வியாழன், 17 ஜூலை, 2014

அதென்ன ரமலான் சிறப்புத் தொழுகை?


மற்ற நாட்களில் தொழும் இரவுத் தொழுகை வேறு, ரமலானில் தொழப்படும் இரவுத் தொழுகை வேறு என்று பலர் கருதுகின்றனர்.

ரமலான் சிறப்பு தொழுகை என்று இதற்கு பெயர் வேறு சூட்டிக் கொள்கின்றனர்.

அப்படியொரு பிரத்தியேக தொழுகை மார்க்கத்தில் இல்லை.

எல்லா காலங்களிலும் எது இரவுத் தொழுகையோ அது தான் ரமலானிலும்.

மற்ற காலங்களில் செய்வதை விடவும் கணக்கிலடங்கா அளவிற்கு ரமலானில் செய்யப்படும் அமல்களுக்கு அல்லாஹ் கூலி வழங்குகிற காரணத்தால் ரமலானில் இரவுத் தொழுகைக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ரமலான் மாதத்தின் இரவையே பகலாக ஆக்கும் அளவிற்கு நபியவர்கள் தொழுகையில் ஈடுபடுவார்கள் என்றெல்லாம் ஹதீஸ்களை பார்க்கிறோம்.

ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நபி (சல்) அவர்கள் பதினோரு ரக்காஅத்கள் தொழுவார்கள் என்று ஆயிஷா அம்மா அறிவிக்கும் ஹதீஸும் கூட, ரமலானுக்கென்று விசேஷ தொழுகை எதையும் நபி (சல்) அவர்கள் தொழவில்லை என்பதை காட்டுகிறது.

ரமலானுக்கென்று எந்த விசேஷ தொழுகையும் இல்லை, அதே சமயம், எல்லா காலங்களிலும் தொழப்படும் தஹஜ்ஜத் தொழுகை ரமலானில் விசேஷ முக்கியத்துவத்துடன் தொழப்பட வேண்டும். வேறுபாடு இது தான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக