சனி, 21 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : பிரதமர் கனவில் ஜெயலலிதா


எந்த கட்சிக்கும் இம்முறை தனிப் பெரும்பான்மை கிடைக்காது என காங்கிரஸ் கட்சியே கூறி விட்ட நிலையில், அரசியல் சாணக்கியத்துடன் கூட்டணி அமைக்க மாநில கட்சிகள் முன் வந்து, வலிமையான மூன்றாம் அணி அமைப்பது ஏறக்குறைய‌ உறுதியாகி விட்டது.

கடந்த எந்த தேர்தலை போலும் அல்லாமல் இம்முறை தமிழக அளவில் இரு தேசிய கட்சிகளும் நட்டாற்றில் விடபட வாய்ப்புகள் உள்ள நிலையில், மூன்றாம் அணி டில்லி செங்கோட்டையை பிடிக்க வாய்ப்புகள் அதிகமுள்ளன என்கிற ஊடகங்களின் கணிப்புகளில் உண்மை உள்ளது !

40 எம்பிக்களை ஒரு கட்சி சொந்தமாக்கி கொள்ளும் பட்சத்தில், ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக அது திகழ தற்போது சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன.

ஜெயலலிதாவை பிரதமராக்குவதற்கு எவருக்கும் தயக்கமில்லை.

ஏற்கனவே முஸ்லிம்களுக்கு அமலிலுள்ள 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தி தரும் பட்சத்தில், ஜெயலலிதா இம்முறை டில்லி செங்கோட்டையை பிடிப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமே !!

அதே சமயம், வாய்ப்பிருந்தும் தர மறுக்கும் பட்சத்தில், வேண்டுமென்றே முஸ்லிம் சமூகத்தை அவர் புறக்கணித்தார் என்று தான் எடுத்துக் கொள்வோம்.
புறக்கணிப்பையும் வஞ்சனைகளையும் இனியும் இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது.
அப்படியொரு நிலை உருவாகுமானால், அதிமுகவின் பிரதமர் கனவுக்கு வேட்டு வைக்கும் சக்தியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திகழும், இறைவன் நாடினால்.. !

இன்னும் 3 மாதங்கள் அவகாசம் உள்ளன.. The ball is in your court, Jeyalalithaa Madam !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக