புதன், 11 ஜூன், 2014

திருக்குர்ஆன் பற்றிய சில செய்திகள்


அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் பற்றிய சில செய்திகள்..

மொத்த வசன எண்ணிக்கையை அல்லாஹ்வோ ரசூலோ தீர்மானித்தார்கள் என்பது தவறு.

அல்லாஹ் அருளிய அனைத்து வசனங்களும் தொகுக்கப்பட்டது, ஆனால் எந்த இடத்தில் நிறுத்தல் குறுயிட்டு வசனங்களை பிரிக்க வேண்டும் என்று மார்க்கம் நமக்கு எந்த கட்டளையும் இடவில்லை.

அதே சமயம், ஒவ்வொரு அத்தியாயத்திலும் அருளப்பட்ட வசனங்களை வரிசைப்படுத்தி தந்தது நபி (சல்) அவர்கள் தான்.

சனங்களை வரிசைப்படுத்தி தான் தந்தார்களே தவிர எந்த சொல் வரை ஒரு வசனம், எந்த சொல் முதல் அடுத்த வசனம் .. என்பதை அவர்கள் சொல்லவில்லை.

அது போன்று, ஒவ்வொரு அத்தியாயங்களிலும் என்னன்ன வசனங்கள் எல்லாம் உள்ளன என்பதை நபியவர்கள் சொன்னார்கள்,
ஆனால் எது முதல் அத்தியாயம், எது அடுத்த அத்தியாயம் என அத்தியாயங்களை வரிசைப்படுத்தும் வேலையை அவர்கள் செய்யவில்லை.

ஒரு சில அத்தியாயங்களுக்கு அவர்கள் பெயர் சூட்டினாலும் பெருவாரியான அத்தியாயங்களின் பெயர்கள் நபி (சல்) சூட்டிய பெயர் இல்லை.

அத்தியாயங்களின் எண்ணிக்கை 114 என்று நபியவர்கள் சொல்லியிருந்தாலும் முழு குர் ஆனையும் 30 ஜுசூக்களாக பிரிக்குமாறு அவர்கள் சொல்லவில்லை.

எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை தான் அவர்கள் சொன்னார்களே தவிர, ஒவ்வொரு எழுத்திற்கும் இன்று பயன்படுத்தப்படும் சபர், சேர் எழுத்து முறையை அவர்கள் சொல்லவில்லை !

மக்காவில் இறங்கிய வசனம் என்பதை குறிக்க மக்கி என்றும் மதீனாவில் இறங்கியதை குறிக்க மதனி என்றும் இடும் வழக்கம் நபி கட்டளையிட்ட வழக்கமல்ல ..
சில அத்தியாயங்கள் எங்கே இறங்கியது என்பதற்கு சான்று இருந்தாலும் வேறு சில அத்தியாயங்களுக்கு தெளிவான சான்று கிடையாது.

ஓசை, அதாவது உச்சரிப்பு தான் குர் ஆனே தவிர எழுத்து குர் ஆன் அல்ல !
எழுத்தில் பிழை இருந்தாலும் உச்சரிப்பு அதனை சரி செய்து விடும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக