ஞாயிறு, 15 ஜூலை, 2012

இதுவெல்லாம் ஒரு பிழைப்பா?


ஸலாம்.

கிறிஸ்தவர்களுடன் விவாதம் செய்து இஸ்லாத்தை மேன்மையடைய செய்த செயலை பாராட்ட மனமில்லாதவர்கள், வாய் மூடி மெளனமாக இருந்திருந்தால் அவர்கள் கண்ணியம் காக்கப்பட்டிருக்கும். .
ஆனால், இஸ்லாத்தை உண்மைப்படுதுவதற்காக செய்யப்பட்ட விவாதத்தை , சகோதரத்துவத்தை சீரழிக்கும் செயல் என்று விமர்சனம் செய்கிறார்கள் என்றால் இவர்களை போன்ற நயவஞ்சகப்பிறவிகளை வாழ்நாளில் யாராவது பார்த்திருக்கிறீர்களா? நபி (ஸல்) அவர்கள் காலத்தில், வாழ்ந்த  முனாபிக்குகள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் இவர்களுக்கும் எள்ளளவும் வேறுபாடு உள்ளதா? என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

அட வெட்கமில்லாதவர்களே, ஏன்? இன்னும் முஸ்லிம் என்று உங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்? பேசாமல், சிலுவையை கழுத்தில் தொங்கப்போட்டு கொண்டு ஆலயம் சென்று விடுங்களேன்..

கிறிஸ்தவர்களுடன் விவாதித்து, அவர்களது பைபிளில் உள்ள தவறுகளை எடுத்து சொல்வது சகோதர சீர்கேடு என்றால், அல்லாஹ் குர் ஆனில் ஏராளமான இடங்களில், மர்யமின் மகனை கடவுளாக்கியவர்களுக்கு நாசம் என்கிறானே, ஈஸாவை கடவுளாக்கியவர்கள் அறிவீலர்கள் என்கிறானே, அவர்கள் செல்லும் இடம் நரகம் என்கிறானே, இதற்கும் நோட்டீஸ் அடித்து, முஸ்லிம் - கிறிஸ்தவ சகோதரத்துவத்தை உடைக்கும் வகையில் குர் ஆன் பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு என்று நோட்டீஸ் அடிக்க வேண்டியது தானே ? அட தூ..வெட்கங்கெட்டவர்களே !! இதுவெல்லாம் ஒரு பிழைப்பா?
  
சகோதரர்கள் இது போன்ற நயவஞ்சகர்களையும் சமுதாய புல்லுருவிகளையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இவர்கள் மொத்தம் பத்து பேர் - இணைப்பை காண்க.. 



10.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக