புதன், 11 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (I)


ஈஸா தான் மிர்சா என்பது உவமையா உளரலா?

Mirza Sahib Subject (Part 9)
-----------------------------------------------------------------

மிர்சா சாஹிப் தன்னை ஈஸா என்று மூன்று விதங்களில் கூறுகிறார்.

நான் தான் மர்யம்
மர்யமாகிய நான் கற்பமாகி ஈஸாவை பெற்றெடுத்தேன்
நான் தான் ஈஸா

அதாவது
ஈஸா வருவார், ஈஸா சாப்பிடுவார், ஈஸா பேசுவார்..
என்று அல்லாஹ் சொல்கிறான்.

ஈஸா என்றால் ஈஸாவை போன்ற மிர்சா சாப்பிடுவார், ஈஸாவை போன்ற மிர்சா வருவார்..

என்று இதை புரிய வேண்டும் என்று எந்த கிறுக்கனும் ஒப்புக் கொள்ள மாட்டான் என்பதை முந்தைய தொடரில் பார்த்தோம்.

மிர்சா சாஹிபின் இந்த கூற்றினை நியாயப்படுத்த ஆதாரங்கள் என்கிற பெயரில் பல நகைச்சுவைகளை செய்து காட்டியிருக்கிறீர்கள்.

நிஜமாகவே நகைச்சுவை தானா அல்லது நான் மிகைப்படுத்தி சொல்கிறேனா என்பதை இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் நெஞ்சில் கை வைத்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

சிந்தனைக்கும் இவர்களுக்கும் எள்ளளவுக்கும் தொடர்பிருக்கிறதா? என்பது இவர்கள் அடித்துள்ள நகைச்சுவையின் மூலம் நிரூபணமாகும்.

அதாவது,

////ஈஸா அலை அவர்கள் அதிகமாக உவமையாக பேசியுள்ளார்கள் என்று நியூ testament லிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.////

ஈஸா என்றால் மிர்சா என்பதற்கு நீங்கள் வைத்துள்ள முதல் சான்று இது தான்.
அதாவது ஈஸா நபி உவமையாக பேசுவாராம். அது நியூ டெஸ்டமென்டில் இருக்கிறதாம்.

இதில் பல நகைச்சுவைகள் உள்ளன.

ஈஸா நபி உவமையாக பேசுவார் என்பதற்கும் ஈஸா வருவார் என்று அல்லாஹ் சொல்வதற்கும் என்ன சம்மந்தம்??

முஸ்தஃபா பணம் வாங்க வந்தார் என்று நான் சொல்கிறேன்.

இதை கேட்கும் நிசார் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், முஸ்தஃபா என்று நாஷித் சொல்லியிருக்கிறார், முஸ்தஃபா என்றால் முஸ்தபா போன்று தோற்றமளிக்கும் ஹனீஃபா தான்.
ஹனீஃபாவை தான் முஸ்தபா என்று நாஷித் சொல்லியிருக்கிறார் என்று நான் சொல்லாத விளக்கத்தை என் சார்பாக அவர் சொல்கிறார் என்று வைப்போம்.

அதெப்படிப்பா? முஸ்தபா என்றால் முஸ்தபா என்று தானே புரிய வேண்டும்? முஸ்தபா எப்படி ஹனீஃபா ஆவார்? என்று எதிர் கேள்வி கேட்டால்,

இந்த நிசார் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?

முஸ்தபா என்றால் ஹனீஃபா தான்.
இதோ பார், முஸ்தஃபா பல இடங்களில் உவமையாக பேசக் கூடியவர் !!

இதை கேட்டதும் கேள்வி கேட்டவர் அரைக்கிறுக்கன் ஆகாமல் இருந்தால் சரி.

ஒரு பேச்சுக்கு முஸ்தஃபா உவமையாக பேசுபவர் என்று வைத்துக் கொண்டால் கூட, இங்கே முஸ்தா வந்தார் என்று முஸ்தஃபாவேவா சொன்னார்? நாஷித் அல்லவா சொல்கிறார்?
வாதம் வைத்து நியாயப்படுத்துவதாக இருந்தால் நாஷித் உவமையாக பேசுவார் என்றல்லவா நீங்கள் சொல்ல வேண்டும்?

என்று நிசார் அவர்களை நோக்கி எதிர் கேள்வி தான் கேட்க வேண்டும்.

ஈஸா உவமையாக பேசுவதற்கும், ஈஸா வருவார் என்று அல்லாஹ் சொல்வதற்கும் என்ன சம்மந்தம்??

ஈஸா வருவார் என்றால் ஈஸாவை போல இருக்கும் மிர்சா வருவார் என்று அல்லாஹ் உவமையாக சொல்கிறான் என்று வைக்கப்படும் வாதத்திற்கு,

ஈஸா உவமையாக பேசுவார் என்று சொல்லப்படும் பதில் எப்படி சான்றாகும்??

சரி, அப்படியே ஈஸா உவமையாக பேசுபவர் என்றாலும், அதை நீங்கள் குர் ஆனிலிருந்தோ ஹதீஸிலிருந்தோ அல்லவா காட்ட வேண்டும்?

நியூ டெஸ்டமென்டில் இருக்கிறதாம்.. இது இவர்களுக்கு ஆதாரமாம்.

நியூ டெஸ்டமென்டில் பல விபச்சார கதைகள் கூட தான் இருக்கின்றன.. அவையெல்லாம் சரியென்று ஆகி விடுமா?

ஆதாரம் என்கிற பெயரில் பைபிளை காட்டும் அவல நிலையில் இருப்பவர்கள் தான் மிர்சா எனும் பொய்யரை தூக்கிப்பிடிப்பவர்கள்.

அடுத்து.. இன்னொரு வாதமொன்றை வைக்கிறீர்கள். அதாவது..

குர் ஆனில் ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று இருக்கிறதாம்.
ஆகவே, ஈஸா நபி வருவார் என்றால் ஈஸா நபியை போன்ற ஒருவர் வருவார் என்று புரிய வேண்டுமாம்..
ஆகவே ஈஸா என்றால் மிர்சா என்பது நிரூபணமாகிறதாம் !!

ஆஹா.. பலே பலே !! என்ன ஒரு சிந்தனை, என்ன ஒரு நிரூபணம் !!

இப்படியெல்லாம் கூட ஒரு காரியத்தை நிரூபிக்க முடியும் என்றால் நாட்டில் சிந்தனையாளர்களுக்கு எல்லாம் பெரும் சவால் விட்டு விட உங்களால் முடியும் !!

ஈஸா நபி சப்ஜக்ட் இன்னும் துவங்கவில்லை, இந்த மிர்சாவின் வண்டவாளங்கள் முடிந்து ஈஸா நபி சப்ஜக்ட் துவங்கும் போது, ஈஸா நபியை பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான்? அவர் மரணிக்கவில்லை என்பது எப்படி உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெளிவாக இருக்கிறது என்பதெல்லாம் அக்கு வேறு ஆணி வேராய் தெளிவாக்கப்படும்.

குர் ஆனில் ஈஸா நபி இறக்கவில்லை என்று நிரூபணமாகும் போது, ஹதீஸில் வரக்கூடிய மர்யமின் மகன் ஈஸா நபி தான் என்பது சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் தெளிவாகப்புரியும்.

சரி நான் கேட்கிறேன், ஒரு வாதத்திற்கு, ஈஸா நபி இறந்து விட்டார் என்றே வைப்போமே..

ஈஸா நபி வருவார் என்று ஹதீஸில் சொல்லப்படுவது ஈஸா நபியைப் போன்ற இன்னொருவர் என்று கூட வைப்போமே..

அந்த இன்னொருவர் மிர்சா தான் என்பதற்கு என்ன ஆதாரம்?

இதை சொன்னீர்களா?

இதற்கு ஆதாரம் காட்டினீர்களா?

எதை உங்கள் அடிப்படை நிலைபாடாய் வைக்கிறீர்களோ அதற்கு ஆதாரம் காட்டாத நீங்கள் தான் என்னுடைய ஆதாரத்தை பற்றி பேசுவதா?

குர் ஆனில் ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று இருப்பதால் ...

ஈஸா நபி வருவார் என்றால் ஈஸா நபியை போன்ற ஒருவர் வருவார் என்று புரிய வேண்டும் என்பதால்..

ஈஸா என்றால் மிர்சா என்பது எப்படி நிரூபணமாகும்?

கேள்வி புரிகிறதா?

ஈஸா வருவார் என்றால் ஈஸாவை போன்ற ஒருவர் வருவார் என்றால் அந்த ஈஸாவை போன்றவர் ஏன் எங்கள் ஊர் அப்துல் காதராக இருக்கக்கூடாது?
ஏன் அது ஒரு ஜஃபருல்லாஹ்வாக இருக்கக்கூடாது?

இதற்கு தங்களிடம் இருக்கும் ஒரே பதில், அந்த ஈஸா என்பது நான் தான் என்று மிர்சாவே சொல்லி விட்டார் என்பது தான் !!

இது எப்படி இருக்கிறது என்றால், நான் தான் கடவுள் என்று சாய் பாபாவே சொல்லி விட்டபடியால் அவர் கடவுள் என்று நான் நம்புகிறேன் என்று சொல்பவன் போல் இருக்கிறது.

இது கடவுளின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது என்று கிறித்தவர்கள் வாதம் புரிவது போல் இருக்கிறது.

குர் ஆன், ஹதீஸை கொண்டு விவாதம் புரிய வந்து விட்டு, ஈஸா என்றால் மிர்சா என்று மிர்சாவே சொன்னார் என்று சொல்வது விவாதமா அல்லது கேலிக் கூத்தா?

ஈஸா என்றால் மிர்சாவை தான் அது குறிக்கிறது என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்லியிருக்கிறானா?

அதை காட்டுங்கள்.

ஈஸா என்றால் மிர்சாவை தான் அது குறிக்கிறது என்று நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்களா?

அதை எடுத்துக் காட்டுங்கள்.

இதுதான் வாதம் செய்யும் முறையே அல்லாமல், மிர்சா சொன்னார், என்று சொல்வது கேலிப்பேச்சு.

நான் நபி என்று கூட தான் மிர்சா சொல்லியிருக்கிறார்.. அது உண்மையா அல்லது உளரலா? என்று தானே விவாதித்துக் கொண்டிருக்கிறோம்? அல்லாமல், தான் நபி என்று மிர்சாவே சொல்லி விட்டபடியால் இத்துடன் விவாதத்தை முடித்துக் கொள்ளலாம் என்று எவராவது சொன்னார்களா?

////நீங்களோ, ஈஸா வஃபாத்தை பற்றி பேச வேண்டாம், மிர்சா சாகிபை பற்றி பேசுவோம் என்று கூறுகிறீர்கள். ஆனால் நாங்கள் அடிப்படையான கருத்தாகிய ஈசாவின் வஃபாத்தை முதலில் பேசவேண்டும் என்று கூறுகிறோம்.
ஏனென்றால் அடிப்படை கருத்தை நீங்கள் புரிந்தால் தான் இப்னு மர்யம் என்று உவமையாக கூறப்பட்டதை உங்களால் புரியமுடியும்.//////

என்கிறீர்கள்.

ஏன்? நான் இதை அப்படியே உல்டாவாக கூட சொல்வேனே?

நாங்கள் அடிப்படை கருத்தான மிர்சா ஒரு புளுகர் என்பதைபற்றி முதலில் பேச வேண்டும் என்று சொல்கிறோம். அடிப்படை கருத்தை நீங்கள் புரிந்தால் தான் இப்னு மர்யம் என்று கூறபட்டது உவமையுமல்ல, அது மிர்சா என்கிற புளுகருமல்ல, ஈஸா என்றால் ஈஸா தான் என்று உங்களால் புரிய முடியும் !

அடுத்ததாக, ஈஸா என்பது மிர்சா தான் என்பதற்கு ஆதாரம் என்கிற பெயரில், அற்புதமான, உலகில் எவராலும் கற்பனை கூட செய்ய இயலாத அசாத்திய திறமையொன்றை காட்டியிருக்கிறீர்கள்.

அதாவது, ஈஸா நபி எதிரிகளால் தூற்றப்பட்டார்களாம்.

மிர்சாவையும் நாம் தூற்றுகிறோமாம்.

எனவே ஈஸா தான் மிர்சா !!

என்னே ஒரு சிந்தனை, என்னே ஒரு அறிவாற்றல் !! அஹமத்தியா ஜமாஅத்தினரின் இது போன்ற சிந்தனையும் வாதமும் உங்களுக்கு பெருமையை தருகிறதா அல்லது தலைகுனிவை ஏற்படுத்துகிறதா? என்பதை அறிய, உங்களது இது போன்ற வாதங்களையெல்லாம் நடு நிலையான மக்களிடம் கொடுத்து வாசிக்க சொல்லிப்பாருங்கள்.

உங்களுக்கு தலைகுனிவோ என்னவோ, இந்த அளவிற்கு பலகீனமான வாதம் வைப்பவர்களுடன் நான் நேரம் செலவிடுகிறேன் என்று எண்ணுகையில் எங்களுக்கு வெட்கமாக தான் இருக்கிறது !

ஈஸா நபி எதிரிகளால் தூற்றப்பட்டார்கள்.

மிர்சாவையும் நாம் தூற்றுகிறோம்.

எனவே ஈஸா தான் மிர்சா !!

சினிமா நடிகையுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு கையும் களவுமாய் பிடிபட்ட நித்தியானந்தா என்கிற சாமியாரை கூட தான் நாங்கள் தூற்றுகிறோம்.

நான் கடவுளின் அவதாரம் என்று கூறி ஊரை ஏமாற்றி திரிந்த சாய் பாபாவை கூட தான் நாம் தூற்றுகிறோம்.

ஈஸாவை எதிரிகள் தூற்றினார்கள், நித்தியானந்தாவை நாஷித் தூற்றுகிறார்.
ஆகவே ஈஸா என்றால் அது நித்தியானந்தா தான் என்று எவனாவது நாளை வாதம் வைத்து உங்கள் கொள்கையுடன் மோதலுக்கு வந்து விடப்போகிறான் கவனம்..

அடுத்து, ஈஸா என்றால் மிர்சா தான் என்பதற்கு இன்னொரு வாதமொன்றை வைக்கிறீர்கள்.
வாதம் வைக்கிறீர்கள் என்று சொல்வதை விட வாதம் வைக்க முயற்சி செய்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம்.
காரணம், என்ன சொல்ல வருகிறீர்கள் என்று உங்களுக்கும் புரியவில்லை, நீங்கள் எழுதியதை படிக்கும் எவருக்கும் புரியவில்லை.

அதாவது 66:11 வசனத்தில் இரண்டு பெண்களை நம்பிக்கைக் கொண்டோருக்கு முன்னுதாரணமாக அல்லாஹ் சொல்கிறான்.

ஒன்று, ஃபிர் அவ்னின் மனைவி

இன்னொருவர் ஈஸாவின் தாயார் மர்யம்.

சரி, இந்த வசனத்தை காட்டி இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது..

//////இவ்வசனத்திலிருந்து புரிந்து கொள்வது என்னவென்றால், நபி ஸல் அவர்களை ஏற்றுக்கொண்ட ஒரு மூமின், இந்த 2 பெண்களுடைய ஏதாவது ஒரு பண்பை பெற்றவராகவே விளங்க முடியும் என்பதாகும்./////

ஆம், சரி தான்.

நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த இரு பெண்களும் முன்னுதாரணம் என்றால் இந்த இரு பெண்களிடம் இருக்கும் ஈமானை போல, இந்த இரு பெண்களிடமும் இருக்கும் இறையச்சத்தைப் போல், இந்த பெண்களிடம் இருக்கும் ஒழுக்கத்தை போல் நாமும் இருக்க வேண்டும் என்று பொருள்.

சரி, அதனாலென்ன? இதன் மூலம் என்ன தாம் சொல்ல வருகிறீர்கள்? என்று நீங்களே விளக்கவில்லை என்பது தான் ஆச்சர்யம் !!

ஆனால், வழக்கம் போல் இந்த வசனத்திற்கும் சில அபத்தமான விளக்கங்களை மட்டும் தவறாமல் கொடுத்துள்ளீர்கள்.
அபத்தமான புரிதல், அபத்தமான விளக்கம் போன்றவை தான் அஹமத்தியா மதத்திற்கு சர்வ சாதாரணமாச்சே !!

////இரண்டு பெண்களை, மூமின்களான ஆண்களுக்கு உதாரணமாக கூறியிருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கது, பெண்களுக்கு அல்ல. ஏன்?/////

என்று கேட்டிருக்கிறீர்கள்.

ஆண்களுக்கு என்று அல்லாஹ் சொல்லவில்லை. ஈமான் கொண்டவர்களுக்கு, என்று தான் சொல்கிறான்.

இந்த வாதம் தவறானது.

////முஸ்லிம் உம்மத்திலே நபி ஸல் அவர்களின் மிகவும் நேசத்திற்குரிய ஹஸ்ரத் கதீஜா, ஆயிஷா ரலி, பாத்திமா ரலி, மற்றும் இறையடியர்களான பல பெண்கள் இருக்க, யூத சமுதாயத்தை சார்ந்த 2 பெண்களை எடுத்துக்காட்டாக அல்லாஹு கூற வேண்டியதன் நோக்கம் என்ன?/////

என்று இல்லாத ஜாதியை இஸ்லாத்தில் நுழைக்கிறீர்கள்.

சொல்வதில் அர்த்தமும் இல்லை.

ஆயிஷா, கதீஜா போன்றோர் முஸ்லிம் உம்மத்தாம்.
மர்யமும் ஃபிர் அவ்ன் மனைவியும் யூத உம்மத்தாம்.

நல்லா இருக்குதுங்க உங்க வாதம்.

முஸ்லிம் உம்மத் என்றால் என்ன என்று உங்களுக்கு யாரும் சொல்லி தரவில்லை என்று எண்ணுகிறேன்.

கதிஜாவும் ஆயிஷாவும் முஸ்லிம் உம்மத் தான், நான் மறுக்கவில்லை.
எதன் அடிப்படையில் முஸ்லிம் உம்மத் என்கிறோம்?

முஸ்லிம் உம்மத் என்று ஏதோ முதலியார் செட்டியார் போன்று சாதியாக பாவிக்கிறீர்களே.. இதென்ன கேலிக்கூத்து?

அல்லாஹ்வை மட்டும் வணங்கியவர் முஸ்லிம்.
அல்லாஹ் அனுப்பிய தூதரை ஏற்றுக் கொண்டவர் முஸ்லிம்.

இது தானே விஷயம்.

ஆயிஷா அவர்கள் முஸ்லிம் என்றால் மர்யமும் முஸ்லிம் தான்.

அடிப்படை விஷயங்களை கூடவா நான் சொல்ல வேண்டும்?

/////நீங்கள் ஒருபுறம் நபி என்றும் மேலும் உங்களையே எடுத்துக்காட்டாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கூறிகிறீர்கள். ஆனால் மறுபுறம் மர்யமை நம்பிக்கையாளர்களுக்கு எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறீர்களே?

இது என்ன பைத்தியக்காரத்தனம்?/////

என்று ஒரு யூதன் கேட்பானாம்.

அவன் கேட்டால் அந்த கேள்வி தான் பைத்தியக்காரத்தனம் என்று அவனது மண்டையை தட்டி பதில் சொல்வோம். அல்லாமல், இதை வைத்தெல்லாம் நபி (சல்) அவர்களை பொய்ப்படுத்த முடியாது.

காரணம், இந்த இரு பெண்களை அல்லாஹ் முன்னுதாரணமாக ஆக்கி விட்டு அதற்கான காரணத்தையும் அந்த வசனத்திலேயே விளக்கியும் விடுகிறான்.

அதாவது, ஃபிர் அவ்னின் மனைவியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு முன்னுதாரணமாக அல்லாஹ் ஆக்கினான். ஏன்?

ஏனென்றால், ஃபிர் அவ்னின் கொடுமைகளை அவர் சகித்து, இதற்கு பிரதிபலனாக சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டி தா அல்லாஹ், என்று அவர் பிரார்த்தனை செய்தார். (பார்க்க 66:11)

இந்த விஷயத்தில் நமக்கு படிப்பினையும் ஈமானை மேம்படுத்திக் கொள்ளும் பாடமும் இருக்கிறது.

மர்யமை முன்னுதாரணமாக ஆக்கி கொண்டான். காரணம் அவர் கற்பொழுக்கமுள்ள பெண்ணாக வாழ்ந்தார். (பார்க்க 66:12)

ஆக, காரணங்களை கூறி, இன்னின்ன விஷயங்களில் இவர்களை முன்னுதாரணமாக கருதிக் கொள் என்றால், அதெப்படி, நபி (சல்) அவர்கள் நமக்கு முன்னுதாரணமில்லையா என்று யூதன் ஒருவன் கேட்பது கூமுட்டைத்தனம் என்று அவனுக்கு புரிய வைப்போம்.

அதே போல்,

///இப்போது ஒரு கிறிஸ்தவன் கேட்கிறான், முஹம்மத் அவர்களே எங்களின் ஆத்மீக அன்னையான ஹஸ்ரத் மர்யமை, மூமின்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று நீங்கள் உங்கள் குரானில் எழுதி உள்ளீர்கள்.
மறுபுறம் நீங்கள் நபி என வாதம் செய்கிறீர்கள். இது முரண்பாடாக தெரிய வில்லையா?////

என்று அடுத்து கூறுகிறீர்கள்.

மர்யம் எடுத்துக்காட்டாய் இருப்பதற்கும், நபி (சல்) அவர்கள் தன்னை நபி என்று பிரகடனப்படுத்தியதற்கும் என்ன சம்மந்தம்? அது எப்படி முரண்பாடாகும்?

மர்யம் என்ன, எல்லா நபிமார்களையும் தான் அல்லாஹ் நமக்கு முன்னுதாரணமாக்கியிருக்கிறான். இப்ராஹிம் நபியை கூட தான் நமக்கு அல்லாஹ் முன்னுதாரணமாக்கியிருக்கிறான், அவர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று கூட தான் சொல்கிறான்.

ஆக இது ஒரு வாதமாகுமா? எல்லா நபிமார்களும் முஃமீன்களுக்கு முன்னுதாரணம் தான் என்பதால் நபி (சல்) அவர்கள் நபியில்லை என்று ஆகி விடாது, இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஆக, நீங்கள் எழுப்பிய எந்த வாதமும் உருப்படியாய் இல்லை என்பது இதை படிக்கும் எவரும் புரியலாம்.

நானே மர்யம், நானே ஈஸா என்கிற மிர்சா சாஹிபின் உளரலை இன்னும் நாம் விடுவதாக இல்லை...

தொடர்ந்து, இந்த இரு பெண்களை முன்னுதாரணமாக அல்லாஹ் சொல்லியதற்கும் மிர்சா மர்யமாக ஆனதற்கும் உண்டான தொடர்பு பற்றி நீங்கள் எழுதியுள்ள மேலும் சில அபத்தங்கள் சிலவற்றை தொடர்ந்து அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

அத்தோடு, மர்யம் பற்றி வரக்கூடிய வசனத்தில் ஆண்பாலை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று நீங்கள் கூறியிருக்கும் விளக்கமானது எந்த அளவிற்கு உங்களை மொழியறிவற்றவராக காட்சி தருகிறது என்பதையும், இலக்கண‌ ரீதியாக உங்கள் கூற்று எவ்வாறு பிழை என்பதையும் அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக