சனி, 28 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (J)


மிர்சா எனும் போலி சாமியார்

Mirza Sahib Subject (Part 10)
--------------------------------------------

மர்யமோடு ஒப்பாக தான் எங்கள் மிர்சா சாஹிப் ஆக்கப்பட்டிருக்கிறார், எல்லா முஃமீன்களும் கூட மர்யமோடு ஒப்பாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள், அப்படியானால் முஃமீன்கள் எல்லாம் பெண்கள் என்று சொல்வீர்களா? என்கிற ஒரு கேள்வியை கேட்கின்றனர்.

இது அர்த்தமற்ற கேள்வி மட்டுமல்ல, இவர்களது கொள்கைக்கே வேட்டு வைக்கும், இவர்களை முரண்பட்டவர்களாக காட்டுகிற கேள்வி.

மர்யமோடு மிர்சா ஒப்பாக ஆக்கப்பட்டார் என்று வைத்துக் கொள்வோமே, அதனால் அவர் எப்படி பெண்ணாக ஆனார் என்பது உங்கள் கேள்வியல்ல, அது எனது கேள்வி.

இந்த கேள்வியை தான் இத்தனை நாட்களாக நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

மர்யமை போல ஒழுக்கமானவர் மிர்சா, மர்யமை போல இறையச்சம் கொண்டவர் மிர்சா என்பது தான் அல்லாஹ் சொல்கிற ஒப்புமை என்பது உண்மையென்றால்

நானே மர்யமாக இருந்தேன், நானே க‌ற்பமானேன் என்று சொல்வது உளரல் தானே? இது தானே எனது கேள்வி?

மர்யமைப் போல மிர்சாவும் இருக்கிறார் என்று உவமையாக சொல்லி விட்டால் அதன் காரணமாக நான் ஒரு காலத்தில் மர்யமாக இருந்தேன் என்று அவர் சொன்னது மடமையில்லையா?
ஒப்புமையாக சொல்லப்பட்டால் அது எப்படி அவராகவே ஆகி விடுவார்?

சிங்கம் போல வீரன் இவன் என்று ஒருவனை பார்த்து சொன்னால்..உடனே ஆமாம் நான் ஒரு காலத்தில் சிங்கமாக இருந்தேன், வாலெல்லாம் இருந்தது, காட்டில் தான் சுற்றித்திரிந்தேன் என்று பினாற்றினால் அது அறிவுள்ள வாதமாக இருக்குமா அல்லது உளரலின் உச்சமாக இருக்குமா?

இன்னும் சொல்லப்போனால், மர்யமை எல்லா முஃமீன்களோடும் அல்லாஹ் ஒப்புமையாக்குகிறான்.

அல்லாமல் மிர்சாவோடு மட்டுமல்ல.

////எனவே ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் சிறு வயதிலிருந்தே அல்லாகுவின் மீதும் நபி ஸல் அவர்கள் மீதும் மிகவும் நேசம் உடையவர்களாகவும், உண்மையாளர்களாகவும், கட்டுப்பட்டவர்களாகவும் விளங்கினார்கள். அதனடிப்படையில் அவர்கள் மர்யமின் சிஃபத்தை கொண்டவர்களாக விளங்கினார்கள். இதனடிப்படையில் என்னை மர்யமே என்று அல்லாஹு அழைத்ததாக அவர்கள் கூறுகின்றார்கள்.///

என்று சொல்கிறீர்கள்.

ஒரு வாதத்திற்கு மர்யமின் சிஃபத்தை மிர்சா சாஹிப் கொண்டிருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட, மர்யமின் சிஃஃபத்தை மிர்சா மட்டும் தான் கொண்டிருந்தாரா?
ஒட்டு மொத்த உலகிலும் அவர் மட்டும் தான் மர்யமை போல் இருந்தாரா?

நபி (சல்) அவர்கள் இல்லையா? அவர்களது சஹாபாக்கள் இல்லையா?

அவர்களையெல்லாம் பார்த்து நீ மர்யமே என்று அல்லாஹ் ஏன் அழைக்கவில்லை?

மர்யமின் சிஃபத்தை கொண்டிருந்தது தான் இதற்கு காரணம் என்று சொல்வீர்களானால், அந்த காரணம் உலகில் உள்ள எண்ணற்ற மூஃமீன்களுக்கு பொருந்துமே.. இதுவா வாதம்??

/////இவ்வாறு மர்யமின் சிஃபத்தை கொண்ட ஒருவர் இறை வழியில் முன்னேறுகின்ற போது, அவர்களின் ஆன்மா வளர்ச்சி அடைகிறது. எப்படி கருவில் சிசு வளர்ச்சியடைகிறதோ, அதே போன்று ஆத்மா கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் பக்கம் வளர்ச்சி அடைந்து கொண்டே சென்று, கடைசியில் ஒரு புது மனிதனாக, ஈசாவின் சிஃபத்தை கொண்ட மாமனிதராக, அதாவது ஒரு நபியாக ஆகிவிடுகிறார்./////

என்று அடுத்ததாக சொல்கிறீர்கள்.

அதாவது, ஆன்மா, பரமாத்மா.. என்று ஹிந்துக்கள் உளரிக் கொட்டுவதற்கு சற்றும் சளைப்பின்றி நீங்களும் பேசுகிறீர்கள்.

இது கதையா அல்லது அர்த்தமுள்ள சிந்தனையா?

மர்யமின் சிஃபத்தை கொண்ட ஒருவர் இறை வழியில் முன்னேறினால் மர்யமின் மகனின் சிஃபத்தை பெற்று விடுவாராம்.

என்னங்க கதையடிக்கிறீங்க? பேசாமல் ஏதாவது ஆன்மீக சினிமா எடுக்க செல்லலாமே..

மர்யமின் குணங்களை எல்லா முஃமீன்களுக்கும் அல்லாஹ் உதாரணமாக்கி சொல்கிறான்.
அப்படியானால் அவரது சிஃபத் எல்லா முஃமின்களிடமும் தென்பட வேண்டும்.

அவரது சிஃபத்தைக் கொண்டு இறை வழியில் முன்னேறியதால் மிர்சா ஈஸாவை போல் ஆனார் என்பது உண்மையென்றால்

உலகில் எண்ணற்ற மக்கள் ஈஸாவாக ஆகியிருக்க வேண்டும், என்ணற்ற மக்கள் மர்யமாக ஆகி அவரது ஆன்மாவோடு ஒத்துப்போய், கடைசியில் நபியாக அனைவருமே ஆகியிருக்க வேண்டும்.

என்ன வாதம் புரிகிறீர்கள் என்று நமக்கு புரியவில்லை.

நான் திரும்பவும் கேட்பது ஒரே கேள்வி தான். மர்யமின் சிஃபத்தை உலகிலேயே மிர்சா மட்டும் தான் கொண்டிருக்கிறாரா?
இல்லையென்றால் அவர் மட்டும் எப்படி மர்யம் ஆனார்? அவர் மட்டும் எப்படி ஈஸாவானார்?

ஒருவரின் சிஃபத்தை கொண்டிருப்பதால் அவர் அவராகவே ஆகி விடுவார் என்பது கிறுக்குத்தனம் அல்லாமல் வேறு என்ன?

இன்று ஹிந்து போலி சாமியார்கள் இதை தானே சொல்லி ஊரை ஏமாற்றுகின்றனர்?
நான் கடவுளின் அவதாரம் என்றும் கடவுளை தியானம் செய்து வாழ்வை கழித்தால் கடவுள் தன்மை தனக்கும் வந்து விடும் என்று உதார் விட்டுக் கொண்டு ஃப்ராஃட் செய்து வரும் போலி சாமியாருக்கும் இந்த மிர்சாவுக்கும் என்ன வேறுபாடு??

சரி அனைத்தையும் ஒரு பக்கம் வைப்போம்.

மிர்சா தான் ஈஸா.. சரி.. இப்னு மர்யம் என்று ஹதீஸில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் மிர்சாவை தான் சரி..

இப்னு மர்யம் பற்றி ஹதீஸில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

அவர் கியாமத் நாளுக்கு சமீபமாய் வருவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மலக்குகள் புடை சூழ வருவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது, அவர் ஒட்டு மொத்த உலகையும் ஆள்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தஜ்ஜாலை அவர் கொலை செய்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மிர்சா வாழ்ந்து மரணித்து, மண்ணோடு மண்ணாய் மக்கிப்போனர ஒருவர்.

அவர் வாழ்ந்த காலத்தில் தஜ்ஜால் வந்தானா? அவர் ஒட்டு மொத்த உலகையும் ஆண்டாரா?

என்ன சொல்ல வருகிறீர்கள்?

அல்லது, இறந்து மண்ணோடு மண்ணாக போன எங்கள் மிர்சா மீண்டும் இவ்வுலகில் வருவார் என்கிறீர்களா?

சொல்வதில் எந்த ஒன்றாவது அர்த்தமுள்ள வாதமாக இருக்கின்றதா?

அடுத்து, மிகவும் அபத்தமான வாதமொன்றினை வைத்திருக்கிறீர்கள்.

////இவ்வசனத்தில் fa nafahna feehi min roohina ( நாம் அவளுக்கு ரூகை ஊதினோம் ) என்ற சொல்லில், ஆண்பால் சொல்லை, அதாவது பீஹி என்ற வார்த்தையை அல்லாஹு பயன்படுத்தி உள்ளான் என்பது சிந்திக்கத்தக்கது. அதாவது நாம் அவருக்கு ( அவள் என்று இல்லை ) ரூகை ஊதினோம் என்று கூறுகின்றான்.///

அந்த வசனத்தில் மர்யம் என்று அல்லாஹ் சொல்லும் போது ஆண்பாலை பயன்படுத்தியிருக்கிறானாம்.. ஆகவே அல்லாஹ் சொல்ல வருவது மிர்சாவை தானாம்.

மொழியறிவு இல்லாதவர்கள் எல்லாம் விவாதம் செய்ய வந்தால் இது தான் பிரச்சனை !

அந்த 66:12 வது ஆயத்தின் ஆரம்பத்திலேயே மர்யம் (அலை) பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது, 'அவருடைய கற்பை' என்ற வாசகத்தில் வரும் 'அவருடைய' என்பதற்கு அல்லாஹ் 'هَا' என்று பெண்பாலில்தான் குறிப்பிட்டுள்ளான்.

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا - "இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார்".

அதைத் தொடர்ந்து வரக்கூடிய அடுத்த வாசகத்தில்தான், "ஃபீஹி" - فِيه என்ற ஆண்பால் சொல் இடம்பெற்றுள்ளது.

فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا - "அவரிடம் நமது உயிரை ஊதினோம்"

இதில் 'அவரிடம்' என்பதற்கு فِيهِ என்ற ஆண்பாலுக்கான சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது, 'மர்யம்' என்ற பெண்மணியைக் குறிப்பதல்ல! மர்யம் அவர்களின் #கருப்பை க்குள்ளே ஈஸா(அலை) அவர்களின் ரூஹை ஊதியதைதான் ஆண்பாலில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். அரபியில் 'கருப்பை' என்பது ஆண்பால் சொல் (الرحم)

இந்த ஆயத்திலே கருப்பைக்குரிய அந்த வார்த்தை நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும், 'அவரிடம் ஊதினோம்' - 'அவர்களுக்கு உள்ளே' - என்று சொல்லும்போது, ஊதப்பட்ட அந்த இடமான கருப்பைதான் ஆண்பாலில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, மர்யம் என்ற நபரே ஆண்பாலாக குறிப்பிடப்படவில்லை.

மேலும் அந்த ஆயத்திலேயே அடுத்தடுத்து வரக்கூடிய வார்த்தைகளும் இதை இன்னும் தெளிவாக உறுதிப்படுத்துகிற‌து.

وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ - "அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்". இதில்,

- 'உண்மைப்படுத்தினார்' என்று அல்லாஹ் குறிப்பிடும் صَدَّقَتْ என்ற சொல் பெண்பால்.

- 'தமது இறைவனின்' என்று குறிப்பிடப்படும் رَبِّهَا என்ற சொல் பெண்பால்.

- 'அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்' என்று சொல்லப்பட்டிருக்கும் كَانَتْ مِنَ الْقَانِتِينَ என்ற வாசகமும் பெண்பாலே!

இவ்வளவு தெளிவாக ஒவ்வொரு வார்த்தையிலும் மர்யம்(அலை) அவர்களை நோக்கி பெண்பாலுக்கான சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கும்போது, கருப்பை என்ற உறுப்பு அரபி மொழியில் ஆண்பாலில் பயன்படுத்தப்படும் என்றுகூட புரியாமல், அந்த ஆயத் தனக்கு சாதகமாக இருப்பதாக நினைத்து இவர்கள் கதையளந்து வருகின்றனர்.

மொழியறிவு இல்லையென்றால் அமைதியாக மெளனம் காத்திருக்கிஅ வேண்டும். அல்லாமல், இப்படி எதையாவது பேசி சிரிப்பு உண்டாக்கி, உங்கள் கொள்கையின் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்க வேண்டாம்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம்:

'மர்யம்' என்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் இந்த ஆயத்தின் ஆரம்ப வார்த்தையிலேயே குறிப்பிட்டு விட்டான்.

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ - "இம்ரானின் #மகள் மர்யம்"

இதில் ابْنَت என்பது "மகள்" என்ற பெண்பால் சொல்லாகும்.

மர்யம் ஆண்பாலாக அல்லாஹ் சொல்கிறான், ஆகவே மர்யம் என்றால் மிர்சா என்று இந்த வசனத்தின் மூலம் நிரூபணமாகிறது என்கிற உலக மகா தமாஷை செய்பவர்கள், இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

இம்ரானின் மகன் என்று இருக்கிறதா அல்லது இம்ரானின் மகள் என்று இருக்கிறதா?

. பிறகு فِيهِ என்பதற்கு அவர்கள் விளக்கம் சொல்லட்டும்.

”வ மர்யம பிந்த் இம்ரான் அல்லத்தி” இதில் வருகின்ற அல்லத்தி என்கிற சொல் ஒரு இனைப்புச் சொல் ஆகும்.
அல்லதி(அதாவது அலிஃப்,லாம்,தால்) என்பது ஆண்பாலுக்கும் அல்லத்தி(அலிஃப்,லாம்,தே) என்பது பெண்பாலுக்கும் உரியவை.

அல்லாஹ் இங்கே அல்லத்தி என்கிற சொல்லைப் பயன்படுத்துவதால், இந்த வசனம் ஒரு பெண்ணைப் பற்றித் தான் பேசுகிறது என்பது தெளிவு.

இரண்டாவது, “நஃபஹ ஃபீஹி” என்கிற சொற்றொடரில் வருகிற ஃபீஹி என்கிற சொல் மர்யமைக் குறிக்காது மாறாக கற்பத்தைக் குறிக்கக்கூடியது.

அல்லாஹ் கற்பத்தைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் இந்த ஃபீஹி என்கிறச் சொல்லைத் தான் கையாளுகிறான்.

சூரத்துஸ் ஸஜ்தாவில் 9 ஆவது வசனத்தில் கூட “வ நஃபஹ ஃபீஹி மிர்ரூஹிஹி” என்கிற சொற்றொடரில் ஃபீஹி என்று தான் பயன்படுத்துகிறான்.

எனவே ஃபீஹி என்பது பெண்ணின் உள்ளிருக்கும் கர்பத்தை ஆண்பாலாக அல்லாஹ் பாவிப்பதால் சொல்லப்படுவது ஆகும்.

என்ன வாதம் புரிந்து குட்டிக்கரணம் அடித்தாலும் மிர்சா சாஹிப் என்பவர் இன்றைய நவீன போலி சாமியார்களுக்கு நிகராக, ஆன்மா, ஆத்மா.. பேராத்மா என்று உளரிக்கொட்டிய அரைக்கிறுக்கராக தான் கருதப்படுகிறார் என்பது உங்கள் வாதத்தின் மூலமாகவே புலனாகிறது.

இலக்கணம்.. மொழியறிவு என்று நீங்கள் சமாளித்தவைகளும் கூட புஸ்ஸென்று ஆகி, அறியாமை உங்களிடம் தான் இருக்கிறது என்பதை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது.

வண்டவாளங்கள் இன்னும் தொடரும்..இன்ஷா அல்லாஹ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக