வியாழன், 17 ஜூலை, 2014

பிஸ்மில்லாஹ் இறை வசனமா?


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதும் இறை வசனம் தான்,
ஒவ்வொரு அத்தியாயத்தில் அதையும் ஒரு வசனமாக தான் கருத வேண்டும் என்பதற்கு கீழ்காணும் ஹதீஸ் சான்றாக நிற்கிறது.

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன?'' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "சற்று முன் (குர்ஆனின் 108 ஆவது அத்தியாயமான "அல்கவ்ஸர்' எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது'' என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இன்னா அத்தைனாகல் கவ்ஸர். ஃபஸல்ரி ரி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்.
(ஹதீஸின் ஒரு பகுதி...)
அறிவிப்பவர்: அனஸ் பின் மாரிலிக் (ரலிரி), நூல்: முஸ்லிம் 670

இந்த செய்தியில்,தமக்கு அத்தியாயம் ஒன்று அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹியாக அறிவிக்கப்பட்டது என்று சொன்ன நபி (சல்) அவர்கள் அதை ஓதிக்காட்டும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதையும் இணைத்தே தான் ஓதுகிறார்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக