ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஓணம் - வரலாறு என்ன ?



ஓணம் பண்டிகையை ஏதோ அது ஒரு மத சார்பற்ற பண்டிகை போலவும், மத பேதமின்றி மலையாளிகள் அனைவரும் கொண்டாடக்கூடிய ஒரு மாநில விழா போலவும் பள்ளிக்கூட பாடங்கள் தொட்டு போதிக்கப்பட்டு வருகின்றது.

சில சிந்தனையற்ற மலையாள முஸ்லிம்களும் இந்த ஓணத்தின் வரலாறை அறிந்து கொள்ளாமல், இது ஏதோ தங்கள் இனத்தின் விழாவாக எண்ணி கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஆனால், இது முழுக்க முழுக்க இந்துக்களின் மத நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதாகும்.

குலசேகர வம்சத்தை சேர்ந்த மகாபலி பெருமாள் என்கிற ஒரு அரசன் கேரளா சமஸ்தானத்தை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு ஆண்டு வந்ததாகவும், நாட்டை செம்மையாக ஆட்சி செய்த அவனுக்கு இந்துக்கள் வணங்கும் பிரம்மா என்கிற கடவுள் பல அற்புத சக்திகளை அருளியதாகவும் ஹிந்துக்கள் வேதங்களில் ஒன்றாக நம்பும் பாகவத புராணாவில் எழுதி வைத்துள்ளனர். 

இந்த அற்புத சக்திகளை பெற்ற மகாபலி, இந்த பூமிக்கு அரசனானது மட்டுமின்றி, வானுலகில் இருக்கும் கடவுல்களையெல்லாம் போரில் சந்தித்து அவர்களை தோற்கடித்து இந்திரலோகதிற்கும் அரசனாக ஆகி (அதாவது ruler of three worlds) அசைக்க முடியாத பெரும் சக்தியாக திகழ்ந்தானாம். 

மகாபலியின் அசுர வளர்ச்சியை கண்டு பயமுற்ற குட்டி தெய்வங்கள், பெரிய தெய்வமான விஷ்ணுவிடம் உதவி கேட்டு சென்றனர் எனவும், மகாபலியின் சக்தியை வீழ்த்துவதற்காக, விஷ்ணு, வாமணனின் அவதாரம் எடுத்து மகாபலியிடம் வரம் கேட்டு வந்தார் என்றும்  மூன்று கால் தடங்கள் மூலம் பெரும் நிலப்பரப்பை தன் வசம் எடுத்துக்கொள்ளும் வரத்தை வாமனனுக்கு மகாபலி கொடுத்தாகவும் நம்புகிறார்கள். 

இரண்டு கால் தடங்களிலேயே பூமி, ஆகாயம் என மொத்த லோகத்தையும் வாமனன் அடக்கி விட்டதால், கருணையே வடிவான மகாபலி, கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு, மூன்றாவது காலை தனது தலை மீது வைத்துக்கொள்ள வாமணனிடம் சொன்னாராம்.
ஆயினும், தனது சக்திகள் அனைத்தும் அழிந்தாலும் பரவாயில்லை, கொடுத்த வாக்கு முக்கியம் என்று கருதிய மகாபலியை கண்டு உள்ளம் நெகிழ்ந்த வாமனன் (விஷ்ணு), தேவலோகத்தின் பொறுப்பை மகாபலியிடமே ஒப்படைத்தாகவும், 

இருப்பினும், இந்த பூமியில் வசிப்பதே தமக்கு விருப்பமான காரியம் என்று சொன்ன மகாபலி, ஆண்டுக்கு ஒரு முறையேனும் பூமிக்கு சென்று தனது ராஜ்ஜிய மக்களை காண அனுமதிக்க வேண்டும் என்று விஷ்ணுவிடம் கேட்க, விஷ்ணுவும் அதற்கு சம்மதித்தார் என்று.. இப்படி செல்கிறது கதை..

இது தான் மகாபலியின் சுருக்கமான வரலாறு.. இதன் படி ஒவ்வொரு வருடமும் தனது குடிமக்கள் அனுஷ்டிக்கும் சிங்கம் மாதத்தில் மகாபலி ராஜா வானுலகிலிருந்து கடவுள் (?) விஷ்ணுவின் அனுமதி பெற்று கேரளாவிற்கு விஜயம் செய்கிறாராம்.

அவ்வாறு வருகை தரும் மகாபலியை வரவேற்பது தான் இன்று இவர்கள் கொண்டாடும் ஓணப்பண்டிகை !

அத்துடன், மகாபலிக்கு இத்தகைய அந்தஸ்தை அளித்த வாமன கடவுளை வணங்குவதும் இந்த பண்டிகையின் நோக்கங்களில் ஒன்றாகும்.

முழுக்க முழுக்க ஹிந்து மத நம்பிக்கையுடன் பிணைக்கப்பட்ட புராணங்களையும் இதிகாச நூல்களையும் வைத்து கற்பனைகளை வரலாறுகளாக எழுதி வைத்துக்கொண்டு, இந்துக்கள் கொண்டாடுகிற ஒரு பண்டிகை எப்படி மத சார்பற்ற பண்டிகையாக கருதப்படும்?

இதையும் வெட்கமின்றி கொண்டாடும் முஸ்லிம் பெயர்தாங்கிகளும் இருக்கிறார்கள் என்றால் குர்ஆன் ஹதீஸ் என இறை வார்த்தைகளை நாம் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக்கொள்வதில் என்ன பயன் ?

யார் மாற்று மதத்தினருக்கு ஒப்பாக நடக்கிறார்களோ அவரும் அவர்களை சார்ந்தவர்களே.. என்ற நபி மொழிப்படி, ஓணம் பண்டிகையை கொண்டாடும் முஸ்லிம்கள், இறைவனின் பார்வையில் முஸ்லிம்களேல்ல ! 

வரலாற்றை அறிவோம், ஈமானை பாதுகாப்போம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக