ஞாயிறு, 15 ஜூலை, 2012

மறைவானவை நபிக்கு தெரியாது!


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிந்திருக்கவில்லை என்பதற்கு சான்றாக கீழ்காணும் இறை வசனங்கள் உள்ளன.

நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
7 :188

'அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறி வேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக! 'குருடனும், பார்வையுடைய வனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக! (6 :50 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக