வியாழன், 17 ஜூலை, 2014

புகையிலை விலையுய‌ர்வு


புகையிலை விலையை 3 ரூபாய் அளவிற்கு உயர்த்த அரசு திட்டமிட்டிருப்பது ஏதோ, அந்த அளவிற்கு வசதி வாய்ப்பு பெற்றவர்கள் மட்டும் புகைப் பிடித்தால் போதும் என்கிற சமூக அக்கறையின் வெளிப்பாடாக எடுக்கப்பட்ட்ட முடிவு என்று அவசரப்பட்டு யாராவது பேட்டி கொடுத்து மத்திய அரசுக்கு முட்டுக் கொடுத்து விட வேண்டாம்.

இவர்களுக்கு உண்மையிலேயே சமூக அக்கறை இருக்குமானால், அதை முழுமையாக தடை தான் செய்திருக்க வேண்டும். சமூகத்திற்கு அதனால் ஏற்படும் பாதிப்பை விட, அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் ஒன்றும் அரசுக்கு பெரிதில்லை என்று அப்போது நிரூபித்திருக்கலாம்.

அல்லது, கீழ்மட்ட, மட்டும் நடுத்தர மக்கள் இதை தொட்டுக் கூட பார்த்திராத அளவிற்கு, மேல் மட்ட மக்களுக்கு மட்டுமே உரித்தான பொருள் பட்டியலில் புகையிலையையும் சேருங்கள்.

ரோஸ் ராய்ஸ் காரின் விலையளவிற்கு புகையிலை விலையை உயர்த்தினால், ரோஸ் ராய்ஸ் கார் வாங்குகிறவன் மட்டும் தான் புகைப்பான், அவன் மட்டும் தான் வாங்குவான்.

பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு அது நன்மை.

அதை செய்யாமல், 2 ரூபாய் மூன்று ரூபாய் என விலையேற்றம் செய்வதால், அது வரை ஏழு ரூபாய் கொடுத்து வாங்கிய அன்றாடங்காய்ச்சி, வீட்டிற்கு செலவுக்காக ஒதுக்கும் பணத்தை மிச்சப்படுத்தி அதிகமாக 3 ரூபாய் இட்டு 10 ரூபாய்க்கு அதே புகையிலையை வாங்க தயங்க மாட்டான்.

தினக்கூலியின் வீட்டு அடுப்பெரியுதோ இல்லையோ, உதட்டில் நிச்சயம் அப்போதும் சிகரெட் எரிந்துக் கொண்டு தான் இருக்கும்.

இது அரசுக்கு தெரியும். இதை தான் அரசு எதிர்பார்க்கவும் செய்கிறது.

எனினும், அரசாங்கம் ஒரு வியாபாரத் துறை என்பதை அறிந்து கொண்டால் இதுவெல்லாம் பெரிதாக தெரியாது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக