வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி - பாகம் 1


By TNTJ

ஓடி ஒளியும் மூளை வரண்ட ஹிஜ்ரா கமிட்டியினருக்கு பகிரங்க அறைகூவல்! (பாகம் 1)

பகிரங்க விவாதத்திற்கு தயாரா என நாம் அழைத்தால் பல வருடங்களாக நம்மைக்கண்டு சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் கழுதைகளைப்போல ஓட்டமெடுத்து வரும் ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வருடந்தோறும் நடக்கும் திருவிழாக்களின் போது கடை விரித்தால் வியாபாரம் போணி ஆகும் என்று மிட்டாய்கடைக்காரர் எண்ணுவது போல், ஹிஜ்ரா கமிட்டி என்கிற பெயரில் பிறை வியாபாரம் செய்யும் ஒரு கூட்டம், ஒவ்வொரு வருடமும் ரமலானுக்கும் துல் ஹஜ்ஜுக்குமிடையே தங்கள் "கடையை" விரித்து வாடிக்கையாளர்களைக் கவர முடியுமா என்று முயற்சி செய்து வருவது வழமையாகி வருகிறது.

தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகம், இவர்கள் கருதுவது போல் சிந்திக்காத கூட்டமாக இருந்திருந்தால் இவர்களது "வியாபாரமும்" போணி ஆகியிருக்கும் தான்.
ஆனால்,எந்த மார்க்க மசாயில்களையும் சுயசிந்தனை செய்து, ஆய்வுகளிலும் விவாதங்களிலும் ஈடுபட்டு, உள்ளச்சத்துடன் பின்பற்றுகின்ற சமூகமாக இந்தச் சமூகம் மாறிவிட்ட பிறகு, இது போன்ற "பகட்டு" வியாபாரங்களுக்கு இடமில்லாமல் போனது.

மார்க்க விஷயங்களில் நபி (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்ட முஸ்லிம்கள் மத்தியில் பிறையைப் பார்த்து மாதங்களைத் தீர்மானிக்கும் செயலும் மார்க்க விஷயமே என்கிற கருத்து உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துள்ளது.

இந்த அடிப்படையை மக்கள் மனதிலிருந்து நீக்காமல் இது போன்ற குழப்பவாதி கூட்டங்கள் என்னதான் கணிப்பு, விஞ்ஞானம் என்று பேசினாலும், அடிப்படையை உள்ளத்தில் சரியாக அமர்த்திக் கொண்ட மக்கள் மத்தியில் அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

விவாதத்தில் இருந்து ஓடி ஒளியும் கூட்டம்:

தர்காவாதிகள், தரீக்காவாதிகள், கிறித்தவர்கள், ஏன், காதியானிகள் கூட தங்கள் கொள்கைதான் சரியானது என்கிற குருட்டு நம்பிக்கையில் நம்முடன் நேருக்கு நேராக விவாதிக்க முன் வந்து விட்ட நிலையில் இந்த விஞ்ஞான பிறைக் கூட்டமானது அன்று முதல் இன்று வரை விவாதத்திற்கு முன்வராமல் ஓடி ஒளிவதிலேயே குறியாய் இருந்து வருகிறது.

இவர்களுக்கென்று எந்த ஒரு நிலையான கொள்கையும் ஒருகாலத்திலும் இருந்ததில்லை என்பதை இவர்களே உணர்ந்துள்ள காரணத்தால் இவர்களால் விவாதத்தில் பங்கு கொள்ள இயலாது.

விவாதங்கள் மூலம் மக்களைக் கவர வேண்டுமென்றால் சஹாபியை சஹாபி இல்லை என்று மறுப்பார்கள், ஹதீஸை ஹதீஸ் இல்லை என்று கூறி மறுப்பார்கள், எழுத்து மூலமான மின்னஞ்சல் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டே விவாதித்து தான் சத்தியத்தை அறிய வேண்டுமோ?? என்று கேள்வி எழுப்புவார்கள்.

இவ்வாறு, தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எத்தகைய பொய்யையும் துணிந்து சொல்வார்கள் இந்த ஹிஜ்ரா கூட்டத்தார். மேலும் விவாத அழைப்புகளிலிருந்து ஓட்டமெடுப்பதும் இவர்களுக்கு வழக்கம்.

இவர்களின் வாதங்களுக்கு வரிக்கு வரி மறுப்பு சொல்வதற்கு முன்னால் இவர்கள் விவாத சவடால் விட்டு ஒட்டம் எடுத்த வரலாறை முதலில் முன்வைக்கிறோம்.

சர்வதேசப் பிறை என்று இவர்கள் உளறுவதை எதிர்த்து பல கேள்விகளை தவ்ஹீத் சகோதரர்கள் எழுப்பினார்கள்.
உங்கள் வாதம் அபத்தமானது. பொய்யானது ஆதாரமற்றது என்று நம் சகோதரர்கள் கேள்வியால் துளைத்த போது அதற்கான பதிலை அவர்களின் இணைய தளத்தில் தந்திருக்க வேண்டுமல்லவா?
ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல இயலாத இவர்கள் பின்வரும் பதிலைத் தந்தார்கள்.

கூடிய விரைவில் அனைத்து கருத்துகளையும் பரீசீலித்து அதன் பிறகு முழுமையான பதில் வெளியிடுவோம். இன்ஷாஅல்லாஹ். இப்படிக்கு தள நிர்வாகி July 15, 2010

இவர்கள் என்னதான் பரிசீலித்தாலும் தவ்ஹீத் சகோதரர்களின் கேள்விகளுக்கு இவர்களிடம் பதில் இல்லை என்பது தான் உண்மை. தவ்ஹீத் சகோதரர்களின் கேள்விகள் சரியாகத் தான் உள்ளன. நாங்கள் தான் உளறி விட்டோம் என்று எழுதினால் ஏதோ கொஞ்சமாவது இவர்களுக்கு இறையச்சம் உள்ளது என்பதற்கு அடையாளமாக அதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

மக்களுக்கு பதில் சொல்லாமல் எப்படி தப்பிக்கலாம் என்று சிந்தித்துப் பார்த்து பின்வரும் பதிலை அளித்தனர்.

பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு!

டி.என்.டி.ஜே யையும் ஜாக் மாநிலத் தலைவரையும், ஏர்வாடி ஜாக் ஒரு சேர பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது. நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத்தயார்.

- ஹிஜ்ரா கமிட்டி - ஜூலை, 2010

தவ்ஹீத் சகோதரர்களின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தப்பிக்க இது போதுமான காரணமாகுமா?

நீங்கள் பீஜேயுடன் விவாதம் நடத்தினால் எங்களுக்கு என்ன? நடத்தாவிட்டால் எங்களுக்கு என்ன? நாங்கள் கேட்ட ஆதாரங்களை எடுத்து வையுங்கள்! எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று மீண்டும் கிடுக்கிப்பிடி போட்டனர் தவ்ஹீத் சகோதரர்கள்.

இந்தக் கூறுகெட்டவர்கள் இதற்கு அளித்த பதில் என்ன? இதோ அந்தப் பதிலைப் பாருங்கள்!


பி.ஜேயும், எஸ்.கே யும் பதிலளித்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி முடித்துக் கொள்கிறோம். எங்கள் இமெயில் முகவரி:admin@jaqh.net (August 14 2010

ஜாக் என்பது தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரான அமைப்பு. பீஜேக்கும் ஜாக்குக்கும் எந்த நட்பும் உறவும் இல்லை. ஆனால் ஹிஜ்ரா கமிட்டி என்பது ஜாக்கின் கள்ளக் குழந்தை. இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியதே ஜாக்கின் அறிவற்ற செயல்பாடுகள் தான்.

பிறை விஷயத்தில் கூட ஜாக்குக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் முரண்பாடு உள்ளது. அப்படி இருக்கும் போது பீஜே போய் ஜாக் தலைவரை அழைத்துக் கொண்டு இவர்களுடன் விவாதிக்க அழைத்து வரவேண்டுமாம்! மூளையுள்ள ஒருவர் இப்படி ஒரு அறைகூவல் விட முடியுமா?

இவர்களின் விவாத அழைப்பு என்பதே ஓடி ஒளிவதற்காக கையாளும் தந்திரம் என்பதால் பீஜே ஆரம்பத்தில் இதைக் கண்டு கொள்ளவில்லை. இரண்டாவதாகவும் அதையே ஹிஜ்ரா கும்பல் கூறியதால் இவர்களை விவாதக் களத்தில் சிக்க வைக்க வேண்டும்; தப்பிக்க விடக்கூடாது என்பதற்காக பீஜெ தனது இணையதளத்தில் பின்வருமாறு அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்.


இந்த அறைகூவலுக்கு பீஜே பின்வருமாறு பதிலளித்து அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

பிறை குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இரு சாராரும் பேசி ஒப்பந்தம் செய்து அதனடிப்படையில் விவாதிக்கத் தயார் என்றால் அதைக் குறிப்பிட்டு தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பட்டும். மேலும் கருத்து வேறுபாடுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க தயார் என்றும் ஒப்புக் கொண்டு கடிதம் எழுதினால் தவ்ஹீத் ஜமாஅத் உடனே அதை ஏற்று ஒப்பந்தம் செய்வதற்கான நாளை அறிவிக்கும்.
மடமையைத் தான் நிபந்தனையாக்கியுள்ளனர். விவாதத்துக்கு அழைப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்; ஆனால் ஓடி ஒளியும் வகையில் அந்த அழைப்பு இருக்க வேண்டும் என்று பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் விவாத அழைப்பு இருந்ததால் தான் இதை நாம் கண்டு கொள்ளவில்லை. கீழ்க்கண்டவாறு அவர்கள் தெளிவு பட எழுதி கடிதம் எழுதினால் உடனே விவாத ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வோம். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே முரண்பாடாகவுள்ள பிறை தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் மேலும் நமக்கிடையே கருத்து வேறுபாடுள்ள பாரதூரமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயார். மேற்கண்டவாறு எழுதி விவாதக் குழுத் தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 30 அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி சென்னை-1 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் எழுதி விவாதத்துக்கு சவடால் விடுவதை மெய்யாக்கட்டும்
அன்புடன் பீ.ஜைனுல் ஆபிதீன் September 20 , 2010

செப்டம்பர் 2010ல் விவாத அழைப்பை பீஜே ஏற்று ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை கடிதம் வரவில்லை. மாறாக அந்தர்பல்டி தான் இதற்குப் பதிலாக வந்தது.

இப்படி பீஜே எழுதியதும் இவர்களின் இணையதளத்துக்கு மக்கள் கேள்விக்கு மேல் கேள்விகளைக் கேட்கலானார்கள்.

நீங்கள் விட்ட விவாத அழைப்பை பீஜே ஏற்றுக் கொண்டாரே? எப்போது கடிதம் அனுப்பி விவாதத்தை நடத்தப் போகிறீர்கள்? என்று அவர்களது ஆதரவாளர்களே அவர்களது இணையதளத்தில் "எப்போ விவாதம்? எப்போ விவாதம்? என இவர்களை நச்சரித்து இவர்களைத் திக்கு முக்காடச் செய்தனர்.

இதற்கு அவர்கள் அவ்வப்போது பதில் அளித்தனர். செப்டம்பர் 20 அன்று அளித்த பதில் இதுதான்:

உங்கள் முயற்சிக்கு நன்றி சகோதரரே. இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் பதில் வெளியாகும். மற்றவை பின் adminjaqh.net <http://jaqh.net/> September 20 2010

கடிதம் எழுத ஏன் தயக்கம்? உடனே பீஜேக்கு கடிதம் எழுதி விவாத அறைகூவலை உண்மைப்படுத்த வேண்டியதுதானே என்று மீண்டும் மக்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர்.

இதற்கு செப்டம்பர் 22 அன்று அளித்த பதில் இதுதான்

இன்ஷாஅல்லாஹ் விரைவில் பதில் எழுதுவோம். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன். இப்படிக்கு நிர்வாகி September 22 2010

மீண்டும் அதே நாளில் மற்றொரு பதிலையும் போட்டனர்

இந்த பதிலில் இவர்களின் ஆதரவாளர்களே திருப்தி அடையாததால் நீண்ட நாள் தள்ளிப்போட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்து செப்டம்பர் 23 அன்று பின்வரும் பதிலைத் தந்தனர்.

பகிரங்க விவாதம் என்பதால் அனைவரின் கருத்துகளையும் பெற்று பரீசீலிக்க வேண்டியது அவசியம் தானே? நாங்கள் ஹஜ் பிரயாணம் மேற்கொள்ள இருப்பதால் ஹஜ்ஜிற்கு பிறகு தான் எங்களால் இன்ஷாஅல்லாஹ் இதில் முழு கவனம் செலுத்த முடியும் என்பதையும் தாங்களின் மேலான கவனத்திற்கு தருகிறேன். எனவே தாங்கள் பொறுத்திருந்து கவனியுங்கள். இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் எங்கள் பதில் வெளிவரும். இப்படிக்கு தள நிர்வாகி September 23 2010

ஹஜ் பயணம் என்ற காரணத்துக்கும் கடிதம் போடுவதற்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. விவாதத்துக்கு வருகிறோம்; ஆனால் ஹஜ் முடிந்த பின்னர் இந்த தேதிக்கு வருகிறோம் என்று பதில் எழுதலாம். அல்லது உடனே கடிதம் எழுதிவிட்டு உடனே ஒப்பந்தம் போட்டு விவாதத்தை ஹஜ்ஜுக்குப் பின் நடத்துவதாக ஒப்பந்தம் செய்ய முடியும். ஓடி ஒளிவது தான் நோக்கம் என்பதால் ஹஜ்ஜின் மீது பழிபோட்டு தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஹஜ் வேலைகள் எல்லாம் முடிந்தவுடன் இதை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்தனர். ஆனால் மக்கள் மீண்டும் நெருக்கடி கொடுக்கலானார்கள்.

2011 ஜனவரி 22 அன்று இதற்கு அளித்த பதிலைப் பாருங்கள்

விவாதம் அல்லாஹ் நாடினால் கூடிய விரைவில் நடைபெறும். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன். இப்படிக்கு நிர்வாகி January 22 , 2011

கடிதம் அனுப்புவோம்; இதோ அனுப்பப்போகிறோம். வேலை நடக்கிறது; ஹஜ் முடிந்ததும் அனுப்பி விடுவோம் என்றெல்லாம் எழுதி வந்தவர்கள் கடைசியாக எழுதிய ஒரு பதிலே இவர்களின் அயோக்கியத்தனத்தை முழுமையாக அம்பலமாக்கியது.

நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடி விவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம்
Hijra Committee (Yervadi) - 29 March, 2011

இந்த அறிவீனர்களை - பொய்யையும் புரட்டையும் துணிந்து சொல்லக் கூடியவர்களை அந்தர் பல்டி அடிக்கக் கூடியவர்களை மார்க்க விஷயத்தில் எந்த அளவுக்கு நம்பலாம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

இவர்களிடம் இணையதளத்தில் கேள்வி கேட்டால் நேரடி விவாதத்தில் பார்த்துக் கொள்வோம் என்பார்கள். நேரடி விவாதத்து அழைத்தால் மின்னஞ்சல் மூலம் விவாதிப்போம் என்பார்கள். இப்படி ஒரு கேடு கெட்ட கும்பலை 72 கூட்டங்களில் எந்தக் கூட்டத்திலாவது நீங்கள் பார்த்திருக்க முடியுமா?

சிறிது காலம் அமைதியாய் கழித்து பின் மக்களின் ஞாபகமறதி மீது அபார நம்பிக்கை கொண்டு, ஆங்காங்கே நோட்டீஸ் வெளியீடு, கருத்தரங்கம் என தங்களது வழக்கமான வியாபாரத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

அந்த வரிசையில், சமீபத்தில் பிறை குறித்த ஆக்கம் என்கிற பெயரில் நம்மை வசை பாடி ஏர்வாடியில் இவர்கள் பரப்பி வந்த நோட்டீஸ் நம் கைகளை எட்டியது.

என்னதான் தாம் கேட்ட கேள்விகளுக்கு எதிர்த் தரப்பினர் தக்க பதில்களைச் சொன்னாலும், புதிதாக வேறு கேள்விகளைக் கேட்பதற்கு ஞானமில்லாத காரணத்தால் பதில் சொல்லப்பட்ட கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்டு வருவது சிலரைப் பீடித்திருக்கும் நோய்.

அத்தகைய நோய் தான் இந்த ஹிஜ்ரா கமிட்டியினரையும் தாக்கியுள்ளது என்பதை இவர்கள் பரப்பி வரும் நோட்டீசைப் படித்தாலே அறிந்து கொள்ளலாம்.

ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு வருவது, அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லப்படவில்லை என்பதால் அல்ல, மாறாக அந்தக் கேள்விகள் தான் இவர்களுக்குத் தெரியும் என்பதால்.

பகிரங்க அறைகூவல் :

இவர்களது இந்த நோட்டீஸ் உட்பட, இத்தனை வருடங்களாக இவர்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இடையே நிலவி வரும் எல்லா கருத்து வேறுபாடுகள் குறித்தும் தெளிவான தீர்வைக் காண தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இவர்களை நேரடி விவாதத்திற்கு முன் வருமாறு இந்த பிரசுரம் மூலமாக பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறது.

எழுத்து விவாதம் என்கிற அறிவுக்குப் பொருத்தமில்லா வாதங்களை நிறுத்தி, ஒரே சபையில் நேருக்கு நேராக சந்திக்கும் திராணியை இவர்கள் பெற்றிருந்தால் இந்த அழைப்பை ஏற்கட்டும்.

இந்த பகிரங்க அறைகூவலை எங்களது அடிப்படை பதிலாய் இவர்களுக்கு கூறிக்கொண்டு, இவர்களது மதிகெட்ட நோட்டீஸ் குறித்த விளக்கத்திற்கு அடுத்துச் செல்கிறோம்.

ஹிஜ்ரா கமிட்டியினரின் மடமை வாதங்களுக்கு சாட்டையடி பதில்கள் அடுத்தடுத்த ஆக்கங்களில் தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக