வியாழன், 17 ஜூலை, 2014

சூனியம் பற்றிய தொடர் உரை




இஸ்லாத்தின் ஆணி வேரிலிருந்தே செல்லும் சகோ. பிஜெ

சூனியத்தை நம்புவது தெளிவான இணைவைப்பு என்பதை புரிய வேண்டுமானால், முதலில் இஸ்லாத்தின் ஆணி வேர் என்ன என்பதை புரிய வேண்டும்.

ஈமான் என்றால் என்ன என்பதை புரிய வேண்டும். அல்லாஹ்வை வணங்கினால் மட்டும் போதாது, அவனை நம்ப வேண்டிய விதத்தில் நம்பிக்கை கொண்டு அதன் பின் வணங்க வேண்டும்.

அல்லாஹ்வை நம்புகிற விதத்தில் கோட்டை விட்டு அவனை என்ன தான் வணங்கினாலும் இறுதியில் அனைத்தும் செல்லாக்காசு தான் !

குர் ஆனின் நம்பகத்தன்மை என்ன? ஹதீஸ்களின் அவசியம் என்ன? ஹதீஸ்கள் எதற்காக அருளப்பட்டன, அதன் இலக்கணங்கள் யாவை? என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அடிப்படையில் தெரிந்து வைத்தால் தான் சூனியத்தை நம்புவது கூடாது என்பது புரியும்.

குர் ஆனுக்கு முரணான செய்திகள் ஹதீஸ்களில் இருந்தால் அவற்றை என்ன செய்வது?
அவ்வாறு ஏன் ஏற்படுகிறது?
சூனியம் எப்படி குர் ஆனுக்கும் அல்லாஹ்வின் சிஃபத்திற்கும் முரணாக இருக்கிறது?
இது போன்று குர் ஆனுக்கு முரணாக ஹதீஸ்களில் பதியப்பட்டுள்ள ஏனைய செய்திகள் என்னன்ன?

சூனியத்தை நம்பக்கூடாது என்றால் நபிமார்கள் செய்த அற்புதங்களையும் நம்பக் கூடாதா?

சூனியத்தை நம்புவது ஷிர்க் என்றால் தஜ்ஜால் செய்து காட்டுவதாக நம்பும் விஷயங்களும் ஷிர்கா?

சூனியத்தை நம்புவது ஷிர்க் என்றால் சாமிரி காளை மாட்டை சத்தமிட வைத்த செயலை நம்புவதும் ஷிர்க்கா?

சூனியம் என்பது மனிதர்கள் அவர்களாக செய்வது அல்ல, ஜின்களை கொண்டு செய்யக்கூடியவை தான் என்கிற கூற்று சரியாகுமா?

ஜின்களின் இலக்கணம் என்ன? ஜின்களால் என்ன செய்ய இயலும்? அவைகளை மனிதர்களால் வசப்படுத்த இயலுமா?

என..

இஸ்லாத்தின் அடிப்படைகளை தூர் வாரிக் கொண்டு விளக்கமளிக்கிறார் சகோ. பிஜெ.

மிக அருமையான உரை !

சூனியத்தை நம்பி வாழ்க்கையைத் தொலைப்போர், இந்த தொடர் உரையை கேட்டு தங்கள் ஈமானை சரி செய்து கொள்ளவும் !

நான்கு நாட்கள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் 6 நாள் உரை மீதமுள்ளது.

இதுவரையுள்ள உரைகளை கேட்க இந்த இணைப்பைப் பார்க்கவும்

http://www.onlinepj.com/bayan-video/thotar_uraikal/sooniyam-ramalan-thodar-urai/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக