வியாழன், 17 ஜூலை, 2014

அம்மா மருந்தகம்


நாட்டில் நடைபெறும் பெரும் பெரும் ஊழல்களில் மருத்துவத் துறையில் நடைபெறும் முறைகேடுகள் சொல்லி மாளாதவை.

செத்துப் போய் விட்ட பிணத்தை வைத்துக்கொண்டு உயிருக்கு போராடுவதாய் நாடகமாடி வேதனையின் உச்சத்தில் இருக்கும் அந்த குடும்பத்தாரிடமிருந்து ஈவு இரக்கமின்றி பணம் பறிப்பது ஒரு பக்கமென்றால்,

போலியாக மருந்துகள் தயாரித்து மக்கள் உயிருக்கே உலை வைப்பது இன்னொரு பக்கம்..

முறையாக கற்று தேர்வு பெறாமல் போலி ஆவணங்கள் மூலம் டாக்டர் தொழில் செய்யும் போலிகள் ஒரு பக்கமென்றால்.

பணத்துக்காக, அவசியமேயில்லாமல் அறுவை சிகிட்சை செய்தல், இரத்தம் திருடுதல், கிட்னி திருடுதல் என கொள்ளையர்களின் கூடாரமாக மாறி நிற்கும் மருத்துவமனைகள் மறு பக்கம்..

எந்த துறையில் ஊழலும் முறைகேடுகளும் நடைபெறற்றால் கூட பொறுத்துக்கொள்ளும் மனம், உயிர் காக்கும் மருத்துவத் துறையிலேயே அது நடைபெற்றால் நிச்சயம் பொறுக்காது.

அந்த பாவம் அவர்களை சும்மாவும் விடாது.

மக்களின் அடிப்படை தேவையான மருந்துத் துறையை இன்று அரசே கையில் எடுத்திருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய திட்டம்.

வணிக நோக்கில் செயல்படக்கூடிய வியாபாரமாக இல்லாமல்
நிஜமாகவே இது குறைந்த விலையில் உயிர் காக்கும் திட்டமாக சமூகத்தில் அடையாளம் காணப்படுமேயானால் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக