வெள்ளி, 21 ஜனவரி, 2011

இவரை அறிந்து கொள்ளுங்கள்




அஸ்ஸலாமு அலைக்கும்..

((சிராஜ் அவர்கள் பிஜே உடன் விவாதம் செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளதால், உண்மையில் அவர் விவாதம் செய்ய முனையும் பட்சத்தில்,அதற்கு முன் இங்கு சில செய்திகளை பதிக்க வேண்டியுள்ளது.))

அந்த வகையில், என்னிடம் சத்தியம் செய்ய சொன்னது தொடர்பாக அவருக்கும், அவருக்கு ஒத்து ஊதுபவர்களுக்கும் இதை பதிவு செய்கிறேன்,..


அவர் கேட்டபடி நாம் ஏற்கனவே சத்தியம் செய்து விட்டதையும், நான் கேட்டபடி அவர் இதுவரை சத்தியம் செய்யாமலிருப்பதையும் சத்தியத்தில் மோசடி செய்வது யார்? என்ற தலைப்பில் தெளிவாக விளக்கி விட்டேன்.

அதில் வேண்டுமென்றே, எனது அறிவுக்குட்பட்டு எதையும் நாம் செய்யவில்லை என்பதற்கு நான் சத்தியம் செய்ததையும், அதே நேரம், வேண்டுமென்றே பொய் சொல்லவில்லை, ஹதீஸ்களை மறுக்கவில்லை என்று கூட சிராஜ் அவர்களால் சத்தியம் செய்ய இயலவில்லை என்பதையும் தெளிவாக விளக்கினேன்.

இப்போது, என்னை சத்தியம் செய்ய இவர் சொல்லியதன் நோக்கம் என்ன? என்பதையும் இங்கு நீங்கள் அறிய வேண்டும்.

அதாவது விவாதத்தின் துவக்கிலிருந்தே பிறையை கண்ணால் பார்க்க தான் வேண்டும் என்பதற்கும், கணக்கிட கூடாது என்பதற்கும் அடுக்கடுக்காக பல ஹதீஸ்களை நான் வைத்த வண்ணம் இருந்தேன்.

அனைத்து ஹதீஸ்களும் நேரடியான ஆதாரங்களை கொண்டவை என்பதால் அவைகளுக்கு எந்த மறுப்பையும் அவரால் தர இயலாது என்ற நிலையில், எந்த ஒன்றுக்கும் பதில் சொல்லாமல், நான் வைத்த ஹதீஸ்களில் அந்த வார்த்தை இல்லை, இந்த வார்த்தை இல்லை, தமிழாக்கம் முழுமையாக இல்லை, தலைப்புகள் ஒரே இடத்தில் இல்லை, வேறு வேறு இடங்களில் பிரிக்கிறீர்கள் என்று, நமது கேள்விக்கும், தலைப்புக்கும் சம்மந்தமில்லாமல் எதிர்க்கருத்து மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார் சிராஜ்.

தலைப்புகளை பிரிக்கிறேன் என்பது உங்கள் குற்றச்சாட்டு என்றால், இதோ, அனைத்து ஹதீஸ்களையும் ஒரே தலைப்பில் பதித்து விட்டேன், இதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டோம். பதில் இல்லை!!.

நான் சொல்வதில் எந்த வார்த்தை இல்லை? அந்த வார்த்தைக்கு பதிலாக வேறென்ன வார்த்தை இருக்கிறது? அதனால் நான் ஹதீசுக்கு சொல்லும் விளக்கம் எந்த விதத்தில் தவறாகி போகிறது என்பதை நீங்களாவது விளக்குங்களேன், என்று நாம் கேட்டோம்..
நீங்கள் இன்று வரை நடந்த விவாத மெயில்கள் அனைத்தையும் தேடி பார்த்தாலும், இதை இவர் சொல்லியிருக்கவே மாட்டார்.

மாறாக, நாஷித் சொன்னதில் அந்த வார்த்தை இல்லை, இந்த வார்த்தை இல்லை!.. இதுவே இவரது கூப்பாடாக இருந்தது.

(இவர் என்ன வார்த்தை எல்லாம் இல்லை என்று சொன்னாரோ, அதன் மூலம் என்ன கருத்தையெல்லாம் மறுத்து வந்தாரோ, அவை அனைத்தும் "பிறை பார்த்தல் - ஒரு ஆய்வு", என்ற அவர்களது ஆதரு பெற்ற நூலில் ஒரு சேர இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி கேட்டோம், என்பது கூடுதல் தகவல்)


ஹதீஸ் குறித்த தனது விளக்கத்தை யாரும் கேட்கக்கூடாது என்பதற்காகவும் , தவறு அனைத்தும் என் பக்கம் தான் என்பதை போல் பிறர் அறிய வேண்டும் என்பதற்காகவும், "ஹதீஸ்களை நீங்கள் திரிக்கவோ, வார்த்தைகளை வெட்டவோ சேர்கவோ இல்லை என்றும், சுய விளக்கத்தை கொடுக்கவில்லை என்றும் சத்தியம் செய்ய தயாரா? என்று என்னை நோக்கி சவால் விட்டார்.

அதை ஏற்று, நாம் சத்தியம் செய்து விட்டோம்.

இப்போது இவரது கடமை என்னவாக இருக்க வேண்டும்?

இதோ பாருங்கள்.. நாஷித், எந்த ஹதீஸ்களையும் வெட்டாமல், சுய விளக்கம் கொடுக்காமல் பதித்திருக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

இதோ நான் ஒவ்வொரு ஹதீசையும் விளக்குகிறேன் பாருங்கள்.. என்று கூறி,

  • நான் வைத்த ஒன்பது ஹதீஸ்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றுக்கும், தான் அறிந்துள்ள தமிழாக்கம் என்ன என்பதை இங்கு விளக்க வேண்டுமா இலையா?

  • எனது தமிழக்கதிற்கும் அவர் கூறும் தமிழாக்கதிற்கும் உள்ள வேறுபாட்டை அனைவருக்கும் அறிய தர வேண்டுமா இல்லையா?

  • அதன் மூலம், நான் அந்த ஹதீஸ்களுக்கு கொடுத்துள்ள விளக்கம் என்ன என்பதையும், அவர் அந்த ஹதீஸ்களுக்கு கொடுக்க கூடிய விளக்கம் என்ன என்பதையும் இங்கு பிரித்துக்காட்ட வேண்டுமா இல்லையா?

  • அதன் மூலம், நாஷிதின் விளக்கம் தவறு, இதோ எனது விளக்கம் தான் சரி, என்று நிலைநாட்ட வேண்டுமா இல்லையா?

  • பிறையை ஒவ்வொரு மாதமும் பார்த்து தான் தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக நான் வைத்த அந்த ஒன்பது ஆதாரங்களையும் இதன் மூலம் மறுத்து, நாஷித் கொடுத்த விளக்கங்கள் இந்த கொள்கையை நிலைநாட்ட உதவாது என்பதை நிரூபிக்க வேண்டுமா இல்லையா?

மேலே உள்ள எதையாவது இவர் செய்தாரா?

ஒரு கொள்கையை நிலைநாட்டக்கூடியவர், அல்லது இன்னொரு கொள்கையை மறுக்கக்கூடியவர் செய்ய வேண்டியது இதுதானே?

அதை செய்யாமல், வார்த்தை ஜாலம் செய்து கொண்டிருந்தவரை,
  • பிறை விஷயத்தில், எந்த ஹதீஸுக்கும் நான் வேண்டுமென்றே ஹதீஸில் இல்லாத விளக்கத்தை கொடுக்கவில்லை.
  • எந்த ஹதீசையும், அது தரும் சட்டத்தையும் நான் வேண்டுமென்றே மறுக்கவில்லை.
  • நாஷிதின் எந்த கருத்துக்கு பதில் சொல்லும் போதும் , எந்த விஷயத்திலும் வேண்டுமென்றே நான் பொய் சொல்லவில்லை

என்பதை இங்கு இறைவன் மீதாணையாக சிராஜ் சொல்ல வேண்டும்.


என்று சத்தியம் செய்ய சொல்லி கேட்டோமே, அதையாவது அவர் செய்தாரா?

அதையும் செய்யவில்லை..

தன் வாதத்தை நிரூபிக்கவும் செய்யாமல், அவரது கொள்கைக்கு எதிரான ஹதீஸ்களுக்குரிய பதிலையும் சொல்ல இயலாமல், நாம் கேட்டபடி சத்தியமும் செய்யாமல், உலா வந்து கொண்டிருக்கும் நபர் தான் இந்த ஏர்வாடி சிராஜ்..

இதையும் சகோதரர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த செய்தி!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக