சனி, 17 ஆகஸ்ட், 2013

முகநூல் பதிவுகள் - இஸ்லாத்தில் பெண்கள்



அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்று கூறியவர்களெல்லாம் புரட்சி கவிஞர்களாக பாராட்டப்படும் இந்த சமூகத்திற்கு,

பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கின்ற இஸ்லாத்தை, 

பெண்கள் அவர்களுக்கென சம்பாத்தியம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கிற இஸ்லாத்தை, 

தாம் சம்பாதித்த சொத்துக்களை தாமே நிர்வகிக்கலாம் என்று அனுமதிக்கிற ஒரு இஸ்லாத்தை, 

கணவனை பிடிக்கவில்லை என்றால் தைரியமாக விவாகரத்து பெற்று கொள்ளும் முழு சுதந்திரத்தை தந்துள்ள இஸ்லாத்தை, 

அதற்கான காரணத்தை கூட சொல்ல தேவையில்லை என்று சொல்கிற அளவுக்கு பெண்களுக்கு உரிமைகளை வழங்கியுள்ள இஸ்லாத்தை,

திருமணத்திற்கென பணம் காசுகளை ஆண்களிடம் உரிமையுடன் கேட்டு பெறலாம் என்று சட்டம் இயற்றியிருக்கிற இஸ்லாத்தை,

கணவன் தன்னை விவாகரத்து செய்தால் அதற்கான நஷ்டஈட்டை கூட சட்டப்படி பெற்றுக்கொள்ளும் உரிமையை தந்துள்ள இஸ்லாத்தை,

ஹிஜாப், இத்தா போன்ற சட்டங்கள் மூலம் பெண்களுக்குரிய சமூக பாதுகாப்பை வேறெந்த சித்தாந்தாமும் கற்பனை கூட செய்யாத காலகட்டத்தில், தெளிவான முறையில் வரையறுத்து தந்துள்ள இஸ்லாத்தை 

விமர்சனம் செய்யும் எந்த யோக்கியதையும் கிடையாது !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக