திங்கள், 2 டிசம்பர், 2013

பால்குடி உறவும் மடமையும்


தாய் - பிள்ளை உறவு ஏற்பட

தாயின் மார்பில் வாய் வைத்து உறிஞ்சிக் குடிக்க வேண்டும்
அதுவும் வயிறார (பசி தீரும் அளவு) குடிக்க வேண்டும்
அது கூட இரண்டு வயது வரை தான் இருக்க வேண்டும்,

என்றெல்லாம் பல நிபந்தனைகளை அல்லாஹ் இட்டுள்ள போது

20 வயதை கடந்த வாலிபர் ஒரு பெண்ணிடம் பால் குடித்து மகனாக போகிறேன் என்று சொன்னால் அதை விடவும் ஒரு ஆபாசம், வக்கிரம் இருக்க முடியாது. இப்படியாக எந்த செய்தி இருந்தாலும் அதை நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் !

வாய் வைத்து குடிக்கவில்லை, கறந்து தான் குடிப்பார் என்று சொல்லும்படியான எந்த வார்த்தையும் அந்த செய்தியில் இல்லை என்பது ஒரு புறமிருக்க, கறந்து குடிப்பதினால் தாய் பிள்ளை உறவு ஏற்படாது என்று அல்லாஹ் சொல்லியிருக்கும் போது, கறந்து குடித்து பிள்ளை ஆகிக் கொள்வார் என்கிற கூற்று இங்கு பொருளற்றதாகிறது.

இது ஒரு புறமிருக்க, இன்று Nipple feeder போன்ற உபகரணங்கள் மூலம் குழந்தைக்கு தாய், பால் ஊட்டுகிறாளே, அப்படியானால் அது தாய் - பிள்ளை இல்லை என்று சொல்வீர்களா ? என்கிற மடமை கேள்வியொன்று தற்போது பரப்பப்படுகிறது.

கறந்து குடித்தால் தாய் பிள்ளை உறவு ஏற்படாது என்று நாம் சொல்வதே பிறப்பால் தாய் பிள்ளை உறவை அடையாதவர்களை பற்றி தான்.

பிறப்பால் தாய் பிள்ளை உறவை அடைந்தவர்கள், கறந்து குடித்தாலும் வாய் வைத்து குடித்தாலும் தாய் - பிள்ளை தான்.

அதே சமயம், பிறப்பால் தாய் பிள்ளை உறவை அடையாதவர்களுக்குரிய சட்டமானது, வாய் வைத்து குடித்தால் தாய் - பிள்ளை உறவை அடைவார்கள் (2 வருடம், பசி தீர குடித்தல் ஆகிய விதியையும் சேர்த்து )
கறந்து குடித்தால் அந்த உறவை அடைய மாட்டார்கள் !

இந்த சாதரண வேறுபாடு குறித்த ஞானமில்லாததால் தான் மடமைகள் உருவாகின்றன !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக