வியாழன், 17 ஜூலை, 2014

பெப்ஸியா அப்பாவிகளின் இரத்தமா?


கொல்லப்படுவது இலங்கையிலுள்ள தமிழர்களாக இருந்திருந்தால் இன்னேரம் 
தமிழர் நலன் காப்போர் (?) எல்லாம் கொந்தளித்திருப்பர்.
ஒட்டு மொத்த தமிழக ஊடகங்களும் வெகுண்டெழுந்திருக்கும்.

நாட்டில் எங்கோ ஒரு மூலையில் குண்டு வெடித்து ஒருவருக்கு காயம் என்று செய்தியறிந்தால் அதை வைத்து ஆறு மாத திரைக்கதை எழுதி வியாபாரம் பார்ப்பர்.

ஒரே ஒரு பெண்ணை மானபங்கம் செய்து கொலை செய்து விட்டமைக்காக இரண்டு வருடமாக அந்த செய்தியே ஊடகத்தின் வயிற்றுப் பிழைப்பானது.

ஆனால், பாலஸ்தீனத்தில் ஒரு இனமே அழிந்து கொண்டிருக்கிறது, குழந்தைகளை நிற்க வைத்து சுட்டுப் பொசுக்குகிறார்கள்,
குழந்தையின் கண் முன்னே தாயை கொலை செய்கிறார்கள்.. வீடுகளில் குண்டு வீசி கண நேரத்தில் மக்களை தீக்கிரையாக்குகிறார்கள்.

சமூக வலைதளங்களில் காணொளிகளையும் செய்திகளையும் பார்த்து விட்டு, இது பற்றி எந்த இந்திய ஊடகமாவது செய்தி வெளியிட்டிருக்கிறானா என்று தேடிப் பார்க்கிறேன்..

படுபாவிகள்.. ஒரு துண்டு செய்தியை கூட இடவில்லை.

அதே சமயம், ஒரு கையில் பெப்ஸியை குடித்துக் கொண்டு, உலகமே அழிந்தாலும் கால்பந்துப் போட்டிக்காக தொலைகாட்சி முன் தவம் கிடக்கும் இளிச்சவாய் முஸ்லிம் சமூகம் இருப்பது வரை, இவர்களை குறை சொல்லியும் பயனில்லை !

நீங்கள் நம்பவில்லையென்றாலும், பாலஸ்தீனத்தில் செத்து மடிந்த ஒவ்வொரு உயிரும் மறுமையை நம்பக்கூடியவை !

இன்று இறந்து போகும் அந்த பிஞ்சுகள் நாளை அல்லாஹ்வின் சன்னிதானத்தின் முன் கேட்பார்கள், நீங்கள் குடித்தது பெப்சியையா அல்லது எங்கள் இரத்தத்தையா? என்று !

அல்லாஹ்வின் முன்னால் அந்த பிஞ்சுகளுக்கு பதில் சொல்லுங்கள், போதும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக