈஸா நபி குறித்த தொடரை துவங்கலாம் என்று நானும் விரும்புகிறேன்.

ஆனால், அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாய் மிர்சா சாஹிபின் சாகச மேளங்கள் இன்னும் வந்த வண்ணம் உள்ளன.. அதை இங்கே எடுத்து காட்டாமல் அடுத்த தலைப்புக்குள் செல்ல மனம் வரவில்லை.

அந்த வகையில், இவரது உச்சகட்ட புளுகுகளில் ஒன்றான அப்ஜத் கணக்கை தற்போது பார்ப்போம்.

எந்த ஒரு காரியத்தையும், இதை எப்படிடா எனக்கு சாதகமாக ஆக்குவது, இதை எப்படிடா நான் நபி என்று மக்களை நம்ப வைப்பதற்காக பயன்படுத்துவது..

என்பது மட்டுமே இவரது ஒரே சிந்தனை.

தன் காலத்தில் பிளேக் நோய் பரவிய போதும் அதை தான் சிந்தித்தார்.
ஈஸா வருவார் என்று ஹதீஸில் சொல்லப்பட்டதையும் அதற்கே பயன்படுத்திக் கொண்டார்.

இதை முந்தைய பகுதிகளில் விளக்கமாக பார்த்தோம்.

அந்த வரிசையில், குர் ஆனின் வசனங்களை எடுத்து வைத்து, ஒவ்வொரு எழுத்துக்கும் எண்கள் கொடுத்து, அந்த எண்களை கூட்டிக்கழித்து பார்த்து அது தரும் விடையை வைத்து ஒரு ஜோசியம் சொல்வது என்கிற உலக மகா உளரலை கொள்கையாக வடித்து தந்த மாமேதையை (?) பற்றி இப்போது பார்ப்போம்.

அதாவது, நபி (சல்) அவர்கள் தான் இறுதி நபி என்பதாக ஏராளமான ஹதிஸ்கள் உள்ளன.

அப்படியானால் தன்னை எவரும் நபியாக ஏற்க மாட்டார்களே என்று சிந்தனை செய்த இந்த மிர்சா,
நபி (சல்) அவர்கள் ஷரியத் (அதாவது சட்ட திட்டங்கள்) கொண்டு வந்த நபிமார்களில் இறுதி நபி என்று தான் புரிய வேண்டும்..
புது ஷரியத் எதையும் கொண்டு வராத, நபி (சல்) அவர்களின் ஷரியத்தையே மீண்டும் புதுப்பிக்கும் நோக்கில் நபி வருவார்கள், அதை இந்த ஹதீஸ் தடுக்காது, அத்தகைய நபி தான் நான்..

என்று நிறுவுவது இவரது நோக்கம்.

நபி (சல்) அவர்களுக்கு பிறகு, அவர்கள் கொண்டு வந்த ஷரியத்தை புதுப்பிக்க வந்தவர் தான் மிர்சா என்பதை நிரூபிக்க வழக்கம் போல ஏதாவது குர் ஆன் வசனம் கிடைக்குமா என்று தேடிப்பார்த்தார்.

அந்தோ பரிதாபம், அப்படியான எந்த வசனமும் சிக்கவில்லை.

விடுவாரா மிர்சா ?

நானே மர்யம், நானே மர்யம் பெற்ற ஈஸா என்று மெய் சிலிர்க்கும் சாகசங்களையெல்லாம் நிகழ்த்தியவருக்கு இதை குர் ஆனில் நிறுவுவதா சிரமம்?

கண்டு பிடித்தார் ஒரு இறை வசனத்தை..

அது தான் 23:18 வசனம்.

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள். (23:18)

வானத்திலிருந்து பூமியை நோக்கி வரக்கூடிய தண்ணீரை பூமியில் தேக்கியும் வைப்போம், அதை நீக்கி விடவும் அல்லாஹ்வுக்கு ஆற்றலுண்டு.. என்று சொல்கிற வசனம் இது.

இதில் தனது அறிவுத்திறனை காட்டிய மிர்சா, இங்கே "அதை போக்கிடவும் அவனுக்கு ஆற்றலுண்டு" என்று அல்லாஹ் சொல்வது குர் ஆனை தான், குர் ஆனை அழித்திடவும் அல்லாஹ்வுக்கு ஆற்றலுண்டு என்று தான் இதில் சொல்கிறான் என்று போட்டாரே ஒரு போடு.

அட ஞான சூனியமே, இதற்கும் குர் ஆனுக்கும் என்னய்யா சம்மந்தம்? என்று அவர் வாழும் காலத்தில் இவர் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க‌ எவனுக்குமே தெம்பு இல்லை போல..

சரி, இப்படி உளரிக்கொட்டியதோடு நிறுத்திருந்தால் பரவாயில்லை.
இங்கே பிரச்சனை, இந்த வசனம் குர் ஆனைப் பற்றி பேசுகிறதா இல்லையா என்பதும் அல்ல !

வேறு என்ன?

இவ்வாறு சொல்லி விட்டு, அந்த வசனத்திற்கு கணித மேதைகள் கூட தோற்றும் விடும் அளவிற்கு அற்புத (?) கணக்கு ஒன்றினை இடுகிறார் மிர்சா.

அந்த வசனத்தின் ஒவ்வொரு அரபு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்களை கொடுத்து, மொத்தத்தையும் கூட்டி, கூட்டுத்தொகை 1274 என்றார்.

சரி, இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்? என்று ஆர்வப்பட்டால்.. அடுத்து போட்டார் இன்னொரு போடு.

அதாவது, அந்த வசனம் இறங்கியதிலிருந்து 1274 வருடங்களில் குர் ஆனை புதுப்பிக்கப்படும். அதை புதுப்பிக்கும் நபராக நபியொருவர் வருவார் என்று இந்த வசனம் சொல்கிறது..

என்று சொன்னாரே பார்க்கலாம்..

அதாவது.. இப்படி உளரிக் கொட்டுகிறோமே, பார்ப்பவர்கள் தான் நம்மை என்ன நினைபபர்கள்? காறி உமிழ மாட்டார்களா? செல்லும் இடங்களிலெல்லாம் செருப்படி கிடைக்குமே.. என்கிற எந்த வெட்க உணர்வும் அற்றவர் இந்த மிர்சா.

எழுத்துகளுக்கு நம்பர் இட்டு, அந்த நம்பரை கூட்டி அந்த கூட்டுத்தொகை என்பது வருடங்களை குறிக்கிறது, அதன் பிறகு இன்னொரு நபி வருவார் என்பதை தான் இந்த கணக்கு சொல்கிறது என்று சொல்கிற ஒருவர் சுய சிந்தனையுள்ள, சராசரி மனித பண்புகளை கொண்ட மனிதன் தானா?

என்று நமக்கு சந்தேகம் வருவதில் எந்த வியப்புமில்லை.

இந்த உலக மகா தத்துவக் கணக்கை இஸாஹே அவ்ஹாம் எனும் நூலில் பக்கம் 464 இல் இவர் எழுதியிருக்கிறார்.

சரிங்க சார்.. நபி (சல்) அவர்களுக்கு பிறகு கிட்டத்தட்ட‌ 1400 வருடங்கள் கழித்தல்லவா நீங்கள் வந்திருக்கிறீர்கள்,

நீங்களோ 1274 வருடங்கள் என்று கணக்கு போடுகிறீர்களே? கணக்கு எங்கேயோ இடிக்கிறதே என்று அவர் காலத்தில் வாழ்ந்த எந்த சிந்தனையுள்ளவனோ கேள்வி எழுப்பியிருக்கிறான் என்றூ எண்ணுகிறேன்..

உடனே அதற்கும் அடித்தார் ஒரு பல்டி.

அதாவது தான் 1274 என்று சொன்னது சூரிய கணக்கின் படியுள்ள நாட்களாம்.

அதையே சந்திரக் கணக்கோடு மாற்றி அமைத்தால் 1274 என்பது 1400 ஆக கிடைக்கும்.

ஆகவே நான் தான் அடுத்த நபி என்பது சரி தான்.

என்று அரை வேக்காட்டுத்தனமாக பேசி அந்த சமுதாயத்தை ஏமாற்றிய உத்தமர் தான் இந்த மிர்சா சாஹிப்.

அந்த வசனம் குர் ஆனை பற்றி பேசுகிறதா? என்கிற கேள்விக்கு எந்த பதிலையும் சொல்ல முடியாது என்பது ஒரு புறமிருக்க..

ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு அதன் எழுத்துகளுக்கு நம்பர் இடும் வழக்கம் நபி காட்டித் தந்த வழக்கமா?

அந்த நம்பரின் கூட்டுத் தொகை என்பது அர்த்தமுள்ள எந்த செய்தியையாவது சொல்லுமா?

இதை எந்த மனித அறிவாவது ஏற்கிறதா?
அப்படி பார்க்கப்போனால், அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று அல்லாஹ் சொல்லி விட்டான்.
இந்த ஆயத்தின் கூட்டுத் தொகை 1350.

ஆகவே 1350 முறை தான் அல்லாஹ்வை ஒரு மனிதன் புகழ வேண்டும், அதற்கு மேல் புகழக்கூடாது என்று எந்த கிறுக்கனாவது இனி தத்துவம் பேச புறப்படுவான்.

அவனை கிறுக்கன் என்றெல்லாம் யாரும் சொல்லி விடக்கூடாது, மாறாக அவரை நபியென போற்றிப் புகழ வேண்டும்.

தப்பத் யதா அபீ லஹபின் வ தப்.. என்று அல்லாஹ் சொல்கிறான்..

ஒவ்வொரு எழுத்துக்கும் நம்பரை கொடுத்து கூட்டிப் பாருங்கள், 467 வருகிறது என்று எதையாவது ஒரு நம்பரை சொல்லி
ஆகவே அபு லஹபை அல்லாஹ் 467 முறை தண்டிப்பான்..

என்று எந்த கூறு கெட்ட குப்பையாவது தத்துவம் சொன்னால், அவனை அப்படியெல்லாம் திட்டக் கூடாது, மாறாக வாருங்கள் நபியே.. என்று சிகப்பு கம்பளம் விரிக்க வேண்டும்..

போங்கய்யா நீங்களும் உங்க நபியும்..

உங்களால் இந்த சமுதாயத்திற்கே கேவலம் என்பதை இன்னுமாவது புரிந்து கொள்ளுங்கள்.

வண்டவாளம் இன்னும் தொடரும்..இன்ஷா அல்லாஹ் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக