வியாழன், 17 ஜூலை, 2014

நடைமுறை சாத்தியமற்ற உலகப்பிறை


மாலை ஆறரை மணிக்கு சவுதியில் தென்படும் பிறை தகவலை மொத்த உலகமும் ஏற்க வேண்டும் என்றால்,

அதே நேரத்தில் இந்தியாவில் அது இரவு 9 மணியாக‌ ஆக இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் நடு இரவு 1.30ஆக இருக்கும்.
ரஷியாவில் நடு இரவு 3.30 ஆக இருக்கும்.

உலகில் எங்கு பிறை தோன்றினாலும் அந்த தகவல் ஒட்டு மொத்த உலகையும் கட்டுப்படுத்தும் என்கிற கோட்பாடு தான் சரியென்றால், சவுதியில் உதிக்கும் பிறையை சவுதி மக்கள் மாலை 6.30 மணிக்கே தெரிந்து கொள்வர் ;

இந்தியர்கள் தங்கள் பகுதியில் பிறை தென்படுகிறதா என்று பார்த்து, எங்கும் தென்படவில்லையென்றாலும் கூட, 9 மணி வரை காத்திருந்து சவுதி தகவலை பெற வேண்டும்.

ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் தங்கள் பகுதியில் மாலை பிறை தென்படவில்லையென்றாலும், அதனால் மாதம் துவங்கவில்லை என்று முடிவு செய்து தூங்க செல்ல முடியாது, மாறாக இரவு 1.30 மணி வரை தூங்காமல் விழித்திருந்து சவுதி தகவலை பெற வேண்டும்.

ரஷிய மக்களும் அதே போன்று தங்கள் பகுதியில் மாலை பிறை தென்படவில்லையென்றாலும், அதனால் மாதம் துவங்கவில்லை என்று முடிவு செய்து தூங்க செல்ல முடியாது,
மாறாக இரவு 3.30 மணி வரை தூங்காமல் விழித்திருந்து சவுதி தகவலை பெற வேண்டும்.

நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

சவுதி வாழ் மக்களுக்கு மாதம் பிறத்த தகவல் எளிதில் கிடைத்திருக்கிறது, அதே சமயம், நாட்டின் பிற பகுதி மக்களுக்கு, ஒரு நாள் தூக்கத்தை தொலைத்தால் தான் கிடைக்கிறது.

மார்க்க சட்டம் இப்படி நபருக்கு நபர் வேறுபடுமா?

இந்த சிரமம் ஏதோ ஒரு குறிப்பிட்ட வருடம் மட்டும் நடக்கக்கூடியது அல்லவே?

ஒரு பிறை தான் ஒட்டு மொத்த உலகையும் கட்டுப்படுத்தும் என்கிற சித்தாந்தத்தை பின்பற்றும் நாடுகள் அனைத்திலும், எல்லா மாதமும், எல்லா வருடமும் இந்த சிரமம் இருந்து கொண்டே இருக்கும் !

சவுதியில் பிறந்ததால் அவன் செய்த பாக்கியம் என்ன? ரஷியாவில் பிறந்ததால் அவன் செய்த பாவமென்ன?

மார்க்க சட்டம் இப்படித்தான் கேலிக்கூத்தாக இருக்குமா?

என்பதை சிந்திக்கையிலேயே, உலகமெங்கும் ஒரே பிறை தகவல் தான் என்கிற கொள்கையானது, அறிவுக்கும் நடைமுறை வாழ்விற்கும் உகந்த கொள்கையேயல்ல என்பதை எளிதில் விளங்கலாம், குர் ஆன் ஹதீஸ் சான்றுகள் கூட அவசியமில்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக