வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (L)


அடையாளமா அறிவா?

"ஈஸா நபி மரணிக்கவில்லை" (பாகம் 12)
------------------------------------------------------------

ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று நான் கூறியிருந்ததை மறுப்பதற்காக, குர் ஆன் தான் அடையாளம் என்கின்றனர் இந்த காதியானிகள்.

அதை நியாயப்படுதுவதற்க்காக முதல் கட்டமாக அது நபியிடம் சொல்ல சொல்லும் வசனமல்ல, அல்லாஹ்வே பேசுகிற வாசகம் என்கிறீர்கள்.

அது தவறு ! அல்லாஹ்வே பேசுவதாக இருந்தால் தன்னை பின்பற்றுமாறு அல்லாஹ் சொல்ல மாட்டான். நபியை தான் பின்பற்றுமாறு சொல்வான்.

அல்லாஹ்வை பின்பற்ற வேண்டும் என்றால் அல்லாஹ் சொல்வதை பின்பற்ற வேண்டும் என்று பொருள் செய்ய வேண்டும் என்கிற வாதமும் தவறு.

அது அல்லாஹ்வின் நடையே அல்ல. குர் ஆன் முழுவதும் நீங்கள் தேடிப்பார்த்தால் அப்படிப்பட்ட நடையில் அல்லாஹ் பேசுவதில்லை.

நீங்கள் இந்த குறிப்பிட்ட வசனத்தை நியாயப்படுதுவதற்க்காக இதை சொல்கிறீர்களே தவிர குர் ஆனின் பொதுவான நடையை குறித்து சிந்திக்கவில்லை.
மேலும், மறுமை நாளை பற்றி இந்த குர் ஆனில் உள்ளது என்று தான் பொருள் செய்ய வேண்டும் எனவும் சொல்கிறீர்கள். அதுவும் தவறு.அவர் அல்லது அது அந்த நாளின் அத்தாட்சி என்பது தான் அந்த வசனத்தின் நேரடி பொருள்.

இதில் அந்த செய்தி உள்ளது என்கிற அர்த்தமும் கொடுக்கலாம் என்றாலும் அந்த இடத்தில் இது பொருந்தாத அர்த்தம் - காரணம், இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று தொடர்ந்து அல்லாஹ் சொல்கிறான்.

இதில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது, இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்பது பொருந்தாத வார்த்தை அமைப்பு. கியாமத் நாளை பற்றியோ வேறு எதை பற்றியோ குர் ஆனில் உள்ளது என்றால் அதில் உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை. காபிரும் குர் ஆனில் அது உள்ளது என்று நம்பதான் செய்கிறான்.

இந்த செய்தி இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது, யாரும் இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று பேசுவது தான் பொருளற்ற ஒன்று.

நீங்களோ, இதை கவனிக்காமல், ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம், அதில் சந்தேகம் கொள்ளாதீர்கள், என்னை பின்பற்றுங்கள் என்று சொல்வது பொருளற்றது என்று பேசுகிறீர்கள். இது மிகவும் பொருத்தமான ஒன்று தான்.
ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம் என்றால் அவர் மீண்டும் வருவார் என்கிற கருத்து இதில் ஒளிந்துள்ளது. அவர் மீண்டும் வருவார் என்பதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்பது பொருத்தமானது தான். இந்த விஷயத்தில் என்னை பின்பற்றுங்கள் என்பதும் பொருத்தமான ஒன்று தான். அதே சமயம், என்னை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொன்னான் என்று சொல்வது தான் பொருத்தமற்றது.
குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது, இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று சொல்வது தான் பொருளற்றது.

மேலும் இதை நியாயப்படுதுவதற்க்காக,

குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது, எனவே இந்த குர் ஆனை சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று புரிய வேண்டுமாம். அப்படி புரிய வேணடுமானால் அப்படி வாசகம் இருக்க வேண்டும்.
வார்த்தை அமைப்பின் படி அவர் அல்லது அது கியாமத் நாளின் அடையாளம், இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று தான் உள்ளது.
மேலும், குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பது குர் ஆனில் சந்தேகம் கொள்ள தடையான ஒன்றல்ல.
குர் ஆனில் அது பற்றி சொல்லப்பட்டுள்ளது, ஆகவே மொத்த குர் ஆனிலும் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்றால், ஏதோ கியாமத் நாளை பற்றி பேசுவது என்பது, குர் ஆனை பற்றி எந்த சந்தேகத்தையும் செய்வதை விட்டும் தடுக்கிறது என்பது போல கருத்தாகிறது , இதன் காரணமாகவும் நீங்கள் சொல்வது பொருளற்றது !

மேலும், இது நேர்வழி என்று அல்லாஹ் சொல்லி விட்டதால் அது குர் ஆனை தான் குறிக்கும் என்று ஒரு வாதத்தையும் முன்னர் வைத்திருந்தீர்கள். அதுவும் தவறு தான்.
ஏனெனில், அந்த வசனத்தில் இது நேர்வழி என்று அல்லாஹ் சொல்வது போலவே 43 :64 வசனத்திலும் அல்லாஹ் சொல்கிறான்.

அல்லாஹ்வே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேர் வழி'

இதில் குர் ஆனை பற்றி அல்லாஹ் சொல்லவில்லை , அவனை வணங்குங்கள் என்று தான் உள்ளது. அதை சொல்லி விட்டு இது தான் நேர்வழி என்று அல்லாஹ் சொல்கிறான் என்றால் அவனை வணங்வது நேர்வழி என்று தான் பொருள். ஆகவே நேர்வழி என்று சொன்னால் அங்கே குர் ஆன் தான் வரும் என்று வாதம் வைக்க முடியாது என்பதற்காக சொல்கிறேன்.

இன்னும் சொல்கிறேன் .. 43 :61 வசனம் நபியிடம் சொல்ல சொல்லி அல்லாஹ் சொல்லவில்லை, மாறாக அல்லாஹ்வே நேரடியாக சொல்கிறான், என்று நீங்கள் சொன்ன வாதத்தையும் மேலே நான் காட்டிய 43 :64 வசனம் மறுக்கிறது.

அது கியாத் நாளின் அடையாளம், என்னை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொன்னான் என்றால், அதை சொல்லி விட்டு அல்லாஹ்வே என் இறைவனும் உங்கள் இறைவனுமாவான் என்று இந்த வசனத்தில் அல்லாஹ்வே சொல்வானா?
இதில் பொருளிருக்கிறதா?
இதை யார் தான் சொல்லியிருப்பார் ? நபி தான் சொல்ல முடியும். 43 :61 வசனத்தில் "குல்" என்பது இல்லை என்பதால் அதை நபி சொல்லவில்லை, அல்லாஹ்வே நேரடியாக சொல்வதாக புரிய வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், 43 :64 வசனத்திலும் கூட குல் என்பது இல்லை தான். ஆகவே இதையும் அல்லாஹ்வே நேரடியாக சொல்கிறான் என்று தான் புரிவீர்களா?
இதன் அடிப்படையில் சிந்தித்தாலும் நீங்கள் வைக்கும் வாதம் தவறு என்று ஆகி விடுகிறது.

ஆக, மேலே நான் எடுத்து வைத்துள்ள வாதங்களை ஒவ்வொன்றாக சிந்தித்தாலேயே, அந்த வசனம் குர் ஆனை சொல்லியிருக்க வாய்ப்பேயில்லை என்பதையும், ஈசா நபியை பற்றி சொல்வது தான் பொருத்தமாகவும் பொருளுள்ளதாகவும் இருக்கிறது என்பதையும் யாரும் அறிந்து கொள்வார்கள்.

மேலும், இன்னொரு வாதத்தையும் இவர்கள் முன்வைக்கின்றனர்.

அந்த வசனத்தில் இல்ம் என்கிற வார்த்தை தான் இருக்கிறது. இல்ம் என்றால் அறிவு என்று தான் பொருள், அடையாளம் அல்லது அத்தாட்சி என்று பொருள் செய்ய முடியாது. குர் ஆனில், இல்ம் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்ட்ட‌ இடங்களில் எல்லாம் அறிவு என்று தான் மொழியாக்கம் செய்திருக்கிறோம், அடையாளம் என்று பொருள் செய்யும் எந்த இடத்திலும் இல்ம் என்கிற சொல் இல்லை, அடையாளம் என்பதை குறிக்க அல்லாஹ் குர் ஆன் முழுவதிலும் ஆயத் என்கிற சொல்லை தான் பயன்படுத்துகிறான். எனவே இந்த வசனத்திலும் குர் ஆனில் கியாமத் நாளைப் பற்றிய இல்ம் அதாவது அறிவு இருக்கிறது என்று தான் பொருள் செய்ய வேண்டும்..

என்றொரு வாதத்தை முன்வைக்கின்றனர்.

இதுவும் தவறான வாதமே. மொழியாக்கத்தை மட்டும் வாசித்து வாதம் புரிவதால் தான் இந்த நிலைமையும் ஏற்படுகிறது.

இல்ம் என்று அல்லாஹ் பயன்படுத்துவது அறிவு என்பதற்கு மட்டுமல்ல. அடையாளம் என்பதற்கும் இல்ம் என்கிற குர் ஆனில் பயன்படுத்தட்ட்டு தான் இருக்கிறது.

உங்களில் தியாகம் புரிந்தோரை அல்லாஹ் அடையாளம் காட்டாமலும், பொறுமையாளர்களை அடையாளம் காட்டாமலும் நீங்கள் சொர்க்கத்தில் நுழையலாம் என்று நினைக்கிறீர்களா? (3:142)

இங்கே அல்லாஹ் அடையாளம் காட்டாமலும்.. என்று சொல்வதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை இல்ம் தான்.

உங்களில் தியாகம் செய்தோரை யும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம். (47:31)

இதிலும் அடையாளம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் பயன்படுத்தட்டிருக்கும் சொல் இல்ம்.

உங்களுக்கு (போரில்) ஒரு காயம் ஏற்பட்டால் அந்தக் கூட்டத்திற்கும் அது போன்ற காயம் ஏற்பட்டிருக்கிறது. காலத்தை மக்களிடையே நாம் சுழல விடுகிறோம். நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அடையாளம் காட்டவும், உங்களில் உயிர் தியாகிகளை ஏற்படுத்தவுமே (இவ்வாறு துன்பத்தைத் தருகிறான்). அநீதி இழைத் தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். (3:140)

இங்கேயும் அடையாளம் என்று நாம் மொழியாக்கம் செய்திருக்கும் இடத்தில் அல்லாஹ் பயன்படுத்தியிருக்கும் சொல் இல்ம்.

இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட நாளில் உங்களுக்கு ஏற்பட்டது, அல்லாஹ்வின் விருப்பப்படியே நிகழ்ந்தது. நம்பிக்கை கொண்டோரை அடையாளம் காட்டவும், நயவஞ்சகர்களை அடையாளம் காட்டவுமே (இது நிகழ்ந்தது.) ' (3:166)

இங்கேயும் அடையாளம் என்று நாம் மொழியாக்கம் செய்திருக்கும் இடத்தில் அல்லாஹ் பயன்படுத்தியிருக்கும் சொல் இல்ம்.

நம்பிக்கை கொண்டோரே! 'தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுப வருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (5:94)

இதிலும் அடையாளம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் பயன்படுத்தட்டிருக்கும் சொல் இல்ம்.

எனவே, அடையாளம் என்று நாம் மொழியாக்கம் செய்ய வேண்டுமானால் அங்கே ஆயத் என்கிற சொல் மட்டும் தான் இருக்க வேண்டும், இல்ம் என்கிற சொல் இருக்கக்கூடாது என்கிற வாதம் தவறு.

இல்ம் என்பதற்கு அறிவது, அடையாளப்படுத்துவது என பல அர்த்தங்கள் உண்டு.
எனவே, இதன் காரணமாகவும் குர் ஆன் தான் அடையாளம் என்று வாதம் வைக்க முடியாது.

தவிர, நான் ஏற்கனவே சொன்னது போல், குர் ஆனில் கியாமத் நாளை பற்றிய அறிவு இருக்கிறது என்பது தான் சரியான மொழியாக்கம் என்றால், தொடர்ந்து, இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ் சொல்ல மாட்டான்.

ஏனெனில், குர் ஆனில் கியாமத் நாள் பற்றிய செய்தி இருக்கிறது என்பது ஊரறிந்த விஷயம் தான். காஃபிர்களும், குர் ஆனில் அப்படி செய்தி இருக்கிறது என்பதை மறுக்கவில்லை.

எனவே, குர் ஆனில் கியாமத் நாளை பற்றி உள்ளது, இதில் சந்தேகம் கொள்ளாதே.. என்று அல்லாஹ் சொல்வதாக சொல்வது அர்த்தமற்றதாக ஆகி விடுகிறது.

அந்த வசனத் தொடரை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.

மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் (ஏளனமாகக்) கூச்சலிட்டனர்.

'எங்கள் கடவுள்கள் சிறந்தவர் களா? அல்லது அவரா?' என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!

நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியிருப்போம்.

அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப் படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர் வழி'

ஷைத்தான் உங்களைத் தடுத்து விட வேண்டாம். அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது 'ஞானத்தை உங் களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!' எனக் கூறினார்.

என்று போகிறது அந்த வசன தொடர். இதில் அல்லாஹ் மலக்குகளை பற்றி எதற்கு சொல்கிறான்? ஈசா நபியை நபி என்று நம்பாமல் கடவுளாக ஆக்கியவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்க்குரியவர்கள், அல்லாஹ் ஈஸாவை இஸ்ராயீல் மக்களுக்கு முன்னுதாரணமாக ஆக்கினான். அவர் நபியை தவிர வேறில்லை. அப்படி நம்பாமல் அவரை கடவுளாக ஆக்கிய கூட்டத்தாரை அல்லாஹ் நினைத்தால் அழித்து விட்டு மலக்குகளை கொண்டு வந்திருப்பான் ! அவர் கியாமத் நாளின் அடையாளம். இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். இதிலிருந்து ஷைத்தான் உங்களை தடுத்து விட வேண்டாம், ஈசா தெளிவான சான்றுகளை கொண்டு வந்தார் !!!

அடுத்தடுத்த வசனங்களில், ஈசா நபியை கடவுளாக நம்பியவர்கள் மறுமை நாளில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சேர்த்தே அல்லாஹ் சொல்லும் போது, ஈசா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று சொல்வது பொருந்தி போகிறது.

ஈஸா நபி தான் கியாமத் நாளின் அடையாளம் என்பது எள்ளளவுக்கும் சந்தேகமின்றி நிரூபமணாகிறது.

ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கான அடுத்தடுத்த சான்றுகள் தொடரும்.. இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக